​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 22 October 2022

சித்தன் அருள் - 1204 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் பொது வாக்கு!



வணக்கம் அகத்தியர்  அடியவர்களே....

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள யுக யுகங்களாக  அக்னி ஜுவாலையாய் தொடர்ந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் ஜுவாலா தேவி ஆலயத்தில் போகர் சித்தபெருமான் வந்து வாக்குகள் உரைத்த பின் குருநாதர் அகத்தியரிடம் அடியவர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர்...

குருநாதர் அகத்திய பெருமான் அடியவர்களின் கேள்விகளுக்கு பதில் வாக்கும் தந்து கொண்டிருந்தார் குருநாதர் தந்த கேள்வி பதில்களும் இதற்கிடையே எதிர்பாராத விதமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் சித்தர் ஒருவரின் வருகையும் தரிசனமும் கிடைத்தது!!! அதனைப் பற்றிய தொகுப்பு....

நல்முறையாக ஜுவாலா தேவியின் தரிசனம் கண்டபின் ஆலயத்தின் ஒரு புறத்தில் இருந்து ஜீவநாடியை திரு ஜானகிராமன் ஐயா வாசித்தவுடன் போகர் சித்தர் வந்து வாக்குகள் தந்தார்!!!!

அவரின் வாக்குகளுக்கு பின் குருநாதர் அகத்திய பெருமான் அடியவர் கேள்விகளுக்கு பதில் வாக்கு தந்து கொண்டிருந்த பொழுது....... திடீரென அங்கு ஒரு பெரியவர் தலையில் முண்டாசு போல கட்டி நெடுநெடுவென உயரம்!!! ஒல்லியான உடம்பு !!!நெற்றியில் செந்தூரம்!!! கண்கள் தீ கனல் போல் ஒரு பிரகாசம்... ஜீவநாடி வாசிக்கும் ஸ்தலத்திற்கு வந்தார்!!!

வந்து ஏதேதோ புரியாத வகையில் பார்த்துக்கொண்டு பேசினார்....

அந்த இடமே ஒரு நிசப்தம்!!! ஒரு தெய்வீக அமைதியும் சொல்ல முடியாத உணர்வும் !!அதிர்வும் ஏற்பட்டது...

ஜீவநாடி வாசிப்பதை பார்த்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டு அனைவரையும் கண்டவாறு கடந்து சென்றார்.... அவருடைய செய்கைகள் வித்தியாசமாக இருந்தது......

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் ரகுராம்ஜி ஆலயத்தில் இதே போன்று குருநாதர் அகத்தியர் மனித வடிவில் வந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்து சென்றார் அது போலவே மீண்டும் ஒரு சம்பவம் அதனால் இது யாராக இருக்கக் கூடும்??? என்ற ஆவல் மிகுதியில் குருநாதரிடம் கேட்ட பொழுது..

அப்பனே எவை என்று அறிய ஆனாலும் இப்பொழுது எவை என்று பின் சொல்வதற்கு இல்லை அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இவை என்று அறிய யான் சொல்லிவிட்டேன் முன்பே இப்பொழுது வேண்டாம் என்று கூட அப்பனே. ஆசிர்வாதம் இட்டு செல்லட்டும் நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள்!!!!

என்று குருநாதர் அந்த இடத்தில் அப்படி உரைத்திருந்தார்!!! 

அடியவர்கள் அனைவரும் அந்த பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு உரையாடிய பொழுது அவர் பேசிய சில வார்த்தைகள் சரிவர புரியவில்லை.

அடியவர்கள் அவர் கால்களில் விழுந்த பொழுது என் கால்களில் விழ வேண்டாம் ஈசனின் கால்களில் விழுங்கள்!! ஈசனுக்கு பூஜைகள் செய்யுங்கள்!!!! இந்த ஜ்வாலாமுகி தேவி ஆலயத்திற்கு மேலே மலையின் மீது தாராதேவி இருக்கின்றாள் அவளுடைய தரிசனத்தையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று இரண்டு மூன்று முறை குறிப்பிட்டு தன்னுடைய பேச்சில் சொன்னார். சில விஷயங்கள் புரிந்தன சில விஷயங்கள் புரியவில்லை... அங்கும் இங்கும் நடந்து கொண்டு போக்கு காட்டிக்கொண்டு திடீரென மறைந்து விட்டார்.!!!!!
  
ஜீவநாடி வாக்குகள் வாசித்தவுடன் அடியவர்கள் அனைவரும் தாராதேவி தரிசனத்திற்காக மலை மீது ஏறிச் சென்ற பொழுது அந்த தேவி ஆலயத்தில் யாரும் இல்லை!!! கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஜீவநாடிபெட்டகம் தாயாரின் மடியில் வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறந்து கொண்டே தாயாரின் முகத்தில் அமர்ந்தது மிகவும் பரவசமாக இருந்தது!!!!

அடுத்த வாக்கில் வேறொரு பவித்ர ஸ்தலத்தில் குருநாதர் அகத்தியபெருமான் மனித உருவில் வந்தவர் யார்? என்று உரைத்தார்... அவர் நொண்டிச்சித்தர் என்று கூறினார். 

குருவே  போற்றி நீங்கள் ஜீவநாடியில் வாக்குகள் தந்து கொண்டு இருந்த பொழுது நாங்கள் கண்ட பெரியவர் யார்???

அவந்தன் நொண்டி சித்தன் என்பேன் யான்!!!!! அதனால்தான் எப்பொழுது எதை உரைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் யான் உரைப்பேன் சொல்லிவிட்டேன்!!!!

இனி அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் உரைத்த பதில் வாக்குகளை காண்போம்!!!

குருவே போற்றி இந்த ஆலயத்தில் தேவி ஏன் தீ ஜூவாலையாக இருக்கின்றார்!!!! இதன் மகத்துவம் என்ன???? 

அப்பனே  எதையென்று அறிய அப்பனே இவையென்று அறிய  ஒரு வார்த்தையை சொல்லி விடுகின்றேன் அப்பனே பின் அது நிச்சயம் எரியாவிடில் அப்பனே  இவ்வுலகமே அழிந்து போகும் என்பேன்!!!

அப்பனே அதனால் எதை என்று அறியாத. அளவிற்கும் கூட அப்பனே நிச்சயம் உலகத்தில் உள்ள அனைவரையும் காத்து ரட்சிக்கின்றாள் தாயவள் என்பேன். அதனால் ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் என்ன தவறுகள் செய்தாலும் தாய்க்கு பிள்ளையே தாயவள் நிச்சயம் ஏற்றுக் கொள்வாள் அதனால் பார்த்துக்கொண்டு அனைத்தும் எதை என்று அறியாமலே அவள்தன் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே எண்ணி அருள்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்!!!
அன்பைச் செலுத்துங்கள்!!! அன்போடு பக்தி செய்யுங்கள்!!! உங்கள் இல்லத்திற்கே  இவள் வந்து விடுவாள் எவை என்று கூட!!!!
 
இன்னும் ஏராளமான சூட்சுமங்கள் ரகசியங்கள் உண்டு. எதை எவை எங்கு எப்பொழுது செப்ப வேண்டுமோ அப்பொழுதுதான் யான் செப்புவேன் அப்பனே!!!! சொல்லிவிட்டேன்

குருவே போற்றி!!!
 
திருவண்ணாமலைக்கும் இந்த ஜூவாலாதேவிக்கும் தொடர்புகள் இருக்கின்றதா????

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் எதையன்றி கூற அங்கே இறைவன் ஜோதி வடிவமாக இருக்கின்றான்!!! இங்கே இறைவி ஜோதி வடிவமாக இருக்கின்றாள்!!!

அவ்வளவுதான் வித்தியாசம் அப்பனே!!!

அங்கு இறைவனை கண்டீர்கள்!!! இறைவி  இங்கே உங்களை அழைத்துக் கொண்டாள்!!!

அங்கும் இங்கும் சென்று கொண்டே இருந்தால் அப்பனே பின் நலன்கள் மேம்பட்டு கொண்டே இருக்கும் கவலைகள் இல்லை!!!

குருவே போற்றி!!! இந்த ஆலயத்திற்கும் பஞ்சபாண்டவர்களுக்கும் தொடர்புகள் உள்ளதா???

அப்பனே இவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் அவர்கள் சிறிது நேரம் எதை என்று அறியாமலே சில காலங்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள் அப்பனே!!! அதனால் பின் அவர்களும் இங்கு சமைத்து உண்டார்கள் பல வருடங்களாக!!..... அப்பனே தவங்களும் மேற்கொண்டார்களப்பா!!! அவர்களுக்கு தரிசனமும் கிடைத்தது அப்பனே!!!!

குருவே போற்றி!!!

வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு இலுப்பை எண்ணெயை பயன்படுத்தலாமா?? அதன் மகத்துவத்தை கூறுங்கள்

அப்பனே எதை என்று கூற பின் இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அதிக சக்திகள் கிடைக்கும் என்பேன் சொல்லிவிட்டேன்!!!!

குருவே  போற்றி!!! ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாமா??

அப்பனே நிச்சயம் ஏற்றி வழிபடலாம் என்பேன். அப்பனே

குருவே போற்றி!!!

இந்த உலகம் அழிவை நோக்கி செல்கின்றது என்று அனைத்து சித்தர்களும் உரைக்கின்றீர்கள் இந்த உலகத்திற்கு என்ன தான் நடக்கப் போகின்றது???

அப்பனே எவை எவை என்று கூட அப்பனே பின் எதை என்று அறியாமலே இன்னும் இவ்வுலகத்தில் யுத்தங்கள் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே எவை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே ஏனென்றால் கர்மா காலம் என்பேன் அப்பனே இவற்றை அறிந்து!!!!

குருவே போற்றி யுத்தங்கள் நடைபெறும் என்று உரைத்தீர்கள் அதில் இந்த பாரத தேசத்தின் பங்கும் இருக்குமா???

அப்பனே எவை எவை என்று கூட ஆனாலும் எங்கு வந்தாலும் யுத்தங்கள் யாங்கள் நிச்சயம் நல் மனிதர்களை காத்து விடுவோம் அப்பனே சொல்லிவிட்டேன்.

குருவே போற்றி!!! இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அன்னை பார்வதி தேவி தன் வாக்கில் இந்த தேசத்தை ஆள ஒரு அரசி பிறப்பெடுப்பாள் என்று கூறியிருந்தார் அந்த அரசி எப்போது வருவார்கள்???

இதையென்று அறியாத அளவிற்கு கூட அப்பனே நிச்சயம் இவை அன்று அறியாது இப்பொழுது வேண்டாம் அப்பனே!! சொல்கின்றேன் இதைப் பற்றி தீவிரமாகவே ஒரு சக்தி வாய்ந்த இடத்திலே!!!!

குருவே போற்றி!!!!

பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் குருவே!!!!

அப்பனே எதையென்று அறியாத அளவிற்கு கூட அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அது தேவ ரகசியம்!!! இதை என்று கூட யாருக்கும் இதனை நிச்சயம் தெரிவிக்க கூடாது என்பேன் இதைப் பற்றி இப்பொழுது சொல்ல மாட்டேன் யான் நீங்கள் அனைவரும் புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் பின் நிச்சயம் யான் இருக்கின்றேன் அதைப்பற்றி சொல்வேன் அப்பனே!!!!

குருவே போற்றி!!!! 

தெய்வ மூர்த்தங்கள் பஞ்சலோகத்தில் இருப்பது போல மரத்திலும் வைத்து வழிபாடு செய்கின்றார்கள் குறிப்பாக கருங்காலி தேவதாரு சந்தனம் அத்தி போன்ற மரக்கட்டைகளில் வைத்து வழிபடுகின்றார்கள் அவையெல்லாம் மெருகு குலையாமல் இயற்கையாக எப்படி பராமரிப்பது????

அப்பனே இவையன்றி கூற பின் வேப்பிலை!! சிறிதளவு பின் ஆலமரத்தின் இலைகள்!!! எதை என்று கூற அரச மரத்தின் இலைகள்!!! பின் வசம்பு!! இவற்றை அரைத்து அரைத்து பின் அப்பனே நெய் சிறிதளவு இட்டு நல்விதமாகவே சேர்த்து பின் சில திரவியங்களை இட்டு பின் பூசி சுத்தமாக செய்தால் அவற்றின் தன்மையை பின் எவை என்று கூற மீண்டும் அதிகரிக்கும் என்பேன் அப்பனே.

குருவே சரணம்!!!

சிலருக்கு ஆலயங்கள் மற்றும் ஜீவசமாதி களுக்கு செல்லும்பொழுது மட்டும் தொடர்ந்து அடிக்கடி கொட்டாவி வந்து கொண்டே இருக்கின்றது !!! சில மனிதர்களுக்கு....  இதனுடைய அர்த்தம் என்ன???

இதையன்றி கூற அப்பனே இது ஒரு தரித்திரமப்பா!!!! எதை என்று கூட ஆனாலும் அப்பனே உணராமல் சோம்பேறி தனமப்பா!!! எதை என்று கூற யான் அப்பனே சில மனிதர்களுக்கும் நல்லதை செய்தால் தான் !!!!..........

அங்கேதான் எவை என்று உணராமலே அப்பனே எவை என்று தெரியாமலே நிச்சயம் அவை தன் ஒரு கர்மா கர்மா என்பேன் அப்பனே...!!!

இதனால் அவர்களை உயர்ந்த பக்தியை கடைப்பிடிக்க சொல்!!!!

அப்பனே இதன் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து எதை என்று உணராமலே அப்பனே அப்படி செய்தால் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் பின் அனைத்தும் எதை என்று கூற சில சக்திகள் இழந்து விடும் என்பேன் அப்பனே!!!!! இதில் பல மனிதர்களையும் யான் பார்த்து விட்டேன் அப்பனே அதனால் அவை வரும்பொழுது வாயில் அடித்து ஒரு அடியை அடிக்க வேண்டும் அப்பனே!!!! 

குருவே போற்றி தஞ்சை பெரிய கோயிலில் ஒரு சாபம் இருக்கின்றது என்று அனைவரும் ஏதேதோ சொல்கின்றார்களே அதன் உண்மை தன்மை என்ன????

அப்பனே இவை என்று கூட இதனால் எவ்வித சாபங்களும் நிச்சயம் செல்லாது என்பேன் அப்பனே. இறைவன் நேரடியாகவே அங்கு இருக்கின்றான் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.

அதனால் தீயவர்கள் எதை என்று கூற ஏமாற்றுபவர்கள் எதை என்று கூற அங்கு சென்றால் உடனே ஈசன் கண்களுக்கு பின் புலப்பட்டு விட்டால் அங்கேயே தண்டனைகள் கொடுத்து விடுவான் எவை என்று கூட எதை என்று கூட இவன் கர்மாவை இவனே அனுபவிக்கட்டும் என்று !!!

அதனால் அதன் மூலம் அது முதலிலிருந்தே  சாபங்கள் அப்பனே.

குருவே போற்றி

சில சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுது சில சமயம் யாரோ நம் பின்னே இருக்கின்றார்கள் என்று! அமானுஷ்யமாக தோன்றுகின்றது??

அப்பனே எவை என்று கூட எவை என்று உணராமலே இதெல்லாம் ஒரு அற்ப சுகம்!!!

உங்கள் முதுகையே உஙகளால் பார்க்க முடியாது என்பேன் இதையே பார்க்க முடியவில்லை பின் எப்படி தீங்குகள் வந்துவிடும்??? அப்பனே எவை எவை என்று கூற அமைதியாக கந்தர் சஷ்டி கவசம் ஓதி வா!!! போதுமானது மனம் தெளிவு பெறும்.

குருவே போற்றி

சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு அழைத்தால் வர மறுக்கின்றார்கள் !!!அவர்களை எப்படி மாற்றுவது?? 

இதையென்று அறிய ஏன் எதை என்று உணராமலே எவை என்றும் ஆனாலும் இதற்கு சம்பந்தங்கள் எவை என்று கூட!!!

 ஒரு சரியான பணியை தேர்ந்தெடுக்கும் பொழுது கஷ்டங்கள் பட்டால் தான் அனைத்தும் வரும்!!!!

இதனால் நிச்சயம் பல பல திருத்தலங்களில் கூட பல அதிர்வலைகள் நிச்சயம் உள்ளது என்பேன்.

அதனால் பின் சில அதிர்வலைகள் பின் நன்றாக இருக்கும் பொழுது நிச்சயம் எவ்வளவு வந்தாலும் அவர்கள் பின் அங்கு செல்ல முடியாது என்பேன். ஏனென்றால் கர்மா.

கர்மா அங்கு தொலையும் என்பதை கூட சரியாகவே!!!.....

இதனால் கர்மா எதையென்று கூட விடாது அப்பனே!!! அதனால் முடிந்த அளவிற்கு வர முடியாதவர்களை இழுத்து  கூட்டி செல்லுங்கள் அப்பனே!!!

குருவே போற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பற்றி கூறுங்கள்

அப்பனே எதையென்று உணர எதை எவை என்று கூட அப்பனே அதிகாலையில் பாடிட்டே வாருங்கள் அதன் நிலைமை புரியும் என்பேன்!!! அப்பனே யான் சொல்லிவிடுவேன் அப்பனே... நீயும் கேட்டு விட்டாய் அப்பனே சொல்லிவிட்டால் இவ்வளவுதானா என்று விட்டு விடுவாய் அதனை நீ பாடி வா!!! எதையென்று பின் மாற்றங்கள் வருவதை நீயே எண்ணி விடுவாய்!! அதன் தன்மையை புரிந்து கொள்வாய்!! அப்பனே!!!!

குருவே போற்றி இதுதான் ஞானப் பாதை என்று தெரிந்தாலும் கூட அதை சரியாக பிடித்துக் கொள்ள முடிவதில்லை அது ஏன்????

அப்பனே இதையன்றி கூட இதுதான் அப்பனே மாயை!! இச்சை !! என்பேன் அப்பனே.

மனிதனுக்கு அப்பனே!!! மனிதனாக பிறப்பெடுத்து எதை என்று கூட வந்து விட்டாலே அப்பனே மனிதனை பின் இச்சை பின் எதை என்று கூட வாழ விடுவதே இல்லை அப்பனே!!!

சில இச்சைகளில் இருந்து மீண்டு வந்தால் தான் இறைவன் சரியாகவே இருப்பான் !!!அவந்தன் கையைப் பிடித்து ஏறிக்கொள்ளலாம் அப்பனே !!!இதை ஒரு வாகனம்  போலே வைத்துக் கொள்ளலாம் அப்பனே.

குருவே! மஞ்சள் காமாலைக்கு தீர்வு தாருங்கள்!!! 

அப்பனே இயற்கை உணவுகளை உட்கொள்ள நன்றுதான் என்பேன் அப்பனே!!!
உமிழ்நீரை அதாவது வாயில் சுரக்கும் உமிழ் நீரை அடிக்கடி விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அப்பனே

நல்முறையாக  மிளகு சீரகம் இவற்றின் தன்மைகள் உணர்ந்து சிறிதளவு வேப்பிலை இவற்றையெல்லாம் பாலின் தன்மையை அறிந்து நல்விதமாக இட்டு பின் எவை என்றும் கூற பின் மூலிகைகளும் அதாவது பொன்னாங்கண்ணி பின் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை விட்டு அருந்தி வந்தால் எளிதில் சரியாகிவிடும் அப்பனே எது என்று உணராமலே அப்பனே இவை எல்லாம் மனிதனுக்கு சில சில எவை எவை என்று கூட சத்துக்கள் குறைவாகவே உள்ளவையே அதற்காகத்தான் அப்பனே சரியான உணவைப் பின் மேற்கொண்டாலே பின் சரியான வழியில் எதை என்று உணராமலே பின் அனைத்தும் சரியாகிவிடும் என்பேன் அப்பனே எங்கெல்லாம் பச்சை அதாவது இயற்கை மூலிகைகள் உணவுகள் கிடைக்கின்றதோ அதை கிள்ளி அப்படியே உட்கொண்டாலும் நன்மையே தரும் அப்பனே!!! 

குருவே போற்றி சில  சமயங்களில் அசைவ உணவுகள் மீது சில சமயம் ஆசைகள் வருகின்றது

அப்பனே !!! எவை என்று கூட இப்பொழுது தான் யான் சொன்னேன் அப்பனே!!!
அப்பனே எவை என்று கூட இச்சையெல்லாம் கட்டுப்படுத்தினால் தான் மெச்சையாக முடியும்( மெச்சுதல் ஆக முடியும்) இதற்கு தகுந்தார் போல் நடந்து கொள்ளுங்கள். இதனைப் பற்றி பலமுறை யாங்கள் உரைத்து விட்டோம் எந்த ஒரு உயிரினத்திற்கும் நீங்கள் தீங்கிழைத்தால் அது திரும்பி உங்களை தாக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

குருவே போற்றி!!! சிலர் அரிசி தானம் செய்யக்கூடாது என்று கூறுகின்றார்கள் அது ஏன்???

அப்பனே!!! எதையன்றி கூட எவற்றில் இருந்து கூட அப்பனே அப்பொழுது உன் இல்லத்திற்கு எதுவும் வாங்கி தராதே!!! சொல்லிவிட்டேன்!!!!!

அப்பனே உன் இல்லத்திற்கு அரிசி வாங்கி தருவாயா? இல்லையா?

தருவேன் குருவே.

அப்பனே தான தர்மத்தை பற்றி எத்தனை முறை யாங்கள் எடுத்துரைப்பது???அப்பனே!!! பொய்யான மனிதர்களின் பேச்சைக் கேட்டு இப்படி எல்லாம் செய்தால் வீண் கர்மக்கள் தான் ஏற்படும் அப்பனே!!

குருவே போற்றி! பலரும் தீபங்களை குறித்து பேசுகிறார்கள் ஒரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றது என்று!! ஒரு முகம் ஏற்றினால் இந்தப் பலன் இருமுகம் ஏற்றினால் இந்த பலன் என்று இதெல்லாம் உண்மையா???

அப்பனே பல நபர்களை யான் பார்த்திட்டேன் அப்பனே!!! பல வடிவங்களாலும் தீபங்கள் ஏற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!

என்னதான் நடந்தது?? அப்பனே!!

தூய உள்ளத்தோடு அப்பனே ஏற்று தீபத்தை!!!! அனைத்தும் நன்றாகும்!!!

குருவே தென்னாடுடைய சிவனே போற்றி என்கின்றார்களே அதனுடைய விளக்கம்

அப்பனே எதை என்று கூற ஆனால் இவையெல்லாம் யான் எதையும் ஏற்கப் போவதில்லை அப்பனே!!!!

உலகத்திற்கு ஒருவனே !!!  அவன் ஈசனே!!!

அவ்வளவுதான்!!!!!

(அதாவது தென்நாடுடைய சிவன் இல்லை எந்நாட்டவர்க்கும் இல்லை... இந்த உலகத்திற்கே ஈசன் தான்) 

குருவே போற்றி மழை வளம் பெருக வேண்டும் உலகம் செழிக்க வேண்டும்

அப்பனே இதை எவை என்று கூட பின் மனிதனின்  அநியாயங்கள் அக்கிரமங்கள் மீறும் பொழுது இயற்கையும் மீறும் என்பேன் அப்பனே அவ்வளவுதான்.

குருவே வடமேற்கு திசையில் இருக்கும் நாட்டில் இருக்கும் புனித ஸ்தலத்தில் உள்ளே இருப்பது சிவன் என்று கூறுகிறார்களே அதனைப் பற்றி கூறுங்கள்!!!

அப்பனே இதையன்றி கூட இப்பொழுது தான் யான் சொன்னேன் அப்பனே அதையும் நீ புரிந்து கொள்ளவில்லையா????

இந்த உலகத்திற்கு மன்னன் ஈசனே!!!!!

குருவே போற்றி!!! தீட்சை என்றால் என்ன? இப்பொழுது ஒவ்வொருவரும் யான் அந்த தீட்சை தருகின்றேன் நான் இந்த தீட்சை  தருகின்றேன் என்று எங்களை குழப்புகின்றார்கள்

அப்பனே இதையன்றி கூட அதை எவையென்று கூட எங்கு பெறப்பட வேண்டும் என்பதை கூட !!....ஆனால் இப்பொழுது அவையெல்லாம் மாறிவிட்டது அப்பனே எவையென்று அனைத்தும் பணத்திற்காகவே ஆகிவிட்டது. ஆனால் அதன் மூலம் எந்த லாபமும் இல்லை அப்பனே!!! அதனால் இறைவனை வணங்கி வணங்கி பின் நல் உள்ளங்களாக இருந்தால்!!!!........

இறைவனே வந்து நிச்சயம் கொடுப்பான் அப்பனே அதுதான் தீட்சை!!!!

மனிதனால் கொடுக்கப்படுவது தீட்சை இல்லை!!!!

குருவே போற்றி!!! வாலாஜாவில் உள்ள சுமைதாங்கி மடத்தில் ராமானந்த சித்தர் அங்கு உலாவிக் கொண்டிருக்கின்றார் என்று ஐதீகம் அதைப்பற்றி!!....

அப்பனே எதை எதை என்று கூட அங்கே அவந்தன் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!

குருவே வாலஜா திருமலைச்சேரியில் தேரையர் சித்தர் அவர்களின் ஜீவசமாதி உள்ளது என்று கூறுகிறார்கள் அது உண்மையா??

அப்பனே எதையென்று கூற பல சித்தர்கள் அப்பனே பல திருத்தலங்களில் அப்பனே சமாதி அடைந்துள்ளார்கள் அப்பனே இது உண்மையே என்பேன் அப்பனே!!!!

குருவே சில ஆலயங்களுக்கு அடிக்கடி சர்ப்பங்கள் வந்து செல்கின்றது இதன் மகத்துவம் என்ன??? குறிப்பாக பாக்கம் உமா மகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயத்தில் அடிக்கடி சர்ப்பம் வந்து செல்கின்றது இதன் மகத்துவம் என்னவென்று கூறுங்கள் 

அப்பனே!!! இறையின் பலம் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து உயிரினமும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே

குருவே போற்றி! பல இடங்களில் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது!! சிலருக்கு குலதெய்வமாகவும் முனீஸ்வரன் இருக்கின்றார் அவருடைய தலைமையகம் எங்கே உள்ளது

இதையென்று கூட பின் எவை என்று கூட அழகன் மலையில் இருக்கின்றானே அங்கேயே தான் இருக்கின்றான் அவன்!!!(மதுரை அழகர் மலை)!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்

குருவே தமிழ்நாட்டில் மட்டும் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன இதன் ரகசியம் என்ன?

அப்பனே இவ்வுலகின் உச்ச பகுதியே இவ்விடம் தான் என்பேன். திருத்தலங்கள் உச்சிப் பகுதியில் தான் இருக்கும் என்பேன். ஆனால் அது பொய்யான மனிதர்கள் கீழே இருக்கும் படி அமைத்து விட்டார்கள் வரைபடத்தில்!!! இதைப் பற்றி முன்பே யான் தெரிவித்து இருக்கின்றேன்.

அப்பனே இவ்வுலகத்தின் உச்ச பகுதி அண்ணாமலையே என்பேன் இவையன்றி கூற திருவண்ணாமலை உலகின் உச்ச பகுதி அதனால் தான் நினைத்தாலே முக்தி என்று வந்தது நல் முறையாக பல சித்தர்களும் ஞானிகளும் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள். அனைத்து தெய்வங்களும் இங்கேயேதான் இருக்கின்றார்கள் அதனால்தான் அப்பனே இங்கு வந்தவர்கள் அதிகளவில் முக்தியை பெறுவார்கள் அப்பனே திருத்தலங்கள் எல்லாம் நீ கீழே இருக்கக் கூடாது அப்பனே மேன்மையான இடங்களிலேயே இருக்க வேண்டும்.  இவ்மலையைச் சுற்றி உள்ள அனைத்தும் ஈசனுக்கே சொந்தம் ஆனால் முட்டாள் மனிதர்கள் எதை எதையோ நினைத்துக் கொண்டு அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு விட்டார்கள் இறைவனின் சொத்துக்களை எடுத்துக்கொண்டு இப்படி செய்தால் இறைவன் எப்படி? நல்லது செய்வான்? அப்பனே.

குருவே அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுக்கு தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது இதில் இருந்து மீள என்ன வழி???

அப்பனே மனிதனாகப் பிறந்து விட்டாலே கஷ்டம்தானப்பா.

இறைவனும் மனித அவதாரம் எடுத்து வந்து பொழுது கஷ்டங்களை அனுபவித்தார்களப்பா.

ராமனும் கிருட்டிணனும் ஈசனும் படாத கஷ்டங்களா நீங்கள் பட்டு விட்டீர்கள்!!! அப்பனே கஷ்டங்களுக்கு யார் காரணம்?? நீங்கள் தான் காரணம்!!! நீங்கள் சரியான வழியில் செல்லும்பொழுது துன்பங்கள் குறையுமப்பா.

மனிதர்களை நல்வழிப்படுத்த

புத்தன் வந்தான்!! பின் இயேசு வந்தான்!! நபிகள் நாயகமும் வந்தான்!! ஆனால் மனிதர்கள் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு அலுத்து தான் சென்றார்களப்பா.

நல் முறையாக கிருஷ்ணனும் வருவான் என்பேன்.தர்மத்தை நிலைநாட்ட. அதிக காலங்கள் ஆகிவிட்டது யோசித்துக் கொண்டிருக்கின்றான்.

குருவே கிருஷ்ணன் எப்பொழுது வருவார் எங்கே வருவார்?

நல்ல முறையாக அப்பனே இன்னும் 10 ஆண்டுகளில் வருவான் என்பேன் துவாரகை என்கின்றார்களே அங்கு வருவான். ஆனால் நிச்சயம் மனிதர்களுக்கு பிறக்க மாட்டான் என்பேன்.

குருவே அவருடைய பெயர் என்னவாக இருக்கும்?

அப்பனே சொல்கின்றேன் பின்வரும் காலங்களில்.

குருவே ஒரு மனிதன் ஒரு தவறை செய்கின்றான் அதனை அவனுடைய பங்கு எவ்வளவு? கலிபுருஷன் பங்கு எவ்வளவு?

அப்பனே இதனால் ஆனாலும் நல் முறையாக சித்தர்களைப் பிடித்துக்கொண்டால் கலியவன் ஓடிவிடுவான் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.அப்பனே.

குருவே சராசரி மனிதர்களுக்கும் பிரபலங்களுக்கும் என்ன வேறுபாடு ?ஒரே சரிசமமாக நடத்தப்படுவது இல்லை கோயில்களில் மற்ற இடங்களில் முன்னுரிமை ஏன் அவர்களுக்கு மட்டும்?

அப்பனே பிரபலங்கள் முன் ஜென்மத்தில் செய்த பல புண்ணிய காரியங்களால் பிரபலங்களாக பிறக்கின்றார்கள்.

நல் முறையாக மக்களுக்கு உதவி செய்தல் நீர்நிலைகளை வெட்டி குடிநீர் தானம் செய்து ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வது ஊருக்காகவே வாழ்ந்து ஏரிகள் குளம் அமைத்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் வழங்கி நல் முறையாக கோமாதாக்களை பராமரித்து புண்ணிய காரியங்கள் செய்பவர்கள் மட்டுமே பிரபலங்களாக பிறக்கின்றார்கள் அப்பனே.

அப்பனே நல் முறையாக ஒருவன் புண்ணியம் செய்து புண்ணியம் செய்து அவன் புண்ணியம் மிகுந்து விட்டால் இறைவனே அவனது பிறவியை அவன் இஷ்டத்திற்கு தந்துவிடுவான் என்பேன் அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்!!! புண்ணியங்கள் செய்!!! என்று சொல்லிக் கொண்டே வந்து இருக்கின்றேன் புண்ணியங்கள் செய்யச் செய்ய நல்லவையாகவே நடக்கும் என்பேன். நல் முறையாக ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் பைரவ வாகனங்களுக்கும் கோமாதாகளுக்கு பசுக்களுக்கு அப்பனே நல் முறையாக உணவளித்து பராமரித்து வந்தால் புண்ணியம் பெருகும்.

அப்பனே ஒரு சூட்சுமத்தை சொல்கின்றேன் நல் முறையாக அப்பனே காமதேனு பசு திருவண்ணாமலையில் ஒரு கிராமத்தில் இப்பிறவியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

குருவே நாங்கள் திருவண்ணாமலை சென்றால் காமதேனுவை தரிசனம் செய்ய வேண்டும் அனுமதி தாருங்கள்.

அப்பனே இப்பொழுது அநியாயங்கள் மேலோங்கி நிற்கின்றது இப்போதைக்கு தரிசனம் இல்லை என்பேன்.

குருவே தவறு செய்யும் மனிதர்கள் நன்றாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு மேலும் மேலும் நன்மைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது ஏன் இப்படி???

அப்பனே இனிமேலும் மனிதர்கள் திருந்தாவிட்டால் வாழ்வது கடினம் ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு அவன் நன்றாக இருக்கின்றான் என்றால் அவன் செய்த புண்ணியங்கள் பேசுகின்றது என்று அர்த்தம் அந்தப் புண்ணிய கணக்கு முடிந்தவுடன் அவனுடைய பாவக் கணக்கு ஆரம்பம் ஆகும் பொழுது அப்பனே  இறைவன் ஆட்டத்தை ஆரம்பிப்பான் அப்பொழுது தெரியும். அப்பனே.

குருவே சில அந்நிய மனிதர்களால்  நாட்டில் பல ஆலயங்கள் சிதைக்கப்பட்டன இதன் காரணம் என்ன??

அப்பனே நடந்தவை எல்லாம் நாடகம் என்பேன் நடத்தியவன் ஈசன் என்பேன்.

எல்லாம் ஈசன் கட்டளைப்படியே நடந்தவை என்பேன் சில ஆலயங்கள் சிவலிங்கங்கள் சக்திகள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதன் சக்திகள் கீழ்நோக்கி பாயும்.

அப்படி சக்திகள் கீழ் நோக்கி பாய்ந்த கோயில்களை எல்லாம் ஈசனே தேர்ந்தெடுத்து பின் அழித்து  புதியதாக உருவாக்கிக் கொண்டான் என்பேன். யாரை தேர்ந்தெடுத்து இதைச் செய்வித்தானோ... அவர்களைக் கொண்டே உருவாக்குவான் ஈசன்.

குருவே மைசூருக்கு அருகில் அமைந்திருக்கும் நஞ்சன்கோடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் குறித்து கூறுங்கள் 

அப்பனே நல் முறையாக அங்கு சென்று வந்தால் சில சில அதிர்ஷ்டங்கள் உருவாகும் என்பேன்.

மனிதர்களின் தவறால் ராகு கேது கிரகங்களால் தண்டிக்கப்பட்டு சில தோஷங்கள் ஏற்பட்டிருந்தால் அங்கு சென்று வழிபட்டால் உடனே அனைத்தும் நீங்கும் என்பேன் . நல்முறையாய் மனதில் எண்ணி நல் முறையாய்

எவை வேண்டும் என்று எண்ணி பின் அங்கு அங்கு சென்று தீபமேற்றி வழிபட்டு வந்தால் அதி சிறப்பு தரும் என்பேன் நினைப்பதை  நிச்சயம் நடத்தும் அத்தலம் என்பேன்.

நல் முறையாய் ராகு-கேது களும் மனமகிழ்ந்து கொடுப்பார்கள் என்பேன்.
ராகு கேதுக்களுக்கு முக்கிய தலமாகும் இத்தலம்.

தீபமிட்டு வருதல் அதி சிறப்பு தரும் !!! ராகு கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அங்கு சென்று வழிபட்டு வந்தால் அத் தோஷம் நீங்கி நலமுடன் வாழலாம். அப்பனே.

குருவே சரணம் !!!குளிர் பிரதேச நாடுகளில் வாழும் பாரத தேசத்தை சேர்ந்த அடியவர்கள் கடும் குளிர் காரணமாக அவர்களுக்கு விட்டமின் பி12 சத்து குறைபாடும் அமினியா நோய்களும் ஏற்படுகின்றன இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்கின்றன அந்த மருந்துகள் அசைவ உணவு விதி அடிப்படையில் அமைந்துள்ளது இதைத் தவிர்த்து விட்டு ஜீவகாருண்ய முறையை கடைப்பிடிக்கும் அகத்தியர் அடியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் என்னென்ன??? 

அப்பனே இவ்வுலகத்தில் திரிபலா திரிகடுகம் எனும் மூலிகைக்கு இருக்கும் பின் எதை என்று கூற மருத்துவ குணம் வேறு எதற்கும் இல்லை அதை பயன்படுத்தி வர அனைத்தும் நலமாகும்

குருவே சரணம் கடும் குளிர் வீசும் பிரதேச நாடுகளில் வாழும் அடியவர்கள் சரியாக குளிப்பதற்கும் பூஜைகள் செய்வதற்கும் முடிவதில்லை அதாவது இங்கே உள்ள அடியவர்கள் செய்யும் விதிமுறைகளை அங்கு செய்ய முடிவதில்லை அவர்கள் நாங்கள் எப்படி பூசைகளை செய்வது என்று கேட்கின்றனர்!!!!

அப்பனே இவையன்றி கூற தீபத்தை ஏற்ற சொல்!!! நிச்சயம் உண்மையான பக்தியை காண்பிக்க சொல்!!! நிச்சயம் நிச்சயம் அங்கே யான் வருவேன் ஈசன் அதாவது எதையன்றி கூட அனைத்து தெய்வங்களும் வருவார்கள் எதை என்று அறியாமலே இதை பலமுறை பலமுறையும் யான் சொல்லிவிட்டேன் எதை எதை என்று கூட தீபத்தை ஏற்ற சொல்!!! உண்மையான பக்தியை காட்டச் சொல்!!!

குருவே சரணம்! வீட்டில் அன்றாடம் வழிபடும் தெய்வ சிலைகளில் ஒரு சிலை சிறிது பின்னம் அடைந்து உள்ளது அதை வைத்து வழிபாடு செய்யலாமா???

அப்படியே பின் பொதுவாகவே சொல்வார்கள் பின் சிதிலமடைந்தவை பின் வைக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!!

குருவே சரணம்!! சிலர் சூரியக் கல் எனப்படும் சன் ஸ்டோன் மாலையை அணியலாம் என்று கூறுகின்றார்கள் அந்த சூரிய கல் மாலையின் விசேஷம் என்ன???

அப்பனே நலமாகவே இதன் தன் எதை என்று அறியாமலே சக்தி மிகுந்தவையாக அவை இருக்க வேண்டும் இவ்வாறு இருக்குமென்றால் அப்பனே  தைரியம் இருக்கும் என்பேன் அப்பனே எப்பொழுதும் கூட உடம்பில் எந்த ஒரு குறையும் வராது என்பேன் அப்பனே நல்விதமாக அனைத்தும் மாறிவிடும் என்பேன் அப்பனே ஆனால் சக்தி மிகுந்து காணப்படுவது எவை என்று அறிய அரிதாகிவிட்டது அப்பனே!!!! அனைத்திலும் அப்பனே போலியான வியாபார தந்திரமே அப்பனே!!!!

குருவே அன்றாடம் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில் கேந்தி எனப்படும் பூக்களை பூசையில் பயன்படுத்தலாமா???

அப்பனே எதை என்று கூற அவரவர் இடங்களில் கிடைப்பதற்கு தகுதியாகவே அனைத்தும் பயன்படுத்துகின்றார்கள் அப்பனே!!!!

குருவே சரணம் குருசேத்திரத்தில் இடைக்காடர் சித்தர் வந்து மனிதனின் ஜாதக கட்டங்களில் இருக்கும் கிரகங்களை பற்றி கூறியிருந்தார் அதில் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் நான்கு அல்லது நான்கு க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அதை மனிதர்களால் கணிக்க முடியாது எங்களைப் போன்ற சித்தர்களால் தான் முடியும் என்று கூறியிருந்தார் அதனைப் பற்றி கூறுங்கள்

அப்பனே எதை என்று கூற எவை என்றும் அறியாமலே அப்பனே நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே இறைவன் இறைவன் அருளை!!!  இறைவன் அருள் அப்பனே ஜாதககட்டத்தில் அப்படி இருந்தால் இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும் என்பேன் இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே அவ்வளவுதான்!!!!

குருவே பைரவ வாகனங்களுக்கும் சரி பறவைகளுக்கும் சரி அவற்றினுடைய உணவு முறையை மனிதர்கள் மாற்றி விட்டார்கள் அதனால் அதற்கு நாங்கள் தரும் உணவு அதற்கு அதாவது உதாரணமாக பைரவர்கள் பிஸ்கட்டுகள் சாப்பிடுகிறார்கள் பறவைகள் தற்பொழுது தானியங்களை விட மசாலா கலந்த கலவையினை இனிப்பு பூந்திகளை தின்கின்றன இதனால் அவற்றிற்கு பாதிப்பு வருகின்றது நாங்கள் என்ன செய்வது

அப்பனே  எதை என்று அறியாமல் அப்பனே உங்களுக்கே தெரியும் எதனால் பாதிப்பு என்பதை கூட அதனால் விட்டு விட்டு எது பாதிப்பு இல்லாததோ அதை கொடுங்கள்!!!

குருவே சரணம் புண்ணிய நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் இறை தன்மையுடன் இருக்கின்றது ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராட வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் எல்லா மனிதர்களும் இந்த புண்ணிய நதிகளில் நீராடுகின்றார்கள் அப்பொழுது அந்த இறைத்தன்மை மனிதருக்குள் ஏன் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை??  மனிதன் மட்டும் ஏன் அதை இறைத்தன்மையை உணர முடிவதில்லை???

அப்பனே எதை எதை என்று அறிய ஆனாலும் அப்பனே எவை என்று கூட எல்லா மனிதர்களுக்கும் இவ்வளவு நதிகள் ஓடுகின்றதே!!!! ஆனாலும் இதற்கெல்லாம் பின் நீராடுவதற்கு இறைவன் சம்மதிப்பதில்லை என்பேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள் நீயே!!! அப்பனே ஒருவன் பின் புண்ணியம் புண்ணியவானாக திகழ்ந்தால்தான் பின் எதை என்று அறியாமலே அதாவது எதை என்று தெரியாமலே நதிகள் எதை எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட இறைவன் அப்பனே நீராடுவதற்கு வாய்ப்பளிப்பான் என்பேன் அப்பனே  அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

குருவே போற்றி!!!!

நாங்கள் அனைவரும் பக்தி செலுத்துகின்றோம் ஆனால் இதில் ஞானம்,  ஞானிகள் குறித்த பார்வையில் குழப்பங்கள் அதாவது மனிதர்களின் பல்வேறு வகையான உபதேசங்கள் வழிகாட்டுதல் என குழப்பமடைய செய்கின்றது 

அப்பனே எவையென்று கூற ஞானி ஆவது சாதாரண விஷயம் இல்லை... 

பட்டினத்தான் வாழ்க்கையை படியுங்கள்!!! அப்பனே இவையன்றி கூற பாதி அளவாவது உங்களுக்கு தெரிய வரும் மீதியளவு எங்கே சென்று விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!!!

அப்பனே யான் ஒன்றை தெரிவிக்கின்றேன்....அருணகிரி நாதன் சுகங்கள் என்பதையே அனுபவிக்காதவன் எதையென்று கூற ஆனால் பித்தன் ஆகவே சென்று கொண்டிருந்தான்!! ஆனால் அவனுக்கு பித்தத்திலும் அவனுக்கு இன்பம் இல்லை!!

ஆனால் அனைவருமே இவன் பெண் பித்தன பெண் பித்தன் என்று தான் கூறிக் கொண்டிருந்தார்கள்!!! ஆனால் அதில் கூட அவனுக்கு முற்றுப்பெறாத நிலை!!!

ஆனால் கடைசியில் ஏன்?? இந்த நிலைமை என்று கூட இறக்கக்கூடிய நேரத்தில் ஞானி!!........

எதையென்று கூட பின் கண் முன்னே காட்டினான் இதுதான்!!

அவனுடைய பிறப்பில் சந்தோஷமே இல்லை மகன்களே!!!!! 

எப்பொழுது சந்தோஷம் வந்ததென்றால் அப்பனே முருகன் வந்த பின்பு தான்!!!

போதுமடா !!! என்று கூட பல பாடல்களை பாடினான்!! எதையென்று கூட அதனால் யான் எவை என்று கூட இப்பொழுது கூட

ஆடி அசைந்தும் அசையாமல் வருவது ஏதப்பா!!!!

ஏதப்பா !!நின்றும் நிலைக்காமல் போவது ஏதப்பா!!

ஏதப்பா வந்ததும் வருவதும் பின் தங்கிச் செல்வதும் ஏதப்பா!!!

ஏதப்பா இப்பிறவி உண்மை நிலை உண்மை வந்ததும் பொய் போனதும் பொய் வந்ததும் உண்மை நிலையை சரியாக புரிந்து கொள்வதும் இல்லையப்பா

அப்பனே நிலைமைகள் மாறும்

நிலைகள் மாறும் பொழுது மாற்றம் உருவாகும் போதும் மாறிய பின் உருவாவது ஏதப்பா!!!

ஏதப்பா நிலைமைகளை கண்டு கண்டு தாழ்ந்து தலை குனிந்து தலை குனிந்து தலை நிமிர்ந்து வாழ்ந்தால் வாழ்ந்து வந்தது ஏதப்பா!!! ஏது?? 

மரம் செடி கொடிகளப்பா!!!!

தாழ்ந்து இலைகள் தாழ்ந்து போகும் நின்று போகும் வீழ்ந்து போகும் மறைந்து போகும் ஆனால் மரமோ பின் மனிதர்கள் வெட்டினால் தான் உண்டு!!!

அதுதான் வாழ்க்கை அப்பன்களே !!!சிந்திக்க வேண்டும்

ஒவ்வொரு வார்த்தையையும் கூட அனுபவங்கள் பட்டுப்பட்டு அதனால்தான் ரகசியங்களாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!!!!

இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும் சிந்தித்தால் தான் அப்பன்களே உண்மை நிலைகள் புரியும்!!!!

புரியும் என்பது புரியாவிடிலும் புரிந்து கொண்டு புரிந்து கொண்டு செயல்படுவது செயல்பட்டு அழைத்து வருவது அழைத்து நிற்பது முன் நிற்பது பின் நிற்பது நீங்கள் நடுவில் நிற்பது

ஆனால் முன் நிற்பது ஏதும் தெரியவில்லை பின் நிற்பதும் ஏதும் தெரியவில்லை நடுவில் நிற்கின்றீர்கள் பின் சுற்று முற்றும் பார்க்கின்றீர்கள் யாரும் இல்லை!!

ஏன் இந்த நிலைமை இதை நீங்கள் நிச்சயம் உணர்ந்தாக வேண்டும்!!!

ஆனால் உண்மை நிலை யாரும் இல்லாமல் இருக்கின்றோமே என்று நினைக்கின்றீர்களா!!!!

சித்தர்கள் இருக்கின்றார்கள் மகன்களே!!

 எவற்றில் இருந்து தன்மைகள்!!

பொய்த்துப் போனது உலகமா? பின் மெய்யானது உலகமா? இவற்றிற்கெல்லாம் விடைகள் சரியாக கண்டுகழிந்தால் நிச்சயம் வாழ்ந்து விடலாம்!!

வாழ்க்கை வாழ்வதற்கும் ஆனால் வீழ்வதற்கும்!!!

நிச்சயம் வாழ்க்கை என்பது அனைவரும் வாழ்வதற்கே என்று இருக்கின்றார்கள்!!!

 ஆனால் யான் சொல்வேன்!!! வீழ்வதற்கே!!! 

மனிதனின் நிலைமைகளை யான் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் மகன்களே!!!!

எதை என்று உணர உணர மனிதனின் செயல்கள் எல்லை மீறி கொண்டே போகின்றது.

ஆனால் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்!! யாம் வாழலாம்!!! மனைவி சுற்றார் முற்றார் உற்றார் உறவினர் என்றெல்லாம்!!!

ஆனால் அது எங்களுக்கு மட்டுமே தெரியும்!!

எப்படி எல்லாம் அவனால் கஷ்டங்கள் வரும் வரும் என்பதை எல்லாம்!!!

மனிதர்கள் ஏன் இந்த நிலைமை எதை என்று உணர்வதற்குள் அப்பனே மனிதன் பின் திருடனாக மாறிவிடுகின்றான்!!

ஏன் மனிதன் திருடினால் தான் திருடனா!??????

ஆனால் இல்லை மனதில் தீய எண்ணம் இருப்பவனே திருடன் அவந்தனுக்கு தான் பின் பாவங்கள் அதிகம் சேரும் உணர்ந்து கொள்ளுங்கள் மகன்களே இது யாருக்கும் தெரியாது!!!

அப்பன்களே பின் நீங்கள் யோசிக்க வேண்டும் அருணகிரிநாதன் ஒரு பாடலை பாடினான்

எட்டுவதற்கும் எட்டாத அளவிற்கும் எட்டாத உயரத்திற்கும் சென்று விட்டால் 
சென்றிருப்பவன் விடுவானா??

விடுவது என்பதை எல்லோரும் பின் மனிதனை முயற்சி எடுப்பானா முயற்சி எடுத்து எடுத்து அவதி அதைப் பட்டு நின்று நின்று மேல் நோக்கிச் செல்லலாம் சூரியனையும் சந்திரனையும் தொட்டுவிடலாம் மனிதனின் நினைப்புதான் கெட்டது கெட்டது எதனால் வாழ்க்கையும் கெட்டது 
வருந்தாதே வருந்தி விட்டு செல்லாதே
சென்றிட்டு மீளாதே மீளாதே 
மீண்டிட்டு மீண்டிட்டு கும்பமிட்டு கும்பமிட்டு
குள்ளமிட்டு பின் பணிந்து நின்று முட்டிப்போட்டு பின் உட்கார்ந்தால் தெரியுமடா உணர்ந்தால் தெரியுமடா

ஆனால் எதனையென்று நோய் கூட எதிலிருந்து வருவது எவற்றில் இருந்து வருவது தெரியாத அறியாத மனிதன் அதைக் கூட தெரியாத மனிதனுக்கு வாழ்க்கையின் ரகசியம் தெரிந்து உள்ளதா? என்ன ??

நிச்சயம் தெரியாது

முட்டிக்கால்கள் எதை என்றும்  இட்டு அதன் படி நடந்தால் வலி தெரியும் இதுதானப்பா வாழ்க்கை! நடந்து தான் பாருங்கள் அப்பொழுது புரியும் எவ்வாறு வாழ்க்கை என்பதை கூட

இதைத்தான் மனிதன் ஒவ்வொருவனும் செய்து கொண்டால் அப்பொழுது தெரிந்துவிடும்

அப்பனே அப்பா முருகா ஈசா!! இதுதான் வாழ்க்கையா என்று கூட

நிச்சயம் அப்பனே ஒவ்வொருவனின் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள பின் கால்களை மடக்கி பின் நடந்தால் புரியும் இதுதான் அப்பன்களே வாழ்க்கை!!!!

வாழ்க்கை என்பதை கூட சொல்வதற்கு தகுதியான வசதிகள் உள்ளதா இல்லையா??

முற்போரிட்டு இதனையென்று கூற இதனைத் தான் கந்தன் உரைத்திடுவானா என்ன!!!

நிச்சயம் உரைத்திடுவான்...எதையென்று கூட... 

ஆனாலும் பக்குவ நிலைகளை தந்தாக வேண்டும் பக்குவ நிலைகளை தந்து தந்து செயல்பட்டால் தான் வாழ்க்கையில் பின் எல்லையில்லா மாற்றங்கள் எல்லையில்லாத மாற்றங்கள் எதற்காக கூன் உடம்பு எதற்காக எதற்காக ??

பிறக்கும் போதும் கூன் உடம்பு பின்  இறக்கும் போதும் கூன் உடம்பு

ஆனால் நிமிர்ந்து வாழ்கின்றான் நடுவில் இது பொய்யானது.

எப்பொழுதெல்லாம் மனிதன் நிமிர்ந்து வாழ்கின்றானோ நிச்சயம் தாழ்ந்தாக வேண்டும். தாழ்ந்து இருக்கக்கூடியவன் நிமிர்ந்தாக வேண்டும் ஆனால் நிமிர்ந்து வாழ்வதென்றால் கடினம் அக் கடினத்திற்கு உழைப்புத்தான் இதற்கும் சம்பந்தமான ஈசன்!!!

அதனால் நிச்சயம் உழைப்பை பெற்று ஈசன் இருக்கின்ற பொழுது நிமிர்ந்து நடங்கள்!!! சித்தர்களின் ஆசிகளோடும் ஞானிகள் ஆசிகளோடும் ஒன்றோடு ஒன்று!!!

ஆனாலும் எதனை நோக்கி எவற்றை நோக்கி பயணிப்பது தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றான் சென்று கொண்டிருக்கின்றான் மனிதன்.

அப்பன்களே ஒரு வாகனத்தில் ஏறும்பொழுதும் பின் இறங்கும் பொழுதும் அமைதியாக இருங்கள் ஆனால் நடுவில் நடக்கின்றது என்பதை பாருங்கள் அதுதான் அப்பன்களே சூட்சும ரகசியங்கள்!!!

ஆனால் சில மனிதர்கள் அப்படியும் இப்படியும் ஆடுவார்கள் இவ்வாட்டத்தின் முடிவில் மீண்டும் இறங்கித்தான் வரவேண்டும் அப்பனே.

யான் சொல்லிவிட்டேன் அப்பனே இதன் அர்த்தத்தை எல்லாம் நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு விடைகள் இதிலேயே அடங்கியுள்ளது அப்பனே!!! இவற்றில் இருந்து கூட!!!!

இதுதான் அப்பனே உண்மை நிலை!!

இதுதான் மனிதனின் நிலைமையும் கூட.... எங்கிருக்கின்றான் எங்க இருக்கின்றான் இறைவன் என்று கூட

ஆனால் உங்கள் உள்ளத்திலே இருக்கின்றான் இறைவன்!! ஆனாலும் இதனையும் என்று கூட கண்ணாமூச்சி விளையாட்டு என்கின்றார்களே அப்பன்களே

இதனை நீங்கள் விளையாட வேண்டும் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்

கண்களை கட்டிக்கொண்டு நடங்கள் அப்பொழுது தெரியும் வாழ்க்கையின் ரகசியங்கள்.

இப்படித்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இதுதான் உண்மையான வாழ்க்கை அப்பனே அக்கண்களை மூடிட்டு அப்பன்களே சிறிது தூரம் நீங்கள் நடக்க வேண்டும் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...

அப்பனே  ஞானியாக விழைவதற்கும் வழிகள் இல்லையப்பா

அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்

சித்தர்களை பின் வணங்கினால் அனைத்தும் தருவார்கள் என்று!!!

இல்லை அப்பனே யாங்கள் நிச்சயம் பிறவி பெருங்கடலை பின் நிச்சயம் அறுத்து விடுவோம். அதனால் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் படத்தான் வேண்டும் அப்பனே.

பிறந்து பிறந்து அப்பனே எதையெதையோ உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அதற்காக பிறப்புகளே வேண்டாம் என்பதைக் கூட அப்பனே யான் எதையென்று!!!!

அதனால் நிச்சயம் என்னை நம்பியவர்களுக்கு சில கஷ்டங்கள் வந்தாலும் பிறப்புக்கள் இல்லையப்பா!!!

ஈசனும் பார்வதி தேவியும் ஏதோ ஒன்று யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே

ஆனால் யான் ஈசன் வேறா??  பின் பார்வதி வேறா??? என்றெல்லாம் ஆனாலும் மூலனின் கூற்றுப்படி இறைவன் ஒன்றே

ஆனாலும் பல அவதாரங்கள் உங்களுக்குச் சொல்லிவிட்டாலும் மனிதர்களுக்கு புரியாது !!!

சித்தர்களின் தன்மைகள் அதனால் மனிதனுக்கு ஏற்றவாறே உரைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பன்களே!!! 

இவை என்று கூட அறிய அறிய

முற்போக்கு பிற்போக்கு இடைப்போக்கு ஆனால் இடைப்போக்கு என்பதை கூட கண்டு தெளிந்தால் அப்பனே இதுதான் மெய்யப்பா! மெய்யானதும் பொய்யானதும் பொய்க்குப் பின் வருவதும் கடமையும் பின் ஒன்றா இல்லை இரண்டா

இதனால் நிச்சயம் நீங்கள் நீர் அருந்தினால் எதை என்று கூட மற்றவர்கள் ஏன் நீரை அருந்துகின்றீர்கள் என்பதை யாரும் கேட்பதில்லை

ஆனால் நிச்சயம் இவ்வாறு தான் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது அவனவன் கர்மா சுமந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கிறாய் என்பதை யாரும் கேட்பதில்லை

ஆனால் இறைவன் நிச்சயம் கேட்பான்!!! கடைசியில் அப்பொழுதுதான் கைகள் கட்டி பதில்கள் அளிக்க வேண்டும்.

அதனால் அப்பன்களே உண்மை நிலையை புரிந்து புரிந்து செயல்பட்டு செயல்பட்டு செயலாக்கி கொண்டே இருந்தால் நன்மைகள் முற்றுப்பெற்றதாக போய்விடும் முற்றுப்பெற்றது வாழ்க்கை அப்பனே!!!

எதை என்று உணர்வதற்குள் காலங்கள் சென்று விடும் இதனை நம்புவதற்கும் வழிகளும் தெரிவதில்லை அதனால் அமைதியாக இருங்கள் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள் ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!!

இம்மைக்கும் மறுமைக்கும் மறுமைக்கும் உகந்திருப்பது என்ன வித்தியாசம் என்றால் ஒன்றும் இல்லை இதனால் நன்மைகள் அப்பனே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்!!!

அப்பனே கஷ்டங்கள் பட்டு விட்டீர்களா நீங்கள் நீங்கள் தான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

இயேசுநாதரிடம் யான் முன்பே முறையிட்டு விட்டேன் இப்படி எல்லாம் சென்றால் உந்தனுக்கு தரித்திரங்கள் ஏற்பட்டு விடும் மனிதர்கள் கொன்றுவிடுவார்கள் என்று!!!

ஆனால் இயேசு நாதனோ யான் அனைத்திற்கும் துணிந்தவன் அப்பொழுதுதான் எதை என்று கூட ஞானியாக முடியும் என்று கூறிவிட்டான் அப்பனே!!!

அதனால் அவந்தன் வாழ்க்கையில் ஒன்று கூட சுகங்களை அனுபவிக்கவில்லை மகன்களே அப்பொழுது யார் ஞானியாக ஆகின்றார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள் மகன்களே!!!

எப்படி எல்லாம் பக்குவங்கள் பட வேண்டும்....  எதையென்றும் எப்படி என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!

பல நூல்களைப் படித்து உண்மை நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும்!!!நல்முறையாய் பக்தியை கடைப்பிடித்து இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் காரணம் இறைவனே! யாங்களும் வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வோம் அப்பனே 

நலமாக நலமாக ஆசிகள் ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

4 comments:

  1. எம்பெருமானே அகத்தீசா... குருநாதா... ஞானக்கடலே... நலமா அய்யா ?!?!?! எனக்கும் தங்களிடம் பலகேள்விகள் கேட்டு - தெளிந்து - நல்வழியில் வாழ்ந்து இந்த ஜென்மத்தை கடைதேற்றலாம் என்று எண்ணுகிறேன்... அருள்வாக்கு இவ்வடியவனுக்கு உன்டா அய்யா.... ???!!! இப்பதிவின் மூலமாய் தங்களுடன் உரையாடுகிறேன்... நலம் உரையுங்கள்... எம்பெருமானே அகத்தீசா... அன்புடன் அடியவன்...

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  4. நல்ல தகவல் பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete