​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 1 October 2022

சித்தன் அருள் - 1192 - உயர் ரத்த அழுத்தம்!



[அபான வாயு முத்திரை - 10 நிமிடம்]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

உயர் ரத்த அழுத்தம் என்பது இந்த காலத்தில் ஒரு சாதாரண நோயாக பார்க்கப்பட்டு, மாத்திரை மருந்துகள் வழி கட்டுப்படுத்தப் பட்டாலும், அது ஒரு அமைதியான/மெதுவான விஷமாக உடலுள் பரவி, உள்ளுறுப்புக்களை செயலிழக்கவைத்து ஒரு நிமிடம் கூட நிம்மதி இல்லாத வாழ்க்கையை உருவாக்கிவிடும்.

அதற்கான காரணங்களை அலசிப் பார்த்தால், நம் குருநாதர் கூறுவதே உண்மை என்று தோன்றுகிறது. அவை யாவன;

  • பூர்வ ஜென்ம தோஷங்கள்,
  • பிறரை குறை கூறியது,
  • நிறையவே கோபப்பட்டது,
  • கையில் இருக்க கேட்ட பொழுது பிறருக்கு கொடுக்க மனமில்லாததால் தானே வைத்திருந்து அனுபவித்தது,
  • சிறு குழந்தைகளுக்கும் வறியோருக்கும் ஆன உணவை தட்டி பறித்தது,
  • ஒருவர் நல்லது செய்ய நினைக்க, எந்த விஷயத்தையும் தடுத்து நிறுத்தும் உரிமை ஒருவனுக்கு இருக்கிறது என்பதால், அந்த நிகழ்வை நடக்க விடாமல் தடுப்பது
என பல காரணங்களால் இந்த நிகழ்வு, நோயாக ஒருவனுள் உருவாகிறது என்கிறார், அகத்தியப்பெருமான்.

ஒருவனின் ஜாதகம் என்பது, முன் ஜென்மம் வரை, ஒருவர் வாழ்ந்து எழுதிய பரீட்ச்சைக்கு, "போய் அனுபவித்து விட்டு வா" என இறைவன் போட்டுவிட்ட மதிப்பெண்கள். சதுரத்துள் அடங்கி நிற்கும் கிரகங்கள் ஒருவனின் இந்த வாழ்க்கை எப்படி அமையும் என்பதை தெரிவிக்கும். உஷ்ண ஆதிக்கம் கொண்ட கிரகங்கள், (செவ்வாய், சூரியன்) உச்சம் பெற்றாலோ, தன் வீட்டில் இருந்தாலோ, லக்கினத்துக்கோ/சந்திரனுக்கோ 6,8,12 போன்ற இடங்களில் அமர்ந்தால், அல்லது அவர் வீட்டில் இவரோ, இவர் வீட்டில் அவரோ இருந்தாலும், உயர் ரத்த அழுத்தம் நிச்சயமாக வரும்.

ரத்த அழுத்தம், (BP மீட்டரில்) Systalic 150 ஐ தாண்டி மேலே செல்லும் பொழுதும், Dystallic 90ஐ தாண்டி செல்லும் பொழுது உயர் ரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. இது பொது நிலை. அவரவர் வயதுக்கு ஏற்ப இது மாறும். இந்த அளவில் நிற்பது நல்லது.

குறிப்பாக, மூன்று காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் உடலில் உருவாகிறது.

1. வயிற்றில்/உடலுக்குள் வாயு சொருகி நின்று விரிவடையும் பொழுது. (ஏப்பமாகவோ/அபானமாகவோ வாயு வெளியேறா நிலமை)
2. உடல் உள்ளுறுப்புகள் அடி வாங்கி இருந்தாலோ/வேலை செய்யாமல் இருந்தாலோ.
3. உணவில் கட்டுப்பாடு இன்றி, எண்ணெய்/உப்பு போன்றவை சேர்த்துக்கொள்வதினால்.

உயர் ரத்த அழுத்தம் ஆகிவிட்டது என்பதை உடல் சில வழிகளில் காட்டிக்கொடுக்கும். அவை

1. உடலெங்கும் வியர்வை பெருகும்.
2. தலைக்குள் ஒரு பெருத்துப் போன நிலை காணும்.
3. கண் பார்வை வெளிறும்.
4. மிகுந்த தலை வலி, தலை சுற்றல், வாந்தி போன்றவை.
5. உடல் முழுவதும் காற்றடித்த பலூன் போல ஆகும்.
6. கால் தரையில் பலமாக ஊன்றி நிற்காது, கட்டுப்பாடு இன்றி வழுகும்.

உடனே உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த அகத்தியப்பெருமான் கூறும் மிக சிறந்த எளிய வழி,

1. வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது மூக்கு வழி சுவாசத்தை உள்ளிழுத்து, 15 வினாடிகள் கும்பத்தில் இருத்தி, பின்னர் நிதானமாக இடது மூக்கோ/வலது மூக்கு வழியாகவோ சுவாசத்தை வெளியே விடவேண்டும். இதை 21 முறை செய்ய வேண்டும். பின்னர் 15 அல்லது 20 நிமிடம் ஆனபின் பரிசோதித்தால், உயர் ரத்த அழுத்தம் முதலில் இருந்த நிலைமையை விட நன்றாக குறைந்து சமநிலையை நோக்கி செல்வதை காணலாம். இதை நிதானமாக 15 நிமிடம் எடுத்து செய்வது மிக நல்லது. மேலும், இதனுடன்,

2. வீட்டில் சமைக்க வாங்கி வைத்திருக்கும் ஒரு பீட்ரூட்டை எடுத்து, நன்றாக தோலை சீவி, ஒரு கப் தண்ணீர் விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து, (வடிகட்ட வேண்டாம்) சத்துடன் குடிக்க வேண்டும். இது உயர் ரத்த அழுத்தத்துக்கு மிக சிறந்த உடன் நிவாரணி.

3. தினமும் ஒரு முறை "வஜ்ராசனத்தில் 20 நிமிடம் த்யானத்தில் அமர்வது, உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.

குறிப்பு:- இயன்ற அளவுக்கு அன்னம் கொடுங்கள், பசுவுக்கு அகத்திக்கீரையும், பறவைகளுக்கு தானியமும் ஒருவரின் கர்மா கரைந்திட மிக உதவும்!

சரி! இப்பொழுது ஏன் இந்த தொகுப்பு என நீங்கள் அனைவரும் யோசிக்கலாம்.

"அய்யா! அகத்தியர் அடியவரே! அகத்தியரிடம் தினமும் பரிகாரம் வேண்டிக்கொண்டு, எதுவும் கிடைக்காமல் அவரை திட்டிக்கொண்டு இருக்கிறீர்களே!, உங்களுக்காகத்தான், அனைவரையும் தெரிவிக்க சொல்லி உத்தரவின் பேரில்................. இனி தயை கூர்ந்து யாரும் அவரை திட்டாதீர்கள். உணவு, செயல், மனம் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி தேவை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

2 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் எம்பெருமானே - ஞானக்கடலே - அன்புடன் அடியவன்.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete