​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 October 2024

சித்தன் அருள் - 1699 - பாகம் 7 - கேள்வி-பதில்!

[ முன் பதிவு - சித்தன் அருள் - 1688 -பாகம் 1 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1693 -பாகம் 3 - கேள்வி-பதில்! 

  முன் பதிவு - சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 5 - கேள்வி-பதில்!

  முன் பதிவு - சித்தன் அருள் - 1696 -பாகம் 6 - கேள்வி-பதில்!]

61. பம்பை உடுக்கை அடித்து சாமி கும்பிடும் போது பெண்கள் சாமி வந்து ஆடுவது அருள் வாக்கு சொல்வது பற்றிய உண்மை தன்மை சித்தர்கள்  வாயிலாக அறிய வேண்டும்?

அப்பனே! இது பற்றி பொருத்தாகத்தான் வேண்டும் அப்பனே!

62. அனைவரும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் ஏதேனும் புதிய பெரிய பொருள் வாங்கினால் அதில் வரும் பிளாஸ்டிக் அனைத்தும் அப்படியே அப்படியே ரோட்டில் வீட்டு செல்கிறார்கள் இதில் சிறிய மற்றும் பெரிய தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கூட மக்கள் ஏளனமாக ரோட்டில் வீசி சென்று விடுகிறார்கள். இதை எவ்வாறு முழுவதுமாக தடுப்பது பிளாஸ்டிக் அனைத்தும் மறுசுழ்சி அல்லது வேறு எதேனும் வழிகள் உள்ளனவா. இதனால் மற்ற ஜீவராசிகள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி வருவது மிக மிக வருத்தமாக உள்ளது. இதை நமது குருநாதர் தக்க வழிகாட்டி அருள் செய்யவேண்டும். பூமித்தாயே முடிந்த அளவு இந்த பிளாஸ்டிக் ல இருந்து காக்க எனது மனம் ஆனது துடிக்கிறது.

அப்பனே! இதை பார்த்தும் தனியாக பைகளில் எடுத்து வைக்கிறான் அவன் புண்ணியவான், இதை கண்டும் ஒன்றும் செய்யாமல் சென்றுவிடுகின்றானே அவன் பாவப்பட்டவன். இவை எல்லாம் எடுத்து ஓரிடத்தில் வைக்கச்சொல், பின்பு பார்ப்போம் அப்பனே. 

அண்ணாமலைக்கு செல்லச்சொல், அங்கு இருப்பதை பொருக்கச்சொல், புண்ணியங்கள், பின்பு உரைக்கின்றேன். இவந்தானுக்கு புண்ணியங்கள், பின்பு ஈசனும், பார்வதியும் ஆசீர்வதித்து விட்டார்கள். இவன்தன் உயர்ந்து நிற்பான். 

63. ரோட்டில் வாகனங்கள் மூலம் அடிபட்டு இறந்து கிடக்கும் ஜீவராசிகளின் உடலை (பூனை, ஒணான், நாய், பறவைகள். மற்ற இது போல) பக்கத்திலேயே மண்ணில் தோண்டி அதன் உடல்களை அடக்கம் செய்யலாமா அவ்வாறு செய்யும் போது என்ன நினைத்து கொண்டு நாம் செய்ய வேண்டும். இதையும் நம் குருநாதர் நம் அறிவுக்கு எட்டும் படி அருள் செய்ய வேண்டும்.

புண்ணிய செயலே. அனைத்தும் இறைவன் படைக்கின்றான், இறைவன் எப்பொழுது எடுக்க நினைக்கின்றான் என்பதே. அதனால், நிச்சயம் செய்ய நன்றே. அனைத்து உயிர்களும், அந்த உயிரும் சாந்தி அடையட்டும், அனைத்தையும் நீயே பார்த்துக் கொள்வாய் என்று. 

64. தற்காலத்தில் மனித ரூபத்தில் வாழும் சித்தர்களை காட்டி அருள வேண்டும்.

நிச்சயம் அறிந்தும் கூட. முதலில் அண்ணாமலையை வலம்வரச்சொல். பின்பு செப்புவேன்.

65. அகத்தியர் அப்பா பாதமே போற்றி லோபா முத்ரா அன்னை பாதமே போற்றி அப்பா இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களின் வாழ்க்கை மது போதையினால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அப்பா அதற்கு ஒரு நிரந்தர தீர்வு கூறுங்கள் அப்பா இதில் என் கணவரும் மதுவுக்கு அடிமையாக உள்ளார் அப்பா ஒரு நல்வழி காட்டுங்கள் அப்பா!

அறிந்தும் கூட, இதற்கு நிரந்திர தீர்வும் உண்டு. இதையே யான் மாற்றுவேன், பொருத்திருந்தால் கூட. (ஒரு முயற்சி செய்து பாருங்கள். வில்வ இலை சாறெடுத்து, அதிகாலையில் மூன்று நாட்கள் அருந்த கொடுத்துப் பாருங்கள்)

அறிவை இறைவன் தந்திருக்கிறான். சாக்கடை என்று தெரிந்தும் அதில்தான் விழுவேன் என்று மனிதன் நினைத்தால் என்ன செய்ய? இங்கே வா, சாக்கடை இருக்கின்றது என்றதும், அறிவுள்ள மனிதன் செல்லுகின்றானே இது யாருடைய தவறு? ஆனாலும், இதை பற்றி கூறினால், சில ஆண்டுகளில் யான் நிச்சயம் மாற்றுவேன்!

66. கருங்காலியின் பயன்பாடு யாது ? தகுந்த கருங்காலி எங்கு கிடைக்கும்?

ஒரு சிறு கம்பை எடுத்து, இறைவா சக்தி தா என்றால், இறைவன் சக்தி தரத்தான் போகின்றான். அப்பனே! நம்பிக்கை இருக்க வேண்டுமப்பா. இதை வைத்து பல நன்மைகள் செய்ய வேண்டும். இதை வைத்துக்கொண்டு மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது என்பேன். உட்கொண்டால், அனைத்தும் வீணப்பா. அப்பனே! கருங்காலி, கரு நாகமப்பா. காப்பதற்கும் தெரியும், அழிப்பதற்கும் தெரியும். 

67. நமது உடலில் உள்ள 7சக்ரம் சரியான முறையில் செயல்படுத்தவது எப்படி.

அப்பனே! இவற்றுக்கெல்லாம், பல ஆலயங்கள் சென்று வரவேண்டும் அப்பனே. ஒரு சிறிய வாகனத்தை இயக்குவதிலிருந்து, இன்னொரு பெரிய வாகனத்தை இயக்க வேண்டும் என்றால், கஷ்டப்பட்டால் தான் முடியும்! மனசாட்ச்சி என்று ஒன்று இருக்கிறதப்பா. முதலில் பல ஆலயங்களுக்கு, குறைந்தது 15 ஆலயங்களுக்கு சென்று வரச் சொல், நிச்சயம் செப்புகின்றேன். 

68. வாசி யோககலைபற்றி செய்வது எப்படி சரியான முறையில் வழிகாட்டுங்கள் ஐயா 

அறிந்தும் கூட, இன்னும் செப்புகின்றேன், பொறுத்து இருந்தால்.

69. வணக்கம் அன்பு குருதேவா (கயிலாய மலை) மீது செல்ல முடியுமா அப்படி செல்வதற்கு நிபந்தனைகள் என்னவென்று கூற வேண்டுகிறேன்.

அறிந்தும் கூட. முதலில் அண்ணாமலைக்கு சென்று கொண்டே இருக்கச்சொல். ஈசன் மனது வைத்தால் கைலாசம் செல்ல முடியும்.

70. அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்... நம் அடியவர்களுக்கு தாங்கள் பல மந்திர உபதேசங்கள் கொடுத்து உள்ளீர்கள்... மந்திரங்களை சத்தமாக வெளியில் நாம செபம் செய்யும் பொழுது மனம் இரட்டை நிலை அடைவதாக தோன்றுகிறது... உள்ளிருந்து இரட்டைகள், எதிர் வினை ஏற்ப்படுகிறது.. மனதின் உள்ளயே மௌனமாக உச்சரிக்கும் போது நன்கு மனம் அடங்குவதாக தோன்றுகிறது... அவ்வாரே செபம் செய்வதால் பலன் உண்டா... அதையே கடைபிடிக்கலாமா....?

அனைத்திற்கும் காரணம் மனம் தான். நல் மனதோடு இறைவா, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கூறச்சொல். மந்திரங்களை அதிகாலை வேளையில் எழுந்து சொன்னால் தான் நிச்சயம் செயல்படும். அதன் பின்னே சொன்னால் லாபமில்லை. சத்தமில்லாமல், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடல் அருகில் இருந்தாலும் மதிப்பு. இன்னும் சொல்லுகின்றேன், சிறிது சிறிதாகத்தான் யான் செப்புவேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment