​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 1 October 2022

சித்தன் அருள் - 1191 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி!







24/9/2022  புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை /மாத சிவராத்திரி தினமன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி. 

ஸ்ரீதேவி பூதேவி உடன் வந்த சீனிவாசன்.... மெய்சிலிர்க்க வைக்கும் திருமலை பயணம். 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

அகத்திய ஜீவநாடி சுவடி வாசிக்கும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் இந்த கன்னி திங்கள் மாதமான புரட்டாசி மாதத்தில் ஏழுமலையான் தரிசனம் செய்ய வேண்டும் என்று சூட்சமமாக உரைத்திருந்தார். புரட்டாசி மாதத்தில் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் தரிசனம் செய்ய முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் குருநாதர் அகத்தியரின் திருவருளால் பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் அருகில் இருந்து தரிசனம் செய்யும் படியான தரிசன அனுமதிச்சீட்டு அவருடைய திருவருளால் கிடைத்தது.

அதன்படியே திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் 23/9/2022 அன்று வெள்ளிக்கிழமை மாலையே திருப்பதி புறப்பட்டு சென்றார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் அலிப்பிரி என்னும் இடத்தில் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது வாகனத்தை இரு பெண்மணியுடன் வந்த ஒருவர் கைகாட்டி வாகனத்தை நிறுத்தினார்.
ஜானகிராமன் ஐயா அவர்களும் வாகனத்தை நிறுத்தி விட்டு என்னவென்று கேட்க!!!!! நாங்கள் மூவரும் திருமலைக்கு செல்கின்றோம் எங்களை மேலே கொண்டு சென்று விட முடியுமா என்று கேட்டனர்.

ஐயா அவர்களும் சரி என்று சம்மதித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். அவர்களுடன் ஜானகிராமன் ஐயா அவர்கள் தெலுங்கிலேயே உரையாடிக் கொண்டிருந்தார். இவர் அப்பாவித்தனமாக கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே பதில் தந்து கொண்டே வந்து கொண்டிருந்தனர்.

அந்த மூவரும் கூறியது என்னவென்றால் நாங்கள் தேவஸ்தானத்தில் தான் பணி செய்கின்றோம் என்று கூறினார்கள்.

திரு ஜானகிராமன் அய்யா அவர்களும் இவர்களுக்கு திருப்பதி தேவஸ்தான போக்குவரத்து கழக பேருந்தில் சலுகைகள் உண்டு மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்கள் சென்று கொண்டே இருக்கின்றன. அப்படியிருக்க ஆனால் நம்முடைய வாகனத்தை நிறுத்தி இவர்கள் ஏறிக்கொண்டார்கள்!!!! எதுவும் புரியவில்லையே என்று!!! 

சரி!!!  ஏதோ அவசரம் போல!....  என்று நினைத்து இவர்களை மேலே கொண்டு சென்று விட்டு விடுவோம் என்று எண்ணி  மேலும் உரையாடலை தொடர்ந்தார்.

திருப்பதி மலை பாதையில் வாகனங்கள் செல்வதற்கு முன் அனுமதிப்பதற்கு முன் சோதனை சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும் நம்மிடம் கொண்டு செல்லும் உடைமைகள் அனைத்தையும் சோதனை செய்த பிறகே தான் மேலே செல்ல அனுமதி அளிப்பார்கள்.

அதன்படியே திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் சோதனைச் சாவடியில் வந்த பொழுது அந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் ஜீவநாடி பெட்டகம் இருக்கும் பொதியை தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.

சோதனை சாவடி அலுவலர்கள் உடல் பரிசோதனை செய்து விட்டு உடமைகள்  சோதனை செய்ய முற்பட்டபோது இந்த பொதி எங்களுடையது என்று தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார் .( திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்களுக்கு சோதனைகளில் இருந்து விதிவிலக்கு உண்டு)

சோதனை அலுவலர் மேலும் சரி என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விட்டார்.

திருமலை நோக்கி பயணம் தொடர்ந்தது திரு ஜானகிராமன் ஐயா அவர்களிடம் நீ யார் என்ன செய்கின்றாய்?? என்றெல்லாம் விவரங்கள் அவர்கள் மூவரும் கேட்டு அறிந்தனர்.

அதன் பிறகு அவர்கள் கூறிய வார்த்தை!!!

இந்த உலகத்தில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது . எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்திலும் கூட நேர்மையுடன் நடந்து கொண்டு வந்தால் தெய்வம் நமக்கு வழி விட்டு விடும் என்று அவர்களும் அறிவுரை போல பலவாறு பேசிக் கொண்டே வந்தனர்.

திருமலையை அடைந்தபின் அதுவரை சேர்த்து அணைத்து வைத்திருந்த ஜீவநாடி பெட்டகப் பொதியை இவரிடம் கொடுத்து, சிரித்தா படியே சென்று விட்டனர்.

அடுத்த நாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி விட்டு ஏழுமலையானை அருகில் இருந்து காணும் தரிசனம் செய்துவிட்டு... வந்து, குலசேகர ஆழ்வார் பாடிய பிரபந்தத்தில் 11 பாசுரங்கள் திருவேங்கடத்தைப் பற்றி திருமலையை பற்றி மனம் உருகி பாடியிருக்கின்றார்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் சுவடியை வணங்கி வாசிக்கத் தொடங்கினார்!!!!

குருநாதர் அகத்திய பெருமான் ஆசிர்வாதங்களோடு வாக்கினை தரத் தொடங்கினார்

இவையென்றும் அறிய!!! அப்பனே எவை என்றும் அப்பனே !!நிஜமாகவே உடன் வந்தது இதையன்றி கூற அப்பனே!!! தேவியருடன் நாராயண பெருமாளும் அப்பனே !!!!

எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நல்விதமாகவே ஆசிகள் கொடுத்து விட்டார்கள் அப்பனே உயர்வாக எண்ணி !!!! இன்னும் உயரத்தான் செல்கின்றாய் நீ!!! எதை எதை என்று அனைத்தும் கிட்டும் என்பேன் பெருமாளும் நல்லாசிகள் கொடுத்து கொடுத்து ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!!
என்று வாக்குரைத்தார்.

வாகனத்தில் கூடவே பயணித்தது ஸ்ரீதேவி பூதேவி உடன் வந்த நாராயண பெருமாள் உடன் வந்து நல்ஆசீர்வாதமும் செய்து விட்டார்கள் என்று குருநாதர் கூறிவிட்டு அவருடைய பங்கிற்கும் நல்லாசிகள் தந்து விட்டு பொதுவாக்கினை உரைக்க தொடங்கினார்!!!!

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!

இதையென்றும் அப்பனே  வரும் காலங்களில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழப் போகின்றது!!! நிகழப்போகின்றது!!! என்பேன்.

ஆனாலும் மனிதன் திருந்திய பாடில்லை!!!!

தன் நிலைக்கு எதை என்றும் தெரியாத அளவிற்கு கூட அனைத்தும் பின் விருப்பத்துடனே பின் உணர உணர உடனே பின் அனைத்தும் நடக்கும் என்று விரும்பிக் கொண்டு இருக்கின்றான்.

ஆனால் அப்பனே நிச்சயம் எதையென்று கூட அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை என்று உணர்த்தாமலே மனிதன் அதாவது எதை என்றும் உள் நிறுத்தி நிறுத்தி ஈசனை வணங்குவதை விட இந்த உலகத்தில் அப்பனே எதை என்று கூட ஒன்றுமில்லை எதை என்றும்!!!!

ஆனாலும் விஷ்ணுவின் எவற்றினின்று கூட முதலில் பின் எங்கு எதை எவற்றிலிருந்தும் பின் பாடுபடாத அளவிற்கு கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கின்றது ஒளியின் தன்மைகளை கூட எதிரொளிப்பி!!!! (எதிரொலி=ஒலி/ எதிரொளி /ஒளி) 

ஆனாலும் இதனைப் பற்றியும் கூட யான் இப்பொழுது எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!

எதையென்று உணர உணர இம்மலையில் தன் இம்மாதத்தில்(புரட்டாசி) நிச்சயம் எதையென்று பின் ஒளி கற்றைகள்(ஒளிக்கதிர்கள்) எனலாம் இதனை.

இதனை இங்கே சரியாக விழும் என்பேன் அதாவது  பின் பெருமாள் இருக்கின்றானே!!!!...... எதை என்று கூட பின் அங்கே தான் சராசரியாக விழும் என்பேன்!!!

ஆனால் அவ் பெருமாளுக்கு சக்திகள் அதிகம். ஆனாலும் இதில் பட்டு உடனடியாக எதை என்றும் ஆனாலும் பின் சரியாக சூரியன் வருவான் அதிகாலையிலே பின் ஒளிக்கற்றை சரியாகவே அங்கிருந்து பின் பெருமாள் மீது படும்.

ஆனால் எதிரொளிப்பு திறன் என்பது முதலில் பின் பத்மநாபசுவாமி( திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி) எதை என்றும் கூட ஒளிக்கற்றை கீழ்நோக்கி பாயும்.

அப்பனே மற்றொரு கற்றை எதை என்று விளக்கும் அளவிற்கு கூட அப்பனே எதை எவற்றில் இருந்து கூட தற்போது முக்திநாத் என்றே அதனையும் பெயரிட்டு பின் குறிப்பிடுகின்றார்கள் அப்பனே!!!! இதனையும் பின் அங்கே விழும் என்பேன் அப்பனே!!

இதனை ஆனால் ஒளிக்கற்றைகள் எதை என்று விழும் பொழுது கூட அப்பனே நிச்சயமாய் பெருமாள் உயிரோட்டமாகவே!!!........

லட்சுமி எவையென்றும் எவையென்றும் எதை என்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர உணர அப்பனே அதனால் தான் அப்பனே பின் பெரியோர்கள்...... ஆனாலும் இதற்கு தகுந்தாற்போல் அப்பனே இங்கு(திருப்பதி) வணங்கி வர!!! வணங்கி வர!!! தெய்வத்தின் அருள் உடனடியாக கிடைக்கும் என்பேன்.!!!

அதாவது நாராயணனின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிடும் என்பேன் அப்பனே நலமாகவே!!!

அதனால் அப்பனே எவை எதை சூட்சுமமாக அப்பனே மனிதர்களுக்கு உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!! இதைத் தெரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!

பின் இதை என்றும் அறியாத அளவிற்கு கூட அதனால் தான் இம்மாதத்திற்கு(புரட்டாசி) தனிச்சிறப்பு உண்டு!!!!

அப்பனே ஆனால் இதை என்றும் அறியாத அளவிற்கு கூட ஆனாலும் இதனை விழும் சமயத்தில்(ஒளிக்கற்றைகள்) நிச்சயம் பெருமாளை நினைத்துக் கொண்டு பின் தன் மனதில் என்ன இருக்கின்றதோ? அதை நிச்சயம் பின் பெருமாளிடம் கூறினால் உடனடியாக  நிறைவேற்றி விடுவான்!!!!!

ஆனாலும் இதற்கும் காலங்கள் பதில் சொல்ல வேண்டும் அப்பனே!!!!

ஆனாலும் எதனை நிமித்தம் நிமித்தம் காட்டி அப்பனே இதனால்தான் பெருமாளுக்கு கூட...... ஆனாலும் அவ் ஒளி கற்றை எதன் சக்திகள் மீது இருக்கும் அப்பனே ஈர்க்கும் என்றால் அப்பனே பின் எதை தன் உடம்பில் எவை அதாவது அசைவம் நிச்சயம் எவ் உயிரின் தன்மையை கூட பின் மனிதரிடத்தில் சேர்ந்து விட்டால்( அசைவ உணவு உண்டு விலங்குகளின் தன்மைகள் உடலில் கலந்து விட்டால்) அப்பனே அவ் ஒளிகற்றையானது பின் நம் மீது படும்பொழுது சில தீயவினைகளை ஏற்படுத்தி விடும் என்பேன் அப்பனே!!! (அசைவ உணவு முறையை கடைபிடித்தால் தீயவினைகள் தான் ஏற்படும்) 

ஆனாலும் எதை என்று கூட அதை நீக்கிவிட்டு( அசைவ உணவு முறையை தவிர்த்து)   சுத்த சன்மார்க்கமாக( ஜீவகாருண்யம்) அணுகு முறையாக பெருமாளை பின் நல்முறையாகவே வணங்கி வந்தால் அப்பனே எதையென்று எவற்றிலிருந்து கூட அவ்வொளிக்கற்றையானது நிச்சயம் தன் மீது அதாவது பின் மீது படியும் பொழுது உடம்பின் மீது படும்பொழுது அனைத்து உறுப்புகளும் கூட அப்பனே அனைத்து உறுப்புகளும் கூட அப்பனே மாற்றம்!!! அதாவது பரிசுத்தமாகும் என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே எதை  எவற்றில் இருந்து கூட வருபவை அப்பனே பின் இறைவன் அருளைக் கூட அப்பனே  அதாவது அறிவியல் எதனை என்று கூட நிமித்தம் காட்டி இரண்டாகவே பின் இணைத்து சொல்லப் போகின்றேன் அப்பனே!!!!( இறைவன் ஆன்மீகம்  அறிவியல் இரண்டையும்) 

அப்பொழுதுதான் மனிதனுக்கு தெளிவுகள் பெறும்!!!!

ஏனென்றால் அப்பனே இதை எதை எவற்றின் என்று கூட இதை பின் என் பக்தர்கள் நல்முறையாகவே உணர்ந்து கொள்வார்கள் அப்பனே!!!

வரும் காலங்களில் மோட்சத்திற்கான வழிகளை பின்பற்றுவார்கள் என்பேன் அப்பனே !!! இவை என்று கூட

ஆனாலும் அப்பனே இதை இப்பொழுதுகூட இவ் ஒளிக்கற்றைகள் பின் படும்பொழுது அதாவது நாராயணனின் பார்வை படும் பொழுது நம் தரித்திரங்கள் பல நீங்கும் என்பேன் அப்பனே இவை இதை என்று!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட இதனையும் என்று கூட அதுவும் கூட சனியின்(சனிக்கிழமை) நாளிலே தொடங்குகின்றது என்பேன் அப்பனே!!!

இதிலிருந்து தொடங்கி!! தொடங்கி!! அப்பனே அதனால்தான் பின் எவை  எதையென்று எவற்றின் தன்மைகள் என்பதை கூட பின் அதாவது எவ் உணவையும்(விரதம்) உட்கொள்ளாமல் கூட நிச்சயம் அமைதியாக தியானங்கள் செய்து கொண்டிருந்தாலே அவ்வொளியானது சரியாக படும் என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா!!!!

அப்பனே எதை என்று உணராத அளவிற்கும் கூட அப்பனே நிச்சயம் பெருமாளின் சக்திகள்  எங்கு உள்ளது என்பதையும் கூட இன்னும்  விவரிக்க !!விவரிக்க!! இன்னும் நிச்சயம்.......

ஆனாலும் அப்பனே பல பல கலியுகத்தில் அப்பனே என்னதான் நடக்கப்போகின்றது?? என்பதை கூட மனிதன் உணர்ந்திருக்கவில்லை அப்பனே!!!!

மனிதன் அனைத்தும் கூட மாயையை தேடி சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே!!!மாயையில் விழுந்து விழுந்து விடுகின்றான் அப்பனே!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து மனித ரூபத்தில்  யானும் மனித ரூபத்தில் எதை எவற்றில் இருந்து கூட எப்படியாவது காட்சிகள் அளிக்க வேண்டும் என்பக்தர்களுக்கு என்று நினைத்திருக்கிறேன்!!!

உண்மையானவர்களுக்கு காட்சி தர வேண்டும் என்று யான் நினைத்திருக்கின்றேன்.

ஆனாலும் அப்பனே மனிதன் பொய்களப்பா!!! பொய்களப்பா !!! நம்பி விடாதீர்கள் அப்பனே எதை என்று கூட அப்பனே யான் தான் அகத்தியன் என்று கூட கூறிவிடுவான்!!! யான் தான் முருகன் என்று கூறிவிடுவான் யான் தான் விஷ்ணு என்று கூட கூறிவிடுவான் அப்பனே பொய்களப்பா!! பொய்கள்!! இவ்வாறு நடந்து கொண்டு தான் இருக்கின்றது அப்பனே!!!

அதை நம்பி போனால்???????

எச்சரிக்கின்றேன்!!!! அப்பனே!!!! அப்பனே எதை எவற்றை என்று கூட  அப்பனே நிச்சயமாய் எதை என்று கடைசியில் பார்த்தால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் கஷ்டங்கள் தான் வரும் என்பேன் அப்பொழுது ....... சொன்னானே!!!! அகத்தியன் சொன்னானே !!! எதை என்றும் கூட எவை என்றும் கூட என் மேல் பழி போட்டு விடாதீர்கள் அப்பனே!!! சொல்லிவிட்டேன் எச்சரிக்கின்றேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே உண்மையானவர்கள் இல்லையப்பா !!!! அப்பனே அனைத்தும் காசுகளுக்காகவே அப்பனே இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

எவை எவை என்று உணர அப்பனே  அதனால் இறைவனைத் தவிர அப்பனே இவ்வுலகத்தில் எதை என்று கூட மிகப்பெரியவர்கள் எவருமில்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எதை எவற்றில் இருந்து கூட அப்பனே மறைமுகமாக பல  ஒளிக்கற்றைகள் எங்கெங்கு?? ஒளிர்கின்றது!!! ஒளிர்கின்றது!!! என்பதை அப்பனே சொல்கின்றேன் சரியாக அப்பனே இவ் ஒளிக்கற்றையானது!!! அப்பனே ஒவ்வொரு மாதத்திலும் அதாவது இப் புரட்டாசி திங்கள் அப்பனே அப்படியே தை மாதம் வரைக்கும் நல்விதமாகவே அப்பனே எதை என்று கூட விழும் என்பேன்!!!

எங்கெங்கு விழுந்து எழும் என்பதை கூட அப்பனே இதனால் அங்கங்கு சென்றால் தான் அப்பனே கர்மங்கள் விலகும்.

ஆனாலும்  சில மனிதர்களுக்கு அப்பனே இறைவனே ஏற்படுத்தி தருகின்றான் அப்பனே புண்ணியங்களுக்காகவே  எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட!!!!

அதனால் இவ் மாதம் அப்பனே ஆனாலும் பத்மநாபசுவாமி எதை எவற்றை என்று கூட அப்பனே அங்கும் பெறும் பெறும் அப்பனே!!!! பெருமாளின் ரூபங்களப்பா (பத்மநாபசுவாமியின் மூர்த்தத்தில் ஒளிக்கற்றைகள்) அங்கே அமைதியாக எவை எதையென்றும்  உணர்த்தும்படி!!!! உணர்த்தும்படிக்கு மேல் இருந்தும் ஆனாலும் விளக்கங்கள்!!! ஆனாலும் அதன் உள்ளே பாயும் என்பேன் அப்பனே!!! ஒளியானது அங்கே ஊடுருவும்!!!! 

ஊடுருடும் பொழுது அப்பனே ஏறக்குறைய  அடியில் பூமிக்கு அடியில் ஒளிகள் செல்லும் என்பேன் அப்பனே!!!!

எதை எவற்றினின்று கூட.... பூமிக்கு அடியில் என்னென்ன உள்ளது என்பதையும் கூட .... சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் !!!

மீண்டும் எதை என்று கூட அவ் மாதத்தில் மீண்டும் பூமியின் அடிபாகம் அதாவது பாதாளம் வரை பாயும் என்பேன்

பாய்ந்தும் !!பிரிந்தும்!!! அப்பனே எதை எவை என்றும் கூட அப்பனே தலையில் இருந்து அதாவது உறக்கம் (அனந்த சயனம்) கொண்டிருக்கின்றான் பின் பத்மநாபசுவாமி எவை எவை என்று கூட இதனால் அப்பனே நெற்றியில் பாய்ந்து அப்பனே பாதாளம் வரை பாயும்... திரும்பவும் அப்பனே அதை பின் எதிரொளித்து பின் கால்கள் வழியாக  பின் ஊடுருவும் என்பேன் அப்பனே!!!!!

இதனால்தான் அப்பனே அங்கு கூட சமமான சக்திகள் உள்ளது என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே பெருமாளுக்கும் தனிச்சிறப்பு!!!!

இதையென்று இன்னும் ஏராளமான செய்திகளையும் சொல்லிக் கொண்டே இருப்பேன் அப்பனே!!! எவை என்று கூட!!!

அதனால் மந்திரங்களும் கூட எப்பொழுது கூட ஜெபிக்க வேண்டும் என்று கூட அப்பனே ஒரு தகுதி இருக்கின்றது!!! ஆனாலும் மனிதனுக்கு   எப்போதெல்லாம் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும் எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட  தெரியாமல் போய்விட்டது இதனால் மந்திரங்கள் ஜெபித்தாலும் ஏன்?? பயனளிப்பதில்லை?! என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே சரியாகவே!!!!

அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் கூட மறைந்துள்ளது அதாவது இறைவன்!!!

இறைவன் நிச்சயம் இருக்கின்றான் அப்பனே!!!!

நம்புங்கள் அப்பனே!!!

மனிதர்களை நம்பி விடாதீர்கள்!!!

ஏனென்றால் மனிதன் எவையென்று கூட பொய் பித்தலாட்டக்காரனே என்பேன்!!!

அப்பனே எதை எதை என்று கூட வரும் காலங்களில் கலியுகத்தில் அப்பனே இன்னும் செல்வார்களப்பா போலியான பக்திக்கே செல்வார்களப்பா... எதை என்று கூற.....

அதனால்   நம்பி விடாதீர்கள்!! நம்பி விடாதீர்கள்!!! என்று யான் ஏற்கனவே.........

அப்பனே இன்னும் எதை என்று கூட இல்லையப்பா!! இல்லையப்பா!! அப்பனே எதை என்று கூட ஆனாலும் அப்பனே இதை இதை என்று விளக்கும் அளவிற்கு அதாவது அப்பனே மாந்திரீகம் என்கின்றார்களே அதை எப்படி?? செயல்படுகின்றது!? என்பதையும் கூட அப்பனே வரும் வரும் காலங்களில் யான் நிச்சயம் மனிதனுக்கு எச்சரிக்கையாக விடுகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் இதையென்று அறியாது.... அப்பனே யானும் இங்கு திரிந்து கொண்டிருக்கின்றேன் நலமாகவே!!!!!

ஆனாலும்  ஒவ்வொருவனையும் பார்த்துக் கொண்டிருந்தால்!!??.... அப்பனே அப்பனே எதை என்று கூட ஆனாலும் ஏமாற்றும் திறன் தான் மனிதனிடத்தில் அதிகம்!!!

ஆனாலும் அப்பனே கலியுகத்தில்  யார் ஏமாற்றுகின்றார்களோ அவர்களைத்தான் அப்பனே எதையென்று இவ்வுலகம் போற்றும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் விடமாட்டோம்!!! அப்பனே அவந்தன் வழியே அதாவது ஏமாற்றும் வழியிலே சென்று நிச்சயம் அவந்தனுக்கும்!!..........

 அப்பனே எதை என்று கூட யான் இனி மேலும் சொல்ல மாட்டேன் அப்பனே!!!

""" செய்து காண்பிக்கின்றேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இவ்வாறு பல பல வழிகளிலும்  கூட அதாவது பல எதை என்று கூட பல காலங்களில் கூட அப்பனே யான் மனிதனுக்கு நல்லதை சொல்லிக் கொண்டுதான் இருந்தேன் ஆனாலும் அப்பனே அகத்தியனின் அதாவது  அப்பனே என்னை வைத்துக்கொண்டு அப்பனே எவையென்று எதை என்று குறிப்பிடாத அளவிற்கு கூட பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே அகத்தியன் வாக்கு  பொய் என்று கூறி விட்டார்கள் அப்பனே!!!

மனிதர்களுக்கு பல நிலைமைகளை கூட ஏற்படுத்தி விட்டது அப்பனே இவையெல்லாம் பொய் அப்பனே!!!

என்னை வைத்துக்கொண்டு அப்பனே பொய்யாக உரையாடுகின்றார்கள் அவ்வளவுதான்!!!

 ஆனால் இறைவன் விட்டு விடுவானா?? என்ன!??

அவனை(இறைவனை) வைத்து விளையாடினால் அதாவது அப்பனே என்ன ஆகும்???? என்பதை கூட அப்பனே தெரிந்து கொள்ளவில்லை... இதனால் அப்பனே எச்சரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!
திருந்தியபாடில்லை என்பதை கூட... 

அப்பனே நல்லோர்கள் இருக்கின்றார்கள் அப்பனே மறைமுகமாகவே இருக்கின்றார்கள் ஞானியர்கள் இருக்கின்றார்கள் அப்பனே மறைமுகமாகவே!!!

ஆனாலும் இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே எத்தனை?? எத்தனை?? மனிதனடா!!!

எத்தனை ??எத்தனை?? ஜென்மங்களடா!!!

அப்பனே பிறந்து!! பிறந்து!! வளர்ந்து!! வளர்ந்து!! ஆனாலும் பொய்கள்!! பொய்கள்!! அப்பனே!!! இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால்???..... அப்பனே எங்கு?? தான் விடிவு காலம் இருக்கின்றது?? அப்பனே!!!........

சித்தர்கள் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் எதை என்று கூட அப்பனே.... எங்களைப் பயன்படுத்தாதீர்கள்!! எங்களை பயன்படுத்தாதீர்கள்!! என்று கூட யான் எச்சரித்து விட்டேன் அப்பனே!!!

நிச்சயம் மனிதனை எவ்வாறு  என்பதை கூட எதை என்று உண்மையான உண்மையான தூய உள்ளவனை கூட நல்படியாக ஏற்றுக்கொள்வேன்!!!

ஆனால் பொய் பித்தலாட்டக்காரர்களை நிச்சயம் யான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் அப்பனே!!

இவ்வுலகம்!!..... மனிதன் எவ்வாறு? பித்தலாட்டம் எதை என்று கூட செய்கின்றானோ அதன் வழியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே.... அதனால் திருந்துங்கள்!!!

அப்பனே உன்னுள்ளே நிச்சயம் ஒரு சக்தி இருக்கின்றது அப்பனே அதை எழுப்பினால் தான் அப்பனே உண்மை நிலைகள் புரியுமே தவிர!!! அப்பனே நிச்சயம் பின் அதை எழுப்பாவிடில் அப்பனே நீயும் பைத்தியக்காரனாகவே சென்றிருக்க வேண்டியது தான்  கடைநாள் வரையிலும் கூட....

அப்பொழுது அப்பனே மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றேன்!!!!

மீண்டும் மீண்டும்!!........

யான் அகத்தியன் சொன்னேனே!!! எதை என்று அகத்தியன் தான் சொன்னானே என்றெல்லாம் அப்பனே நிச்சயம் மீண்டும் என்னிடத்தில் வந்து எதை என்று கூட அப்பனே... அதாவது கர்மத்தின் வழியே சென்று கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!

அதனால் அப்பனே திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கூட அப்பனே சித்தர்களும் அளித்து விட்டார்கள் அப்பனே!!! ஆனாலும் திருந்திய பாடு இல்லை அப்பனே!!!
எதை எவற்றை என்று கூட!!........

அப்படி நிச்சயம் மனிதனை நிச்சயம் எதை என்று கூட தெய்வமாக பின் எப்பொழுதும் நினைக்கக் கூடாது என்பேன்!!!

எப்பொழுது?? மனிதனை நீங்கள் தெய்வமாக நினைக்கின்றீர்களோ!!! அப்பொழுதே!!! உன் கர்மம் அங்கே பின் உயர்ந்து விட்டது என்பேன் அப்பனே!!! உன் குடும்பத்திலும் பல கர்மங்கள் உயர்ந்து விட்டது என்பேன் அப்பனே.

நிச்சயம் மனிதனால் எதை என்று கூட அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!!

எதை என்று உணர அப்பனே பின் ஒரு மனிதனை!!... ஒரு மனிதன் முருகன் என்று சொல்லி விடுகின்றான்!!!!

முருகனுக்கு எவ்வளவு? சக்திகள் இருக்கின்றது! என்பதை கூட தெரியுமா?? அப்பனே?

முருகன் பறப்பான்!!! அப்பனே!!!

ஆனால் அவ் மனிதனை நிச்சயமாய் நீங்கள் பறப்பீர்களா ??என்று கேட்கத்தான் வேண்டும்!!!!

அப்பனே பின் முருகன் எதையென்று உடனடியாக மழை பெய்யும்!! என்றால் மழை பெய்!!!! என்று சொன்னால் உடனடியாக மழை பெய்யும்!!!

ஆனாலும் அப்பனே அவன் சொன்னால் மனிதன் சொன்னால் மழை பொழியுமா????? அப்பனே எவை என்று!!!

அப்பனே ஆனாலும் பின் முருகன் இவ்வுலகத்திலே பல இடங்களில் தங்கலாம் என்பேன்!!!

ஆனால் மனிதனால் தங்க முடியுமா???? அப்பனே!!!

எவை என்று கூட நெருப்பின் மீது நடப்பான் அப்பனே முருகன்!!! ஆனால் மனிதனால் நடக்க முடியுமா??

அப்பனே கடலின் மீது முருகன் நடக்க முடியும் அப்பனே!!!பின் மனிதனால் நடக்க முடியுமா????

இப்படி எல்லாம் அப்பனே!!! செய்யாத மனிதனுக்கு அப்பனே எப்படி அப்பனே முருகன் என்று கூறிவிடலாம்???? அப்பனே!!!

ஆனாலும் எதை என்று உணர்த்த உணர்ந்து இன்னும் அப்பனே யான் அகத்தியன் வடிவில் வந்தவன் என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி....................

அப்பனே நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!

நம்பி விடாதீர்கள் எச்சரிக்கின்றேன்!!!!

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்!!! அப்பனே பொய் உலகமப்பா!!! எவையென்றும் உணர்த்தாத அளவிற்கும் கூட.... 

அதனால் நல்லோர்களை நிச்சயம் மனம் மாற்றி எதை என்று அறியாத அளவிற்கு கூட யாங்கள் நிச்சயம் மென்மேலும் அழைத்துச் செல்வோம் அப்பனே!!!

ஆனாலும் ஒரு உண்மையை சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூட....

அப்பனே மனிதனை தெய்வமாக ஏற்றுக் கொண்டவனுக்கு அதாவது உலகத்தில் நிச்சயம் திருத்தலங்களுக்கு கூட இறைவன் அனுமதிக்க மாட்டான் என்பேன் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன்!!!!!

முதலாவது அப்பனே எதை என்று உணர உணர நிச்சயம் சபரிநாதன்(ஐயப்பன்) அனுமதிக்க!!!!.............

அதாவது எதை என்று உணர நிச்சயம் அவந்தன் கூட அப்பனே சரியாகவே கணித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! கலியுகத்தில் மனிதனை!!!

ஆனால் அவனிடத்தில் ஆனாலும் எதை என்று கூட அங்கு( சபரிமலை) சக்திகள் பலம் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் தீயவர்களை யாரும் அவந்தன் எதை என்று உணர பின் அங்கேயே பின் வந்தவர்களுக்கு திரும்பவும் கஷ்டம் தான் பின் எதை என்று உணராமலே அள்ளி கொடுத்து விடுவான் அப்பனே!!!

ஏன்? அவ்வகை சூட்சமங்கள் என்று உணராமல் எதை எவற்றின் எதனை என்றும் இன்னும் அப்பனே கார்த்திகை!! மார்கழி!! தை!! திங்களில் அப்பனே பலமான அப்பனே சூரியனால் கதிர்கள் அதாவது எதை எவற்றினின்றும் பாதி அளவானது அங்கே சபரிநாதன் இடத்திலே பதிவாகின்றது அப்பனே எதை எவற்றினென்று கூட..

அப்பொழுது கூட அப்பனே உள்ளங்கள் தெளிவுகள் பெறும் அப்பனே!!!

இன்னும் இவற்றையெல்லாம் ஏற்படுத்தும்( சபரிமலை மண்டல காலம் மட்டுமல்ல எப்பொழுதும் விரதமிருந்து மாலையிட்டு ஒழுக்கமாக கடைபிடிப்பதை போல வாழ வேண்டும்) அளவிற்கும் கூட நம்தன் ஒழுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் அப்பனே!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூட ஒரு உயிரை அப்பனே பறித்து உண்பவனுக்கு ( அசைவ உணவு வழி செல்பவர்களுக்கு) அப்பனே என்னுடைய காட்சிகளும் (தரிசனம்) கிடைக்காது!!!!

என்னுடைய எதை என்று கூட அகத்தியா!!! என்ற சொல்லுக்கும் கூட பின் அவன் தகுதி இல்லாதவன்!!!!! அகத்தியா என்று சொல்வதற்கு தகுதிகள் இல்லை!!!

ஆனாலும் அப்பனே அதை உண்டு விட்டு(அசைவம்) அகத்தியா !!அகத்தியா!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!! என்னை!!!

யான் எப்படித்தான்????? அப்பனே இப்பொழுது எதை என்று அவனை ஆசீர்வதித்து!!! எவ்வாறு தான் நலன்கள் செய்வேன்????????? அப்பனே!!!!

யான் நகைத்தே சொல்கின்றேன் இப்பொழுது!!!!!

இப்படியா ஒரு மனிதனின் அப்பனே இப்படி வைத்தா?? ஒரு மனிதனை ஏமாற்றி திரிவது????

அப்பனே இப்படியே ஏமாற்றி திரிந்தால் அப்பனே ஆனால் எதை என்று கூட பின் மனிதன் பொய் இறைவன் பொய் என்று கூட சொல்லி விடுவான் அப்பனே!!!

ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் அப்பனே!!!

இவை போன்று ஏமாற்றி ஏமாற்றியே நீங்களே கீழ்த்தரமான எதை என்று கூட குனிந்து அடி நோக்கி செல்லாதீர்கள் என்பேன் அப்பனே!!!

இன்னும்!.. ஏராளமான விஷயங்கள் அப்பனே மனிதன் தெளிவு பெற வேண்டும்!! தெளிவு பெற வேண்டும்!!! என்பதற்கே அப்பனே மீண்டும் பின் வாக்குகளாக யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!

நல்லோர்களாவது திருந்தட்டும் திருந்தட்டும் என்று கூட அப்பனே!!!

ஒவ்வொன்றிற்கும் எதையென்று உணர்த்துவதற்கும் வழிகள் இல்லாமல் அப்பனே பின் எதை என்று உணர!!!

ஆனாலும் அப்பனே சரியான ஒரு கிராமத்திலே எவை எவை என்று கூட பின் ஆனாலும் அப்பனே பின் ஒரு குருவானவன் சரியாக இருந்தான் அப்பனே!!!

ஆனாலும் அவந்தனுக்கு பல சீடர்கள் இருந்தனர் அப்பனே!!!

ஆனாலும் குருவானவன் அறிந்து விட்டான் அப்பனே சீடர்களை பற்றி!!!!

ஆனால் சீடர்களோ!!! பின் ஏதாவது வேண்டும்!! வேண்டும்!! என்றே!! குருவை நாடி வந்தனர்!!

ஆனாலும் அப்பனே சரியாக குருவானவன் இதை தெரிந்து கொண்டான்!!

ஆனாலும் அப்பனே பின் ஒரு சீடனை அழைத்தான் உந்தனுக்கு என்ன தான்?? வேண்டுமப்பா??? கூறு என்று கூட!!!

ஆனாலும் அச் சீடனோ பின் எந்தனுக்கு திருமணம் ஆகவில்லை பல திருத்தலங்களை யான் சுற்றினேன் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!!!

ஆனாலும் குருவானவன் கேட்டான் அப்பனே பின் ஏன்? எதை என்று கூட பின் எதை என்று உணராத அளவிற்கு என்னை குருவாக ஏற்றுக் கொண்டாய்?? என்று குருவானவன் கேட்டான்!!

சீடனோ!!!! 

அனைத்தும் அலைந்து திரிந்துவிட்டேன்!! ஒன்றும் நடக்கப் போவதில்லை ஆனாலும் உன்னிடத்தில் வந்தால் அனைத்தும் நலமாகும் என்று பல மக்கள் சொல்லிக் கொடுத்தனர் அதனால் உன்னிடத்தில் வந்தேன் அதனால் தான் என்று!!!

ஆனாலும் குருவானவன் மறு பேச்சுக்கு இடமில்லை!!

சரியப்பா!!! அமைதியாக உட்கார்!!!

மற்றொரு சீடன் எழுந்து ஆனாலும் எந்தனுக்கு பல தொழில்கள் இல்லை பல இல்லங்கள் இல்லை அதனால் நான் என்ன செய்வது??

ஆனால் குருவானவன் அமைதியாக உட்கார் என்று சொல்லிவிட்டான்!!!

மற்றொருவன் எழுந்தான்!! எதை என்று கூட எந்தனுக்கு எவை என்று கூட இவ்வுலகத்தில் பின் பணங்கள் இருந்தால் தான் வாழ முடியும் அவ் பணங்களை கொடு என்று கூட...

குருவானவன் அவந்தனையும் சரி உட்கார் என்று அமர்த்தி விட்டான்.

மற்றொரு சீடன் எழுந்தான் எதை எவை எவற்றில் இருந்து கூட ஆனாலும் எந்தனுக்கு உயிர் போகாது அதாவது பின் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் எப்பொழுதும் கூட உயிர்கள் போகாதவாறு செய்து தர வேண்டும் குரு என்று!!!!

அவந்தனையும் குருவானவன் சரி உட்காரு என்று!!!

மீண்டும் ஒரு சீடன் எந்தனுக்கு இவ்வுலகத்தில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று கூற

இப்படியே பல சீடர்கள் ஆனாலும் ஒருவன் கூட சரியாக இறைவனை கேட்கவில்லை எதை என்று!!!.......

ஆனாலும் ஒருவன் கடைசியாக சொன்னான்

குருவே இவ்வுலகத்தில் இறைவன் பெயரை வைத்து தான் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள் ஆனால் எதை என்று கூட யானும் இறைவனை ஏமாற்ற வேண்டும் அதனால் நீயும் பின் வரத்தைக் கொடு என்று!!!!

பின் அக் குருவானவன் நகைத்து விட்டான்!!!

ஆனால் சீடனோ ஏன் நகைகின்றீர்கள் நகைத்துவிட்டீர்கள் என்று கூற!!!

இதற்கு விஷயம் பின் பின்னாலே தெரியும் என்று குருவானவன் கூறிவிட்டான் அமைதியாக!!!

ஆனாலும் சிந்தனை அவ் சீடனிடத்திலேயே இருந்தது

அதாவது இப்படிச் சொன்னானே இறைவனை வைத்து ஏமாற்ற வேண்டும் என்று கூட

சரி இவந்தனை சரியாக கணிப்போம் இவந்தன் எங்கு? தான் செல்கின்றான்? இவந்தனுக்கு ஆசிகள் கொடுப்போம் என்று கூட குருவானவன் பின் கொடுத்திட்டான்.

அப்பனே இதை நன்கு உணர்க!!!!!!!

ஆனாலும் அப்பனே அவன்(சீடன்) சரியாக ஒரு திருத்தலத்தை அமைத்தான். ஆனாலும் அமைத்து  எதையென்று கூட இங்கு வந்தால் அனைவருக்கும் நலமாகும் என்று தீர்மானித்தான்!!!

மக்கள் அனைவரும் வந்தார்கள் ஆனாலும் அப்பனே ஏதோ ஒன்றை செய்வித்தான் ஆனால் எதை என்று எவற்றை என்று குவிந்தார்கள் பல மக்கள் அப்பனே!!!

ஆனால் கடைசியில் பார்த்தால் அப்பனே பணங்களும் குவிந்து விட்டது அப்பனே!!!

ஆனாலும் குருவானவன் அவன் சிந்தனையில் வந்து விட்டான். இவ்வளவு பணங்கள் வந்து விட்டது மீண்டும் குருவானவனை காணச் செல்வோம் என்று பின் குருவின் இடத்திற்கு சென்றான்!!

இதை என்று கூற அப்பனே அதாவது தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

குருவிடம் சென்று பின் குருவானவனே!!!!

உன்னிடம் ஒன்றை யான் கேட்டேன் இறைவனை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்று கூட!!! ஆனாலும் ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன்!!

ஆனால் என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லையே என்று!!

ஆனாலும் குருவும் சரி என்று கூறிவிட்டு அமைதியாகவே இருந்தான்.

மீண்டும் அச் சீடன் அவன் திருத்தலத்திற்கு சென்றான். ஆனாலும் பல மனிதர்கள் குப்பை குப்பையாக அப்பனே பல தரித்திரங்கள் குவித்தனர் அதாவது காசுகளும் வந்தது இவந்தனுக்கு !! ஆனால் அதனுடனே கர்மாக்களையும் இவன் ஏற்றுக் கொண்டான் அப்பனே சில கர்மாக்களும் இவனை வாட்டியது!!!

ஆனாலும் இவனோ நம்தன் நன்றாக வாழலாம் பின் நம் தனக்கு இவ்வளவு கூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது இவ்வளவு பணங்கள் வந்து கொண்டிருக்கின்றது என்று அவன் எண்ணினான்.

ஆனால் இது போலவே இருக்குமா!?? என்று கூட அவந்தன் ஆனாலும் இது போலவே இருக்கும் குருவானவன் கூட நம் தனக்கு எதை என்று உணராமலே பின் எதை என்று அறியாமலே ஆசிகளும் கொடுத்து விட்டான் என்று கூட

இதனால் பின் எதை என்று உணர உணர அவனுக்கு அனைத்தும் வந்து கொண்டே இருந்தது அப்பனே!!!

ஆனாலும் அனைத்தும் வந்து கொண்டிருக்கையில் கர்மாக்களும் வந்து கொண்டே இருந்தது!!!!

ஆனாலும் அப்பனே இதையென்று அறிய கடைசியில் எண்ணினான் அப்பனே!!!

ஆனால் இவ்வளவு தெய்வத்தை வைத்து ஏமாற்றி பிழைப்பு நடத்திவிட்டோமே என்று கூட

ஆனாலும் பணத்தாசை எதை என்று உணர ஆனாலும் நம்பி விட்டார்கள்!!

மீண்டும் குருவிடம் சென்றான்!!

பின் குருவானவனே எவற்றினின்று அனைத்தும் அதாவது பிழைக்கும் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து இறைவனை வைத்தே ஏமாற்றி விட்டேன் ஆனாலும் இதையென்று என்னிடத்தில் அனைத்தும் வந்துவிட்டது ஆனாலும் இவை என்று கூட நீ குருவாக இருக்கின்றாயே!!! என்னதான் !!  லாபம்???

ஏதோ அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றாய்!! ஒரு உடை இருக்கின்றது ஆனாலும் பின் படுக்க சரியான இடமில்லை!! பின் உன்னிடத்தில் எதுவும் இல்லை!!

என்னிடத்தில் வந்துவிடு என்று கூற

ஆனாலும் குருவானவன் அமைதியாக இருந்தான்.

மீண்டும் சீடன் குருவை திட்டினான்!!

குருவானவனே இவையெல்லாம் வீண் ஏன் இவ்வாறு எல்லாம் இருக்கின்றாய்??? பின் யான் என்னை பார் எப்படி இருக்கின்றேன் என்று கூட!!.......

யான் ஏமாற்றினேன்!!! இல்லை என்று சொல்லவில்லை ஆனால் எந்தனுக்கு அனைத்தும் வந்துவிட்டது!!!!

ஆனாலும் நீயோ உண்மை இறைவன் என்று கூட ஆனால் இறைவன் என்னதான்?? கொடுத்தான்?? என்று கூட.... 

ஆனாலும் குருவானவன் அமைதியாக பொறுத்திருந்தான்!!!!

சரி எதை என்று கூட ஆனால் சீடனோ பின் யாம் அனைத்திலும் உயர்ந்து விட்டோமே என்று எண்ணி பின் நீதான் எந்தன் சீடன் பின் நீ குருவானவன் இல்லை என்று தீர்மானித்து விட்டான்.

புரிகின்றதா?? அப்பனே!!!

எப்படி எல்லாம் பணம் எங்கெல்லாம் பாய்கின்றது என்பதை கூட அப்பனே ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் ஒன்றுமில்லாதவனை யாரும் மதிக்கப் போவதில்லை!!!

ஆனாலும் என்னிடத்தில் பல பல வழிகளிலும் கூட ஆலயங்களை எழுப்பி எதை என்று தெரியாமலே பல மக்கள் கூட்டங்களை சேர்த்து விட்டேன்.

எந்தனுக்கு ஏதாவது ஒன்று என்றால்  மக்கள் ஒன்று திரண்டு விடுவார்கள்.

ஆனால் நீயோ இங்கு அமைதியாக அதாவது பரதேசி போல் அமர்ந்திருக்கின்றாயே!!!..... பின் யாராவது?? வருவார்களா?? உன்னை பார்க்க என்று கூட!.........

ஆனாலும் அதற்கும் குருவானவன் அமைதியாக இருந்தான்!!

எதை என்று கூட அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள்!!!

இவ்வுலகத்தில் இவை எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது அப்பனே!!

இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தால் இறைவனை நம்புவானா!! என்ன?? அப்பனே!!

இதனால்தான் அழிவின் பாதையில் செல்கின்றது இவ்வுலகம் அப்பனே இதை என்று அறியாத அளவிற்கும் கூட!!...

அப்பனே மீண்டும் சரியாக பின் கடைசியில் அதாவது அச் சீடனை யான் பழியும் போடுவேன் அவன் மேல் எதை என்று உணர!!!

மீண்டும் மீண்டும் எதை என்று கூட பின் மீண்டும் குரு குரு என்று சொல்லிக் கொண்டிருந்தவன் சொல்லிக் கொண்டிருந்தவன் பின் மாறி சீடனே என்று குருவை அழைத்தான்.

ஆனாலும் அதனையும் மீறி திரும்பவும் ஒரு படி கீழே மனிதா!!!!! என்று உரக்கமாகவே  சத்தமிட்டான்.

ஆனாலும் குருவிற்கு கோபம் வரவில்லை அமைதியாக இருந்தான்.

ஆனாலும் இவையன்றி கூற யான் எதை என்று அறிய உன்னுடைய எவை எதை என்று கூற உன்னுடைய நாமத்தைக் கூட அதாவது எதை என்று எவற்றின் என்று கூட நடராசன் என்று பெயரை வைத்துக் கொண்டிருந்தாய்!!!....

ஆனால் யானே என் பெயரை மாற்றி என் பெயரை அதாவது நடராசன் தான் யான்!!!! என்று உன்னை இங்கேயே பின் எதை எவற்றை என்று கூட இங்கேயே உன்னை சாகடிக்க போகின்றேன்.

பின் அதனால் நடராசன் என்ற குரு இறந்து விட்டான்!! பின் அவன் என்னுள் வந்து விட்டான் என்று இன்னும் உலகத்தில் அதாவது மனிதர்களுக்கு பரப்ப போகின்றேன் நான் தான் குரு ஆகிவிட்டேன் என்று கூட...

ஆனாலும் குருவானவன் எதை என்று அமைதியாக இருந்தான். எதை எவற்றை என்று கூட...

ஆனாலும் உண்மைதனை பின், பின் சீடனே குருவை கொல்ல வந்தான்!!!

ஆனால் குருவானவன் பின் ஒன்றும் சொல்லவில்லை!!!!

வந்தான்!!!!!!! ஈசன் !!!!!!!!

நின்றான்!!!!!!!! 

பின் எதை எவற்றை என்று கூட.... ஆனாலும் ஈசனும் எவை என்று கூட பின் அவனும் கையை தூக்கினான் குருவிடம்  குருவை கொல்ல!!!

ஆனால் ஈசனோ!!!!! 

கை வைத்து தான் பார்!!!!! என்று பின் நகையாடினான்!!

ஆனாலும் சரி நீ இப்பொழுது கூறிக்கொண்டிருந்ததெல்லாம் யான் கேட்டுக் கொண்டே தான் இருந்தேன் என்று பின் ஈசனே வந்து இறங்கினான்!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து!!! ஆனாலும் சீடனோ முன்பு கூறியதை!!.......

பின் ஈசன்..... அவனிடம் முன்பு சொன்னாயே!!!! பின் யான் கூப்பிட்டால் அனைவரும் வருவார்கள் என்று இப்பொழுது கூப்பிடு பார்க்கலாம் என்று ஈசன் கூற...

ஆனால் சீடனும் உரக்க பதிலிட்டு!!! பதிலிட்டு!!!!( சப்தமாக அழைத்து)  யாரும் எவை என்று உணர உணர பின் எதை என்றும் அறிய அறிய பின் கூச்சலிட்டும் யாரும் வரவில்லை!!! எதை என்று அறிய!!!....

இதனால் எதை என்று உணராமலே ஈசன் அங்கேயே அவனை காலால் மிதித்து உதைத்தான்!!!

இப்பொழுது புரிகின்றதா???

ஆனாலும் அவன் செய்த பாவங்கள் எதையென்று அனுபவிக்க பின் மறுபிறவியில் அத் திருத்தலத்திலே பிச்சை ஏந்த வந்தான்... அவன் ஏற்படுத்திய திருத்தலத்திலேயே எதை என்று உணர இப்பொழுதும் அத் திருத்தலம் பின் இருக்கின்றது!!! அவந்தனும் பிச்சை ஏந்தி தான் கொண்டிருக்கின்றான்!! இப்பொழுது கூட.... அப்பனே!!!

இவையெல்லாம் நடந்தது எங்கென்றால்??!!! அப்பனே பின் நாராயணனின்( திருமலையிலிருந்து கீழே திருப்பதி) அதாவது பின் கீழேயே என்பேன் அப்பனே!!! இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலே உள்ளது என்பேன் அப்பனே.

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே பின் ஏன்?? இவற்றையெல்லாம் யாங்கள் சொல்ல வேண்டும்???

நல்லோர்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எவை என்று கூட நல்லோர்கள் அப்பனே சரியாக  என்னுடைய  சித்தர்கள் எங்களது வாக்குகளை பயன்படுத்துகின்றார்கள் அப்பனே!!!!

சந்தோடம்!!! சந்தோடம்!!!(சந்தோஷம் சந்தோஷம்) 

அவ் நல்லோர்கள் நிச்சயம் இவ்வாறு தெளிந்து உண்மைதனை உணர்ந்து உணர்ந்து கொண்டாலே!!!! மற்றவர்களை நிச்சயம் பின் போலியானவனை கண்டாலும் அவநதனை எவ்வாறு என்பதையும் கூட கண்டுபிடித்து விடுவார்கள் அப்பனே!!!!


இதைத்தான் யான் செய்து கொண்டிருக்கின்றேன் சித்தர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

அப்பனே காலம் காலமாக இருந்த சித்தர்களை அப்பனே வரும் காலங்களில் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே.

அப்பனே எதை என்று கூட சித்தர்களை அப்பனே சீண்டாதீர்கள்!!! சீண்டாதீர்கள்!! என்று கூட யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே... எதை என்று உணர!! உணர!! அப்பனே திருந்திக் கொள்ளுங்கள்!!!

என்னென்ன?? நடக்கின்றது என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

 ஒவ்வொருவனுக்கும் வினையை தந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

நிச்சயம் உலகம் மாற்றம் அடையும் நல்லோர்கள் வழி !!!!

எதை என்று கூட பின் எவை என்று இன்னும் ஏராளமான வாக்குகளையும் கூட அப்பனே நிச்சயம் உரைக்கின்றேன் அப்பனே!!

சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் இறைவன் இருக்கின்றான்!!!!!

அப்பனே மற்றொரு வாக்கிலும் இன்னும் நிஜத்தைச் சொல்கின்றேன் அப்பனே!

ஆசிகள்!!!! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்!

1 comment:

  1. Perumale nerla vandhu agathiara receive pannirukkar. Govinda Govinda

    ReplyDelete