​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 19 October 2022

சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் உத்தரவு!











வணக்கம் அகத்தியர் அடியவர்களே

19/10/2022 நவமி திதி ஆயில்ய நட்சத்திரம் அன்று குருநாதர் அகத்திய பெருமான் இட்ட உத்தரவு!!!!

இவை என்று கூற அப்பனே ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் என் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும் அப்பனே

இதை யான் அறிவியல் பூர்வமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே 

இவ் ஐப்பசி மாதத்தில் துருவ் எனப்படும் நட்சத்திரம் அதைக் கோள் என்று கூட வைத்துக் கொள்ளலாம் அப்பனே அவ் நட்சத்திரமானது இவ் பூமியை நெருங்கி இம்மாதத்தில் பிரகாசிக்கும்...

சூரியனும் சந்திரனும் கீழ்நோக்கி பயணிக்கும்!!!! மேலிருந்து கிடைக்கும் நல் சக்திகளை இவ் கோளானது தடுத்துவிடும்!!! மேலிருந்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மை தரக்கூடிய ஒளியை இவ் கோளானது உள்வாங்கி தீயதை பிரதிபலிக்கும்!!!!

இவ் தீய ஒளியானது மனிதர்கள் உடம்பில் படும் பொழுது நோய் நொடிகள் இறைபலங்கள் கிட்டாமல் போவது போன்ற பலன்கள் ஏற்படும்.....

இவற்றில் இருந்து மனிதர்களை காக்கவே யான் காவேரி நதியை யான் உருவாக்கினேன் தாமிரபரணி நதியையும் உருவாக்கினேன்!!!! இதை யான் அறிவியல் ரீதியாகவே உருவாக்கியுள்ளேன்!!!

இவ்வுலகமானது அழிவை நோக்கியே செல்கின்றது... அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும் மனித குலம் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளாவார்கள்..

நல்லோர்களையாவது யான் காப்பாற்ற வேண்டியே யான் வாக்குகளாக செப்புகின்றேன் !!!

அவ் தீய ஒளியில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயமாக காவிரியிலும் தாமிரபரணியும் நீராட வேண்டும் நவ கிரகங்களின் ஒளியும் இம்மாதத்தில் கதிர்வீச்சாக அதிகமாக இருக்கும் அதை மனிதர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே யான் நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் யானே உருவாக்கினேன்!!!!

மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் அப்பனே!!!!!

என்னுடைய நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள் அப்பனே!!!!

இம் மாதத்தை இதை சனியவனும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான்!!!!!! இம்மாதத்தில் சனியவன் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கும் அவந்தனுடைய சக்திகள் மிகுந்து காணப்படும்..... சனியவன் என்பவன் நேர்மையுடனும் உண்மையான பக்தியுடன் நல் ஒழுக்கத்தோடு இருப்பவர்களுக்கு வாரி தருவான்!!!!! தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இம் மாதத்தில் அவந்தன் தக்க தண்டனையும் வழங்குவான்!!!!!

வரும் காலங்கள் அழிவு காலங்கள் என்னுடைய ஒவ்வொரு வாக்கிற்கும் அறிவியல் பூர்வமாகவே யான் நிரூபித்து உருவாக்கியுள்ள பெருமாளின் நவதிருப்பதிகள் ஈசனின் நவகைலாயங்கள் நல்முறையாக நீராடி விட்டு நீராடி விட்டு சென்று சென்று கொண்டே இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் அப்பனே

இன்னும் என்னுடைய வாக்கு ஒவ்வொன்றும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அறிவியலும் இறைவனும் எப்படி என்பதை நான் ஒவ்வொரு வாக்குகளாக எடுத்துரைப்பேன்!!!!!

என் பக்தர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக வாழுங்கள்

இவ்வுலகம் அழிவு நிலையை நோக்கி செல்கின்றது சித்தர்கள் யாங்கள் நல் மனிதர்களையாவது காப்பாற்ற வேண்டியே வாக்குகள் உரைத்து கொண்டிருக்கின்றோம்!!!

இவ்வுலகத்திற்கு மனிதனாலே மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் அக்காலம் வந்துவிட்டது!!!! சித்தர்கள் நாங்கள் ஒவ்வொரு ரூபத்திலும் சென்று ஒவ்வொரு மனிதர்களின் மனதை மாற்றி அவ் அழிவுகளை தடுத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!!!

என்னுடைய பக்தர்கள் வாழ வேண்டும் அப்பனே!!!!!

இன்னும் சூட்சுமமாகவே யான் என்னென்ன அறிந்திருக்கின்றனோ அவற்றையெல்லாம் இவ்வுலகத்திற்கு அறிவியல் பூர்வமாகவே தெரிவிக்கும் சமயங்கள் வந்துவிட்டது!!!!!

நல்லோர்கள் வாழட்டும் அப்பனே!!!!

அடுத்த வாக்கில் கங்கையைப் பற்றியும் கங்கை நீராடுதலை பற்றியும் அறிவியல் ரீதியாகவே எடுத்துரைக்கின்றேன். அப்பனே......

ஆசிகள் ஆசிகள் நலமாக நலமாக!!!!!

இவ்வாக்கு அகத்தியர் அடியவர் ஒருவர் சுவடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு நாடி வாசிப்பிற்கு கேட்ட பொழுது குருநாதர் தந்த பொது வாக்கு. என் பக்தர்கள் அனைவரும் இதை கட்டாயம் மேற்கொள்ளுதல் வேண்டும் என்று கூறிவிட்டு இதன் பிறகு வாக்குகள் உரைக்கின்றேன் என்று கூறியிருக்கின்றார்!!!! அடியவர்கள் அனைவரும் துலா ஸ்நானம் எனப்படும் தாமிரபரணி நதியிலும் காவிரி நதியிலும் நீராடி விட்டு நல் முறையாக தரிசனங்கள் செய்து விட்டு குருநாதர் உரைத்த வழியில் சென்று இறையருள் பெறுவோம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக🙏🙏🙏

    ReplyDelete
  2. குருதேவருக்கு எனது பணிவான வணக்கங்கள் மனித குல முன்னேற்றத்திற்காக நல்ல தகவலை பகிர்ந்துள்ளார் அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் நன்றிகள் பல பல

    ReplyDelete
  3. அப்பா... அகத்தீசா... நலம் நலமே தொடரும்... நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி....

    ReplyDelete
  4. Ayya ennaipola veli desangalil ullavargal enna seyya ayya?

    ReplyDelete
    Replies
    1. வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு காவேரி/தாமிரபரணி ஸ்நானம் இயலாத ஒன்றுதான். ஒரு எளிய வழி உண்டு. மந்திரம் வழி நீரை கங்கை/காவேரி/தாமிரபரணி தீர்த்தமாக உவமித்து ஸ்நானம் செய்துவிடலாம்.

      ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து/நின்று "ஓம்" என அந்த நீரில் வலது கை மோதிர விரலால் எழுதி, பின்னர் மூன்று முறையேனும் "ஓம் காவேரி மாதா ஆவாஹயாமி! தாமிரபரணி மாதா ஆவாஹயாமி, கங்கா மாதா ஆவாஹயாமி!" என மனதுள் ஆத்மார்த்தமாக கூறிவிட்டு, அந்த நீரை தலை முதல் கால் வரை தீர்த்தமாக தெளித்து விட்டு குளிக்கவும்.

      ஸ்நானம் சிறப்பாக ஆகிவிடும்! இதை தினமும் செய்யலாம், தினமும் நதி ஸ்நானம் நடத்தலாம்!

      Delete
    2. மிகவும் நன்றி.

      Delete
    3. Mikka nandri ayya🙏🏻🙏🏻🙏🏻

      Delete