​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 February 2025

சித்தன் அருள் - 1794 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் அழுக்காணி சித்தர்!








29/1/2025 மௌனி அமாவாசை கும்பமேளா அன்று திரிவேணி சங்கமத்தில் அழுக்காணி சித்தர் ஈசனை தொழுது ஆடி பாடி உரைத்த வாக்கு. 

உருண்டையை உருட்டுகின்ற ஈசா!! போற்றி!!

(பூமி பந்தை சுழல வைத்து பிரம்மாண்டத்தை ஆளுகின்ற  ஈசா!!போற்றி)

பணிந்து செப்புகின்றேன் அழுக்காணி!!!

நின்று நின்று கும்மியடி!!!
கும்மியடி பெண்ணே கும்மியடி நின்று கும்மியடி!!

ஆனந்தத்தில் கும்மியடி!! வைகுண்ட நாதனை கண்டு விட்டோம் என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!
கருணை வடிவானவனை கண்டுபிடித்தோம் என்று கும்மியடி!!

கும்மியடி !! கும்மியடி!! ஆனந்தத்தில் நின்று இங்கு கும்மியடி!!!

வருவோருக்கெல்லாம் ஆசிகள் தந்து ஈசனின் இன்னும் பரிபூரண ஆசிகள் தந்து பார்வதி தேவியும் மகிழ்ச்சியுடன் கும்மியடி!! கும்மியடி!! பெண்ணே!! பெண்ணே!!

ஆனந்தம்!!! ஆனந்தம்!!
சித்தர்கள் ஆனந்தம்!! ரிஷிகள் ஆனந்தம்!!
முனிவர்கள் ஆனந்தம்!!
தேவாதி தேவர்கள் ஆனந்தம்!!
இந்திரனுக்கும் இந்திரனுக்கும் ஆனந்தம் ஆனந்தம் கும்மியடி தம்மில் கும்மியடி!! தம்மில் கும்மியடி!!


எந்த ரூபத்தில் வந்தாலும் தம்மில் கும்மியடி!!! மனிதன் வடிவத்தில் வந்து கும்மியடி!!

ஆனந்தக் கண்ணீரில் நனைகின்றோம் சித்தர்கள் யாங்கள் கும்மியடி தம்மில் கும்மியடி!!!

உலகத்தில் நின்று காத்தருளும் கும்மியடி!!! இணைந்து இன்னும்  வாழ்க்கையில் பின்னும் வெற்றிகள் தரும் ஈசனாரை பார்த்து கும்மியடி!!!!

கும்மியடி !! கும்மியடி!! தேவாதி தேவர்களும் இங்கு வந்து ஈசனை தேடி தேடி ஆசிகள் பெற்று!!!
 கும்மியடி!! கும்மியடி!!

மனிதனே சோம்பேறித்தனம் பட்டு இருந்து  அங்கே எப்படி செல்வோம்??? என்று!!

கும்மியடி!! கும்மியடி!!
இந்திரனுக்கும் மேலானவர்கள் எவர்? என்று தெரிந்து கொள்ள கும்மியடி!!

சித்தர்கள் யாங்கள் அனைவரும் இங்கு வந்து சந்தோஷத்துடன் களித்தோம்!!!

இறைவனையும் கண்டோம் கண்டோம்!! தெளிந்தோம்!! தெளிந்தோம்!!

இறைவனை யார் யார் என்று மனிதனுக்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லையே.

கும்மியடி! தம்மில் கும்மியடி! 
அனைவரும் இணைந்து பின் கும்மியடி!!

அடி என்று இங்கே என்று எதனை அடி? கும்மியடி என்று யான் சொன்னேனே!!
அனைத்திலும் கும்மியடி!!
அணிந்து உள்ளம் கொண்டவருக்கும் தீய எண்ணங்கள் நீக்கும் திறன் கொண்டவருக்கும் இவ் கங்கை நதியில் நின்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!! ஆனந்த கண்ணீரில் கும்மியடி!!!

பற்று அற்று அற்றவுடன்.. பற்றி நின்று கும்மியடி!!
இணைந்த கைகளால் கும்மியடி!!!

ஊர்ந்த கைகளால் கும்மியடி!!! என்றும் இணைந்து கும்மியடி!!!

பாவங்களை போக்குபவனை கும்மியடி!!
கும்மியடி கும்மியடி!!
புண்ணியங்கள் தரட்டும் கும்மியடி!!!

ஈசனாரும் பார்வதி தேவியும் நின்றிட்டு அழகாக அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து பாவத்தை நீக்கியும்!!!
சிலர் பின் கர்மத்தை அறிந்தும் கூட....

பின் புண்ணியத்தை புகுத்தியும் கும்மியடி!!
கும்மியடி!!


சிலர் பின் இறப்பதற்காகவே இங்கே வந்து இறக்கிறோம் என்று பின் நீரில் அப்படியே போயிட்டவர்களையும் கூட பின் ஈசன் பின் கட்டிக் கொண்டு கொடுத்தான் கும்மியடி!!!

மனிதருக்கு இன்னும் புரியவில்லையே!!!

ஆனந்தக் கண்ணீரில் யாங்கள் நனைகின்றோம் 
கும்மியடி!!!

மனிதன் பின் இறைவன் யார்? என்று புரியாத வரை சந்தோஷம் இல்லை கும்மியடி!!!

சந்தோஷம் இல்லை கும்மியடி!!! சந்தோசம் இல்லை கும்மியடி!!

ஏன் அறிந்தும் கூட துன்பம் வருவது எதனால் என்று அறிய முடியாததை கும்மியடி...

அறிந்த பின்பு உணர்ந்த பின்பு இறைவன் என்று யாரென்று தெரிந்து கொண்டு பின் பின் துன்பமே இல்லை என்று கும்மியடி!!!

கும்மியடி!! கும்மியடி!!

ஆனந்தம்!; ஆனந்தம்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Monday, 3 February 2025

சித்தன் அருள் - 1793 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் சிவவாக்கியர் சித்தர் வாக்கு!






28/1/2025 கும்பமேளாவில் சிவவாக்கியர் சித்தர் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திரிவேணி சங்கமம் பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம்.


ஆதிக்கு ஆதியான ஆதி குருவை நினைத்து மகிழ்வுடனே வாக்கியன் ஈகின்றேன்.


மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!

மண்ணில் இந்த ஈசனை துதித்து துதித்து வழிபடு!!

எத்துன்பம் ஆயினும் வந்தாலும் துதித்து துதித்து வழிபடு!!!

எத்துன்பம் வந்தாலும் துதித்து துதித்து அன்புடனே பணிந்திடு!!!

ஈசனே!! இல்லையென்றால் இவ்வுலகில் ஏதுமில்லை அறியேனே...

ஈசன் இல்லையென்றால் இவ்வுலகத்தில் ஏதும் இல்லையடி!!!


ஈசனை நினைத்து நினைத்து வாழ்ந்தோர் கோடி கோடி!!!

பின் துன்பம் ஆயினும் கடைசியில் இன்பம் வருவதே சிறப்பு!!!

ஈசனே உன் பாதம் தொழுதேனே...!!! தொழுதே பல தவங்கள் செய்தேனே!!!!!!. 


கடைசியில்  நான் யார்? என்று உணர்வதற்கு ஆள் இல்லையே !!!
உனை நினைத்து நினைத்து பின் வந்தாலும் !!!......

கடைசியில் என்னில் நீ பாதி என்றவனே!!!

மண்ணில் இந்த உலகத்தையே படைத்து படைத்து பின் காக்கின்றவனே!!!

இருளிலும் முதுமையிலும் கூட பின் வணங்கியவர் எல்லாம் நிச்சயம் பூந்து அழி தன்னில் கூட.....!!!


 அழிவுகாலம் என்ற போதிலும் நிச்சயம் தன்னில் பின் அழகாக காத்து நிற்கும் பின் சித்தனே!!!
 சிவ சித்தனே!!! 

எங்கெங்கோ? தேடினும் யாங்கள் வந்து பின் அறிந்தும் கூட உன்னை அறிய முடியவில்லையே !!! ஈசனே!!!

 அறிய முடியவில்லை ஈசனே!!

பல தத்துவங்கள்!!! பல சாத்திரங்கள்.. பல பல பின் சக்திகள் இருந்தாலும்!!!!

 ஈசனே!! உன்னையே தேடி தேடி உங்களை நிச்சயம் எங்களால் உந்தனை கண்டு கொள்ள முடியவில்லையே!!! ஈசனே !!!

ஈசனே !! ஈசனே!!  ஈசனே!! எம்மை வந்து அழகாக ஆட்கொள்ளும் ஈசனே !!!

பின் ஈசன் எங்கு இருக்கின்றான்? என்று பல தவங்கள் செய்து செய்து நிச்சயம் தன்னில் கூட முடியவில்லையே!!!

அழுது கொண்டே!!யான் அன்பான ஈசனே!!! எங்கு இருக்கின்றாய் நீ? என்று கூறுகின்ற பொழுது..!!

 கண்ணீரில் ஆழ்ந்து ஆழ்ந்து... ஆனந்தக் கண்ணீரில் இருக்கின்ற பொழுது..

உடனடியாக வந்து நீயும் என்னுள் பாதி என்று சொன்னவனே!!!

அப்படித்தான் சித்தர்கள் அனைவரையும் அணைத்து கொண்டவனே!!!
 முதல் சித்தனே!!!

உலகத்தின் நாயகனே!!!

பின் ஊழிக்காலம் என்ற போதிலும் மனிதனால் அறிய முடியவில்லையே
ஈசன் யார் என்று!!!


அடி முடி காணாத அண்ணாமலையில் கூட...

இங்கு பின் ருத்ராட்சங்கள் அணிந்தாலும்.. நமச்சிவாயா!! என்று அழைத்தாலும் உன்னை அறிந்து கொள்ள முடியவில்லையே!!! மனிதன் அறிந்து கொள்ள முடியவில்லையே!!!

அதனால் பின் கஷ்டங்கள் வந்து வந்து எவை என்று அறியாமல் இருந்தாலும் இறைவன் என்று இல்லை என்று சொல்கின்றானே!!! சொல்கின்றானே!!!

அனைத்தும் அறிய முடியவில்லையே மனிதனால்!!

எப்பிறப்பு பிறப்பு எடுத்தாலும்!!! எதற்காக? பிறப்பு என்று அறிய முடியாத போதிலும்!! 

உனை எப்படி உணர்வார்??? சிவபெருமானே!!

ஆனந்த சந்தோஷத்தில் யாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோமே!!!
வந்து உள்ளோமே!!!

இன்னும் எத்தனை ஆண்டுகள்??? இதுபோல் வரும் என்று தெரியவில்லையே!!! தெரியவில்லையே!!!

அனைத்தும் சித்தர்கள் உணர்ந்தாயினும் கூட பின் !!....

அனைத்தும் ஈசன் என்று!!!
 யாங்கள் சொல்வோமே!! 
யாங்கள் கடைசி வரை சொல்வோமே!!

ஏனென்றால் காணக் கிடைக்காத அற்புதக் காட்சி ஈசனே!!!! ஈசனே!!!

அதனால் வந்து வந்து பின் எத்தனை உனை தன் எத்தனை உனை தன் அபிஷேகங்கள் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் உனையே அறிந்து கொள்ள முடியவில்லையே!! சிவபெருமானே!!

என்னில் பாதி உன்னில் பாதி இருப்பவனே!!

இருந்து கொண்டும் பின் இயக்குபவனே!!

அன்னையே!! பராசக்தி ஆதி பராசக்தியே!!
 உமை அம்மையே!! உமை அம்மையே!!!

பல ரூபங்கள் எடுத்தாலும் எந்தன் ஈசன் ஒருவனே!!
நமச்சிவாயனே!! நமச்சிவாயனே!!!
நமச்சிவாயனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 2 February 2025

சித்தன் அருள் - 1792 - அன்புடன் அகத்தியர் - கும்பமேளாவில் கமலமுனி சித்தர்!






28/1/2025அன்று கும்பமேளாவில்  கமலமுனி சித்தர் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். நாகேஸ்வர் காட் திரிவேணி சங்கமம்  பிரயக்ராஜ் உத்தர் பிரதேசம்.

பரப்பினை ஆளுகின்ற இறைவா போற்றி!!!!
(பரப்பு =புவிப்பரப்பு.)

போற்றியே நின் தாள் 
பணிந்தேனே கமல முனியே!!

அன்றியென்றும் இன்றியென்றும் ஓத!!
ஓதாவிடிலும் தன்னை நிலைத்திருக்கும் ஈசா!!

(இருக்கின்றது என்றாலும் இல்லை என்றாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் என்றும் நிலைத்திருக்கும் ஈசனே)


ஈசனே உனை பணிந்து நின்றேனே!!
நின்றேனே உனைப்பணிந்து நின்றேனே!!

அனைத்து சித்தர்களும் வந்து உனை பார்க்க!!
கோடி கோடியாய் தவங்களை மேற்கொண்டோமே!!!

மேற்கொண்டோமே! ஈசனே! ஈசனே! எனை ஆண்ட ஈசனே!!

அன்பனே!! ஈசனே!!
கருணையனே ஈசனே!!
நூதனே!!! மூலனே!!

ஈசனே! ஈசனே! பார்வதி நேசனே!!
நேசனே சிவகாமியின் புதல்வனே!! புதல்வனே!! இன்றியென்று என்றியென்று உண்மைதனை உரைத்த இறைவா!!!

நின் தாளை பணிந்தோமே!!
எப்பொழுதும் உனையே நம்பியே யாங்களும் இருந்தோமே!! இன்று 

அன்றின்று இன்றியென்று எவ்வாறென்று மனிதன் தெரியாமல் போனால் இவை தன் உணர்ந்திருக்க நின்றேனே. 

நின்றேனே!! உன்னை காண கோடான கோடி ஜென்மங்கள் எடுத்து இங்கு வந்தேனே. 

வந்தேனே முழு முதற்கடவுளே. முழுமுதற் இறைவனே நீயே என்று உணர்ந்த பிறகு என்ன வேண்டும்??? எந்தனுக்கு!! கூறு!!

இவைதன் தனை உணர்ந்து விட்டால் இங்கு நியாயங்கள் என்று பேசும் இறைவா!!

இறைவா!!! நீயின்றியென்று உலகத்தில் அசைவேது??? இறைவா!!!

ஈசனே!!! ஈசனே நன்று என்று இருந்து உனைக்காண ஓடோடி யாங்கள் மக்கள் மூலமே வந்து வந்து தொழுதோமே!!

கோடி கோடி பிறப்பு எடுத்து உனைதனை பின் உணர முடியாமல் பின் போனதே!!!

அன்பான ஈசனே ஈசனே இன்னும் யாங்களே தெளிவடையாத போதிலும் இல்லையே!!! மக்கள் எப்படி தெளிவடைவார்கள்?? என்று நினைத்தேனே!!!


ஈசனே ஈசனே பார்வதி நேசனே... எமையாளும்.. நின்று தொழுது இங்கு பின் அழகாக நதியில் ஓடும் பின் அனைத்து பாவங்கள் சுமந்து பின்.. அன்பான ஈசனே!!!!

அழகான ஈசனே!! இளைஞனே!!!
உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே!!
உண்மை பொருள் என்று யாருக்கும் தெரியாத ஈசனே 

அன்பனே நீயின்றி என்று எப்பொருள் யார்? யார்? உணர்ந்து நின்றென்று
கண்டென்று உற்றார் என்று இருந்த போதிலும்...!?!?!?

 பாவம் என்ற!!!..‌‌ பின் அதிலிருந்து தப்ப முடியவில்லையே மனிதன். 

அவை தனும் கூட உணர்ந்து உலகத்திற்கு அப்பாற்பட்டவனாகவே விளங்கும் என் ஈசனே!! மனதில் குடிகொள்ளும் ஈசனே 

உனையே நம்பி நம்பி யாங்கள் தவங்கள் புரிந்து புரிந்து அனைவருக்கும் தம் தன் பின் தன்பால் பின் என்னென்ன நினைத்துள்ளோம் என்று பின் அனைத்தும் கொடுத்திட்ட ஈசனே!!!

ஈசனே உன்மேல் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் அன்பை செலுத்துவார்... நீங்களும் என்னைப்போல் இருப்பீர்களாக என்று உத்தரவு கொடுத்த ஈசனே!!

ஈசனே அன்பு மிகுந்த கருணை மிகுந்த ஈசனே 
மக்களுக்கு இன்னும் புரியவில்லையே !! தெரியவில்லையே!!

ஈசன் என்று யார்? என்று பின் புரியவில்லையே கோடி கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் ஈசன் என்று யார் ? என்று உணர்ந்து கொள்ள ஆளில்லையே!! இவ்வுலகத்திலே!!!

(ஈசன் நாமத்தை) பெயரும் சொல்லலாம் பின் அவனையும் தொழலாம் பின் பாடல்கள் பாடலாம் 
ஆனாலும் ஈசனை கண்டு உணர ஆள் இல்லையே!!!
ஆனாலும் ஈசனை கண்டுணர்ந்த ஆள் இல்லையே!!!

ஏன் இந்த பிறவி என்று யோசிக்கின்ற நேரத்திற்குள் பின் முடிவடைகின்றதே பின் உயிரும் கூட...கூட
உயிரை எப்பொழுது தானம் கொடுத்தீர்களால் அப்பொழுதே அனைத்தும் தந்திட்ட ஈசா!!

ஈசனே சிவகாமி அன்பு அழகான முருகனே  இருந்து இழந்து பின் நிற்கின்ற பின் இழப்பினும் பின் கணபதியும் இவர்களை பிரித்திட்ட ஈசா!!

(ஏகன் அனேகனாக அனைத்து தெய்வங்களாக பிரிந்து அவை மீண்டும் ஒன்றே ஈசனே)

பிரித்த பொழுதும் இவர்களும் பார்க்கும் பொழுது... இவர்களும் ஒன்று என்று மக்களுக்கு பின் தெரியவில்லையே!!!

இவை தனும் உணர்ந்து பின் முருகனும் பின் கணபதியும் மணிகண்டனும் மூவரும் சேர்ந்து ஒன்றென்று மக்களுக்கு புரியவில்லையே!!

(கணபதி முருகன் ஐயப்பன் மூவரும் ஒருவரே) 

இவை தனை கூட எப்பொழுது ?மனிதன் பின் புரிகின்றானோ? அப்பொழுதுதான் உயர்வுகள் கிட்டுமே தவிர!!

பின்பு என்ன ஏது? என்று பின் பின் எங்கு சென்றாலும் உண்மை நிலை தெரியவில்லையே ஈசனே !!!

ஈசனே அன்பு அன்பு (அன்பே சிவம் ) எங்கு என்று பின் அறிந்தும் அறிந்தும் ஓடுகின்ற ரிஷிகளும் கூட இன்றைய நாளில் உனை காண ஓடோடி வந்து ஓடோடி வந்து பின் தொழுகின்றார் தொழுகின்றார். 

பின் ஆனாலும் மக்கள் பின் மட்ட புத்தியில் இருந்து கொண்டு ஏனென்று இறைவன்? எதற்காக இறைவன்? எதற்காக இறைவன்?என்று சிந்தித்த பொழுது வாழ்க்கையும் முடிகின்றது..

வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்??

மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து என்ன லாபம்??

அறிந்தும் பின் அறியாமலும்  பிறந்த பிறப்பை பின் மோட்சம் அளித்திடும் இறைவா 
மோட்சம் அளித்திடும் இறைவா!! உனை மனதில் தாங்கியே யாங்கள் நின்றின்று அறிந்தோமே 

நின்று இன்று அறிந்தோமே.

மனிதனே ஒரு சாபக்கேடு!!!

இதில் தன் இறைவனை பின் எப்படி உணர்வான்? என்று தெரியவில்லையே ஈசா!!!

தெரியவில்லையே ஈசா!!!

கலியுகத்தில் அழிவுகள் மிச்சமாகின்ற பொழுது எப்படி மனிதன் எப்படி வாழ்வான்?? ஈசா!!

ஆணும் பெண்ணும் எப்பொழுது ஒருவராக ஒருவரே என்று (அனைவரும் சமம் என்று)  எப்பொழுது மனிதன் நினைப்பான்?? இறைவா!!!

அப்பொழுதுதான் நீயும் கூட பின் கருணை வடிவாக வந்து பாவத்தை தொலைப்பாயே!!!

 முருகா!! கணபதியே மணிகண்டனே அறிந்தும் கூட பைரவனே அனைத்தும் நீயே நமச்சிவாயனே 

அன்பு எங்கு? அங்கு !! குடியிருக்கும் கருணை வடிவான ஈசா!!!

அருவும் உருவும் சொரூபமும் இல்லாதவனே!!
 ஆதி உலகை படைத்தவனே ஈசா!!

அறிந்தும் அறிந்தும் மனிதனுக்கு இன்னும் ஏன் பின் கெட்ட குணங்கள் இன்னும் அழிவுக்கு செல்கின்ற மனிதா!!

எப்பொழுது இறைவனை காண்பாய் ?? மனிதா!!

எத்தனை பூஜைகள் செய்தாலும் எத்தனை தர்மங்கள் தானங்கள் தான தர்மங்கள் செய்தாலும் அறியவில்லையே ஈசனை!!
மனிதன் அறியவில்லையே ஈசனை!!

எப்பொழுது அறிவாய்??

 என்று இருந்தபோதிலும் அனைத்தும் கொடுத்திட்டும் ஈசா!!!
யானே படைத்தேனே இங்கே இருக்கின்றேனே என்று மனிதனுக்கு உரைக்கின்ற போதிலும்!!!
 
உணராத பைத்தியக்கார!! மனிதா!! உணராத பைத்தியக்காரனே மனிதா!!

அனைத்தும்  தவறுகள் நீயும் செய்திட்டு மீண்டும் இறைவனை வந்தடைந்து என்னவோ? புரியும் மனிதா! 
என்னவோ? புரியும் மனிதா! 

ஈசனை அழகாக காணலாம்!!
ஆனாலும் மனிதனிடத்தில் பின் புத்திகள் இல்லையே!!

 அறிந்தும் உண்மைதனை எடுத்து அழகாக யாங்கள் இங்கு ஈசனை உனை ஓடோடி வந்து காண்கின்ற நேரத்தில்... காண்கின்ற நேரத்தில் ஆனந்தமாய் இங்கு யான் பாடுகின்றேனே சிவபெருமானே!!

அனைத்திலும் நீயே!!
 ‌ அனைத்தும் உனதென்று இருந்து
அனைத்து உலகையும் காப்பாய் அறிவாய்!!

எத்தனை உலகங்கள் இருக்கின்றது? என்று மனிதனுக்கு எப்பொழுது தெரியும் ? ஈசனே!!

இவையெல்லாம் தெரிந்த பிறகுதான் மோட்சம் அடைவான் மனிதன்.. மோட்சம் அடைவானே மனிதன். 

அப்படி இல்லை என்றால் மோட்சமும் கிடைக்காது முக்தியும் கிடைக்காது சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே சந்தோசம் கிடைக்காது சிவபெருமானே!!

அனைத்தும் அறிந்து உலகத்திற்கு நீயும் எம் இறைவா!!!

எம் இறைவனே!!! உனை தேடி இங்கு வந்தேனே உம்மை தேடி இங்கு வந்தோமே!!

அழகென்றவனே அமுதென்றவனே
கருணை என்றவனே 
பாசம் என்றவனே 
பாசம் என்றவனே எங்கும் நிறைந்தோர்க்கு இறைவா !!!

அனைத்தும் கொடுத்தாய்! கொடுத்தருள்வாய்!!

மனிதன் இன்னும் சாபங்களில் இருந்து தப்பிக்க முடியவில்லையே சிவ பெருமானே!! தப்பிக்க முடியவில்லை சிவபெருமானே!!

பணத்தின் மீதும் மோகம் கொண்டும் பின் பெண்ணின் மீதும் மோகம் கொண்டும் பின் என்னென்ன மீதோ?? மோகம் கொண்டும்!!..... மனிதன் இறைவனை அறிந்தில்லை ஈசனே!!! மனிதன் இறைவனை அறியவில்லை ஈசனே!!

இப்படி இருந்தும் ஈசன் எந்தனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே??? என்று புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே புலம்பும் மனிதனே!! கேடுகெட்ட மனிதனே!! 

உண்மை பொருள் ஏது என்று தெரியாமல் அலைந்தாலும் திரிந்தாலும் ஒன்றும் கிட்டாது மனிதா!!! ஒன்றும் கிட்டாது மனிதா!!!

ஆசிகள்!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 1 February 2025

சித்தன் அருள் - 1791 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 6


சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1
சித்தன் அருள் - 1742 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 2
சித்தன் அருள் - 1745 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 3
சித்தன் அருள் - 1750 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 4
சித்தன் அருள் - 1752 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 5

நான், அறுவை சிகிர்ச்சை முடிந்து வீட்டில் தனிமை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த காலம். என் மனைவியும், யோகா மாஸ்டரும் தவிர யாரும் வந்து பார்க்க, பேச அனுமதி இல்லா நேரம். அன்று காலை எழுந்தது முதலே  ரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்தது. நானும் பலமுறை மூச்சு பயிற்சி செய்து பார்த்து விட்டேன். ரத்த அழுத்தம் மேலே ஏற மறுத்தது. உறங்கினால் மேலும் கீழ் இறங்கிவிடும். மருந்து மாத்திரைகளை தவிர்க்க முடியாது. கற்றவை அனைத்தையும் நடை முறை படுத்திப் பார்த்தேன். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. நண்பரை கூப்பிட்டு ஏன் இப்படி? என்ன செய்யலாம் என்று கேட்ப்போம்! என நினைத்து அவர் எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுக்கவில்லை. சரி! ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பர் போலும். சற்று நேரம் கழித்து கூப்பிடுவோம் என்று பொறுத்திருந்தேன்.

அரை மணி நேரத்துக்கு பின் மீண்டும் அழைத்தபொழுது இவர் அவதூதருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.  செல் போன் அடித்தும் எடுக்காமல் இருந்ததால்,

புல்லாங்குழல் வாசிப்பது போல் கை அசைவை காட்டி, "அவர் தான் கூப்பிடுகிறார். எடுங்கள்" என்று கூறினார் அவதூதர். தன் பையிலிருந்து போனை எடுத்து பார்த்த நண்பர், ஆச்சரிய பார்வையுடன், "ஹலோ" என்றார்.

 "எங்க இருக்க? ஒரு விஷயம் கேட்கணும்!" என்றேன், விளக்கினேன்.

"இப்போ காப்பி கடைலதான் இருக்கேன். ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்து திரும்பி போகும் வழியில் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்" என கூறி போனை துண்டித்தார்.

அதெப்படி அவர்தான் கூப்பிடுகிறார் என்று சரியா சொன்னீங்க? என்று நண்பர் கேட்கவும், நண்பரிடம் யோகா கற்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண் இவரை கடந்து கை உயர்த்தி பின்னர் அழைக்கிறேன் என்ற படி இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

"அப்போ! எந்த அலைவரிசைக்குள்ளும் புகுந்து செல்ல, வாசிக்க முடியும் என்பதை உணர்ந்தீர்களா?" என்றார் அவதூதர் புன்னகைத்தபடி.

அனைத்தும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏன் இந்த சக்தியை பயன்படுத்தி உலகமெங்கும் நல்லதை செய்யலாமே?

"ஏன் இப்பொழுதும் கூட செய்து கொண்டுதான் இருக்கிறோம். எதுவுமே தேவை இல்லை என்று விலகியவர்களுக்கு, உரிய இடத்திலிருந்து உத்தரவு வரும். அதை செய்வதற்காக என்னை போன்றவர்கள் வெளியே வருவோம். இறைவன் அருளால், உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் வாழ்க்கை. அன்றி இது ஒரு தொழில் போல் அல்ல. இன்னும் நிறைய தூரம் இவ்வழியில் நடந்து சென்றால் தான் அது புரியும்" என்றார் சிரித்தபடி.

"சரி போகட்டும். சற்று முன் கை அசைத்து ஒரு பெண் சென்றாளே, அவளுக்குத்தானே மனதில் ஏற்பட்ட பாதிப்பை மாற்றிட வகுப்பெடுக்கிறீர்கள். அவளை அழைத்து, இப்பொழுது இங்கு வர சொல்லுங்கள்! நான் பார்க்கிறேன்!" என்றார்.

நண்பர் சற்று அசந்து தான் போனார். யாரேனும் தன்னிடம் தொடர்பு கொண்டால், உடனேயே அவர்களின் பிரச்சினை என்னவென்று கண்டு பிடித்து விடுக்கிறார், என்று யோசித்துக் கொண்டே அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். மூன்று முறை செல் அடித்து , எடுக்காமல் இருக்கவே, துண்டிக்க போன பொழுது, "சொல்லுங்க மாஸ்டர்!" என்று அப்பெண்ணின் குரல் வந்தது.

"இப்ப எதுவரை போயிருக்கே? எங்க போறே?" என்றார்.

"வேலை முடிந்து வீட்டுக்குத்தான் போகிறேன். இன்னும் 10 நிமிடத்தில் வீட்டுக்கு போய்விடுவேன்" என்றார்.   

"நான் காப்பி கடையில் நிற்கிறேன்! ஒரு அம்மா வந்திருக்காங்க. நீ கை அசைத்து கடந்து போவதை பார்த்தார்கள். அவங்களுக்கு உன்னை பார்க்கணும் என்கிறார்கள். வந்துட்டுப்போயேன்!" என்றார்.

"சரி வருகிறேன்!" என்றாள்.

உண்மையில் மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, மனதாலும், குடும்பத்துக்கும் வருத்தத்தை உருவாக்கி, பின் போதும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று சென்ற பெண்ணை, யோகா மூச்சு பயிற்சி வழி திரும்பி அமைதியான வாழ்க்கைக்கு நண்பர் கொண்டு வந்திருந்தார். நலமாகி வந்தாலும், மிக மன அழுத்தங்கள் அவ்வப்போது  வெளிப்பட்டு பிரச்சினை பண்ணும். மனதை விட்டு நிறைய நினைவுகளை அழிக்க வேண்டும். ஆனால் நண்பரின் குருநாதர், நினைவுகளை அழிக்க, அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மூச்சு பயிற்சி வழி சமநிலை படுத்திக் கொண்டு வந்திருந்தார். 

பதினைந்து நிமிடத்தில் அந்த பெண் வந்து சேர்ந்த பொழுது, 

"இவங்க ஹிமாலயத்திலிருந்து வந்திருக்கிறார்கள். உனக்கு ஆசீர்வாதம் பண்ணுவார்கள். அதற்காகத்தான் வரச்சொன்னேன்!" என்றார் நண்பர்.

அந்த பெண் கை கூப்பி வணங்கி அவர் முன் நிற்க, தன் வலது கை விரல்களை ஒன்று சேர்த்து குவித்து, அந்த பெண்ணின் தலை உச்சியில் வைத்து, கண் மூடி அருளை பரவ விட, மூளை, முதுகுத்தண்டு வழியாக ஒருவித மென்மையான குளிர்ச்சி அந்த பெண்ணின் மார்பு வரை பரவி, மொத்த உடலில் இருந்த பதட்டச் சூட்டை அழித்தது.

புன்னகைத்தபடியே, "சரியாகிவிட்டது! இனி நன்றாக இரு!" என வார்த்தைகளால் ஆசீர்வதித்து அனுப்பினார்.

தனக்குள் என்ன நடந்தது என்றறியாமல், மிகுந்த நிம்மதியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள், அந்த பெண்.

அந்த பெண் சென்றதும் அவர் பேசத் தொடங்கினார்.

"இந்த சிறு வயதில் மிகப் பெரிய பிரச்சினைகள். அவள், அவள் தாய், அவள் தந்தை, யாரெல்லாம் இந்த பெண்ணின் வாழ்க்கையில் பிரச்சினைக்கு காரணமாக இருந்தார்களோ, அத்தனை பேர் மனதிலிருந்தும் நடந்த விஷயங்கள், அறிமுக தொடர்பு என எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். தன் தாய், தந்தையை தவிர அவள் பிரச்சினைக்கு காரணமாக இருந்த பிறர் யாரையும் இனி  அவளால் அடையாளம் காண முடியாது. நடந்த நிகழ்ச்சிகளும் ஞாபகம் இருக்காது. அவர்களுக்கும் இவளை பார்த்தாலும் ஞாபகம் வராது . இனி இவள் பெற்றோர்களும், இவளும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆனால், இவள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து, கடைசி வரை தன் தாய் தந்தையரை வைத்து காப்பாற்றுவாள். இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட்டுவிடுவாள். இன்னும் இரண்டு மாதத்தில் ரயில்வேயில் வேலை பார்ப்பாள், அதுவும், வீட்டுக்கு அருகில் இருக்கும். போதுமா?" என்றார், சிரித்துக் கொண்டே.

இவர் முக்காலத்திலும் சஞ்சரிப்பவர். அதுவுமின்றி போகும் வழியெங்கிலும் உள்ள மனித கர்ம குப்பைகளை சுத்தம் செய்து செல்கிறார் என்று உணர்ந்தார், நண்பர்.

"எதிர்காலத்தில் ஏதேனும் விஷயத்துக்காக, உங்கள் தொடர்பு எண்ணை நான் சேமித்து வைத்துக் கொள்ளலாமா?" என்றார் நண்பர்.

"தேவை இல்லை. தேவை இருந்தால், நானே உங்களை தொடர்பு கொள்கிறேன். எந்த வித பற்றும் இருக்க கூடாது." என்றார், திடமாக.

"என் நண்பர் ஒருவர் இங்கு அருகில்தான் இருக்கிறார். அவரை சந்திக்க வருவதனால் உங்களை அழைத்து செல்கிறேன்!" என்றார் நண்பர்.

மறுபடியும் புல்லாங்குழல் வாசிப்பது போல் காட்டி "இவர் தானே! இப்போதைக்கு உத்தரவில்லை. அடுத்த முறை வந்தால் பார்க்கலாம்" என்று முடித்துக் கொண்டார்.

"என்னால் திருப்பதி மலைக்கு செல்ல முடிவதே இல்லை. ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது!" என்றார் நண்பர்.

"இன்னுமா புரியவில்லை! உங்கள் குருநாதர் அங்குதான் சமாதியில் இருக்கிறார், உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். உங்கள் குடும்ப கடமைகளை முடித்த பின் ஏற விடுவார். அது வரை அமைதியாக இருங்கள். மீறி ஏறினால் இகபர வாழ்க்கை போய்விடும்" என்ற உண்மையை போட்டுடைத்தார்.

"சரி! நான் கிளம்பறேன். மறுபடியும் உத்தரவிருந்தால் வருவேன். பார்க்கலாம்!" என்றுவிட்டு மெதுவாக நடந்து, இடது பக்கமாக திரும்பி, கூட்டத்துக்குள் மறைந்து போனார்.

மறுநாள், யோகா வகுப்பு முடிந்து ஒரு காப்பி சாப்பிட்டு வரலாம் என்று கடைக்கு சென்றார், நண்பர்.

இவரை பார்த்ததும் கடைக்காரர் "வாங்க! எப்போதும்போல காப்பி தானே?" என்றார்.

"ஆம்" என்றவர், "அண்ணே! நேத்து வந்தங்களே, அந்த அம்மா, இன்று வந்திருந்தாங்களா?" என்றார் நண்பர்.

"அம்மாவா? யார் அது? நீங்க நேத்து காப்பி சாப்பிட கடைக்கு வந்தீங்களா?" என்றார் கடைக்காரர்.

ஒரு நிமிடம் யோசித்த நண்பர், அவர் சொன்னது சரிதான், இவரின் மூளையிலிருந்து நேற்றைய விஷயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது என்று உணர்ந்தார்.

சரி! எப்போதும்போல ஒரு காப்பி போடுங்க! என்று கூறிவிட்டு நேற்று வந்து சென்ற பெண்ணை தொடர்பு கொண்டார்.

"எப்படிம்மா இருக்கே?" என்ற உடன்,

"ரொம்ப அமைதியா இருக்கு! அந்தம்மா தலையை தொட்டவுடன் ஒரு குளிர்ச்சி பரவியது. பின்னர் இப்பொழுதுவரை எந்தவித எண்ணமும் இல்லை. என்னென்னவோ என் நினைவை விட்டு சென்றது போல் உள்ளது. யார் அவங்க?" என்றாள்.

"ஹிமாலயத்திலிருந்து வந்த அவதூதர்!" அவ்வளவுதான் எனக்கும் தெரியும்! இன்னும் இரண்டு மாதத்தில் ரயில்வேயில் வேலை கிடைக்கப் போகிறது உனக்கு. வேண்டும் என்றால் இப்பொழுதே இந்த வேலையை உதறி தள்ளிவிடு." என்றார் நண்பர்.

"பரீட்ச்சை எழுதியிருக்கிறேன்! இன்னும் ரிசல்ட் வரவில்லை" என்றாள்.

அவதூதர் சொன்னதுபோல் இரண்டே மாதத்தில் ரயில்வேயில் வேலையில் அமர்ந்து தன் வாழ்க்கையை நிம்மதியாக நடத்திக் கொண்டு இருக்கிறாள், அந்த பெண்!

நண்பருக்குள் ஒரு கேள்வி தொக்கி நின்றது.

"அவதூதர்! எதற்காக என்னை பார்க்க வந்தார்?"

என்னிடம் கேட்ட பொழுது, "இதன் பதில் நாள் போக போகத்தான் கிடைக்கும்! காத்திருங்கள்!" என்றேன்.

ஒரு மாதத்திற்குப்பின் 

நண்பர் குடும்பத்துடன், வேறொரு நண்பரை அழைத்துக் கொண்டு சிதம்பரம், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு சென்று தரிசித்துவிட்டு பழனி செல்லும் வழியில் ஒரு பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டார். நான்கு பேருக்கும் செம அடி. ஒரு நாழிகை வரை அனைவரும் ஞாபகம் இன்றி நடு ரோடில் கிடந்தனர்.

இங்கு வீட்டில், அப்பொழுது குளித்துவிட்டு வந்த அடியேன், சாப்பிட செல்லாமல் ரொம்ப அசதியாக இருந்ததால் படுக்கையில் அமர்ந்து தலையை சாய்த்து அமர்ந்தேன்! ஞாபகம் போனது. எங்கு இருக்கிறேன் என்கிற உணர்வு இல்லை. 15 நிமிடங்களுக்குப்பின் நினைவு வந்த பொழுது, கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, இடது கை மேல் பாகம் என எல்லா இடத்திலும் மிகுந்த வலி. அடுத்த 10வது நிமிடத்தில் நண்பரின் அழைப்பு வந்தது. மிகப்பெரிய விபத்து நடந்துவிட்டது. நண்பருக்கு கழுத்திலும், கையிலும், காலிலும் அடி! மனைவி குழந்தைக்கு ஞாபகம் இல்லை, மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். அழைத்து சென்ற நண்பருக்கும் நினைவில்லை, இடுப்பில் எலும்பு உடைந்துவிட்டது!

இங்கு படுக்கையில் கிடக்கும் அடியேனால் "அகத்தியா!" என மனதுள் அலறத்தான் முடிந்தது. அந்த அலறலில் அனைத்தும் அடக்கம் என்றுதான் கூறவேண்டும்.

என்னிடம் பேசி துண்டித்த இரண்டாவது நிமிடத்தில் அவதூதரிடமிருந்து நண்பருக்கு போன் வந்தது.

"என்ன? விபத்து நடந்துவிட்டது போல? மொத்தம் நாலு பேரா? ஒரு பத்து நிமிடம் வரை அந்த நாலு பேரின் ஆத்மாக்கள் உடலை விட்டு வெளியே நின்றிருக்கிறது! மறுபடியும் உட்புகுந்த உங்களுக்கு, இனி புது ஜென்மம். பரவாய் இல்லை. இது நடக்க வேண்டும் என்று விதி, உங்கள் அனைவருக்கும். வலி நீண்ட நாட்களுக்கு இருக்கும். இன்னும் இரண்டு கண்டம் இருக்கு. அதையும் கடந்து விடுவாய்." என்றார்!

"என் நண்பருக்கு இடுப்பில் எலும்பு முறிவு!" என்றார் நண்பர்.

"ஆறு மாதத்தில் அதுவும் சரியாகி விடும்!" என்றார் அவர்.

அவதூதர் கூறியபடி அனைத்தும் நடந்தது. இன்றும் நண்பர் கழுத்து, கையில் வலியுடன் வாழ்ந்து வருகிறார். அவருடன் ஆத்மா உயரத்தில் தொடர்பில் இருந்த ஒரு பத்து பேர்களும் அடி வாங்கினர்! இன்றும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர், நான் அடக்கம்.

அவதூதர் வந்தது தன்னையும் பிறரையும் காப்பாற்றத்தான் என்பதை, நாள் செல்லச் செல்ல உணர்ந்தார். 

சில மாதங்களுக்குப்பின், 

ஒருநாள், வகுப்பு எடுத்து முடித்தபின், புத்தகம் படிக்கலாம் என எடுத்து பிரிக்க, செல்போன் அழைப்பு வந்தது.

எடுத்த பொழுது "ஹலோ யோகா மாஸ்டரா?" என ஹிந்தியில் பேசினாள் ஒரு பெண்மணி.

"ஆமாம்! நீங்க யாரு, எங்கிருந்து பேசறீங்க?" என்றிட,

"ஹிமாலயத்திலிருந்து பேசுகிறேன்! எனக்கு ஒரு மூச்சு பயிற்சி சொல்லித்தர முடியுமா?" என்றார் அந்த பெண்மணி.

மறுபடியும் முதலிலிருந்தா என்று யோசித்தவர், "எனக்கு நேரம் இல்லீங்க! மேலும் நான் ஊருக்கு எல்லாம் போக வேண்டி இருக்கு, இங்கு இருக்க மாட்டேன்!" என்றார்.

"நீங்க திருவனந்தபுரத்தில் தானே இருக்கிறீர்கள்? நான் வரும் போது நிச்சயம் அங்கு இருப்பீர்கள்!" என்று கூறி போனை துண்டித்தார்.

நண்பர் தன் செல்லில் போன் வந்த எண்ணை தேட, அது அழிந்து போயிருந்தது.

[அவதூதருடன் சில அனுபவங்கள் தொடர் நிறைவு பெற்றது]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 30 January 2025

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு!







29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம் தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும் உத்தரவு.

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அனைத்து சித்தர்களும் இங்கு வந்தோம் அப்பா நல்விதமாகவே அப்பனே. 

ஆனாலும் பின் ஏக்கங்கள் அனைவருக்கும் இருக்குமப்பா !!

(கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் வந்து கலந்து கொண்டு நீராட ஏக்கங்கள்)

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இல்லத்திலே அப்பனே பின் நல் முறையாகவே சில மந்திரங்களைக் கூட நிச்சயம் தெரியுமப்பா!!! உண்மை பக்தி இருந்தால் அப்பனே அவர்களுக்கே சில மந்திரங்கள் தெரியுமப்பா!!!

(குருநாதர் பொது வாக்குகளில் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா பாலாம்பிகை மந்திரம் ஆன ஓம் ஐம் க்லீம் சௌம்... என பல மந்திரங்களையும் பொதுவாக்குகளிலும் தனிநபர் வாக்குகளிலும் பல மந்திரங்களை தினசரி செப்பி வர பல மந்திரங்களை உபதேசம் செய்திருக்கின்றார்...)

அப்பனே ஒரு ஐந்து நிமிடம் எங்கு இருந்தாலும் அப்பனே பின் அவ் நீரில் அப்பனே இரு கைகளையும் வைத்து ஈசனையும் கூட அனைத்து தேவர்களையும் கூட இந்திரனையும் கூட சித்தர்களையும் கூட ஞானிகளையும் கூட ரிஷிகளையும் கூட குருமார்களையும் கூட காசி சிவனையும் கூட (காசிநாதன் விஸ்வநாதன்) கூட பின் அறிந்தும் அனைத்து பஞ்சபூத ஸ்தலங்களை கூட நினைத்து..(சிதம்பரம் காஞ்சி ஏகாம்பரம் திருவண்ணாமலை திருக்காளஹஸ்தி திருவானைக்காவல்)

ஆறுபடை வீடுகளையும் கூட 

(திருப்பரங்குன்றம் திருத்தணி ஆவினன்குடி சுவாமிமலை பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர்... இன்னும் 7ம் படைவீடு  மருதமலை ஒன்பதாம் படைவீடு ஓதிமலை) நினைத்து வணங்கி 

அனைத்து பின் நீரையும் கூட... 

(அனைத்து புனித நதிகளையும் அதாவது கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி கோதாவரி இவ் நதிகளின் பெயரை நினைத்து)

பின் இங்கு வரவேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து அப்பனே... இவை தன் அப்பனே நிச்சயம்!!


 ஆனாலும்... பின் முட்டாள்தனமாகவே கேட்பானப்பா!!! எப்படி இவையெல்லாம் சாத்தியம்??? என்று!!

 ( சில பேர்கள்...தெய்வ வாக்கான குருநாதரின் வாக்குகளை உணராமல்)

ஆனாலும் அப்பனே எண்ண அலைகள் இருக்கின்றதே!!!
அதற்கு சக்திகள் அதிகமப்பா!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!!

"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!

அது போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின் எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!

அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!

இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!

 பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும் இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு  தெரியுமப்பா!!! நிச்சயம் அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!

(கும்பமேளாவில் வந்து  திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்

நீராடும் பொழுது அந்த நீரில்

துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து 

 தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!

பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து 

அந்த நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும் நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்..‌ என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்... அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)

அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின்  அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!

அப்படி அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே

இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!

ஆனால் அப்பனே மனிதனோ வேஷங்கள் போட்டு யான் பெரிய ஆள்!! யான் பெரியவன்  என்றெல்லாம் அப்பனே சுற்றி கொண்டிருக்கின்றான்.

ஆனால் உண்மை இறைவனை உணர்ந்தவன் அப்பனே நிச்சயம் பின் எதற்கும் பின் அதாவது பஞ்சம் பிழைப்பானப்பா!! நாடோடியாக செல்வானப்பா!!! இது தான் அப்பனே!!

அதனால்தான் அப்பனே என் பக்தர்களை நிச்சயம் பக்குவப்படுத்தி அப்பனே நல்முறையாக்கி அப்பனே சில பேர்களாவது தேர்ந்தெடுத்து பின் அப்பனே பல பேர்களுக்கு நன்மைகள் செய்யும்படியாக அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஒருவர் போதும் என்பேன் அப்பனே...அவ் ஒருவனை வைத்து அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தையே மாற்றலாம்  என்பேன் அப்பனே...

அதனால்தான் அப்பனே நிச்சயம் அதாவது அப்பனே கொடுப்பதற்கு யாங்கள் தயார் அப்பனே... நீங்கள் வாங்குவதற்கு தயாரா???

ஆனால் இதிலும் கேட்பானப்பா!!!! பின் யாங்கள் பின் வாங்க தயார்.

ஆனால் நீங்கள் தான்  கொடுப்பதில்லை என்று!!

ஏனென்றால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்பேன் அப்பனே.

ஆனால் பின் இவ்வாறு கேட்பவன் நிச்சயம் பாவத்தில்!.

ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் நிச்சயம்.. வாக்குகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே... ஒருவன் குறை கூறிக் கொண்டிருக்கின்றானே !!!

(சித்தன் அருள் வலைத்தளத்தில் வந்து குருநாதர் தரும் வாக்குகளை அப்படி இப்படி என்று கருத்துக்களை பதிவு செய்து குறை கூறிக் கொண்டிருக்கும் நபருக்கு)

அவனை ஊரார் என்னவென்று சொல்கின்றார்கள் என்றால்.. நிச்சயம் இறைவனை வணங்குகின்றான் இவன். 

நிச்சயம் இறைவன் சரியானவன் தான்!

 நிச்சயம் பின் இவன் என்னென்ன???!!.........

அதாவது இவனும் பிழைக்க மாட்டான்!!.... மற்றவனையும் பிழைக்க வைக்க மாட்டான்..

சரியான தண்டனைகள் தான் நிச்சயம் இவந்தனுக்கு கொடுக்கின்றான் என்று ஊரார்கள் அனைவரும் பேசுகின்றனர். 

ஆனால் இவனோ??? யான் பக்தன் பக்தன் என்று!!

ஆனால் நிச்சயம் பல பேர்.. அப்படி!!!

ஆனால் ஒருவன் இப்படி??...

யாருக்கு கொடுப்பான் இறைவன்???

அப்பப்பா!!!.... இதுதான் இன்றைய காலகட்டம் என்பேன் அப்பனே!!

இதனால் யான் சொல்லியவற்றை அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் அதாவது பின் செய்யப் போவதில்லை. 

புண்ணியங்கள் இருந்தால் தான் செய்வான். 

வரும் காலத்திற்கு அப்பனே உபயோகமாக படும் என்பேன் அப்பனே இவ் வாக்குகள் என்பேன் அப்பனே.

(குருநாதருடைய வாக்குகளை தேடி தேடி பார்ப்பார்கள் அப்பா என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகள் கூறி இருக்கிறார்கள் குருநாதர் தரும் வாக்குகள் எக்காலத்திற்கும் பொருந்தும்... குருநாதர் திருவாய் மலர்ந்து வருங்கால சந்ததியினர் பிள்ளைகள் எல்லாரும் இதை பயன்படுத்தி நன்றாக வாழ்வார்கள் என்று ஆசிகள் தந்து வாக்குகள் தந்திருக்கின்றார் இதை பக்தர்கள் அனைவரும் கடைப்பிடித்து அனைவருக்கும் தெரியப்படுத்தி குருநாதரின் கருணை பெற செய்திடல் வேண்டும் புண்ணியம் இருப்பவர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்றும் குருநாதர் கூறி இருக்கின்றார் புண்ணியத்துடன் நம்பிக்கை வைத்து நாம் நலம் பெற குருநாதர் கூறிய வழிமுறைகளை பின்பற்றுவோம்)

அதனால் தான் அப்பனே பின் யாகங்கள் எது தடுத்தாலும்.. எவர் தடுத்தாலும் ஏனென்றால்... மனிதனுக்கு புத்திகள் இல்லை என்பேன் அப்பனே. 

அறிந்தும் கூட!!..

இதனால் தான் அப்பனே நிச்சயம் (மனிதர்களின் பிரச்சாரங்கள்)அனைத்தையும்  பொய்யாக்குவோம் வரும் காலத்தில் என்பேன் அப்பனே.

இவ்வுலகத்திற்கு எவை நல்லதோ அவை நிச்சயம் யாங்கள் செய்வோம் என்போம் அப்பனே.

பின் வரும் வரும் சந்ததியினர்களுக்கு...கூட அழகாக இன்னும் இதை படித்து அப்பனே பயன்படுத்தி அப்பனே நல் முறைகளாகி நல் ஒழுக்கங்களாகவே வாழ்வார்கள் என்பேன் அப்பனே பிள்ளைகள் என்பேன் அப்பனே!

அழகாக ஆசிகளப்பா!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 28 January 2025

சித்தன் அருள் - 1789 - உலகின் 100+ மொழிகளில் முதன் முறையாக!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே,

உலகம் முழுவதும் நம் குருநாதர், சித்தர்கள் வாக்குகள் சென்று அடையவேண்டும். சித்தன் அருள் வலைத்தளத்தை Google Translate links மூலமாக இங்குப் பல இந்திய  மொழியில் அடியவர்களுக்காகத் தொகுத்து வழங்கியுள்ளோம். அடியவர்கள் இதனை இதர இந்திய  மொழி அடியவர்களுக்குப் பகிரவும். 

Below are the direct Google Translate links for the blog https://siththanarul.blogspot.com for all supported Indian languages:

1. [Hindi](https://translate.google.com/translate?sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com)
2. [Telugu](https://translate.google.com/translate?sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com)
3. [Kannada](https://translate.google.com/translate?sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com)
4. [Malayalam](https://translate.google.com/translate?sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com)
5. [Marathi](https://translate.google.com/translate?sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com)
6. [Gujarati](https://translate.google.com/translate?sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com)
7. [Punjabi](https://translate.google.com/translate?sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com)
8. [Bengali](https://translate.google.com/translate?sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com)
9. [Assamese](https://translate.google.com/translate?sl=auto&tl=as&u=https://siththanarul.blogspot.com)
10. [Odia](https://translate.google.com/translate?sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com)
11. [Urdu](https://translate.google.com/translate?sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com)
12. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
13. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
14. [Maithili](https://translate.google.com/translate?sl=auto&tl=mai&u=https://siththanarul.blogspot.com)
15. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
16. [Mizo](https://translate.google.com/translate?sl=auto&tl=miz&u=https://siththanarul.blogspot.com)
17. [Bhojpuri](https://translate.google.com/translate?sl=auto&tl=bho&u=https://siththanarul.blogspot.com)
18. [Dogri](https://translate.google.com/translate?sl=auto&tl=doi&u=https://siththanarul.blogspot.com)
19. [Santali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
20. [Nepali](https://translate.google.com/translate?sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com)
21. [Sindhi](https://translate.google.com/translate?sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com)
22. [Kashmiri](https://translate.google.com/translate?sl=auto&tl=ks&u=https://siththanarul.blogspot.com)
23. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
24. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)
25. [Sanskrit](https://translate.google.com/translate?sl=auto&tl=sa&u=https://siththanarul.blogspot.com)
26. [Santhali](https://translate.google.com/translate?sl=auto&tl=sat&u=https://siththanarul.blogspot.com)
27. [Manipuri](https://translate.google.com/translate?sl=auto&tl=mni&u=https://siththanarul.blogspot.com)
28. [Konkani](https://translate.google.com/translate?sl=auto&tl=kok&u=https://siththanarul.blogspot.com)
29. [Bodo](https://translate.google.com/translate?sl=auto&tl=brx&u=https://siththanarul.blogspot.com)


=================================================

Plesde find the Translation links for all 100+ global languages

Creating direct Google Translate links for all ISO-639 language codes for a specific blog (e.g., https://siththanarul.blogspot.com) involves generating URLs that use Google Translate to translate the blog into each language. Below is a list of such links for all ISO-639-1 language codes (2-letter codes):

### Google Translate URL Format:

https://translate.google.com/translate?hl=<LANG_CODE>&sl=auto&tl=<LANG_CODE>&u=<BLOG_URL>

- <LANG_CODE>: The target language code (e.g., en for English, es for Spanish).
- <BLOG_URL>: The URL of the blog (e.g., https://siththanarul.blogspot.com).

### List of Direct Google Translate Links for All ISO-639-1 Languages:
Replace <LANG_CODE> with the appropriate language code and <BLOG_URL> with https://siththanarul.blogspot.com.

Here’s the list:

1. *Afrikaans* (af):  
   https://translate.google.com/translate?hl=af&sl=auto&tl=af&u=https://siththanarul.blogspot.com

2. *Albanian* (sq):  
   https://translate.google.com/translate?hl=sq&sl=auto&tl=sq&u=https://siththanarul.blogspot.com

3. *Amharic* (am):  
   https://translate.google.com/translate?hl=am&sl=auto&tl=am&u=https://siththanarul.blogspot.com

4. *Arabic* (ar):  
   https://translate.google.com/translate?hl=ar&sl=auto&tl=ar&u=https://siththanarul.blogspot.com

5. *Armenian* (hy):  
   https://translate.google.com/translate?hl=hy&sl=auto&tl=hy&u=https://siththanarul.blogspot.com

6. *Azerbaijani* (az):  
   https://translate.google.com/translate?hl=az&sl=auto&tl=az&u=https://siththanarul.blogspot.com

7. *Basque* (eu):  
   https://translate.google.com/translate?hl=eu&sl=auto&tl=eu&u=https://siththanarul.blogspot.com

8. *Belarusian* (be):  
   https://translate.google.com/translate?hl=be&sl=auto&tl=be&u=https://siththanarul.blogspot.com

9. *Bengali* (bn):  
   https://translate.google.com/translate?hl=bn&sl=auto&tl=bn&u=https://siththanarul.blogspot.com

10. *Bosnian* (bs):  
    https://translate.google.com/translate?hl=bs&sl=auto&tl=bs&u=https://siththanarul.blogspot.com

11. *Bulgarian* (bg):  
    https://translate.google.com/translate?hl=bg&sl=auto&tl=bg&u=https://siththanarul.blogspot.com

12. *Catalan* (ca):  
    https://translate.google.com/translate?hl=ca&sl=auto&tl=ca&u=https://siththanarul.blogspot.com

13. *Cebuano* (ceb):  
    https://translate.google.com/translate?hl=ceb&sl=auto&tl=ceb&u=https://siththanarul.blogspot.com

14. *Chinese (Simplified)* (zh-CN):  
    https://translate.google.com/translate?hl=zh-CN&sl=auto&tl=zh-CN&u=https://siththanarul.blogspot.com

15. *Chinese (Traditional)* (zh-TW):  
    https://translate.google.com/translate?hl=zh-TW&sl=auto&tl=zh-TW&u=https://siththanarul.blogspot.com

16. *Corsican* (co):  
    https://translate.google.com/translate?hl=co&sl=auto&tl=co&u=https://siththanarul.blogspot.com

17. *Croatian* (hr):  
    https://translate.google.com/translate?hl=hr&sl=auto&tl=hr&u=https://siththanarul.blogspot.com

18. *Czech* (cs):  
    https://translate.google.com/translate?hl=cs&sl=auto&tl=cs&u=https://siththanarul.blogspot.com

19. *Danish* (da):  
    https://translate.google.com/translate?hl=da&sl=auto&tl=da&u=https://siththanarul.blogspot.com

20. *Dutch* (nl):  
    https://translate.google.com/translate?hl=nl&sl=auto&tl=nl&u=https://siththanarul.blogspot.com

21. *English* (en):  
    https://translate.google.com/translate?hl=en&sl=auto&tl=en&u=https://siththanarul.blogspot.com

22. *Esperanto* (eo):  
    https://translate.google.com/translate?hl=eo&sl=auto&tl=eo&u=https://siththanarul.blogspot.com

23. *Estonian* (et):  
    https://translate.google.com/translate?hl=et&sl=auto&tl=et&u=https://siththanarul.blogspot.com

24. *Finnish* (fi):  
    https://translate.google.com/translate?hl=fi&sl=auto&tl=fi&u=https://siththanarul.blogspot.com

25. *French* (fr):  
    https://translate.google.com/translate?hl=fr&sl=auto&tl=fr&u=https://siththanarul.blogspot.com

26. *Frisian* (fy):  
    https://translate.google.com/translate?hl=fy&sl=auto&tl=fy&u=https://siththanarul.blogspot.com

27. *Galician* (gl):  
    https://translate.google.com/translate?hl=gl&sl=auto&tl=gl&u=https://siththanarul.blogspot.com

28. *Georgian* (ka):  
    https://translate.google.com/translate?hl=ka&sl=auto&tl=ka&u=https://siththanarul.blogspot.com

29. *German* (de):  
    https://translate.google.com/translate?hl=de&sl=auto&tl=de&u=https://siththanarul.blogspot.com

30. *Greek* (el):  
    https://translate.google.com/translate?hl=el&sl=auto&tl=el&u=https://siththanarul.blogspot.com

31. *Gujarati* (gu):  
    https://translate.google.com/translate?hl=gu&sl=auto&tl=gu&u=https://siththanarul.blogspot.com

32. *Haitian Creole* (ht):  
    https://translate.google.com/translate?hl=ht&sl=auto&tl=ht&u=https://siththanarul.blogspot.com

33. *Hausa* (ha):  
    https://translate.google.com/translate?hl=ha&sl=auto&tl=ha&u=https://siththanarul.blogspot.com

34. *Hawaiian* (haw):  
    https://translate.google.com/translate?hl=haw&sl=auto&tl=haw&u=https://siththanarul.blogspot.com

35. *Hebrew* (he or iw):  
    https://translate.google.com/translate?hl=he&sl=auto&tl=he&u=https://siththanarul.blogspot.com

36. *Hindi* (hi):  
    https://translate.google.com/translate?hl=hi&sl=auto&tl=hi&u=https://siththanarul.blogspot.com

37. *Hmong* (hmn):  
    https://translate.google.com/translate?hl=hmn&sl=auto&tl=hmn&u=https://siththanarul.blogspot.com

38. *Hungarian* (hu):  
    https://translate.google.com/translate?hl=hu&sl=auto&tl=hu&u=https://siththanarul.blogspot.com

39. *Icelandic* (is):  
    https://translate.google.com/translate?hl=is&sl=auto&tl=is&u=https://siththanarul.blogspot.com

40. *Igbo* (ig):  
    https://translate.google.com/translate?hl=ig&sl=auto&tl=ig&u=https://siththanarul.blogspot.com

41. *Indonesian* (id):  
    https://translate.google.com/translate?hl=id&sl=auto&tl=id&u=https://siththanarul.blogspot.com

42. *Irish* (ga):  
    https://translate.google.com/translate?hl=ga&sl=auto&tl=ga&u=https://siththanarul.blogspot.com

43. *Italian* (it):  
    https://translate.google.com/translate?hl=it&sl=auto&tl=it&u=https://siththanarul.blogspot.com

44. *Japanese* (ja):  
    https://translate.google.com/translate?hl=ja&sl=auto&tl=ja&u=https://siththanarul.blogspot.com

45. *Javanese* (jv):  
    https://translate.google.com/translate?hl=jv&sl=auto&tl=jv&u=https://siththanarul.blogspot.com

46. *Kannada* (kn):  
    https://translate.google.com/translate?hl=kn&sl=auto&tl=kn&u=https://siththanarul.blogspot.com

47. *Kazakh* (kk):  
    https://translate.google.com/translate?hl=kk&sl=auto&tl=kk&u=https://siththanarul.blogspot.com

48. *Khmer* (km):  
    https://translate.google.com/translate?hl=km&sl=auto&tl=km&u=https://siththanarul.blogspot.com

49. *Kinyarwanda* (rw):  
    https://translate.google.com/translate?hl=rw&sl=auto&tl=rw&u=https://siththanarul.blogspot.com

50. *Korean* (ko):  
    https://translate.google.com/translate?hl=ko&sl=auto&tl=ko&u=https://siththanarul.blogspot.com

51. *Kurdish* (ku):  
    https://translate.google.com/translate?hl=ku&sl=auto&tl=ku&u=https://siththanarul.blogspot.com

52. *Kyrgyz* (ky):  
    https://translate.google.com/translate?hl=ky&sl=auto&tl=ky&u=https://siththanarul.blogspot.com

53. *Lao* (lo):  
    https://translate.google.com/translate?hl=lo&sl=auto&tl=lo&u=https://siththanarul.blogspot.com

54. *Latin* (la):  
    https://translate.google.com/translate?hl=la&sl=auto&tl=la&u=https://siththanarul.blogspot.com

55. *Latvian* (lv):  
    https://translate.google.com/translate?hl=lv&sl=auto&tl=lv&u=https://siththanarul.blogspot.com

56. *Lithuanian* (lt):  
    https://translate.google.com/translate?hl=lt&sl=auto&tl=lt&u=https://siththanarul.blogspot.com

57. *Luxembourgish* (lb):  
    https://translate.google.com/translate?hl=lb&sl=auto&tl=lb&u=https://siththanarul.blogspot.com

58. *Macedonian* (mk):  
    https://translate.google.com/translate?hl=mk&sl=auto&tl=mk&u=https://siththanarul.blogspot.com

59. *Malagasy* (mg):  
    https://translate.google.com/translate?hl=mg&sl=auto&tl=mg&u=https://siththanarul.blogspot.com

60. *Malay* (ms):  
    https://translate.google.com/translate?hl=ms&sl=auto&tl=ms&u=https://siththanarul.blogspot.com

61. *Malayalam* (ml):  
    https://translate.google.com/translate?hl=ml&sl=auto&tl=ml&u=https://siththanarul.blogspot.com

62. *Maltese* (mt):  
    https://translate.google.com/translate?hl=mt&sl=auto&tl=mt&u=https://siththanarul.blogspot.com

63. *Maori* (mi):  
    https://translate.google.com/translate?hl=mi&sl=auto&tl=mi&u=https://siththanarul.blogspot.com

64. *Marathi* (mr):  
    https://translate.google.com/translate?hl=mr&sl=auto&tl=mr&u=https://siththanarul.blogspot.com

65. *Mongolian* (mn):  
    https://translate.google.com/translate?hl=mn&sl=auto&tl=mn&u=https://siththanarul.blogspot.com

66. *Myanmar (Burmese)* (my):  
    https://translate.google.com/translate?hl=my&sl=auto&tl=my&u=https://siththanarul.blogspot.com

67. *Nepali* (ne):  
    https://translate.google.com/translate?hl=ne&sl=auto&tl=ne&u=https://siththanarul.blogspot.com

68. *Norwegian* (no):  
    https://translate.google.com/translate?hl=no&sl=auto&tl=no&u=https://siththanarul.blogspot.com

69. *Nyanja (Chichewa)* (ny):  
    https://translate.google.com/translate?hl=ny&sl=auto&tl=ny&u=https://siththanarul.blogspot.com

70. *Odia (Oriya)* (or):  
    https://translate.google.com/translate?hl=or&sl=auto&tl=or&u=https://siththanarul.blogspot.com

71. *Pashto* (ps):  
    https://translate.google.com/translate?hl=ps&sl=auto&tl=ps&u=https://siththanarul.blogspot.com

72. *Persian* (fa):  
    https://translate.google.com/translate?hl=fa&sl=auto&tl=fa&u=https://siththanarul.blogspot.com

73. *Polish* (pl):  
    https://translate.google.com/translate?hl=pl&sl=auto&tl=pl&u=https://siththanarul.blogspot.com

74. *Portuguese* (pt):  
    https://translate.google.com/translate?hl=pt&sl=auto&tl=pt&u=https://siththanarul.blogspot.com

75. *Punjabi* (pa):  
    https://translate.google.com/translate?hl=pa&sl=auto&tl=pa&u=https://siththanarul.blogspot.com

76. *Romanian* (ro):  
    https://translate.google.com/translate?hl=ro&sl=auto&tl=ro&u=https://siththanarul.blogspot.com

77. *Russian* (ru):  
    https://translate.google.com/translate?hl=ru&sl=auto&tl=ru&u=https://siththanarul.blogspot.com

78. *Samoan* (sm):  
    https://translate.google.com/translate?hl=sm&sl=auto&tl=sm&u=https://siththanarul.blogspot.com

79. *Scots Gaelic* (gd):  
    https://translate.google.com/translate?hl=gd&sl=auto&tl=gd&u=https://siththanarul.blogspot.com

80. *Serbian* (sr):  
    https://translate.google.com/translate?hl=sr&sl=auto&tl=sr&u=https://siththanarul.blogspot.com

81. *Sesotho* (st):  
    https://translate.google.com/translate?hl=st&sl=auto&tl=st&u=https://siththanarul.blogspot.com

82. *Shona* (sn):  
    https://translate.google.com/translate?hl=sn&sl=auto&tl=sn&u=https://siththanarul.blogspot.com

83. *Sindhi* (sd):  
    https://translate.google.com/translate?hl=sd&sl=auto&tl=sd&u=https://siththanarul.blogspot.com

84. *Sinhala (Sinhalese)* (si):  
    https://translate.google.com/translate?hl=si&sl=auto&tl=si&u=https://siththanarul.blogspot.com

85. *Slovak* (sk):  
    https://translate.google.com/translate?hl=sk&sl=auto&tl=sk&u=https://siththanarul.blogspot.com

86. *Slovenian* (sl):  
    https://translate.google.com/translate?hl=sl&sl=auto&tl=sl&u=https://siththanarul.blogspot.com

87. *Somali* (so):  
    https://translate.google.com/translate?hl=so&sl=auto&tl=so&u=https://siththanarul.blogspot.com

88. *Spanish* (es):  
    https://translate.google.com/translate?hl=es&sl=auto&tl=es&u=https://siththanarul.blogspot.com

89. *Sundanese* (su):  
    https://translate.google.com/translate?hl=su&sl=auto&tl=su&u=https://siththanarul.blogspot.com

90. *Swahili* (sw):  
    https://translate.google.com/translate?hl=sw&sl=auto&tl=sw&u=https://siththanarul.blogspot.com

91. *Swedish* (sv):  
    https://translate.google.com/translate?hl=sv&sl=auto&tl=sv&u=https://siththanarul.blogspot.com

92. *Tagalog (Filipino)* (tl):  
    https://translate.google.com/translate?hl=tl&sl=auto&tl=tl&u=https://siththanarul.blogspot.com

93. *Tajik* (tg):  
    https://translate.google.com/translate?hl=tg&sl=auto&tl=tg&u=https://siththanarul.blogspot.com

94. *Tamil* (ta):  
    https://translate.google.com/translate?hl=ta&sl=auto&tl=ta&u=https://siththanarul.blogspot.com

95. *Tatar* (tt):  
    https://translate.google.com/translate?hl=tt&sl=auto&tl=tt&u=https://siththanarul.blogspot.com

96. *Telugu* (te):  
    https://translate.google.com/translate?hl=te&sl=auto&tl=te&u=https://siththanarul.blogspot.com

97. *Thai* (th):  
    https://translate.google.com/translate?hl=th&sl=auto&tl=th&u=https://siththanarul.blogspot.com

98. *Turkish* (tr):  
    https://translate.google.com/translate?hl=tr&sl=auto&tl=tr&u=https://siththanarul.blogspot.com

99. *Turkmen* (tk):  
    https://translate.google.com/translate?hl=tk&sl=auto&tl=tk&u=https://siththanarul.blogspot.com

100. *Ukrainian* (uk):  
     https://translate.google.com/translate?hl=uk&sl=auto&tl=uk&u=https://siththanarul.blogspot.com

101. *Urdu* (ur):  
     https://translate.google.com/translate?hl=ur&sl=auto&tl=ur&u=https://siththanarul.blogspot.com

102. *Uyghur* (ug):  
     https://translate.google.com/translate?hl=ug&sl=auto&tl=ug&u=https://siththanarul.blogspot.com

103. *Uzbek* (uz):  
     https://translate.google.com/translate?hl=uz&sl=auto&tl=uz&u=https://siththanarul.blogspot.com

104. *Vietnamese* (vi):  
     https://translate.google.com/translate?hl=vi&sl=auto&tl=vi&u=https://siththanarul.blogspot.com

105. *Welsh* (cy):  
     https://translate.google.com/translate?hl=cy&sl=auto&tl=cy&u=https://siththanarul.blogspot.com

106. *Xhosa* (xh):  
     https://translate.google.com/translate?hl=xh&sl=auto&tl=xh&u=https://siththanarul.blogspot.com

107. *Yiddish* (yi):  
     https://translate.google.com/translate?hl=yi&sl=auto&tl=yi&u=https://siththanarul.blogspot.com

108. *Yoruba* (yo):  
     https://translate.google.com/translate?hl=yo&sl=auto&tl=yo&u=https://siththanarul.blogspot.com

109. *Zulu* (zu):  
     https://translate.google.com/translate?hl=zu&sl=auto&tl=zu&u=https://siththanarul.blogspot.com

---

### Notes:
- Replace <LANG_CODE> with the appropriate ISO-639-1 code for each language.
- Google Translate may not support all languages perfectly, and the quality of translation may vary.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1788 - அன்புடன் அகத்தியர் - கதிரை மலை. இலங்கை!






17/1/2025 அன்று குருநாதர் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: கதிரை மலை. இலங்கை.

வள்ளி திருவிளையாடல் படலம்!!!

மயில் மீது அழகாக!!!! அழகாக!!!! பறந்து செல்கின்ற முருகா!!!!!

உந்தனையே மனதில் பின் மீண்டும் நினைத்து...  உரைப்பேன் அகத்தியனே!!!

கந்தனே!!!!

கந்தனே அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவதை எல்லாம் இப்பொழுது எடுத்துரைக்க போகின்றேன்!!!

மீண்டும் அங்கிருந்து பின் கந்தனும் கூட!!!!.

(கதிர்காமத்தில் இருந்து)

வேலவன்

அகத்தியனே!!  நிச்சயம் யாம் செல்வோம்!!! பின் இங்கிருந்து நிச்சயம் இவ் மலை தெரிகின்றதே இங்கு செல்வோம்!!!..

.(கதிரை மலைக்கு) 

பின் அங்கு இன்னும் பல வடிவங்களில் கூட... என்னென்ன இருக்கின்றதோ?? அவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட... ஆனாலும் பின் பார்த்து விடுவோம் வா!! என்று நிச்சயம். 

யானும் கூட!!!

அகத்திய பெருமான் 

முருகா!!! இவ்வாறெல்லாம் பின்... அறிந்தும் இதனை என்று நினைக்க நிச்சயம்..

எதற்காக?? என்னை அனுப்பினார்?? உன் தந்தையான ஈசன்!!

ஆனாலும் இப்பொழுது இப்படி எல்லாம் எனை அழைத்து நிச்சயம்!!!.......

அங்கு (பாரத தேசத்தில் இருக்கும் கைலாயத்திற்கு) சென்றாலும் உன் தந்தை நிச்சயம் விடப்போவதில்லை!!!... அதாவது நீயும் இங்கு என்னை விடப்போவதில்லை!!!... அதனால் என்ன செய்வது?? சரி!!! உன் பின்னே வருகின்றேன்!! என்று!!

வேலவன். 

அகத்தியரே நிச்சயம்... நீயாவது வாரும் !! என் பின்னே!!!

பார்த்துக் கொள்வோம் என்று!!

அகத்திய பெருமான்!

ஆனாலும் நிச்சயம் இப்பொழுதே உன் தந்தை அறிந்திருப்பார்!!!... அனைத்திற்கும் காரணம் அகத்தியன் தான் என்று!!

வேலவன் 

பின் நினைக்கட்டும்!! நினைக்கட்டும்!! அகத்தியரே!!.. நிச்சயம் அவ்வாறு நினைத்தால் என்ன????

யான் இருக்கின்றேன் அல்லவா!!!!

அகத்திய பெருமான் 

 நிச்சயம் அறிந்தும் கூட சரி!!

பின் தலையை இப்படி சாய்ப்பதா?? அப்படி சாய்ப்பதா??.... 

(சரி என்று சொல்வதா வேண்டாம் என்று சொல்வதா) 

என்று தெரியாமல்.. பின் அதாவது நிச்சயம் உன் தந்தையைப் பற்றியும் தெரியும்... 

பின் யான் உடனடியாக சென்று நிச்சயம் பின் முருகன் இப்படித்தான் (அடம்) இருக்கின்றான் என்று!! மன்னித்து விடுங்கள் ஈசனாரே!! என்று சொல்லிவிட்டால்!!!....

சரி அகத்தியனே!! என்று மன்னித்து விட்டு விடுவான்!! அவ்வளவுதான்! 

ஆனாலும் இங்கு நாம் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தையும் உன் தந்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றான். 

சரி பரவாயில்லை!!!

வேலவன். 

அகத்தியரே வாரும்!!! வாரும்!!!

அறிந்தும் எதை என்று கூட இவை ஆனாலும் ஈசனாருக்கும் இவை தெரிந்தது!!

ஆனாலும் மீண்டும் பார்வதி தேவியிடம் ஈசன்!!

பார்வதி தேவியே!!!.. நிச்சயம்தனை கூட பின் அதாவது பின் வரப்போவதில்லை!! கந்தன்! 

எப்படியாவது நிச்சயம் என்னவென்று அதாவது.. ஒரு பெண்ணை அனுப்பினால் என்ன?!! என்று யோசனை!! அதனால் ஒரு பெண்ணை அனுப்புகின்றேன்!! நிச்சயம் அதாவது அறிந்தும் கூட!! எதை என்று அறிய!!

இங்கெல்லாம் அதாவது அப்போதெல்லாம் அதாவது பின் உன் குகன் கூட நிச்சயம் அதாவது ஒன்றும் இல்லாமல் பின் இருக்கும் பெண்களை தான் பிடிக்கும். 

(ஏழை எளிய எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்களை முருகனுக்கு பிடிக்கும்) 


ஆனாலும் அறிந்தும் கூட அதனால்... பின் ஒன்றும் இல்லாமல் இருக்கும் இடத்திலிருந்து அனுப்புவோம் என்று. 

இதனால் தான் நிச்சயம் தன்னில் கூட... ஒன்றுமே இல்லாமல்... உணவிற்கு கூட வழி இல்லாமல்  இருக்கும் பின் அறிந்தும் கூட பின் அழகாகவே பின் அப்படியே படைத்து நிச்சயம் அவள் தனக்கு... இச்சா சக்தியும், ஞான சக்தியும் அனைத்து சக்திகளையும் இட்டு நிச்சயம் அனைத்தும் 

புரிந்து கொள்ளும் வல்லமையும் கொடுத்து நிச்சயம் பின் இங்கு வள்ளியை அனுப்பினார்.

(கதிர்காமத்திலும் கதிரை மலையிலும் வேடுவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களும் வழிபாடு செய்து வருகின்றார்கள். இன்றளவும் கூட அவர்கள் இனம் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது இலங்கையில். 

காட்டில் வாழும் அவர்கள் இனத்தில் இருந்து ஈசன் வள்ளி தேவியை அனுப்பினார்)

மலையில் தனியாக நிற்கும் அப் பெண்ணை பார்த்து முருகன்!!!

வேலவன்

பின் அகத்தியரே!! அகத்தியரே!! அறிந்தும் கூட பின் அழகாக ஒரு பெண் தோன்றுகின்றாள் இங்கே! பின் எதனால் என்று!!

ஆனாலும் யான் அகத்தியன் உணர்ந்து கொண்டேன். 

அகத்திய பெருமான் 

நிச்சயம் முருகா!!! அவை எவை என்று கூட யாருமே இல்லை!!! ஆனாலும் ஒன்றும் இல்லாமல் தான் கீழே இருக்கின்றார்கள்!!(வேடுவர்கள்)

ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட...இவள் மட்டும் இங்கு அழகாக வந்திருக்கின்றாளே!! என்றெல்லாம்!!

ஆனாலும் பின் என் மனது ஆனாலும் அறிந்தது இதெல்லாம் இதன் காரணம் ஈசனாரே என்று!!

யான் முருகனைப் பார்த்து நிச்சயம் முருகா!!! எதற்காக இப்பெண் இங்கு இருக்கின்றாள்?? என்று நீயே கேள் என்று!!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அப் பெண்ணிடம்  நேராகச் சென்று கந்தன்.. அப் பெண்ணை பார்த்து...

பெண்ணே யார் நீ??அழகாக இருக்கின்றாய்!!! எதற்காக? நீ இங்கு வந்தாய்??.. பின் இதெல்லாம் இங்கு அழியப் போகின்றது... இங்கிருந்து ஓடி விடு!! என்று!!

(வள்ளி) அப் பெண்.

யான் இங்கிருந்து செல்ல மாட்டேன்!!! உந்தனை விரும்புகின்றேன் என்று அப் பெண்மணியும் கூட!!

வேலவன். 

என்ன?????

நிச்சயம் நீ என்னை விரும்புகின்றாயா??! அப்படி என்ன???... எப்படி?? அறிந்தும் எதை என்று கூட!!

பின் விரும்புகின்றாயா???? எதற்கு விரும்புகின்றாய்???

(வள்ளி) பெண்மணி 

நிச்சயம் உந்தனை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என்று. 

நிச்சயம் முருகன் பின் ஓடிவந்து அகத்தியரே!! அகத்தியரே!!

என்ன இது????!

நாம் தன் அதாவது உலகத்தை காக்க நின்றோம்... ஆனாலும் இப் பெண்மணியோ என்னை விரும்புகின்றேன் என்று இன்னும் ஏதேதோ பின் எடுத்துரைக்கின்றாள்... அதாவது பின் என்னை திருமணம் கொள்கின்றேன் என்று!!!

அகத்திய பெருமான்!!!

அப்பா!!!!!...... எந்தனுக்கு ஏதும் தெரியாது!!!! என்னை விட்டு விடு!!!

பின் நீ!!! ஆவது!! உன் தந்தை...ஆவது!!

 என்றெல்லாம் !!

(நீயாச்சு உன் தந்தையாச்சு) 

வேலவன் 

பின் தந்தைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் யான் நினைத்தேன்... ஆனாலும் பின் அனைத்தையும் நடத்தி வைப்பவனும் கூட பின் ஈசனார் என்று..

ஆனாலும் எதை என்று அறிய அறிய...

அங்கிருந்தே. ஈசன். அகத்தியனே!! ஏதாவது பின் சொதப்பி விடாதே... என்ற சப்தமும் எந்தனுக்கு கேட்டது!!

பின் ஆனாலும் யான் அமைதியுற்றேன்.

(கைலாய மலையில் இருந்து அகத்தியருக்கு மட்டும் ரகசியமாக ஈசன் காரியத்தை கெடுத்து விட வேண்டாம் என்று கட்டளையை கொடுத்து விட்டார்) 

அகத்திய பெருமான் 

நிச்சயம்.... முருகா உன்னுடைய இஷ்டம்!!! அறிந்தும் கூட என்றெல்லாம்!! நிச்சயம் அப்பெண்மணியும் கூட முருகனின் கால்களை கூட கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

நிச்சயம் பின் கட்டிக் கொள்! என்னை என்று!

வேலவன். 

நிச்சயம் அப்படி எல்லாம் பின் அறிந்தும் நிச்சயம் பின் எதை என்று கூட முடியாது..

நிச்சயம் நீ எங்கிருந்தாயோ? நிச்சயம் உன் சொந்த பந்தங்கள் யார் ? என்ன? என்றெல்லாம் நிச்சயம்! 

(வள்ளி) பெண்மணி

இதோ என் சொந்த பந்தங்கள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட அனைவரையும் பின் அதாவது பின் காட்டினாள்.

வேலவன்

ஆனாலும் இவர்கள்தான் உன் சொந்த பந்தங்களா??? நிச்சயம் அறிந்தும் கூட பின் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே???(காட்டில் வாழும் வேடுவர்கள்) 

நீ மட்டும் எப்படி இப்படி அழகாக இருக்கின்றாயே?? என்ன? எப்படி? என்று!!!

(வள்ளி) பெண்மணி .

ஆனாலும் என்னை இறைவன் பின் படைத்து விட்டான் இப்படி.. ஆனாலும் எனக்கும் ( திரு)மணம் கூடி வரவில்லை... யாரும் என்னை (திரு)மணம் முடிக்க வரவில்லை!!!

நீயும் பின் இவ் மலையில் சென்று கொண்டிருந்தாய்... உன்னை யான் பார்த்தேன் விரும்பி விட்டேன் என்று ஏதேதோ பேசினாள். 

அகத்திய பெருமான்.. தற்போது நமக்கு

அப்பனே இதன் தாக்கத்தையும் கூட வரும் வரும் வாக்கியத்தில் சொல்கின்றேன் அப்பனே.. நிச்சயம் ஏன்? எதற்காக? இவள் தன் தேடி வந்தாள்?? என்றெல்லாம் அப்பனே பின்...

இச்சா சக்தியும்!! கிரியா சக்தியும்!! இன்னும் அப்பனே பின் அனைத்தும் அனைத்து அஷ்ட சக்திகளும் இணைந்தது தான்..

அப்பனே பின் தெய்வானையாகவே!! அப்பனே பின் வள்ளியாகவே!!!

அறிந்தும் கூட இவையெல்லாம் பின் தத்துவங்களாக வரும் காலத்தில் பின் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே..

நிச்சயம் பின் அதாவது பின் வள்ளியும் கூட அறிந்தும்.. பின் நிச்சயம் தன்னில் கூட.. 

வள்ளி தேவி!!

அதாவது என்னை திருமணம் செய்து கொள்கின்றாயா என்ன? என்று!!

வேலவன் 

நிச்சயம் வேண்டாம் பின் திருமணங்கள் வேண்டாம் என்று!!!

ஆனாலும் பின் அகத்தியனே... பின் என்ன?? இது??? தொந்தரவுகள்!!... இப்படி ஆயிற்றே!!!

நாம் தன் எதற்காக?? வந்தோம்??

ஆனால் இப்படி இப்பெண்மணியே நம்மை விடவில்லை என்று..

நிச்சயம் பின் அகத்தியனே!!! இவள்தனை பின் அழகாகவே.. இவளிடத்தில் சென்று விட்டு விடு!! நிச்சயம் அறிந்தும் என்றெல்லாம்...

இவள்தன் ஒருவளாக அதாவது தனியாக இருக்கின்றாள் அல்லவா!!! நிச்சயம் இவள் ஊரில் அதாவது எந்தனுக்கு இவள் ஊரை காட்டினாள். யான் இங்கிருந்தே பார்த்துவிட்டேன்... நீ இவளை பின் பத்திரமாக இவள் ஊரில் விட்டு விடு என்று. 

அகத்திய பெருமான்..

அறிந்தும் யானும் சென்று நிச்சயம் பின் ஆனாலும்...

வள்ளியோ!!!!? அறிந்தும் கூட பின்...


வள்ளி தேவி 


நிச்சயம் முனிவரே!!! அனைத்தும் நீங்கள் செய்கின்றீர்கள் பின் அதாவது யான் மீண்டும் (கூட்டத்தில்) சென்றால்... என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் அவர்கள். 


(காட்டில் வாழும் வேடுவர் கூட்டம் கூட்டத்திலிருந்து தனியாக சென்ற ஒருவரை குறிப்பாக பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதி முறை அதாவது ஒரு நாள் அல்லது ஒரு இரவு கூட்டத்திலிருந்து விலகி விட்டு சென்று விட்டால் கூட்டத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் இன்றளவும் நாடோடிகளாக இருக்கும் சில குழுக்களிலும் வனவாசிகளாக வாழும் இனங்களிடமும் இந்த நடைமுறை இப்போதும் இருக்கின்றது) 


நிச்சயம் நீங்கள் ஏதாவது ஒன்றை செய்வீர்களாக என்று நிச்சயம்!!


அகத்தியர் பெருமான் 


நிச்சயம் நீ செல் தாயே!! யானும் உன்னுடன் வருகின்றேன் என்று பின் நிச்சயம் அங்கு  அழைத்துச் சென்று!!



கூட்டி வந்தாள்..அக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு..


பின் அவர்களோ!? அதாவது அக் கூட்டத்தினர்... அறிந்தும் கூட இவள் வேண்டாம்!!! எங்களை விட்டு விட்டு இவள் எங்கோ சென்று விட்டாள்!!! நிச்சயம் இவள் எங்களுக்கு திரும்பவும் வேண்டாம் என்று அனைவரும்!! நிச்சயம் பின் எதை எதையோ சொல்லி ஏதேதோ செய்து என்றெல்லாம் நிச்சயம் இவள்தனை விரட்டினார்கள்!



வள்ளி தேவி. 


நிச்சயம் பார்த்தாயா முனிவரே!!!... அங்கு அவர்களிடம் சேர அவர்களும் விடவில்லை!!


 இங்கும்...என்னை விடவில்லை!!! ஏற்றுக்கொள்ளவில்லை!!..


இனி யான் சாகத் தான் போக வேண்டும் என்றெல்லாம். 


நிச்சயம் மீண்டும் பின் முருகனிடத்தில்.(அகத்தியரும் வள்ளியும் முருகன் இருக்கும் இடத்திற்கு)


பின் முருகன் என்னை பார்த்து!!


வேலவன்! 


அகத்தியரே! அகத்தியரே! இது என்ன விளையாட்டு! 

யான் உன்னிடத்தில் என்ன சொன்னேன்???... நீ என்ன? பின் அறிந்தும் கூட என்ன செய்கின்றீர்கள்? என்று!!!


அகத்திய பெருமான். 


முருகா!!!.... என்னை சரியாக விட்டு விடுங்கள்!!!...


பின் மகனும் கூட! தந்தையும் கூட...! சேர்ந்திட்டு!!!!.........


 நிச்சயம்.. பின் இவ்வாறு அவ்வாறு.. பின் இவ்வாறு இல்லாமல் பின் சேர்ந்திட்டு.. இப்படி என்னை செய்கின்றீர்களே எப்படி..? என்றெல்லாம்!!


(தந்தையான ஈசனும் மகனான முருகனும் சேர்ந்து என்னை ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று குருநாதர்) 


அப்பனே யான் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றேன்... நீயும் நிச்சயம் இப் பெண்ணும் கூட ஏதாவது பேசி நிச்சயம்...(ஒரு முடிவுக்கு வாருங்கள்)



வேலவன் 


 நிச்சயம் பின் பெண்ணே!! உன்னை ஏன் உன் கூட்டத்தில் சேர்க்கவில்லை??


வள்ளி தேவி


நிச்சயம் பின் அதாவது உலகத்தை காக்க வந்தவன் நீ அல்லவா... நிச்சயம் ஏன் என்று உந்தனக்கு தெரியாதா???? என்றெல்லாம் நிச்சயம்!!


ஒரு பெண் பின் அதாவது ஒரு இரவு அதாவது கூட்டத்தில் இருந்து விலகி ஓரிடத்தில் சென்றுவிட்டால் நிச்சயம் அவர்களை மீண்டும் நிச்சயம் பின் சேர்க்கப் போவது இல்லை என்னை சேர்க்கவும் மாட்டார்கள் நிச்சயம் ஏற்கப் போவதுமில்லை... யான் நிச்சயம் அறிந்தும் உண்மைதனை கூட. 


இதனால் இதனால் அறிந்தும் இதை தன் புரியாமல் கூட நிச்சயம் அதனால் நீ தான் என்னை நிச்சயம் பின் அறிந்தும் கூட திருமணம் செய்ய வேண்டும். 


நீதான் என்னை அழைத்துச் செல்ல வேண்டும். 



வேலவன். 


அய்யய்யோ!!!..... அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொண்டால்....!?!?!! என் தந்தை இருக்கின்றானே... நிச்சயம் கோபம் கொள்வான்!!


பின் அதாவது நீ ஏதோ ஒன்றை வீராப்பாக பேசிவிட்டு உலகத்தை காப்பதாக சொன்னாயே!!! இங்கேயே (இலங்கை கதிர்காமத்திலே) இருக்கின்றேன்!!


 நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னாயே!!!


இப்போது ஒரு பெண்ணை வந்து பின் அழைத்து வந்திருக்கின்றாயே என்று.. நிச்சயம் என் தந்தை கோபம் கொள்வான். 



அகத்தியர் பெருமான் நமக்கு  தற்போது உரைக்கும் வாக்கு


ஆனாலும் இதுவும் ஈசன் செயலே !! அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!! இவையெல்லாம் பின் நிச்சயம் புரியாதப்பா!!


பின் எடுத்துரைத்தால் தான் பின் புரியுமப்பா!!!... போகப் போக பின்  ரகசியங்களை எல்லாம் சொல்வேன் என் பக்தர்களுக்கு அப்பனே. 


தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வெற்றி உண்டு... வெற்றிகளோடு வாழலாம் என்பேன் அப்பனே... அனைத்தும் அப்பனே பின் அதாவது நீங்களே அன்பு கருணை அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழலாம். 


அதற்காகத்தான் அப்பனே பன்மடங்கு அப்பனே பின் உங்களை உயர வைக்கத்தான்.. பின் யாங்கள் யுகங்கள் யுகங்களாக அப்பனே வந்து தெளிவு படுத்துகின்றோம் அப்பனே. 


அப்பனே தெளிவு பெறாமல் வாழ்ந்து வந்தாலும் நிச்சயம் அப்பனே... கலியுகத்தில் நன்றாக வாழ முடியாதப்பா!! கஷ்டங்கள் அப்பனே இன்னும் துன்பங்கள் ஏற்பட்டு அப்பனே பிரிவு நிலைகள் ஏற்பட்டு அப்பனே நிச்சயம் பின் உங்களை சார்ந்தவர்களும் அழிவு நிலைக்கு தான் செல்வீர்கள் என்பேன் அப்பனே. 


அதனால் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் பின்.. கந்தனும் கூட!!


வேலவன். 


பின் அகத்தியரே!! என்ன இது? ஏதோ ஒரு விஷயத்திற்காக நாம் வந்தோம்!!


ஆனாலும் கடைசியாக இப்படி இப்பொழுது சிக்கிக் கொண்டோமே என்றெல்லாம்..


நிச்சயம் யான் அகத்தியனும் கூட.. நிச்சயம்.. பின் அறிந்தும் கூட பின்..


அகத்தியர் பெருமான். 


குகனே!!! பின் (திருமணம்) முடித்துக் கொள்!! என்ன!!! அப் பெண்ணை  யாரும் காப்பாற்றப் போவதில்லை..


பின் நீதான் இவ்வுலகத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னாயே.... இப்பொழுது இந்தப் பெண்ணை காப்பாற்று.. இப்போது நீ இந்த பெண்ணை திருமணம் செய்து தான் ஆக வேண்டும்...


அப்படிச் சென்றாலும் அவர்களும் விட மாட்டார்கள்.(கூட்டத்தில் சேர்க்க மறுப்பு)



. இப்படி சென்றாலும் நீயும் ஏற்க மறுக்கின்றாய்!!! 


இப் பெண் எங்கு செல்லும்??? என்று!!


ஆனாலும்.. பின் அறிந்தும் கூட 


வேலவன். 


அகத்தியரே... நிச்சயம் பின் எப்படி ??என்று கூட!!


இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய ஆனாலும் பக்குவமாக எடுத்துரைத்து பின் பேசினான் வள்ளியோடு. 


வேலவன் வள்ளியுடன் 


நிச்சயம் எனக்கு இவ் ஆசைகள் எல்லாம் இல்லை!! நிச்சயம் ஏதோ உனை யான் பார்த்தது கூட இல்லை!!!


என்னை விரும்புகின்றாய் திருமணம் செய்து கொள்கின்றாய் என்று சொல்கின்றாய்!!!


நிச்சயம் யான் இவ்வுலகத்தை காக்க வேண்டும் அவ்வளவுதான் என்று..


வள்ளி 


நிச்சயம் உன் மேல் அன்பு கொண்டு உள்ளேன்!! நிச்சயம் பின் கந்தா!!! நிச்சயம் அதாவது உன் பக்கத்திலே இருக்கின்றேனே!!! (உன் பக்கத்தில் மட்டும் இருந்து கொள்கின்றேன்) 


நிச்சயம் எனை நீ விரும்பவும் வேண்டாம் திருமணமும் செய்யவும் கொள்ள வேண்டாம்!!... நிச்சயம் யான்!!  எந்தனுக்கு உன் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தை கொடு என்று!!


வேலவன் (தனியாக ஓரமாக அமர்ந்திருந்த அகத்தியரை அழைத்து)


பின் அகத்தியரே நிச்சயம் வாரும்!!! நிச்சயம் பின் இவ்வாறு அதாவது இப்பொழுது ஒத்துக் கொண்டாள். பின் வேண்டாம் என்று திருமணமும் செய்யவில்லை என்று நிச்சயம் இவள் என் பக்கத்தில் நின்றாலே போதும் என்று சொல்கின்றாள்.. என்று 



அகத்தியப் பெருமான்


நிச்சயம் பின் அடடா !! பின் அதாவது முருகா!! யான் 

கூட சென்று விடுவேன்...




 நிச்சயம் அதாவது உந்தனுக்கு வழி காட்டியாக பின் இருக்கலாமே இப் பெண்மணியும் கூட என்று!!


(முருகனிடம் குருநாதர் அதாவது எப்பொழுதும் நான் உன்னுடன் இருந்து கொண்டே இருக்க முடியாது யானும் அங்கு இங்கு என்று சென்று விடுவேன்! ஆனால் இந்த பெண்மணி உன்னுடன் இருந்தால் உனக்கு வழிகாட்டியாக இருப்பாள் அல்லவா என்று)



வேலவன். 


நிச்சயம் அதாவது தந்தை என்ன சொல்லுவானோ??? என்று நிச்சயம்!!


சரி செல்வோம் தந்தையிடமே செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் கந்தனும் கூட. 



(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகன் வள்ளி மூவரும் இங்கு இருக்கும் கைலாய மலைக்கு வந்து ஈசனை சந்தித்து!!)


வேலவன். 


தந்தையே!!! (என்று தயங்கிக் கொண்டு)



ஈசனும் பார்வதி தேவியும்.


அதாவது ஒன்றும் தெரியாதவர் போல் ஈசனாரும் பார்வதி தேவியாரும் முருகனைப் பார்த்து !!!


முருகா!!! ஒரு பெண்ணை அழைத்து வந்து விட்டாயா???


நிச்சயம் நீ பின் இவ்வாறு செய்யலாமா????


உலகத்தை காக்க வேண்டும் என்று அடம் பிடித்து நின்றாயே!!!..


இப்போது ஏன் ஒரு பெண்ணை இப்படியா????



வேலவன்!!


அய்யய்யோ!!  பின் தந்தையே!! அறிந்தும் கூட யான் செய்யவில்லை எதுவும்!! செய்யவில்லை! 


இப் பெண் தான் அனைத்திற்கும் காரணம் என்று. 



ஈசனார் குருநாதரை பார்த்து!


பின் அகத்தியனே.. என்ன இது விளையாட்டு?? அறிந்தும் எதை என்று எவை என்று புரிய புரிய... பின் நீயும் கூட இப்படி ஆகிவிட்டாயே என்று!!


ஆனாலும் அனைத்து விஷயங்களும் கூட பின் ஈசன் அறிவான்!!!


சரி!!! இப் பெண்ணை திருமணம் செய்து கொள்!! என்று ஈசனும் கூட பார்வதி தேவியும் கூட முருகனிடம் திருமணம் செய்து கொள் என்று!!!


வேலவன். 


திருமணமா??????????????


நிச்சயம் இல்லை!!!!!!!!!!


என்னிடத்தில் இவள் வந்தாள்!!.. பின் என்னை விரும்பவும் தேவையில்லை!! நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் எவை என்று புரிய.. நிச்சயம் எதை என்று அறிய அறிய... திருமணமும் செய்ய தேவையில்லை என்றாள்.


நிச்சயம் உன் பக்கத்தில் நின்றாலே போதும் என்றாள்!! என்று!!



அகத்தியர் பெருமான் நமக்கு கூறும் வாக்கு


ஆனாலும் வள்ளியை ஈசனே அனுப்பியது தான் அப்பனே!!!


 ஆனாலும் பக்கத்தில் அதாவது..‌ முருகனும் கூட மனம் மகிழ்ந்து... நிச்சயம். அவள் தனக்கு யாரும் இல்லையே என்று!!!


 நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் பின் பக்கத்தில் இடம் அளித்தான் அப்பனே!!!


அனைத்து சக்திகளும் இணைந்தது தான் வள்ளி என்பேன் அப்பனே!!!


நிச்சயம் பின் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய... அப்பனே இன்னும் அப்பனே முருகனுக்கு சக்திகள் கொடுத்து (வள்ளியின் சக்தி முருகனுக்கு) இக்கலியுகத்திலும் கூட அப்பனே... பின் எவை என்று அறிய அப்பனே இன்னும் அப்பனே 


""""காத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!



(இலங்கை இன்றும் இருப்பதற்கு முருகனே காரணம். முருகனே லங்காபுரியை மட்டுமல்ல இவ்வுலகத்தையே காப்பாற்றி கொண்டிருக்கின்றார்)


அனைத்து சக்திகளும் இணைந்தது வள்ளி என்பேன் அப்பனே. 


தெய்வானையைப் பற்றிய கூட விவரமாக விவரிக்கின்றேன் அப்பனே. 


இன்னும் அப்பனே பின் எப்படி? எது என்று அறிந்தும் கூட அப்பனே அறிந்து செயல்படுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய அறிய 


அப்பனே பின் ஈசன் அனுப்பியது தான் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே வள்ளிதனைக் கூட அப்பனே!!


சக்திகளாக இருக்கட்டும் என்று அப்பனே!!


இதுதான் அப்பனே பின் அதாவது இன்னும் சொல்கின்றேன்...


ஆனால் இப்பொழுதெல்லாம் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!


என்ன மனிதர்களுக்கு????

(மனிதர்களுக்கு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரிவார்கள்)


அப்பனே பின் எதை என்று அறிய தெரியாமல் என்பேன் அப்பனே!!


(வள்ளி முருகன் குறித்து மனிதர்கள் தன் இஷ்டத்திற்கு கதைகள் கவிதைகள் என உண்மை பொருள் தெரியாமல் பரப்பிக் கொண்டிருப்பதை குருநாதர் சுட்டிக்காட்டுகின்றார்)


இதனால்தான் அப்பனே பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 


நிச்சயம் அப்பனே பின் கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்வேன்!!


நடுவில் என்னென்ன நடந்ததுள்ளது?? என்பதையெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் கூட 


அதனால் அப்பனே காத்துக்கொண்டே இருக்கின்றாள் அப்பனே வள்ளியும் கூட மலையின் (கதிரை மலை) மீது நின்று அப்பனே பின் கீழே இருக்கும்(கதிர்காமம்) எவை என்று கூட அழகான எதை என்று அறிய அறிய அப்பனே பெண்களையும் கூட அனைவரையுமே காத்துக் கொண்டு அப்பனே சக்திகளாக திகழ்ந்து கொண்டே இருக்கின்றாள் அப்பனே!!


பின் முருகனுக்கு இருக்கக்கூடிய சக்தி!! பின் வள்ளிக்கும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய! உண்டு!!!


ஏனென்றால் அப்பனே முருகனைக் கூட அப்பனே ஈசன் தான் பின் அனுப்பியது!!!


அப்பனே வள்ளியையும் கூட அப்பனே ஈசன் தான் அனுப்பியது..


இதில் என்ன வித்தியாசம் என்பதெல்லாம் அப்பனே நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!


உண்மை நிலை தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே இறைவன் ஒன்றும் செய்யப் போவதில்லை... என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே. 


உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!! இறைவனை வணங்குங்கள் பின்பு அனைத்தும் கொடுப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 


பக்குவங்கள் இன்னும் வளரட்டும்!! அப்பனே பின் திருந்தட்டும் பின் மனிதர்கள் அப்பனே நன்முறைகளாக அப்பனே இன்னும் விளக்கத்தோடு அப்பனே நிச்சயம் அப்பனே பல ரகசியங்களை சொல்கின்றேன் அப்பனே!!


ஆசிகள் ஆசிகள் ஆசிகளப்பா!!!.... ஆசிகள்!!!



கதிரை மலை பற்றிய விபரங்கள்.

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் கதிரைமலை முருகனாலயத்தைத் தரிசிக்க மலையேற வேண்டும்.

கதிர்காமத்திலிருந்து 3 1/2 கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலை என அழைக்கப்படும் கதிரைமலை ஆலயத்திற்கு 

 படிக்கட்டுகள் உள்ளன. கதிர்காமத்திற்குச் செல்லும் பக்தர்கள் கதிரைமலைக்கும் செல்வார்கள்.

மலையடிவாரத்திலிருந்து சுமார் 5000 கி.மீட்டர் உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. அந்தக்காலத்தில் மலைஉச்சியில் வேலுடன் கூடிய முருகனாலயம் அமைந்திருந்ததாகக் கூறுவர்.

இன்று வேலுண்டு.

நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் வேலில் நைவேத்தியங்களை (அவல் கடலை பொங்கல்) சாத்தி வழிபாடு செய்கின்றனர். சிவன் ஆலயமும் உள்ளது.அரச மரங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. எங்குமில்லாத குளிர்காற்று வீசிக்கொண்டேயிருப்பது சிறப்பம்சமாகும்.

கதிரமலை மேலே செல்வதற்கு ஜீப் வசதியும் உண்டு.



அடியவர்களுக்கு ஒரு விளக்கம். 


சமீப காலமாக சித்தன் அருள் வலைத்தளத்தில் குருநாதருடைய சித்தர்களுடைய வாக்குகள் படித்து வரும் அடியவர்கள்.. சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விளக்கம். 



அனைத்தும் அறிந்தவர்கள் சித்தர்கள். அஷ்டமா சித்திகளை அடைந்து அகிலத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சித்தர்களுக்கு அனைத்து மொழியும் தெரியும்.. அனைத்து வட்டார வழக்கு மொழியும் தெரியும். 



சித்தர்களுடைய வாக்குகள் எப்படி இருக்கும் என்று தெரியுமா ??? இந்த வாக்குகள் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றது என்று சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர். 


அகத்தியர் மைந்தன் திரு ஹனுமதாசன் ஐயா காலகட்டத்தில் ஜீவநாடி ஓதும் பொழுது தூய தமிழில் வந்து குருநாதர் வாக்குகள் உரைத்த பொழுது அதில் பல்வேறு சொற்களுக்கு விளக்கம் பொருள் புரியாமல் வேண்டி கேட்டுக்கொண்டு தற்போதைய தமிழில் வந்து வாக்குகள் தாருங்கள் என்று குருநாதரிடம் மன்றாடி கேட்டு குருநாதர் தன்னுடைய வாக்கு நடைமுறையை மாற்றி மக்கள் தற்போதைய காலகட்டத்தில் பேசி வரும் மொழி ஆளுமையில் சித்தர்களும் குருநாதரும் வாக்குகள் தருகின்றனர். 



உண்மையில் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் தான் பாடம் நடத்துவார்... புரியாத மொழியில் புரியாத நடையில் பாடம் நடத்தினால் எப்படி மாணவர்களுக்கு புரியும்??


மாணவர்களுக்கு இருக்கும் புத்திக்கு தகுந்தவாறு தான் பாடம் எடுக்கப்படும். 


இங்கு சித்தர்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வாக்குகள் தந்து அவர்களுக்கு புரியும்படி அவர்கள் பேசும் சொற்களை பயன்படுத்தி வாக்குகள் தந்து நமக்கு புரிய வைக்கின்றனர். 


இல்லை !! இது சித்தர்களின் மொழி இல்லை !! சித்தர்களின் வார்த்தைகள் இப்படி இருக்காது என்றெல்லாம் குழப்பங்கள்.



சித்தர்கள் இப்படித்தான் பேச வேண்டும் இந்த சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் மனிதர்கள் நாம் கட்டாயப்படுத்த முடியாது. 


சித்தர்கள் தகாத வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.. எப்படி இப்படி எல்லாம் அவர்கள் கூறுவார்கள் என்று. 


ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் இங்கு தகாத செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் செய்யும் தகாத செயல்களை தகாத வார்த்தைகளில் கூறித்தான் புரிய வைக்க முடியும். 


காகபுஜண்டர் மகரிஷி ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என மனிதர்கள் இங்கு செய்வதை அவரது வாக்குகளில் சொல்லி புரிய வைக்கின்றார்..



சித்தர்கள் தங்களுடைய நூல்களில் உதாரணத்திற்கு அகத்தியர் 12000 ஞானக்கோவை சித்த மருத்துவம் இந்த நூல்களில் எல்லாம் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் நுணுக்கமாக ரகசியமாக சில மூலிகைகள் மூலிகைகளின் கலவைகள் எப்படி செய்வது என்பதை எல்லாம் மறைமுகமாக சூட்சுமமாக எழுதி வைத்திருப்பார்கள். ஏனென்றால் அதனை அறிந்து கொள்வதற்கு அடிப்படையிலிருந்து பக்குவங்கள் பெற !


படிப்படியாக அந்த ஞானத்தை அடைந்து அந்த பாடலில் இருக்கும் பொருளை புரிந்து கொள்ள முடியும். 


ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வாழ்வு நலம் பெற அவர்களுடைய மக்களுக்கு புரியும் படி வாக்குகள் தந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றார்கள். 



சரி!! ஒரு உதாரணத்திற்கு சித்தன் அருள் 1670 பதிவு எண் அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில் 


அதாவது சாதாரண உரைநடை வழியில் 


நீரின் !!!....


நீரிலே ஊற்றி 


ஊற்றிய பின் 


பின் எடுத்து 


எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம் 


லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட 


ஓடிய நீரை எடுத்து!!!


எடுத்தானாம் ஒருவன் 


ஆனால் வரவில்லையே 


ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!


அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!


நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!



என்று வாக்குகளில் கூறியிருந்தார் இதன் பொருள் விளக்கத்தை அதாவது சாதாரண தமிழில் கூறிய இந்த வாக்கினை வாக்கில் இருக்கும் பொருளை உணர முடியவில்லை..


 இதற்கு என்ன அர்த்தம்??..

என்று சிலருக்கு உணர்ந்து கொள்ள முடியவில்லை.


புரியவில்லை என்றெல்லாம் அடியவர்கள் பேசியிருந்தார்கள். உண்மைதான்..


வாக்குகள் இடையே இது போன்ற தத்துவங்களையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.


ஆனால் சாதாரண தமிழில் வாக்குகள் வந்தால்....இது எப்படி? என்றெல்லாம் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்.


வாக்குகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்பற்ற பட வேண்டும் என்பதற்காக தான் சித்தர்கள் தங்கள் வாக்குகளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைக்கின்றார்கள்.




உண்மையில் சித்தர்கள்

புரியாததை தெரியாததை ரகசியங்களை புரியும்படி எடுத்துரைத்து மனிதர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தி வாக்குகள் தந்து கொண்டிருப்பதை....


இது சித்தர்கள் வாக்கு அல்ல!!!... சித்தர்கள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள் என்றெல்லாம் ஏதேதோ தமது கற்பனைக்கு தீனியிட்டு... கருத்துக்களை முன் வைக்காதீர்கள். 


ராஜராஜ சோழனுக்கு எந்த தமிழில் வாக்குகள் தந்திருப்பார்கள்?? ராஜராஜ சோழனிடம் பேசிய தமிழில் இப்பொழுது பேசினால் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா???


மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து பாதையை மாற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது!!!


 காலத்தால் கணக்கிட முடியாத சித்தர்கள் அந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் மனோ நிலைக்கு ஏற்ப கலியுகத்தின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப புரியும் படி வாக்குகள் தருவதை உணர்ந்து கொள்ளுங்கள். 


சித்தர்கள் நமது மொழியில் நமக்கு புரியும் வகையில் கருணையோடு மனமிரங்கி நமக்கு புரிய வைப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி தெரிவித்து வணங்குங்கள்.நன்றி.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தய்யன் அருள்.....தொடரும்!