​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 19 January 2023

சித்தன் அருள் - 1272 - அகத்தியப்பெருமானின் வாக்கு - 15


வணக்கம்!

அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் வலைதளத்தில் ஒரு அகத்தியர் அடியவர் கேள்வி கேட்டிருந்தார்! அதை திரு ஜானகிராமனுக்கு அனுப்பிக் கொடுத்து குருநாதரிடம் வாக்கு வாங்கித் தாருங்கள் என்று கேட்டிருந்தேன். கேள்வியும், அதற்கான குருநாதர் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: "நிறைய பேர்களுக்கு குழந்தைகள்/சந்ததி இல்லை. பொதுவான ஒரு பரிகாரம் அல்லது ஒரு புண்ணியத்தலம் காட்டி அருள முடியுமா?"

குருநாதர்: "ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! நல் அருள்கள். எது என்று அறிய, அறிய! கொடுத்துக் கொண்டேதான் வருகின்றோம் அப்பனே! நலமாக! ஆனாலும் அப்பனே! உடம்பை மனிதன் கெடுத்துக் கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே! ஒன்றரை, அப்பனே, உலகத்தில் எதை எதையோ தின்று, அப்பனே! தன் உடம்பை எல்லாம் பின் பாழாக்குகின்றான் அப்பனே! பின் பல பல யுகங்களிலும் கூட யான் பார்த்துக் கொண்டேதான் வருகின்றேன், அப்பனே!. சரியான சக்தி உணவுகளை உண்டு, மேற்கொண்டு, சரியான கீரை வகைகளை உட்கொண்டான் அப்பனே! அப்படி உட்கொள்ளும் பொழுது, அப்பனே! உடம்பும் கூட தெம்பாக, பலமாக இருக்கும் என்பேன் அப்பனே! அப்பனே! இன்றைய உணவுகள், சரியில்லை அப்பா. அவை மட்டும் அல்லாமல், எதை எதையோ தின்று, அது உடம்பில் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது, எதை என்று அறிய! அறிய, இதனால்.

அப்பனே! பல திருத்தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே! ஆனாலும், அத்திருத்தலங்களுக்கு செல்ல, நிச்சயம் எதையென்று அறிய! அறிய, முதலில் மாமிசத்தை நீக்கி விட வேண்டும் என்பேன் அப்பனே! எவனொருவன் அதிக அளவு மாமிசத்தை உண்ணுகின்றானோ, அப்பனே! அவன்தனுக்கு, அனைத்து உறுப்புகளும், பாழாகிப் போய்விடும் என்பது உண்மை அப்பனே! ஆனால், இப்பொழுது தெரியாது என்பேன் அப்பனே. போகப்போக தெரியும் என்பேன் அப்பனே! அனைத்து உறுப்புகள் என்றால் அப்பனே, அவனுக்கு மட்டுமல்ல, அவனத்துப் பிள்ளைகளையும் கூட ஒருநாள் பாதிக்கும் என்பேன் அப்பனே! இது நிச்சயமான உண்மை. நிச்சயமான உண்மை என்பேன். அப்பனே! அது மட்டும் அல்லாமல், எதை என்று அறிந்து அறிந்து, அப்பனே! இன்பத்தை உலகத்தில் போராட்டம் எதை என்று அறிய! ஏற்கனவே உரைத்தும் விட்டேன் அப்பனே! மேல் லோகம், கீழ் லோகம், இன்னும் எத்தனை லோகம் என்று. ஆனால், புவிதன்னில் எதை என்று அறிந்து, அறிந்து, இப்புவிதன்னில் பிறந்து விட்டாலே கர்மா தானப்பா. அதனால் தான், சித்தர்கள், யாங்கள், இப்புவிதன்னில் வந்து வந்து, பல ஆலயங்களை, பின் எதை என்று அறிந்து அறிந்து, எழுப்பினோம், நலமாகவே. ஆனால், எது என்று அறிய! அறிய! இப்புவிதன்னில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் மனிதனை. அதனால், புண்ணியம் செய்யுங்கள், தான தர்மம் செய்யுங்கள் அப்பனே! எவை எவை என்று அறிந்து அறிந்து, புவி விட்டு வெளியேற்றத்தான் யாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். அதனால் தான் அப்பனே! கவலைகள் இல்லை அப்பனே!, இன்னும் பல மூலிகைகளை பற்றி யாம் சொல்லுகின்றோம்.

ஆனாலும் அப்பனே! இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் ஒன்று, எனவே அதனை விட்டு ஒழியுங்கள். அப்பொழுது தான் எங்களாலும் கூட வாக்குகள் பரப்ப முடியும் என்பேன் அப்பனே!. எதை எதை என்று அறிய! அறிய! இறைவன் பின் நலன்கள் செய்ய துடிக்கின்றான் அப்பனே!  ஆனால் மனிதனோ பேராசை கொண்டு கொன்று அழிப்பதற்கு பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே! கவலைகள் இல்லை அப்பனே! வரும் காலங்களில் நிச்சயம் எதை என்று அறிய! அறிய, இன்னும் இன்னும், பின் கலியுகத்தில் அப்பனே! சில மனிதர்கள், மாந்த்ரீகம், எதை என்று அறிய அறிய, சில தீய சக்திகளிடத்தில் சென்று விடுகிறார்கள், என்பேன் அப்பனே! குழந்தை பாக்கியம் இல்லை, திருமணம் ஆகவில்லை, தொழில்கள் இல்லை, என்று கூட. ஆனால், அவ் தீய சக்திகள் உடம்பில் இருந்து, அனைத்து பலங்களையும் கூட அழித்துவிடும் என்பேன் அப்பனே! அப்பொழுது, எப்படித்தான், எதை என்று அறிய! அறிய! அப்பனே! இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டு இருக்க, அப்பனே! இன்னும் விஷயங்கள் சொல்லப் போகிறேன் அப்பனே! இது எதை என்று அறிய! அறிய, முதல் வகுப்பிலே இருக்கின்றான் மனிதன், என்பேன் அப்பனே! இன்னும் தேறவே இல்லை என்பேன் அப்பனே! வரும் காலங்களில், எப்படி எல்லாம் வாழ வேண்டும் புவி தன்னில் இருந்து கிளம்ப வேண்டும், எப்படி வெற்றியாக்க வேண்டும் கிளம்பும்பொழுது என்பதை எல்லாம் யான் தெரிவித்துக் கொண்டே இருப்பேன் அப்பனே!

நலன்கள்! ஆசிகள்! ஆசிகள்! அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் நமசிவாய வாழ்க

    ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha .🙏🙏🙏

    ReplyDelete