உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை
நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
====================================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு
====================================
ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே.
இன்னும் பல வடிவங்களில், மனிதனுக்கு நிச்சயம், அறுவை சிகிச்சைதான் பயன்படுகின்றது.
அதை எப்படி தடுத்து நிறுத்த, இப்பொழுது வாக்குகள் யான் பரப்புவேன்.
அதன் முன்னே, குருநாதன் அகத்தியனை பாடி துதித்து பாடுங்கள்.
அவன் அருளாலே, யான் பல வித்தைகள் கற்றுக் கொண்டேன்.
அதனால், இச் சிறுவர்களை பாடச் சொல்லுங்கள் பாடலை. நன்றாக அனைத்து சித்தர்களும் மகிழ்வார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்களை பாடச் சொல்லி, அவர்கள் அனைவருக்கும் இறைவன் அளித்த வாய்ப்பை அங்கு எடுத்துரைத்தார். தேரையர் சித்தர் இனி வரும் காலங்களில் உலகம் முழுவதும் நோய்கள், அறுவை சிகிச்சைகள் அதிகரிக்க போகின்றது. அதைத் தடுக்க வழி காட்டுவதாகவும், தனது குருநாதர் அகத்தியர் பல வித்தைகள் கற்றுத் தந்ததாகவும் தேரையர் சித்தர் அவர் கூறுகிறார். முதலில் அகத்தியரைப் பாட வேண்டும் என வலியுறுத்தி, சித்தர்கள் யாருக்கு பிடிக்கிறதோ, யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே இந்த பணியைச் செய்வார்கள் என்று விளக்குகிறார்.)
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் - தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்களை தேரையர் சித்தர் பாட சொல்லியதை உணர்ந்து பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அதனால் தான், நம்ம ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். ஏனென்றால் சுவடியில் என்ன வாக்கு வரும் என்று எனக்கும் தெரியாது. சுவடியை படிக்க எடுத்தா தான் தெரியும். [ தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் ] - அவங்களுக்கு சான்ஸ் கொடுத்திருக்காரு. ஐயா, பாடுங்க, ஐயா. )
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்: - ( மேடையின் கீழ் இருந்து , அமர்ந்தவாறு பாட ஆரம்பித்தார்கள் ) ஓம்….
தேரையர் சித்தர் :- ( அவர்கள் படுவதை இடைமறித்து ) அறிந்தும் இதைத் தன்னை நிறுத்து. மேடை தன்னிலே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அவர்கள் மேடையின் கீழே இருந்து பாடுவதை நிறுத்தி , அவர்கள் அனைவரையும் மேடைக்கு மேலே ஏறி வர சொல்கிறார்) .
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- மேடை தன்னிலே, கீழ்.
சுவடி ஓதும் மைந்தன் :- மேடையில இருக்கிறவங்க எல்லாம் கீழ போக சொல்கிறார்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (சிரிப்புடன் , பலத்த கைதட்டல்கள்)
தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்:- ( அனைவரும் மேடை ஏறினார்கள். அடியவர்கள் அவர்களை அமர வைத்தார்கள். மேடையில் அமர்ந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கி அமர்ந்தனர். )
…………………….
……………………
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்:- ஓம், திருச்சிற்றம்பலம், தொல்லை இரும்பிறவி, சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து, ஆனந்தம்…
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவர்களுக்காக நிச்சயம் தாளம் இடுங்கள். அறிந்தும் சில சில உபகரணங்கள்
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ் பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் சிவபுராணம் பாட, அங்குள்ள அடியவர்கள் அனைவரையும் மெதுவாக தாளம் இட அன்புடன் தேரையர் சித்தர் உத்தரவு. எனவே , இவர்கள் பாடுவதினால், அய்யா நீங்கள் அனைவரும் , மெதுவாக தாளம் இடுங்கள் - இவர்கள் பாடட்டும்).
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- ஏன் எவை என்று அறிய, இவர்கள் முதன்மை ஆனவர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதற்காக நான் இதெல்லாம் சொல்றேன்னா, இவங்கதான் இங்க முதன்மை ஆனவர்கள்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- மதிப்பை அளிக்கக்கூடிய இடத்தில், மதிப்பளிப்பவனே சிறந்த மனிதன்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (கைதட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- மதிப்பளிக்கிற இடத்துல யாரை மதிப்பு அளிக்கிறாங்களோ, அவர் சிறந்த மனிதன்.
தேரையர் சித்தர் :- அப்படி இல்லை என்றால், பின் அவன் மனிதன் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (யாருக்கும் மரியாதை கொடுக்கணுமோ, அவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். அவன்தான் மனிதன். அப்படி மரியாதை கொடுக்காத தெரியாவிடில் , அவன் மனிதனே இல்லை.)
தேரையர் சித்தர் :- இறைவனையும், இறைவனும் அவனை நெருங்கப் போவதில்லை. என்ன வணங்கினாலும்.
அறிந்தும் இவைத்தன், இவர்கள் பாடுவது புண்ணியம். அப் புண்ணியத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- சொல்லி சொல்லி பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- பாடுங்க, ஐயா. மெதுவா, தாளம் தட்டுங்க, ஐயா.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்:-
(சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள் )
ஓம்………………..
திருச்சிற்றம்பலம்
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே- எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள் வாழ்க……
=============================================
( இங்கு அடியவர்கள் அவசியம் பின் வரும் யூடூப்பில் ( YouTube ) இவ் திறமை மிகு மாற்றுத்திறனாளி சிறுவர்கள் , கையை வைத்து பிரெயில் முறையில் பாடிய நிகழ்வை அவசியம் கட்டாயம் பாருங்கள். மாபெரும் உந்து சக்தி உங்களுக்குள் பிறக்கும்.
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=6512s
இவ் சிறுவர்கள் பயன்படுத்தும் அல்லது பிரெயில் (புற்றெழுத்து) முறையை அறிய பின்வரும் பதிவில் தெரிந்து கொள்ளவும்.
https://ta.wikipedia.org/wiki/பிரெயில்_எழுத்து_முறை
இப்படி இவ் சிறுவர்கள் , சிவபுராணத்தை , இவ் கஷ்ட நிலையிலும் பாடும் பொழுது அளவில்லா மகத்தான புண்ணியங்கள் உண்டாகும். இவர்களை ஒப்பிடும் போது , மனிதர்களுக்கு உள்ள எந்த ஒரு பிரச்சினைகளும் ஒரு பிரச்சினையே இல்லை. தன்னால் இயலாத போதும் , முயன்றால் பெரும் புண்ணியம். )
=============================================
(மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் சிவபுராணம் பாடி முடித்தவுடன்)
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த மாபெரும் கைதட்டல்கள் - மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்……)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h06m09s
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் பாடல்கள் பாட ஊக்குவித்தார்கள் )
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்:- ( பின் வரும் பாடலை பாடினார்கள்.)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h06m23s
(சிறுவர்கள் பாடிய அந்த பாடலின் வரிகள் உங்கள் பார்வைக்கு )
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்..அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய...
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய...
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
அருணகிரீசனே...சிவமலை வாசனே...
அமுதென ஆகுமே...உன் திரு நாமமே...
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே...
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே...
ஓம் நமஹ... சிவனே நமஹ...
ஓம் நமஹ... ஹர ஓம் நமஹ...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே... தினம் உன்னை போற்றிடும்...
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்..அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்...
சிவாய நமசிவாய எனும் நாமம்...அது விடாத விணை தொடாத படி காக்கும்…
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
( பாடல் நிறைவு )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h09m47s
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள் - பலத்த சங்கு நாதத்துடன்)
சுவடி ஓதும் மைந்தன் :- பாடுங்க. பாடுறீங்களா? ஏதாவது பாடுறீங்களா?
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்: - போதும் அய்யா. நன்றி.
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து யாருக்கு என்ன நலன் என்பதை எல்லாம் உரைத்திடுமே. உரைத்திடுமே, இதனைத்தன் ஈசன் எதை என்று யாருக்கு இறங்குவான்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( தேரையர் சித்தர் என்ன சொல்றாருன்னா, இறைவன் யாருக்கு இறங்குவார்? உங்களுக்கெல்லாம் தெரியல, கஷ்டப்பட்டு நொந்து, ஐயோன்னு, அவங்களை தான் இறங்குவார்ன்றாரு. )
தேரையர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் இவர்களையும் பார்த்தால் . பின் அவை தன், பின் உங்களுக்கும் புண்ணியம். இப்படித்தான் எங்களால் புண்ணியத்தை வாங்கித் தர முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவங்க எல்லாம் பாடும் பொழுது புண்ணியம் என்று சொல்கின்றார். புண்ணியம், அவங்க அதை பாடினாலே, ஈசன் அவர் பார்ப்பாராம். கஷ்டப்பட்டு வாழ்க்கையில, நொந்து பாடுறவங்களை தான் ஈசன் வந்து பார்ப்பாராம். அடடா, இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்து, இவங்க நம்மை மீண்டும் பார்க்கிறார்களே !!! , அவங்களுக்காக ஐயோன்னு பாவப்படுவாராம். அது தான் புண்ணியமாம். அதனால இவங்க பாடுறதுனால அந்த புண்ணியம் , சிவபெருமான் உங்களுக்கு கொஞ்சம் கொடுத்திருக்காரு. )
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்படித்தான் சித்தர்கள், நாங்கள் உங்களை, பாவங்களை தொலைச்சு, தொலைச்சு - கொஞ்சம் கொஞ்சம் புண்ணியத்தை ஏற்ற முடியும் என்று சொல்கின்றார் அய்யா ).
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து இவர்கள் போல் நிலைமை, பின் யாருக்கு???
சுவடி ஓதும் மைந்தன் :- இவர்கள் போல் நிலைமை யாருக்காவது இருக்குதா? உங்களை கேட்கிறார். இவரைப் போல் நிலைமை யாருக்காவது இருக்கா?
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலர் ) யாருக்கும் இல்லை.
தேரையர் சித்தர் :- இதைத்தன் மனிதன் மூடனே, கஷ்டம் கஷ்டம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மற்றவர்கள் பற்றி உணராத மனிதன் மூடன், முட்டாள் என்று சொல்கின்றார். அப்ப, தன்னை பற்றியே நினைத்திருக்கலாம். என்ன லாபம்? ஒன்றும் இல்லை. அப்போ , அவர்களுக்கெல்லாம் இறைவன் தரமாட்டார். மத்தவங்களுக்காக, ஐயோ, அவங்க கஷ்டப்படுறாங்களே, அவங்க பாவம்னு யார் பார்க்கிறார்களோ. பாருங்க, அவங்களுக்கு மட்டும் தான் இறைவன் இறங்குவார். எனக்கு வேணும், எனக்கு இது வேணும் என்று சொல்பவர்களுக்கு இறைவன் இறங்க மாட்டார். )
==========================================
# தேரையர் சித்தர் - இப்போது அங்கு புண்ணியம் எப்படி செய்யவேண்டும் என்று ஒரு மகத்தான செயல் முறை பாடம் எடுத்தார்கள்.
==========================================
தேரையர் சித்தர் :- இவர்களுக்காக நீங்கள் செய்யும் உதவி அனைவரும் எழுந்து, பின் சிவபுராணத்தை ஓதுங்கள். இவர்களுக்கு கடை நாள் வரையில் அனைத்தும் கிட்டட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க செய்யும் மரியாதை, இவங்களுக்கு - எல்லாரும் எழுந்து நின்று , சிவபுராணம் பாடுங்க. அந்த புண்ணியத்தாலே இவங்களுக்கு கடைசி நாள் வரை என்னென்ன தேவையோ, அது இறைவன் வழங்கட்டும். இது புண்ணியம் என்று சொல்கின்றார். பாடுங்கம்மா, எல்லாரும் எழுந்து நின்று பாடுங்கம்மா. ஐயா, எல்லாரும் வேண்டிக்கோங்க. இவங்களுக்கு கடை நாள் வரையிலும் இறைவன் துணை இருந்து எல்லா நலன்களையும், எல்லா வளங்களையும் பெற்று வாழ்க. இவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நீங்க நினைச்சுக்கினீங்கன்னா, உங்களுக்கு அது புண்ணியம். அந்த புண்ணியத்தால, இது, இப்படித்தான் புண்ணியம். கொஞ்சம் கொஞ்சம் சேர்க்க முடியும். ஏன்னா மனுஷன் கையில பாவம் அதிகமா இருக்குது. அப்ப நீங்க வேண்டிக்கோங்க. )
===============================================
எந்த சுய நலனையும் வேண்டாமல், கூட்டுப் பிரார்தனைக்கு வந்திருந்த மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் - பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் அனைவருக்கும் இறைவன் , சித்தர்கள் அளித்த மாபெரும் கருணையை நன்கு உணர்ந்து நெகிழ்க. மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. உணர்ந்து பார்த்தால் கண்கள் கடலாகும். கண்கள் தளும்பி வழியும் மகத்தான நிகழ்வு. அவசியம் காணொளியை முழுவதும் காணுங்கள்.
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h11m59s
================================================
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( அனைவரும் எழுந்து நின்று ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்க சிவபுராணம் பாடினார்கள். மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் வாழ் நாள் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினார்கள். ஓங்கி ஒலித்தது சிவபுராணம். அந்த காட்சி இங்கு உங்கள் பார்வைக்கு)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h11m59s
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (அவ் மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் நலமாக இருக்க வேண்டி, சிவபுராணம் பாடி நிறைவு செய்தனர். )
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து நன்னாளில் நீங்கள் அனைவருமே கேட்கின்றீர்கள். எனக்கு அவை தேவை இவை தேவை என்று. ஆனால் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க இறைவனை கேட்கிறீங்க. எனக்கு அது தேவை. இது தேவைன்னு. அனால் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?)
தேரையர் சித்தர் :- இதனால் புண்ணியத்தை யாங்கள் பின் வழங்குகின்றோம். இதனாலே நிச்சயம் பின் நல் முறையாகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நாங்க புண்ணியத்தை உங்களுக்கு வழங்குகிறோம். அந்த புண்ணியத்தால் பெற்றுக்கொண்டு நீங்க நல்லா இருப்பீங்க.)
தேரையர் சித்தர் :- இதை அறிவித்து இவர் தம் நன்றி. அறிந்தும் இதைத்தன் புரியா, பின் புரிந்தும், இதைத்தன் உணர்ந்து, இப்புண்ணியம் சிறிது ஏற, பாவம் தொலையும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இது மாதிரி மற்றவர்களுக்காக நம்ம நினைச்சு பாடுகின்ற பொழுது கொஞ்சம் பாவம் தொலைஞ்சு புண்ணியம் பெருகும்.
தேரையர் சித்தர் :- இப்படித்தான் உங்களுக்கு நல்லது செய்ய முடியும் சித்தர்களால்.
தேரையர் சித்தர் :- இவை அறிவித்து, நிச்சயம் எம் கஷ்டம் அறிந்தும், இவை தன், பின் அவை இவை என்றெல்லாம் சொல்பவருக்கு, அவ் கஷ்டம் தீராது
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்போ , தன் சுயநலத்துக்காக, எனக்கு கஷ்டம். அந்த இது இந்த இதை கேட்டுக்கொண்டிருக்கும் போது, உங்கள் கஷ்டமே தீராது என்று சொல்கின்றார். கஷ்டமே தீராது. அப்போ நாம வந்து என்ன பண்ணனுமாம்?.... மத்தவங்களை பத்தி யோசிக்கணும். அப்ப யோசிச்சோம்னா, அப்ப இறைவன் என்ன செய்வார் ? )
தேரையர் சித்தர் :- இதைத்தன் அறிந்தும் புண்ணியத்தை சிறுக சிறுக கொடுக்க அறிந்தும். எத்தனை அபிஷேகங்கள் எத்தனை எத்தனை இறைவன் வந்து பின் ஆசி வழங்குவானா என்ன? நிச்சயம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க மனசு சரியில்லை என்றாலும் , மற்றவர்களுக்காக வந்து, பாவம் என்று இறங்காமல் ஒன்னும் நடக்காது. உங்கள் கஷ்டம் தீராது. நீங்க எத்தனை திருத்தலங்கள் போனாலும் சரி. எத்தனை அபிஷேகங்கள் பண்ணாலும் சரி. எத்தனை குளத்துல நீராடினாலும் சரி. புண்ணியம் என்பது கிடைக்காது. )
தேரையர் சித்தர் :- இதைத்தன் மனிதன் இதைத்தான் மூடனாக இருக்கின்றானே என்று கலியுகத்தில் யாங்கள் பின் சித்தர் பெருமக்கள்.
தேரையர் சித்தர் :- இதைத்தான் நன்றாக உணர்ந்த விடில் நிச்சயம் உங்களை வெல்லலாம்
தேரையர் சித்தர் :- அப்படி இல்லை என்றால் கஷ்டத்தோடே சாக வேண்டும்
தேரையர் சித்தர் :- இதைத்தன் கடைசியில் இறைவன் இல்லை என்று
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப மனுஷன், அட போங்க. எவ்வளவு கஷ்டப் பட்டோம். இறைவன் கோவிலுக்கு போனோம். அதை செய்தேன். இதை செய்தேன். என்ன ஆச்சு எங்களுக்கு ? ஒன்னும் நடக்கலையே … அப்ப மனிதன் என்ன சொல்லுவான்??? இறைவன் இல்லைன்னு சொல்லிடுவான் )
தேரையர் சித்தர் :- ஆனால் மனிதனின் எவ்வாறு அறிவு படைத்திருக்கின்றான்.
தேரையர் சித்தர் :- இதனால்தான் ஒருவனுக்கு சொன்னால் நிச்சயம் தன்னில் கூட, அவன் அப்படியே பின் எதை என்று சுயநலத்தாக கேட்டு தான் மட்டும் வாழ்வான். இதனால் சித்தர்கள் வருங்காலத்தை இன்னும் பின் உருவாக்குவோம். கர்மங்களை கர்மாத்தை அதாவது பாவத்தை அழிப்போம். புண்ணியத்தை சேர்ப்போம்.
தேரையர் சித்தர் :- அப்பா இப்படித்தான் எங்களால் செய்ய முடியும் அறிந்தும் கூட.
======================================
# நிச்சயம் புண்ணியம் இருந்தால் இறைவன் உன்னிடத்தில்
======================================
தேரையர் சித்தர் :- நிச்சயம் புண்ணியம் இருந்தால் இறைவன் உன்னிடத்தில்.
தேரையர் சித்தர் :- அப் புண்ணியம் இல்லை என்றால், இறைவனை தேடி தேடி கண்களும் ஓய்ந்தது. வயதும் ஓய்ந்தது பின் இறப்பு.
தேரையர் சித்தர் :- அறிந்தும் பின் இடுகாட்டில்.
தேரையர் சித்தர் :- பின் மனிதனாக பிறந்ததற்கு அர்த்தமே இல்லை.
தேரையர் சித்தர் :- புண்ணியத்தை ஏங்க தருகின்றோம் அனைத்தும் நீங்கள் பின் உணர்ந்து கொள்ள.
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஓதுபவனும் பத்தாயிரத்தி ஒன்று
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஐயா இதை ஓதுபவன், எனக்கு வந்து , ஒரு ₹10001 காணிக்கை கொடுக்கணும் )
===============================================
தேரையர் சித்தர் சுவடி ஓதும் மைந்தன் மூலம் ரூ.10,001 காணிக்கை அளிக்க உத்தரவிட்டார். அப்போது இறைவன் எப்படி பணத்தை அள்ளி கொண்டு வந்தார் - கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் மூலம் என்று பின் வரும் காணொளியை பார்த்து நெகிழ்ச்சி அடைக்க.
===============================================
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h25m30s
( கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் மூலம் அங்கு பணங்கள் குவிந்து விட்டது சில மணித்துளிகளில் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஏன் இது மாதிரி சொல்றாங்கன்னா, இறைவன் கஷ்டப்படுபவர்களுக்கு, உண்மையான கஷ்டப்படுபவர்களுக்கு சத்தியமா இறங்குவார். முதல் உரிமை கொடுப்பார். அது தான் இறைவனுடைய கருணை. அப்ப இறைவன் நம்மை கைவிடமாட்டார். சத்தியமாக வந்து. மற்றவருக்காக நம்ம நினைச்சு தியானமும் எல்லாம் செய்யும் பொழுது, நிச்சயமாக ஒரு நாள் இறைவன் கொடுப்பார். ஓலைச்சுவடியில் என்ன வந்திருக்கு பாருங்க? இவங்க எப்படி என்று இறைவனுக்கு இறைவனுக்கு தெரியும் இவர்களை பற்றி. அதேபோல உங்களை பத்தி இறைவனுக்கு தெரியாதா?? உங்களை பத்தி இறைவனுக்கு தெரியாதா??? அப்ப அந்தந்த நேரத்தில் நிச்சயமாக இறைவன் வந்து காப்பாற்றுவார். அவ்வளவுதான். )
சுவடி ஓதும் மைந்தன் :- (ஐயா எல்லாம் கொடுங்க ஐயா. ஐயா உட்காருங்க ஐயா. ஏன்னா இவர்கள் மாதிரி வாழ முடியாது யாரும். எல்லாருக்கும் சொந்தம் இருக்கும். பந்தம் இருக்கும். எல்லாம் இருக்கும். ஆனா இவர்கள் இவரால எப்படி இருக்காங்க பாருங்க. உங்களுக்கு அப்பா அம்மா இருக்காங்க எல்லாரும் இருக்கிறாங்க வந்து எனக்கு அது வேணும் இது வேணும்னு கேட்டோம்னா முட்டாள் என்றார். எனக்கு சுயநலத்துக்காக வந்து கேக்குறவன் எல்லாம் தேவையில்லாதவன் அப்படி வருது.)
சுவடி ஓதும் மைந்தன் :- மத்தவங்களை பத்தி யாரு நினைக்கிறீங்களோ அதுதான் உண்மையான பக்தி. உண்மையான புண்ணியம். அந்த புண்ணியத்துக்காக மட்டும்தான் சித்தர்கள் வருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் கஷ்டப்படுவது இறைவனுக்கு தெரியும் யாரோ ஒருத்தர் மூலமா சத்தியமா வந்து கை கொடுத்து காப்பாற்றுவார். இதை உணரணும் முதல்ல. சிறந்த எடுத்துக்காட்டு இவங்க.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர் :- ( ஐயா அன்பர்களுக்கு வணக்கம். இந்த பார்வையற்ற இல்லத்தை நடத்தி வரக்கூடிய பொறுப்பாளர் திரு வேல்முருகன் அவருக்கும் பார்வை திறன் கிடையாது. தன்னைப்போல உள்ளவங்களுக்கு உதவி புரிந்து வருகின்றார்)
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் அருளால் - வெற்றிலை பாக்கு தட்டில் , அடியவர்கள் அளித்த நன்கொடையை வைத்து அங்கு வழங்கினார்கள். திருக்கைலாய வாத்தியங்கள் ஓங்கி ஒலித்தது அந்த நெகிழ்வான தருணத்தில்.)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h31m06s
====================================
வணக்கம் அடியவர்களே , தூய்மை விழிகள் அமைப்பிற்கு, இவ் சிறுவர்களுக்கு உதவி செய்ய, மதுரை திரு.பரமசிவம் அய்யா (+ 91 98421 70513 ) அவர்களை தொடர்பு கொள்க. மேலும் பின்வரும் விவரங்களை தெரிந்து தொடர்பு கொண்டு, உங்களால் இயன்ற புண்ணியங்கள் செய்க.
Contact:- Mr. Vel murugan
Address :- Thuimai Vizhihal Trust, Azhagusundaram Nagar, Near Pykara, Palaganatham, Madurai, Tamil Nadu
THUIMAI VIZHIHAL TRUST
EXEMPTION UNDER 80G ORDER NO: ITBA/EXM/S/12AA/2018-19/1013589630(1)/80G
BANK DETAILS:-
NAME: THUIMAI VIZHIHAL TRUST
BANK: KARUR VYSYA BANK
BRANCH: MADURAI NORTH
A/C NO: 1767115000000934
IFSC CODE: KVBL0001767
GPay No.97860 57373, 82200 31699
Website : https://www.thuimaivizhihal.org
Email id :- thuimaivizhihal@gmail.com
Mobile :- 82200 31699 / 97860 57373
தூய்மை விழிகள் அமைப்பிற்கு, இவ் சிறுவர்களுக்கு உதவி செய்ய, மதுரை திரு.பரமசிவம் அய்யா (+ 91 98421 70513 ) அவர்களை தொடர்பு கொள்க. மேலும் விவரங்களை தெரிந்து தொடர்பு கொண்டு, உங்களால் இயன்ற புண்ணியங்கள் செய்க.
====================================
(மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் அவர்கள் உரை அளித்தார்கள். அந்த உரையை பின் வரும் பதிவில் காண்க)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h35m03s
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - ஐயா வணக்கம். திரு சிவனுடைய நாமத்தின் அருளாலே, இங்கு குழுமி இருக்கக்கூடிய அத்தனை புண்ணியவான்களுக்கும் எங்களுடைய தூய்மை விழிகள் நிறுவனத்தின் சார்பாக நான் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - நானும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தான். 2013 ல, இந்த இல்லத்தை வந்து 23 ஆம் அகவையில் துவங்கினேன். துவங்கும்போதே எங்களது நிறுவனத்தில் அறிமுகமானவர் தான் இங்கே வீற்றிருக்க கூடிய மதிப்புமிகு பரமசிவம் ஐயா அவர்கள். ஸ்ரீ அகஸ்தியர் இறையருள் மன்றம் என்ற பெயரில் எங்களோடு நட்பு கொள்ள துவங்கினார். அந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை, ஞாயிறு உதிக்கிறதோ இல்லையோ இவரோட இட்லி எங்க வீட்டு தேடி வந்துரும்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - எங்களுக்கு மட்டுமல்ல. எங்களை மாதிரி இருக்க கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு நிறுவனங்களுக்கு இவர் வந்து உதவி செய்றாரு. இங்க இருக்கக்கூடிய மத்த உள்ளங்களை என்னால உணர முடியல. அவங்க உங்களை எல்லாத்தையும் எனக்கு அறிமுகம் கிடையாது. ஆனா இருந்தாலும் இங்க இருக்கக்கூடிய அன்பர்கள் நிறைய எங்களுக்கு வந்து கொடுப்பதை, ஐயா வந்து என்கிட்ட அப்படியே கொடுத்து இதுநாள் வரைக்கும் எங்க இல்லத்துல கிட்டத்தட்ட ஒரு 60க்கும் மேற்பட்ட பார்வை மாற்றத்தினுடைய பிள்ளைங்க, உயர்கல்வியில படிக்கிறாங்க.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - எல்லாமே பிஏ பிஎட், அட்வகேட்டா படிக்கிறாங்க. ஆசிரியரா படிச்சிட்டு இருக்காங்க. ஐஏஎஸ்க்கு படிச்சிட்டு இருக்காங்க. இப்படி எல்லாமே படிக்கிறதுக்கு கல்வி கட்டணம் செலுத்தி தான் படிக்க வைக்கிறோம். எல்லாத்துக்குமே பீஸ் கட்டுறோம். அப்படி பீஸ் கட்டும்போதும் பரமசிவ ஐயா அவர் வந்து ஏதாவது தொகை கொடுத்து உதவி செஞ்சு இதுநாள் வரைக்கும் எங்க நிறுவனத்துக்கு பெருந்துணையா இருக்கக்கூடிய ஐயா அவர்களுக்கும், இந்த அகத்தியர் இறையருள் மன்ற அன்பர்களுக்கும், நாங்க நன்றி சொல்லணும்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - ஏன்னா இறைவன் வந்து எந்த ஒரு மதத்தின், எந்த ஒரு இறைவனா இருந்தாலும், அவர் நேரடியா வந்து காட்சி தர மாட்டார். உங்களை மாதிரி இருக்கவங்க, இந்த மாதிரி கொடுக்கணும், அப்படின்ற நல்ல மனிதர்கள் வழியாதான், நீங்க எந்த புராணம் எந்த இதிகாசங்களை பார்த்தீங்கனாலும், இறைவன் வந்து மனித வடிவில், இல்ல ஏதோ ஒரு வடிவில் தோன்றி தான் பிறருக்கு உதவுறார்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - ஏன்னா அதுதான் இறைவனுடைய ஒரு அவருடைய தன்மை. இறைவன் எப்பவுமே நேரடியா தோன்றது இல்ல. நல்ல மனிதர்கள் வழியா காட்சி கொடுப்பாங்க. அந்த நல்ல மனிதர்கள் வழியா இறைவனை நாங்க இன்னைக்கு எல்லாரையும், இங்க இருக்கக்கூடிய அத்தனை நல்ல உள்ளங்களையும் நாங்க இறை வடிவுல தான் நாங்க பார்க்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க எப்படி பேசுறாங்க பார்த்தீங்களா? அதை கேளுங்க முதல்ல நம்ம இறைவனை தேடி, தேடி போறோம். அவங்க வந்து ஒருவேளை உணவு கிடைக்குமா? என்ற நிலையில் உள்ளார்கள். ஆலால் அவங்க என்ன சொல்றாங்க பார்த்தீங்களா? உங்களை நான் இறைவனா பார்க்கிறேன்னு சொல்றாங்க. இதுக்காவது நீங்க மதிப்பு கொடுக்கணும்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - அது மாதிரி நாங்க வந்து, மற்ற நிறுவனங்கள் மாதிரி கவர்மெண்ட் எயிடோ , ஃபாரின் எயிடோ இதெல்லாம் நான் வாங்குறது இல்ல. சின்ன சின்ன நன்கொடையாளர்கள் உங்கள மாதிரி தர்றவங்களை வச்சு, ஒரு சின்ன கட்டடம் வாடகை கட்டடத்துல தான் நான் செயல்பட்டாலும், நான் எப்பவுமே எனக்கு ஒரு தேவை இருந்தா மட்டும்தான் யார்கிட்ட இருந்தாலும் உதவி கேட்போம்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் : - ஆனா நாங்க இன்னைக்கு வந்து இறை பிரார்த்தனைக்காக தான் வந்தோம். அதுல நீங்க இன்னைக்கு எவ்வளவு……
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அதுதான் இறைவன். இவங்க எதுவுமே எதிர்பார்க்கல. வந்தாங்க இது மாதிரி கிடைக்குமான்னு சொல்லிட்டு எதிர்பார்க்கல. அதுதான் இறைவன். ஒரு நாள் உங்களை, எங்க வச்சு, எந்த நேரத்துல, எந்த காலத்துல, இடம் பொருள் ஏவல், எங்க கொடுக்கணுமோ, அங்க அப்படி கொடுப்பார்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- இது சத்தியம். ஏன்னா இவங்க சிறந்த எடுத்துக்காட்டு. ஏன்னா இவங்க வந்து ஏதோ இறைவன் நடத்துறாங்க. நம்ம பார்க்க வந்தாங்க. ஆனா இது மாதிரி நடக்குமா என்பது தெரியாது.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் :- ஐயா பரமசிவம் ஐயா என்கிட்ட கேட்டாரு வண்டிக்கு அந்த வாடகை காசு எல்லாம் நான் கொடுத்துறேன். சார் நான் சொன்னேன். சார் நீங்க எங்க கூப்பிட்டாலும், இது உங்க பிள்ளைங்க. நீங்க கொடுக்கிற இதுல நாங்க வளர்றோம். எங்கனாலும் நாங்க வருவோம். பணமே எங்களுக்கு வேண்டாம்னு தான் சொல்லி நான் இங்க வந்தேன்.
அதுதான் உண்மை. ஏன்னா இறைவனுடைய சன்னிதானம் மாதிரி இங்க சன்னிதானத்துல நின்னு நான் பொய் சொல்ல மாட்டேன். நான் எப்பவுமே இந்த தொகை வந்து, எப்பவுமே நான் சொன்ன மாதிரி எதுக்கு கொடுக்குறாங்களோ, நான் தேவை இருந்தா மட்டும் தான் கேட்பேன். ஆனா இன்னைக்கு எதேர்சையாக இந்த வந்த தொகையை வந்து, எதுக்காண்டி செலவு பண்ண போறோம் அப்படின்றதையும், நான் எப்பவுமே கொடுக்கிறவங்க கிட்ட நான் தெரியப்படுத்துறது வழக்கம்.
இங்க நிறைய பேர் நீங்க இன்னைக்கு தொகை கொடுத்திருக்கீங்க இதை நான் எதுக்கு பயன்படுத்த போறேன்றத சொல்லிடுறேன். இந்த தொகை பத்துமா பத்தாதான்றது எனக்கு தெரியாது மேற்கொண்டு வந்தாலும் நாங்க அதை யார்கிட்டயாவது தேவைகளை கேட்டு பூர்த்தி பண்ணிக்கிறோம்.
அடுத்த மாதம் இந்த மாதிரி பார்வை இல்லாத பிள்ளைங்களும் இந்த உலகத்தை ரசிக்கணும் அவங்களும் சுத்தி பார்க்கணும்ன்றதுனால ஒவ்வொரு…
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாருமே ஆசைப்படுறீங்க. உங்க பிள்ளைகளோட நான் அங்க போகணும், இங்க போகணும் என்று. ஆனால் இவங்களை யார் கூட்டிட்டு போறது???? இதுதான் இறைவன். சரியான நேரத்தில் இறைவன் உணர்ந்து, வர சொல்லி இந்த ஓலைசுவடியில் வந்து சொல்றாரு. இதுதான் இறைவன். அதே மாதிரிதான் உண்மையான அன்பு செலுத்தணும். அந்த உண்மையான அன்பு செலுத்தினால், ஒரு நாள் இல்ல ஒரு நாள், இறைவன் கண்டிப்பா சத்தியமா கொடுப்பார்.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் :- அதனால நாங்க வந்து ஏதாவது ஒரு இரண்டு நாள் மூன்று நாள் திருச்செந்தூர் போயிட்டு அப்படியே எங்கயாவது ஒரு ரெண்டு நாள் மூணு நாள் இவங்கள ஃபுல்லா சுத்தி காட்டுவோம். அவங்கள வந்து ரசிக்க செய்வோம் அதனால இவங்களால பார்க்க முடியாது. ஆனா வந்து அருவியில குளிக்க வைக்கிறது. கடல்ல குளிக்க வைக்கிறது ஸ்ரீ அகஸ்தியர் அந்த அருவியில போய் அவங்கள குளிக்க வைப்போம். இந்த மாதிரி அடுத்த மாசம் நாங்க வந்து ஜனவரில கூட்டிட்டு போலாம்னு ஒரு திட்டமிட்டு இருந்தோம். அதுக்காக நாங்க யார்கிட்டயாவது நன்கொடை கேட்கணும் அப்படின்னு யோசிச்சுட்டு இருந்த நேரத்துல நீங்க கொடுத்த இந்த நன்கொடையை இவங்களும் இந்த இயற்கையும் இந்த பிரபஞ்சத்தையும் பார்க்கட்டும் ரசிக்கட்டும்
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் :- அதுக்கு உங்களோட ஒத்துழைப்புக்கும் அன்புக்கும், நீங்க கொடுத்த தொகை, நான் செலவு பண்ணுவேன். அப்படி நாங்க பயணம் போற நேரத்துல எடுக்கக்கூடிய புகைப்படங்களை என்கிட்ட பரமசிவம் ஐயாவோட நம்பர் இருக்கு. நான் அதுல பகிர்றேன். அதை ஐயா அவங்க எல்லாத்துக்கும் பகிர்வாங்க. நீங்களும் அதை பார்த்து, இது மாதிரி இருக்கிற எங்களை மாதிரி இருக்கிற மாற்றுத் திறனாளிகள். ஒரே அருள்தான். எங்களோட அன்றாட இறை பிரார்த்தனை நாங்க எப்பவுமே என்ன செய்வோம் அப்படின்னா எல்லாம் எல்லாம் பெற வேண்டும் இங்கு இல்லாமை எனும் நிலை மாற வேண்டும். மனிதநேயம் மலர வேண்டும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வு செழிக்க வேண்டும்.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் பொறுப்பாளர் திரு வேல்முருகன் :- அதுதான் எங்களோட டெய்லியும் ஒரு பிரார்த்தனையா இருக்கும் எந்த ஒரு பயனையும் கருதாதல் நீங்கள் செய்த உதவி கடலை விட மலையை விட பெரிதானது இந்த நேரத்துல நாங்க எங்களோட தூய்மை விழிகள் பார்வையற்றோர் பிள்ளைகள் அத்தனை பேரின் சார்பாக அன்றாடம் எங்களது இறை பிரார்த்தனையில் நாங்கள் உங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இணைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்வோம் என்று உங்களிடமிருந்து அன்போடு விடைபெறுகின்றோம் நன்றி ஐயா.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
தேரையர் சித்தர் :- அப்பா , இவர்களுக்காவது சில பாவங்கள் தொலையட்டும். நீங்கள் இவர்களுக்காவது பாடலை பாடிட்டு, நிச்சயம் தன்னில் கூட இறைவன் இறங்குவான். சில பாவ விதிகளை மாற்றுவான். புண்ணியங்கள் சேர்ப்பான். அதற்காகவது நீங்கள் பாடுங்கள்.
=====================================
(அங்குள்ள கூட்டுப்பிரார்த்தனை அடியவர்களுக்காக இவ் மாற்றுத்திறனாளி சிறுவர்களை இறைவனை வேண்டி பாட அருளினார்கள்)
=====================================
கூட்டு பிரார்த்தனை அடியவர் :- ஐயா ஒரு தகவல் சொல்லிடுறேன். நம்ம வேல்முருகன் அய்யா , வந்து கொரோனா பீரியட்ல இவங்களுக்கே உதவி தேவைப்படுது. ஆனா கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் குடும்பங்களுக்கு பார்வையற்ற குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் எல்லாமே கொண்டு போய் கலெக்டர் உதவியோட கொண்டு போய் கொடுத்திருக்காரு. இவங்களுக்கே உதவி தேவைப்படுது. ஆனா இவங்க மத்தவங்களுக்கு கொண்டு போய் கொடுத்திருக்காங்க.
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் வாக்கின் சுருக்கம் :- (
தவம் செய்கிறேன் என்றாலும், மனதில் கருணை இல்லாமல், பிறருக்காக நினைக்காமல் செய்த தவம் பயனளிக்காது.
இறைவன் வருவதற்கு, நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியம்.
மனித நேயம் இல்லாதவன், மனுஷனே இல்லை.
பிறரின் நிலைமை புரிந்து கொள்ளாதவன், இறைவனின் பார்வைக்கு தகுதியில்லை.
புண்ணியம் பெருக்கப்படும் போது, அதை பிறருக்காக நினைத்தால் உங்கள் குடும்பம் வளரும்.
இறைவன் யாருக்கு இறங்குவார்? – மனசாட்சியோடு வாழும், பிறருக்காக நினைக்கும் மனிதனுக்கு. )
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்: -
(திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலை அழகாக பாடினார்கள்)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h44m30s
( பாடி முடித்த பின்னர் )
தேரையர் சித்தர் :- இவைத்தன் எண்ணி இருக்க, இன்னும் பாடுக. சில பாவங்கள் தொலையட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இன்னும் பாட சொல்றாரு. சில கர்மங்கள் உங்க கையில இருக்கு. இதன் மூலமாக தொலையட்டும்ன்றாரு. ஐயா இதனால என்ன சொல்றாரு தெரியுமா? எல்லாருக்கும் ஒரு ஒரு வினை இருக்கும். இவங்க உங்களுக்காக பாடுவதினால், இறைவன் இறங்கி வருவார். )
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்: -
( இருமுடி கட்டு சபரிமலைக்கு என்ற சுவாமி ஐயப்பன் பாடலை அழகாக பாடினார்கள். )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h48m44s
தேரையர் சித்தர் :- அம்பாளை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அம்பாள் மட்டும் பாடுங்க ஐயா. அம்பாள் பாட்டு ஏதாவது தெரியுங்களா? பாடுங்க ஐயா. அம்மன் பாட்டு ஒன்று பாடுங்க ஐயா.
மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள்: -
( ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ பாடலை அழகாக பாடினார்கள். )
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h51m43s
(பாடி முடித்த பின்னர்)
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த கைதட்டல்கள்)
( மதுரை தூய்மை விழிகள் டிரஸ்ட் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவர்கள் சுவடி ஓதும் மைந்தனிடம் மேடையில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்கள். ஒரு இசையமைப்பாளர், பாடகர் - இவ் சிறுவர்களுக்கு இலவசமாக சங்கீத பாடம் எடுக்கின்றேன் என்று சுவடி ஓதும் மைந்தனிடம் உரைத்தார்கள். அதனை சுவடி மைந்தன் அங்குள்ள அனைவருக்கும் தெரிவித்தார்கள். திருக்கைலாய வாத்தியங்கள் மீண்டும் ஓங்கி ஒலித்தது….)
https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=2h54m20s
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நம:
ReplyDeleteவணக்கம் ஐயா 🙏
அடுத்தமுறை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்போது நேரலை ஒளிபரப்பப்பட்டால் அந்த link-ஐ வலைப்பக்கத்தில் பதிவிடவும் 🙏
நேரலை பார்க்க உதவியாக இருக்கும் 🙏
நன்றி 🙏
https://whatsapp.com/channel/0029VbBmQzIF6smuHAY3Ge32
Delete