​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 31 May 2022

சித்தன் அருள் - 1145 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் முருகர் வாக்கு-2 !


ஆனாலும் யான்!! தான்!! சொல்லுங்கள்!!! அகத்தியனே!!!!....என்று கூற... 

பின் பிரம்மனுக்கு அனைத்தும் தெரியும்!!! எவை, எதை, என்று, எப்பொழுது எதை படைத்த மனிதன் இவ்வுலகத்தில் விட்டால் கர்மங்களை அனுபவிக்க முடியும் புண்ணியங்களும் அனுபவிக்க முடியும்...

இதனால் இங்கு அவன்(பிரம்மா) தான் பெரியவன்!!!

ஆனாலும் எந்தனுக்கும் கோபங்கள் வந்துவிட்டது!!! அகத்தியன் மீதே!!! 

அகத்தியா!!! என்னுடன் வந்து... வாதாடுவாய்!!! என்று நினைத்தால்....நீயே!!! இவ்வாறு கூறிவிட்டாயே!!! என்று கூற... 

பின் யானும் பின் மனம் வருந்தினேன்!!

ஆனாலும் அகத்தியன் சொன்ன வார்த்தை..... """அன்பு உலகில் பெரியது!! அவ் அன்பின் மூலம் பிரம்மாவை எதிர்க்கலாம் என்று கூற...

அதனால் சில காலங்கள் எதையென்று கூறாமலே பிரம்மனிடம் யானும் சரி!!! சரி!!! எதையென்று கூட... ஆனாலும் எந்தனுக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டான். அகத்தியன்.

முருகா!!!! எதைக்கேட்டாலும் சரி!!! என்றுதான் சொல்ல வேண்டும்!! கோபங்கள் வரக்கூடாது என்று கூட.

அதனால் பிரம்மாவும் அனைத்தும் கேள்விகளை பல பல வழிகளிலும் கேட்டான்!!! அவை அனைத்திற்கும் சரி!!! சரி!!!! சரி!!!  என்றுதான் சொல்லி விட்டேன்.

அப்போதிருந்து பிரம்மாவும்... முருகா!!!!இவையறிந்து கூட எதையறிந்து கூட உன்னால் நிச்சயம் முடியும்.!! நல் முறையாகவே!!!! உன் பக்தர்கள் என்னிடத்தில் வந்தார்கள்.. எதையன்றி கூற... அதனால் நீயும் மாற்றுவாய் விதியை என்று கூட.!!!

ஆனாலும் அகத்தியனோ!!! இவையன்றி கூற சரியாக அனைத்தும் செய்துவிட்டு பின் ஏதும் தெரியாமல் நின்றுவிட்டான்!!!!

இதுதான் உண்மையான பக்திக்கு காரணம்!!! இதையன்றி கூற இதனால் இத்தலத்தில் எவையெல்லாம் என்று கூறும் அளவிற்கும் கூட... ஆனாலும் மக்கள் வந்து மக்கள் வந்து  எதையென்று ஓர் ஓர் பிறவியிலும் தரிசித்து!!! தரிசித்து!! நினைத்த அளவிற்கும் கூட ஆனால் மக்கள் இவ் தேசத்தில் அகத்தியனே அனைவரையும் காப்பாற்றினான் என்பதுதான் நிச்சயமான உண்மை!!

உண்மை!!!! அதனால் பின் பல மனிதர்கள் அன்பைக் காட்டினார்... அகத்தியன் மீதே!!! அகத்தியன் மீதே!!!! 

அகத்தியா!!!!  எதையறிந்து கூட எங்கள் தேசத்திலே(கேரளா) இருந்து விடு!!!! என்று கூற...

ஆங்காங்கே இருந்து விடு என்று கூட!!!!

ஆனாலும் அகத்தியனோ!!! யான்... அங்குமிங்குமாக சென்று கொண்டே தான் இருக்கின்றேன் உலகத்திற்கு..... ஆனாலும் இவை அறிந்து கூட ஒரே இடத்தில் இருக்க முடியாது..

ஆனாலும் நிச்சயமாய் ஒரு வருடம் ஒரு வருடத்திலாவது நீங்கள் நிச்சயம் வந்திட்டுச் செல்ல வேண்டும்...என்று கூற... 

அதனால் மக்களோ!!! அழுதுகொண்டிருந்தார்கள்.இவ்வாறு என்பதையும் கூட... அனைவரையும் காத்து விட்டு இப்படி செல்கின்றானே!! அகத்தியன்....என்று கூட.. 

அதனால் யானும் முறையிட்டேன் !!!

எதை என்று....அகத்தியா!!!!

உன் மீது இவ்வளவு பாசங்கள்!!!! காட்டுகின்றார்களே!!!.... நீ எதற்காக ?அங்கும் இங்கும் அலைகின்றாய்???? அதனால் இங்கே இருந்து விடு என்று கூற.....

ஆனாலும் அகத்தியன் முருகா!!!!! நீயும் இருந்து விடலாமே!!!!!!!!என்று கூற... ஆனாலும் சரி!!!

நாம் ஒன்று சேர்ந்து இங்கு இருந்து விடலாமே என்று கூற... அகத்தியன் சொன்னதற்கேற்ப... யாரும் இங்கு உணரமுடியாது என்பேன்.

யானா!!!????  அகத்தியனா!!!??.... என்று கூட.... 

இப்பொழுது கூட நீங்கள் அகத்தியனே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்...

ஆனாலும் இவையன்றி கூட பின் யானும் இங்கே தான் இருக்கின்றேன்!!!!

அதனால்

"""""முருகன்!!!! அகத்தியன்"!!!
இதை யாரும் அதிக அளவில் உணரமுடியாது !!!!! தெரிந்தவருக்குத்தான்... உணர முடியும்.

ஆனாலும் சரி என்று சொல்லிவிட்டு என்றுகூட அகத்தியன் இங்கிருந்து இன்னும் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் கூட நிச்சயமாய் அங்கு இருக்கும் மக்களுக்கும் தரிசனம் தந்து கொண்டேதான் இருக்கிறான்...

ஆனால் மக்களோ அதை மறந்துவிட்டனர்.... இதனால்தான் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது.... ஆனாலும் அழிவுகள் வரும் என்பேன்.

ஆனாலும் அகத்தியர் நிச்சயமாய் விடமாட்டான் பார்த்துக்கொள்வான்... எவையன்றி கூற... இதை இதை என்று கூறும் அளவிற்கு சிறிது நேரத்திலே சிறிது காலத்திலே எதையன்றி கூற பின் சபரிநாதனுக்கும் (ஐயப்பன்) கோபங்கள் மிஞ்சிவிட்டது..... நிச்சயம் அழிக்கப் போகின்றேன்... நிச்சயம் இத் தேசத்தை(கேரளா) அழிக்க போகின்றேன்... என்று கூறுகையில்....அகத்தியனும் பின் மிஞ்சிய அளவிற்கு போய் சென்று....

சபரிநாதனே!!!!! உன் கோபங்கள்...எதையென்று கூற மக்களை அழிக்கப்போகும்!!! அதனால் எதை என்று உணராமலே கோபங்கள் வேண்டாம்!!!!

அன்பை காட்டு!!!

அனைவருக்கும் உன் தரிசனம் கொடு!!!!

எதையன்றி கூற உன் மக்கள்.... எதையென்று கூற பல மக்கள் உன்னை நம்பித்தான் கொண்டிருக்கின்றார்கள்... என்று கூற... எதையென்று கூற பின் நிச்சயம் அழித்திருப்பான்.... சபரிநாதன்!!.

ஆனாலும் இதற்கு காரணம் அகத்தியனே சென்று வேண்டாம்!!! ஐயனே.... இவையன்றி கூற இனிமேல் மக்களை காப்பாற்று!!!!!

கலியுகத்தில் தானாகவே மனிதன் தன் கர்மத்தில் ஈடுபட்டு அழிந்து கொண்டுதான் இருக்கிறான் அதனால் நீ ஒன்றும் செய்ய கூடாது..

ஆனால் உன் சுயரூபத்தைக் காட்டு.... உணர்ந்து கொள்வார்கள் என்று அகத்தியன் தான் சொன்னான்!!!!

அதனால் சபரி நாதனும் விட்டுவிட்டான்!!!!

ஆனால் அழியக்கூடியது இத் தேசம்!!! ஆனாலும் எதையென்று கூற அகத்தியனே எவையென்று கூற மீட்டு விட்டான்..... அதனால் இவ்வுலகத்தை நிச்சயம் அகத்தியன் காப்பான்!!! காப்பான்!!!!

எதை என்று கூறுவது??? அதனால் தான் அகத்தியனை யான் எவை என்று  கூற அகத்தியன் வருவதற்கு முன்பே யான் முந்திக் கொண்டேன்.

அகத்தியனை பற்றி சொல்வதற்கு!!!

ஏனென்றால் அகத்தியனுக்கு புகழ் என்று ஒன்று.... ஒன்றுமே...பின் எப்போதுமே அவந்தனுக்கு பிடிக்காத ஒன்று ....எதை  ஆனாலும் உணர்ந்து உணர்ந்து பல சித்தர்களும் இவர்களைப்பற்றி எவ்வாறு??? உரைப்பது என்பதைக்கூட.... விதியையும் மாற்றி வைப்பான் அகத்தியன்.

ஆனாலும் அவ் விதிக்கு சம்பந்தமான வழிகளையும் காட்டி அவன் எதையென்று கூற அகத்தியன் பிரம்மாவிடம் அகத்தியா இதையன்றி கூற எவையென்றும் இன்னும் பலப் பல அதிசயங்களை நிகழ்த்தும் இத்தலங்கள் உண்டு உண்டு.

இதனால் இங்கு வழிபட்டவர்கள் பலர்!!! பலர்!!!.பலர்!!! பலர்!!! யானும் மறைமுகமாக இங்கு வந்து வழிபட்டு செல்வேன் .

என்னையும் உணர்ந்திருப்பீர்களா??? நீங்கள்!!!! 

நிச்சயம் உணர்வீர்கள் வரும் காலங்களில்!!!!!

இங்கே யான் தங்கிச்செல்வேன்!!! 

ஆனாலும் இவையன்றி கூற....எந்தனுக்கும் உண்டு ஓர் மலை!!!!....(எருத்தாவூர் மலை) அதனைத்தான் அகத்தியனும் அங்கே வந்து என்னிடம் உரையாடி கொண்டுதான் இருக்கின்றான் இப்பொழுதும் கூட .

ஆனாலும்..அதிவிரைவில் இவை இவை என்று கூற பின் அடிக்கடி பொதிகை தன்னில்... யான் சென்று விடுகிறேன்....சென்றுவிடுகிறேன் என்றெல்லாம் சென்று விடுவான். 

ஆனாலும் மக்களைப் பார்த்து இப்படி கர்மா உலகத்தில் பிறந்து விட்டார்களே!!!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றதே!!! 
என்று எண்ணி.... மக்களை பாதுகாத்து தான் கொண்டிருக்கின்றான். இரவு பகலுமாக.....

ஆனால் உண்மையில் மக்கள் நிச்சயமாய் உணரமாட்டார்கள் என்பது திண்ணமான!!! திண்ணமான உண்மை!!! யானே!!! சொல்கின்றேன்.

என்னிடத்திலே வருபவர்கள் எதை எதையோ நினைத்துத்தான் வருகிறார்கள்!!!!

தன் தொழில் சிறக்குமா!??

தன் பிள்ளைகள் நலமாக இருக்குமா!???

எவையென்று கூற தான் வாழ வேண்டுமே என்று எண்ணி!!அவை எல்லாம் கேட்டு விட்டால் நிச்சயம்.... ஆகாது என்பேன்!!!!

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும்.... என்று நீ நினைத்தால் நிச்சயம் உந்தனுக்கு அள்ளியும்... கொடுப்பேன்!!!

ஆனால் ஒருவர் கூட நிச்சயம் அவைதன் உணரமாட்டார்கள்!!!

அனைவரும் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் மற்றவருக்கு என்ன செய்தீர்களோ அவை தான் உங்களுக்கு நிச்சயமாய் வரும் என்பேன். இவைதான் கட்டளை!!!! இறைவனுடைய கட்டளை!!!!

பிரம்மாவின் கட்டளை!!!!

அதனால் பிரம்மா சரியாகவே கணித்து இங்கு அனுப்புகின்றான். அதுதான் இங்கு நடக்கப் போகின்றது... அதை மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஆனால் நிச்சயம் நடக்கும் அகத்தியன் மனது வைத்தால்!!!!!!!!

விதியை மாற்றும் தகுதி அகத்தியனுக்கு மட்டுமே உண்டு!!! சொல்லிவிட்டேன்

ஆனாலும் இவையன்றி கூற அகத்தியனை வணங்க!!! வணங்க!!! சில சில கஷ்டங்கள் ஏற்படும்.

ஆனாலும் அகத்தியன் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக தான் இருப்பான்.

ஏனென்றால்?? கர்மா!! கழிய வேண்டும்!!!!

ஆனாலும் கைவிட மாட்டான்!!!!

அனைத்தும் கொடுப்பான்!!!!

இதனால் எவை என்று கூற சில சில வழிகளிலும் இங்கு நிச்சயமாய்... எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து உணர்ந்து  வருபவர்களுக்கு... நிச்சயம் அகத்தியன் விதியை மாற்றுவான்..... இவ்வளவு தான் உண்மை.

பல பேர்களுக்கும் விதியை மாற்றி அமைத்து இருக்கின்றான்.

ஆனால் அகத்தியனை நம்பி விட்டால் எவ்வாறு உண்மை நிலை புரிந்து எங்கு அழைத்துச் செல்ல வேண்டும்???

இவந்தனை எங்கெல்லாம் திரிய வைக்க வேண்டும்??? என்பதைக் கூட சரியாக கணித்து அங்கெல்லாம் பின் செல்ல வைத்து கர்மாக்களை சுத்தமாக அழித்து விடுவான்!!!!

இதனால் அனைத்து தெய்வங்களின் பரிபூரண அருளை பெற்று விடுவான்.

இவையன்றி கூற இவ்வுலகத்தில் ஒருவனுக்கு மட்டுமே அனைத்து தெய்வங்களின் தரிசனம் கூட கிடைத்தது.

ஒன்று ஒன்றே ஒன்றை சொல்கின்றேன்.... பின் தேவர்களும் எவை??? (தேவ) ராணிகளும் பன்மடங்கு அனைத்து தெய்வங்களும் வந்து பின் இவ்வளவா??? என்று கூட............

அவைதன் """"அரிச்சந்திரனுக்கே!!! உரியது!!!!!

ஆனாலும் அரிச்சந்திரனும் அகத்தியன் பாதையைத்தான் பின்பற்றினான் என்பதைக்கூட... யாருக்கும் தெரிவதில்லை.

ஆனாலும் உண்மைகள் வரும் காலங்களில் இன்னும் தெரிய வைப்பார்கள். அகத்தியனைப் பற்றி!!!!

அகத்தியன் இவ்வுலகத்திற்கு செய்த நன்மைகள் ஏராளம்!!!! ஏராளம்!!!! என்பேன்!.

ஆனாலும் அவ் முனிவனை அனைவரும் வரும் காலங்களில் மறந்தும் விட்டனர்....எவையென்று கூற.... முனிவர்கள் என்றால் யார்?? எவர்?? எவரெவர்??? என்று கூட... பின் திட்டியும் தீர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்..... இவர்கள் எல்லாம் உண்மையா என்று கூட...

ஆனால் உணர வைப்பார்கள் வரும் காலங்களில்!!!! தன் மக்களுக்கு எவை என்று கூட!!!!

ஆனாலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறான் அகத்தியன்.

தன்னை நம்பியவருக்கு கெடுதல் செய்யக்கூடாதே என்று எண்ணி!!! கர்மங்கள் எப்படி போக்கவேண்டும்??? என்று கூட...

அதனால் இத்தலம் ஓர் சிறப்பு வாய்ந்ததாகும்!!!! 

நம்பி வந்து விட்டால் யானும் செய்வேன்!!!! அகத்தியனும் செய்வான்!!!!

எவையென்று கூற.... யாங்கள் சேர்ந்து பிரம்மாவிடமே முறையிடுவோம் சொல்லிவிட்டேன்!!!!

அகத்தியன் வேறல்ல!!!! யான் வேறல்ல!!!!!!.......இங்கு!!!!! 

அதனால் யாரும் எவை என்று உணரவும் மாட்டார்கள்!!!!அதிவிரைவிலே!!!!! 

புதிதாக வருவோர் இது அகத்தியனா?????!!!!!! இல்லை முருகனா!!!???? என்று கூட..... மனதில் தோன்றும் என்பேன்.

எளிதில் இயலாது என்பேன்.

காரியங்கள் இன்னும் நடக்கவுள்ளது. பல மனிதர்களுக்கும் இவை என்று கூற கலியுகத்தில் உண்மையான பக்திகள் பின் குறைந்து கொண்டே போகும்.

அதனால் நிச்சயம் தன் பக்தர்களை  காப்பதற்கே அகத்தியன் திரிந்து கொண்டிருக்கின்றான்.

கர்மாக்கள் அழித்துக்கொண்டே எவை எதனை உணர்வின் மூலம் என்பதைக்கூட தன் மனிதனை இவ்வாறு நடத்தினால்!!! அவன் கர்மா நலமாகிவிடும்.... நலமாகிவிட்டு மோட்ச கதிக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூட...

அதனால் அகத்தியனை நம்பியவனுக்கு... நிச்சயம் கஷ்டங்கள் வரும்  !!

மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் கிழவி இருக்காது இதுதான் உண்மை.

ஆனால் அகத்தியன் நிச்சயம் அனைத்தும் மாற்றி விடுவான் மாற்றி விட்டாலும் பிறவிகள் தோறும்.. பின் கடந்து கடந்து செல்ல வேண்டும்.

அதனால்தான் பிறவிக் கடலைக் கடக்க பின் அகத்தியன் எளிதாக உதவுவான். மற்றவர் யாரும் உதவ மாட்டார்கள் சொல்லிவிட்டேன்.

இதனை நன்கு உணர்ந்து மக்களே திருந்தி கொள்ளுங்கள்.

ஏதாவது  உயிரினத்திற்காவது அனுதினமும் உணவு கொடுத்து வாருங்கள்.

அப்பொழுதுதான் பின் அகத்தியனும் பிரம்மாவிடம் சென்று முறையிடுவான்.

இப்படி இவன் புண்ணியங்கள் செய்திருக்கின்றான்!!!! இவன் தலைவிதியை மாற்று என்று கூட....

அதனால் சொல்கின்றேன் ஏதும் செய்யவில்லை என்றால்???... அகத்தியன் எப்படி? உங்களை பற்றி சொல்ல முடியும்???

தெரிந்து கொள்ளுங்கள்.

அதனால் புண்ணியம் செய்ய தொடங்குங்கள்!!!

நிச்சயமாய் வாழ்வில் ஒளி வீசும் என்பேன். 

நிச்சயம் அகத்தியனே பிரம்மாவிடம் சென்று... ஆனாலும் யான் ஒன்று சொன்னேன் முன்னே!!!

நிச்சயம் விதியினை மாற்ற இயலும் அகத்தியனால்!!!! ஆனாலும் எவையென்று கூற பிரம்மாவிற்கு எதிராக செயல்பட மாட்டான்.

அதனால் நிச்சயம் அனைத்தும் தெரிந்த அகத்தியனே பிரம்மாவிடம் சென்று முறையிடுவது பிரம்மாவிற்கே அதிசயம் தான்!!!! தெரிந்து கொள்ளுங்கள். 

அதனால் புண்ணியம் செய்!!!! புண்ணியம் செய்!!!!

இவையென்று கூற கஷ்ட காலங்களிலும்  அப் புண்ணியத்தை நிச்சயம் பிரம்மாவிடம் அகத்தியன் சொல்வான்!! சொல்வான்!!

இதைத்தான் மீண்டும் மீண்டும் உரைப்பேன்!!!

இன்னும் பல பல அதிசயங்கள் உண்டு அகத்தியன் எவ்வாறு செய்வது என்று கூற...

அதனால் இத்திருத்தலம் பல மனிதர்களை உருவாக்கியது!!!
பல மனிதர்களை காப்பாற்றியது!!!! தஞ்சம் அடைந்தார் எவை என்று கூற....

அதனால் இதில் நிச்சயமாகவே உயிருள்ளவன் ஆகவே இருக்கின்றான் அகத்தியன்.

அதை ஒரு சிலருக்கே உணர வைப்பான்!!! உணர வைப்பான்!!!

இன்னும் மாற்றங்கள் பல பல உண்டு இவ்வுலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் இன்னும் வரும் காலங்களில் சித்தர்கள் சொல்லிக்கொண்டே போவார்கள் என்பேன். போவார்கள் என்பேன். 

கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகள் அனைவருக்கும்!!!!!

ஆனாலும் ஒன்றை புரிந்ததா??!!!.... இன்றும் எவையன்றி கூற பூஜைகள் செய்யும் போது அகத்தியன் வந்தே!! நின்றான்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறையாகவே திருமணம் ஆகவில்லையே என்று எண்ணி ஏங்கி, இவை இதைத்தன் பின் தன் தொழில் சிறக்க வில்லையே என்று சிலர் எண்ணி!!!.... ஆனாலும் அனைத்தும் மாயையே என்று அகத்தியன் உணர்ந்து விட்டான். அதை யானும் தெரிந்துகொண்டேன்.

அதனால் அகத்தியன் நேரிலே வந்தான் என்பது மெய்!!!!

அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து விட்டான்... 

அருளாசிகள்!! அருளாசிகள்!!

இதனால் பக்தியை காட்டுங்கள்!!!

அன்பை செலுத்துங்கள் அன்பை செலுத்தினாலே போதுமானது மறைமுகமாகவே செய்வான் அகத்தியன் இன்னும் வாக்குகள் பல சித்தர்கள் செப்புவார்கள்!!!

நன்றே!!!! நன்மை!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

3 comments:

  1. கேரள பழனி எருத்தாவூர் பாலசுப்பிரமணிய சுவாமி :-

    அகத்தியர் இம்மலையில் முருகப்பெருமானை நினைந்து தவமியற்றினார் என்றும் அவர் வழிபட்ட இடமே இன்று முருகன் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    இதேபோல், தாரகாசுரனால் அவதிப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைக் காத்தருள வேண்டுமென முருகப்பெருமானிடம் முறையிட்டனர்.

    அதற்கு செவிசாய்த்த முருகன் அசுரனை வதம் செய்தார். அந்த மகிழ்ச்சியினால், தேவர்களும், முனிவர்களும் இறைவனுக்கு இம்மலையில் கோயில் எழுப்பி விழா கொண்டாடினர் என்றும் கூறப்படுகின்றது.





    தரிசன நேரம்:

    தினமும் காலை 05.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி,

    மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை

    சுவாமி தரிசனம் செய்யலாம்.

    விசாகம், சஷ்டி மற்றும், வெள்ளிக்கிழமைகளில்,

    பிற்பகல் 1.00 மணிவரை சுவாமி தரிசனம், செய்யலாம்.

    அமைவிடம்:

    கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில், பாலராமபுரம் ஜங்சனில் இறங்கி, காட்டகடா செல்லும் சாலையில் இரண்டு கி.மீ.தொலைவு சென்றதும் மலைப்பாதை தொடங்குகிறது. மற்றொரு பழைய வழி, பாலராமபுரம் முன்பாக இரண்டு கி.மீ.முன்பாக முடவூர் பாலாவில் இறங்கி மலையேற வேண்டும். ஆனால், காட்டகடா பாதையே மலையேற எளிதானதாகும்.

    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் என்று அத்தனை தெய்வ ரகசியத்தை போட்டு உடைத்து விட்டு இனி என்ன சொல்ல போறீங்க. சித்திரை மாதம் சித்திரகுப்தர் வழிபாடு செய்து உங்க தலையெழுத்தை நீங்களே மாற்றி ஏழுதுங்கள் என்ற மிகப் பெரிய தெய்வ ரகசியத்தை சொன்னீர்களே ... இது ஒன்றே போதுமே அகத்தியரை சரணடைந்தால் விதி மாறும் என்பதற்கு. பசு வதையும் நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் அகத்தியரே. . இந்த கோரிக்கையை அனைத்து பக்தர்கள் சார்பாக உங்க முன்பு வைக்கிறேன் அகத்தியரே....பசு வதை முழுவதும் தடுத்து நிறுத்த நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அகத்தியரே..இதை நாடியில் கேட்டு பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. நீங்கள் மற்றவருக்கு என்ன செய்தீர்களோ அவை தான் உங்களுக்கு நிச்சயமாய் வரும் என்பேன். இவைதான் கட்டளை!!!! இறைவனுடைய கட்டளை!!!!

    அன்பை செலுத்துங்கள் அன்பை செலுத்தினாலே போதுமானது

    ReplyDelete