​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 24 January 2023

சித்தன் அருள் - 1275 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்!






12/10/2022 அன்று ஸ்ரீ முருகப்பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம், மார்கண்டேய ஆஸ்ரமம் சாலை. சிவபுராணம் மாந்தாத்தா தீவு, காண்ட்வா மாவட்டம் மத்திய பிரதேசம்.

மந்திரமாய்!!! மந்திரமாய்!! உருவெடுத்த ஓங்காரம் நாதனே!!! என் தந்தையே!! தாயே!!!!! 

பணிந்து வேலனவன் செப்புகின்றேன்!!!!

ஆனாலும் மிச்சம் என்பது ஏது??? ஏது என்பதைக் கூட நினைத்துப் பார்த்தால் ஏதுமில்லை!!!!

அறிந்தவர் உண்டா??? என் தந்தையை!!!! அறியாதவர் எவர்!!??

ஆனால் அறிந்தவர் உண்டோ அவர் நிச்சயமாய் வெளியில் காட்டுவதில்லை அறியாதவர் எவரோ அவர்தான் யான் பக்தன் அதாவது என் தந்தையுடைய பக்தன் என்று அலட்டிக் கொள்வார் பிதற்றிக் கொள்வார்கள்.

ஆனாலும் பொய் நிறைந்து அனைத்தும்  கடைசியில் பார்த்தால் இழப்பார்!!

பின் இழந்து உன்னை தான் வணங்கினேனே!!! ஈசனே!!! என்று பிதற்றுவார்!!!

எவ்வகை ஆனால் தவறுகள் மனிதனிடத்திலே!!! மனிதனிடத்திலே வைத்துக் கொண்டு என் தந்தையை எதை என்று அறியாமல் அறியாமல் அறியாமல் பிதற்றுகின்ற மனிதர்களே!!! மனித முட்டாள்களே!!!
ஜென்மங்கள் எதற்காக எடுத்தாய் என்பதை கூட அறியாமல் அறியாமல் அறியாமல் வந்து வந்து என்னிடத்தில் பல வழிகளிலும் கூட பின் எதை எதையோ கேட்டு...........

ஆனாலும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அன்பை!!!!

ஆனாலும் அன்பான முறையிலே கேட்டால்!!! நிச்சயம் ஆனாலும் சில காலம் அன்பை என் மீது காட்டி காட்டி பின் மறைமுகமாக பின் அனைத்தும் கொடுத்து விட்டால் நிச்சயம் இறைவன் அதாவது இல்லை!!. எந்தனுக்கு யானே கஷ்டங்கள் பட்டு எழுந்தேன் என்று கூறி விடுகின்றார்கள் மனிதர்கள்!!!

இதுதான் தன்மையா???? மனிதனின் தன்மையா??

அதனால்தான் யாங்கள் அனைத்தும் எடுத்துக் கொள்வோம் மீண்டும்!!!!

இதனால்தான் வேண்டாம் மனிதனே!!!!

இன்னும் ஞானங்கள் தித்திக்க!!!தித்திக்க!!! பல வழிகளிலும் கூட சித்தர்கள் அழகாகவே அழகாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் வாக்குகளை!!!!

இதை யார் ஒருவர் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் பின் மாற்றங்கள் என்னுடைய அருள்கள் பல கோடி ஞானியர்களின் அருள்கள் என் தந்தையின் அருள்கள் தாயின் அருள்கள் நிச்சயமாய் வந்து கொண்டே இருக்கும் யான் ஏற்பாடுகள் செய்வேன்!!!!

என் தந்தையிடம் எப்பொழுதும் கூட எதை என்று நடந்து நடந்து துன்பம் வந்தாலும் எவை வந்தாலும் நிச்சயம் என் தந்தையினை நெருங்க நெருங்க நிச்சயமாய் விடிவெள்ளி உண்டு!!! உண்டு!!!

ஆனாலும் சில சோதனைகள் வரும் அவற்றையெல்லாம் கடந்தால் தான் கடந்தால்தான் மனிதா!!! நிச்சயம் தித்திக்கும் வாழ்க்கை!!!

அவை விட்டுவிட்டு பின் ஏதோ என்று பின் அத் திருத்தலத்திற்கு சென்றேன் இத்திருத்தலத்திற்கு சென்றேன்.... இத்திருத்தலத்தில் தியானங்கள் செய்தேன் அத் திருத்தலத்திற்கு பல வழிகளிலும் கூட உபகாரங்கள் செய்தேன் என்று பிதற்றிகொள்வது எதனால்???

உன்னுடைய கர்மா எதை கொடுக்க வேண்டுமோ அதை உன்னிடத்தில் இருந்து இறைவனே எடுத்து கொள்கின்றான்!

அவ்வளவுதான்!!! வாழ்க்கை!!!

இதை நிமித்தம் காட்டி ஏன்?? வீணான வாதாடல்கள்!!!

வாதாடி ! வாதாடி ! தோற்றுப் போகின்றாயே!!! மனிதா!!! இதனை எல்லாம் ஏன்??

தோற்பது நிச்சயமாய் மனிதனே இவ்வுலகத்தில்!!!

அதனால் இறைபலங்கள் இன்னும் மனிதர்களுக்கு அதாவது சில மனிதர்களுக்கு கூடிச் செல்லும் என்பது மெய்!!!

மெய் என்பதை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டாலே மனிதா!! நீ எதனை? என்றும் மெய் என்பதை கூட உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அது பொய்!!!

அதுதான் பொய் என்பதை கூட நிரூபித்து விடும்!!! நிரூபித்து விடும்!!

எது? பொய் என்று உன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அதுதான் உண்மை!!!!

ஆனால் இதற்கும் நினைக்கத் தெரிந்த மனமாக இருக்க வேண்டும் மனமாக இருந்து இருந்து செயல்பட்டு கொண்டிருந்தாலே என்னுடைய அருள்கள் பரிபூரணம்!!! பரிபூரணம்!!!

பரிபூரணம்!! அறிந்து அறிந்து செயல்பட்டு இன்றைய நிலைகள் மாறும்!! மாறும்!!

என்னுடைய திருத்தலத்திலே!! அதாவது நிச்சயம் நிச்சயம் உண்டு இன்னும் ஏராளம்!!
 
வள்ளி தெய்வானையோடு பல மனிதர்களுக்கு காட்சியளிக்க தான் போகின்றேன் பின் என் கோட்டம் செந்தூரிலே!!!!! (திருச்செந்தூர்) 

ஆனாலும் எவை எங்கிருந்து!!!     அங்கு(திருச்செந்தூருக்கு) புறப்பட்டு சென்றால் போகனவனும்(போகர்) அதாவது போகனையும் என் தந்தையையும் யான் அழைப்பேன்... 

போக முனியும் என்மேல் உயிராகவே இருந்தான் போகனவன்!!! அதனால்தான் எப்பொழுதும் யான் எங்கு சென்றாலும் போகனை அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றேன்!!!

இங்கும் போகன் இருக்கின்றான்!!!! எதிலும் போகன் எதிலும் போகனின் அருவுருவமாக அதாவது இந்நீரை(நர்மதை தீர்த்தம்) பின் பருகி வந்தாலே போதுமானது பல பல இன்னல்கள் அகலும்!!! அதாவது மனக்குழப்பங்கள் அதாவது சிறிய வயதிலே பைத்தியகாரனாகுதல் எதையெதையோ தெரியாமல் அலைந்து திரிந்து ஓடுதல் என்பவை எல்லாம் இந்நதியிலே நீராட!! நீராட!! நிச்சயம் மாறிக்கொண்டே வரும்!!!

அவ்வளவு மூலிகைகள் படைத்தது இவ் நதி(நர்மதை)

அவை மட்டும் இல்லாமல் எண்ணிலா கோடி ஞானியர்களும் தவம் செய்த இடங்கள்!!! தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது பலத்த!!!!

பலத்த !! பலத்த!! எதையென்று ஆனாலும் அவ் ஞானியர்கள் தவம் செய்து கொண்டிருக்கையில்!!!! என்னதான்? தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்!! என்பதை கூட......ஈசா!!!! ஈசா!!! இப்பிறவி வேண்டாம் வேண்டாம் என்று கூட!!..

அதனால் நிச்சயம் அனைவரும் ஈசனை கேட்டு ஒரே அதாவது ஒரே நேரத்தில் அனைவரும் முக்தி அடைய வேண்டும் என்று கூட பின் என் தந்தையை சேவிக்க!!! சேவிக்க!!! சேவிக்க!!! சேவிக்க!!!.... 

பின் வந்தது!!!! நீர் வெள்ளம்!!! 

நீரை விட்டான்!!! என் தந்தை ஈசன்!!!! 

நீரை விட்டதுடன் அனைவரும்     பின்    அவ் நீரினாலே என் தந்தை அனைவரையும் ஈர்த்துக் கொண்டான்!!
நதியின் அடியிலே !!!   இப்பொழுதும் கூட தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்  அவ் ஞானியவர்கள்!!!!! மனிதர்களின் நன்மைக்காக!!!!......

இவ்வளவு படைத்த ஆனாலும் இவ் ஞானியர்களின் அருள்கள் நிச்சயமாய் மனிதனை நெருங்க நெருங்க அதாவது ஞானியவர்க்கும் பின் எதை ஆனாலும் மனிதனுக்கும் சம்பந்தங்கள் உண்டு!!!

பின் நேசிக்க !! நேசிக்க!!. என் தந்தையை நேசிக்க நேசிக்க ஆனாலும் ஞானியர்கள் கண்ணை திறந்து பார்ப்பார்கள்!!!

யார் இவன்????...... பின் ஈசனையே நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்று !!!   சரி இவந்தனுக்கு விடிவெள்ளி தான் கொடுப்போம் என்று நிச்சயம் அணைத்துக் கொள்வார்கள்!!!! அணைத்துக் கொண்டு அனைத்தும் செய்வார்கள்!!!
இவ் ஞானியர்களின் இதுதான் சூட்சுமம்!!!

ஆனாலும் இதை எவை ஆனாலும் அடியார்கள் பல!! பல!!! என் தந்தையின் மீது பற்று!! பற்று!!!

அதனால் ஒரு அடியானை(அடியவனை) பற்றி சொல்கின்றேன்!!!!

""" வீர பிரம்மா!!!! என ஓர் அடியான் இங்கிருந்தான்!! ஆனால் என் தந்தைக்கு சேவை செய்வதில் மிக்க!!! மிக்க!!!

அவனைப் போல் ஈடு கொடுக்க யாருமில்லை!!!

அனுதினமும் நீரை எடுத்து வந்தான் பின் அனுதினமும் இங்கே அழகாகவே குளிப்பாட்டினான்!! என் தந்தையை!!!

ஆனாலும் பின் முதலிலே என் தந்தைக்கு அனைத்தையும் செய்து விட்டு தான் பின் உணவு!!

ஆனாலும் உணவை கூட சாப்பிட மறந்து விடுவான் ஒவ்வொரு நாளும்!!!

இப்படியே சென்று கொண்டிருக்க !! சென்று கொண்டிருக்க!!! என் தந்தை ஒரு பாடத்தை புகுத்தினான்!!!

நீரை ( நர்மதை ஆறு) எல்லாம் பின் மாற்றி விடுவோம் என்று கூட திடீரென்று நீரை வற்றச் செய்து விட்டான் !!அதாவது எங்கு பார்த்தாலும் நீர் இல்லை!!

ஆனாலும் எப்படித்தான் அபிஷேகம் செய்வது??? என்று ஆனாலும் அப்படி ஆனாலும் பின் பல தூர தொலைவில் அலைந்தான்!! திரிந்தான்!!

ஆனாலும் அங்கு பலமாகவே நீர் இன்னும் கிடைக்கப் போவதில்லை!!

எப்படி என் ஈசனுக்கு யான் நீரை அதாவது.. அவந்தன்னில்( லிங்கத்தின் மீது அபிஷேகம்) ஊற்றுவேன்??!! என்று கூட!!

ஆனாலும் இதை என்று அறிந்து கொண்ட ஆனாலும் பல வழிகளிலும் கூட அழுது புலம்பி!!!!!

அழுது!! அழுது !! அழுது!! அழுது!! நீரை சேமித்தான்(கண்ணீரை) நீரை சேமித்தான்!!!

சந்தோஷங்கள்!! ஆனாலும் இவ் நீரை ஆனாலும் பின் என் தந்தை மீது ஊற்றினான்!!! 

அதனால் என் தந்தைக்கும் பின் மகிழ்ச்சிகள்!!! மகிழ்ச்சிகள்!!! என் மீது இவ்வளவு பாசங்களா!!!!!

அழுது அழுது கண்ணீரை சேமித்து!!!!.......... இதனால் பாகுபாடின்றி பின் அருகிலே மறுநாள் பார்த்தால் நீர் ஓடுகின்றது!!!! (ஆற்றில் வெள்ளம்) ஆனால் மகிழ்ச்சி அவந்தனுக்கு!!!!

ஈசா!!!! அனைத்தும் உன் லீலைகளே!! என்று கூட!!

ஆனாலும் எதை எவற்றில் இருந்து ஆனாலும் இங்கே அமர்ந்து கொண்டான்!!

ஆனாலும் பல அரசர்கள் இங்கு வந்து ஆனாலும் பல வழிகளிலும் கூட தவம் செய்ய மேற்கொண்டார்கள் இங்கே அமர்ந்து!!!

ஆனாலும் ஒரு புலவன் பின் ஒரு மண்டலம் வரை இங்கு தவங்கள் செய்து ஈசனையே நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீ இவ்வுலகத்தை ஆளலாம் என்று கூறி விட்டான்!!

ஆனாலும் ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின்  அவ் அடியான்(  வீர பிரம்மா) பின் இங்கு இருந்தது பின் அவ் அதாவது அவ் அரசனுக்கு பிடிக்கவில்லை!!!

இதனால் இவனை விரட்டி விடுங்கள் என்று கூட!!

நிச்சயமாய் பின்  அனைவரும் அவந்தனை அடித்தனர்!!!

ஆனாலும் அவந்தன் செல்லவில்லை!!!

ஈசா!!!  ஈசா!!!! தந்தையே உன்னையே இங்கு யான் நினைத்துக் கொண்டிருக்கின்றேனே!!!! 

எந்தனுக்கு ஏன்? எதை! என்று எவற்றை என்றும் அறியாத என்று என்று அழுது புலம்பினான்!!!

ஆனாலும் விடவில்லை அடித்து அடித்து நொறுக்கினர்!!! பல வழிகளிலும் கூட இவந்தனை இங்கேயே சாகடியுங்கள் என்று கூட அவ் அரசன் தீர்மானித்து பின் சீடர்களுக்கு உத்தரவிட்டு விட்டான்!!!

இதனால் நதியிலே மூழ்கி மூழ்கி( மூழ்கடித்து) இவந்தனை சாகடிக்க சாகடிக்க......

அப்போது!!!!!!!!!! 

ஈசனே!!!!! வந்தான் மனித ரூபத்தில்!!!!!

வந்து ஆனால் சண்டை இட்டான்..... 

சண்டையிட்ட சீடர்களும் ஓடி வந்து அரசனே!! அரசனே!!
பின் ஒருவன் வந்து விட்டான்!!!!

அவன் யார்?? என்று தெரியாது!!!!! ஆனாலும் பின் இவந்தனை காப்பாற்றி விட்டான்!!!!

நீர் வாரும்!! வாரும்!! என்று!!

ஆனாலும் அரசனே!!! எதை என்று கூட !!.... சபையில் இருக்கும் அனைவரையும் அழையுங்கள்!!

இவ்வளவு படைத்த அதாவது பலம் படைத்த பலம் படைத்தவன் யார்??? என்று கூட அனைவரையும் அழைத்து ஆனாலும் அனைவரையும் அழைத்து சண்டையிட்டனர் ஈசனிடம்!!

அதனால் ஈசன் ஒருவனுக்காகவே சண்டை இட்டு அனைவரையும் அழித்துவிட்டான்!!! அனைவரும் அழிந்தனர்!! 

ஆனாலும் பின் வந்தது என்று யார் என்று அறிந்து கொண்டான் பின் அவ் முனி( வீர பிரம்மா). 

ஆனாலும் இதையென்று அறிந்து கொண்டு.... ஆனாலும் பின் அரசனும் கடைசியில் சண்டைக்கு வந்தான்!!!

ஆனால் பின் வந்தது ""ஈசன்!!! என்று அரசன் சரியாக உணர்ந்து விட்டான்!!!!!

இதனால் இப்பொழுதே உந்தனுக்கு ராஜாங்கம் வேண்டும் என்று நினைத்தாயே நிச்சயம் இல்லை இப்பொழுதே உன்னை இவ் தண்ணீரில் தள்ளி விடுகின்றேன் என்று... அதாவது நீ இனிமேலும் எதை என்று அறிந்து ஒரு தரித்திரனாக பிறப்பாய் என்று கூட!!!

அத் தரித்திரனாக இப்பொழுதும் பிறப்பெடுத்து விட்டான்!!!

ஆனால் எதை அவனைக் காப்பாற்ற வந்தானே ஈசன் இப்பொழுது கூட அறிந்து அறிந்து அவன் பின் ஒரு ஜென்மத்தில் தற்போது நிலைமையில் பின் சிவாஜியாக( சத்ரபதி) பிறப்பெடுத்தான்!!!! நாட்டை ஆண்டான் ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் அனைத்து திறமைகளையும் ஈசனே!! கொடுத்தான்!!! பல வழிகளிலும் கூட!!!

அதாவது எதை என்னுடைய தந்தை பல வழிகளிலும் கூட அவந்தனுக்கு உபசாரங்கள் பல பல!!!!!

ஆனாலும் சில சில தீய செய்கைகளாலும்........ அவையெல்லாம் வேண்டாம் சித்தர்கள் சொல்வார்கள்!!!!

நல்முறையாக இப்படித்தான் என் ஈசனை வணங்குபவர்களுக்கு  ஒருவருக்காவது நிச்சயம் என் தந்தை அதாவது ஈசன் என் மனதில் குடிகொண்டுள்ள ஈசன் அன்பானவன் அழகானவன் உயர்ந்த உள்ளம் கொண்டவன் என்றெல்லாம்!!!!!

ஆனாலும் யாரொருவன் என் தந்தையின் மீது அதிக அளவு பற்று வைக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயம் மனித ரூபத்தில் வந்து என் அப்பன் அதாவது என் தந்தையானவன்... ஈசனானவன் நிச்சயம் உதவிகள் நேரடியாகவே வந்து புரிவான்!!! கலியுகத்தில் தான் இதுவும் நடக்கிறது!!!

ஆனாலும் பின் என் தந்தையை வணங்கினால் கர்மங்களாம்?!!!!!!!!!!!!!!!!!

ஆனாலும் மனிதா!!!!!!

பொய் சொல்லி ஏமாற்றுகின்றாயே!!!!!!

அனைத்தையும் செய்து விட்டு நமச்சிவாயா என்று சொல்கின்றாயே!!!!!

பின் என் தந்தை எப்படித்தான் கொடுப்பான் உந்தனுக்கு அனைத்தையும் கூட!!!......... யோசித்துக் கொள்ளுங்கள்!!!

பின் இறைவனை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் மனிதா!!! உன்னை எப்பொழுது நீ நம்புகின்றாய்??!!

உன்னை நீ எப்பொழுது நம்புகின்றாயோ அப்பொழுது யாங்களே வந்து...பின் இழுத்துச் செல்வோம்!!!!

பழனி தன்னில் அழகாகவே யான் இருக்கின்றேன்!!!!! சில மனிதர்களுக்கு காட்சியும் அளித்துவிட்டேன்!!! இன்னும் வரப் போகின்ற நேரத்தில் காட்சியும் அளிப்பேன்!!!

இது சித்தர்களின் தீர்ப்பு!!! சித்தர்களின் தீர்ப்பு!!!!

அகத்திய மாமுனி.!!!

பின் முருகா!!! முருகா!!! யான் உந்தனை பணிகின்றேன்!!! பணிகின்றேன்!!!

இவ்வுலகம் காக்கப்பட வேண்டும்!!!! காக்க வேண்டும்!!!

அழிவுகள் நடந்து கொண்டே இருக்கின்றது!!! நல்லோர்களை காக்க வேண்டும்!! அதனால் நீ நிச்சயம் யான் பல மனிதர்களுக்கும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்!!!

அவர்களுக்கெல்லாம் நீ காட்சியளிக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் குருமுனியே!!!!!! எந்தனுக்கே பல பாடங்களை கற்றுவித்தவன் நீ!!!!!

பின் ஆனாலும் அகத்திய முனியோ!!!!!!!!!!!!!!!!

அப்ப்பப்பா!!!!!!!!!!!!!!  அப்படியில்லை!!!! அனைத்தும் நீ கொடுத்தது!!!

யான் கொடுத்தேனா?????

நீ வேறா ?! ஈசன் வேறா !? அனைத்தும் நீரே!!(நீயே) என்று கூற........

அப்ப்பப்பா!!! இல்லை!!!!!! அப்ப்பப்பா!!!!!!! அகத்திய மாமுனிவரே!!!! உலகத்திற்கும் ஈடானவன்!!! 

ஆனால் என் தந்தை அழகாகவே உன்னிடத்தில் அதனால் பின் அனைத்தும் அறிந்த உந்தனுக்கு இதைப்போலவே செய்கின்றேன் என்று யானும் உத்தரவிட்டு விட்டேன்!!!!

இதனால் நிச்சயம் அனைவருக்கும் என் ரூபம் காண்பிக்க தான் போகின்றேன்!!! இன்னும் ஏராளமான உரைகளையும் கூட !!!! உரைகளையும் கூட சித்தர்கள் உரைத்துக் கொண்டிருக்க....

அதை நம்பினால் நிச்சயம் சித்துக்கள் கூடி வரும்!!!! நம்பாவிட்டால் அழிவுகள் கூடி வரும்!!! இவ்வளவுதான் வாழ்க்கை!!!! சொல்லிவிட்டேன்!!!

வாழ்க்கை என்பது ஏதடா??? வாழ்க்கை என்பது ஏதடா???
ஏது? முன் சென்று பின் வருவது ஏதடா?? பார்த்துக் கொள்வதடா பாவமடா!!!
அதைத்தான் நீ சுமந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றாயடா!!!  மனிதா!!  மனிதா!!! எண்ணங்களை மேம்படுத்து!!!! நல் எண்ணங்களை மேம்படுத்து!!!! போட்டிகள் பொறாமைகள் வேண்டாம் என்று சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்!!!

எனை வணங்கினாலும் அவை போல இருந்தால் நிச்சயம் என் அருள்கள் கிட்டாது!!!! அப்பொழுது நீ தாழ்வு நிலைக்கே வருவாய்!!! சொல்லிவிட்டேன்!!!!

யான் கந்தனை வணங்கினேன் என்று ஒரு பிரயோஜனமும் இல்லை!!! அதனால் ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகம் பக்தியை வைத்துக்கொண்டு ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் திரிந்து கொண்டே இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு என்னதான் சித்தர்கள் செய்வார்கள் என்பதை கூட எந்தனுக்கு தெரியும்!!!!

அதைத்தான் நீராடி நீராடி என்று ஆனாலும் இவ் நதியின் ஓட்டம் பார்த்தால் அடியில் பார்த்தால் நிச்சயம் பின் உள்ளுணர்ந்து சென்றால் நிச்சயம் பின் ஞானியர்கள் தவம் இயற்றுவதை பின் பார்க்கலாம்!!!!

அவை மட்டும் இல்லாமல் ஞானியர்கள் தவம் இயற்றுவதை மனதாலே நினைத்துக் கொண்டு தவம் இயற்றி  கொண்டிருக்கின்றார்கள்... அதை சரியாகவே ஓர் 5 அடி ஆழத்தில் சென்று எதை என்று கூர்மமாகவே கூர்ந்து அதாவது நிச்சயம் நல் மனதாகவே இருந்தால் மேலோட்டமாகவே தலை சாய்த்து வைத்து கேட்டால்

"""""""""" ஓம்""""""""" என்ற சப்தம் கேட்கும்!!!!!! நிச்சயம்!!!!

நிச்சயம் அவை மட்டுமல்ல!!! சரியாக பின் நடு இரவில் இங்கே அமர்ந்தாலே!!!!!

"""""""""""" ஓம் """""""""""""" என்ற சப்தம் கேட்கும்!!!!

அதையும் அகத்திய மாமுனி!!!! 

அதாவது விஞ்ஞானத்தில் தலைசிறந்தவன் என்று கூட!!! சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்!!!!

எப்படி?? எங்கு?? ஒலிக்கின்றது !!!....என்பதை கூட விஞ்ஞான வழியிலே வாக்குகள் செப்புவான்!!!! என் அகத்தியன்!!!!!

என் மனதில் குடி கொண்டவன் அகத்தியன்!!! பெருமிதத்துடன்!!!! அகத்தியனை நினைத்து நினைத்து யான் பெருமிதம் கொண்டே இருக்கின்றேன்!!

ஏனென்றால் அழகிலும் சிறந்தவன்!!!! அறிவிலும் சிறந்தவன்!!! பின் எதை ஞானத்திலும் சிறந்தவன்!!!! கருணையிலும் சிறந்தவன்!! பாசத்திலும் சிறந்தவன்!!! பின் பின் எதையென்று கூற ஏழ்மையிலும் சிறந்தவன் ஏழ்மைக்கும்!! ஏழ்மையானவன்!!!

அதனால் அகத்தியன் நிச்சயம் பின் ஏழை எளியோரை காப்பாற்றுவான் நிச்சயம்!!!

ஆனாலும் பலமுறை பல சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் அகத்தியனுக்கு!!!

அகத்தியனே!!! இவ்உலகத்தில் மனிதர்கள் யாரும் நம்பப் போவதில்லை உண்மையானதை!!!!

நீ ஏன் அலைகின்றாய் என்று கூட!!!!

அகத்தியனும்!!...... பரவாயில்லை!!! என்னை நம்பினோர்களுக்கு மட்டும் யான் உதவிகள் செய்து வருகின்றேன்!!! அவர்களுக்கு உதவிகள் செய்தால் அவர்கள் பல பேர்களுக்கு உதவிகள் செய்வார்கள்!!!! ஆனாலும் ஆனாலும் என் பெயரை அதாவது எதை என்று உணர என் பெயரையும் வைத்துக்கொண்டு ஏமாற்றுகின்றார்கள் என்பதை கூட ஆனாலும் இதை என்று அறிந்து அறிந்து ஆனால் அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றேன்!!!!

பின் திருந்தினால் பார்ப்போம்!!!..... இல்லையென்றால் முருகா!!! பின் நீ உணர்த்தியும் காட்டு!!! உணர்த்தியும் காட்டு!!!

உணர்த்தியும் உணராத அளவிற்கும் கூட.... ஆனாலும் பின் பணங்கள் பணங்கள் பணங்கள் என்று சென்று கொண்டிருக்கின்றது இவ்வுலகம்!!!

ஆனாலும் இதனை நடுவில் நிறுத்தி அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானம் செய்தாலே நிச்சயம் """"""""ஓம்"""""" என்ற மந்திரம் என் தந்தையே நிச்சயம் மனிதர்களுக்கு கொடுப்பான்.... இதை உண்மை என்று நிரூபிக்க பல சித்தர்களும் வழிவழியாக வந்தவர்களும் சொல்வார்கள்!!! இன்னும் ஏராளமானதையும் கூட சித்தர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள்!!!!

நலம் நலம் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!எம்முடைய ஆசிகள்!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி  இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது உஜ்ஜைனிக்கு தெற்கே 100 கி.மீ தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான  ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது. . இத் தீவில் அமரேஸ்வரர் கோயில் என இன்னொரு கோயிலும் உள்ளது

தென்கரையில் உள்ள மமலேஷ்வரைத் தரிசனம் செய்யாமல் ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் தரிசனம் பூர்த்தியாவதில்லை. மமலேஷ்வர் சன்னதியில் தினந்தோறும் சுமார் ஒன்றேகால் லட்சம் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு லிங்கார்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதாஷ்டகம் உதயமான இடமே இதுதான். நர்மதையின் நீர்மட்டத்திலிருந்து சுமார் நூற்றைம்பது அடி உயரத்தில் காளிகா கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கு அருகே ஒரு குகையும் உள்ளது. அந்தக் குகையில்தான் குரு கோவிந்த பாதாச்சாரியர் அரிய தவத்தை மேற்கொண்டார். அந்த மேன்மை வாய்ந்த குகையில்தான் ஆதி சங்கராச்சார்யரும் தனது குருவிடமிருந்து ராஜ யோகத்துக்கான சிட்சை பெற்றதாகத் தெரிகிறது. இரண்டரை ஆண்டு காலம் தன் குருவுடன் இந்தக் குகையில் தங்கி ஆதி சங்கராச்சார்யர் ஞானம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.அந்த இடம் இங்கே உள்ளது. 

பிரணவ சொரூபமாய் ஓம்காரேஷ்வர் தரிசனம் கிடைக்கிறது. அவ்வளவு உயரத்திலும் லிங்கத்தின் கீழ் எப்போதும் தென்படும் நர்மதையின் நீர் வியப்பையும் புல்லரிப்பயும் தருகிறது ! லிங்கத்தின் மேற்புறம் தேவி பார்வதியின் பிரதிமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளங்களாக உள்ள இந்தக் கோயிலில் மற்ற தளங்களில் முறையே மஹாகாளேஷ்வர், சித்தநாத், கேதாரேஷ்வர், குப்தேஷ்வர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

ஓம்கார் லிங்கம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பாதி சதாசிவமாக ஓம்காரேஷ்வர் ஆகிறது. மறுபாதி மண் லிங்கத்துடன் ஜோதியாய்க் கலந்து அமரேஸ்வர் அல்லது மமலேஷ்வர் ஆகிறது. இவ்விரண்டும் ஓம்காரேஷ்வர் தீர்த்தத்தின் இருகரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காவேரி என்கின்ற சிறிய நதி ஓம்காரேஷ்வர் அருகில் நர்மதையுடன் இணைகிறது. விசித்திரம் என்னவென்றால் அது நர்மதையை இரண்டு முறை சந்திக்கிறது. முதல் முறை அது நர்மதை நதியுடன் கலக்காமல் கடந்து செல்வதாக நம்பப்படுகிறது! மாந்தாதா குன்றை வலம் வந்த பின் காவேரி நர்மதையுடன் இணைகிறது எனக் கருதுவோரும் உண்டு! பின்னர் சுமார் இரண்டரை கி.மீ.க்கு அப்பால் நர்மதையை மீண்டும் சந்தித்து இணைகிறது. இதை காவேரி-நர்மதையின் இரண்டாவது சங்கமம் என்று குறிப்பிடுவோரும் உண்டு. இரண்டு சங்கமங்களுக்கு நடுவே உள்ளது மாந்தாதா குன்று. ஓம் என்ற எழுத்தை ஒத்த வடிவாதலால் இவ்விடம் ஓம்காரேஷ்வர் எனப் பெயர் பெற்றது. ஒரு தீவாக உள்ள இந்த புண்ணிய இடத்தில் ஓம்காரேஷ்வர் குடிகொண்டிருக்கிறார்.

சிவபுரி, விஷ்ணுபுரி என இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது ஓம்காரேஷ்வர். சிவபுரியில் ஓம்காரேஷ்வர் எனவும், விஷ்ணுபுரியில் அமரேஸ்வர் (அல்லது மமல்லேஷ்வர்) எனவும் இறைவர் எழுந்தருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நம,
    குருவே சரணம்,
    நன்றி ஐயா🙏🌹🙏.

    ReplyDelete
  2. அருமை ஐயா நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. சுப்ரமண்யம் சுப்ரமண்யம், ஷண்முக நாதா சுப்ரமண்யம்
    சுப்ரமண்யம் சுப்ரமண்யம், ஷண்முக நாதா சுப்ரமண்யம்
    ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம், சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
    ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம், சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
    ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம், சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்
    ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யம், சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யம்
    ஹர சரவணபவ சுப்ரமண்யம், குரு சரவணபவ சுப்ரமண்யம்
    ஹர சரவணபவ சுப்ரமண்யம், குரு சரவணபவ சுப்ரமண்யம்
    சுப்ரமண்யம் சுப்ரமண்யம், ஷண்முக நாதா சுப்ரமண்யம்
    சுப்ரமண்யம் சுப்ரமண்யம், ஷண்முக நாதா சுப்ரமண்யம்

    ReplyDelete
  4. Om Saravana Bhavaya Namaha 🙏🙏🙏

    ReplyDelete
  5. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete