​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 October 2022

சித்தன் அருள் - 1196 - சித்தனின் சிகிர்ச்சை-2!

நண்பர் சிறந்த அகத்தியர் பக்தர். அவரை பேர் சொல்லிக்கூட கூப்பிடாமல், அப்பா என்றுதான் அழைப்பார். குருநாதரின் வாக்கு வந்ததில் மகிழ்ந்து, இரண்டு நாள் பதினோரு நாள் என இரு நாட்கள் இருப்பதை சகஜமாக எடுத்துக்கொண்டார்.

வாக்கு வந்த அன்று இரவு. இடுப்பில் நல்ல வேதனை இருக்கவே, எப்பொழுதும் போல், மருத்துவர் கொடுத்த வலிநிவாரணி/உறக்கத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டபின், உறங்கப் போனார். சற்று நேரத்தில் நன்றாக உறங்கிப்போனார்.

நடுநிசியில், தன் உடலை யாரோ தொடுவது போல் உணரவே, அரை தூக்கத்தில் கண் விழிக்க, அதுவும் எடுத்துக்கொண்ட மாத்திரையால் முழுவதும் விழிக்க மறுத்தது. மிகுந்த அசதியுடன், மெல்லிய இரவு ஒளியில் கவனிக்க, தன் படுக்கைக்கு மிக அருகில் யாரோ தவசிகள் ஐந்து பேர் நிற்பதை கண்டார். அதில் இரண்டு பேர் தலை பக்கத்தில் நிற்க, இரண்டு பேர் கால் பக்கத்தில் நின்று இரு காலையும் பிடிக்க தயாராக நிற்பதையும் கண்டார்.

அறையில் மிக குறைந்த வெளிச்சமானதால் ஐந்தாவதாக ஒருவரின் உருவம் ஆசீர்வாத வலது கையுடன், சிரித்தபடி தன்னை நெருங்கி, மற்ற நால்வரையும் பார்த்து, "ம்ம்" என்றதும், தலை, கால் பகுதிகளை பிடித்து அவரை திருப்பி போட்டனர். பின்னர் நடந்த விஷயங்களை அவரால் உணரத்தான் முடிந்தது.

நடுவில் நின்ற தவசி, தன கையில் ஏதோ ஒரு மூலிகை எண்ணையை எடுத்து, அவரின் இடுப்பு பகுதியிலிருந்து கழுத்தின் பின் பக்கம் வரை தடவி, மேலும் பலமுறை, அழுத்தமாக இரு விலா எலும்புகளை அறுவை செய்த பகுதியின் தசை பகுதியை, தடவி கொடுத்தார். மேலும் என்ன நடக்கிறது என்று கவனிக்கும் முன், ஒரு குளிர்ந்த காற்று அடிக்க, நண்பர் மயங்கிப்போனார். பின்னர் என்ன நடந்தது என உணர முடியவில்லை.

மறுநாள் காலை தூக்கம் விழித்த போது, ஏதோ ஒரு சில விஷயங்கள் ஞாபகத்துக்கு வர, தன் அறையின் கதவை பார்த்தார். அது உள்ளிருந்து தாழ் போட்ட படியே இருந்தது. தன் இடுப்பு பகுதியை மெதுவாக தடவி பார்க்க, ஒரு சிறு எறும்பு கடித்தால் இருக்கும் அளவுக்குத்தான் வலி இருந்தது, அந்த பகுதி மரத்துப் போயிருந்தது.

அகத்தியப்பெருமான் உரைத்தது போல் இரண்டாவது நாளே அவர் உடல் வேதனை விலகிவிட்டது. அப்படியென்றால், தன்னை தேடிவந்து சிகிர்ச்சை அளித்தது அகத்தியப்பெருமானும், அவர் அபிமான சிஷ்யர்களும் தான் என்பதை உணரத்தொடங்கினார்.

உடனேயே, மனதால் குருநாதருக்கு நன்றியை உரைத்துவிட்டு, "சரி பதினோராவது நாள் என்ன நடக்கிறது என பார்ப்போம் என்று நினைத்தபடி, ஆவலுடன் காத்திருக்க தொடங்கினார்.

அடியேனை அழைத்து நடந்தவைகளை கூறிய பொழுது, சிரித்துக்கொண்டே "அந்த நல்லதும், அவர் அருளால் பதினோரு நாட்களுக்குள் உங்களுக்கு நடக்கட்டும்" என்று வாழ்த்தினேன்.

ஐந்தாவதுநாள், அவரின் தொழில் முறை நண்பர் ஒருவர் வியாபார சம்பந்தமாக அவரை தொடர்பு கொள்ள, அவரிடம், தான் உடல் நலக்கோளாறுடன் படுக்கையில் இருப்பதாகவும், வேதனை குறைய என்ன நடந்தது என்பதையும் விளக்கினார்.

தான் விரைவில் நேரடியாக அவரை வந்து பார்ப்பதாக உறுதி அளித்தவர், மறுநாளே, ஒரு மூலிகை எண்ணையை கொடுத்தார். அது மிக சிறந்த நிவாரணி எனவும், உபயோகித்து அனுபவம் பெற்று கொள்ளவும் என்று கூறிச் சென்றார். அந்த எண்ணையை அன்று இரவு படுக்க போகும் முன் கழுத்து முதல், இடுப்பு வரை தடவி விட்டு உறங்கிய பின் நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர்ந்தார். தினமும் உபயோகித்து வரலானார்.

பதினோறாவது நாள், யதேச்சையாக காலை அசைத்தவர், கால், இடுப்பு போன்றவை வேதனை இன்றி இருப்பதை கண்டு, யார் உதவியும் இன்றி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார். மெதுவாக கீழே இறங்கி நின்று, ஒரு அடி எடுத்துவைத்த பொழுது எந்த வேதனையும் இல்லாமல் இருப்பதை கண்டு, நடக்கத்தொடங்கினார். இன்றும் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறார்.

"அப்பாவின் அருளால், என்னால் நடக்க முடிகிறது! அவர் சொன்ன படியே பதினோராவது நாளில் இயல்பாக இருக்க முடிந்தது. அந்த எண்ணையை தயாரித்து கொடுத்தது யார் என தேடி சென்ற பொழுது அவர் ஒரு "சித்த வைத்தியர்" எனவும், தலை முறைகளாக "நாடியில்" கூறியுள்ளபடி மருத்துவம் பார்த்து வருபவர் என கூறினார். மேலும் அவரிடம் உள்ள நாடி 1000 வருடங்களுக்கு முன் சித்தர்களால் எழுதப்பட்டது எனவும் தெரிவித்தார்.

அகத்தியரை நம்பினோர் கைவிடப்படார், என்பதற்கு இது ஒரு நற்சான்று. உண்மையான அடியவர்களை, அவர் இல்லம் வந்தே காப்பாற்றுவார் என்பதற்கும் இது ஒரு சாட்சி.

அந்த வைத்தியர் அகத்தியப்பெருமானின் அருள் பெற்றவர். பெயர்: திரு வைத்தியர் சசி, புள்ளச்சகோணம், வெள்ளரட, திருவனந்தபுரம். செல் எண்: 9847575755. சித்த வைத்தியம் தேவைப்படுகிறவர்கள், இவரை தொடர்பு கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

4 comments:

  1. Ohm guruvey thunai. Virakthiya erunthuchu aiya. entha mathri namba Agathiyarum sithargalum nadathratha padikrapo thaan..nambikai varthu. . Ohm shree lobamatha samedha agatheesaya nama

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. avan arul nambukindravar anaivarukkum eppozhuthum undu.

    ReplyDelete
  4. நலம் நலமே தொடரும்... தொடரட்டும் அருளாசிகள்... அய்யனே...அகத்தீசா... எம்பெருமானே... ஞானக்கடலே... ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete