​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 17 October 2022

சித்தன் அருள் - 1199 - அன்புடன் அகத்தியர் - வஜ்ரேஷ்வரி /பஜ்ரேஷ்வரி காங்ரா தேவி ஆலயம். நாகர்காட் காங்ரா. ஹிமாச்சல் பிரதேசம்







30/7/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் :51 சக்திபீடங்களில் ஒன்றான ஸ்ரீ வஜ்ரேஷ்வரி/பஜ்ரேஷ்வரி காங்ரா தேவி ஆலயம். நாகர்காட, காங்ரா. ஹிமாச்சல் பிரதேசம். 

உலகை ஆளும் நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் புசுண்டனவன்.

எண்ணற்ற கோடிகள் மனிதன் பின் பிறப்பெடுத்தாலும் இக்கலி யுகத்தில் மனிதன் நிச்சயம் திருந்தப் போவதில்லை!!!! திருந்தப் போவதில்லை!!!!

யான் எதை என்று அறிய இதனால் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொரு மனிதனின் நிலைமையும் கூட!!!!

ஆனால் மனிதனின் நிலைமை எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை கூட நினைக்கவில்லையே!!!! நினைக்கவில்லையே!!!

பின் நினைத்து நினைத்து உருகி உருகி வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து மடிந்து மடிந்து மீண்டும் எதனையென்று எங்கு சென்றான் என்பதையே தெரியாமல் தெரியாமல் எவை சொர்க்கமா!??? நரகமா??? இதையென்று தெரியாமல் மீண்டும் பின் பிறந்து சொர்க்கம் நரகம் இவற்றைப் பற்றி தெரியாமல் செல்கின்றானே!! மனிதன்!!

பின் மனிதனை பல மனிதர்கள் புத்தியுள்ளவர்கள் என்பார்கள்!!! ஆனால் யானோ புத்தி இல்லாத மனிதன் அறிவு கெட்ட மனிதன் என்பதை நிச்சயம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் ஏராளமான காலங்களில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை கூட யான் உற்று பல வழிகளிலும் கூட கணித்து வைத்திருக்கின்றேன்!!!

ஆனால் நிச்சயம் வரும் காலங்களில் மனிதனின் நிலைமை பார்த்தே அவை தனை உரைத்து விடுகின்றேன்!!!

அறியாமல் அறியாமல் செய்த பாவங்கள் என்னென்ன???
மனிதா ஜென்ம ஜென்மங்களாய் செய்த பாவங்கள் என்னென்ன??? 

ஆனாலும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவே இப்பிறப்பு படைத்திருக்கின்றான் இறைவன்!!!

ஆனாலும் இப் பிறப்பிலும் பாவங்கள் செய்கின்றாயே!!! இது நியாயமா????

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!! எதை என்று அறியாத வரைக்கும் அறியாத வரைக்கும் குற்றங்கள் இல்லை!!!

ஆனால் அறிந்து விட்டால் அனைத்தும் பாவமாம்!!!!!

எவை ??எதனின்று வருவது?? யோசித்துக் கொள்ளுங்கள்!!!!

பாவம் எதை என்று கூட கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று சொல்லிக் கொண்டே தான் வருகின்றார்கள் மனிதர்கள்!!!

ஆனால் சிறிது புத்தி உள்ள மனிதனே நீ அனைத்தும் அறிந்தவன் அறிவுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாயே!!!!

எதனால் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட சொல்வாயா!!!! நீ???????

நிச்சயம் சொல்ல முடியாது!!!!

எதை எவற்றை அறிந்து அறிந்து செயல்பட்டால் பல உண்மை நிலைகள் புலப்படும்!!!

மனிதா!! புத்தி கெட்ட மனிதா!!! எதை என்று கூட ஓடுகின்றாய்!!! ஓடுகின்றாய்!! எதற்காக ஓடுகின்றாய்???
பாவத்தை சேர்க்கத்தான் ஓடுகின்றாய் மனிதா!!!!

ஆனால் புண்ணியத்தை சேர்க்க உன்னால் முடியவில்லையே!! மனிதா!!

மனிதா ஏன் எதை என்று கூட இதனால் நிச்சயம் புண்ணியம் சேர்க்க மிகுதி மிகுதி வாய்ப்புகள் கிடைத்து கிடைத்து வறுமைகள் நீங்கி நீங்கி புண்ணியம் பெருகி பெருகி சொர்க்கத்தை அடைவார்கள்!!!!

ஆனால் நிச்சயம் பின் எதை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் புத்தியுள்ள மனிதா பிழைத்துக் கொள்ளலாம்!!!!

ஆனாலும் கலியுகத்தில் புத்தி உள்ள மனிதனுக்கு ஆனால் அறிவுகள் இல்லையாம்!!!!!!

அறிவுகள் இருந்தும் தாழ்வு நிலையாம்!!!!!! 

ஏன்??? ஏன்??  மனிதா!!! பிதற்றுகின்றாய்???

பிழைக்காத வாழ்க்கை உந்தனுக்கு வருமா????

வரும் என்பதை கூட இங்கு நிச்சயிக்கப்படவில்லை!!! ஏற்கனவே நிச்சயக்கப்பட்டது தான் இங்கு நடக்குமே தவிர.... ஆனால் நிச்சயம் பின் எதை என்று உணராத அளவிற்கும் கூட மனிதா பிறப்புகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டு பட்டு மீண்டும் பிறப்பு தேவையா??

இதை பல பல வழிகளிலும் கூட பல ஞானியர்கள் கூட எடுத்துரைத்தார்கள்!!! ஆனால் மனிதா!!! நீ திருந்துவதாக தெரியவில்லை!!!

பணத்தின் மீதே!! பக்தி கொண்டாய்!!! ஆனால் அப் பணம் உன்னை பாதுகாக்குமா? என்ன!???
பார்ப்போம்!! 

ஆனால் நிச்சயம் இதை ஓதுபவனும் (இந்த வாக்கினை படிப்பவர்) நிச்சயம் பணம் பாதுகாக்கும் என்று வார்த்தை விடுவான் நிச்சயம்!!!!

ஆனால் நிச்சயம் பாதுகாக்காது!!!! நிச்சயம் பாதுகாக்காது!!!!

உண்மைதனை உணர்ந்து அதனால் இறைவன் மீது பக்தி செலுத்துங்கள்!!! கலியுகத்தில் மனிதர்களே வாழ வேண்டும் நீ வாழ வேண்டும் உற்றார் வாழ வேண்டும் எதை என்று அறியாத உன் பிள்ளைகள் வாழ வேண்டும் அதனால் நிச்சயம் நீ புண்ணியம் செய்ய வேண்டும்!!!

எவ்வாறு புண்ணியம்!!!?? எதனை???? முதலில் வருவது!! கோபத்தை நீக்குதல்!!!! கோபத்தை நீக்கிவிடு!! மனிதா!!!
மற்றவரை புறம் கூறுவதை நிறுத்திவிடு மனிதா!!!!
பொய் சொல்லுதல் நிறுத்தி விடு மனிதா!!!
எதையென்று போட்டி பொறாமை நிறுத்திவிடு மனிதா!!!

ஆனாலும் அவற்றுக்கெல்லாம் முதன்மையானவை தன்னைப்போல் பிறரை என்னும் எண்ணங்கள்!!!!
ஆனால் இவையெல்லாம் நீ நீக்கிக் கொண்டுள்ளாயா என்று நினைத்தால் தான் இறைவனிடம் சென்றாலும் உந்தனுக்கு இறைவனுடைய ஆசிகள் பரிபூரணம்!!!!

அப்படி இவையெல்லாம் இல்லாவிட்டாலும் இறைவனிடத்தில் சென்றாலும் ஒரு பயனும் இல்லை!!!!

வருத்தங்கள் தான்!!!

அதனால் மனிதர்களே வரும் காலங்களில் அனைத்தும் வைத்துக் கொண்டு தன்னிடம் குறைகள் வைத்துக்கொண்டு இறைவா !!இறைவா!! என்று !!!!நாடிட்டால் என்ன??? இறைவன் என்ன காட்சிகள் கொடுப்பானா என்ன????

நிச்சயம் கொடுக்க மாட்டான்!!!!எதனையென்றும் உணர்வதற்குள் வாழ்க்கையே போய்விடுகின்றது!!!

ஓர் பிறப்பின் பிறப்பின் போது எதை வைத்துக் கொண்டாய்????

ஒன்றும் இல்லை!!!!

குழந்தையாக பிறக்கின்றாய் ஆனால் வாழ்கின்றாய் இளவயதோடு என்னென்ன செய்கின்றாய்!!! மனிதா?

பின் சுகத்திற்காக என்னென்ன செய்கின்றாய் வயது வந்து விடுகின்றது 30 ஆம் ஆனால் 30 க்கு மேலே ஓடி ஓடி உழைக்கின்றாய் வேலை பின் பணம் சம்பாதிப்பதற்கு பின் 40 ஆம் எவை என்று அறியாத இப்படியெல்லாம் தவறுகள் செய்து விட்டோம் என்று இறைவனிடத்தில் சரணடைந்து விட்டால் ஆனால் 40 குள்ளே நீ செய்த பாவங்கள் உன்னை விட்டு விடுவதில்லை.. அனுபவங்கள் கஷ்டங்கள் 50க்கு மேல் அனைத்தும் வீண் என்று எண்ணி விட்டாயே மனிதா!!!!

இது முதலிலே 20 தன்னிலே உணர்ந்திருந்தால் நீ  மாபெரும் மனிதன் என்று கூட...... ஆனாலும் இவை உணர்ந்திருக்கவில்லை.

கல்விகள் ஏன்?? அக்காலங்களில் கல்விகள் எதற்காக என்று தெரியுமா??? மனிதா!!???

நல்வாழ்க்கை!!!  எதையென்று புண்ணியங்கள் பெருக்க எப்படி எல்லாம் புண்ணியங்கள் பெருக்குவது மற்றவர்களுக்கு தன்னிடத்தில் உள்ள எதை என்று கூட எவற்றில் இருந்து கூட பின் பலமாக இறைவழிபாடுகள் செய்து இறைவன் மூலம் பாக்கியத்தை பெற்று மற்றவருக்காகவும் உழைக்க வேண்டும் என்பதை கூட பல குரு குலங்களில் எடுத்துரைத்தார்கள்..

ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை!!!

அனைத்தும் காசுக்காகவே யார் ஒருவன் காசுக்காக ஆசைப்படுகின்றானோ அவனுடைய வாழ்க்கை தெருவில் தான் நிற்கும்!!!

சொல்லிவிட்டேன்!!!!

அதனால் யார் ஒருவன் இறைவன் மீது பக்தி செலுத்துகின்றானோ!!..... ஆனாலும் எதை என்று அறிய நீ ஏன்?? பக்தி செலுத்துகின்றாய் ??மனிதா!!.......
எதற்காக பக்தி செலுத்துகின்றாய்?? மனிதா!!???

புரிகிறதா???!!.....

அனைத்தும் சுயநலத்திற்காக தான் என்பேன்!!!!!

அதனால் நிச்சயம் சுயநலமில்லாமல் பின் எதையும் எதிர்பார்க்காமல் இறைவா!!! என்று அழை!!!!

நிச்சயம் இறைவன் உன்னிடத்தில் வந்து தங்குவான்!!!!

அப்படியின்றி சுயநலத்திற்காகவே வாழ்ந்திட்டால் நிச்சயம் பின் ஈசனும் பின் வாழட்டும் இவன் இஷ்டப்படி என்று விட்டு விடுவான்!!!!

ஆனால் உன் இஷ்டப்படி வாழ்ந்திட்டாலும் நிச்சயம் கர்மங்களை பெருக்கி கொள்வாய் மனிதா!!!

அதனால்தான் சொல்லிக் கொண்டே வருகின்றோம் சித்தர்கள் யாங்கள்!!!!

மனித குலத்தைக் காக்கவே அவதரித்தோம் சித்தர்கள்!!!

எதை என்றும் புரியாமலே சித்தர்கள் வாழ்க்கையை நிச்சயம் எவராலும் கலியுகத்தில் கணிக்க முடியாது என்பேன்!!!!

அப்படி கணித்தாலும் அவன் பைத்தியக்காரன் தான். பைத்தியக்காரன் மட்டுமல்லாமல் கடைசியில் எதை என்று கூறாமலே மாய்ந்து விடுவான்.

அதனால் நிச்சயம் எதன் மூலம் வருவது?? புண்ணியங்கள்!! பாவங்கள்!! என்று நிச்சயம் நீங்கள் தெரிந்து கொண்டால் நன்று!!!

யானும் இங்கெல்லாம் (வஜ்ரேஷ்வரி ஸ்தலத்தில்) சுற்றியவன் தான்!!!!

எப்படி என்றால் நிச்சயம் இதையென்று அறிய ஈசனும் எந்தனுக்கு ஒரு கட்டளை இட்டான்!!!!

புசுண்ட முனியே!!!!!! 

இப்படி எல்லாம் எதை என்று அறிய பல வழிகளிலும் கூட உன்னால் அனைத்தும் செய்ய முடியும்!!!!

ஆனாலும் ஒன்றை செய்!!!

நிச்சயம் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களையும் உன் கால்களால் சுற்றக்கூடாது!!!
உன் தலையால் நடந்து சுற்றி வர வேண்டும் தலைகீழாக நட என்று!!!

ஆனாலும் யானும் நகைத்தேன்!!!!

ஈசா.....!!!!!!!!!!!! 

பலம் வாய்ந்தவன் நீ!!!!! உண்மையை ஒத்துக் கொள்கின்றேன்!!!
ஆனால் நீ இப்படி எல்லாம் எந்தனுக்கு பரிட்சை வைக்கின்றாயே!!!!!!
என்ன!!! ஆனாலும் பார்ப்போம் என்று கூட!!!!

அதனால் தலை கீழாகவே நடந்து அனைத்து திருத்தலங்களுக்கும் சென்று கொண்டிருந்தேன் சென்று கொண்டிருந்தேன்.

ஆனால் இங்கும் தேவி(வஜ்ரேஷ்வரி தேவி) என்னை ஆசீர்வதித்தாள்!!!! 

புசுண்ட முனியே!!!!! 

இப்படி ஈசன் உன்னை சோதனைக்கு உள்ளாக்கினானே என்பதை அறிய!!!!

ஆனால் யானும் தலைகீழாகவே நின்று பேசினேன்!!!!

ஆமாம் தாயே!!!!! 

பரவாயில்லை எதற்காகவும்!!!! ஆனால் ஈசன் எதையென்று அறிவதற்கு பின் அமைதியாக!!!...

ஆனால் சாதாரணமாக இப்படி அவந்தன் வரங்களாக கொடுக்க மாட்டான்!!! ஏதோ ஒரு விஷயத்திற்காக தான் சொல்ல வருவான்.

இதனால் அனைத்து திருத்தலங்களையும் மேலிருந்து கீழிருந்து பின் இதையறிந்து பின் வலமிருந்து இடமிருந்து மேற்கிருந்து பின் கிழக்கிருந்து எதை எதை என்று அறிய அனைத்து ஸ்தலங்களையும் யான் திரிந்தேன்!!!

ஆனாலும் இதையன்றி அறிவதற்குள் இங்கே எந்தனுக்கு நிச்சயம் """அம்பாள் ""...!!! காட்சியும் அளித்தாள்!!!! 

எதையென்று அறிய அதனால் நீங்கள் எதை என்று உணர்வதற்குள்ளே பின் அதிகாலையிலே சந்தித்த (ஜ்வாலாமுகி தேவி தரிசனம் ) அவ் தேவியும் ஆனால் இடையே நிச்சயம் எதையென்று அறியாமல் பின் ஊற்று போல் ஆறு ஓடுகின்றது!!!( ஜ்வாலாமுகி தேவி மற்றும் வஜ்ரேஷ்வரி ஆலயத்திற்கும் இடையே 35 கி. மி உள்ளது. மண்ணிற்குள்ளே சுரங்கம் போலே நதி இரு தேவியையும் இணைத்து ஓடுகின்றது)இதன் வழியே  நிச்சயமாய் பின் வருவார்களப்பா எதை என்று அறியாமலே தெய்வங்கள்!!!
தெய்வங்கள் வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றது!!!!

அதனால் நிச்சயம் பூலோகம் பாதாளமாக திரிந்து கொண்டிருக்கின்றது இதன் அடியில்!!!

அதனால் அனைத்தும் இணைக்கின்றது தேவியின் பல ரூபங்கள் இங்கே இருக்கின்றது!!!!

யார் உணர்வார்கள்??? ஆனால் உணர்வதில்லை!!!

மனிதா!!! ஒன்றைச் சொல்கின்றேன்!!....

பின் பணத்திற்காக திரிகின்றாய் ஊர் ஊராக திரிகின்றாய்!!! 

பிச்சை எடுக்கின்றாயே!! மனிதா!!!

பிச்சை எடுத்து எதை என்று அறிய தன் குலத்தையும் காக்கின்றாய்!!!

ஆனால் இறைவனிடம் பிச்சை கேட்க முடியவில்லையே!! மனிதா!!

இதனால்தான் வருத்தம்!!!

முதலிலே இறைவனிடத்தில் பிச்சை எடுத்தால் நிச்சயம் அனைத்தும் வந்துவிடும்!!!

கல்வியா??? எதையென்று
ஆனால் செல்வங்களா??? 
வீரங்களா??? 

எதனால் வருபவை என்று கூறினால்...... இறை பக்தியே இறை பக்தியால்!!!

அதனால் நிச்சயம் இறைபக்தியில் செலுத்தினால் மட்டுமே அனைத்திலும் வெற்றிக்கொள்ள முடியும் அதை விட்டுவிட்டு ஏதேதோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றியும் கிடைக்காது நிச்சயம் இதையன்றி பின் சொர்க்கமும் கிடைக்காது!!!

அதனால் இதையென்று அறிய சொர்க்கத்தில் எவை  எதையென்று அறிய...... இதைப் பற்றியும் வரும் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உரைப்போம்!!!

எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் பல வாக்குகள் இன்னும் பல வழிகளிலும் கூட சித்தர்கள் செப்புவார்கள் உண்மை நிலையை அறிந்து கூட!!!!

அதனால் நிச்சயம் ஆனாலும் ஒருவன் எதை என்று அறிந்து இங்கே பிச்சை எடுத்துக் கொண்டு வந்தான்!!!!

ஆனாலும் அவந்தனுக்கு உற்றார் உறவினர் இவையன்றி சொந்த பந்தங்கள் யாரும் இல்லை!!!

இதனால் பின் அவந்தனுக்கு ஏதோ மனிதர்கள் வருவார்கள் பிச்சை இடுவார்கள்!!!!

ஆனால் அதை உண்டு விட்டு இங்கே அமைதியாக படுத்து உறங்குவான்!!!

ஆனாலும் பின் இவ் அம்மை( வஜ்ரேஷ்வரி) பார்த்துக்கொண்டே இருந்தாள்!!!!! 

இவன் செய்கைகள் எப்படித்தான் இருக்கின்றது என்பதை அறிய!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய இவ் தேவியே சென்று அவனிடத்தில் பிச்சை இட்டாள்!!!!!! 

எதையென்று அறிய ஆனாலும் அனைவரும் பிச்சையிட்டது வேறு!!!!!

ஆனாலும் இவள்தன் பெரிய காசுகளாக( அதிக பணத்தை) இட்டாள்!!!!!

ஆனாலும் அவ் மனிதனோ!!! எதை என்று அறிய ஆனால் இவ்வளவு தொகை எந்தனுக்கு ஏது!!! இவ்வளவு தொகையை வைத்துக்கொண்டு யான் என்னதான் செய்யப் போகின்றேன்????

அதனால் நிச்சயம் எந்தனுக்கு இன்றைக்கு இன்றைய தேவைக்கு மட்டும் போதும் இதை வைத்துக்கொண்டு யான் வாழ்ந்திடுவேன்!!!!

அதனால் பின் அவ் அம்பாளுக்கு இட்டுவிடு என்று!!!!! கூறி விட்டான். 
(பிச்சையிட்டவளே தேவி என்பதை அறியாமல் இன்றைய தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை ஆலய உண்டியலில் இட்டு விடு என்று அவ் மனிதன் கூறிவிட்டார்) 

மனமகிழ்ச்சி அடைந்தாள்!!! இவ் தேவி!!!

இப்படி ஒரு பிள்ளையா????

இதையறிந்து யாரும் உற்றார் உறவினர் இல்லையே????

இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பக்திகளா!!!! இவ்வளவு சிந்தனைகளா!!!!
இவ்வளவு நல்லெண்ணங்களா என்று கூட.......

என்று எண்ணி!!! பெருமூச்சு விட்டாள்!!!!!..........

ஆனாலும் இதை அறிந்து ஆனாலும் பின் மீண்டும் அவனை சோதிக்க எண்ணினாள்!!!!

மீண்டும் மறுநாள் வந்தாள்!!! 

பின் எதையென்று அறிய ஆனாலும் சிறிய காசுகளே இட்டாள். (கொஞ்சமாக) 

ஆனாலும் நிச்சயமாய் பின் போதுமா????

இச்சிறுவனும் நேற்றைய பொழுதும் நீ இட்டாய் பெரிய காசுகளாக!!!....

இன்றும் நீ இடுகின்றாயே!!!
நீ யாரம்மா???  என்று கேட்க!!!! 

யானும் இங்கு தேவியை வணங்குவதற்காக வந்து கொண்டே இருக்கின்றேன் என்று கூற!!!!

அதனால் பின் அச்சிறுவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்!!!!

அம்மையே!!!!   இவ்வளவு அன்புகள் என் மீது காட்டுகின்றாயே!!!!!

நிச்சயம் உந்தனுக்கு என்ன குறை என்று தேவியிடமே கேட்டான்!!!!

ஆனால் தேவி சொன்னாள்!!!! 

எதையுணர்ந்து தேவியே!! எதை எதை என்று அறிந்து!!! 

சிறு பிள்ளாய்!!!!!!!..... 

யான் ஒரு அனாதை!!! எந்தனுக்கு யாருமே இல்லை!!!

ஆனாலும்  இதையறிந்து கூட

ஆனால் அச்சிறுவன் கண்ணீர் குபுகுபுவென்று விட்டான்.......

இவ்வாறா????  அம்மையே உந்தன் நிலைமை!!!!! 

யானே எதையென்று அறியாத... எந்தனுக்கும் சொந்த பந்தங்கள் எல்லாம் போய்விட்டது சிறு வயதிலிருந்தே கஷ்டங்கள்.

ஆனாலும் நிச்சயம் உந்தனுக்காக எதை என்று அறிய இவ் அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறேன்!!!

அதனால் நீ ஒன்றும் தர வேண்டாம் இங்கேயே அமர்!!!!!

என்று கூறி வருவோர் போவோர்களிடத்தில் எல்லாம் பிச்சை ஏந்தி நிச்சயம்  அவ் அம்மையை எதை என்று அறியாமலே இந்தா !!!.. இந்தா!!!... என்றெல்லாம் அவ் அம்மைக்கு கொடுத்தான்!!!

ஆனாலும் வந்திருப்பது தேவியே என்று உணரவில்லை!!!!

ஆனாலும் எதை என்று அறிய சிந்துகின்றாள்!!! அவ் தேவி கண்ணீர்!!!!!!

எதை என்று உணராமலே அதனால் நிச்சயம் மறைமுகமாக திடீரென்று பின் அச்சிறுவனிடத்தில் தோன்றி!!!!!!

அப்பனே!!!!! இதையன்றி அறிய!! அறிய!!!

மகனே!!!! யான் தான் தேவி!!!

ஆனால் இச்சிறு வயதில் எதை என்று அறிய இப்படிப்பட்ட பக்திகள் காட்டுகின்றாயே!!!
இப்படி நல்லெண்ணம் பெற்றிருக்கின்றாயே!!!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை???? என்று கேட்டாள்!!

இல்லை ஆனாலும் அச்சிறுவனும்!!!! இதையன்றி தேவியே!!!!

இப்படி என்னை போல் மற்றவர்களும் கஷ்டப்படுகிறார்கள்!!!!

அதனால் எதை என்று அறியாமலே பின் அனைவருக்கும் நல்லதை செய்!!! என்று கூறி!!!......

இதனால் ஆனால் அத் தேவியும் நிச்சயம் யான் நல்லது செய்கின்றேன்!!! என்று கூறிவிட்டாள்!!!

ஆனாலும் அச்சிறுவன் விடவில்லை!!!!

சத்தியம் செய்து கொடு!!! என்று கூறி விட்டான்!!!!

நிச்சயம் தேவியும்!!!!

சத்தியம் !!!சத்தியம்!!! சத்தியம்!!!!

வருபவர்களுக்கெல்லாம் தன் குறைகளை நீக்கி யான் நல்லதையே செய்வேன் என்று அச்சிறுவனிடம் சத்தியம் செய்து விட்டாள்!!!! 

அதனால் இங்கு வந்து எதை என்று அறியாத அளவிற்கு கூட நல் மனதாய் வருபவர்களை நிச்சயம் காப்பாள் இத் தேவி!!!!

ஏனென்றால் சத்தியம் செய்து விட்டாள்!!!! 

எதையென்று அறியாமலே ஆனாலும் பல பல வழிகளிலும் கூட இத்தேசத்திற்கே தேவி பல மனிதர்களுக்கு... இங்குள்ள நிலைமை எதை என்று கூட சுற்றியுள்ள சுற்று வட்டாரத்தில் உணவுகள் இல்லாமை பின் எதையென்று உடுக்க ஆடை இல்லாமை!!! என என பல கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது மனித ரூபம் எடுத்து மனித ரூபங்கள் எடுத்து எடுத்து பல பல வழிகளிலும் கிராமங்களிலும் கூட பல மனிதர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றாள்.

அப்பனே இப்பொழுது தெரிகின்றதா??? ஏதும் இல்லாமல் எதையென்று அறிய!!....

எந்தனுக்கு ஏதுமில்லை!! இறைவா!!! நீயே !சரணாகதி! என்று நிச்சயம் சரணாகதி அடைந்தால் நிச்சயம் இத் தேவி வந்து அனைவருக்கும் உதவி செய்வாள்!!!! 

தேவி!! தேவி!! எதையென்று எவற்றினின்று இத் தேவியை யான் என்னவென்று குறிப்பிடுவது??????

அதனால் நிச்சயம் மற்றவர்களை தன் போல் நினையுங்கள் போதுமானது!!!!

எந்த உயிருக்கும்  எதையென்று கூட தீங்கு செய்யாதிருங்கள் போதுமானது!!!!

நிச்சயமாய் யாங்கள் பல வழிகளிலும் உங்களுக்கு வழி வகுப்போம்!!! உங்களுக்கு வழி வகுக்க யாங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனால் நிச்சயம் சொல்கின்றேன் புத்தி கெட்ட மனிதா!!!!

மீண்டும் மீண்டும் பின் எதையென்று கூற திருடன் ஆகவே இருந்தால் நிச்சயம் ஈசன் அழித்து விடுவான்!!!!

நிச்சயம் அழிவென்று ஒன்று இருந்தால் உற்பத்தி ஆகவும் இருக்கும்!!

இதனையென்று கூட காலங்கள் ஒரே மாதிரியாக இருக்காது சொல்லிவிட்டேன்!!!

இன்பம் துன்பம் எதையென்று அறிய எவற்றிலிருந்து அறிய நன்மை தீமை இவற்றிலிருந்தும் அறிய அனைத்தும் இரு. இரு.(இரண்டிரண்டு) இதனால் மாறி மாறி வருவது வாழ்க்கை சொல்லிவிட்டேன்!!

இன்பம் எப்பொழுதும் இன்பமாக இருக்காது!!!

பல வகையிலும் சொல்லிவிட்டேன்!!!

அதனால்தான் எதை என்று கூட துன்பப் பாதையில் எதை என்று அனுபவிக்க நிச்சயம் இறைவன் ஈசன் எதையென்று அறியாமலே இங்கு பல மலைகளும்(இமாச்சல் இமய மலைகள்) கூட அவந்தனக்கு சொந்தமானது!!!!

ஈசனுக்கு எதையென்று அறிய பல மலைகளிலும் சுற்றி சுற்றி வந்து கொண்டே தான் இருக்கின்றான்!!!

வரும் வரும் காலங்களில் கூட மனிதன் நிச்சயமாய் எதை என்று எதிர் நோக்குகின்றானோ அதையும் ஈசன் தருவான்!! நிச்சயம் எதை என்று பின் எதை எதை என்று கூட மீண்டும் மீண்டும் நீதி நேர்மையற்று வாழ்ந்தால் ஈசனே அழித்து விடுவான் என்பதை கூட மெய்யாக சொல்லிவிட்டேன்!!!!

இதனால் எதை என்று உணராத அளவிற்கும் கூட ...இத் தேவி(இவ்வாலயம் ஒரு காலத்தில் நீருக்குள்ளே) இதையன்றி கூற இவையெல்லாம் நீராகவே இருந்தது!!! நீரிலே இத்தேவி மிதந்து கொண்டிருந்தாள்!!! 

ஆனால் காலப்போக்கில் நிச்சயம் மேல் நோக்கி எழுந்து விட்டாள்!!!! 

இதையென்று அறிய இதனால் இவள்தனை வணங்கி வணங்கி ஆனாலும் மனிதா!!!!

பின்!!! என்னால் வர முடியவில்லையே!!!!!!!!!!!! 
என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் ஆனால்.......

எதற்காக?????

திருமணம் வேண்டுமென்றால் ஓடோடி பெண்ணை தேடுகின்றாய்!!!

பணம் வேண்டுமென்றால் ஓடோடி பணத்தை தேடுகின்றாய்!!!!

சொந்த பந்தங்கள் வேண்டுமென்றால் ஓடோடி சொந்த பந்தங்களை தேடுகின்றாய்!!!!

ஆனால் மனிதா!!!

இறைவனை!! இறைவனை தேடவில்லையே நீ!!! மறந்து விட்டாயா!!????......

அதனால் நிச்சயம் ஓடோடி இறைவனை தேடுங்கள் நிச்சயம் அனைத்தும் கிட்டும்!!!!

இதுதான் சங்கதி!!!

அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய பல ஞானிகளும் எதை என்று கூற ஈசனை பார்ப்பதற்கு பல ஆலயங்களுக்கும் சென்று சென்று தரிசித்து கடைசியில் பார்த்தால் ஈசன் தன் அருகிலே இருக்கின்றான் என்று உணர்ந்து விட்டார்கள்!!!

ஏனென்றால் இதன் சூட்சும ரகசியத்தையும் கூட பல பல வாக்குகளிலும் விரிவாகவே சித்தர்கள் செப்புவார்கள்!!!!

அப்பனே அலைந்து திரிந்து திரிந்து திரிந்து வந்து அமைதியாக உட்கார்ந்தால் ஈசன் பக்கத்திலே அமர்ந்து கொள்வான்!!!

இதுதானப்பா வாழ்க்கை!!!!

வாழ்க்கை என்பது ஏதடா???
ஒன்றுமில்லையடா!!!!!

ஒன்றுமில்லையடா பிறப்பின் போதும் இறப்பின் போதும் நடுவில் என்னென்ன?? ஆட்டம் மனிதா!!!

என்னன்ன?? ஆட்டம்!! பாட்டம்!! குத்தாட்டம்!!!
எதை என்று அறிய அவற்றிற்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்!!!

எதை என்று கூற எதனிடத்தில்???

இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்!! 
இதுதான் உன் கர்மா!!

இதனை முன்னிறுத்தி அமைதியாக தியானங்கள் செய்து இறை பக்தியை கடைப்பிடித்தாலே இக்கலியுகத்தில் வாழ்ந்து விடலாம்!! வாழ்ந்துவிடலாம் என்பேன்!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் இன்னும் எதையென்று அறிய இன்னும் எப்படி வாழ்வது என்பதை கூட சொல்லிக் கொண்டே வருவார்கள்!!!

அப்படி நீங்கள் வாழ்ந்திட்டால் நீ நீடுழி வாழ்ந்திடலாம்!!!

இவ்வுலகத்தில் எதை என்று கூட பிறவியை வென்று விடலாம் மனிதா!!!!

நல்விதமாகவே எதையென்றும் இன்னும் வாக்குகளாக சித்தர்கள் எதை என்று அறியாமலே வாக்குகள் செப்புவார்கள் தலங்களிலும் கூட!!...

நன்று!!! நன்று!! ஆசிகள்!! ஆசிகள்!! மீண்டும் உரைக்கின்றேன்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ வஜ்ரேஷ்வரி பஜ்ரேஷ்வரி காங்ரா மாதா.ஆலயம்
நாகர் காட் 176001. காங்ரா மாவட்டம். ஹிமாச்சல் பிரதேசம். 

அம்மனின் சக்திபீடங்களில் இதுவும் ஒன்று. 

இங்கு அருள்பாலிக்கும் வஜ்ரேஸ்வரி அம்மனை, வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் அழைக்கின்றனர். அம்பாள் பார்வதி தேவியாகக் காட்சி அளிக்கிறாள். முகத்தில் தைரியம், ஒரு தீர்மானம் பிரகாசிக்கிறது. அதைப் பார்த்தவுடன், அதன் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுகிறதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர்.

நவராத்திரி விழா, ஸ்ரீராம நவமி போன்றவை இங்கு மிகவும் விசேஷம். மற்றும் மகர சங்கராந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஹிஷாசுரனுடன் போரிடும் போது, தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன. அதற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாராம். பிறகு நலமாயிற்று. அன்று முதல் அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம். ஒரு வாரம் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள காங்கடா என்னும் இடத்திலுள்ளது. இதன் புராணப் பெயர் நகர்கோட் என்பதாகும். காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னையை காங்கடா மாதா என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

இவ்வாலயத்தில் இருக்கும் வஜ்ரேஸ்வரியை பக்தர்கள் பிண்ட வடிவில் வழிபடுகிறார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என மூன்று மதத்தினரும் இங்கு வந்து வழிபடுகிறார்கள் என்பதே இவ்வாலயத்தின் சிறப்பு. இவ்வாலயத்தின் மேற்பகுதியில் மூன்று மதங்களைக் குறிக்கும்வண்ணம் மூன்று சின்னங்கள் உள்ளன. இந்த மூன்று மதத்தினரும் வழிபட தனித்தனியே அன்னையின் மூன்று பிண்டங்கள் உள்ளன. முதல் பிண்டம் வஜ்ரேஸ்வரி; இரண்டாவது பிண்டம் பத்ரகாளி; மூன்றாவது பிண்டம் ஏகாதசி மாதா.

இங்கு வரும் பக்தர்கள் மஞ்சள்நிற ஆடைகளை அணிந்து வருகின்றனர். தங்களது அனைத்து வேண்டுகோள்களும் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாலயத்தில் ஐந்துமுறை ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் சுப்ரபாத ஆரத்தி நடைபெறுகிறது. நண்பகலில் பிரசாத ஆரத்தி நடத்தப்படும். அப்போது அன்னைக்குப் படைக்கப்படும் பிரசாதத்தை யாருக்கும் காட்டமாட்டார்கள். கதவை முழுமை யாக அடைத்துவிட்டுப் பூஜைசெய்வார்கள். மாலையில் சூரியன் மறைந்தபிறகு செய்யப் படும் ஆரத்தியின்போது அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வார்கள். சிவப்புவண்ண மலர்கள், சந்தனம், ஆடை ஆகியவற்றை வைத்துப் பூஜிப்பார்கள். இந்த ஆரத்தியின்போது படைக்கப்படும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இரவில் செய்யப்படுவது மங்கள ஆரத்தி எனப்படுகிறது. பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சந்தனத்தால் அழகு படுத்துவார்கள். தங்க நகைகள் அணிவிப்பார் கள். கடலை, பூரி, பழம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைப்பார்கள்.

ஐந்தாவது ஆரத்தி அன்னையை உறங்க வைப்பதற்காகச் செய்யப்படுகிறது.பானகங்கா, மஞ்சி என்னும் இரு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள காங்கடா, கடல்மட்டத்திலிருந்து 2,350 அடி உயரத்தில் உள்ளது. காங்டாவின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய கோட்டை ஒன்றுள்ளது. வஜ்ரேஸ்வரி ஆலயம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

காலை 8 மணி முதல் 12 மணி வரை. 
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

3 comments:

  1. அருமையான தகவல்கள் புஜண்ட முனிவருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம ஶ்ரீ........
    ஓம் ஶ்ரீ பகுளாதேவி சமேத ஶ்ரீ காகபுஜண்ட தேவாய நமோ நம ஶ்ரீ...

    ReplyDelete
  3. Om Agatheesa porti Ammai Appane porti appa saranam

    ReplyDelete