வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
வரும் மார்கழி மாதம் 13ம் தேதி, 28/12/2025 அன்று ... நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர் பெருமக்களின் அருள் ஆணைப்படி ஆறாவது முறையாக உலக நன்மைக்காக கூட்டுப்பிரார்த்தனை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது....
நிகழ்ச்சி நிரல்
உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உலக நன்மைக்காக அதிகாலையில் வேள்வி மற்றும் நவகிரக தீபவழிபாடு, கோளறு பதிகம் மற்றும் சிவபுராணம் என தொடர்ச்சியாக காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை பாராயணம் செய்து கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.
தேதி :
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்:
காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை
இடம்
ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், போளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.
கலந்து கொள்ளும் அடியவர்கள்.. கவனத்திற்கு... நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வருவதற்கான
பேருந்து விவரங்கள்.
பேருந்து வழித்தடம் : திருவண்ணாமலை பேருந்து நிலையம் to மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டவுன் பஸ் அல்லது கலசபாக்கம் டவுன் பஸ் ஏறி EB ஸ்டாப்பில் இறங்கவும். திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் மண்டபத்தை அடையலாம்.
ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் லொகேஷன்
https://share.google/U92CNYSb3Wm4pSNDw
உலக நன்மைக்காக நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அனைத்து அடியார் பெருமக்களையும் பக்த கோடிகளையும் பொதுமக்களையும் வருக! வருக!! என இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!


No comments:
Post a Comment