​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 30 January 2023

சித்தன் அருள் - 1279 - ""அகத்தியரிடம் கேட்க வேண்டிய கேள்வி!""


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறை அருளால், அகத்தியப்பெருமான் திரு.ஜானகிராமன் கைவசம் இருக்கும் நாடியில் வந்து பொது வாக்கு தருகிறார். கடந்த முறை வாய்ப்பு கிடைத்த பொழுது, அடியேன் சேர்த்து வைத்திருந்த கேள்விகள், ஒரு சில அடியவர்கள் அனுப்பி தந்த கேள்விகளை அவரிடம் கேட்டு பதிலை பெற்றோம்.

தற்போது, அகத்தியப் பெருமானிடம், ஏதேனும் ஒரு பொது இடத்தில், விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்கள் பங்கேற்கும் ஒரு பொதுநாடி வாக்கை அருள முடியுமா என்று கேட்டிருக்கிறேன். இதற்கு அனுமதி தருவார் என நினைக்கிறேன். சரியான நேரத்தில் அது உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

இதற்கிடையில், அடியேனுக்கு, அகத்தியரை நாடியில் சந்தித்து கேள்வி தொடுக்கும் ஒரு வாய்ப்பு அமையும் என நினைக்கிறேன். அப்படியாயின், உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுதல்.

உங்கள் மனதில் சேர்த்து வைத்துள்ள, ஆன்மீக, சித்த மார்க்க, இகபர வாழ்க்கை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதை அடியேனுக்கு "agnilingamarunachalam@gmail.com" என்கிற மெயிலுக்கு, "அகத்தியரிடம் கேட்க வேண்டிய கேள்வி" என்று தலைப்பிட்டு தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் கேள்விகளை சேர்த்துவைத்து, வாய்ப்பு கிடைக்கும் பொழுது கேட்டு, அதை சித்தன் அருளில் வெளியிடுகிறேன். தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக உள்ள கேள்விகள் தற்போது வேண்டாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. அருமை ஐயா சூப்பர் ஐயா ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. "தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக உள்ள கேள்விகள் தற்போது வேண்டாம்!" Please understand this!

    ReplyDelete
  5. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    Ayya would like to know about Maruthamalai murugan. Varalaru about temple. Peacock was there when we were small. When we went we took flower garland made by ourselves and went . We forgot to put for horse's foot step which is on the way before reaching the moolasthanam. Peacock was trying to grab the badg whoever holding thay bag. When we reach murugan only we remembered that we forgot to put that garland so only that peacock followed that bag.

    We are not able to go to other temples like thiruchendhur and all. So when we can go to maruthamalai to get murugaperuman dharisanam like ayyan said before about odhimalai odhiyappar dharisanam. As a lady i am not able to go alone to many places which I wish to go. So Please kindly ask agasthiyar ayyan, அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. மகிழ்ச்சி ஐயா...
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி...
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி...

    ReplyDelete
  7. மகிழ்ச்சி ஐயா..
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி...

    ReplyDelete
  8. நெருங்கிய காரியம் கைவல்யம் ஆகவில்லை.
    சிறுவயதில் இருந்தே நம்பகத்தன்மை பெற்றது
    எல்லாமே ஏமாற்றம் அளிக்கிறது.
    சிறு சிறு வெற்றிகள் தனக்கு கிடைக்கவில்லை.
    காரணம் கர்மாவா அல்லது தெய்வ குற்றமா
    அல்லது இதுவே பேராசை என்பதாலா.

    இதை மற்றவர்களுடன் சரிபார்க்க கூடாதா.
    என் எண்ணத்தை அழிப்பதிலும் தோல்விதன்

    இந்த கேள்விக்கு பதில் தாங்கள் கதையாக
    தயவு செய்து சொல்லாதீர்கள்

    ReplyDelete