​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 18 December 2025

சித்தன் அருள் - 2043 - ஸ்ரீ லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஸ்ரீ லோபாமுத்திரா அம்மாவின் திருநட்சத்திரம் (மார்கழிமாதம், சதயம் நட்சத்திரம்) 25/12/2025, வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு, மதுரையில் உள்ள சக்திமாரி அம்மன் கோவிலில் (தியாகராஜ மில் காலனி, மூலக்கரை, பசுமலை) உள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சன்னதியில் அபிஷேக ஆராதனைக்கு, அகத்தியர் அடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகத்தியப்பெருமானின் அடியவர்கள் வந்து உழவாரப் பணியும் செய்து பங்கு பெற்று, குருநாதர், அம்மாவின் ஆசி பெற்று செல்லுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

அவர்கள் அருளால், மாலை 5 மணிக்கு அபிஷேக பூஜைகளை தொடங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வருக! ஆசிகள் பெறுக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அன்னை லோபாமுத்திரா தாய் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete