​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 7 January 2023

சித்தன் அருள் - 1258 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் சாம்ராஜ்யம் பாலராமபுரம்!



18/12/ 2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: அகத்தியரின் சாம்ராஜ்யம் பாலராமபுரம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தியர் திருக்கோயில்.

சிவகாமியுடன் அழகாக நடனமிடும் நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் புசண்டனவன்!!!

அகத்தியனை பற்றி எதைச் சொல்ல???!!!!

ஆனாலும் அகத்தியன் கருணை கொண்டு அனைத்தும் கொடுக்கின்றான்!!! ஆனால் மனிதனோ பின் எதை எதையோ என்று பின் பின் தோன்றாமைகளுக்கும் தோன்றி தோன்றி பின் எவை என்று அழித்துக் கொண்டே வருகின்றான்!!!!

எதனால் எப்படித்தான் எதை என்று அறிய அறிய மக்கள் குலத்தை அதாவது பேணி காப்பது யாங்கள் சித்தர்கள் அதனால் நிச்சயம் எதை என்றுமே தெரியாத மனிதனுக்கு கூட நிச்சயம் சித்தர்கள் யாங்கள் பல வழிகளிலும் கூட உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனால் மனிதன் என்னவோ பின் உதவிகள் சிறிது சிறிது செய்து விட்டால் பின்பு வரும் அதை பக்குவமாக  பயன்படுத்திக் கொண்டு உயர்ந்திட்டு மீண்டும் பின் ஆணவத்தோடு அமர்ந்து விடுகின்றான்!!! மீண்டும் ஈசனை தேடி தேடி அலைகின்றான் !!

அதனால் முதலிலே பின் ஆணவம் வேண்டாம் !!! எதுவும் வேண்டாம்  !!! பின் அமைதியாக உந்தனையே நினைத்துக் கொண்டிருக்கும் மனம் வேண்டும் என்று கேட்டு விட்டாலே போதுமானது!!!

ஆனால் எதையெதையோ நினைத்து நினைத்து வணங்குகின்ற மனிதனுக்கும் புத்தி இல்லை!! அறிவு இல்லை!!!

இதற்கும் உண்டு வழிகள் புத்திகளுக்கும் அழிவுகளுக்கும் உண்டா உண்டா ஆனால் உண்டு என்பதை முழு முயற்சியோடு கற்று உணர்ந்தால் தோல்விகள் இல்லை!!!

அதனால் தான் எதை என்று அறிந்து அறிந்து முதலில் தான் யார்?? என்று எண்ண வேண்டும்!!! தான் தன் தகுதிகளை எண்ண வேண்டும்!!!!
அப்பொழுதுதான் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்று கூட சரியாகவே கணிக்க முடியும்!!!!

இப்படி சரியாக கணித்துவிட்டு வணங்கினால் மட்டுமே வெற்றிகள் உண்டு!!!

ஆனால் எப்படி? இறைவன்  இறைவனை வணங்குவது? என்று மனிதன் இன்னும் தெரிந்திருக்கவில்லை!!! இவ்வாறு தெரியாமல் வணங்குவதால் தான் நிச்சயம் தோல்விகள்!! தோல்விகள்!! பயங்கள் என்றெல்லாம் வந்து கொண்டிருக்கிறது!!

அதனால் யான் எதை என்று யான் சொல்ல????

ஆனாலும் இதை இதை என்று அறிய பின் எப்படியோ பின் மனித குலத்தை காக்க வேண்டும் என்று அகத்தியன் ஏங்கிக் கொண்டிருக்கின்றான்!!!
எப்படியாவது மனிதனை மேல் நோக்கி விட வேண்டும் என்று!!!!

ஆனால் புத்தி கெட்ட மனிதனோ நிச்சயம் உதவிகள் செய்தாலும் கேட்பதில்லை!!! யான் தரித்திர வழியில் தான் செல்வேன்!!! கர்ம வினையை தான் சம்பாதிப்பேன் என்று என்றெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கின்றான்!!!

இவர்களுக்கு சித்தர்கள் என்ன சொன்னாலும் நிச்சயம் விளங்காது!!!! தோல்வியில் தான் முடியும் அதனால் கடைசியில் பார்த்தால் யான் எதற்கு?? சித்தனை வணங்க வேண்டும்??? எதற்காக???
சித்தன் இல்லை!!! சித்தனை வணங்கினால் கஷ்டங்கள் தான் வருகின்றது!!! என்பதை கூட பின் சித்தர்கள் மீது பழியை போடுவது!!! இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்!! இன்னும்
இவ்வாறு தான் நடக்கும்!!

அதனால் புத்தி கெட்ட மனிதனுக்கு யான் என்னென்ன?? சொல்வதென்றே புரியவில்லை!!

புத்தியுள்ள மனிதன் பிழைத்துக் கொள்கின்றான்!!!
புத்தியுள்ள மனிதன் அமைதியாக இருப்பான்!!!
அதாவது மௌனத்தை கடைப்பிடிப்பான்!!!
ஆகட்டும் பார்ப்போம் என்று!!

ஆனால் புத்தி இல்லாத மனிதனோ!! பல பல குறுக்கீடுகளும் பல குறுக்கு கேள்விகளும் கேட்டு கேட்டு தான் அழிவதை விட தன்னையும் அழித்துவிட்டு தன் குடும்பத்தையும் அழித்து விடுவான்!!! இது வாழ்க்கையா?? என்பதை கூட!!....

பின் மனிதனின் நிலைமையை பார்த்தால் காறி துப்புவதைப் போல இருக்கின்றது!! வரும் காலங்களில்!!!

அதனால்தான் அகத்தியனின் பெருமையைப் பற்றி யான் எதை என்று அறிய அறிய பல யுகங்களாக வாழ்ந்து விட்டேன்!! ஆனால் புத்தி கெட்ட மனிதன் இன்னும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான்.

தான் எண்ணியதை சாதித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!!

"" நிச்சயம் முடியாது!!!!!

முடியாது என்பதை கூட எதை என்று அறியாது...........

""'"''முடியாது !!!   என்பதை கூட முடித்து வைக்கும் திறன் அகத்தியனுக்கு மட்டுமே உண்டு!!!!!!

ஆனால் அகத்தியனை எப்படி? வணங்க வேண்டும் என்பதைக் கூட நிச்சயம் மனிதனுக்கு தெரிவதில்லை!!!!!

அதனால்தான் ஒன்றைச் சொல்லுங்கள்!!!!

எதை என்று அறியாது பின் அகத்தியனே!!! அனைத்தும் நீயே!!!!!!!!

நீ ஏதாவது செய் எந்தனுக்கு போதும்!!!!

ஏதாவது பிச்சை இட்டாலும் போதும்... என்று யாராவது வணங்குகிறீர்களா என்றால் நிச்சயம் இல்லை!!!

அதைக் கொடு!! இதை கொடு!! ஆனால் பின் எதை எதை என்று கேட்கின்றதற்கு தகுதிகள் மனிதர்களிடத்தில் இருக்கின்றதா? என்பதை தகுந்த தகுந்த பின் தகுதிகளுடன் தான் கேட்க வேண்டும்!!!!

அதனால் அகத்தியனிடம் என்ன கேட்கின்றார்களென்று யான் பலமுறையும் பார்த்திட்டேன்!!! ஆனாலும் புத்தி கெட்ட மனிதன் கர்மாவையே கேட்டுக் கொண்டிருக்கின்றான் அகத்தியனிடம்!!!!

அப்பொழுது அகத்தியன் என்ன புத்தி கெட்டவனா!!?? இல்லை மனிதன் புத்தி கெட்டவனா!!??

நிச்சயம் மனிதன் தான் புத்தி கெட்டவன் கர்மாவை தான் கேட்டுக் கொண்டிருக்கின்றான்!! அகத்தியனிடம் இதுவரை யான் பார்த்ததில்!!!

ஒன்றைப் பற்றி சொல்கின்றேன்!!! (திரு) மணங்கள் வேண்டும்!! எதை என்று கர்மத்தில் பின் சொத்துக்கள் வேண்டும் பின் இதுவும் கர்மா தான், ஆனாலும் நிச்சயம் சந்தோஷம் வேண்டும் இதுவும் கர்மா தான்!!
எதை எதையோ கேட்டுக்கொண்டு பின் அகத்தியன் தரவில்லையே!!! 

ஏன் ? உந்தனுக்கு என்ன? அகத்தியன் என்ன?? வேலைக்காரனா????

எதையென்று அறிய அறிய கர்மத்தை கொடுத்து விட்டு அகத்தியன் என்று எதை என்று அறிய அதனால் பல மனிதர்களுக்கு எதை என்று அறியாமலே புரிதல் தன்மை இல்லாமலே நடந்து வருகின்றார்கள்!!!!

ஆனாலும் இதைத்தான் சித்தர்கள் யாங்கள் மனித முட்டாள்தனத்தை எதிர்க்கவே வந்திட்டோம்!!! ஆனால் மனிதனின் பின் கர்மா கர்மா என்று அலைந்து திரிந்து தானே சேர்த்துக் கொண்டிருக்கின்றான் கர்மா வினை எப்படிப்பட்டது என்பதை கூட அறியவில்லை ஆனால் கர்மாவினை நிச்சயம் அதாவது பின் ஏதாவது ஒன்றினை அகத்தியனிடம் கேட்டால் அதை உடனே கொடுத்து விட்டால் அகத்தியனுக்கு தெரியும் இது கர்மா என்று!!!
ஆனால் மனிதனுக்கு தெரியாது அதுதான் மனிதனுடைய அதாவது பின் கீழ் தரமான எண்ணங்கள்!!!

அதனால் மேன்மைகளுடைய எண்ணங்களுடன் கேட்டுப்பாருங்கள்!!! நிச்சயம் அகத்தியன் நிச்சயம் கொடுப்பான்!! கருணை கொண்டு!!!

ஆனால் முதலில் இப்பொழுது சொல்கின்றேன் எப்பொழுதும் இதைச் தான் சொல்வேன்!!!!

சித்தர்கள் யாங்கள் முதலில் கர்மத்தைத் தான் நீக்குவோம் !! கர்மத்தைத் தான் நீக்குவோம்!!! 

அதன் பிறகு தான் அனைத்தும் கொடுப்போம்!! என்பதைக் கூட பல வாக்குகளில் யாங்கள் செப்பி விட்டோம்!!!

ஆனால் மனிதனோ எதையென்று அறிய அறிய உடனடியாக சித்தர்கள் வரவேண்டும் என்றால் நிச்சயம் எதை என்று அறிய அறிய நீங்கள் சிறிதளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஆனால் சித்தர்கள் எதை என்று அறியறிய ஆனால் பின் அகத்தியன் வந்து சொல்வான்!!!
எப்படி எல்லாம் புண்ணியங்கள் செய்ய என்று கருணை பாசத்தோடு!!!

ஆனால் யாங்கள் அப்படி இல்லை புத்திகெட்ட மனிதனுக்கு  எதையென்று அறிய அறிய!!!! அறிவுள்ளவனாகவே படைக்கின்றான் ஈசன்!!!

யான் சொன்னேன் ஈசனிடத்தில் முதலிலேயே!!!

ஈசா!!!! மனிதனை படைக்காதே!!! படைக்காதே!!!

ஏனென்றால் மனிதன் பின் படைத்து விட்டால் நீயும் எதை என்று அறிந்து அறிந்து கருணை உள்ளத்தோடு அனைத்தும் கொடுத்து விடுவாய்!!!

ஆனால் யான் தான் சித்தன் !!! எதை என்று அறிந்து அறிந்து யான் தான் இறைவன் !!!

யான் இறைவனிடத்தில்  பேசுவேன் என்றெல்லாம் பொய்கள் கூறி ஏமாற்றி உலக மக்களையே ஏமாற்றுவான்!!!

அதனால் வேண்டாம் என்று சொன்னேன் ஈசனிடம்!!!

ஆனால் ஈசனோ!!! பார்ப்போம்!!! எதை என்று அறிந்து அறிந்து எப்படித்தான் வாழ்க்கை எதை என்று அறிந்து  ஆனால்...... மூலனோ( திருமூலர்) எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் பல பல பாடல்களையும் கூட வாக்குகளில் செப்புவான்!!!

நிச்சயம் யானே சொல்வேன் அதனால் மூலம் பாடல் வடிவில் வந்து நிச்சயம் இன்னும் பாடிட்டு செல்வான் என்பது மெய்!!!

அதனால் மனிதர்களே எதை என்று அறிந்து அறிந்து ஆனால் ஒன்றைச் சொல்கின்றேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனையும் தன்மையற்றது தன்மையற்றது எதற்காக ஓடிவிட வேண்டும் ஓடி ஓடி வந்து ஆனால் ஓடி ஓடி வந்து மனிதா!!! அகத்தியனை கர்மா!! அதாவது கர்மா!! கொடு!! கொடு !! என்று கேட்கின்றாயே மனிதா!! தரித்திர மனிதா!!

இது உந்தனுக்கே நியாயமா??

அதனால் உண்மையான பக்தியை கடைப்பிடித்து அன்போடு ஆனால் ஒரு தாயிடம் நீ எதையும் கேட்கத் தேவையில்லை!!! அன்போடு பின் அரவணைப்போடு அழுதாலே போதுமானது!!!
அத்தாயவள் உணர்ந்து உணர்ந்து அனைத்தும் தெரிந்து தெரிந்து கொடுப்பாள்!!! அது மூலமாகத்தான் வெற்றிகள் கிடைக்குமே தவிர நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டால் அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் நீ மனிதனாக இருக்க மாட்டாய்!!! கர்மத்தை சேர்த்து விட்டு பல நோய்களையும் சேர்த்து விட்டு கடைசியில் யான் புண்ணியங்கள் செய்தேனே எதையென்று உணர்ந்து உணர்ந்து அதைச் செய்தேனே!!!! அனைவருக்கும் பல உதவிகள் செய்தேனே!!! என் நிலைமையை பார் என்று கூட!!....

தரித்திர மனிதா!! யோசித்துக் கொள் சிறிதாயினும்!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து இறைவன் என்ன??? எதை என்று அறிந்து ஆனாலும் பின் கேட்கப்படவில்லை பிறவி!!!
ஆனால் இறப்பதற்கும் கேட்கப்படவில்லை!!! ஆனால் நடுவில் உல்லாசமாக வாழ்வதற்கு என்னென்ன??? கேட்கின்றாய்??

அனைத்தும் நீ கேட்பதெல்லாம் நிச்சயம் கர்மா தான் கேட்கின்றாய் அப்பொழுது என்ன?? அகத்தியன் என்ன?? கொடுத்து விடுவானா?? என்ன???

நிச்சயம் கொடுக்க மாட்டான்!!!!

கர்மா எது?? நல்லது எது?? என்பதை எல்லாம் அகத்தியனுக்கு நிச்சயமாய் தெரியும்!!!

இப்பொழுதும் கூட யான் உரைத்துக் கொண்டிருப்பதை அழகாகவே தன் இல்லாளோடு அகத்தியன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்!!! நலமாகவே!!

அதனால்தான் நிச்சயம் அகத்தியனை யானே நிறுத்தச் சொன்னேன்!!! வாக்குகளை யான் பரப்புகின்றேன் என்று கூட!!

மனிதனுக்கு என்ன இது மேலே எதை என்று அறிய அறிய மனிதன் பின் திருடன் தான் என்பேன் யான்!!

அனைத்தும் அனைத்தும் தர வேண்டும் எண்ணியதை எண்ணியபடியே நடந்திட வேண்டும் என்பதையெல்லாம் பொய்யான கணக்கு!!!

ஆனால் இறைவனிடத்தில் எதை எதை என்று அறிந்து அறிந்து இறைவன் யார் மூலம் எதனை என்று கூட எப்பொழுது என்று தீர்மானிக்கப்பட்டு பின் தேர்ந்தெடுக்க ப்படுகின்றானோ!!!! அவன் தான் முதன்மையான மனிதன்!!!

அதனால் பின் எதை என்று அறிந்து அறிந்து வேடங்கள் போட்டாலும் பின் ஈசனையே அதாவது ஈசன் அருகிலே இருந்தாலும் ஏன் முருகன் அருகிலே இருந்தாலும் யான் அகத்தியன் அருகிலே இருக்கின்றேன் என்று சொன்னாலும் நிச்சயம் அருளாசிகள் கிடைத்து விடுமா?? என்ன??

அதனால்தான் உன் எண்ணத்திற்கு தகுந்தார் போல் எதை என்று அறிய அறிய பின் அனைத்தும் வேண்டாம் எந்தனுக்கு ஏது எதை என்று அறிய பிறவி. பின் பிறக்கும் பொழுதே எதையென்று உணர்ந்து யான் ஒன்றுமே இல்லாதவன் தான் இறக்கும் பொழுதும் ஒன்றுமே இல்லாதவன் தான் ஆனால் நடுவில் தீர்மானிப்பது இறைவன் என்று நினைத்து விட்டால் அவன் தான் உயர்ந்த மனிதன் ஆகின்றான்!!! உயர்ந்த மனிதன் ஆகிவிட்டு அனைத்தும் அவந்தனுக்கு தான் கிட்டுமே தவிர மற்றவை எல்லாம் பின் எதை எதை என்று அறிய அறிய இதனையும் கூட பல வழிகளிலும் கூட பல வாக்குகளிலும் கூட சித்தர்கள் யாங்கள் உரைத்து விட்டோம்!!!

மீண்டும் மீண்டும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது கூட யான் மீண்டும் அதனைத் தான் செப்புவேன் எதை எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பின் பிறப்பு பின் ஒன்றுமில்லை இறப்பும் கூட ஒன்றுமில்லை ஆனால் நடுவில் சேர்த்துக் கொண்டிருக்கின்றாயே மனிதா!!! கர்மத்தை!!! எதை என்று அறிய அறிய அது எப்படி பின் எவை என்று நடுவில் கர்மா சேர்த்துக் கொண்டால் அதனையும் கூட கடைசியில் நீ அனுபவித்தே ஆக வேண்டும்!!!! புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலும் பின் புண்ணியத்தை கூட அனுபவித்தே ஆக வேண்டும்!!!

அதனால் எதை என்று அறிந்து அறிந்து ஆனால் இறைவனிடம் முதலிலே அதாவது இளம் வயதிலேயே பக்திகள் கொண்டு இறைவா உன்னை நம்பி யான் பிறந்து விட்டேன்... இதில் கர்மா எதை என்று அறிய பாவம் புண்ணியம் எந்தனுக்கு தெரியாது!!!

அதனை எல்லாம் நீயே காட்டு!!! என்று சொல்லிவிட்டால் நிச்சயம் சரியான வழியிலே எடுத்துக்கொண்டு நல்விதமாகவே எங்கெங்கு செல்லலாமோ!? அங்கெல்லாம் நிச்சயம் பின் வரவழைப்பான் ஈசன்!!!

இதனால்தான் மனிதன் எதை என்று அறிய அறிய அதனால் இவ்வுலகத்தில் நிச்சயம் சொல்கின்றேன் பிறப்பை பற்றியும் கூட இறப்பை பற்றியும் கூட பின் யான் மீண்டும் பிறக்க வேண்டும் என்று யாராவது இறைவனிடம் கேட்கின்றீர்களா???? இல்லை !!!! யான் அதி வேகமாகவே இறக்க வேண்டும் என்று கூட......

ஆனால் எதை என்று அறிய அறிய பின் கஷ்டங்கள் பட்டுப்பட்டு தான் பின் யான் இறக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள்!!!

மனிதா எதை என்று அறிய அறிய இதன் மூலம் எதனைத் தான் உணர்வது??

அதனால் அனைவரிடத்திலும் எதையென்று ஒன்றை கேட்கின்றேன்!!!!!

நம்மால் முடிந்தது எது???

முடியாதது எது??

என்று கேட்டால்??........

முடிந்ததும் ஒன்றுமில்லை முடியாததும் ஒன்றுமில்லை!!!

ஆனால் இதற்கும் தகுந்த பின் மக்கள் பதிலளிப்பதற்கும் கூட வாய் கூசாமல் இருக்கின்றார்கள்!!! ஆனால் அவர்களுக்கெல்லாம் என்னதான் வருகின்றது என்பதைக் கூட யான் தெரியாமலே சொல்கின்றேன்!!!

ஆனாலும் சித்தர்கள் எதை என்று அறிய அறிய சித்தனிடம் கேட்டால் அனைத்தும் கொடுப்பான்!!!! சித்தரை வணங்கினால் அனைத்தும் கொடுப்பான்!!! என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள்!!!

நிச்சயம் இல்லை!!!!

முதலில் கர்மத்தை தான் எடுப்பார்கள்!!! எதை என்று அதுவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்தால் தான் சித்தர்களையும் நாடி வர முடியும்!!!!!

அப்பொழுது சித்தனை எதை என்று அறிய அறிய சாதாரண ஒருவன் பின் சித்தனை வணங்க முடியுமென்றால் நிச்சயம் வணங்க முடியாது!!!

பல பிறவிகளில் பல பிறப்பெடுத்து பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு ஏதேனும் சிறிது கர்மா இருந்தால் அப்பொழுதுதான் யாங்களே எங்களிடத்தில் அழைத்து அவந்தனுக்கு பக்குவங்கள் படுத்தி இவ்வாறு செய் என்று கூட!!!

அதில் கூட கேடுகெட்ட மனிதன் இருக்கின்றான் வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றான்!!!

சித்தர்கள் என்னதான் செப்புவார்கள் எதை என்று அறிய அறிய சித்தனுக்கே யோசனைகள் சொல்லும் மனிதர்களெல்லாம்!!!! யாங்கள் எப்படி கூறுவது???

காறியும் துப்புவதா??  இல்லை அவன் நாவை அடக்குவதா????

நிச்சயம் அடக்கி விடுவோம்!!! எப்படி அடக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்படி அடக்கி விடுவோம்!!!

சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருவன் எதை என்று அறிய அறிய பின் தேடிக் கொண்டிருக்கின்றான் !!எதை என்று அறிய நிச்சயம் யானே சொல்கின்றேன்!!!

சித்தனின் எதை என்று அறிய அறிய வாழ்க்கை பயணத்தை யாராலும் தொடர முடியாது என்பேன்!!!!

அப்படி பல பைத்தியங்களை யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!!!

சித்தர்கள் எப்படி வருவார்கள்?? எங்கே இருப்பார்கள்?? என்பதையெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து பல கோடி மக்களை எதை என்று உணர்ந்து கடைசியில் பைத்தியனாகி திரிந்து மாண்டு விடுகின்றான்!!!

அதனால் நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து என் வாக்கு பின் ஈசனே ஏற்பான்!!! 

பின் புசுண்டன் முனி என்றால் பின் ஈசன் தலைகுனிவான்!! என்பதை இங்கே ஆணித்தரமாக அகத்தியன் முன்பே சொல்கின்றேன்!!!!

அதனால் யான் பல ஈசனையும்  எதையென்று அறிய அறிய பல பல வழிகளிலும் கூட பல பிரம்மாக்களையும் யான் பார்த்தவன்!!! எதையென்று உணர்ந்து உணர்ந்து ஆனால் இப்பொழுது தரித்திர உலகத்தில் அதாவது கலியுகத்தில் மனிதனை பார்த்தால் பாவம் என்றே தோன்றுகின்றது மனதில்!!!

இதையெல்லாம் சகித்துக் கொண்டும் எதை என்று அறிய அறிய வேண்டும், மீண்டும் மீண்டும் சித்தர்கள் எதை என்று ஆனால் அகத்தியனோ!!! கருணை உள்ளம் கொண்டு!!! எப்படியாவது மனிதனை திருத்திக் கொள்ளலாம் என்று அலைந்து திரிந்து பாடுபட்டு கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் தெரியாமல் தான் முருகனும் வந்து கேட்டான்!!!

அகத்திய மாமுனிவரே!!!!!

காலங்கள் காலங்கள் தோறும் நீ வந்து கொண்டிருக்கின்றாய்!!!

மக்களுக்கு என்னதான் செய்தாய்??  என்று அறிய!!! 

ஆனால் பின் அகத்தியனோ!!!! மக்களைக் கேட்டுப்பார் என்று முருகனிடம் கூறிவிட்டு!!!!! 

ஆனால் முருகனோ!!! அகத்திய மாமுனிவரே!!!! 

கேள்விகளில் சிறந்தவன் எதை என்று பதிலுக்கும் சிறந்தவன் நீ!!!!!!

யான் என்னதான் செய்வது என்று கூட நிச்சயம் முருகன் அமைதியாகி விட்டான்!!!!!

ஆனால் அகத்தியனின் மதிப்பு யாருக்கும் உணராது!! தெரியாது!!!

இதனால் தான் அகத்தியனை வைத்துக்கொண்டு எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!

அகத்தியன் என்ன??? எதை என்று  அறிய நம்தனுக்கு ஏதாவது பின் கஷ்டத்தை கொடுக்க போகின்றானா?? என்ன என்று எண்ணி!!!

ஆனால் அகத்தியன் அடித்தால்!!!! அகத்தியனை பற்றி அனைத்தும் புரிந்துவிடும்!!!!

கடைசியில் அகத்தியன் இல்லை என்றே சொல்லிவிடுவான்!!!

ஒன்றை சொல்கின்றேன் ஒருவன் இருந்தான்!!!! எந்தனுக்கு அகத்தியன் தான் உயிர் !!!

அனைத்தும் அகத்தியன் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தான்!!!

ஆனாலும் அவனுடைய லீலைகள் எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் அகத்தியன் பார்ப்போம் இவந்தனுக்கு அனைத்தும் தான் கொடுப்போம் என்று கொடுத்து விட்டான்!!! உயர்ந்த லாபத்தை அடைந்தான்!!! ஆனால் மீண்டும் தவறான வேலையை செய்தான்!!!

அங்கே அமுக்கினான் இன்னும் ஆனால் எழ முடியவில்லை!!!!

மீண்டும் அகத்தியனை கூட பல சித்தர்களையும் கூட எதை எதை என்று தெரியாமலே வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றான்!!! ஆனால் எழ முடியவில்லை எதை என்று ஒரு முறை பார்ப்போம் இரண்டு முறையும் பார்ப்போம் அப்படி நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்படி திருந்தாவிடில் மனிதனை யாங்களே அழித்து விடுவோம் சொல்லிவிட்டோம்!!!!

சித்தர்கள் சாதாரணமானவர் இல்லை எதை எதை என்று அறிய அறிய அனைத்தும் எங்களுக்கு தெரியும் எதை என்று வித்தைகளும் கூட!!!

பின் எதை எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் வருவோம்... மனிதன் கூடு விட்டு கூடு பாய்வதற்கும் மனிதனை இளமையாக்குவதற்கும் எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் செய்வோம்!!!!

இப்பொழுது கூட கலியுகத்தில் உடல் வேண்டாம் என்றே எதை என்று அறிந்து அறிந்து சுற்றிக் கொண்டிருக்கின்றோம்!!!

ஏனென்றால் உடம்பு என்று ஒன்று வந்து விட்டால் பின் எதை என்று கூற கர்மா வந்து விடும்!!! என்பதைக் கூட ஆணித்தரமாக பல பல உரைகளிலும் கூட யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!! எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து மனிதா!! மனிதா!!!

அகத்தியன் எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்!!!

அகத்தியனின் கருணையை பற்றி!!!!

ஆனாலும் இத்தலத்தில்( பாலராமபுரம்) எதை என்று கூட......" மதுமதி !!  என்ற ஒரு பெண் இருந்தாள்!!

ஆனாலும் இதை என்று அறியாது இங்கேயே அதாவது பின் சிறிது தொலைவிலே அவள் வீடு!!

ஆனாலும் அவள் தனக்கு யாரும் இல்லை ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளையும் கூட பின் ஊர் பெரியது!!! ஆனாலும் அனைவரும் வந்து விட்டனர் ஆனாலும் அவ் மதுமதியானவள் பின் அகத்தியனை வணங்க!!.....

ஆனாலும்!!!!  அனைவரும் சேர்ந்து உந்தனுக்கு தகுதிகள் இல்லை!!! அகத்தியனை வணங்குவதற்கு உந்தனுக்கு தகுதிகள் இல்லை பின் உந்தனுக்கு யார் இருக்கின்றார்கள்???
எதை என்று அறிய அறிய!! நீயும் ஒரு அனாதையே!!! உன் தாய் தந்தை யார்??

அதனால் அகத்தியனை வணங்குவதற்கு உந்தனுக்கு தகுதிகளே இல்லை என்று!!!

பல பல விழாக்களும் கொண்டாடினர்!!!

ஆனால் அகத்தியனுக்கோ கவலை!!! அப்பெண்மணி எதை என்று அறிய அறிய!!! 

என்னையே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆனாலும் இவர்களும் என்னையும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் இவர்களுக்கு மனது எப்படி இருக்கின்றது??? என்னையே வணங்கி இப்படியெல்லாம் மனமா???? என்று வருந்தினான்!!! அகத்தியன்!!!

அப்பொழுது பார்த்தீர்களா!!!!! மனிதனுக்கு எங்கு எதை என்று அறிய அறிய அகத்தியனை வணங்கினாலும் மனிதனுக்கு ஈவு இரக்கம் இல்லை என்பதை கூட!!....

ஆனால் சிலவற்றையே சொல்கின்றேன் சில மனிதர்களுக்கே சொல்கின்றேன்... எதை என்று அறிய இதை பல மனிதர்களும் எடுத்துக் கொள்ளலாம்!! எதையென்றும்!!!

ஆனாலும் அப்பெண்மணியோ!! அகத்திய மாமுனிவரே!!!!!! 

இவ்வளவு பேர் உன்னை நம்பி கொண்டிருக்கின்றார்களே!!!

ஆனால் நீ இவர்கள் அனைவருக்கும் அனைத்தும் செய்கின்றாயே!!! 

யான் என்ன? ஏழை என்று எந்தனுக்கு வர உத்தரவு விட மாட்டாயா என்ன???

யான் வெளியிலேயே நிற்கின்றேனே என்று!!!

ஆனாலும் பின் எதை என்றும் கூட அகத்திய மாமுனிவனும் இதையென்று அறிய அறிய தலை குனிந்தான்!!!

பின் ஏன்?? இவ்வளவு மக்கள் இருக்கின்றார்கள் நம் தனை ஏன்? தான் வணங்க வேண்டும்?

எதை என்று உணர்ந்து உணர்ந்து ஒருவனுக்கு கூட நல் மனசாட்சி இல்லையா?? என்று!!

ஆனாலும் அகத்தியன் சோதித்தான்!!! பின் இவ்வளவு மனிதர்கள் வருகின்றார்களே!!!

அப்பெண்மணியை யாராவது பார்த்து ஏதாவது உதவி செய்கின்றார்களா?? என்று!!

ஆனாலும் நிச்சயம் செய்யவில்லை!!!

ஆனாலும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழுது அழுது அப்பெண்மணி அகத்திய மாமுனிவரே!!... உன்னையே தந்தையாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் யான்!!!

ஆனால் இவ் மனிதர்களோ!!.........

எதை எதை என்று அறியாமலே சில சில வேலைகளும் செய்து பின் பொய்யான பக்திகளை காட்டி உன்னை நோக்கி வருகின்றார்கள்!!.... ஆனால் நீயும் அவர்களுக்கு உதவிகள் செய்கின்றாயே!!!!!!  என்று கூட............... 

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான் அகத்தியன்!!!!

ஆனாலும் இதிலும் கூட லோபாமுத்திரையும் பின் எதை எதை என்று அறிந்து அறிந்து எவை என்று கூட பின் பின் பின் வந்து வந்து எதனை என்று உணர்ந்து உணர்ந்து இவ்வளவு உலகத்திற்கு செய்கின்றீர்களே!!!!!!......

அன்பானவனே!!!...... எதை என்று அறிந்து அப்பெண்மணியின் மனது உந்தனுக்கு புரியவில்லையா ????  என்று கூட.............

பின் அறிந்து அறிந்து தேவியே!!!!!  இரு!!!!! 

அனைத்தும் யான் உணர்ந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!!

ஆனாலும் என்னை பல மக்கள் வந்து வணங்கி செல்கின்றார்கள்!!

ஆனால் ஒருவருக்கு கூட நல்லெண்ணம் இல்லையே!!

அப்பெண்மணியை பார்!!!!

யாராவது உதவிகள் செய்வார்களா?? எதனை என்று அறிய!!!

அதனால் சொல்கின்றேன்!!!!!

அகத்தியனை நம்பியவர்களை எதை என்று அறிய அறிய யார் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஏதும் இல்லாதவனையும் கூட கண் போல் எண்ணி அனைத்தும் கொடுத்தால் தான் கருணை உண்டு!! ஆனால் அகத்திய மாமுனிவனே  எதை எதையென்று அறிந்து அறிந்து இங்கு சென்று உடனடியாக எதை என்று அறிந்து அறிந்து அதனால் பின் இங்கு வடிவமாக( பாலராமபுரம் ஆலய கருவறையில்) இருந்து!!!!!  ஒரு முதியவன் போல் முதியவன் வடிவில் சென்று எதை என்று!!!

அம்மையே!!!!! எதை என்று பின் கையைப் பிடித்து அம்மையே உந்தனுக்கு என்ன தேவை!?? என்று கூற!!

ஆனாலும் வந்தது அகத்தியன் என்று புரியவில்லை அப்பெண்மணிக்கு!!!

எதை என்று உள்ளே வா என்று கூற......

ஆனாலும் இல்லை முனிவரே!!!! எதை என்று அறிய உன்னை முனிவன் என்பதா? இல்லை அகத்தியன் என்பதா? இல்லை பெரியவன் என்பதா?

என்னை இவ்வளவு மக்கள் இருக்கின்றார்கள் ஒருவர் கூட என்னை உள்ளே அழைக்கவில்லை!!!! ஆனால் நீயோ!! வயதானவன் பின் எதை என்று அறிந்து அறிந்து இப்படி என் கையைப் பிடித்து அழைத்து கொண்டிருக்கின்றாயே!!!!

நீ ஒருவன் ஆனால் பல மக்கள் அங்கு இருக்கின்றார்கள் !! யான் உள்ளே வந்தால் அவர்கள் என்னை அடித்து விரட்டி விடுவார்கள் என்று!!!

ஆனால்!!!.......

பார்ப்போம்!!! என்று எதை என்று அறிந்து அறிந்து கையைப் பிடித்து உள்ளே இழுத்து வந்து எதனையென்றும் அறியாது!!!!

ஒரு நொடியில் மக்கள் அனைவரையும் கூட எதை என்று கூற உணர்வில்லாமல் செய்து விட்டான்!!!!!

அதனால் அப் பெண்மணி பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் பின் அகத்தியனுக்கு எதை என்று அறிய செய் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் செய்தாள்( கருவறையில் அகத்தியர் திருமேனிக்கு பூஜை) அகத்தியனுக்கு!!!!

மீண்டும் அங்கே நடந்தது!! எதை என்று அறிய அறிய ஆனாலும் அப் பெண்மணியும் உயர்ந்த ஸ்தானத்தில் வகித்துக் கொண்டிருக்கின்றாள்!!! இவ் தேசத்திலே!!!( இப் பிறவியில்) எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் பல மக்கள் எதை என்று அறிந்து அறிந்து உணர்ந்து உணர்ந்து இப்படி செய்தவர்கள் இங்கேயும் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இன்னும் கதியைக் கூட அடையவில்லை!!! எதை என்று அறிய அறிய இவ்வாறெல்லாம் அகத்தியன் பெருமையைப் பற்றி இன்னும் பல சித்தர்களும் உரைப்பார்கள் என்பது மெய்யே!!!!!!

ஆனாலும் உணர்ந்து உணர்ந்து எப்படி வாழ்வது என்பதை கூட மனிதா!!! இன்னும் புரியவில்லையா???

எதற்கு என்பதை கூட ஆராயவில்லையா?? என்பதற்கு ஆனாலும் மீண்டும் மீண்டும் யான் செப்புவேன்!!!! இதையென்று அறிய அறிய மனிதன் நிலைமை என்பது அதாவது பிறப்பு என்பது கடலில் நீந்துவது போல!!!

அப்பொழுது கடலில் நீந்துவது எவ்வளவு கஷ்டங்கள் என்று கூட இதையும் பலமுறை பல வாக்குகளிலும் கூட செப்பி விட்டார்கள் சித்தர்கள்!!!

ஆனால் சித்தர்கள் எதை என்று அறிய அறிய எங்களை நோக்கி அய்யோ!!! அய்யோ!!!! என்று வந்துவிட்டால் அக் கடலை கடக்க யாங்கள் உதவி செய்வோம்!!!! கரையில் ஏற்றி விடுவோம்!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!! 

ஆனாலும் அக் கரையில் கூட எப்படி வாழ்வது என்பதை கூட யாங்கள் தான் சொல்லித் தர வேண்டும்!!!! அப்பொழுது நீதி நேர்மை பொய் பேசாமை எதை என்று அறிய அறிய இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்று இருந்தால் அக் கரையில் இருந்து கூட மீட்டு மேல் நோக்கி இழுத்துச் செல்வோம்!!!!

""இதுதான் சித்தர்கள்!!! 

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் யான் சொல்கின்றேன் எதை என்று ஈசனிடத்தில் சென்றாலும் ஏன்  எத்திருத்தலத்திற்கு சென்றாலும் கர்மத்தைத் தான் வேண்டிக் கொண்டிருக்கின்றான்!!! ஆனால் எதை என்று கூட பின் கர்மா இல்லாமல் வாழ்க்கை கொடு என்று எவனாவது வேண்டிக் கொள்கின்றானா?? என்றால் நிச்சயம் இல்லை!!!

அதனால் பின் கர்மா பின் கொடுத்து விட வேண்டுமா?? என்ன?? 

எதை என்று அறிய அறிய முற்போக்குகள் பிற்போக்குகள் எதற்கு?? எதை என்று அறிய அறிய அதனால் யான் இன்னும்  மேலே போய் ஒரு படி எதை என்று உணர்ந்து பார்த்தேன் யான் அகத்தியன் என்னிடத்தில் அகத்தியன் பேசுவான் அனைத்தும் தருவான் என்றெல்லாம் பொய் சொல்லி பின் மக்களை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டிருக்கின்றான் இவையெல்லாம் எங்கு தான் செல்கின்றது?? சென்று முடிவடைகின்றது ?? பின் எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் இன்னொருவன் கூட இதன் மேலே அதாவது ஒரு படி சென்று அகத்தியனை யான் உணர்ந்தவன் அகத்தியனும் யானும் நண்பன் என்று பொய் சொல்லி கூசாமல் பின் எதை என்று அறிந்து அறிந்து பின் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!

அவந்தனுக்கும் என்னதான் வருகின்றதோ???

அவை மட்டும் இல்லாமல் எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் இன்னொருவன் அதைவிட ஒருபடி மேலே சென்று எந்தனுக்கு வாசியோகங்கள் தெரியும்!! அகத்தியனே வந்து கற்பித்தான்!!! என்று!!!

காறி துப்புவேன்!!!!! 

எதையென்று அறிந்து அறிந்து வாசியோகம் என்பதை கூட எப்படி என்பதை கூட சித்தர்களுக்கு மட்டுமே தெரியும் அதை உணர்ந்தவன் யாரும் இல்லை!!!!
அதை உணர்ந்து விட்டால் அவன் எதை என்று அறிய தனியாக சென்று விடுவான் அதாவது காட்டிற்கு சென்று விடுவான்!!!!

ஆனால் பொய் மனிதர்கள் வாசி யோகம் என்று எதை எதையோ நினைத்து மனிதனை பின் காம உணர்வுக்கு தூண்டி கொண்டிருக்கின்றான்!!!

இவையெல்லாம் வேலையா??? பித்தலாட்டங்கள்!!! மனிதனின் நிலைமையை பார்த்தால் ஆனால் வரும் காலங்களில் பக்திக்குள் நுழைந்தால் மனிதனை சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று கூட மனிதனுக்கு தெரிய வரும்!!!!

அதனால் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் எத்தனை? காலம் தான் ஏமாற்றுவார்கள்? பார்ப்போம்!!!!

யாங்களும் இருக்கின்றோம்!!!

அழிப்போம்!!!!

எதை என்று அறிய அறிய கர்மத்தை அழித்து அழித்து ஆனாலும் மனிதா!!! பின் எதையென்று உணர்ந்து உணர்ந்து பின் எவையென்று தெரிந்து தெரிந்து கர்மத்தை சேர்த்துக் கொண்டிருப்பவனுக்கு எதையென்று அறியாமலே இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் எதை என்று அறிந்து அறிந்து!!!

ஆனாலும் உணவை கூட போதும் போதும் என்பான் ஆனால் கர்மா பின் போதாது!! என்கின்றானே!!..... மனிதன்!!!!

அப்படி எப்படியெல்லாம் யாங்கள் வந்து மனிதனை திருத்துவது என்று கூட தெரியவில்லை!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் சித்தனுக்கே யோசனைகள் செய்யும் மனிதர்கள் கூட இருக்கின்றான்!!!

யான் ஒரு கேள்வி கேட்கின்றேன்!!!! 

யாராவது சொல்வீர்களா???

எதையென்று இங்கே கொண்டு வந்தீர்கள்?? எதை என்று செல்வதற்கு தகுதியானவைகள் உங்களிடத்தில் இருக்கின்றன????

நடுவில் நீ என்னென்ன செய்யப் போகிறாய்????

மனிதா!!!! இதை யோசித்துக் கொள்!!!!

யான் எதையென்று அறிய அறிய சொல்லட்டுமா?? என்ன??

பித்தலாட்டங்கள் என்னென்ன??!!!!!

ஆனாலும் பின் அகத்தியனை வணங்குபவர்களுக்கும் வரும் காலங்களில் எதை என்று அறிய அறிய பெண்ணுடன் இருக்க வேண்டுமா?? என்ன?? 

ஒவ்வொரு மனிதனும் பெண் சிஷ்யர்களுடன் உடன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!!

கறிக்கும் உதவாத மனிதனே!!! எதை என்று அறிய அறிய ஒருவனுக்கும் உதவாத மனிதனே!!!

பின் கடைசியில் தூசியாக செல்கின்ற மனிதனுக்கு பொய் பித்தலாட்டங்கள் வேடங்களாம்!!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து!!

அதனால்தான் தன் நிலையை முதலில் உணர வேண்டும் தன் நிலையை உணர்ந்து விட்டால் யாங்கள் நிச்சயம் நேரடியாக வருவோம்!!!

பின் ஆசிகள்!! ஆசிகள்!!

மீண்டும் பின் அகத்தியனே வந்து வாக்குகள்  செப்புவான்!! நன்று!! நன்று!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. ஓம் காகபுசுண்டர் முனிவர் போற்றி போற்றி போற்றி துணை 🙏🙏🙏

    ReplyDelete