​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 January 2023

சித்தன் அருள் - 1276 - அன்புடன் அகத்தியர் - பாலக்கபரம்பு முருகர் கோவில்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம் குருநாதரின் அகத்தியரின் சாம்ராஜ்யம் என தொன்மையான பெயர் பெற்ற திருவனந்தபுரம் பாலராமபுரத்திலிருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் பாலக்கபரம்பு எனும் சிறிய கிராமம் உள்ளது.

குருநாதர் அகத்தியர் பெருமானின் வழியே!! என் வழி !!! என்று குருநாதரின் வழிப்பாதையை அடியொற்றி வாழ்ந்து வரும் ஒரு அகத்தியர் அடியவர். அவர் குருநாதர் அகத்தியரையும் முருகப்பெருமானையும் இடைவிடாது தொழுது வரும் பக்தர். ஒரு நாள் இந்த அடியவருக்கு பாலக்கபரம்பு செல்ல சூட்சுமமாய் முருகன் உத்தரவிட.... அந்த அடியவரும் முருகன் உத்தரவை அடிபணிந்து அந்த கிராமத்தைப் பற்றி விசாரித்து விட்டு அங்கு சென்றார்.

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமம் சுற்றிலும் வாழை தோட்டமும் வயல்வெளிகளும் நிறைந்த ஒரு அழகிய கிராமம்.

அந்த ஊருக்கு சென்று முருகன் சொன்ன உத்தரவை மேற்கொண்டு அக்கம் பக்கத்தில் விசாரிக்க அழகிய தாமரை குளத்துடன் கூடிய குளத்தின் அருகே ஒரு சிறிய முருகன் ஆலயம். அங்கிருந்தது.

அந்த முருகன் ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. சிறிது பொருளாதாரம் குறைந்த நிலைமை காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த அடியவர் அந்த ஆலயத்திற்கு சென்று பாலாலயம் எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில் இருந்த முருகனையும் விநாயகர் ஐயப்பன் தெய்வங்களையும் தொழுது ஆலய நிர்வாகிகளிடம் பேசிய பொழுது முருகன் சூட்சுமமாக உத்தரவிட்டு அனுப்பிய காரணம் என்னவென்று அந்த அடியவருக்கு புரிந்தது.

அடியவருக்கு ஆலய நிர்வாகிகள் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் திகைத்து நிற்கின்றோம் என்று கூற!!!

அடியவரும் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் முருகன் தன்னுடைய விளையாட்டை துவக்கி விட்டான். அவன் காரணம் இல்லாமல் இங்கே வரவழைக்கவில்லை, என்னுடைய நண்பர் அகத்தியர் ஜீவநாடி வாசிக்கின்றார் அவரிடம் நான் பேசுகின்றேன் குருநாதர் அகத்தியர் ஜீவநாடியில் இதனைப் பற்றி பேசி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை பற்றி கேட்போம் என்று ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு... திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு குருநாதரிடம் உத்தரவு கேட்க!!!!!

குருநாதர் அகத்திய பெருமான்.... அத்தலம் மிகவும் புண்ணிய ஸ்தலம். உண்மையான பக்திக்கு மனமிரங்கி அனைத்து தெய்வங்களும் காட்சியளித்த இடம் அது.

ஆணவமும் பேராசையும் கொண்ட போலி பக்தியை கொண்ட மனிதர்கள் முன்பு உண்மையான பக்தியை காண்பித்த பக்தருக்கு அவருடைய பக்தியை உணர்த்த நீதியையும் நேர்மையையும் நியாயத்தையும் பறைசாற்ற  பிள்ளையோனும்  முருகனும் பார்வதியும்   ஈசனும் ஐயப்பனும் காட்சியளித்த ஸ்தலம்... அங்கு சென்று சுவடி வாசிக்க உத்தரவிட்டார் அகத்தியப் பெருமான்!!!

அடியவரும் மிகவும் மகிழ்ந்து போனார் இவ்வளவு சீக்கிரத்தில் குருநாதர் உத்தரவு கொடுத்து நேரடியாகவே வருகின்றார் என்று. திரு ஜானகிராமன் அய்யாவும் வந்து சேர அடியவரும் ஜானகிராமன் ஐயாவும் அந்த கிராமத்திற்கு சென்றனர்.

ஆலய நிர்வாகிகள் தக்க மரியாதை செய்து ஆலயத்திற்கு அழைத்துச் சென்று ஆலயத்தின் நிலைமைகளைப் பற்றி விளக்கினர். அந்த கிராமவாசிகளுக்கும் ஆலய நிர்வாகிகளுக்கும் அகத்தியர் ஜீவநாடி என்பதனை பற்றி எதுவுமே தெரியாது. அந்த அகத்திய அடியவர் குருநாதர் அகத்திய பெருமானை பற்றியும் ஜீவநாடி என்பது என்ன? என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துக் கூற அவர்களும் கேட்டுக் கொண்டனர்.

முருகனையும் குருநாதரையும் வணங்கி திரு ஜானகிராமன் ஐயா ஜீவநாடி சுவடியை வாசிக்கத் தொடங்கினார்!!!

ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எதை எதை என்று அறியாத மனிதர்கள் அப்பனே எப்படி எல்லாம் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக்கூட யான் அறிவேன்!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இத்தலம் ஒரு பெண்ணாலே வந்தது என்பேன் அப்பனே!!!!

இவைதன் எவையென்று உணராமலே இன்னும் இன்னும் காலங்கள் கடந்து கொண்டே வருகின்றது!!! ஆனாலும் அப்பனே இப் பெண்மணி எதை என்று அறிய பின் """ சிந்தாயினி !!! எனும் நாமத்திலே அழைக்கப்பட்டவள்.

ஆனாலும் இவள்தன் பின் முருகன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவள். ஆனாலும் இவள்தன் பழனி மலையில் இருந்தவள் தான்!! ஆனாலும் எதை என்று அறிய அறிய நலமாகவே!! நலமாகவே!! ஏற்றங்கள் பெற்று முருகா!! முருகா!! என்றெல்லாம் பாடி! பாடி! துதித்து பழனி தன்னை வலம் வந்தவள்... 

இதனால் அப்பனே பின் முருகனும் சோதிக்க எண்ணினான். பின் இப்பெண்மணி சிறு வயதிலிருந்து இப்படித்தான் எதையென்று அறியாத அளவிற்கும் கூட...நம்தன் மீது பாசங்கள்!! பாசங்கள்!! மிகுந்த வண்ணம் !!

ஆனாலும் பின் காப்போம் எதை என்று அறிந்து அறிந்து பார்ப்போம் சில சோதனைகளையும் கூட கொடுத்து பின்பு நம்தனையும் அழைப்பாளா?? என்று கூட.....

ஆனாலும் பல சோதனைகள்!! அப்பொழுது கூட விடவில்லை முருகனை!!!

முருகா!! முருகா!!! முருகா!! முருகா!!! வாயில் வருவதெல்லாம் இவ்வளவுதான் வார்த்தை!!

மற்றவை எல்லாம் பின் எவை என்று அறியாமலே ஆனாலும் இப்படி எதை என்று வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது பின்.... எதை என்று கூட பின் இவள்தனுக்கும் இளம் வயது ஆக ஆக இவள்தனுக்கும் எதை என்று அறியாமலே ஆனாலும் நிச்சயம் உணர்ந்து உணர்ந்து முருகன் ஆனாலும் நம் மீது பாசம் கொண்டிருக்கின்றாள் !!!ஆனாலும் ஏதாவது துணை வேண்டும்!!

பின்பு எதை என்று அறிந்து அறிந்து ஓர் எதை என்று அறியாமலே திடீரென்று பின் ஆனாலும் ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து முருகா!!! எந்தனுக்கு எப்பிறப்பு ஆயினும் உந்தனுக்கு உதவிகள் செய்யவே காத்துக் கொண்டிருக்கின்றேன் நலமாகவே பின் எப்படி என்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் எதை என்று அறிந்து எப்பொழுது பிறவிகள் ஆயினும்  எந்தனுக்கு கொடு!!! எதை என்று அறிந்து அறிந்து என்று கூட ஒரு மாமனிதன்.

ஆனாலும் இப்பொழுது கூட அவந்தன் இருக்கின்றான்... நிச்சயம் முருகன் மீது பற்று கொண்டால் உடனடியாக அவந்தனையும் அனுப்புவான்.

அதைப்போலவே நிச்சயம் உந்தனுக்கு வேலைகள் வந்து விட்டது என்று நிச்சயம் பின் முருகனும் அப் பெரியோனை எதை என்று அறிந்து அறிந்து பெரியவன் மூலம் எதை என்று உணர்ந்து உணர்ந்து முதியவன் போல் செல் என்று கூறிவிட்டான்.

பின் எதை என்று அறிந்து அறிந்து  அவ் அம்மைக்கு எதை என்று அறியாமலே அருகாமையில் வந்து அம்மையே!!! எதை என்று அறிய!! அறிய!! உன்னையும் யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!! பல நாட்கள் கடந்து !! கடந்து!! ஆனாலும் இப்படியே வலம் வந்து கொண்டு எதை என்று அறிந்து ஆனாலும் அப் பெண்மணிக்கு முருகன் தான் அனுப்பி வைத்தான் நம்தனுக்கு துணைகள் இல்லை!!

பின் சொல்லிக்கொள்ள யாரும் இல்லை!! சொந்த பந்தங்களும் இல்லை ஆனாலும் நிச்சயம் உணர்ந்துவிட்டாள் அதனால் பின் அப்பெண்மணி!!!   

உன்னை தந்தையாக ஏற்றுக்கொண்டு தந்தை என்று அழைக்கலாமா என்று!!!!

ஆனாலும் நிச்சயம் அப்பெரியவன் தாராளமாக எந்தனுக்குமே யாரும் இல்லை ஆனாலும் உன்னை யான் மகளாக ஏற்றுக் கொண்டேன்!!! அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் நிச்சயமாய் பின் ஏனம்மா? இப்படி வலம் வந்து பின் முருகன் மீது... யானும் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் என்று கூற ஆனாலும் மறைமுகமாக இவளுக்கு தெரியாமலே சொன்னான் அப்பெரியவன். 

ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து எவற்றில் இருந்து வந்தவை என்பதை தெரியாமல் ஆனாலும் நிச்சயம் பின் நம்தனையே அம்மா  எதைமென்று உணர்ந்து உணர்ந்து உந்தனுக்கு என்னதான் தேவை?? என்று கூற!!...

நிச்சயம் இவ்வுலகத்தில் எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!!! ஆனாலும் """"

முருகன் மட்டுமே போதும்!!! என்ற நிலைமைக்கு வந்து விட்டாள். 

ஆனாலும் எதையென்று அறிய அறிய முருகன் வரட்டும் !! ஓர் முறை!!! ஓர் முறை!!! அவந்தனை கண்களால் மட்டுமே பார்த்து யான் எதை என்று இப்பிறவியை பின் எதை என்று கூற பயனாக முடித்து கொள்கின்றேன் என்று!!!

நிச்சயம் அம்மையே!!! உன் கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் முருகன் வருவான் என்று கூற!!!

இதனால் இன்னும் எதை என்று அறிந்து அறிந்து அம்மையே!!! யானும் உந்தனுக்கு உதவியாளாக இருப்பேன். நீ என்ன வேண்டுமானாலும் சொல்!!! அதையெல்லாம் யான் செய்ய தயாராகிக் கொண்டே இருக்கின்றேன் எப்போதாகினும் நிச்சயம் என்று கூட!!!

பின் அப்பெரியவனும் எதையென்று கூட அறிய அறிய ஆனாலும் அப்பெரியவன் முருகனால் அனுப்பப்பட்டவனே!!!!

இதையென்றும் அறிந்து அறிந்து இன்னும் ஞானங்கள் தோன்ற தோன்ற எதை என்று அறிந்து அறிந்து வலங்கள் வந்தனர்.

ஆனாலும் பின் இப் பெரியவனோ!!!  பின் அம்மையே!!! நிச்சயம் இங்கேயே பல ஆண்டுகள் தங்கி விட்டாய் !!!இன்னும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர்ந்து உணர்ந்து செல்வோம்... முருகன் எங்கெங்கு? இருக்கின்றானோ!! அங்கெல்லாம் சென்று பின்  எதையென்று பாடி!! பாடி !!துதித்து நிச்சயம் எங்கேயாவது ஒரு தடவை எவை என்று அறிந்து அறிந்து சென்று கொண்டே இருந்தால் நிச்சயம் முருகன் நம் தனக்கு காட்சியும் கொடுப்பான் என்று பெரியவன் உத்தரவு.

பின் அப்படியே தந்தையே!!! பின் செல்லலாம் என்று கூற !!

இதனால் பழனி தன்னில் முருகா இத்தனை நாட்கள் இங்கே பத்திரமாக என்னை பார்த்துக் கொண்டாய் நீ!!! மீண்டும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அங்கும் இங்கும் செல்கின்றேன் என்று கூட !!!

அப்படியே முருகன் எதை எதை என்று அறிய அறிய செந்தூருக்கும் (திருச்செந்தூர்) அதன் வழியாக எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்படியே இப்பொழுது கூட பல தலங்கள் முருகனுடைய தலங்கள் அப்படியே சில ஆண்டுகள் கடந்து கடந்து பாடி!! பாடி !! எதை என்று அறிய அறிய கடைசியில் எவை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் எவை என்றும் அறிய எரி( எரித்தாவூர்) அப்பனே அங்கும் சில ஆண்டுகள் தங்கி தங்கி வழிபட்டு வழிபட்டு ஆனாலும் அனைவரும் உணர்ந்ததே!!! 

ஆனாலும் அறிந்து அறிந்து ஆனாலும் நிச்சயமாய் எதை என்று அறிந்து உணர்ந்து அம்மையே இப்படியே சென்றிருந்தால் என்ன லாபம்??? இப்படியே இதையென்று அறிய அறிய பல ஆலயங்களும் கூட இப்படியே திரிந்து விட்டோம்.

ஆனால் முருகன் காட்சிகள் தரவில்லையே?!! ஆனாலும் நிச்சயம் முருகன் எதை என்று அறிந்து அறிந்து உண்மையான பக்தியும் நீ கொண்டிருக்கின்றாய் என்று உசுப்பேற்றினான் அப்பெரியவன்.

ஆனாலும் எதையென்று அறிந்து அறிந்து நிச்சயமாய்... தந்தையே!!! யான் எதை என்று... பிறவியிலிருந்தே என் தாய் தந்தை எதையென்று அறியாமலே பின் பழனி தன்னிலே விட்டுவிட்டு சென்று விட்டார்கள்!!

ஆனால் எதை என்று யானே எப்படியாவது எதை என்று அறிந்து அறிந்து முருகன் கூட ஏதோ ஒரு ரூபத்தில் என்னை வளர்த்து வந்தான். ஆனாலும் எதை என்று அறியாமலே உன்னையும் எந்தனுக்கு முருகனும் எதை என்று அறிந்து அறிந்து கொடுத்ததே!!!!

இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய நாமும் பல ஆலயங்கள் சென்று விட்டோம் ஒவ்வொரு திருத்தலத்தில் கூட பின் எதை என்று எவற்றில் இருந்து உணர்ந்து உணர்ந்து பாடிட்டும் முருகன் வரவில்லையே என்ற ஏக்கம்!!!

ஆனாலும் அழுது புலம்பி எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் அம்மையே!! எதை என்று அறியாமலே நிச்சயம் ஆனாலும் இங்கிருந்து சில சில வழிகளில் கூட பின் அதனையும் கூட எரிதாவூர் எவை என்றும் உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அதன் மலையும் கூட சமமான இங்கே ஓர் மலை இருக்கின்றது என்பேன் பழனி தன்னில் கூட... அதனால் எதை என்று அறிந்து அறிந்து அம்மையே இங்கும் கூட பல மனிதர்கள் இருக்கின்றார்கள் ஆனாலும் நம் தனை யாருமே கண்டு கொள்ளவில்லை முருகனே!! முருகனே!! என்றெல்லாம் பாடிக்கொண்டு ஆனால் முருகன் அனைவருக்கும் எதை எதையோ செய்கின்றான்!!! நம்தனுக்கு எதையுமே செய்யவில்லையே!!!! எதை என்று அறிந்து அறிந்து சரி!!! எவற்றில் இருந்து கூட அப் பெரியவன் எதையென்று அறிந்து அறிந்து சரி அம்மையே!! எதை என்று கூற இங்கிருந்து எறிவோம் ஒரு கல்லை!!! எதை என்று அறிய அறிய!!!

அங்கு எவை என்று உணராமலே பின் எங்கு விழுகின்றதோ அங்கு நிச்சயமாய் எதை என்று அறிய அறிய ஆனாலும் அடையாளம் வைத்துக் கொள்வோம் எதை என்று அறிந்து அறிந்து தேடுவோம் எதனை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நிச்சயம் அங்கிருந்து அதாவது இங்கிருந்து சில சில துளிகளே கடக்க முயலும் அவ்மலையும் கூட!!

அங்கிருந்து ஒரு கல்லை வீசி ஆனாலும் இங்கே விழுந்தது!!!! (பாலக்காபறம்பு) 

ஆனாலும் அவர்களும் நிச்சயம் வரட்டும் முருகன் எதை என்று அறிய அறிய நம்தனும் பல ஆலயங்களுக்கு சென்று விட்டோம் ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து எங்கேயும் முருகன் வரவில்லை இதனால் நிச்சயம் முருகனுக்கு பின் அன்பு பாசம் நம்மிடத்தில் இருந்தால் வரட்டும் இல்லையென்றால் அங்கேயே இறந்து விடுவோம்!!

எதையென்று அறிந்து அறிந்து என்று கூட நிச்சயம் எவை என்று அறிய இங்கே விழுந்தது கல்!!

ஆனாலும் தேடி தேடி கடைசியில் எதை என்று அறிய கல் இங்கேதான் இருந்தது!! இதனால் இங்கேயே ஒரு குடிசை போட்டனர் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து அப்பனே குடிசை தன்னில் இங்கே வாழ்க்கை நடத்தினார்கள்!!! ஆனாலும் பின்  இதையென்று அறிய அறிய அப் பெண்மணிக்கும் எவை என்று உணர்ந்து உணர்ந்து முருகன் மீது பற்று!!!

ஆனாலும் இவ்வளவு ஸ்தலங்களுக்கு சென்றோமே!! எவை என்று உணர்ந்து ஆனாலும் ஒரு தலத்தில் கூட முருகன் எவை என்று கண்களுக்கு காட்சிகள் தரவில்லையே என்று அழுது கொண்டு!!! பின் இரவும் பகலும் ஆகவே எதை என்று கூட தூங்காமலே!!!!

ஆனாலும் இப் பெரியவனும் எதை என்று அறியாமலே எவற்றில் இருந்து கூட இப்படி எல்லாம் இருக்காது நிச்சயம் முருகன் உண்மையான பக்தர்களுக்கு நிச்சயம் காட்சியும் தந்தருள்வான் என்று கூற!!!

அப்பெண்மணியும் எங்கு தருகின்றான்? எதை என்று அறிய அறிய பல ஆலயங்களுக்கு சென்று விட்டோம்!! சிறு வயதில் இருந்தே முருகனை நினைத்து விட்டோம்... இதனால் எப்படி எதை என்று அறிந்து அறிந்து என்று கூட... ஆனாலும் இது எதையென்று அறிய அறிய பின் இப்பொழுது சொன்னேனே ( எரித்தாவூர்) அத்தலத்தில் இருக்கும் முருகனுக்கும் தெரிந்து விட்டது!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அங்கே தங்க நகைகளும் கூட பல வகைகளும் கூட முத்துக்களும் வைரங்களும் ஆனாலும் நிச்சயமாய் எதை என்றும் ஆனாலும் தனியாகவே ஆனாலும் உணர்ந்து பின் முருகன் எதையென்று அறிய அறிய பின் ஓர் வேடவன் போல் பின் எதை என்றும் உணர்ந்த உணர்ந்து இங்கே வந்தான்!!!

ஆனால் அவன் தான் முருகன் என்று கூட பின் தெரியாகூடாது... என்பதைக் கூட ஆனாலும் அப்பெரியவனுக்கு நன்றாகவே தெரியும் எதை என்று கூட அனைத்தும் தெரியும் ஆனாலும் அமைதி காத்துக் கொண்டிருக்கின்றான்!! இதனால் பின் எவை எதனை என்று கூட.... தம்தனுக்கு(முருகன்) சாற்றியுள்ள அனைத்தும் கூட. அது தங்க ஆபரணங்களும் எதை என்று அறிய அறிய  அப்படியே எதை என்று உணர்ந்து உணர்ந்து இங்கே வந்துவிட்டான் வேடனவன்!!!

ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப் பெண்மணியும் பார்க்கவில்லை முருகனைக் கூட!!!

அம்மையே !!அப்பனே!! நன்றாக இருக்கின்றீர்களா? என்று!!

ஆனாலும் அவ் அம்மையும் எங்கு நன்றாக இருப்பது?? நீ யார் என்று கூட தெரியவில்லை பின் எதனை என்று அறிய அறிய பல வருடங்கள் முருகன் மீது பற்று கொண்டேன்!!! ஆனாலும் முருகன் வரவில்லை பின் நன்றாக இருக்கின்றாயா? என்று கேட்கவில்லை ஆனாலும் நீ யார்? எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் என் சகோதரனைப் போல கேட்கின்றாய் எதை என்றும் அறியாமலே அதனால் நிச்சயம் எங்கெங்கு எதை என்று கூட ஆனாலும் பின் நீ யார்?? என்று கேட்க!!!!

யானும் ஒரு ஏழை தானம்மா!!! 

எதை என்று அறிய அறிய அப்பெண்மணியும் நீ ஏழையாக இருந்தாலும் இப்படி தங்க நகைகள் எதை என்று ஆபரணங்கள் உன் கழுத்தில் எதை என்று உணராமலே எதை என்று அறிந்து அறிந்து இப்படி ஜொலிக்கின்றாயே நீ ஏழையா???

எதை என்றும் கூட அதனால் அம்மையே இவையெல்லாம் எவை என்று அறிந்து அறிந்து எந்தனுக்கு பின் வேண்டுவது இல்லை என்று கூறஆனால் அப் பெண்மணியும் எந்தனுக்கும் ஏதும் தேவையில்லை அப்படியாவது எதையென்று அறிந்து அறிந்து யான் பின் முருகன் மீது பக்தி கொண்டு எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அதனால் சரி ஏதும் தேவையில்லை என்றாயே அவையெல்லாம் என்னிடத்தில் கொடுத்து விடுவாயா? என்ன? என்று கூற......

இந்தா!!..... அனைத்தும் உந்தனுக்கே எடுத்துக்கொள் என்று உடனடியாக கொடுத்து விட்டான் எதை என்று அறிய!!!

ஆனாலும் ஆனால் அப்பெண்மணிக்கு அதன் மீது பின் ஆசைகள் இல்லை ஆனாலும் முருகனோ இந்தா அம்மையே நீ கேட்டதை எதை என்று அறிந்து அறிந்து கொடுத்து விட்டான்.

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து மீண்டும் அதிகாலையில் அத்தலத்தில் சென்றான் எதை என்று உணர்ந்திருக்கும் பொழுது அப்படியே நின்று விட்டான்!!! (எரித்தாவூர் ஆலயத்திற்கு முருகன் திரும்பிவந்து விட்டார்) 

ஆனாலும் அதிகாலையில்( எரித்தாவூர் ஆலயத்திற்கு வணங்க வந்த ஒருவர்)  சேவிக்க வந்தவன் எதை என்று உணர்ந்து எதை என்று தெரியாமலே அங்கு தங்க நகைகளும் இல்லை வைரமும் இல்லை பின் அனைவருக்கும் தப்பட்டையோடு எதை என்று அறிந்து அறிந்து தாளம் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இங்கு முருகன் இருக்கும் எதை என்று கூட தங்க ஆபரணங்கள் எவை என்று எவற்றில் இருந்து கூட தெரியாமல் போய்விட்டது திருடி விட்டார்கள் என்று கூற!!!

அதனால் அனைவருக்கும் உடனே இழுத்து மூடுங்கள் திருத்தலத்தை கூட!!! பின் எவை என்று கூட தேடினார்கள் பல வழிகளிலும் கூட பின் திருடன் எங்கிருந்தாவது எதை என்று அறிய அறிய இங்கேதான் இருப்பான் பிடியுங்கள் என்று கூட... மக்களை ஒன்றாக கூட்டி எதையென்றும் அறியாத அளவிற்கு கூட பின் அனைவரையும் கூட தேட வைத்தார்கள்!!!

ஆனால் எவை என்று கூற கடைசியில் இங்கு( பாலக்காபறம்பு) பின் வருகின்ற பொழுது எவை என்று கூற ஒருவன் கண்டு விட்டான்!! இவையெல்லாம் எவை என்று அறிந்து அறிந்து உள்ளே நுழைந்து குடிசையில் உங்களுக்கு எப்படி கிடைத்தது???

எதை என்று அறிந்து அறிந்து இது முருகனுக்கு சொந்தம்!!! ஆனால் உங்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து நீங்கள் தான் திருடர்கள் என்று பட்டம் சூட்டினான்!!!

ஆனாலும் எதையென்றும் உரைக்கையில் இக் குடிசையிலே எதை என்று அறிந்து அறிந்து பின் நல் எவை என்று கூற பின் எதனை என்றும் கூற வாருங்கள்!! வாருங்கள்!! பின்  எதையென்று நீங்கள் தான் திருடர்கள்  என்று கூற அழைத்துச் செல்ல காவலாளிகள்!!!

யாங்கள் வரமாட்டோம்!! எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனால் நீங்கள் வரத்தான் வேண்டும் முருகன் ஆலயத்திற்கு என்று கூற.

நிச்சயம் யாங்கள் வரமாட்டோம் முருகனுக்கு எதை என்று எங்கள் மீது அன்பு பாசம் இருந்தால் இங்கே வரட்டும் யாங்கள் திருடர்களும் இல்லை... எங்களுக்கு திருடும் பழக்கமும் இல்லை எதை என்று அறிய அறிய ஒரு வேடவன் வந்தான் அவன் தான் எங்களுக்கு கொடுத்தான் எதை என்று அறிய அறிய!!

ஆனாலும் இதன் மீதும் கூட எங்களுக்கு விருப்பமில்லை எதை என்று அறிந்து அறிந்து அவந்தனே... இந்தா!! வைத்துக்கொள் என்று கூறி விட்டான்!!!

ஆனாலும் அவ் வேடன் யார்?? நிச்சயம் எதை என்று அறிய அறிய என்பதை கேட்பதற்கும் எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அவ் வேடனை காட்டு என்று கூற!!....

ஆனால் அவ் வேடன் முருகன்தான் எதை என்று கூற மாறுவேடத்தில் வந்தது என்பதை கூட பின் ஆனால் அப்பெரியவன் அனைத்தும் அறிந்து அறிந்து புரிந்து இவையெல்லாம் முருகனின் லீலைகளே என்று எண்ணி இருந்தான் ஆனால் நிச்சயம் எதை என்றும் தெரியாத அளவிற்கும் வழிகள் வழிகளாக நிச்சயம் யான் இங்கு வரமாட்டேன் எதையென்று அறிய நிச்சயம் பின்... நீங்கள் திருடர்கள் இல்லையா??? எதையென்றும் ஆனாலும் நீங்கள் இங்கேயே இருங்கள் யான் அழைத்து வருகின்றேன் அனைவரையும் என்று பின் அனைவரும் இங்கு வந்து விட்டார்கள்.

உணர்ந்து உணர்ந்து எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இங்கே எவை என்றும் இவள் தான் திருடன் இவன்தான் திருடன் எதையென்று உணர்ந்து உணர்ந்து இங்கேதான் தங்க நகைகள் என்று கூற.

ஆனாலும் ஒரு எதை என்று கூற பின் முருகனுக்கு சேவை செய்யும் ஒருவன் வந்து  சரியாக இருக்கின்றதா நகைகள் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூற ஆனாலும் நிச்சயம் எதை என்று எவற்றில் இருந்து கூட சரியாக இருக்கின்றது ஆனால் இவையெல்லாம் முருகனுடைய ஆபரணங்கள் தான் அதனால் எவை என்றும் எதை என்றும் இவர்கள்தான் திருடர்கள் என்று நிச்சயமாய் பின் முத்திரை!!

ஆனாலும் அப்பெண்மணி இல்லை இல்லை நிச்சயம் யான் திருடன் இல்லை... இல்லை எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் பின் ஒரு எதை என்றும் கூற ஆனாலும் நிச்சயம் நீங்கள் என்னதான் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் ஆனாலும் கூட்டமாகவே முருகன் மறைமுகமாக வந்திருந்தான்.( கூடியிருந்த கூட்டத்தில் முருகனும் மறைவாக நின்றிருந்தார்)
என்னதான் நடக்கின்றது என்பதை பார்ப்பதற்கே.

நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து பல வகையிலும் கூட அப்பெண்மணியை துன்புறுத்தினார்கள் மனிதர்கள்!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!

முருகா!!! என் குரல் உந்தனுக்கு கேட்கவில்லையா??? யான் என்னதான் செய்தேன்???

எவை என்று அறிந்து அறிந்து உந்தனையே நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு பட்டமா???

எதையென்று அறிந்து அறிந்து நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழக்கூடாதா????? நிச்சயம் பின் பொய்த்துப் போகுமா? பக்தி !!!
என்றெல்லாம் சாடினாள் முருகனை!!!

ஆனால் முருகன் எதிரிலே நிற்கின்றான் என்பதை கூட அறியவில்லை !!

ஆனாலும் இவையெல்லாம் சோதனைகள் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து பாவத்திற்கான வழிகளா?? இல்லை புண்ணியத்திற்கான வழிகளா?? ஆனாலும் நிச்சயம் எடுத்துக்காட்டாகவே எதை என்று கூற பல மக்களுக்கு உதவிகள் செய்யவே இதுவும் ஒரு நாடகம். பின் இறைவனின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை இன்னும் சொல்கின்றேன் எதை என்றும் உணர்ந்த உணர்ந்து திருத்தலங்களுக்கெல்லாம் சென்று சென்று!!! நலன்கள் ஆகவே!!!

இதையென்றும் உணராத அளவிற்கும் கூட முருகா!! எப்படி எதை எதை என்று அறிய உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எந்தனுக்கு இப்படி ஒரு சோதனையா? ஆனாலும் இப்பெரியவனும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து ஒன்றும் தெரியாமலே இருக்கின்றான் என்னதான் செய்வது இப்பெண்மணி!! இதையென்று அறிந்து அறிந்து முருகா!! முருகா!! உந்தனுக்கு மனசாட்சியே இல்லையா???

எதை என்று அறிய அறிய நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் நிச்சயம் வரச்சொல் முருகன் எங்கு தான்? இருக்கின்றான் என்று பார்ப்போம் என்று கூச்சலிட்டார்கள் அனைவரும் கூட....

எதை என்று கூற பின் எவை என்று கூற அவர்களுக்கும்  எதையென்று நிச்சயம் பின் நீயும் முருகா!! முருகா!!  எதை என்று யார் என்றுமே தெரியவில்லை அதில் ஒருவன் எதை என்று அறிந்து அறிந்து அனாதையாக நிற்கின்றாயா? யார் உந்தனுக்கு தங்க இடம் கொடுத்தது என்றெல்லாம் சாடினார்கள்!!

ஆனாலும் மௌனம் காத்தாள்!!! என்னதான் சொல்வது?? எதையென்று அறியாத அளவிற்கும் கூட சொந்த பந்தங்களும் யாரும் இல்லை இவ் முதியவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி நிச்சயமாய் எதை என்று அறிய அறிய முருகா எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பின் அனைவரும் முடிவெடுத்தார்கள்.

இப்பெண்மணியை இங்கேயே கொன்று விடலாம் என்று கூட!!

ஆனாலும் முருகா எதை என்று அறிந்து அறிந்து ஆனால் இவள் தான் திருடன் எதை என்று பட்டம் எதையென்று கூற அதனால் நிச்சயமாய் எவை என்று கூற ஆடை ஆபரணங்களை அவிழ்த்து விட்டு இவளை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பது அனைவரும் எதை என்று அறிந்து அறிந்து. ஆனாலும் மனிதர்கள் இப்படியும் செய்வார்களா என்பது தான் கலங்கடித்தது!!!

ஆனாலும் முருகன் உணர்ந்து கொண்டிருக்கின்றான்!!! அனைவரின் பக்தியையும் அங்கு தான் பார்த்தான்!!!

பின் எதை என்று அறிந்து அறிந்து பின் மனிதர்கள் கூட பக்தி என்று அதாவது முருகா!! முருகா!! என்று சொல்லிட்டு இப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய  முருகன் கூட அமைதியாகவே இருந்தான்.

இதனால்  எதையென்று அறியாமலே முருகா இப்படி செய்கின்றார்களே??? எதை என்று அனைவரும் முடிவெடுத்து விட்டார்கள் இப்பொழுது கூட வரக்கூடாதா?? முருகா!!!

நிச்சயம் நீ வரவில்லை என்றால் எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் பின் எதை என்று அறியாமலே யான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா??? என் மானம் மரியாதை எதை என்று அறிய அறிய நீ தான் முருகனா????  எதையென்று அறிய அறிய நீ தான் கடவுளா?? எதை என்று அறிய அறிய அனைவருக்கும் நீ உதவுகின்றாயா? இல்லை நீ பொய்!!! நீ பொய்!!! இறைவனும் பொய்!! உன் தாய் தந்தையரும் பொய்!! அனைவரும் பொய்!! அதனால் எதை என்று அறிய அறிய உடனே பிள்ளையோன் வந்தான் இங்கு!!!!(கணபதி) எதை என்று அறிந்து அறிந்து!!!

பிள்ளையோன் வந்து எதை என்றுகூற!!! அம்மையே!!! யான் இருக்கின்றேன் உந்தனுக்கு!!!!!

ஆமாம் நீ யாரப்பா?? இவை போன்றே சொல்லிச் சொல்லி எந்தனை ஏமாற்றிவிட்டார்கள் அதனால்  எதையென்று உணர்ந்து உணர்ந்து அதனால்  எதையென்றும் தெரியாமலே... 

வேண்டாம் எந்தனுக்கு!!! சொந்த பந்தங்களும் வேண்டாம் இவ்வாறு வந்து வந்து எந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்று பங்கமாகவே ஏற்படுத்தி செல்கின்றார்கள் அதனால் எதை என்று அறியாமலே ஆனால் பிள்ளையோன் தான் வந்திருக்கின்றான் என்று கூட.... 

ஆனால் அனைவரும் அதாவது பல்லாயிரம் பேர் பின் கூடியிருந்தனர்!! ஆனால் ஒருவனே அவன் தான் பிள்ளையோன் என்று வந்துவிட்டான். பின் அம்மையே!!! இவ்வாறு இங்கு பல மக்கள் கூடி இருக்கின்றார்கள் உந்தனுக்காக யான் உரையாடுகின்றேன் என்று பக்கத்தில் வந்து விட்டான்.

ஆனாலும் சரி என்று அறிய அறிய ஆனாலும் அனைவரையும் பார்த்தான் ஆனாலும் குள்ளமாகவே இருந்தான் எதை என்றும் அப்பிள்ளையோன்!!!

பின் அனைவரும் கூச்சலிட்டனர்... இக் குள்ளோன்(குள்ளன்) எங்கு? வந்தான் ?! இங்கு!! எதை என்று அறிய அறிய அனைவரும் முடிவெடுக்கும் பொழுது இக்குள்ளோன் மட்டும் இவள்தனக்கு எதை என்று அறிய அறிய இவள் தனக்கு பின் சாதகமாக பேசுகின்றான் என்று!!!

ஆனாலும் எதையென்று  அறிந்து அறிந்து.. அந்நேரத்தில் பின் சபரிநாதனும் ஓடோடி வந்து விட்டான்!!!( ஐயப்பன்)

அம்மையே!!! எதை என்று எவற்றிலிருந்து ஆனாலும் உந்தனுக்கும் யான் விளக்குவதற்காகவே இங்கே வந்திருக்கின்றேன் அதனால் என்னதான் செய்வது எதை என்று அறிந்து அறிந்து யானும் உந்தனுக்கு உதவிகள் செய்வேன் என்று சபரிநாதனும்!!!!

அதனுள்ளே கடைசியாக ஆனாலும் முருகனே அங்கு இருக்கின்றான் மறைமுகமாகவே எதை என்று அறிய அறிய!! இதனால் எவற்றில் இருந்தும் கூற முருகனும் வந்து விட்டான் கடைசியில்!!

அம்மையே யானும் வந்துவிட்டேன் உந்தனுக்கு என்ன தான் வேண்டும் என்று கூற!!!

ஆனாலும் அப்பெண்மணிக்கு தைரியம் ஆகிவிட்டது ஆனாலும் இவ்வளவு ஆட்கள் கூடியிருக்கும் நேரத்தில் ஆனாலும் இவ் மூன்று பேரும் வந்துவிட்டார்கள் என்று சந்தோசம்!!!

ஆனாலும் அவர்களும் அடித்து விடுவார்களே!! ஆனால் மூன்று பேர் மூலம் என்னதான்? பின் இவர்கள் செய்வார்கள் என்று கூட பின் பின் அவ் அம்மையும் பின் அன்பர்களே!!! எதை என்று அறிய அறிய இத்தனை பெரிய மனிதர்கள் இருக்கின்றார்கள் ஒருவருக்கு கூட மனம் இல்லையே!!!!

ஆனால் நீங்கள் சிறுவர்கள் ஆனால் என்னிடத்தில் வந்து உந்தனுக்கு உதவிகள் செய்கின்றோம் எவை என்று அறிந்து அறிந்து நீங்கள் இவ்வாறு செப்புவது எந்தனுக்கு மனம் மகிழ்ச்சி தான் ஆனால் இவ்வளவு நபர்கள் இருக்கின்றார்கள்!!

ஆனால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அநியாயம் தான் ஜெயிக்கப் போகின்றது என்று தெரிந்து விட்டது!!

அதனால் எவை என்று அறிய அறிய பின் உண்ணாமலை தேவியும் வந்து விட்டாள் பார்ப்போம் என்று கூட!!!

அம்மையே!!! யார் எதை எதை என்று அறிய யானும் வந்து விட்டேன்!!! எதையென்று  அறிய! ஆனாலும் இப்பொழுதுதான் தைரியமாகிவிட்டது ஒரு பெண்மணியும் நம்தனுக்கு சாதகமாக உள்ளாரே என்று அறிய!!

ஆனாலும் எதையென்று ஒரு காலத்தில் நிச்சயம் ஓர் பெண்மணி அதாவது எதையென்று அறிய அறிய தண்டனை கொடுத்தால் ஒரு பெண்மணி வந்து பின்  எதையென்று கூற சாதகமாக பேசிவிட்டால் அத் தண்டனை அளவு சற்று குறைந்துவிடும் இங்கு இதுதான் பழக்கம்!!!( அக்காலத்தில் அங்கு சுற்றுவட்டாரத்தில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஒரு பெண்மணி வந்து பேசினால் வழங்கப்படும் தண்டனை அளவு குறைக்கப்பட்டு விடும் என்ற பழக்கம் இருந்தது) எவை என்று அறிய முற்காலத்தில் இதனைப் பற்றி ஆனாலும் வர வர அதுவும் மாறிவிட்டது எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் பின் ஆனாலும் அனைவரும் இவ்வளவு எவை என்று திருடிக்கு எதை என்று அறியாமலே இவ்வளவு எதை என்று அறிய ஆனாலும் உண்மையான பக்தர்கள் எல்லாம் அப்பொழுதுதான் தெரிந்தது!!

ஆனாலும் உண்மையான முருகா பெருமானே நாராயணன் நாராயணனை அழைத்து இதற்குமுண்டா??( பத்மநாபசுவாமி ஆலயம் பாலக்கா பறம்பு) நாராயணன் இதற்கும் இதற்கும் சம்பந்தங்கள் எவை என்று அறிய சிவபெருமானும் எதை என்று அறியப்பின்... அவனே மூச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிருக்கையில் அவந்தனும் அநியாயத்திற்கு தான் துணை என்று எதை என்று உணர்ந்து உணர்ந்து இதுதானப்பா கலியுகத்திலும் கூட நடந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அப்பெண்மணி சொன்னாள்!!!( உண்ணாமலை தேவி) 

தாயே !! எதை என்று அறிந்து உன் நிலைமைகள் எந்தனுக்கு புரிகின்றது... யானும் செல்வந்தன் வீட்டுப் பிள்ளை அதனால் தங்க ஆபரணங்கள் எல்லாம் உன்னிடத்தில் கொடுக்கின்றேன் அவர்களிடத்தில் எதை என்று அறிய வீசி  விடு என்று கூற!!! 

ஆனாலும் அனைவரும் வியந்தனர்!! எதை என்று அறிய அறிய எவற்றில் இருந்தும் புரியப் புரிய!!! ஆனாலும் தங்க நகைகள் எதை என்று ஏற்கனவே முருகனுக்கு ஆனாலும் இருந்து ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எடுத்து வருகின்றேன் என்று கூற பின் மறைமுகமாகவே ஆனால் அவள் தான் பார்வதி என்று யாருக்கும் தெரியவில்லை!! எதை என்று அறிந்து அறிந்து!!

ஆனாலும் ஆனால் பார்வதி வந்தவுடன் ஈசனாரும் வந்து விட்டான் எதை என்று அறிந்து பார்ப்போம் என்று கூட அழகாக இவர்கள் என்னதான் செய்கின்றார்கள் கடைசியில்  என்னதான் முடிவு என்பதைக் கூட சரியாகவே கவனித்து கவனித்து கொண்டிருந்தான்!! ஈசனே!!

இதனால் என்னவென்று எதனை என்று அறிந்து அறிந்து சிறிது மறைமுகமாக சென்று இன்னும் பின் எதையென்று கூற பன்மடங்கு அதைவிட பன்மடங்கு நகைகளை எடுத்து வந்தாள் எதை என்று அறிய அறிய....

அதனால் மக்களுக்கு எதை என்று அறிய அறிய இத் தங்க நகைகளை எல்லாம் கொடுக்கின்றேன் உங்களுக்கு!!!!

இப் பெண்மணியை விட்டு விடுங்கள் பின் எதை என்று அறிய அனைவரும் தங்க நகைகளுக்காகவே எதை என்று ஆசைப்பட்டு ஓடோடி வந்தனர்.

இப்பொழுது புரிகின்றதா??? பக்திகள் எங்கு? சென்று விட்டது என்பதைக் கூட....

இதனால் தான்  இக் கலியுகத்தில் தான் இக்கலியுகத்தில் இன்னும் இப்படித்தான் செல்லப் போகின்றது பக்தி என்று கூட ஆணித்தரமாகவே யான் உணர்ந்திட்டேன்!!! இனிமேலும் எதை எதை என்று அறிய அதனால் மனிதர்களை சோதிப்பான் இறைவனே!!!!

அப்பொழுதெல்லாம் நிச்சயம் நம்பிக்கை வைத்துக் கொண்டு இருந்தாலே நிச்சயம் நிச்சயம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதை கூட சரியான விளக்கம் இது!!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அதனால் நல் விதமாகவே அனைவரும் வந்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய  ஆனாலும் இதையென்று அறிய அறிய அப்பெண்மணியிடம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் பார்வதி தேவியோ எதையென்று அறியாமலே ஆனாலும் இதற்கும் கூட அனைவருக்கும் கொடுக்கின்ற பொழுது எதையென்று உணர்ந்து உணர்ந்து அப் பெண்மணி( சிந்தாயினி அம்மா)  நகைகளை பின் எடுத்து வீசி விட்டாள்!!!

இவையெல்லாம் வேண்டாம் இம்மக்களுக்கு!!!

எது எதனால் எதை என்று அறிந்து அறிந்து உண்மையான மக்கள் இவர்கள் இல்லை!!! ஏனென்றால் உண்மையான திருடி யான் இல்லை!!! அதை பின் இவர்களுக்கு தெரியாத அளவிற்கும் கூட எதையென்று அறிய அறிய இதையும் கொடுத்து விட்டால் இன்னும் ஆணவம் ஏற்படுத்தி விடும் என்று கூட பின் முருகா!!! நிச்சயம் உன் மீது பக்தி இருந்தால் இதை வீசுகின்றேன் நீ இங்கேயே கண்ணுக்கு எதை என்று தெரியாமல் எதை என்று அறிந்து அறிந்து இது ஆகட்டும் சமாதியாக என்று கூட வீசிவிட்டாள்!!!! இங்கு!!

இதனால் எதை என்று கூட அறிய அறிய இன்னும் தங்க நகைகள் இங்கே ஒளிந்துள்ளது ஆனால் அதை தெரிவித்தாலும் மக்களுக்கு எதை என்று அறிய அறிய அதனால் பொக்கிஷமாகவே இருந்து வருகின்றது எதை என்று உணர்ந்து உணர்ந்து... அதனால் அப்பெண்மனியும் நலமாகவே எதை என்று அறிய அறிய அதனால் அப்பெண்மணிக்கு கடைசியில் நீதி கிடைத்தது நலமாகவே!!!

இதனால் எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைவரும் எதை என்றும் தெரியாமலே யான் தான் எதை என்று அறிய அறிய பின் மணிகண்டன் ஆகவும் எதை என்று அறிய அறிய பிள்ளையோனாகவும் முருகனாகவும் பார்வதி தேவி எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஈசனும் பின் காட்சி அளித்தனர்!!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய ஆனால் பின் நிச்சயம் முருகன் சொன்னான்!!!!

அம்மையே !!! இறைவனைப் பார்ப்பது சாதாரண விஷயம் இல்லை!!! பல கஷ்டங்கள் கடந்து வந்தால் தான் யாங்களும் உதவிகள் செய்வோம் அதனால் வந்து விட்டோம் உங்களுக்கு என்ன தான் தேவை என்று கூற!!!!!

முருகா!!!!  முருகா!!! இதனை நிமித்தம் நிமித்தம் காட்டி உன்னையே யான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் அதனால் உன்னை எதை என்று அறிய அறிய என்னிடத்தில் ஒன்றுமில்லை!!!!

அதனால் உங்களுடன் என்னையும் அழைத்துச் செல்!!! ஆனால் நீ இங்கேயும் தங்கி வர வேண்டும் உண்மை எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பொய் பொய்கள்  நிறைந்து இருக்கின்றதோ அங்கெல்லாம் நீ நிச்சயம் எதை என்று அறிய அறிய சென்று அழிக்க வேண்டும்!!!

 உண்மை நிலைகளை உணர்ந்து !!!

அதனால் இங்கே இரு!!! என்று அறிய அறிய பின் எதையென்று உணர்ந்து உணர்ந்து சிலை வடிவாக ஆகவே இங்கு முருகன் தங்கி விட்டான்!!!

ஆனாலும் விடவில்லை எதை என்று உணர்ந்து உணர்ந்து  அவ் அம்மை அனைவரும் இங்கே தான் தங்க வேண்டும் எதை என்று அறிய அறிய சத்தியம் செய்து கொள்ளுங்கள்!!!

உங்கள் மீது எதை என்று அறிய அறிய ஆணையாக கூறுகின்றேன் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் அதனால் எதை என்று அறிய அறிய புரியப் புரிய அதனால் நீங்கள் அனைவரும் இங்கே இருக்க வேண்டும் என்று எண்ணி!!!!!

அதனால் அப்படியே இருந்து விட்டார்கள் அவரவர் கூட ஒவ்வொரு வடிவத்திலும் கூட!!!

அதனால் எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் எவை என்று அப் பெண்மணிக்கு இப்பொழுது கூட கோபம் தீரவில்லை!!!!

அதனால் தான் எதை என்று அறிய அறிய பின் முடிக்கவும் இல்லை அவள் தனே மனிதர்களும் வந்தால் பின் மனிதர்கள் மீது கோபம் தான் கொள்கின்றாள்!!!

ஆனால் அனைவரின் ஆசைகளையும் பின் எதை என்று அறிந்து அறிந்து தீர்த்துக் கொண்டிருக்கின்றாள் அதனால் பெண்களின் எதை என்று யார் எதை கஷ்டங்கள் என்று வந்தாலும் இவள்தன் உதவிகள் செய்து விடுவாள்!!!

அதனால் அம்மையை எதை என்று உணர்ந்து உணர்ந்து பின்  கோபத்தை குறைப்பாள் நிச்சயம் மக்கள் அனைவரும் உணர்ந்ததே.என்று சொல்ல சொல்ல பின் எதை என்று அறிய அறிய இங்கு இருக்கும் எவை என்று சேவைகள் செய்பவர்களும் ஒரு 108 பெண்களுக்கு நிச்சயமாய் எதை என்று அறிய அறிய உடுக்க அதாவது எதை என்று அறிந்து அறிந்து பின் உணர்ந்து உணர்ந்து ஓர் வஸ்திரம் எதை என்று உணர்ந்துஇதை என்றும் குறிப்பிட்ட அளவுக்கும் கூட பின் தாலி கயிறு (108 பெண்களுக்கு துணி மஞ்சள் குங்குமம் மஞ்சள் கயிறு) இவர்களுக்கு கொடுக்க நன்று!!! அவ் அம்மையும் நிச்சயம் பின் உதவிகள் செய்வாள்!!! 

ஆனால் முதலில் எதை என்று அறிந்து அறிந்து அவள்தனையும் பின் போற்றி பாட மனமகிழ்ந்து செய்ய வேண்டும் இப்படி செய்தாலே மனம் குளிர்ந்து விடுவாள்!!!

எதை என்று அறிய அறிய இன்னும் நலன்கள் தான் உண்டு என்பேன் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து நிச்சயம் எதை என்று அறிய யான் சொன்னேன் எவை என்று அறிய அறிய இப்படி செய்ய அதனால் இதை ஓதுபவனும்( திரு ஜானகிராமன் ஐயா) எதை என்று உணர்ந்து உணர்ந்து  இதையும் கூட எவ்வளவு ஆகின்றதோ அதனையும் மைந்தன்  இவந்தனே கொடுக்க வேண்டும் இவர்களுக்கு!!!

நலன்கள் நலன்கள் அதனால் எக்குறைகளும் பட தேவையில்லை... நிச்சயம் எப்பொழுது எதை என்று அறிய அறிய எப்பொழுது ஆனாலும் இதைப்பற்றி இப்படியே விட்டு இருந்தால் யாருக்கும் தெரியாது!!!  அவ் அம்மையைப் பற்றி அதனால்தான் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் பல பெரியவர்களும் கூட

"" பொறுத்தார் பூமி ஆள்வார்!! என்பதற்கேற்பவே பின் அனைத்தும் எதை என்று அறிய அறிய பின் காலங்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நிச்சயம் அனைத்தும் மாறிவிடும் அனைத்தும் முருகனே செய்ய வைப்பான்!!! இது நிச்சயம் உண்மை!! உண்மை!!

எதையென்று அறிய அறிய அழகாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து முருகனுக்கும் நல்விதமாகவே இங்கு அடிக்கடி எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் நாராயணனுக்கும் கூட எதை என்றும் தெரிந்து தெரிந்து இன்னும் ஏராளமான விஷயங்களும் காத்துக் கொண்டிருக்கின்றது இதனால் நலன்கள் ஆகவே!!!

ஆனாலும் அச் சொர்ணம் எதை என்று அறிந்து அறிந்து இங்கே நிலையாகவே இருக்கின்றது என்பேன் அதனால் அனைத்தும் முடிந்தவுடன் எதையென்று அறிய ஆனாலும் அதற்கும் தீர்வு முருகனிடத்திலே உள்ளது என்பேன்!!! அது இப்பொழுது வேண்டாம் என்பேன்!!! நலன்கள் அனைவருக்கும் எதையென்று உணர்ந்து உணர்ந்து யானும் இதற்கு உதவிகள் செய்வேன்!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் சூட்சுமமாக!!!!

ஒரு பெரியவன் என்று சொன்னேனே!!!   அப்பெரியவன் கூட எதையென்று அறிய அறிய பின் இப் பிறப்பில் பிறந்துள்ளான்!!! அவந்தன் எதையென்று அறிய அறிய அவந்தன் மூலமே எதை என்று அறிய அறிய உதவிகள் கிட்டும் என்பேன்!!!!!

நலன்கள் இதனால் கவலைகள் இல்லை எதை எதை என்று அறிய அதிவிரைவிலே எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் வேலைகளும் கூட இன்னும் இன்னும் ஏராளமான விஷயங்கள் கூட நடந்தேறும் என்பேன்!!!! அப்பனே நிச்சயம் முடியும் முடியும் என்பேன் அப்பனே!!!! எதையென்று உணர்ந்து உணர்ந்து!!!

நலன்கள் எதை என்று அறிய அறிய இதனால் அனைத்தும் சொல்லிவிட்டேன் நலங்களாகவே முடியட்டும் மீண்டும் எதை என்று அறிய அறிய இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் மீண்டும் வந்து கூட இங்கு வாக்குகள் செப்புவேன்!!!எதை எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் தான் சொன்னேன் எவை என்று கூற தாலி பாக்கியத்தையும் கூட இவள்தன் நிச்சயமாய் எதை என்று அறிந்து அறிந்து அதனால் பெண்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து இங்கே நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து தன் பின் எவை என்று கணவன்மார்களுக்கும் சிறிது தீய பழக்கங்களும் எதை என்று அறிந்து இருந்தாலும் நிச்சயம் வேண்டிக் கொண்டால் நிச்சயம் மாறிவிடுவார்கள் அதிவிரைவிலே என்பது மெய்!!! எவை என்று உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன் மீண்டும் மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன் நலமாகவே!!!

ஆலய நிர்வாகிகளின் கேள்விக்கு குருநாதர் தந்த பதில்கள்!!!!!

அகஸ்திய மாமுனியே!! சரணம்!! சரணம்!!

தற்பொழுது இந்த ஆலயத்தில் செய்யப்படும் பூஜைகள் அனுஷ்டானங்கள் சரியான முறையில் நடைபெறுகின்றதா???

அப்பனே எதை என்று அறிய அறிய இதிலேயே சொல்லிவிட்டேன் யான்!!!
அப்பனே எதை என்று அறிய அறிய பின் அவ் அம்மையே எதை என்று அறியாமலே அனைத்தையும் மாறி அமைத்து எதை என்று அறிய மனங்கள் மாறினாலும் அவள் நிச்சயம் விடமாட்டாள் என்பேன் !!!
சரியாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!!

குருவே சரணம் சரணம் குருநாதா சரணம் சரணம் ஆலய திருப்பணியில் இன்னும் ஏராளமான திட்டங்களை நாங்கள் வைத்திருக்கின்றோம் அவையெல்லாம் சரியான முறையில் நடைபெறுமா??

அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் பின் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் இறைவன் எதற்கு?? அதனால்தான் சொன்னேன் அப்பனே அவ் அம்மை நினைத்தார் போல தான் அனைத்தும் நடக்கும்!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்!!! நாங்கள் ஆலய பெண்கள் குழு சார்பாக கேட்கின்றோம் புதைந்து கிடக்கும் முருகனுடைய ஆபரணங்கள் மீண்டும் கிடைக்குமா முருகனுக்கு சாற்றி பூஜைகள் நடத்த நாங்கள் விருப்பப்படுகின்றோம்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய முதலில் எதை என்று அறிய அனைத்தும் முடியட்டும் பின்பு பார்ப்போம்!!!!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்!! திடீரென்று திருப்பணிகள் முடங்கியதற்கு முக்கியமான தடைகள் ஏதேனும் உள்ளதா??

அப்பனே எதை எதை என்று அறிய அறிய குறைகளையும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே அவ்வளவுதான்!!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!! ஆசிகள்!! மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! குருநாதரின் கணக்கு கூட்டலே வேறு!! கணிப்புகளே வேறு!!!

காலங்கள் காலங்களாக ஏதோ வணங்கி வருகின்றோம் என்று ஆலயத்தின் உண்மை நிலைமைகள் புரியாமல் இருந்த அந்த ஊர் மக்களுக்கு சிந்தாயிணி எனும் பெண்மணியின் பக்தியை அவருடைய பக்திக்காக இறைவன் நடத்திய திருவிளையாடல்களை நேர்மைக்காக இறைவனை வந்து கொடுத்த தரிசனத்தை அன்றுதான் அந்த ஊர் மக்கள் அறிந்து கொண்டனர். மிகவும் பிரமித்து போயினர் குருநாதரையும் ஜீவநாடி சுவடியையும் தாழ்ந்து பணிந்து வணங்கி நன்றிகள் கூறினர்!!!

குருநாதர் அகத்திய பெருமான் கூறியது போல யானும் இதற்கு உதவிகள் செய்வேன்!!! என்று வாக்குகள் உரைத்திருந்தார்!! அடியவர்கள் இந்த ஆலய திருப்பணிக்கு தங்களால் ஆன நன்கொடைகளை செய்து முருகன் திருவருளை பெற வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

ஆலய முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்கள்.

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பாலைக்கபரம்பு.
அதியன்னூர். ஆராலுமூடு.695123
நெய்யாற்றின்கரா . திருவனந்தபுரம். 

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி டெம்பிள் டிரஸ்ட்.

ACCOUNT NAME : PALAKKAPARAMPU SREE BALASUBRAMANYA SWAMI TEMPLE.

ACCOUNT NUMBER : 074001000018226.
IFSC: IOBA0000740.
INDIAN OVERSEAS BANK. 

CONTACT NO: 9995345586

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சம்ர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அன்புடன் அகத்தியம் பெருமானுக்கு...அடியேனின் குரு வணக்கம். அறிந்தேன் புரிந்தேன்...அரியாமல் செய்த தவறுக்கு மன்னிக்கவும்... வருந்துகிறேன் அடியேனையும் மன்னிக்கவும். அதன்படியே தங்களை பசுமலையில் காண வந்தேன்... கண்டேன்... மனதோடு மனதாக பேசினேன்... ஆசி அளித்தீர்கள்... பெற்றேன் மகிழ்ச்சியுடன் ஆசிதனை... நன்றி அன்புடன் நன்றி அய்யனே.... ஓம் அகத்தீசாய நம...

    ReplyDelete