​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 21 January 2023

சித்தன் அருள் - 1274 - அகத்தியர் அருள் வாக்கு - 17


  1. "பிரம்மா எழுதிய விதியை, சித்தர்கள் அன்றி வேறு யாராலும் படித்துக் கூற முடியாது!"
  2. "சித்தர்களும், ஞானிகளும், இறைவனும், எங்களை வணங்குங்கள் என ஒரு பொழுதும் கேட்பதில்லை!"
  3. தீயோரிடம் நட்பு கொள்வது தீமையை கொண்டு வரும். நல்லோரிடம் நட்பு கொள்வது, நன்மையை செய்யும்!"
  4. "முருங்கை இலையை பச்சையாக உண்டு வந்தால், கெட்ட சக்திகளின் பாதிப்பு ஒருவருக்கு வராது! முருங்கை இலை, துளசி இலை, வில்வ இலையுடன், சிறிது மிளகும், ஜீரகமும் சேர்த்து உண்டால், அது சஞ்சீவி மருந்து!" (இதை அனைவரும் உள்ளுக்கு எடுத்து வாருங்கள்! என்கிறார் குருநாதர்)
  5. "108 மணிநேரம் ஒருவன் சித்தர்கள் உருவாக்கிய ஒரு திருத்தலத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தால், அவனை எந்த தீய சக்திகளும் அண்டாது என்பேன் அப்பனே! அப்படி ஒருவன் அமர்ந்து விட்டால், நல் சக்திகள் அவனை வந்து சேர்ந்துவிடும்! அதேபோல், மலையில் தங்கினால், நவகிரகங்களும் அவனை ஒன்றும் செய்ய முடியாது. அத்தனை சிறப்பு என்பேன்!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

13 comments:

  1. அருமை ஐயா நன்றி ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. //108 மணிநேரம் ஒருவன் சித்தர்கள் உருவாக்கிய ஒரு திருத்தலத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தால்// ஐயா அமர்ந்திருந்தால் என்பது தியான நிலையில் அமர்ந்திருப்பதா அல்லது திருத்தலத்தில் தங்கி இருப்பதா
    சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன்... நன்றீங்க..
    ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
    அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      ஒரு புண்ணிய தல யாத்திரை செல்லும் பொழுது, நம் மனநிலை, எண்ணங்கள், செயல்கள் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தால் போதும். அது ஒரு தவநிலை. அகத்தியப்பெருமான் யாசகனாகக்கூட இருக்கலாம் என்கிறார். அங்கு போய், மனதாலும் அங்கேயே இருங்கள். மற்றவை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணத்தை இறைவன் பாதத்தில் வைத்து விடுங்கள்.​

      அக்னிலிங்கம்!

      Delete
  3. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  4. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க

    ReplyDelete
  5. முருங்கை, துளசி, வில்வ இலை மருந்து தினமும் எடுத்து கொள்ள வேண்டுமா ஐயா

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்வி புதிதாக தோன்றியுள்ள கொரோனா பற்றி கேட்ட பொழுது அதற்கு அவர் உரைத்தது. அடியேன், இதை செய்து அருந்திய பொழுது, நல்ல பலனை கண்டேன். உடலுக்கு தெம்பும், தலையில், நெற்றியில் கட்டின நீர் மொத்தமும் இறங்கிவிட்டது. குறிப்பு: சற்று காரமாக, சூடாக சாப்பிட்டு பார்க்கவும்.

      Delete
    2. மிக்க நன்றி அய்யா

      Delete
  6. ஓம் அகத்தீசாய நமக வணக்கம் ஐயா 200 வது எபிசோட்டில் அகத்திய பெருமான் அவர்கள் விளையாட்டு சித்தர் பற்றி குறிப்பிட்டிருந்தார் ஆனால் அந்த ஊர் பற்றி குறிப்பிடப்படவில்லை அது எந்த ஊர் என விபரத்தை தெளிவு படுத்தினால் அனைவருக்கும் நலம் உண்டாகும் நன்றி ஐயா

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Thayar Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏

    ReplyDelete
  8. இலைகள் பறித்து (கடல் தண்ணீர் மாதிரி இருக்க வேண்டும் ) உப்பு தண்ணீர் விட்டு (saturated salt solution ) 5 நிமிடங்கள் பறித்த இலைகள் உப்பு தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் இலைகளை கழுவி சுத்தம் செய்து விட்டு அம்மியில் இலைகளை நன்றாக ஒட்ட ஒட்ட அரைத்து மிளகு சீரகம் சேர்த்து இறுதியில் மீண்டும் அரைத்து சிறு சிறு உருண்டை களாக உருட்டி ( சுண்டைக்காய் அளவு ) நிழழில் உலர்த்தி வைத்து எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும். தினமும் 5 உருண்டை எடுத்து வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் கொண்டு சாப்பிடுவோம். இது தான் முறை.

    ReplyDelete
  9. எதற்காக உப்பு தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றால் இலைகள் பின்புறம் கண்ணுக்கு தெரியாமல் பூச்சிகளின் முட்டைகள் இருக்கும். கண்களால் பார்த்தால் நாம் கண்டு பிடிக்க முடியாது. உப்பு தண்ணீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தால் மட்டுமே அவை நீக்கபடும். சுத்தம் செய்யாமல் நாம் சாப்பிட்டு விட்டால் பல பெரிய பாதிப்பு உண்டாகும் . ( 2012 நடந்த உண்மை சம்பவம் இது. மிகப்பெரிய டாக்டர் எந்த கெட்ட பழக்கம் அவருக்கு கிடையாது. திடீரென மயங்கி மூளை பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டு குணமடைந்து உள்ளார். ஏன் அவருக்கு தீடீரென பாதிப்பு எதனால் வந்தது என்று அவர் சாப்பிட்ட உணவு முறை ஆராய்ச்சி பண்ணிய போது அவர் தினமும் காலை நடைபயிற்சி செய்யும் பழக்கம் உண்டு.கூடவே காலை வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு பச்சை ஆக குடிக்கும் பழக்கம் உண்டு. ( நடை பாதையில் கடை போட்டு நம் கண் முன்பே அருகம்புல் மிளகு சேர்த்து அரைத்து வடிகட்டி ஒரு கப் 20rs என்று விற்பனை செய்வார்கள். அதை வாங்கி குடிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு).அருகம்புல்லை பன்றிகள் மேய்ந்த இடத்தில் இருந்து பறித்து தண்ணீர் கழுவி ஜீஸ் போட்டு கொடுத்து உள்ளனர். பன்றிகள் எச்சில் உள்ள வைரஸ் கிருமி அருகம்புல் மீது பட்டு இருக்கும் . அந்த வைரஸ் கிருமி உள்ள அருகம்புல் ஜீஸ் அவர் சாப்பிட்டதால் brain fever வந்தது. இதை அவர் கண்டு பிடித்து தகவல வெளியிட்டார். நாம் பச்சை ஆக இலைகள் சாப்பிட வேண்டும் என்றால் அந்த இலைகளை கடல் உப்பு தண்ணீர் கொண்டு கழுவி பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் கழுவி சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

    ReplyDelete
  10. முருங்கை கீரைக்கு செய்வினை முறியடிக்க கூடிய சக்தி உண்டு. செய்வினை பாதிப்பால் பெண்களுக்கு scanty bleeding ஏற்பட்டு அடிக்கடி கருசிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரி பெண்களுக்கு முருங்கை கீரை மட்டுமே உதவும்.

    ReplyDelete