​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 January 2023

சித்தன் அருள் - 1269 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் அருளிய பொது வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் சில சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் பொதுவாக உரைத்த உபதேசங்களின் தொகுப்பு!!!!

நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உணர்ந்து கொள்ள வேண்டிய உபதேசம் இது!!!!

ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகிறேன் அகத்தியன்.

அப்பனே நலமாக ஆசீர்வாதங்கள் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற சொல்கின்றேன் இதை நன்றாக கேட்டு தெளிவு பெறுங்கள்.!!!!

அப்பனே வரும் கலியுகத்தில் அப்பனே மனிதர்களுக்கு பலவிதமான இன்னல்கள் நிச்சயம் ஏற்படும் என்பேன் அப்பனே இது பொதுவானவையே.

ஆனாலும் அப்பனே எப்படி வாழ வேண்டுமோ அப்பனே அப்படி வாழ வேண்டும் என்று கூட மனதில் நினைத்து பக்தியோடு இறைவன்பால் செலுத்தினால் உண்டு என்பேன் நன்மைகள்.

ஆனாலும் அப்பனே மக்களுக்கு இனிவரும் காலங்களில் அப்பனே போராட்டங்கள் மனக்குழப்பங்கள் அப்ப னே எவை செய்வது?? எதை செய்யக் கூடாது??? என்பதெல்லாம் தெரியாமல் போகும் ஏனென்றால் கலியுகம் இது.

அப்பனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் இறைவன் இல்லை என்றே சொல்லிவிடுவார்கள் அப்பனே வரும் காலத்தில்.

ஆனாலும் அப்பனே இறைவன் பக்கத்திலேயே இருப்பான் அதை மனிதர்கள் உணர்வதாக இல்லை அப்பனே .

அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே எவை என்று கூற அப்பனே எதனையும் என்று கூற ஆனாலும் அப்பனே சில மனிதர்களுக்கு மன சஞ்சலங்கள் ஆனாலும் ஈசன் அதை ஏற்று அவர்களுக்கும் நல்லாசிகள் தான் கொடுத்திருக்கின்றான்.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற அனைவரும் எவ்வாறு செயல்படுவது என்பதை கூட அப்பனே சொல்கின்றேன்.

அப்பனே ஒன்றாக அனைவரும் நிம்மதியுடன் அப்பனே பின் ஒரு மனதுடனே அப்பனே இறைவனை வழிபட்டால் நிச்சயம் ஆசீர்வாதங்கள் உண்டு உண்டு என்பேன் இன்னும் மேன்மை நிலைகள் அப்பனே.

இவை என்று கூற அப்பனே இனிமேலும் அப்பனே நல்விதமாக ஆசிகள்  அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே நிச்சயமாய் மனதில் என்ன குறைகள் இருந்தாலும் ஆனாலும் நிறைவேற்றி விடுவான் ஈசன் என்பேன்.

அதனால் அப்பனே நன்மைகளாக அப்பனே புண்ணியம் செய்து கொள்ள நன்று என்பேன்.

நன்று என்பேன் அப்பனே 

ஆனால் மனிதர்களோ சுற்றி!! சுற்றி !!!!!!....... . . 

அப்பனே இறைவன் எங்கு இருக்கின்றான்??? எங்கு செல்கிறான்?? என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம். அதன்படி செய்தாலே போதுமானது.

எவை என்று கூற அதனால் இவை என்று கூற ஆனாலும் மக்கள் மனதில் உள்ளதை கூட ஈசன் ஆராய்ந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.

ஈசன் நினைத்தால் அப்பனே ஒரு நொடி போதும் ஆனால் வேண்டாம் ஐயனே !!!! ஆனாலும் எவை என்று கூற அனைவரும் நல் முறையாகவே செப்பிட்டு முறையாக குறைகள் இருந்தாலும் அப்பனே இவ்வுலகத்தில் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை என்பேன். 

யான் யுக யுகங்களாக மனிதர்களைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஆனாலும் அப்பனே மனசாட்சிப்படி எவை என்று கூற சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே.

அனைத்தும் நலமாகிவிடும் அப்பனே எவை என்று கூற இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே என்பேன்.

அதை நீங்கள் எல்லோரும் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பேன்.

இறைவன் எவை என்று கூற தான் தான் தன் தன் தனக்குத்தான் சொந்தம் என்று யாரும் நினைத்தல் ஆகாது என்பேன்.
இறைவன் பொதுவானவன் அனைவருக்கும் இருக்கின்றான் அதனால்தான் அப்பனே அனைவரும் சொல்லலாமே நம் இறைவன் நம் இறைவன் என்று கூட.

அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே அனைத்தும் பொய் பொய் தான் என்பேன் .ஆனால் இறை பலமே அப்பனே மெய் என்பேன்.

இறை பலம் இருந்துவிட்டால் அப்பனே அனைவருக்கும் உறுதியாக அப்பனே தானாக செல்வங்கள் தேடி வந்துவிடும்.

ஆனாலும் அப்பனே செல்வங்கள் தேடி தேடிச் சென்றாலும் இறை பலங்கள் இல்லையென்றால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பனே.

இவையன்றி கூற இதனால்தான் அப்பனே மக்கள் இவ்வாறாக செயல்பட்டு செயல்பட்டு அப்பனே பின் ஆற்றின் சேற்றினுள்ளே அப்பனே கால் பதிந்துவிட்டது மீள முடியவில்லை.

எவற்றை என்று அறியாது அப்பனே அறிந்து கொள்க.

அறிந்து கொள்க அப்பனே இதனால் அப்பனே ஒன்றை தெரிவிப்பேன் நிச்சயமாக நடக்கக்கூடும் என்பேன்.

யான் சொன்னாலும் அப்பனே மக்கள் ஏற்றுக்கொள்ள நிலைமையில் அப்பனே எவை என்று கூற சிலருக்கு உண்டு  திறமைகள் சிலருக்கு இல்லாமை!!!

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற இறைவன் நிச்சயமாய் இருக்கின்றான் என்பதே மெய்.

எவரையும் எதை என்று கூற ஆனாலும் எதை என்று நிரூபிக்க அப்பனே நிரூபிக்க நிரூபிக்க இன்னும் சூட்சமங்கள் ஒளிந்து காணப்படுகின்றது.

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் இறைவன் எதனை என்று கூற அப்பனே நினைக்கின்றார்கள் மனிதர்கள் துன்ப நிலையில்கூட ஆனாலும் அப்பனே துன்பம் வருவதற்கு எவை காரணம் என்று யோசித்துப் பார்த்தால் மனிதர்களே என்பேன்.

ஏனென்றால் மனிதன் யோசிப்பதே இல்லை என்பேன்.

அப்பனே  இவ் யோசிப்பை பலமாக மனிதன் பிறக்கும் பொழுது இறைவன் கொடுத்து விட்டான்.

ஆனாலும் அப்பனே அதை யோசிக்கும் திறமைகள் மனிதர்களிடத்தில் இடத்தில் இல்லையப்பா.

யோசிக்கும் திறன் எதன் மேலும்  கொண்டு பக்குவங்கள் எவை மீது என்று கூற தீய வினைகள் மீதே யோசித்து பலம் அதிகமாக காட்டுகின்றான் ஆனாலும் அப்பனே கடைசியில் அழிந்துவிடும் என்பது தெரியவில்லை அப்பனே.

அதனால் அப்பனே இறை பலங்களே சிறந்தது. இறைவனை நினைத்து நினைத்து உருகி உருகி வழிபட்டு கொண்டே இருந்தால் அப்பனே துன்பங்கள் வரும் துன்பங்கள் நிச்சயமாய் வரும் ஆனாலும் அப்பனே இறைவன் நிச்சயமாய் ஓர் உயரத்திற்கு உயரச் செய்வான் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே எதை என்று கூற தீங்குகள் இல்லாத வாழ்க்கை அப்பனே நன் முறையாக்கும்.

அப்பனே ஒவ்வொருவருக்கும் பிரம்மா எழுதி வைத்திருப்பதை அப்பனே நிச்சயமாய் அதை யாராலும் தடுக்க முடியாது!!

எவையென்று கூற ஆனால் ஈசன் நினைத்தால் இவ்வுலகத்தை காக்கவும் தெரியும் !!!அழிக்கவும் தெரியும்!!! என்பேன் விதியையும் மாற்றவல்லான்!!! என்பேன்!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூற ஈசன் மீதே பற்று !!பற்று !!பற்று!! பற்றற்றதாக இருந்து பற்றினாலும் அப்பனே விதியை மாற்றி விடுவான் அப்பனே இவை என்று கூட!!!

அதனையும் அறிந்து சில கர்ம வினைகள் எவை என்று கூற அப்பனே பிறக்கும்பொழுது எவற்றிலிருந்து எதனையும் கொண்டு வருவது இல்லை என்பதை கூட அனைவரும் அறிந்ததே!!!!

ஆனாலும் இவை என்று கூற இறக்கும் பொழுதும் அப்பனே எவை என்று கூட ஒன்றுமில்லை என்பதை கூட அனைவரும் அறிந்ததே!!!

ஆனால் நடுவில் வருகின்றதே அப்பனே இதுதானப்பா பொய்!!!
பொய் நடுவில் வருகின்றது அனைத்தும் பொய்யே!!!

அப்பனே இவையன்றி கூட நடுவில் எதை எதை அப்பனே பெறுகின்றானோ??? அவையெல்லாம் எளிதில் அழிந்து விடும்.

அன்பின் உருவம் எடுத்து இறைவனை அன்பின் உருவமாக யார் உணர்ந்து கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குத்தான் ஈசன் தரிசனம் நிச்சயமாய் உண்டு!!!

ஆனாலும் அப்பனே இதையன்றி கூற இப்புவியுலகில் கூட பல திருத்தலங்கள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதை கூட மனிதர்கள் தெரிந்து கொள்வதற்காக அப்பனே கலியுகத்தில் ஈசன் இன்னும் பல நடத்துவான் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே மனிதனை அப்பனே இப்படியே விட்டு விட்டால் மனிதன் யாம்தான் பெரியவன்!!! எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்ற அளவிற்கு வந்து விடுவான்!!

இதனால் அப்பனே சொல்கின்றேன் வரும் காலங்களில் ஈசனே அப்பனே சில சில நோய்களை உருவாக்குவான் அப்பனே எவை என்று கூற சில சில பிரச்சனைகளை உருவாக்குவான் அப்பொழுதுதான் அப்பனே இறை நிலையை அடைய முடியும் என்பது உண்மை!!

அப்பனே துன்பம் வந்தால் தான் அப்பனே எவை என்று கூட இறைவனை உற்று  நோக்கி பார்க்கின்றோம்!!அப்பனே!!! 

ஆனாலும் இன்பமே வந்து கொண்டு இருந்தால் அப்பனே இறைவன் மீது நாட்டம் செல்லாது என்பேன்!!

அதனால் அப்பனே இறைவன் இருக்கின்றான் எவை என்று கூற ஆனாலும் கலியுகத்தில் அப்பனே இறைவனே எதிரில் நின்றாலும் இவன் தானா இறைவன்  என்று நகைக்கும் காலமும் வந்துவிட்டது!!!

ஆனால் ஈசன் விடமாட்டான் என்பேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் எவ்வாறு என்பதையும் கூட நபிகள் நாயகம் இருந்தாலும் சரி அப்பனே இயேசு இருந்தாலும் சரி( மனிதர்கள் கடைபிடிக்கும் மார்க்கங்கள்) அப்பனே  எவை இருந்தாலும் சரி நிச்சயமாய் அவர்களுக்கும் தண்டனைகள் உண்டு!!!அப்பனே!! 

மனிதன் மாறினால் நிச்சயம் காலம் மாறும் என்பதையும் கூட நான் முன்பே எடுத்துரைத்தேன் அப்பனே!!!!

எவையென்று கூட காலம் மாறுகின்றது என்பதை கூட மனிதன் எதிர்நோக்குகின்றான் ஆனால் அது தவறு என்பேன்!!!

மனிதன் மாறுகின்றான் மனிதன் மாறும் பொழுது இறைவனும் பின் இயற்கை சீற்றங்களால் அப்பனே அழிவுகளை ஏற்படுத்துகின்றான்!! அப்பனே இதனால் அப்பனே நல் மனதாக அப்பனே எதை என்று கூற அனைத்தும் இறைவன் செயலே என்று உணர்ந்து விட்டால் அவன் தான் மனிதனப்பா!!!!அவந்தனுக்கு அனைத்தும் கிடைத்துவிடும்!!!

அதனால் அப்பனே நாம்தான் அவை செய்தோம் இவை செய்தோம் என்று எண்ணிக்கொண்டே இருந்தால் அப்பனே மனக்குழப்பங்கள் அப்பனே தரித்திர வாழ்க்கையில் மனிதனுக்கு ஒன்றும் தெரியாமல் தான் இன்னும் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!

அப்பனே இவ்வுலகத்தில் ஒன்றும் நிலையானதாக அப்பனே இல்லை!!!

இறைவனே நிலையானவன்!!! இறைவன் நிலையானவனாக இருந்து நல் பக்குவங்கள் பட்டுவிட்டு மனிதன்!!!! அப்பனே இறைவனே மெய் என்று சொல்லிவிட்டால் அவந்தனுக்கு துன்பங்களும் வராது அப்பனே ஏதும் வராது!!! என்பேன் அப்பனே!!! 

எதையென்று கூட தானென்று அகங்காரம் அப்பனே உண்டு சில மனிதர்களுக்கு!!! ஆனால் அது தன்னை அழித்துக் கொள்ளும் என்பதை கூட அவந்தனுக்கு தெரியவில்லை!!!!இதையன்றி கூற அவந்தனை மட்டும் அழிக்கவில்லை அவன் தன் குடும்பத்தையும் சேர்த்து அது அழித்துவிடும் என்பதை கூட தெரிவதில்லை!!! எதனால் என்பதை கூட அதனால் தான் யான் மனிதனை மூடன் என்பேன்!!

மூடனே !!!

அப்பனே இதனால் திருந்திக்கொள்வது நன்று என்பேன்!!! இதை அனைவருக்கும் சொல்லுதல் எவை என்று கூற ஆனாலும் இறைவன் ஆசிகள் இருந்தால் அப்பனே அனைத்தும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம்!!!

ஆனால் மனிதனின் முயற்சிகளோ அப்பனே இறைவனை சென்றடைவதில்லை!!

தாம் தான் எவை என்று கூற அனைத்தும் செய்துவிட்டு அப்பனே இறைவனை நோக்கி இறைவா என்று வந்தால் அப்பனே இறைவன் என்ன செய்வான் அப்பனே நிச்சயம் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே!!!

எவையென்று கூற பணத்திற்காக ஓடோடி உழைக்கின்றீர்கள் அப்பனே எவை என்று கூற அப்பனே மற்றவை தேடத் தேட ஒரு திருமணம் என்றாலும் அதற்கும் கூட அப்பனே முயற்சிகள்!!!

ஆனால் எவை என்று கூட இறைவனை தேட மனம் இல்லாமல் போய்விட்டதே அப்பனே!!!

இறைவனுக்கு அப்பனே எவை என்று கூட முயற்சிகள் செய்ய வேண்டாம் ஓடோடி உழைக்க வேண்டாம் அப்பனே அன்பு போதும் கருணை போதும் இறைவன் நம் தனை அடைய வந்து விடுவான் என்பேன்!!!!

அப்பொழுது மனிதன் எப்பொழுது எதை என்று கூட எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பேன் எதையும் எதிர்பார்க்கக் கூடாது இறைவனிடத்தும் கேட்கக் கூடாது என்பேன்!!! அவை தா!!! இவை தா!!! என்று கூட!!.......

இறைவா!!! என்னை படைத்து விட்டாய் நீ!!!!இதையன்றி கூற நின்னை யான் சரணடைந்து விட்டேன்!!!! எதற்கு என்று கூட இவ்வாறு மனதில் நினைத்தாலே!!!! இறைவனுக்கு தெரிந்துவிடும் அனைத்தும் கொடுப்பான் ஈசன்!!!!

எவையென்று கூற அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே எவை என்று கூட அப்பனே கலியுகத்தில் தாம் தான் இல்லை அப்பனே தான் வாழ வேண்டும் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் இன்னும் இன்னும் அப்பனே பல வழிகளில் உண்டு!!! 

அவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும் அப்பனே!!!!

இவற்றையெல்லாம் சிந்தித்து சிந்தித்து விட்டால் அவன் தான் உண்மையான மனிதன்!!!! 

ஆனாலும் இப்பொழுது வாழ்க்கை இப்படித்தான் போகும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

இதைத்தான் யான் பல வாக்குகளில் சொல்லி விட்டேன் அப்பனே 

அப்பனே ஒருவனுக்கு நல் நேரங்கள் என்பது ஒரு 10 அல்லது 11 அல்லது 12 வருடங்களே ஆகும்!!! அதில் கூட நன்மைகள் செய்து விட்டால் அப்பனே அவன் அடுத்து வரும் 12 வருடங்களில் அப்பனே மிகும் அப்பனே இறைவன் அருள்!!!!

ஆனாலும் இவ் 12 வருடங்களில் அப்பனே பல தவறுகள் செய்துவிட்டால் அப்பனே அவந்தன் பின் கீழே கீழே பள்ளத்தில் விழுந்து விட்டான் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்!!!!

அதனால்தான் அப்பனே சனியவன் அப்பனே விடமாட்டான்!!! இதையென்று கூற நிச்சயமாய் சொல்கின்றேன்!!!!

10 வருடங்கள் வாழ்வதும் இல்லை 10 வருடங்கள் வீழ்வதும் இல்லை!!!

ஒருவனுக்கு நிச்சயம் பத்து வருடங்கள் சரியாக சென்று விட்டால் அப்பனே யோசித்துக் கொள்ள வேண்டும் அதில் யோசித்துக் கொள்ள வேண்டும் நன்மைகள் நன்மைகள் செய்ய வேண்டும் என்று கூட!!!!

ஆனாலும் இவை என்று கூட அதில் கூட தீங்குகள் செய்து விட்டால் அப்பனே அடுத்த 10 வருடங்கள் அப்பனே அனைத்தும் போய்விடும் என்பேன்!!!

அனைத்தும் போய்விடும் என்பதற்கிணங்க நோய்களும் வந்துவிடும் அப்பனே!!!!

இவையென்று கூட அப்பனே பிரம்மன் படைக்கும் பொழுதே அப்பனே இன்பம் துன்பம் இவை அன்றி கூட நோய்கள் இவையெல்லாம் பின் எழுதியே அனுப்புகின்றான் இவ்வுலகத்தில்!!

ஆனாலும் அப்பனே எவை என்று கூட இன்பம் வரும் நிலையிலும் அப்பனே இறைவா இறைவா என்றெல்லாம் சொல்லி கொண்டு இருந்தால் அப்பனையே துன்பம் வரும் வேளையில் அப்பனே  அவை எளிதில் அப்பனே மாற்றி அமைத்து அமைத்து விடுவான் இறைவன்!!!

ஆனால் அப்பனே இன்ப நிலையில் இருக்கும் பொழுது.......இறைவனா??????? எங்கு இருக்கின்றான் இறைவன்????? இறைவனா என்று நகைப்பதும் உண்டு!!!

ஆனாலும் துன்ப நேரத்தில் அப்பனே பின் எவை என்று கூட இறைவனை நோக்கி வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலும் நிச்சயமாக சொல்கின்றேன் சத்தியமாக சொல்கிறேன் இறைவன் அப்பனே சாய்க்க மாட்டான் தலையை!!! செவி சாய்க்க மாட்டான்!!!! எவையன்றி கூற எண்ணிக்கொள்க!!!! 

அதனால்தான் அப்பனே துன்பம் எவ்வாறு வருகின்றதென்றால் தெரிந்து கொள்ளுங்கள்!!!!

அப்பனே துன்பங்கள் தானாக வருவதில்லை மனிதன் வகுத்த பாதையே என்பேன்!!!!

அதனால் அப்பனே எவை என்று கூட நல்விதமாக மனமுவந்து துன்பம் எதனால் வருகின்றது என்று யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!! 

எவையென்று கூட இன்பமும் தானாக வருபவை இவை என்று கூட துன்பமும் தானாக வருபவை!!!

இவற்றை அகற்ற யாராலும் முடியாது!!! என்பதற்கிணங்க அப்பனே முடியும் என்பேன்

முடியும் தர்மங்கள் !!!!அப்பனே தான தர்மங்கள் அப்பனே!!!

மற்றவரை வாழ வைக்க வேண்டும் அப்பனே நல் செய்திகளை அப்பனே பிறருக்கு உதவிகள் செய்ய வேண்டும் இவ்வாறாக இருந்தால் அப்பனே உன் நல் சந்ததிகள்( பரம்பரை வாரிசுகள்) இன்னும் பிறக்கும் பொழுது அப்பனே இன்னும் மேன்மையான படிப்புக்கள் மேன்மையான அப்பனே நல்விதமான எவை எவை என்று கூட மேன்மையானதே அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே!!!

உயர்ந்த ஸ்தானத்தில் ஸ்தலத்தில் பதவியும் உண்டு என்பேன் அப்பனே!!!

அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே நம்முடன் மட்டுமே அப்பனே போய்விடுவதில்லை இப் பாவங்கள் அப்பனே!!!! கடந்து வந்தால் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் எவை என்று கூற!!! 

அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன்!!!
எவை என்று கூற அப்பனே ஈசனின் அருள்கள் அப்பனே!! அனைத்தும் செய்வான் ஈசன் அப்பனே!!!

நீங்களும் கூட அப்பனே ஈசன் இருக்கின்றான்அனைத்தும் நம் தனக்கு செய்வான் என்பதை கூட எண்ணிக் கொண்டால் அப்பனே நலமே!!!! 
நலமே என்பேன் !!!

இப் புவியுலகத்தில் அப்பனே மனிதன் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட அப்பனே வரப்போகும் நேரங்களில் கஷ்டங்கள் ஆனாலும் அதை மனிதன் அறிவதில்லை ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொருவருக்கு கஷ்டங்கள் எவை என்று கூட ஆனாலும்.... காத்தல் படைத்தல் அழித்தல் எவை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆனாலும் ஈசனுக்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

எவையென்று கூற ஈசன் பொறுத்திருந்து பார்ப்பான் ஈசனை நெருங்க நெருங்க கஷ்டங்களும் சில கொடுப்பான் !!ஏனென்றால் பக்குவங்கள் ஆகி விடுகின்றானா???  இல்லை இவந்தன் போக்கில் போக்குகின்றானா என்பதற்கிணங்க!!!! பக்குவங்கள் ஆகி நின்றால் அப்பனே எவராலும் முடியாது ஒன்றும் செய்வதற்காக அப்பனே!!!

ஈசன் ஒருவனே இவ்வுலகத்தில் மிகுந்த சக்தி வாய்ந்தவன்!!!!

மற்ற சக்திகள் எல்லாம் அப்பனே பொய்க்கக் கூடியது!!!! இதை பல வாக்குகளிலும் யான் சொல்லி விட்டேன்!!!!!

எவற்றிக்கிணங்க அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே நல் விதமாகவே உண்டு உண்டு இன்னும் ஆசிர்வாதங்கள் உண்டு உண்டு என்பேன்!!!

அப்பனே ஈசனின் ஆசிர்வாதங்கள் பெற்று அப்பனே நம்முடன் நம் சந்ததிகளுக்கும் அப்பனே சிறிது கொடுங்கள் போதுமானது!!!

அவை விட்டுவிட்டு எவை எவையோ என்று செய்து கொண்டிருந்தால் அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே தன் வினை தன்னைச் சுடும் என்று அனைவருக்கும் தெரியும் அப்பனே!!!! இதை எப்பொழுதும் மனதில் நினைக்க வேண்டும் அப்பனே இதனை என்று கூட!!!!!

இதை தெரிந்து கொண்டால் அப்பனே நலமே ஆகும் அப்பனே!!!

நீ செய்த வினை உன்னைத் தான் ஆட்டும் என்பேன் அப்பனே!!!

அப்பனே நீ செய்த புண்ணியங்களும் உன்னை பாதுகாக்கும் அழகாக!!!

அதனால்தான் மனிதனுக்கு யாங்கள் சித்தர்கள் வந்து கொண்டே புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்று கூட!!

ஆனாலும் அதை கூட மனிதன் தவறவிட்டான் அப்பனே!!!!

 கஷ்டம் வரும் பொழுது அப்பனே புண்ணியம் செய்தால் என்ன லாபம்????
ஒன்றுமில்லையப்பா!!!

அதனால்தான் அப்பனே கண் இருக்கும் பொழுதே அப்பனே அனைத்தும் காண வேண்டும் எவ்வாறு என்பதையும் கூட அதுவும் கண்கள் இறைவனை காண வேண்டும் என்பேன்!!

இவ்வாறு அப்பனே எதை என்று கூட ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே

எதனையென்று( கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்) நற்செய்திகளாக அப்பனே கண் கெட்டுவிடும் எவ்வாறு என்பதையும் கூட இதில் நினைப்பதற்கு பின் சூரிய நமஸ்காரம் எவை என்று கூற அனுதினமும் அப்பனே பின் எதை என்று அறிவதற்கு... என்று உணர சூரியனை பாருங்கள் எவ்வாறு என்பதையும் கூட!!!

சூரியனைப் பார்த்தாலே அனுதினமும் சிறிது நேரம் நல் விதமாக அப்பனே சூரியன் முன்னே உட்கார்ந்து சில தியானங்கள் செய்தாலே நம்தனக்கு நம்மைப் பற்றி நமக்கு தெரிய வரும்!!!

அப்பனே! ஏனென்றால் இவ்வுலகத்தில் வினைகள் எதற்காக வருகின்றதென்றால் அப்பனே 

""தன்னைப் பற்றி தானே அறிவதில்லை என்பேன்!!!!

தன்னைப் பற்றி அறிந்து விட்டால் அப்பனே அவன்தான் சிறந்த மனிதன். அவன் தான் ஞானி ஆவானே தவிர மற்றவை எல்லாம் வீண் அப்பனே !!!

வெறும் வாய்ப்பேச்சே அப்பனே வாய் பேச்சாக இருந்தவன் அப்பனே வாய் பேச்சாகவே போய்விடும் என்பேன் அப்பனே!!! அனைவரும் எவ்வாறு என்பதையும் கூட!!!

அனைவருக்கும் அப்பனே அனைவரும் வாழட்டும் என்று கூட ஈசன் ஆசீர்வாதங்கள் தந்துவிட்டான் அதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அதில் கூட யாரிடம் இருக்கின்றது என்றால் உங்களிடம் தான் இருக்கின்றது அதை பக்குவப்படுத்திக் கொண்டால் நலமே என்பேன்!!!

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அதை  பக்குவப்பட மீறி கொண்டால் அப்பனே ஈசன் நிச்சயமாய் தன் வேலையை காட்ட ஆரம்பிப்பான் என்பேன் அப்பனே இவை என்று கூட சொல்லிவிட்டேன் அனைத்தையும் கூட அப்பனே!!!

எம்முடைய ஆசிகள் அனைவருக்கும் உண்டு என்பேன்!!! அப்பனே நல்ல வகையான திறமைகளும் உண்டு என்பேன் அப்பனே எவை என்று கூட அதனால் அப்பனே தன்னைப் பற்றி சிந்தித்து தான் யார் என்று அறிந்து!!!!..... ஈசனே என்று நாட விடுங்கள் சிறு குழந்தைகளுக்கும்!!!!!

மேன்மையான நிலைகளும் உண்டு அப்பனை உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்திட்டு அப்பனே இறைவன் தான் மெய் என்பதை.... ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இன்று இருக்கும் மனிதன் நாளை இருப்பதில்லை இதை உணர்ந்து கொண்டால் அப்பனே அனைவரும் சமம் அனைவரும் சொந்தம் அப்பனே இவை என்று கூட!!!

அப்பனே ஒன்றை செய்தியாக சொல்லுகின்றேன் ஒரு இல்லத்தில் ஒரு தகப்பன் தன் பிள்ளையை தண்டிப்பான்?

எதற்காக? தண்டிப்பான்?? அப்பனே நல்லதையே செய்வதற்காக!!!!

ஆனாலும் விட்டு விடுவான் இவைதான் அப்பனே எவை என்று கூட எதற்காக தெரியாமல் செய்து விட்டான் என்பதை தன் தகப்பன் சொல்வான் இதுதான் அப்பனே வாழ்க்கை இதையும் சிந்தித்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த உபதேசங்கள் பாகம் 2 தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ஓம் நமசிவாய வாழ்க

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக🙏
    ஓம் அகத்தீசாய நமக🙏🙏🙏

    ReplyDelete
  4. அன்புள்ள அகத்தியம் பெருமானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. இறைவனை நம்பி நம்பி வணங்குபவர்களுக்கு சோதனைகள் அதிகம்தான் என்றால் எப்படி அய்யனே?!?! ஆனால் உயர்ந்து உயரே வாழ்வான் என்றால் எப்பொழுது அய்யனே!?!? பல அரசியல்வாதிகள் பல பெரும் பணக்காரர்கள் எல்லாம் நல்லபடியாக அதுவும் பல சந்ததிகளுக்கு வாழ செல்வம் பலகோடி சேர்ந்து சேர்த்து சேர்த்தது எப்படி அய்யனே!?!? அச் செல்வமெல்லாம் யார் கொடுத்தது!?!? ஈசனா?!?!? மகாலட்சுமியா!?!? பல ஆத்மாக்கள் இறைவனை நம்பி சித்தர்களை நம்பி வாழ்ந்கொண்டிருக்கின்றார்கள் இல்லையென்று யாரும் மறுக்கமுடியாது . மேலும் அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு பக்கபலமாக இருந்து நல்வழிகாட்டி உறுதுனையாக இருந்து ஜென்மத்தை கடைதேற்ற செய்யுங்கள். அதை விட்டு கலியுகத்தில் இன்னும் கொடிய நோய்கள் வரப்போகிறது மனிதனை இறை அழிக்கும் பாவம் மனிதப் பிறப்புகள் என்றால் எப்படி அய்யனே!?!?மீண்டும் மீண்டும் மனிதப்பிறவியை பிறக்க வைத்து அழிப்பதில் என்ன பெருமை இறைவனுக்கு !?!?! அதற்க்கு பிறவியை பிறக்கவிடாமல் மேலுலகத்திலேயே முடித்துவிடலாமே!?!? ஏன் இறவனுக்கு இரட்டை வேலை!?!? தங்களை வணங்கும் அடியவர்கள் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது??? எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது??? எதன்படி எப்படி தர்மம் செய்யவேண்டும் எதன்படி எப்படி தர்மம் செய்யக்கூடாது??? எப்படி இறையையும் தங்களையும் வணங்கவேண்டும் எப்படி வணங்கக்கூடாது??? எப்படி எதன்படி உணவு உட்கொண்டால் நோய் நொடி பிணி பீடை தீரும்??? இதன்படி இப்படி வாழ்ந்தால் கர்மா வராது அடுத்த பிறவி இல்லை என்று தெளிவாக கூறுங்கள். அடியார்கள் அடியவர்கள் பக்கதர்கள் அனைவருமே அதிகபட்சம் இல்லறவாசிகள்தான் கிரகவாசிகள்தான் குடும்பஸ்தர்கள்தான் இவர்கள் எப்படி வாழவேண்டும் எதன்படி எதனடிப்படையில் தன் வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்??? எந்த ஆலயம் செல்லவேண்டும்???எப்படி வழிபடவேண்டும்??? இப்படி சில கோட்பாடுகளை கொடுத்து என்னை வணங்குபவன் இப்படித்தான் இருக்கவேண்டும் இப்படித்தான் வாழவேண்டும் இவன் மட்டுமே எம்மை தொடரட்டும் தொடரவேண்டும் என்று ஆணையிட்டுவிடுங்கள் அய்யனே. மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலையும் கூறி வாழ வழிவகுத்து வழி கொடுங்கள் அய்யனே அடியேன் அடியவன் வருகிறேன். இன்னும் தங்களுடன் பிவில் பேசவேண்டும். அன்புடன் அடியவன்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அகத்தியப்பெருமானுக்கு உத்தரவிட்டது போல் உள்ளது தங்கள் வாக்கு. நீங்கள் சொல்கிற அனைத்து தலைப்பிலும், அகத்தியப்பெருமான் ஏற்கெனவே விரிவாக வாக்குகளில் உரைத்துவிட்டார். அனைத்தும் வலைப்பூவில் உள்ளது.

      அவர் விவரித்ததை அதன் படியே வாழ்ந்து நடப்பவர்கள் 1%க்கும் குறைவு. சித்தர் பெருமக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் மனிதர்களுக்கு வாக்குகள் உரைத்துக் கொண்டு இருப்பதே, யார் செய்த புண்ணியமோ.

      திரு.ஹனுமந்ததாசன், அவர்கள் இறைவனடி சேர்ந்தபின் சித்தர்கள் அனைவரும் இனி மனிதர்களுக்கு வாக்கு உரைப்பதில்லை என்று தீர்மானம் எடுத்த போது, வாக்கின்றி அடியவர்கள் தவித்தது, பிராண வாயு கிடைக்காமல் தவித்த corona நோயுற்றவர் போல இருந்தனர். சித்தன் அருளின் முதல் காலம் முதல் படித்தவர்களுக்கு இது புரியும். சமீப காலமாக இத்தனையேனும் வாக்கு உரைக்கிறார்களே என்று மனம் நிம்மதி அடைந்தாலும், சில வாக்குகளை பார்த்தால், பழையபடி கடையை மூடிவிடுவார்களோ என்று கூட தோன்றுகிறது.

      இழப்பு சித்தருக்கு இல்லை. மனிதர்களுக்கே! அதை உணர்ந்தால் நல்லது. இனி ஒரு வாக்கில்லா காலத்தை சித்தர்கள் தொடங்கினால், அடியேனும் சித்தன் அருளிலிருந்து ஓய்வு பெற்று கொள்கிறேன் என குருநாதரிடமும் கூறிவிட்டேன்.

      யாரையும் குறை/குற்றம் சொல்வதற்காக இதை கூறவில்லை. இனி வாக்கில்லை என்று கூறி அகத்தியப்பெருமான் முன்னர் விடை பெற்ற போது, அவரை வேண்டி தவமிருந்து, மறுபடியும் பேச வைப்பதற்கு எத்தனை ஸ்ரமங்களுடன் தவமிருந்தோம், என்பது சித்தன் அருளின் பழைய வாசகர்களுக்கு தெரியும்.

      ஓம் அகத்தீசாய நமஹ!

      அக்னிலிங்கம்!

      Delete
    2. அன்புசால் அகத்திய உறவுக்கு வணக்கம்.அடியவனின் தாய்தந்தை லோபா-அகத்தியன்=ஶ்ரீஅகத்தியர் இல்லம். ஶ்ரீ அகத்தியர் ஞான அருட்குடில்.அகத்திய மைந்தனில் இந்த நாயும் ஒன்று.அகத்தியம் பெருமானுக்கு அடியவன் கூறியது உத்திரவு அல்ல உரிமை. எமது உரிமை போராட்டம்.மனிதகுலம் வாழட்டும் தண்டிக்க வேண்டாம் என்ற உரிமைபோராட்டம். அடியேனுக்கு 2000-2023 வருடத்திலிருந்து ஜீவ ஒளி அருள் நாடி வாக்கில் தொடர்புண்டு. திரு ஹணுமந்தாசன் அய்யாவை(நாடிசொல்லும் கதைகள்)கல்லாறு,பாண்டிச்சேரி,தஞ்சாவூர்சித்தர்குடில்,(தென்காசி,பிரம்மநாத ஓலை)இப்படி பல சத்சங்கங்களில் அகத்தியம் பெருமானோடு உரையாடியிருக்கிறோம். மனிதகுலம் தழைத்து வாழ இப்படி பல கேள்விகள் அடியவன் கேட்பதுண்டு பொதுவாக்கிலும் சரி தனிப்பட்ட வாக்கிலும் சரி பல சூட்சுமங்களோடு.அதில் வந்த பதில்தான் வலைப்பூவிலும். ஆனால் இப்பதிவில் அனைத்து இறையும் சித்தர்களும் மனிதனை அழிப்போம் தண்டிப்போம் விடமாட்டோம் என்று அடிக்கடிதொடர்ந்து வரும் அருள்வாக்கால் மனம் மிகவும் சங்கடசஞ்சலபடவைக்கிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த பதிவு.மனிதப்பிறவியே பாவம்தான். ஏமாற்றுகிறான் என்ன செய்வது. அவனை திருத்தத்தான் சித்தர்கள். சித்தர் வழிபாடு. சித்தர்கள் அனைத்தும் தான்டியவர்கள் அறிந்தவர்கள் கண்டவர்கள் அவர்கள்அருள் வாக்கில் கோபப்படக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் அப்பதிவு அகத்தியம் பெருமானுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அது உத்திரவாகப்பட்டால் என் தாய் தந்தையிடம் கேட்க கூற உரிமையுள்ளது அடியவன் வேறு யாரை கேட்பது யாரை கேட்கமுடியும் அவர்கள் பதில் கூற காப்பாற்ற கடமையுள்ளது கடமைபட்டவர்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆகவே நலம் நலமே தொடரும்... (இதுவும் அகத்தியம் பெருமானின் அருள்வாக்கில் வந்த வார்த்தைகள்தான்) மற்றபடி அடியவனும் குற்றமாகவோ குறையாகவோ எண்ணத்தை பதிவு செய்யவில்லை. எம்பெருமான் அகத்தியம் பெருமானின் அருள்வாக்கு தொடரும்...தங்களின் பணியும்(பதிவு)தொடரும். அன்புடன் அகத்திய முரட்டு (பக்தன்) மைந்தன்(அவர் வைத்த பெயர்தான்) ஓம் அகத்தீசாய நமோ நம...





      Delete
  5. ஓம் அகத்தீசாய நம,
    குருவே சரணம்,
    நன்றி ஐயா🙏🌹🙏.

    ReplyDelete
  6. Om Sri LopaMudra Devi Sametha Agastheeswaraya Namaha. Namaskarams

    ReplyDelete