​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 23 May 2022

சித்தன் அருள் - 1140 - குருநாதர் சுட்டிக்காட்டிய சில வழிமுறைகள் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எத்தனையோ பிரச்சினைகளுக்கு சிறந்த வழியை காட்டி, அதை தீர்த்து வைப்பதில் நம் குருநாதருக்கு ஈடு இணை யாரும் இல்லை. நமக்கு, நம் வினைகளின் படி, இறைவன் பல கர்மாக்களை அனுபவித்தே ஆகவேண்டும் என விதிக்கும் பொழுது, பல நேரங்களில், குருநாதரிடம் வேண்டிக் கொண்ட பொழுது, மிக எளிய முறையில், பாரத்தை தாங்குகிற அளவுக்கு மாற்றிக் கொடுத்து, அதை அனுபவிக்க செய்து விடுவார். நமக்கு கர்மாவும் கழிந்து போகும், அதன் மூலம் பின் வரும் காலங்களில் அதே சூழ்நிலை வரும் பொழுது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற சிறந்த ஒரு அறிவும் ஏற்படும்.

"பெயர் சொல்லா மருந்தை" வாங்கி பூசை அறையில் விளக்கில் உள்ள எண்ணெயில் முக்கி, பின் அதை தீபத்தில் காட்டி, அதிலிருந்து வெளிவரும் எண்ணையை, இரு புருவம், புருவ மத்தி, உச்சந்தலை, தலையின் பின் பக்கம் என குறைந்தது மூன்று இடங்களில் தினமும் தடவி வர, அது அனைத்து தோஷங்களுக்கும் எதிரான ஒரு நல்ல கவசமாக அமையும். அனைத்து விஷயங்களிலும் வெற்றியை தரும். ஒரு சிறிய துண்டு மருந்தை எடுத்து, காசு வைக்கும் பெட்டியில் வைத்திட, லட்சுமி கடாக்ஷத்தை எளிதாக பெற்றுவிடலாம் என்பது அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு.

வீட்டில், வடக்கு நோக்கிய வாசல் இருந்தால், அது "வைகுண்ட வாசலுக்கு" சமம். தினமும் ஸ்வர்க வாசலுக்கான மரியாதையை, குறைந்த பட்சம் தூப புகை போட்டு இறைவனிடம், "இறைவா, யார் இந்த வாசலை கடந்து வந்தாலும், சென்றாலும் அவர்கள் வாழ்வு நல்லபடியாக மாறட்டும், அவர்கள் சிரமங்கள் உடனேயே விலகட்டும்" என பிரார்த்திக்க, நம் வாழ்வும், பிறர் வாழ்வும் நல்லபடியாக மாறிவிடுவதை காணலாம், என்பது அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு. அப்படிப்பட்ட இடத்தில் அமர்ந்து த்யானம் செய்தாலோ, பிறருக்காக ஒரு நல்லதை பிரார்த்தனை செய்தாலோ, உடனடியாக நல்லது நடக்கும்.

சாபங்கள் பலவிதம். சில சாபங்களுக்கு நிவர்த்தியே கிடையாது. இருப்பினும், எந்த விதமான சாபத்திற்கும் ஒரு சித்தனால் பரிகாரம் கூற முடியும். இறைவனே, ஒவ்வொரு மனிதனுடைய சாப நிவர்த்திக்கும் ஒரு எளிய வழியை அளித்துள்ளார். ஆம்! ஒரு மனிதனின் மரணத்தின் பொழுது, செய்யப்படுகிற "வாய்க்கு அரிசி" நிகழ்ச்சி தான் அது. உடலை நீங்கிய ஆத்மா, உயிருடன் இருக்கும் மனிதன் எழுதி வாங்கி வந்த பல சாபங்களை/தோஷங்களை சுமந்து செல்ல விதிக்கப்படும். அந்த ஆத்மா இருந்த உடல் தீக்கிரையாகும் முன் வீட்டிலோ/மயானத்திலோ வைத்து நடத்தப்படும் "வாய்க்கரிசி" போடும் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு அவரவர் பாரத்தை இறக்கிக் கொள்ளலாம், என்பது சித்தன் வாக்கு. [இந்த ஜென்மத்தில் நேர்மையாக வாழ்ந்தால்/சித்தர் வழியில் நடந்தால், ஒருவனின் கர்மாவிலுள்ள "குரு சாபத்துக்கு" கூட இது மிக சிறந்த பரிகாரம்.]

அதேபோல், காசியிலிருந்து கங்கா தீர்த்தமும், ராமேஸ்வரத்திலிருந்து ஆழி (கிணறு) தீர்த்தமும் சேகரித்து வீட்டில் பூசை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த யார் மரணமடைந்தாலும், அவர் உடலை குளிப்பாட்ட, அவர் வாயில் சிறிது இந்த தீர்த்தத்தை விடக் கொடுக்கலாம். இதை செய்வதினால், தீர்த்தத்தை கொடுப்பவர், அந்த ஆத்மாவுக்கு நல்வழியை காட்டி, தன் கர்மாவை சுத்தம் செய்து கொள்ளலாம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்

என நல்வாக்கு கூறியும், நல்லது செய்த ஒருவனை, அந்த நல்லதை வாங்கிக் கொண்ட வேறொருவன் ஏமாற்றினால், அந்த நல்லவனுக்கு அகத்தியப்பெருமான் கூறும் அறிவுரை -

"வேறொருவன் என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என, நல்லது செய்கிற பொழுது நீ நினைத்தாய்! சந்தோஷமாக அவனிருந்தான். இன்று உன்னை ஏமாற்றி, அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். ஆகவே, உன் மன எண்ணப்படி இரு நிலைகளிலும் சந்தோஷமே அவனில் பிரதிபலிக்கிறது. என்ன! இரண்டாவது நிலையில், அவன் தான் சேமித்த சிறிதளவு புண்ணியத்தை இவனுக்கு தாரைவார்த்துவிட்டு, இவனின் பாபத்தை அவன் சுமக்கிறான். எம் வழியில் வருகிறவர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அகப்படும் பொழுது, இப்படித்தான் சிந்திக்க வேண்டும். ஒரு சித்தன், ஒரு மனிதனின் கர்மா கழிவிற்காக, "கர்ம பரிபாலனத்தை" "கர்ம பரிவர்த்தனமாக" மாற்றுவதே இப்படித்தான்".

உன் எண்ணப்படி வாழ நினைப்பதை விட, இறைவன் தேடும் ஆத்மாவாக வாழ்ந்துவிடு. அவனே உன்னை தேடி வந்து அமரும் பொழுது, இவ்வுலகில் எதுவும், உனக்கு தேவை என்பதே இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்


3 comments:

  1. ஓம் ஆம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. அகத்தியர் திருவடிகள் போற்றி. பெயர் சொல்லா மருந்து என்றால் நங்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும் ஐயா

    ReplyDelete
  3. Search in Internet. You will find it.

    ReplyDelete