​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 October 2022

சித்தன் அருள் - 1195 - அன்புடன் அகத்தியர் - ஜ்வாலாமுகி தேவி ஆலயம்!





30/7/2022 அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : ஜ்வாலாமுகி தேவி ஆலயம், காங்ரா, இமாச்சல பிரதேசம். 

என் உள்ளத்தில் அழகாக குடியிருக்கும் ஆதி சங்கரியையும் என் அழகான வேலவனையும் பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் போகனவன்!!!

எண்ணற்ற ஏது பிறவிகள் எண்ணற்ற பிறவிகள் கடந்தாலும் ஆனாலும் ஓரு முறை என் தாயவளை பார்த்து விட்டால் நிச்சயம் சந்தோசங்கள் பொங்கி வழியும்!!!! புத்திகள் மாறும்!!! பின் போட்டி பொறாமைகள் வராது!!! பின் பொய் சொல்லாமை!!!! பிறருக்கு உதவுதல் என்ற எண்ணம் வந்துவிடும்!!!!

அதனால் நிச்சயம் என் தாயை பாருங்கள் பாருங்கள்!!! பாருங்கள்!!!.

எதையென்று எவற்றின் மீது பக்திகள் செலுத்தினாலும் நிச்சயம் பின் கிடைக்காது என்பேன். அனைத்தும்!!!

ஆனால் இறைவன் மீது பக்திகள் செலுத்துவதே நிச்சயம் கடைநாளும் எங்கே நிச்சயம் எங்கேயோ கூட்டிச்செல்லும் எதனை என்று அறிய!!!!

ஆனால் எதனை எதன் மீதோ? பக்திகள் செலுத்தினால் பின் அதன் வழியாகத்தான் செல்வார்கள் மனிதர்கள்.

ஆனால் இறைவன் மீது பக்தி செலுத்தினால் நிச்சயம் உதவிடுவாள் என் தாயவள்!!! நிச்சயம் தன் தன் திருத்தலங்களுக்கு ஏற்றவாறு அழைப்பாள்!!!!

இதுதான் உண்மையப்பா!!!

உண்மைதனை புரிந்து நிச்சயமாய் நடந்தால் நிச்சயம் பின் மோட்சப் பிறவியும் எங்களை நாடிவரும் யோகமும் அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் எங்களுடைய தரிசனமும் கலியுகத்தில் கிடைக்கும் சுலபமாகவே கிடைத்துவிடும்!!!!.

ஆனால் மனிதனோ?? எதன் மீது பக்தி கொண்டுள்ளான் என்று நினைத்தால் நிச்சயம் சொல்கின்றேன்!!

பணத்தின் மீது பக்தி!!!

இல்லத்தின் மீது பக்தி இன்னும் எதன் எதன் மீதோ!! பக்தி!!

இவ்வாறு பின் அதன் மீது பக்திகள் செலுத்தினால் நிச்சயம் பின் ஆகாது என்பேன்!!!

அவற்றின் வழியாகத்தான் சென்று கடைசியில் எதை என்று கூறாமலே பின் அவ்பக்தி வீணாக போய்விடும்.

ஆனால் உண்மையான பக்தி என்பது இறைவன் மீது வைத்தால் நிச்சயம் பல திருத்தலங்களுக்கு நிச்சயம் இறைவனே அழைப்பான் என்பது மெய்யப்பா!!!! 

இதை உணர்ந்து இருங்கள்.

என்னால் முடியவில்லையே!!! என்னால் வர முடியவில்லையே!!!! என்று சொன்னாலும் நிச்சயம் இல்லத்திலே பின் அழகாக தீபம் ஏற்றி என்னையும் அழையுங்கள்.

உங்களிடத்தில் எந்தனக்கு ஏதும் தேவையில்லை!!!!

உங்கள் அன்பு தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருங்கள்!! நிச்சயம் இறைவன் உங்களை எங்கெங்கோ அழைப்பான்.

அதனை விட்டுவிட்டு எதனை என்று அறியாமலே யானும் பழனி மலையில் இருந்து பல மனிதர்களை பார்க்கின்றேன்!!! எதையென்று அறிந்து!!! ஆனால் ஒருவர் கூட உங்கள் அருள் கிடைக்க வேண்டும்!!! உலகம் நன்றாக இருக்க வேண்டும்!!! பின் எதை என்று அறியாத அளவிற்கு யாவரும் கேட்பதில்லையே!!!!!!! ஏனப்பா!!!????!

ஏனப்பா!!!! பிறவிகளப்பா!!! 

எதை என்று அறியாத அதனால் நிச்சயம் வேண்டிக் கொள்ளுங்கள்!!! மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்!!! இதை யான் அறிந்து சொல்கின்றேன்!!!!

எதையறிந்து ஆனால் நிச்சயம் உங்களுடைய நிலைமைகள் எதை என்று கூறும் அளவிற்கு கூட நிபந்தனைகள்.

ஓடி தேடி அலைந்து போதுமடா!! போதுமடா!! அலைந்து திரிந்தது எதுவடா!!!!???

எதுவடா??? உண்மை நிலை அறியாதவாறு திரிந்தடா!! திரிந்து நிலைபெறடா!! அப்பனே!!!

அப்பனே தெளிவு!!.... நிலை இல்லாதது ஏதடா!!!??

ஏது? ஏது?

தெளிவு பெற்றது உண்மையடா!!! உண்மையை அறிந்து சொல்லடா!! சொல்லை அறிந்து!! எச்சொல்லை? உண்மை நிலையை பயன்படுத்தி வாயில் எதை என்று ஓதினால் மட்டுமே உயர்வுகள் உண்டடா!! உண்டடா!! இறை நாமத்தை!! இறை நாமத்தை!! ஜெபித்து!! ஜெபித்து!! தோல்வியுற்றோர் இல்லையடா !!!நிச்சயம் வெற்றிகள் உண்டடா.

அறிந்து!! அறிந்து!! இறைவனை அறிந்து!! அறிந்து!! பிறவிகளைக் கடந்து!! கடந்து!! ஓடோடி! வந்து ஓடோடி! வந்து இதையறிந்து இன்னும் படுகுழியில் விழுந்தாயடா!!! விழுந்தாயடா!!! ஒன்றுமில்லாமல்.

தெளிந்தாயடா!! தெளிந்தாயடா தன் சுகத்திற்காக அனைத்தும் பெற்றாயடா!!!

பெற்றாயடா தன் சுகத்திற்காகவே அனைத்தும் பின் கஷ்டங்கள் பெற்றாய டா எவ்வளவுடா?? இன்னும் கஷ்டங்கள் நீண்டு கொண்டே போகுமடா!!

மனிதர்களே!!

எதை என்று உணராமலே இதனால்  இறைவன் மீது பழி சொல்வதாடா??? இவற்றிலிருந்து வந்தவை ஏதடா?? அவற்றில் இருந்து வந்தவை ஏதடா??

ஒன்றுமில்லைடா!!... கடைசியில் நின்று பார்ப்பது ஏதடா?? முன்னிருந்து பார்த்தால் பின்னிருந்து வருவது ஏதடா? ஏதடா? மனிதா!!! உன் உடம்பு கொண்டு உள்ளாயே இதற்கும் தேவையாடா?? சுகங்கள் கேட்பதுண்டா?? சுகங்களுக்காக பல உண்டடா எதை என்று அறியாத சுகத்தை தேடிக்கொண்டே சென்றாலும் அழிவுகள் உண்டடா!!! சுகங்கள் எவை என்று கூறுவதடா!! இறைவன் நாமத்தை தான் யான் கூறுவேனடா. யான் கூறுவேனடா!!

ஆதி பராசக்தியே!!!! ஆதிபராசக்தியே!!!! பராசக்தியே!!!! பராசக்தியே!!!

எதை அறிந்து முற்றும் துறந்த துறவியடா!!! எதை என்று சொல்வதடா மனதில் குடி கொண்டுள்ளாளடா என் தாய்!!!

என் தாய்க்கு இணை யாரடா!????

எதை என்று அறியாத அன்பு மிகுந்தவளடா!!! அன்பு மிகுந்தவளடா!!!

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த வாழ்க்கை ஏதடா??? மனிதா உந்தனுக்கு!!

எதை என்று அறிந்து அவ் அறிந்து அறிந்து செயல்பட்டால் அன்பும், பண்பும் பாசமும் என் தாயவள் உன்மேல் காட்டுவாளடா!! அதனால்தான் யான் பட்டேனடா பல பாடுகள்!! பாடுகள்!! பட்டு பட்டு எழுந்தேனடா!! என் தாய் நிச்சயம் எவை என்று அறியாமலே அறிந்து அறிந்து செயல்பட்டாளடா!!! 

மடியில் எந்தனுக்கு இடம் கொடுப்பாளடா கொடுத்தாளடா!!! உறங்கினேனடா!!

மனித முட்டாளே!!! எதை என்று அறிந்தாலே புத்தியற்றவனே!! புத்தி இல்லாதவனே!!! புத்தி இருந்தும் எதனை என்று அறிந்து செயல்பட்டாயாடா???? பட்டுக்கொண்டிருக்கின்றாயாடா!!! இன்னும் அழிவுகள் நிச்சயமடா!! உண்டடா!!

ஏதடா ??பிறவிகள் கடந்து!! கடந்து!! வந்து வந்து உட்கார்ந்து எதையென்று  அறிந்து!! அறிந்து!! சோதனை பட்டுப்பட்டு உடம்புகள் எதையென்று அழிவுகள் ஏற்பட்டு ஏற்பட்டு சாகும் சாகும் நிலைக்கு ஏற்பட்டு இன்னும் மீண்டும் வந்தாயடா!!!

மீண்டும் வந்து வந்து உண்மை நிலைகள் தெரியாதபடி தெளிந்து தெரிந்து இறைவனை நாடி நாடி சென்றாயாடா??????

பிரயோஜனம் இல்லையடா!!! பிரயோஜனப்பட்டு பட்டாலும் இல்லையடா!!! 

எதையென்று உணர்வதற்குள் பிறவிகள் கடந்திடுமடா!! கடந்து கடந்து!! இறப்பாயாடா!! இறப்பு!! இறப்பு!! மீண்டும்!! மீண்டும்!! பிறப்பு !பிறப்பு! இறப்பு!! இறப்பு!! மீண்டும் வந்திட்டு வந்திட்டு!! வந்திட்டு சோகங்கள் வந்திட்டு எதை என்று அறியாதடா அறிந்து அறிந்து செயல்படடா!!!

செயல்படடா!! அன்பு காட்டடா!! இறைவன் மீது பக்தி.

ஆனால் ஒன்றும் இல்லையடா!!! கலியுகத்தில் இறைவனை நாடி நாடி சென்றாலும் எதை என்றுகூட கூடுமென்று வருவதடா!! கூடின்றி வருவதடா கூன் உடம்பு எங்கிருந்து வந்ததடா? வந்ததடா அதனை பயன்படுத்திக் கொள்ளடா!!! இறை நாமத்தை ஜெபித்து!! ஜெபித்து!! இன்னும் அவ் கூன் உடம்பு உன்னை காக்குமடா!!! அப்படி இல்லை என்றாலும் கூன் உடம்பு உன்னை அழித்திடுமடா!!!

சோதனைகள் வந்துமடா!! வந்துமடா!! கூன் உடம்பு நீயே பெற்றாயடா!!!

நீயே அழித்துக் கொண்டாயடா!!! மீண்டும் பிறப்புக்கள் வந்ததடா!!!

வந்து வந்து சென்றதடா!! எங்கு? எங்கு? சென்றதடா நிச்சயம் இல்லையடா மனிதா!!

மனிதா தெரிந்து கொள் உண்மை நிலைகள் ஏதும் இல்லையடா!! ஏதும் இல்லையடா!! உன்னிடத்தில்!!........

மற்றவை எல்லாம் இருக்கின்றதடா இறைவனிடத்தில்!!

இறைவனை நாடி!! நாடி!! நாடி!! செல்லடா சென்று கொண்டு இருந்தால் மட்டுமே புத்திகள் வருமடா!!! நிச்சயம் மனிதர்கள் ஏற்க மாட்டார்களடா... நிச்சயம் இதை அறிந்து இதனால் நல்லோர்கள் எங்களுக்கும் துணை நிற்பார்களடா!!! வரும் காலங்களில் இவை என்று கூட.......

நல்லோர்கள் இறைவன் வழி செல்வோர்கள் இன்னும் இருக்கின்றார்களடா!!! கண்ணுக்குத் தெரியாத!!.......

ஆனால் நிச்சயம் அவர்களை கொண்டு வருவோமடா நிச்சயம் எதை என்று அறிந்து!!!!

ஆனால் இதற்கும் பல வழிகள் உண்டு அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து  கொள்வீர்களடா!!!

எதையென்று கூட என் முருகன் பழனி மலை தன்னில் சிறிதளவு அவன் தனில் எதையிருக்கும் எவற்றில் இருந்தும் பலன்கள் அளிக்க வல்லவை என்பேன்.

என்பதை தரித்திர பிறவிக்கு கூட பின் அங்கிருக்கும் பின் அவனுடைய கால்களை தொட்டு தொட்டு எதை என்று அறியாமலே சிறிதளவு பின் வாயில் உட்கொண்டால் நிச்சயம்  அழிவுகள் பின் வராது.... ஆனாலும் இன்றைய மோட்சகதிகள் அங்கிருந்தே பல கொள்ளைகள் அடிக்கின்றார்களடா மனிதர்கள்.

எப்படியடா?? எதை என்று உணர்ந்தடா உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் நன்மைகள் ஓங்கும் ஓங்கும்.

என் தாயவளை யான் பிடிக்க!! பிடிக்க !!எவ்வாறு? நலன்கள் ஏற்பட்டது பல சித்துக்கள் என் தாயவள் கொடுத்தாள் இங்கே!!!(ஜ்வாலாமுகி) 

பல தவங்களை யான் இங்கே செய்தேன்.. செய்தேன்!! செய்தேன்!! பல பல வழிகளிலும் கூட பின் பாம்புகளின் ராஜ்ஜியம் என்பதைப் போல் என்னை சுற்றிக்கொண்டு வளைத்துக் கொண்டு விட்டது !!ஆனாலும் விடவில்லை!! என் தாயவள்.

பராசக்தியே!! பராசக்தியே!!! என்றெல்லாம் நிச்சயம் சங்கரியே!! தேவியே!! உமையம்மையே!! இதையென்று அறிந்து!! அறிந்து செயல்பட்டதால் ஆனாலும் விடவில்லையடா!!!!

காற்றின் போல் நிச்சயம் பாம்புகள் என்னை சூழ்ந்து கொண்டன!!! ஆனாலும் மூச்சு கூட என்னால் விடமுடியவில்லையடா!!.... இருந்தாலும் என் தாயவளை யான் மறக்கவில்லையடா!! மறக்கவில்லை!! மறக்கவில்லை!! மறக்கவில்லை!!.

ஆனாலும் நிச்சயம் பாம்புகள் சூழ்ந்து கொண்டு எதை என்று அறிந்து என் தாயவள் எந்தனுக்கு தரிசனம் கொடுக்க கொடுக்க!!!

அப்பனே!!! போகனே!!! இதை என்று அறிய உந்தனுக்கு என்னதான் வேண்டும்??

இவ்வுலகத்தில் உந்தனுக்கு எவற்றின் மீதும் பற்று இல்லையே??

அதனால் உந்தனுக்கு என்ன தேவை ?என்று கூட....

அம்மையே!!! எந்தனக்கு ஏதும் தேவையில்லை நீயே துணை !!!

அதனால் நீ தான் எந்தனுக்கு வேண்டும்!!!

ஆனால் பின் இவையன்றி மகனே!!! இவ்வளவு பாசங்கள் என்மீது!!!

பாம்புகளை எவை என்று அறியாத அளவிற்கு கூட என் மனதில் உள்ள ஈசனே அனுப்பினான்!!

சுற்றி வளைத்து இவந்தனுக்கு எவ்வாறு?? வலிகள் எல்லாம் ஏற்படுத்துவது என்பதை கூட...... அதனால் மலை போல் பாம்புகள் தேங்கி நின்று விட்டது.

இதனையும் அறிந்து விஷங்கள் கூட ஏறவில்லையே!!!!!!  எதையென்று அறிந்து நீ என் மீது உள்ள பக்திகளால் தான்.

என் ஈசனே!!! எதையென்று அறிந்த அளவிற்கு ஆச்சரியப்பட்டான்.

அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே!!! பக்திகள் செலுத்தினால் நிச்சயம் இவ்வாறு செலுத்த வேண்டும்.

எதன் மீதும் பற்றிருக்கக் கூடாது... பற்றுக்கள் இருந்தால் நிச்சயம் பக்திகள் செல்லாது அப்பனே அழித்துவிடும் .

அதனால் பற்றுக்கள்!! பற்றுக்கள்!! எதன் மீது பற்றுகளோ அதன் மீதுதான் நிச்சயம் அழிவுகள் ஏற்படும் சொல்லிவிட்டேன்.

இதனையும் கூட பல சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் எவை எதனிலிருந்து வருவது என்று பார்த்துக் கொண்டே இருந்தால் என் தேவி நிச்சயம் வருவாள்!!!! தன் இல்லத்திற்கு.

இதனால் நிச்சயம் ஒன்றே போதும் எதை என்று அறிந்து என் தேவியவளுக்கு!!!

அழகான அன்பை காட்டி நிச்சயம் என் தேவியவளே!!! என்னை அழைத்துச் செல்லும்!!!

 ஈசனே என்னை அழைத்துச் செல்லும்!!!

வேலவா!! முருகா!! அழகா!! கந்தா!! என்று அறிய என்னை உன்னிடத்தில் உன்னிடத்தில் அழைத்துச் செல்லும்!!! என்று கூட.... .........

அழகாக ஒரு தீபம் ஏற்றுங்கள் போதுமானது.

அமைதியாக ஒரு மணி நேரம் அதிகாலையிலும் மாலை பொழுதிலும் கூட பின் நல்விதமாக தியானங்கள் செய்யுங்கள்!!!

அன்பை காட்டுங்கள் போதுமானது!!!!

நிச்சயம் பின் இறைவன் அழைப்பான்!!

இன்னும் பல பல உண்மைகளை எடுத்துரைப்பார்கள் சித்தர்கள் இதை அறிந்து செயல்பட்டால் அப்பனே நிச்சயம் நலன்கள் தான் மிஞ்சும்.

அவை விட்டு விட்டு எதன் மீது எதன் மீதும் பற்றுக்கள் சென்று கொண்டிருந்தாலும் நிச்சயம் அப் பற்று சிறிதளவு சந்தோஷத்தை கொடுக்குமே தவிர நிச்சயம் நிலை இல்லாதவைகளாக போய்விடும்.

இதனால் பக்திகள் எதன் மீது செலுத்த வேண்டும் என்பதைக் கூட பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே தான் வருகின்றார்கள் அதனைத் தான் மீண்டும் மீண்டும் யானும் சொல்கின்றேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் அப்பனே பலப்பல யுகத்தில் வாழ்ந்த பின் சான்றோர்கள் இதை என்றும் அறியாத அளவிற்கு கூட எங்கள் பேச்சுக்களை கேட்டு கேட்டு சரியாகவே நடந்தார்கள் அப்பனே... அதனால் மேன்மைகள் பெற்று நல்வாழ்க்கை நடத்தினார்கள்.

ஆனால் கலியுகத்தில் அப்பனே கலியின் கால்களில் சிக்கிக் கொண்டு...

அப்பனே பக்தி என்பான்!!!

யான் தான் பக்தன் என்பான்!!!

ஆனால் அவன் தானப்பா திருடன்!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் நம்பி விடாதீர்கள்!!!

பக்தி எவற்றிலிருந்து வருவது என்பதை கூட ஆனால் அப்பனே பக்தி என்பது எவ்வாறு இருக்க வேண்டுமென்றால்???

அப்பனே!!! புகழுக்கு ஆசைப்படுதல் கூடாது!! அப்பனே பணத்திற்கும் ஆசைப்படுதல் கூடாது!!!

எந்தனுக்கு ஏதும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.

எதனை என்று அறிந்து அதனால் அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே!!

இவன் தான் பக்தன்

ஆனால் அதை விட்டுவிட்டு எந்தனுக்கு அனைத்தும் தெரியும் யான் அதைச் செய்கின்றேன் அவையெல்லாம் செய்து தருகின்றேன் அப்பனே அதைச் சொன்னால் அவன் நிச்சயம் அயோக்கியனே என்பேன்..

அவந்தனைத்தான் முதலில் பாவங்கள் சேரும்!!...

அவந்தனைத்தான் நிச்சயம் சித்தர்கள் தண்டிப்பார்கள் அப்பனே.

இதை பல மனிதர்களை யான் பார்த்து விட்டேன் அப்பனே இவை என்று என்னிடத்தில் வருபவர்களையும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

பழனி மலை தன்னில் வந்து என்னிடத்தில் ஒருவன் கேட்கின்றான்!!

யான் பல மனிதர்களுக்கு பின் பல பல மருந்துகளை கொடுத்து காசுகளை ஈட்ட வேண்டும்!!... என்று கூட....

அவந்தனுக்கு எவை என்று அறிய.....

"""" யான் காறியும் துப்பி விட்டேன்!!!

அப்பனே!!! அவைமட்டும் இல்லாமல் பல மயக்கங்களை பல மனிதர்களை மயக்கும் அளவிற்கு எந்தனுக்கு மருந்துகள் கொடுங்கள் போகனே !!!என்று என்னிடமே வந்து கூறுகின்றார்கள்!!!

அவந்தனையும் காறி துப்பி விட்டேன்!!!

அதனால் மனிதர்கள் பல பல வித்தைகளை காட்ட என்னிடத்தில் ஓடி !!ஓடி!! வருகின்றார்கள்!!! அவர்களுக்கெல்லாம் சொல்லித் தர யான் என்ன?? அறிவில்லாதவனா???

மனித முட்டாள்களே!!! தெரிந்து கொள்ளுங்கள்!!!

என்னுடைய அருள் இல்லாமல் நிச்சயம் மருந்துகள் பலிக்காது எதனால் என்பதையும் கூட சித்தர்கள் யாங்கள் நிச்சயம் உலக நன்மைக்காக அதாவது மனிதப் பிறவி எதை எவற்றிலிருந்து அறிந்து நன்மைகளுக்காகவே மருந்துகள் எவை என்று அறியாமலே எவற்றிலிருந்து வந்தவையென்று இலவசமாக தந்து கொண்டிருந்தோம்!!!

ஆனால் இன்றைய மக்கள் எதை என்றும் அறியாமல் காசு!! காசு !!!என்று கொடுத்து கொடுத்து அவ் வியாதியும் குணமாவதில்லை....... எதை என்று கூட பின் தின்னுவது எதை என்று கூட பின் பின்னால் விடுவது அப்பனே இவை எல்லாம் தரித்திர பிறவியப்பா!!!

எவற்றினின்றும் அறியாது அப்பனே நிச்சயம் மருந்துகளின் தன்மை மாறுபடும் நேரத்தில் என்னுடைய அருள் இல்லாமல் நிச்சயம் மருந்துகள் பலிக்காது அப்பனே!!!

வித்தைகள் தெரிந்தவன் தான் உண்டு அப்பனே அதனையும் சரி செய்வான் அப்பனே!!!

ஆனால் அப்பனே என்னுடைய மருந்துகளை பயன்படுத்தி காசுகள் ஆக்குபவனுக்கும் வியாதிகள் உண்டு.

ஆனால் அவ் வியாதிகள் யார் ??  சீர் செய்வது அப்பனே!!! 

சொல்லுங்கள் அப்பனே!!!

கர்மத்தை மனிதன் எடுக்கின்றானா??? அப்பனே நிச்சயம் எடுக்கின்றான் அப்பனே.

விதி தன்னில் அப்பனே இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வகுப்பை இறைவன் வகுத்துக் கொண்டே இருக்கின்றான்..

ஆனால் அப்பனே அவை எல்லாம் எப்படி மனிதனால் உன்னால் சொல்ல முடியும்????? அப்பனே !!!

அதனால் மனிதா!! தவறு செய்யாதே!!! தவறு செய்யாதே!!!

தவறு செய்யாதே!!! என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன்!!!

இவையென்று அறிய ஒருவன் பின் பழனி தன்னிலே இருந்தான்!!!!

ஆனால் வருகிறவர்களை எல்லாம் தடுத்துக் கொண்டிருந்தான்.

முருகனை வணங்காதே!!!

முருகனை வணங்காதே!!!

வணங்கி விட்டு சென்றாலும் அவந்தன் ஒன்றும் செய்ய மாட்டான் என்பதை கூட.....

ஆனால் நிச்சயம் மனிதர்கள் இதையென்று அறிய ஆனாலும் மீண்டும் மீண்டும் பழனிதனுக்கு வந்து முருகனை கண்டு ரசித்து ரசித்து முருகா!! முருகா!!முருகா!!! என்றெல்லாம் ஏங்கிக் கொண்டு மலை மீது ஏறிக் கொண்டும் இருந்தார்கள் இதனால் முருகனும் மனம் மகிழ்ந்தான்!!!

ஆனால் பின் இறைவன் இல்லை!! எதை என்று அறிய முருகன் இல்லை!! என்பவனுக்கும் நிச்சயமாய் முருகன் பாடத்தை கற்பித்தான்!!!!

எதனை என்றும் கூற முருகன் ஓடோடி வந்தான்!!

 பின் முருகன் எதை என்று அறிந்து பின் அவனிடம் சென்றான் முருகன்!!!

ஏனப்பா?? முருகன் இல்லை!! இல்லை!! என்று! சொல்கின்றாயே?? எதனால் இப்படி சொல்கின்றாய்??

ஆனாலும் யானும் ஒரு முருக பக்தன்!!

ஆனால் வந்தது முருகன் தான் என்று தெரியவில்லை.

ஆனால் யானும் ஒரு முருக பக்தன் பின் இவை என்று அறிய என்னுடைய இல்லமும் பக்கத்திலே இருக்கின்றது!!

ஆனாலும் நீயும் பல வருடங்களாக பின் இறைவன் இல்லையே!! முருகன் இல்லையே!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றாய் ???!!!!

இதற்கு என்னதான்?? அர்த்தம்??? என்று கூட...

நிச்சயம் அப்பனே!!! இவற்றை எதனிலிருந்து உன்னிடத்தில் மட்டும் சொல்கின்றேன் வேறு யாரிடமும் நீ செப்பக்கூடாது என்று கூட.

இதனால் நிச்சயம் இவை அறிந்து சொல்லுங்கள் எதையென்று அறிந்து கூட...

அதனால் நிச்சயம் இறைவன் இல்லை என்று சொன்னவன் எதையறிந்து இதனால் பின் இறைவன் இல்லை என்று நான் சொன்னேன்!!!

ஆனால் என்னுடைய புகழ் எங்கெல்லாம் பரவி கொண்டிருக்கிறது!!!

ஆனால் இதை அறிந்து இங்கே இருந்து பல வருடங்களாக இறைவன் இல்லை!! இறைவன் இல்லை!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன் !!

ஆனால் இதை பல அரசர்களும் பார்த்தார்கள் பல வழிகளிலும் கூட இத்தேசத்திற்கே என் பெயர் தெரிந்து விட்டது!!

என் புகழும் தெரிந்து விட்டது!!! இதனால்தான் இறைவன் இல்லை என்று கூட!!...

ஆனால் இவை தன் உணர முருகனும் எதை என்று உணராமலே ஆனால் முருகனுக்கும் அனைத்தும் அறிந்தவன் அனைத்தும் தெரியும்!!!

ஆனால் எவற்றினின்றும் அறியாத அளவிற்கும் கூட ஆனால் ஏன்? எதற்கு? இறைவன் இல்லை!! எதற்கு?? இறைவன் இல்லை என்று சொல்கின்றானே அவந்தனுக்கு ஏன் தண்டனைகள் கொடுக்கக் கூடாது?? முருகன்!!

எதை எதை என்று அறிந்து அப்பொழுது எவற்றிறின்றும் ஆனால் முருகன் அழகாக நின்றான்!!!

அவந்தனுக்கு அருளாசிகள் கொடுத்தான்!!

ஆனால் யான்தான் முருகன் என்று சொன்னான்!!!

ஆனால் இவற்றில் இருந்து அறிவது அவந்தன் சரியாகவே இட்டான் பின் நீதான் முருகன் என்று எந்தனுக்கு தெரியும்....

எதனையுமென்று அறிய அறிய இவற்றிலிருந்தும் கூட அதனால் இறைவன் இருக்கின்றான் என்பது கூட எந்தனக்கு தெரியும்...

ஆனால் ஏன் மக்கள் இதனை என்று அறிந்து...

அதனால்... முருகன் சொன்னான்!!!

அப்பனே உன்னுடைய புண்ணிய கணக்கு முடிந்திற்று... முடிந்திற்று!!! 

எதனால் என்பதையும் கூட இப்பொழுது வரை உந்தனுக்கு தண்டனைகள் இல்லை ஆனால் வரும் காலங்களில் பார்!!!

நீ இறைவனை நோக்கி வருவாய்!!!! என்று கூறிவிட்டு அழகாகவே பின் தன் சுய ரூபத்தை மாற்றிக் கொண்டான் முருகன்.

இதனால் அன்றைய நாளிலிருந்து அவந்தன் பாவங்கள் பின் வந்தது பாவக்கணக்கை தீர்க்க ஆரம்பித்தான் பல கஷ்டங்கள் வந்தது அப்பொழுதுதான் எவை என்று கூட இன்னும் பக்திமான் ஆனான்.

அப்பனே!!! இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே புண்ணிய பாதையில் சற்று ஓங்கி இருக்கும் பொழுது அப்பனே இறைவனை கண்டு கொள்ள மாட்டான் இறைவன் இல்லை என்றே சொல்வான் அப்பனே!!!

ஆனால் பாவ கணக்கில் வந்தால் தான் இறைவனை வணங்குகின்றான்!!! அப்பனே கஷ்டங்கள் வந்தால் தான் இறைவனை வணங்குகின்றான் என்பதை கூட!!

பாவம் கஷ்டம் இதற்கும் கூட அறிந்து அப்பொழுது தான் இறைவன் கண்ணுக்கு தெரிவான் அப்பனே!!

இப்பொழுது புரிகின்றதா அப்பனே எதை பின் எவற்றினின்றும் வரும்பொழுது பாவங்கள் சேர்கின்ற பொழுது தான் இறைவனை நோக்கி மனிதன் செல்கின்றான் அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் இருக்கும் பொழுதே இறைவனை நிச்சயம் நேசியுங்கள்!! நேசியுங்கள்!! என்றெல்லாம் மனிதர்களுக்கு சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே அதனால்தான் புண்ணியம் இவற்றில் இருந்து வந்தவை என்பதை கூட அழகாக எடுத்துரைத்தேன் யான் அப்பனே!!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் எங்களுடைய அருள்கள் இல்லாமல் நிச்சயம் இவை தன் ஓதவும் முடியாது அப்பனே கேட்கவும் முடியாது... அப்பனே அவைதனை உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே..

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே இவற்றில் இருந்தும் எவை எவை வந்தவை என்பதையெல்லாம் அப்பனே பொய்களப்பா!!! பொய் கணக்குகளப்பா!!! வருவார்களப்பா!!! இதனை என்று கூட சொல்வார்களப்பா!!! பொய்களப்பா!! இவை செய்தால் அவை நடக்கும்! அவை செய்தால் இவை நடக்கும்!! என்பதெல்லாம் பொய்களப்பா. நம்பி விடாதீர்கள்!! நம்பி விடாதீர்கள்!! எங்களுடைய அருள்கள் இல்லாமல் ஏதும் நடக்காது என்பதை கூட ஆணித்தரமாக சொல்கின்றேன் அப்பனே இவை பல வாக்குகளிலும் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள்...

ஏன்? எதற்காக ?சொல்ல வேண்டும்? அப்பனே எவை என்று அறிய இதனால் அப்பனே கிரகங்கள் பாதையை யார் உரைக்கின்றார்களோ அவர்களுக்கு கடுமையான தோஷங்கள் ஏற்படும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஏனென்றால் ஒவ்வொரு கிரகத்திற்கும் இறைவன் இட்ட கட்டளை!! நீ இப்படி செய் !!அப்படி செய் என்றெல்லாம்!!!

அவையெல்லாம் எவற்றில் இருந்து கூட மனிதன் தன் வாயால் சொன்னால் அவந்தனுக்கு தரித்திரங்கள் ஏற்படும் அப்பனே.

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!..... வீணாக போய் விடாதீர்கள்!!!! அப்பனே நல் முறையாக இருந்து ஆனால் அவந்தனுக்கு அது பின் திறமை மிகுந்தது நன்மை அளிப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றான்.

ஆனால் கிரகங்கள் எதை என்று அறிய!!!! என்னைப் பற்றியே!! சொல்கின்றாயா நீ என்று கூட பின் கனிவாகவே எதை என்று கூட கோபங்கள் கொண்டு நிச்சயம் அவனையே அழித்து விடும். கடைசியில் பார்த்தால் அவன் குடும்பமும் அழிவில் நிற்கும்.

எதை என்று அறியாத அளவிற்கு கூட கஷ்டங்கள் கஷ்டங்கள்!!

யான் இவ்வளவு பேருக்கு நன்மைகள் செய்கின்றேனே என்று கூட

ஆனால் மனிதா!!! பின் கஷ்டங்களை எல்லாம் நீயே பெற்றுக் கொண்டாய்!!! அவனுடைய கஷ்டங்கள் எல்லாம்.

அதனால் எப்படி?? உன் பரம்பரைகள் ஓங்கும்???

ஓங்கும்??? எதை எதை என்று கூட நீ யார்? செப்புவது? எதை என்று கூட கிரகங்கள் இட்ட.....கணக்கை...!!?????. 

பின் எதை என்று அறிய சொல்கின்றேன்.

ஒருவன் ஒரு காவலாளியாக இருந்தான் ஓரிடத்தில்.

அவந்தன் வேலையை நிச்சயம் செய்கின்றான் பின் அவ் காவலாளியை ஒரு மனிதன் சென்று எதை என்று அறியாமலே இவ்வேலையை நீ செய்யாதே !!என்றால் அவன் நிலைப்பாடு!! என்ன??

இதுதான் கிரகங்களுடைய நிலைப்பாடும் கூட அப்பனே!!! 

அதனால் நிச்சயம் சனி!! சனி!! என்று குறிப்பிடாதீர்கள் அப்பனே!!!

சனியவனுக்கு மிகுந்த கோபங்கள் என்பேன் அப்பனே!!! எவற்றில் இருந்து கூட அதனால் சனி பகவானை பற்றி யாராவது ஒரு வார்த்தை விட்டாலே அவன் அப்பொழுதே அங்கிருந்து கீழே வந்து விடுவான் சொல்லிவிட்டேன் அப்பனே!!

இதனால் அவந்தனுக்கு கஷ்டங்கள் மிகும்...

எதை எதை என்று கூட அப்பனே சனி போல்  எதையென்று கூட அப்பனே உயர்ந்தவன் இல்லை என்பேன் அப்பனே!!!

சனியவன் எவற்றில் இருந்து கூட வந்தவை என்பதை கூட வரும் வரும் காலங்களில் எதை என்று அறியாமலே சித்தர்கள் உரைப்பார்கள். கிரகங்களைப் பற்றியும் உரைப்பார்கள் அப்பனே.

எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் கிரகங்கள் உன்னை எதை என்று பின் அமைப்புகளால் பின் அப்பனே அடி!! அடி!! எதை என்றும் புரியாத அளவிற்கு கூட கிரகங்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி!!

அப்பனே """"அண்ணாமலையே!!!!!!!!!

அப்பனே அண்ணாமலையை நாடி நாடி வந்தாலே போதுமானது அப்பனே கிரகங்கள் ஒன்றும் செய்யாது என்பேன் யான் சொல்லிவிட்டேன் அப்பனே.

எதை என்று கூட ஆனால் இப்பொழுது கூட கிரகங்கள் இப்படித்தான் சொன்னார்களே எவை என்று கூட அறிந்து கூட யான் அப்பனே சித்தன் இதனால் தான் சொன்னேன் அப்பனே!!!!

எவற்றில் இருந்து கூட ஆனால் இதை சில மனிதர்களே பயன்படுத்துவார்கள் அப்பனே. பல மனிதர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

ஆனால் அவ் சில மனிதர்கள் பக்தர்களப்பா!!! என்னுடைய பக்தர்களப்பா!! சித்தர்களுடைய பக்தர்களப்பா!!! சொல்லிவிட்டேன்!!!

அதனால்தான் உண்மை நிலை அப்பனே கலியுகத்தில் அப்பனே ஒழுங்காக வாழ முடியாது கஷ்டங்கள் இல்லாமல் வாழ முடியாது அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.

சித்தர்கள் வழியை நாடுங்கள்!! நாடுங்கள்!!! என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!

யாங்கள் என்ன உங்களுக்கு நல்வாக்கை சொல்லி அப்பனே எதை என்று கூட அறிய அப்பனே எவர்களப்பா??? திருடர்களப்பா!!! மனிதர்கள்! மனிதர்கள்! திருடர்களப்பா!!! புத்திகள் இல்லையப்பா...

புத்திகளை வைத்துக் கொண்டே அப்பனே எதையெதையோ யோசித்து யோசித்து சொல்லிக் கொண்டிருக்கின்றான்!! அப்பனே!! பொய்களப்பா!!! வாயில் வருவதெல்லாம் பொய்களப்பா!!!

ஏமாற்றி நடத்துகின்றானப்பா.

ஆனால் எதை என்று அறிய அதனால் அழகாக உண்மையாக  நடந்து கொண்டிருங்கள்!!! அப்பனே எதை என்று அறியாது எங்களிடத்தில் எவற்றினின்று அறியாத பல ஞானியர்கள் இருக்கின்றார்கள் அவர்களை நேரடியாக போய் தரிசியுங்கள் அப்பனே!!!!

நிச்சயம் அவர்களே எழுந்து வருவார்கள் அப்பனே!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன்!!.... அப்பனே பல பல யுகத்தில் அப்பனே பல கஷ்டங்கள் பட வேண்டும் இறைவனை காண!!!!!

ஆனால் அப்பனே எதை எதையோ செய்ய வேண்டும்!!!! எங்கெங்கோ செல்ல வேண்டும் அப்பனே!!!

ஆனால் கலியுகத்தில் இறைவனை காண அப்பனே அன்பை மட்டுமே செலுத்துங்கள் போதுமானது!!!!

இறைவன் உன்னிடத்திற்கு வந்து எதை என்று அனைத்தும் கொடுத்து தன்னிடத்திற்கு அழைத்துச் செல்வான் அப்பனே இதுதான் உண்மையப்பா!!!

அதனால் உண்மையை எதை என்றும் அறிந்து அறிந்து செயல்படுங்கள் அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட

 எதை என்றும் ஒரு சூட்சமத்தை ரகசியத்தை சூட்சுமத்தையும் கூட எதை என்று அறியாத அளவிற்கும் கூட இருக்கின்றது அப்பனே!!!

""" பழனி தன்னில்!!!!!!!!

அங்கே நிச்சயமாய் எதை என்று அறியாமலே வந்து கொண்டே இருந்தால் அப்பனே யான் நிச்சயம் ஆசீர்வதிப்பேன் அப்பனே!!!! எவையென்று அறிந்து கூட...

சில கர்மங்களை எடுப்பேன்!!!

அப்பனே அவற்றில் இருந்தும் எதை என்று கூட நோய்களையும் அழிப்பேன் அப்பனே!!!

எதை என்றும் கூட அதனால் இவற்றில் இருந்து கூட மனக்குழப்பங்கள் அப்பனே சோம்பேறியானவன் அப்பனே பிற பிற எவற்றில் இருந்து கூட பின் புத்தி இல்லாதவனெல்லாம் இங்கு வந்தால் அப்பனே இவ் தேவி (ஜ்வாலாதேவி) நன் முறையாகவே சமாளிப்பாள் அனைத்தையும் கொடுப்பாள் அப்பனே...

எவற்றினின்றும் கூட பல ஆண்டுகள் இங்கே தான் தவங்கள் செய்து கொண்டிருந்தேன் அப்பனே இப்பொழுது கூட ஏனென்றால் அப்பனே வந்தும் விடுவேன் இங்கு கூட தவம் செய்வதற்கு அப்பனே இவற்றில் இருந்து கூட....

அதனால் பல மனிதர்களை இன்னும் ஏராளமான எவற்றினின்றும் வந்தவை எங்கெங்கே செல்ல வேண்டும் என்பதையெல்லாம் நன்கறிந்து சென்றுவிட்டாலே போதுமானது நிச்சயம் கர்மா அண்டாது!!!!

எவற்றாலும் எதனாலும் உந்தனுக்கு தீங்கு ஏற்படாது சொல்லிவிட்டேன் அப்பனே..

அதை அறிந்து அப்பனே ஒன்றை சொல்லுகின்றேன் கஷ்டங்கள் பட்டால் தான் அப்பனே வாழ்க்கையில் வரும் இறைவனுடைய பக்தி!!!!!

இதனையென்று கூட அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே பின் புண்ணியங்கள் எதற்காக?? அப்பனே இவையன்றியும் கூட பாவங்கள் எதற்காக??!

இவையெல்லாம் பல சித்தர்கள் செப்பி விட்டார்கள்!!! அப்பனே.

இனிமேலும் யாங்களும் வழி நடந்து நிச்சயம் செப்புவோம் மனிதர்களுக்கு அப்பனே இறங்கி இறங்கி வந்து!!! 

ஏனென்றால் அப்பனே!!!!!

இரு(2) மனிதர்கள் கூட பின் நல்லவராக இருந்தாலே போதுமானது!!!! நல்வாக்குகளாக அவர்களுக்கும் எவை என்று கூட அவ் அவ் ஓர் மனிதனுக்காகவாவது கூட!!!! யாங்கள் இறங்கி வந்து செப்ப வேண்டும்!!

ஏனென்றால் அப்பனே எதையன்றி கூட ஒரு காலத்தில் அப்பனே எங்களையே நம்பி வாழ்ந்தவர்கள்!! இப்ப பிறப்பிலும் பிறவிகள் எடுத்துள்ளார்களப்பா!!!

அவர்களுக்கு நிச்சயம் இவ் வாக்குகள் சேரும் என்பேன் அப்பனே. 

அதனால் மனித நிலையை கடந்து விடுங்கள் கடந்து விடுங்கள் அப்பனே மனித நிலையில் இருந்தாலே அப்பனே தரித்திரம் எவை என்று கூட!!!....

 கஷ்டங்கள் ஓடோடி வந்துவிடும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!.

அதனால் இவை என்று கூட கஷ்டத்தை நிச்சயம் மனிதனால் தீர்க்க முடியாது அப்பனே சொல்லி விட்டேன்.

எங்களைப் போன்ற சித்தர்களால் எவை என்று அறிய முடியும் என்பேன் அப்பனே...

இப்பொழுது கூட பல மனிதர்கள் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்னால் முடியும் என்னால் முடியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ஆனால் அவர்களால் முடியும் என்பதை ஒன்றை மட்டும் சொல்கின்றேன். பாவத்தை சம்பாதிக்க முடியும் அப்பனே.

இது ஒன்றைத்தான் அவர்களால் முடியும் அப்பனே.

அவ்வளவு பாவங்கள் சம்பாதிக்கின்றார்கள் அப்பனே!!! எப்படி அவர்களுக்கு நன்மைகள் ஏற்படும்!???

பொய்களப்பா!!பொய்களப்பா!!! திருடர்களப்பா மனிதன் யான் தான் எதை என்று கூட சிறந்த பக்தன் என்னை போல் இவ்வுலகத்தில் எவரும் இல்லை யான் முருகனுடைய பக்தன் ஈசனுடைய பக்தன் அகத்தியன் பக்தன்

என்று சொல்பவனை யான் நிச்சயம் அவன் வாய் மீதே அடிப்பேன் சொல்லிவிட்டேன்!!!அப்பனே எதை என்று கூட பொய்களப்பா!!! எதற்காக சொல்கின்றாயடா மனிதா நீ??

 எதையன்றி கூட பின் ஈசன் சொன்னானா??? என் பக்தன் என்று!!!

அகத்தியன் சொன்னானா???

 என் பக்தன் என்று!!

முருகன் சொன்னானா??? என் பக்தன் என்று!!!

நீயே ஏதாவது ஒன்றை சொல்லி விடுவது பாவத்தை சேர்த்துக் கொள்வது கடைசியில் பார்த்தால் என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று சித்தர்கள் மீது பழியை போடுவது!!!!

""" காறி துப்புவேன் மனிதா!!!!

இன்னும் எதை என்று கூற கூற பின் நிச்சயமாய் அமைதியாக வணங்குங்கள்!!! நிச்சயம் போட்டி பொறாமைகளாகவே இருந்தாலே நீ அழிந்து விடுவாய் மனிதா!!! அவையே உன்னை கொன்று விடும் மனிதா!!!

நிச்சயம் அமைதியை கைகொள்ளுங்கள் அன்பை பின் பரிமாறிக் கொள்ளுங்கள் போதுமானது!!!!

எவற்றின் மீது நம்பிக்கை வரவேண்டுமோ நிச்சயம் இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் போதுமானது அப்பனே !!!

எதை எதை என்று கூட எங்கே? செல்கின்றீர்கள் ?அப்பனே!!! எங்கே செல்கின்றீர்கள்?? அப்பனே!!

பாவத்தின் வழியே செல்கின்றீர்கள் மனிதர்கள் அனைவருமே கூட!!!!

புண்ணியத்தின் வழியே வாருங்கள்!! புண்ணியத்தின் வழியே வாருங்கள்!!

புண்ணியத்தின் வழியில் வருவதற்கு முதலில் போட்டி பொறாமையை நீக்குங்கள் அப்பனே எவற்றினின்று கூட பின் எங்களையே வணங்கி யான்தான் பெரியவன்!!! பெரியவன்!!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

 ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்

 எங்கெங்கிருந்தோ பணங்கள் வருகின்றது...

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் எதையன்றி கூட.....

ஒருவன் ஒரு திருத்தலத்தை அழகாக அமைத்தான் ஆனாலும் சரி என்று கூட முருகனும் ஒத்துக்கொண்டான்.

ஆனால் அவந்தன் முருகனை அங்கே அமைத்துக் கொண்டான்.

ஆனால் காசுகள் எங்கெங்கோ திருடியதெல்லாம் இங்கு வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எதை என்று அறிய அதனால் நிச்சயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே திருந்துங்கள்!!! திருந்துங்கள்!!! அப்பனே அன்பை மட்டும் செலுத்துங்கள்.

எதனை என்று கூட அப்பனே அதனால் ஒன்றை சொல்கின்றேன்!!!

நீ திருத்தலம் கட்டுகின்றாயா, அப்பனே எவற்றினின்றும் கூட அப்பனே எதற்காக கட்டுகின்றாய்? என்பதை கூட யோசித்துக் கொள் அப்பனே!!!!

எவற்றினின்றும் கூட ஆனால் அப்பனே அவைதனுக்கும் எதை என்று அறிய மிகுந்த அன்பு தேவை என்பேன்!!!! அப்பனே இவ்வாறு அன்பு சேர்த்து சேர்த்து வைத்துக் கொண்டால் தான் அப்பனே எதை என்று அறிய அதனால் தான் அப்பனே உண்மை நிலையை எதை என்று கூட இனிமேலும் சித்தர்கள் இனியும் செப்புவார்களப்பா!!! 

எதையென்று கூட அப்பனே சித்தர்கள் எதற்காக அப்பனே மனித இனத்தை அப்பனே நல்வழிப்படுத்தவே வந்தார்களப்பா!!!

எதனையென்று கூட அதனால் யாங்கள் காசுகளுக்கு ஆசைப்பட மாட்டோம் அப்பனே காசுகளுக்காக ஆசைப்பட்டவன் அப்பனே அங்கேயே பாவத்தை ஏற்படுத்தி விடுகின்றான் அப்பனே.

அதனால் எங்களை நம்பியும் பிரயோஜனம் இல்லை பிரயோஜனம் இல்லை அப்பனே..

அதனால் யான் போகனை வணங்கினேன்...... வணங்கி செல்லட்டும் எதை என்று கூட அகத்தியனை வணங்கினேன் வணங்கி செல்லட்டும் அப்பனே அவ்வளவுதான் வாழ்க்கை தெரிந்துவிடும் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட!!!

அப்பனே யான் இவற்றினின்று கூட அம்மையே எந்தன் அம்மையினடத்திலிருந்து என் அம்மையின் மடியில் இருந்து வாக்குகளை யான் சொல்கின்றேன் எதை என்று அறிய அதனால் புரிந்து கொள்ளுங்கள்!!!

நன்மையைச் செய்யுங்கள்!!! பிறருக்காக உழையுங்கள்!!! போதுமானது இதுதான் வாழ்க்கை சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

மற்றவை எல்லாம் வாழ்க்கையாகாது தன் இனத்திற்காகவெல்லாம் பின் வாழ்க்கையை நடத்துபவன் அவன் பெரிய முட்டாள் என்பேன் அப்பனே பின் அவனும் அழிந்து விடுவான் அவன் குடும்பமும் பின் சேர்ந்து அழிந்து விடும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பிறர் நலனுக்காக உழையுங்கள்!!! அப்பனே போதுமானது இறைவன் உன் நலனுக்காக உதவுவான் அப்பனே!!! உயர்வு பெறுவாய் நீயும் கூட அப்பனே நல்விதமாக ஆசிகள்!!! ஆசிகள்!!! மறுவாக்கும் அதிவிரைவிலேயே பின் ஒரு தலத்தில் இருந்து சிறப்பான ஒன்றை விவரிக்கின்றேன்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஜவாலமுகி தேவி ஆலயம். 

சக்தி பீடம். 

காங்ரா மாவட்டம். 

ஹிமாச்சல் பிரதேசம். 

அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் :

இமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஜ்வாலாமுகி கோவில் ஒன்றாகும். இந்தியாவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜ்வாலாமுகி கோயிலில் எந்த ஒரு சிலை இல்லையென்றாலும் கோவிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் 9வது சக்தி பீடமாக விளங்குகிறது. தேவியின் உடற்பகுதிகளில் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

கோயில் சிறப்பு :

இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள்.

ஒவ்வொரு சக்தி பீடமும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றிருப்பது போன்று, இங்கே மகா காளியின் வடிவாகவும், கொளுந்து விட்டெரியும் ஜ்வாலையாகவும், ஜ்வாலாமுகி திகழ்கிறாள்.

இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே உள்ளது. இங்கு உமிழும் நெருப்பே ஜ்வாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூசிக்கப்படுகிறது.

காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் பழமையான பாறையின் இடுக்குகளில் இருந்து நீலநிறமான தீ ஜ்வாலைகள் இயற்கையாகவே அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த ஜ்வாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றன!!

சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜ்வாலைகள் வணங்கப்படுகின்றன.

இந்த கோயிலில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன, அவை வாசிணி, அன்னபூர்ணா, சந்தி, மகாக்கலி, ஹிங்லஜ், விந்தியா, மகாலட்சுமி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சி தேவி. 

கோயில் திருவிழா :

ஒவ்வொரு ஆண்டும்; நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பலவித பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. துர்க்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது, தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுக்கிறார்கள்.30/7/2022 அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : ஜ்வாலாமுகி தேவி ஆலயம்.

காங்ரா. 

இமாச்சல பிரதேசம். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....... தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete