​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 April 2025

சித்தன் அருள் - 1834 -அகத்தியப்பெருமானின் ஆசிகள்!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று பிறக்கும் "விஸ்வாவஸு வருஷ" தமிழ் சித்திரை மாத நன்னாளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் நலமாய், சிறப்பாய் வாழ்ந்திட, அகத்தியப்பெருமானின் சித்தன் அருளிலிருந்து நல் வாழ்த்துக்கள்!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Sunday, 13 April 2025

சித்தன் -அருள் 1833 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி ஆலய வாக்கு - பகுதி - 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 8

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6
7. சித்தன் அருள் - 1830 - பகுதி 7 )

குருநாதர் :- அனைவருமே என்னிடத்தில் கேட்கின்றீர்கள் ( எனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் என்று. ஆனால் ) நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடத்தில் தெரிவிக்க வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோரும் என்னிடம் கேட்கின்றீர்கள். நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்கின்றார் ( நம் குருநாதர் ). 

அழகாக விளக்கம் அளிக்கும் அடியவர்:- நீங்கள் என்ன புண்ணியம் செய்தீர்கள் என்று சொல்லிவிட்டுக் கேளுங்கள் (நம் குருநாதரிடம்). நமக்கே நன்கு தெரியும் நாம் ஏதும் (புண்ணியங்கள்) செய்யவில்லை என்று. நாம் அனைவரும் நமது பிரச்சினைகளை (தேவைகளை) மட்டும் சொல்லவருகின்றோம் (கேட்கின்றோம்). நாம் பிறருக்கு நல்லதைச் செய்யச் செய்ய , நமது பிரச்சினைகள் தானாகத் தீரும் என்று குருநாதர் காலையிலிருந்து சொல்கின்றார். நமக்குள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். பிறருக்கு நான் உதவியாக இருப்பேன் என்று மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ, வாக்காலோ நான் பிறருக்கு உறுதுணையாக இருப்பேன் என்று. உடனே செயல்படுத்துங்கள். அதற்கு அப்புறம் வாக்கு கேளுங்கள். நம் குருநாதர் நம்மை வழிநடத்துவார்கள்.

குருநாதர் :- இன்று நிச்சயம் அனைவருக்குமே ஒரு பின் சிறப்பான ஒன்றைச் சொல்கின்றேன். அதைச் செய்தாலே (வெற்றியடையலாம்). அனைவரும் போய் அவரவர் இடத்தில் உட்காருங்கள். 

(அடியவர்கள் அனைவரும் கலியுக வரலாற்றில் மிக முக்கியமான வகுப்பைக் கேட்கத் தயாராக , சத்சங்க வகுப்பில் குருநாதர் சுவடியின் முன் அமைதியாக அமர்ந்தார்கள்.) 

குருநாதர் :- அப்பனே யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்கள் இடத்தில் சொல். 

( இப்போது குருநாதர் சொல்லச் சொல்ல உடனே அடியவர்கள் அனைவரும் அப்படியே உரைத்தனர். இது பொது வாக்கு. அனைவருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய, நீங்கள் அனுதினமும் சொல்ல வேண்டிய வாக்கு. வாழுங்கள் அந்த மகத்தான வாக்கின் உள் செல்வோம்.) 

குருநாதர் :- தர்மம் செய்வேன்.
அடியவர்கள் :- தர்மம் செய்வேன்.

குருநாதர் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
அடியவர்கள் :-அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.


குருநாதர் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
அடியவர்கள் :-போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.


குருநாதர் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
அடியவர்கள் :- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.


குருநாதர் :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
அடியவர்கள்  :- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.


குருநாதர் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
அடியவர்கள் :- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.


குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல், பிறரும் கூட வாழவேண்டும்.
அடியவர்கள் :- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.


குருநாதர் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.
அடியவர்கள் :- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்.


குருநாதர் :- பிறருக்காக உழைக்க வேண்டும்.
அடியவர்கள்  :- பிறருக்காக உழைக்க வேண்டும்.


குருநாதர் :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
அடியவர்கள்   :- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.


குருநாதர் :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.
அடியவர்கள்  :-அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.

( இந்த உறுதிமொழியைப் பின் வரும் பதிவிலும் படித்து அறிந்து உடனே செயல் படுத்தவும். சித்தன் அருள் - 1595 - அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு!)

( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்து பொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள் உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும் குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறை பிரச்சினை என்று இறை அருளால் உங்களுக்கு வரவே வராது. 

குருநாதர் அகத்திய மாமுனிவர்  வாக்கு - தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய உறுதிமொழி:- 


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்.
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்.
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்.
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்.
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே.

)

குருநாதர் :  அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்று என்னிடத்தில் வந்து,  பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில் என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே? 

சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனே உயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன் புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று. 

ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம் எடுத்துக்கூறி  ( யான் செய்ய இயலும்?)

அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒரு அறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால் மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று. 

அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!! 

( வணக்கம் அடியவர்களே , நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல்,  அகத்திய மாமுனிவர்  அவர்களை  இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. அகத்திய மாமுனிவர் அருளிய இந்த மகிமை புகழ்  உறுதிமொழி  வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்ற உத்தரவிடும் வண்ணம், அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும் வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம் அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன் உழையுங்கள்.  நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல், அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து நமது அன்பு குருநாதர் , கருணைக்கடல்,  அகத்திய மாமுனிவர்  அவர்களுக்கு நாம் செய்யும் புண்ணியச் சேவைகள் மூலம் பெருமை சேர்ப்போம்.)

குருநாதர் :- இதனால் புண்ணியங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் அவ்வாறு வளர்த்துக்கொண்டால் நிச்சயம் அவ் புண்ணியங்களே, உங்களைக் காக்கும் சொல்லிவிட்டேன். அப்படியில்லை என்றால் நிச்சயம் தரித்திரம்தான். 

குறை குறை என்கின்றார்களே! எதற்குக் குறை வருகின்றது? நிச்சயம் அறிந்தும் கூட உங்களிடத்திலேயே குறை ( கெட்ட கர்மா ) இருக்கின்றது. அதனால்தான் குறையே வருகின்றது. அக்குறையை நீக்க , பின் ஒரே ஆயுதம் புண்ணியம். 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா?

குருநாதர் :- அறிந்தும் கூட என்னால் ( புண்ணியங்கள்) செய்ய முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும், பின் அதிகாலையில் நிச்சயம் இறைவனை நினைத்து இறைவா எந்தனுக்கு ஏதாவது செய் என்று கேட்டுக்கொண்டே இருங்கள். கேட்டுக்கொண்டே இருங்கள். நிச்சயம் இறைவன் தருவான். ஆனாலும் எதையும் கேட்கக்கூடாது என்று யானே (முன்பு) சொன்னேனே , ஆனாலும் ஏனென்றால் சோம்பேறியானவனுக்கே இதை யான் சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கம்)

குருநாதர் :- அப்பனே கலியுகத்தில் இறைவன் இல்லை என்றே சொல்வான் மனிதன். அப்பனே தன் பிரச்சினைகளுக்காக ஓடுவான் (பலரிடம்) என்பேன் அப்பனே. ஆனால் என்ன செய்தால் பிரச்சினை தீரும் என்பது தெரியாதப்பா. ( ஜோதிடம், பூசை, பரிகாரம்) அதனில் சிக்கிக்கொண்டு,  பணங்களை பறித்து, மீண்டும் (உங்களை) பாவத்தில் நுழைப்பான் அப்பா. இது தேவையா? வேண்டாமப்பா. முதலில் பக்குவங்களைப் பெற வேண்டும். அப்பனே பக்குவங்கள் யாருக்கும் இல்லையப்பா. 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- பக்குவங்கள் பின் பெற்றால்தான் வாழ்க்கை. அவ் பக்குவங்கள் பெறவில்லை என்றால் வாழ்க்கையே வீணாகப் போய்விடுமப்பா !!!!!!!. சொல்லிவிட்டேன் அப்பனே. அகத்தியன் (உங்கள்) நன்மைக்காகத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. என்னை நம்ப வந்துவிட்டீர்கள் அப்பனே. நிச்சயம் அகத்தியனை நம்பி வந்துவிட்டால், அப்பனே நிச்சயம் பாதுகாத்து , உயர் இடத்தில் வைப்பான் அப்பனே. அத்தகுதி உங்களிடத்தில் இல்லை அப்பனே. பின் அத்தகுதி உங்களிடத்தில் இல்லை என்றால்,  யான் கொடுத்தும் பலனில்லை. சொல்லிவிட்டேன். 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் இறைவன் அனைவருக்கும் செய்வதில்லை அப்பனே. அனைவருக்கும் பாவங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. இதனால் பக்குவங்கள் பெற்றுக் கொண்டு, அப்பனே நீர் மோர் தானம், அப்பனே நீர் தானமும், மோர் தானமும் இன்னும் பல பல வகைகளில் கூட தானங்கள் செய்து வாருங்கள் அப்பனே. நிச்சயம் (உங்களுக்கான தனி) வாக்குகள் பெற்றுக் கொள்ளலாம் அப்பனே. 

அதாவது அப்பனே, இதைத்தன் எதற்காகச் சொல்கின்றேன் (என்றால்) அப்பனே,  நீங்கள் பின் நிச்சயம் வாழ்வதற்கே என்பேன் அப்பனே. உங்களையே, அதாவது நீங்களே உங்களைப் பார்க்க முடியவில்லை. இதனால் பிறரை எப்படித்தான் பார்க்கப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அதனுள்ளே அப்பனே என் சகோதரன், என் சகோதரி, என் தாய் , என் தந்தை என்றெல்லாம் அப்பனே, முதலில் உன்னைப் பாருங்கள் என்பேன் அப்பனே. அவை எல்லாம் தனித்தனி ஆன்மாதானப்பா. அப்பனே சொல்லிவிட்டேன். எப்பொழுதாயினும் உன்னிடத்திலிருந்து பிரிந்து செல்லலாம் அவ் ஆன்மா. இதற்காகவா போராட்டங்கள். முட்டாள்களே !!!! அறிவில்லாதவர்களே !!!! அறிவில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதப்பா. நீ செய்யும் புண்ணியங்களால்தான் யான் கொடுக்க முடியும். சொல்லிவிட்டேன் அப்பனே. புண்ணியங்கள் இல்லையப்பா!!!! புண்ணியங்கள் இல்லையப்பா!!!! தான் மட்டும் வாழ வேண்டும். தனக்காக வாழ வேண்டும். தன் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்றால் அப்பனே அவன் பிணமப்பா!!!!. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( தன் கடமைகளைச்  செய்து கொண்டு) பிறருக்காக வாழ வேண்டும் என்று சொல்கின்றார். புரிகின்றதா ஐயா? 

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆன்மா தனித்தனியப்பா. அதாவது நம் பிள்ளை, அதாவது சொந்த பந்தங்கள் இருந்தாலும் அவ் ஆன்மா சென்றுவிடுமப்பா. அப்பொழுது எங்கப்பா சொந்தங்கள்? தாய் எங்கே? தந்தை எங்கே? அண்ணன் எங்கே? தங்கை எங்கே? அப்பனே கூறுங்கள்?

அடியவர்கள் :- (அமைதி)

குருநாதர் :- இதனால் அப்பனே சித்தன் வழியில் வருபவர்கள் முதலில் பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். தெரியாமல்  சொன்னாலும் , வீணாகப் போய்விடுவீர்கள். பிரச்சினைகளுக்குக் காரணம் என்றால் அப்பனே தன் தன் ஆன்மா என்பேன் அப்பனே. தன்னை முதலில் அப்பனே நல்லொழுக்கத்தோடு மாசில்லா வாழ்க்கை  எதை என்று அறிய அறிய மாசுகள் நீக்குங்கள் அப்பனே மனதிலிருந்து. அனைவருமே நமக்கு சொந்தங்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அப்பொழுது இறைவன் வருவானப்பா. கையைப் பிடித்து உன்னைத் தூக்கிச் செல்வானப்பா. 

அவை விட்டுவிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று அறிய அறிய நீ சொல்லிக் கொடுத்ததைத்தான் (உன்) குழந்தைகள் செய்யுமப்பா. அதனால்தான் அப்பனே முதலிலேயே யாங்கள் அதாவது என்னைத் தேடி வருபவர்க்கெல்லாம் நல்லது செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதே போலத்தான் அப்பனே,  உன் பிள்ளைக்கு நீ நல்லது செய்தால் நல்லதாகவே வளரும். அனைத்தும் செய்யும் அப்பனே. அப்படி இல்லையென்றால் நீ தான் அதற்குக் காரணம் கூட. உன் பிள்ளைக்கு நீ (புண்ணியங்கள்) நல்லது செய்  என்றெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கவேயில்லை அப்பனே. அப்பொழுதே உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லையா ??? என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியப்பா நியாயம்?

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் , சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 12 April 2025

சித்தன் அருள் - 1832 - அன்புடன் அகத்தியர் - பிரமிடு சிவன் கோயில்.பாபுவான், பேயோன், அங்கோர் தோம், கம்போடியா!






23/3/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : பிரமிடு சிவன் கோயில்.பாபுவான் . பேயோன்.          அங்கோர் தோம். கம்போடியா.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே நலங்களாகவே அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில்... ஈசனை உணர்ந்து அப்பனே.. பல ஆலயங்களுக்கு அப்பனே சென்று பல வழிகளிலும் கூட அப்பனே உண்மை நிலைகளை உரைத்து!!!!!

உரைத்து அப்பனே பின் நிச்சயமாய் பின் மக்கள் நம்பியவாறு அதாவது மக்கள் நம்பும்படியே அப்பனே பல திருத்தலங்களை அமைத்தார்கள் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் ராஜராஜ சோழன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது ஈசனுடைய சக்திகளை வைத்துக் கொண்டு அப்பனே பின் பல தேசங்களுக்கு சென்றானப்பா.

ஆனாலும் பல தேசங்களில் கூட... ஈசனைப் பற்றி பரப்பினானப்பா!!!

ஆனாலும் அப்பனே பின் அதாவது அனைவரும் நம்பவில்லை... அதாவது ஈசனைப் பற்றி.. பரப்புகின்றீர்களே நீங்கள்!!... நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது பின் நிச்சயம் செய்து காண்பியுங்கள்.. என்றெல்லாம்!!

நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட பல வித்தைகள் அப்பனே அறிந்தும் கூட... இதை என்று புரிய. 

ஆனாலும் பின் ராஜராஜ சோழன் அறிந்தும் கூட.. அதாவது சோழ மன்னன் கூட அறிந்தும் பின்!!...

ஈசனே!!!....... இவ்வாறு உன்னைத்தானே நினைத்து நினைத்து அதாவது பிறந்தேன்!! அறிந்தும்!!

இதனால் மக்கள் நம்பவில்லையே!!!... இதனால் அறிந்தும் எந்தனக்கு ஒரு சக்தியை கொடும்!!! என்று!.. நிச்சயம் தன்னில் கூட!!

பின் ஈசன் பல சக்திகளை கொடுத்தான்!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட... ரகசியங்கள் நிச்சயம் அதாவது ராஜராஜ சோழனுக்கு!!!... அப்பனே அறிந்தும் இறங்கி வந்தானப்பா ஈசன்!!! 

அறிந்தும்!! அதாவது நிச்சயம் தன்னில் கூட... பின் இதோ மழை பெய்விக்கின்றேன் என்றால்!!! நிச்சயம் உடனடியாக பின்... மழை பெய்யுமப்பா!!

இதோ நிச்சயம் தன்னில் கூட... பின் இரவை நிச்சயம் பகலாக மாற்றுகின்றேன்.. என்றால் நிச்சயம் அப்பனே மாற்றுவானப்பா!!!

அப்பனே பகல் இரவு!!
இரவு பகல்!!... அப்பனே இவ்வாறெல்லாம்.. நிச்சயம் அப்பனே இவ் சக்திகள்.... பின் !! ஈசனே!! கொடுத்தானப்பா!!

இதனால் அப்பனே அனைத்து தேசங்களுக்கும் சென்று அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் பல பல வழிகளிலும் கூட அப்பனே... இவன் மூலம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இயக்கினானப்பா!!.. ஈசனும் கூட!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட அனைத்தும் அறிந்தால் அப்பனே... நீங்கள் கூட அப்பனே பகலை இரவாக மாற்றலாம்... நிச்சயம் இரவை பகலாக மாற்றலாம்.. அப்பனே நிச்சயம் அவ் சக்தி மனிதனிடத்தில் உள்ளதப்பா. ஆனாலும் சரியாகவே அதை பயன்படுத்துவதில்லை. 

அப்பனே இவை போன்று நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் அறிந்தும்... எதை என்று புரிந்தும் கூட... ஆனாலும் பின் இறை.!!.
இங்கிருந்து அறிந்தும் அப்பனே நிச்சயம் பின் ராஜராஜ சோழன்... அப்பனே இங்கு பின் வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே இவ்வாறெல்லாம்... இதனால் அப்பனே பல வழிகளிலும் பல தேசங்களுக்கு சென்று அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இவ்வாறுதான் பரப்பி!! பரப்பி!! அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

ஆனாலும் காலப்போக்கில் அவை தன் நிச்சயம் மறைந்து கொண்டே!! மறைந்து கொண்டே!!

ஆனாலும் அப்பனே.. ஈசன் விடுவானா?? என்ன!!!...

அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில்... உணர்ந்து அப்பனே பல வழிகளில் கூட அப்பனே நிச்சயம் பின் சேவைகள் அப்பனே... ஆதலால் அப்பனே பின்... அதாவது பல ஆண்டுகள் அப்பனே வாழ்ந்து வந்தார்கள் அப்பனே... பின் முன்பெல்லாம் அரசர்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே அதனால் அப்பனே... இப்பொழுது எல்லாம் பின் அதாவது 60 ,70,.... வயதுகள் ஆகிவிட்டால் பின் முதியோன்... என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்... அப்பனே..

அவையெல்லாம் ஏற்க முடியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான்.. சொன்னேனே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து மனிதரிடத்திலும் ஓர்.. சக்கரம் பின் உள்ளதப்பா..

அச்சக்கரத்தை அப்பனே... பின் நிச்சயம்.. திருகி (சுழற்றி) அதாவது நிச்சயம் ஓடும் படி செய்துவிட்டாலே போதுமானதப்பா... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்து ஒளிகளையும் கூட (கதிர்வீச்சுக்கள்) அப்பனே உங்களுக்கு தெரியும்ப்பா!!!

அவை மட்டும் இல்லாமல் பின் அனைத்தும் அப்பனே வெற்றி.. அப்பனே காண்பது உறுதியப்பா!

அப்பனே அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட.. பல தவங்களை செய்து செய்து அப்பனே... எங்கெல்லாம் என்று!!!(சக்திகள் விழும் இடம்)

இதனால் அப்பனே!!!

அப்பனே ஒரு ரகசியத்தை இங்கிருந்தே சொல்கின்றேன் அப்பனே!!

இங்கு  (கம்போடியாவில்) ஒரு இடம் இருக்கின்றதப்பா.. அங்கு சில அப்பனே பின்.. சக்திகள் அப்பனே பின் நீங்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் அப்படியே... கிழக்கு மேற்காக பின் நிச்சயம்... கால்களையும் நீட்டி பின் அதாவது படுக்கும் பொழுது... அப்பனே நிச்சயம் பின் அதாவது பூமி... சுழல்கின்றதை நீங்கள் உணர்வீர்கள் என்பேன் அப்பனே.

அப்பனே இவ்வாறு தான் அரசர்கள் அப்பனே பன்மடங்காக... எங்கெல்லாம்?? நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிந்தும் கூட... இவ்வாறு சுழல்கின்றது.. பின் உணர்ந்து பின்.. உணர்ந்துள்ளார்களோ அங்கு தான் பின்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. சக்திகள் அதிகம் என்பதற்கிணங்க அப்பனே... எங்களிடத்தில் வந்து பின் நிச்சயம் தன்னில் கூட.... யாங்களும்... உதவிகள் செய்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்... இதை தன் அப்பனே ஏற்படுத்தினோம். 

அது மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒவ்வொரு... இப்பொழுது அதாவது தேவாரம்!!... பாடிய ஸ்தலங்கள்... பின் அனைத்திலும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே... ஒவ்வொரு இடத்திலும் கூட!!!

(தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். 


அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.

கடலூர் மாவட்டம்
தொகு
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன.

இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில்
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில்
திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்
திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில்
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில்
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்



நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 53 கோயில்கள் உள்ளன.

ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில்
மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில்
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில்
அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில்
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில்
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில்[2]
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில்
கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்
நீடூர் சோமநாதர் திருக்கோயில்
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்
கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில்
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில்
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில்
திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்
கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில்
தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில்
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில்
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில்
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில்
வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 57 கோயில்கள் உள்ளன.

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்
ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்
கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்
சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
திங்களூர் கைலாசநாதர் கோயில்
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்
திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்
திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
திருவையாறு ஐயாறப்பன் கோயில்
தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்
பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் கோயில்
பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்

திருவாரூர் மாவட்டம்
தொகு
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 54 கோயில்கள் உள்ளன.

அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்
அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்
ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்
கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
குடவாசல் கோணேஸ்வரர் கோயில்

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்
கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்
கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்
கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்

செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்
தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்
திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்
திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்
திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்

திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்
நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
பாமணி நாகநாதர் கோயில்
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்
மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்
விடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

செல்லூர், மதுரை திருவாப்புடையார் கோயில்
திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில்
திருவேடகம் ஏடகநாதர் கோயில்
மதுரை சுந்தரேஸ்வரர் கோயில்


விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்
ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில்
கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில்
டி. இடையாறு மருந்தீசர் கோயில்
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயில்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயில்
நெய்வணை சொர்ணகடேஸ்வரர் கோயில்
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்


திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 கோயில்கள் உள்ளன.

குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில்
செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்
தண்டரை பீமேஸ்வரர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 கோயில்கள் உள்ளன.

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில்
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் கோயில்
ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்
காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில்
காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோயில்
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.

அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில்
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருச்சி தாயுமானவர் திருக்கோயில்
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில்
கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில்
கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்

விருதுநகர்
 மாவட்டத்தில் மொத்தம் 1 கோயில் உள்ளன.

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்


திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்


திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்


கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு கோயில் உள்ளன.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்


ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்


நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 கோயில்கள் உள்ளன.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவில்


வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 கோயில்கள் உள்ளன.

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில்
திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில்


திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 கோயில்கள் உள்ளன.

கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில்
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில்
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில்
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்.

மற்ற மாநிலங்களில் மொத்தம் 10 கோயில்கள் உள்ளன.

ஆந்திர மாநிலம்
காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில் ; - திருப்பதி மாவட்டம்
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ;- நந்தியால் மாவட்டம்


கர்நாடக மாநிலம்
திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில் ; -

 உத்தர கன்னட மாவட்டம்


கேரள மாநிலம்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் ; 
- திருச்சூர் மாவட்டம்


புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம்
தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில்
திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில்
திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

உத்தராகாண்ட் மாநிலம்
கேதார்நாத் கோயில்.

இலங்கை நாட்டில்

திருக்கோணேச்சரம்- கிழக்கு
திருக்கேதீச்சரம்-வடமேற்கு
முன்னேஸ்வரம்-மேற்கு
தொண்டீஸ்வரம்-தெற்கு
நகுலேஸ்வரம். - வடக்கு)

தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள்.

அவ் ஒவ்வொரு இடத்திலும் கூட... ரகசியங்கள் அப்பனே மனிதனுக்கு சொல்லிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட வெற்றிகள் காண்பான் என்பேன் அப்பனே.

அப்பனே அண்ணாமலையில் ஓரிடத்தில் அப்பனே பின் அமர்ந்து கொண்டு அப்படியே பின் மல்லாக்க பின் (மல்லாந்து )படுத்தால் பின் நிச்சயம் அப்பனே நிச்சயம் பூமி சுழல்வது அப்பனே பின் அப்பனே நீங்களும் பின் உணரலாம் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்படியே சுற்றுவது போல கண்களை மூடி கொண்டால் அப்பனே.. பூமி சுற்றுவது போல் அப்பனே நிச்சயம்.. அறிந்தும் கூட அப்பனே தெரியும் அறிந்தும் எதை என்று அறிய அப்பனே. 

பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சிதம்பரத்தில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே அறிந்தும் கூட பின் அதே போல்..அப்பனே படுத்து அப்பனே நிச்சயம் கண்களை மூடி கொண்டால்... அப்பனே நிச்சயம் குருபகவான் (வியாழன் கிரகம்) அப்பனே அறிந்தும் கூட பின் சுழல்வதை கூட!!!

அது மட்டும் இல்லாமல் அப்பனே புதனும் கூட அப்பனே பின் அறிந்தும்... அறிந்தும் அறிந்தும் பின் புதனும் கூட அப்பனே இன்னும் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே சுழல்வது நன்றாகவே தெரியுமப்பா ஓரிடத்தில் என்பேன் அப்பனே. 

அவ் இடமெல்லாம் எல்லாம் வரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட யான் காட்டுகின்றேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது சூரிய பகவான் அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சூரியனுக்கும் அதாவது சூரியவர்மனுக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. அதாவது இலங்கையில் இருந்து வந்தவனுக்கும்!!... அதாவது இலங்கையில் இருந்து ஒரு அரசன் இங்கு வந்தானப்பா!! (இராவணன்)

அப்பனே பின் ஈசன் தான்... பெரியவன் என்று!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் விஷ்ணு தான் பெரியவன் என்று அப்பனே சண்டைகள்.. பலமாக இரு அரசர்களுக்கும்!!


(விஷ்ணு தான் பெரியவர் என்று சூரியவர்மன் 

சிவன் தான் பெரியவர் என்று ராவணன் இருவருக்கும் யுத்தம்)



இதனால் அப்பனே பல மனிதர்கள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே..

பின் விஷ்ணு பெரியவன் என்று.. அவன் சொல்ல அதாவது அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில்!!... எதை என்று புரியாமலும் கூட...

அதாவது அப்பனே இவ் அரசனும் (இலங்கை அரசன் இராவணன்) ஈசன் தான் பெரியவன் என்று சொல்ல!!.... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட...

அப்பனே பின் ஆனாலும் இருவரும் சண்டைகள்!!!..

ஆனாலும் பின் அதாவது பின் அதாவது இவ் அரசன்.. உன் கடவுளைக் காட்டு!! என்று நிச்சயம் அறிந்தும் கூட!! பின் அதாவது யான் நம்புகின்றேன்.. என்று நிச்சயம் தன்னில் கூட... பின் இலங்கையில் இருந்து வந்தவன்!! அப்பனே அறிந்தும்!!

இதனால் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... ஈசனை நோக்கி தவம் புரிந்தான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட..அப்பா!!!... எதை என்று அறிய ஈசன் வந்து நின்றானப்பா!!!
நிச்சயம் தன்னில் கூட!!

அப்பனே பின் அதாவது.. யான் காட்டிவிட்டேன் ஈசனை கூட!!

பின் நீ விஷ்ணுவை காட்டு என்று கூட!! பின் அறிந்தும் கூட.. அதாவது சூரியவர்மனிடம் அறிந்தும் எதை என்று புரிய..

அப்பனே பின் சூரியவர்மன் கூட அப்பனே பின் ஐயோ!!!!....... பின் என் நாராயணனே!!!... என்று நிச்சயம்.. பின் அறிந்தும் கூட!!

பின் வந்தானப்பா!! விஷ்ணு!!

இதனால் நிச்சயம்... இருவர்களும் (ஈசன் விஷ்ணு) கூட சேர்ந்து பின் அறிந்தும் கூட பின் ஒன்றே!!! என்று நிச்சயம் தன்னில் கூட!!

அதனால் பின் ஒரே முகமாகவே
(சங்கரநாராயணனாக)
 பின் காட்சியளித்தார்கள் என்பேன் அப்பனே.

இதனால் ஒருவரே அப்பனே அனைத்தும் பின் ஒருவரே என்று... பல திருத்தலங்களில் கூட அப்பனே... இங்கு அப்பனே சூரியவர்மன் உருவாக்கினானப்பா!!!

இன்னும் அப்பனே ரகசியங்கள் அப்பனே காத்துக்கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.... இன்னும் இன்னும் அப்பனே.. சிறப்பு அறிந்தும் உண்மைதனை கூட... இதனால் தான் அப்பனே நிச்சயம் எங்கெல்லாம் பின் கிரக நிலைகள்.. அப்பனே சரியாகவே விழுகின்றதோ... அப்பனே பின் யாங்கள் அங்கு வந்து. அப்பனே பல பல அரசர்களுக்கும் உதவிகள் செய்தோம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் இப்பொழுதும் கூட உதவிகள் செய்ய அப்பனே தயாராகவே இருக்கின்றோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் மனிதன் அப்பனே தீய வழிகளில் சென்று கொண்டிருக்கின்றான்!!!  அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அத் தீய வழியிலே சென்று  அப்பனே அவந்தன் அழிவை தேடிக் கொண்டிருக்கும் பொழுது... அப்பனே எப்படியப்பா?????

ஆனாலும் நீங்கள் சொல்வீர்கள்... அப்பனே அறிந்தும் கூட... நீங்கள் தான் படைத்தீர்கள் என்று!!

அதனால் அப்பனே.. ஏன் எதற்கு என்றெல்லாம் யோசிக்க தெரியாதவனுக்கு.. அப்பனே பின் சொல்லியும் கூட பயனில்லை என்பேன் அப்பனே. 

சிவன் ஆலய வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சிதித்யன் அருள்.....தொடரும்!

Thursday, 10 April 2025

சித்தன் அருள் - 1831 - அன்புடன் அகத்தியர் - நந்தியெம்பெருமான் வாக்கு!






28/3/2025  அன்று நந்தியெம்பெருமான் ஜீவநாடியில் வந்து உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: 10 மலை முருகன் கோயில். கோலாலம்பூர் மலேசியா. 

உலகையெல்லாம் வழிநடத்தும் ஈசா போற்றி!!!!

தேவியே போற்றி !!!

மனதில் நிறுத்தி உரைக்கின்றேன் நந்தியனே!!!

அல்லல் போம் !!

அல்லல் போம் முருகா!

முருகா முருகா!!

அல்லல் போல் வல்வினை வந்து சேரும் முருகா!!!

என் உளம்தன்னில் இருப்பதால் அதனாலே!!!!

அன்பு என்று ஒன்றுதான் மனிதனிடத்தில் இல்லையே!!

அன்பொன்றை புகுத்தி பின் அனைத்தையும் செய்வாய்!!!!

அருளோடு அருளோடு வா வா!! முருகா!!!

இன்பம்தனை மக்களுக்கு கொடுப்பாய் வா வா முருகா!!!

முருகா ! முருகா!முருகா!

மனதில் இருக்கும் தீய அழுக்குகளை குடி கொண்டிருக்கும் அனைத்தையும் விலக்கு மனிதரிடத்தில்...!!!


 மனிதனிடத்தில் விலக்கும்போதெல்லாம்...... மனிதனை பின் புண்ணியமாக புகுத்து முருகா!!!!


முருகா! முருகா! எனையாளும் முருகா! 

அன்போடு ஒன்று சேர் முருகா!!!

பின் இன்பமதை மக்களுக்கு கூட்டிக் கொடுப்பாய் முருகா!!

துன்பமதை ஒழித்து அனைத்தும்.. அருள்வாய் முருகா!!



என்றென்றும் வாழும் முருகா!!

உலகத்தில் என்றென்றும் வாழும் முருகா!!!


பாவம்தனை அடியோடு அழித்திடும் முருகா!!

இன்பமதை புகுத்திடும்!! முருகா!!


முருகா !முருகா ! குமரா! முருகா! முத்துவேல் முருகா! முருகா! 


பத்துமலை முருகா!!

 முருகா!!


குழந்தையாய் நின்ற குமரனே வா! வா ! முருகா!!

எனையாளும் ஈஸ்வரனே வா வா!!

பின் மக்களை காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


எனைதனையும் அணைத்திடும் குழந்தாய் முருகா! எப்பொழுதும் குழந்தையாய் இருக்கும் முருகா!!



பின் ஓடோடி வருகின்றனர் உன்னை பார்க்க கோடி கோடியாய் மக்கள் தன் குறை தீர்க்கு!!! என்கின்றனர். 

நிச்சயம் தன் அக்குறைகள் தீர்க்க 

 வா வா முருகா!!

 அக்குறைகளை நீக்க வா முருகா!!!


அன்போடு அமர்ந்து விட்ட வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட முருகா 

என் உள்ளமதில் அன்பாக அமர்ந்திட்ட முருகா!!!



பல நோய்கள் ஆட்கொண்டிருக்கும் மனிதரிடத்தில்... காப்பாற்ற ஓடோடி வா முருகா!!

அனைத்தும் அகற்றுவாய் முருகா!!


உனை நம்பினோர் உனை நம்பினோர்களுக்கு

பல மாற்றங்களை உருவாக்கு!! முருகா!!

குழந்தை வடிவாய் வா வா !! வா வா!!

முத்துக்குமரனாய் வா வா  வா வா!!

வேலவனாய் வா வா!! வா வா !!

ஈசனாய் வா வா !!         வா வா!!

பார்வதியாய் வா வா!! வா வா !!

கணபதியாய் வா வா!! வா வா !!!

அனைத்து சித்தர்களும் உன்னை அழைத்துக் கொண்டிருக்கும் கலியுக வரதனே வா வா !!

நோய்களை போக்குவாய் வா! வா!



பின் உன் மேல் அன்பு கொண்டு வணங்கினோரை எல்லாம்.. நிச்சயம் தன்னில் கைவிடாதே முருகா!!!


உனை வளர்த்ததற்கு தர்மம் செய்ய யான் காத்திருக்கின்றேன் முருகா!!!


முருகா முருகா!! முத்துவேல் முருகா!!

அடிபணிந்து கேட்கின்றேன் முருகா!!

அடிபணிந்து கேட்கின்றேன் முருகா!!!


வறுமையில் வாடிடும் நிச்சயம் தன்னில் மனிதனை காக்க ஓடோடி வா  வா!!

உலகம் மறைந்து நின்ற போதிலும் நிச்சயம் தன்னில் சிரிக்கின்ற முருகா!!! முருகா!!!

மனிதன் குறைகளை நீக்க வா வா முருகா!!

பாவம் தன்னை நீக்கி பின் புண்ணியத்தை அருளிடும் முருகா!!

புண்ணியத்தை அருளிடும் முருகா!!

பின் புண்ணியத்தை அருள் கூர்ந்து ஈந்து பல மக்களை காப்பாற்ற வா வா!!


முருகா முருகா முத்துவேல் முருகா!!!

அருணாச்சலனே முருகா!!!

அன்பானவனே முருகா!!

நிச்சயம் குழந்தாய் வா வா!!!


அன்போடு அழைக்கின்றேனே வா வா முருகா!!!

அடிபணிந்து தொழுதேனே வா வா!!


என் செல்ல குழந்தையே!!!

 வா வா !!  வா வா!!

செல்ல குழந்தை உனை வளர்த்ததற்கு பின் வா வா !!


பின் மக்கள் இன்னும் தீய புத்திகளில் நின்று நின்று.. இன்னும் அவர்கள் மடிந்து மடிந்து போகையில் அவர்களை... காப்பாற்ற வா!! வா!! முருகா!!

பின் முருகா முருகா!!! பாசத்தோடு கேட்கின்றேனே முருகா !!!!


நல்லோரும் தீயோரும் உலகத்தில் பிறந்து!!!......


 

நிச்சயம் தன்னில் 

தீயோர்க்கும் அருளிட 

வா வா முருகா!!

தீயோர் மனதில் புகுந்து அவர்களையும் கூட புண்ணியம் செய்ய வைத்து தர்மம் ஓங்கிட இவ்வுலகத்தில்.. வா வா !!!


தர்மம் தலை குனிந்து போகின்றதே!!! முருகா!!

அதை நிலை நாட்ட ஓடோடி வா வா வா வா !!!

அதை நிலை நாட்ட ஓடோடி வா வா முருகா !!


அன்போடு ஆதரவோடு பண்போடு கேட்கின்றேன் கால்களிலும் அடிபணிந்து கேட்கின்றேன் மக்களை காப்பாற்ற ஓடோடி வா முருகா!!


பின் மக்களைக் காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


மனிதனுக்கு கலியுகத்தில் நோய்கள் எல்லாம் அண்டிக் கொண்டிருக்கையில் அதை நீக்க ஓடோடி வா முருகா!!!


அன்போடு அன்புதனை சேர்த்திட்டு பின்.. அனைத்தையும் ஆட்டிடும் விதியினை மாற்றிடும் கலியுகத்தில் தகுதிகள் பெற்ற பின் குமரனே வா வா!!

வா வா அருளோடு வா வா!!

பின் மயில் மீது வா வா

வா வா!!

பின் சேவலோடு வா வா வா வா!!

செல்லக்குழந்தையே 

யானையோடு வா வா !!

செல்லக்குழந்தையே யானையோடு வா வா!!!

முத்து முக மலர்ச்சியோடு நிச்சயம் தன்னில்  பின் அறிந்தும் காளையோடு வா வா !!

அறிந்து தன் தந்தையோடு காளையோடு வா வா முருகா!!


வா வா முருகா குமரனே!! பாலகனே நிச்சயம் தன் பின் விதியினை மாற்ற ஓடோடி வா வா!!! 


பின் பல கோடி நிச்சயம் தன்னில் மலைகள் மீது பின் அறிந்தும் தன்னில் கூட... மூலிகைகளைக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட பல மக்கள் பின் உன் பக்தர்கள் ஆயினும் நோயோடு உனை காண ஓடோடி வருகின்றார்கள் முருகா! 

ஓடோடி நோய்களோடு வருகின்றார்கள் முருகா! 

அதை நீக்க நிச்சயம் தன்னில்  உனை நாடி 

உனை நாடி....!!


என் முருகன் நீக்குவான் என்று உன் மேலே நம்பிக்கை வைத்து தானே!!!


உன் மேலே நம்பிக்கை வைத்து தானே!!!....


பின் ஓடோடி வருகின்றார்கள் மனிதர்கள் கூட!!.... நிச்சயம் தன்னில் அவர்களுக்கும் தர்மத்தை பற்றி... மனதை மாற்றி தர்மத்தை பற்றி போதித்து... நிச்சயம் தன்னில்... அனைத்து குறைகளையும் மாற்ற ஓடோடி வா வா முருகா!!


ஓடோடி வா முருகா 

பார்வதி தேவியின் குழந்தை வடிவாய் வா வா 

பின் தந்தையின் பின் அருணாச்சலனை நினைத்து பின் அறிந்தும் கூட உன்னை வளர்த்ததற்கு பின் பல மக்களைக் கூட அறிந்தும் கூட காப்பாற்ற ஓடோடி ஓடோடி வா வா!!!


பின் இத்தருணத்தில் தான்... இக்கலியுகத்தில் பின் ஆண் பெண் சண்டைகள் திருமணத்தில் கூட பின்... போதனைகள் கூட தோல்விகள் கூட

நிச்சயம் தன்னில் அவ் தர்மத்தை நிலை நாட்ட ஓடோடி வா வா!!

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை இப்படி என்று கூட... அவர்களுக்கும் பின் நோய்கள் வருகையில் 

நிச்சயம் பிள்ளைகளை காப்பாற்ற காப்பாற்ற ஓடோடி வா முருகா 

ஓடோடி வா முருகா!!!


ஆடலோடும் பாடலோடும் 

உனை தனை பின் அறிந்தும் கூட எவை என்று புரிந்து கொள்ளும் நிலைமைக்கு.. எண்ணி உன்னை வளர்த்தேனே வளர்த்தேனே.. அன்போடு!!

 உனை என் பின் முதுகில் சுமந்தேனே சுமந்தேனே முருகா! 

அறிந்தும் கூட பின் அறிந்தும் எதை என்று 

அனைத்து மலைகளுக்கும் அறிந்தும் கூட தலையில் பின் ஏற்றிக்கொண்டேனே முருகா!!!

அதற்காக ஓடோடி வா வா முருகா!!

மக்கள் மேலே கோபம் கொள்ளாதே முருகா!!!

மக்கள் மீது கோபம் கொள்ளாதே முருகா!!!



மக்கள் தன் சிறு குழந்தையாக ஒன்றும் தெரியாதவராக இருந்து கொண்டு சில தரித்திரங்கள் செய்கின்றான்....அவன் தன் பின் தெரியாமல் செய்தாலும் காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!


அனைத்து பாடங்களையும் உந்தனுக்கு கற்பித்தேனே முருகா !!!

அனைத்து பாடங்களையும் உந்தனுக்கு கற்பித்தேனே முருகா !!!



நிச்சயம் தன்னில் எனை காக்க ஓடோடி வா முருகா!!!!.... இங்கு தன்னில் எனை காக்க ஓடோடி வா முருகா!!!


பல மக்களின் குறைகள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் ஆக்கி யானே... ஏற்றுக் கொண்டேனே முருகா!!

யானே ஏற்றுக் கொண்டேனே முருகா!!

அதைப் பிடுங்க வா வா முருகா!!

எனது குறைகளும் தீர்ப்பாய் முருகா!!

எனை நம்பியோர் கூட நற்செயல்களால் நினைத்து நிச்சயம் தன்னில் அனைத்து கர்மாக்களையும் யான் எடுத்தேனே... நிச்சயம் உனை வளர்த்ததற்காக வா வா!!!


இப்படி அழைத்தால் தான் நீ வருவாய் என தெரிந்தும் கூட!!

 செல்லக் குழந்தையே வா வா!!

செல்லக் குழந்தையே வா வா!!

அறிந்தும் கூட மக்களை காப்பாற்ற வா வா 

ஓடோடி வா வா!! முருகா !!!

 

மக்கள் பொய்களை சொல்லியும் கூட பொறாமை குணத்தோடு இருந்தாலும் கூட 

 தர்மம் தலைகீழாக இருந்தாலும் கூட 

அதைக் காக்க ஓடோடி வா முருகா முருகா 


அனைத்து திறமைகளையும் வைத்துக்கொண்டு அமைதியாக நிற்கின்றாயே முருகா !!!

அனைத்து திறமைகளும் வைத்துக் கொண்டு அமைதியாகவே நிற்கின்றாயே முருகா !!!



நிச்சயம் தன்னில்  மனிதனை யான் திருத்துவேன். சித்தர்களும் திருத்துவார்கள்.. 


வரம் அருளிட  வா வா முருகா!!

வரம் அருளிட வா வா முருகா!!

முத்துக்குமரனே செல்ல பிள்ளையே பத்து மலையோனே!!

அறுபடையோனே!!

ஏழுமலையோனே!!

பின் எட்டு மலையோனே!!

பன் (பல) கோடி மலையோனே வா வா! 

பன் கோடி மலையோனே வா வா! 


அறிந்தும் ஒன்றும் அறிவில்லாததை செய்கின்றானே மனிதன்!!!.... பின் அதைக் காக்க ஓடோடி வா முருகா!!!



என்னிடத்தில்!!

 நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பல வெற்றிகளை மனிதனுக்கு கொடுக்க தயாராக நின்ற போதிலும் நிச்சயம் தன்னில் நீ கூட எனை தடுத்தாயே முருகா!!


பின் அவ்வாறு நினைக்காமல் இருந்தாலும் கலியுகத்தில் தர்மம்தனை நிச்சயம் தன்னில் சித்தர்களே மாற்றுவார்களே முருகா 

நீயும் கூட வா வா வே முருகா!!!


நீயும் கூட வா வா வே முருகா!!


செல்லக் குழந்தையே குமாரனே வேலவனே முத்துக்குமரனே அடிபணிந்து தொழுதேனே!!!

அடிபணிந்து தொழுதேனே 


வா வா சிங்காரவேலா!!

அழகான வேலா!, வேலா!!

பின் வேலோடு வந்த அனைத்து குறைகளையும் தீர்ப்பாய் தீர்ப்பாய்!!

மனிதரிடத்தில் இருக்கும் அனைத்து தரித்திரங்களையும் போக்குவாய் போக்குவாய்!!!


போக்கிய பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட... அனைத்து திறமைகளையும் கொடுத்து பூலோகத்தை காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!

பூலோகத்தை காப்பாற்ற ஓடோடி வா முருகா !!!


அனைத்து சித்தர்களும் உனை நம்பி அறிந்தும் 

கூட எதை என்று முருகா மலைமீது அமர்ந்த குமரா!! மலை மீது அமர்ந்த குமரா!!

இப்பொழுதும் கூட மனமில்லையே முருகா 

செல்லக் குழந்தையாய் உன்னை செல்லம் ஊட்டி பின் அன்பாக அணைத்துக் கொண்டு நிச்சயம் தன்னில் உன்னை ஊட்டினேனே முருகா !!


மறந்து விட்டாயா?? முருகா??

 மறந்து விட்டாயே!!! முருகா!!!!

ஓடோடி வா முருகா!!


பின் எத்தனை மனிதன் மீது கோபங்கள் இருந்தாலும் நிச்சயம் தன்னில்  அதை மாற்றிட ஓடோடி வா முருகா!!


வந்து கொண்டே இருக்கின்றது கடல் தன்னும் கூட!!... கடல் நீரும் நிச்சயம் தன்னில் நிலத்திலும் ஓடும்போது... அவை தனை தடுத்து நிறுத்திட வா வா முருகா முருகா 

அவை தனை தடுத்திட வா வா முருகா!!


மழைகளாலும் நிச்சயம் தன்னில் அழிவுகள் ஏற்படுகின்ற பொழுது 

அதை தடுத்திட வா வா முருகா!! அதை தடுத்திட வா வா முருகா!!


இத் தேசத்தில் மக்களிடையே மக்களிடையே சண்டைகள் வருகின்றதே அதை காத்திட ஓடோடி வா முருகா 

அதைக் காத்திட வா வா முருகா!!

நிச்சயம் தன்னில் கூட 

ஆண் பெண் கூட திருமணங்கள் முடிந்தாலும் அவை தன் கூட தோல்வியில் முடிந்திட... கலியுகத்தில் அதை காக்க ஓடோடி வா முருகா!!!

அதைக் காக்க ஓடோடி வா முருகா. முருகா!!


கலியுகத்தில் இன்னும் நோய்கள் பரவுகின்ற நேரத்தில் உண்மையான அறிந்தும் கூட பின் ஔஷதங்கள் இல்லையே முருகா!!

அதை தன் பாவத்தாலே வந்தடைந்து அதற்குள்ளே... பாவத்தை மனிதன் இடத்தில் மனிதனிடத்தில் இருக்கும் பாவத்தை போக்கிட வா வா முருகா!!

முத்துக்குமரனே!

 செல்ல குழந்தையே!

ஓடோடி வா முருகா!!


ஓடோடி வா முருகா மக்களுக்கு இன்னும் இதைப்பற்றி பக்தியின் தன்மையை பற்றி புரியவில்லையே முருகா!!!


அதை தான் பின் அவந்தனக்கு தெரியவில்லையே முருகா!!


நிச்சயம் தன்னில் உன் புண்ணியத்தை செலவாக்கி பின் அவர்களுக்கு நல் புத்தியும் கொடுத்திடு முருகா!!! நல் புத்தியும் கொடுத்திடு முருகா!!


ஈரேழு உலகத்தையும் காக்கும் முருகா!!

ஈரேழு உலகத்தை காக்கும் முருகா!!

இன்னும் தன்னில் கிரகங்களின் பின் தவறான பெயர்ச்சிகளால்

இன்னும் கூட கிரகங்கள் பின் அறிந்தும் கூட பின் அதை அதை (நோக்கி செல்லாமல் (தன் சரியான பாதையில் மைய புள்ளியில் செல்லாமல்) நிச்சயம் விலகி விலகி செல்கையில்

அதனை பின் சீர்படுத்த வா வா... அதை தன் சீர்படுத்த வா வா முருகா!!!


நிச்சயம் தன்னில் பின் மனிதனோடு மனிதனாக இக்கலி யுகத்தில் விதியின் பாதை மனிதன் நோய்களோடு தான் வாழ வேண்டும் என்று பிரம்மாவின் தீர்ப்பை மாற்றி விட ஓடோடி வா வே முருகா!!!

ஓடோடி வா வே!! முருகா!!


சித்தர்கள் அனைவரும் உந்தனுக்கு துணையாக நிற்கின்றோமே!

சீடர்களாக நிற்கின்றோமே!

வேலைக்காரர்களாக நிற்கின்றோமே முருகா!


முருகா முருகா கலியுகத்தில் பக்தி நிலைகள் பெருக.. மனிதரிடத்தில் இன்னும் அறிவுகள் கொடுத்திட வா வா முருகா!!!

இன்னும் அறிவுகள் கொடுத்திட வா வா முருகா!!!


முத்துக்குமரனே சிறப்பானவனே அன்பானவனே 

என் மார்பில் வளர்ந்தவனே வா வா 

உன்னை அடிபணிந்து கேட்கின்றேனே வா வா 

அடிபணிந்து கேட்கின்றேனே வா வா !!!


பிரபஞ்ச சக்தி இன்னும் கூட... மனிதனுக்கு பின் அவ் சக்திகளை கொடுத்து விட பின் அருளிட வா வா!!


இல்லை என்போர் இன்னும் அழிவை!!! 

பின்  அவ் அழியும் நேரத்தில் பின் கல் என்று சொல்லிவிடுவார்கள் முருகா!!! உன்னை கல் என்று சொல்லிவிடுவார்கள் முருகா!! மனிதன்!!


அதற்குள்ளே ஓடோடி வா!!! முருகா... கலியுகத்தில் மனிதனைக் காக்க ஓடோடி வா முருகா!!!

கலியுகத்தில் மனிதனைக் காக்க 

ஓடோடி வா முருகா!!


செல்லக் குழந்தையே உன்னை தனை ஊட்டி ஊட்டி பாசத்தோடு அன்போடு பின் அணைத்தேனே!!! அணைத்துக் கொண்டேனே!!

அதற்காகவாவது ஓடோடி வா முருகா!!!

அதற்காகவாவது ஓடோடி வா!!!



முருகா !! எங்கும் நிறைந்த முருகா!!!

எதிலும் நிறைந்த முருகா!!!

அனைத்திலும் நிறைந்த முருகா!!!

அன்போடு அழைக்கின்றேன் வா வா!!


மனிதன் எக்குறைகள் செய்திருந்தாலும்..அவனை மன்னித்து அருளிட வா வா முருகா முருகா!!!


இன்னும் தன்னில் கூட மனிதன் தவறுகள் செய்தாலும் யாங்களே அதிகளவு தண்டிப்போம்!!!

யாங்களே அதிகளவு தண்டிப்போம்!!


ஆனாலும் நிச்சயம் தன்னில் இன்னும் கூட பாவங்களை நீக்கிட ஓடோடி வா முருகா முருகா!!!


நிச்சயம் தன்னில் கலியுக வரதனே 

நிச்சயம் அனைத்து குறைகளும் நீக்கும் வல்லமை படைத்தவனே 

விதியினை மாற்றுபவனே 

மனிதனிடத்தில் குறைகளை மாற்றுபவனே 


அறிந்தும் பின் மீண்டும் பிரம்மா எழுதி இருக்கும் (தலையெழுத்து விதி) எழுத்துக்களை மாற்றிட அமைத்திட முடியும் என் குழந்தாய்!!! பிரம்மாவின் பின் அறிந்தும் கூட பின் எழுதிய எழுத்துக்கள் மாற்றிடும் முருகா!!


மாற்றிட நிச்சயம் தன்னில் வா வா!!!


மனிதனுக்கு புத்திகள் கொடுத்து அறிந்தும் கூட பிரம்மா பின் எழுதி வைத்திருக்கும் விதியை கூட மாற்றிட வா வா முருகா!!!

மாற்றிட வா வா முருகா!!


கலியுகத்தில் மனிதனால் ஒழுங்காக வாழ முடியாது முருகா!!

அதனை தன் பின் மாற்றிடு முருகா!!

அதனை தன் மாற்றிடு முருகா!!!


பிரம்மாவின் தீர்ப்புப்படி கலியுகத்தில் நிச்சயம் அநியாயம் பெருக வேண்டும் என்று எழுதி வைத்திருக்கின்றானே 

அதை மாற்ற ஓடோடி வா முருகா!!!


இன்னும் தன்னில் பின் குழந்தைகள் பிறப்பாயினும் நோய் நொடிகளோடு பிறப்பார்களே.. அதை மாற்ற ஓடோடி வா முருகா!! பின் அதை மாற்றிட ஓடோடி வா முருகா!!!


ஞானிகளும் ரிஷிகளும் குருமார்களும் உனை பணிந்து அவர்களைக் காக்க ஓடோடி வா முருகா!!!

உன் பக்தர்களை காக்க ஓடோடி வா!!!


மனிதனோடு மனிதனாக இருந்து கேட்கின்றேனே முருகா 

மனிதனோடு மனிதனாக இருந்து கேட்கின்றேனே முருகா !!!!


இப்பொழுதும் உந்தனுக்கு புரியவில்லையா???


எனைக் காக்க ஓடோடி வா முருகா!!!


யானும் மனிதனாக நின்று கேட்கின்றேனே !!!

எனை காக்க வா வா முருகா!!

எனை காக்க வா வா முருகா!!!


நிச்சயம் தன்னில் மனிதன் எவ்வாறு அழுக்குகள் மனதில் வைத்துக் கொண்டு உன்னை வணங்கினாலும் உன்னை நோக்கி வந்ததாலும்...அவ் அழுக்கினை நீக்கிட பின் அருள் கூர்ந்து பின் அருள் ஈந்து பின் பல குறைகளை தீர்த்திட வா வா முருகா !!!


பல குறைகளை தீர்த்திட வா வா முருகா!!

அழியும் நேரத்தில் வா வா முருகா !!!

காப்பாற்றிட வா வா முருகா 


உள்ளங்கையில் உனை வளர்த்தேனே வா வா முருகா !!!

முத்துக்குமரனே 

மயில் மீது அன்பாகவே வா வா !!

வள்ளி தெய்வானையோடு 

 வா வா வா வா!!

புலியின் மீது வா வா வா வா!!!

சிங்கத்தின் மீதும் வா வா வா வா!!!

ஆனை தன்னின் மீதும் ஏறி அமர்ந்திட்டு வா வா !!

மக்களின் குறைதீர்க்கும் முருகா !!

மக்களின் குறை தீர்த்தபின் உலகத்தை காப்பாற்ற வா வா!!


இன்னும் ஏனைய நோய்கள் பின் தாக்குகின்ற நேரத்தில் பின் மடிவானே!!.. மனிதன்!!

அந் நோயிலிருந்து காத்திட வா வா முருகா!!

அந்நோயிடம் காத்திட வா வா முருகா!!!


தீராத குறைகளோடு கலியுகத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றானே!!!!.....


என் முருகன் காப்பாற்றுவான்!!

காப்பாற்றுவான் என்று 

அவர்களுக்காவது இறங்கி.. வா வா!!!

அவர்களோடு ஒன்றாக இணைந்து.. அவர்களை மாற்றி மற்றவர்களை மாற்றிட வா வா!!


அவர்களை மாற்றி அவர்கள் அதனால் தான் பின் மற்றவர்களையும் கூட மாற்ற பின் ஓடோடி வா முருகா!!!


முருகா முருகா அன்பான முருகா... இவ்வளவு நேரம்  உனை பின் அடிபணிந்தே பத்துமலை குமரனே வருக வருக!!!



வருக வருக அருள் கூர்ந்து மனிதனுக்கு இன்னும் தன்னில் அப்படியே நிற்காதே முருகா!!!

இன்னும் தன்னும் அப்படியே நிற்காதே முருகா!!!


அவர்கள் எப்படி பின் அருள்கள் கேட்டாலும் கொடுத்திடு முருகா!!

அதனை தவறான வழியில் பின் பயன் படுத்துவோர்களை பின் யாங்கள் இருக்கின்றோமே 

தண்டனை கொடுக்க!!

யாங்கள் இருக்கின்றோமே தண்டனை கொடுக்க!!


அப்பனே முருகனே!! அம்மையே முருகா !!

நிச்சயம் தன்னில் ஓடோடி வா வா 

நிச்சயம் தன்னில் நல்லோர்கள் பின் அறிந்தும் கூட பின் ஏதும் இல்லாமல்...


அவர்களை காத்திட வா வா முருகா..!!!

. இத் தேசத்தில் மக்கள் அனைவரும்.. ஒன்றும் இல்லாதவர்கள் தான் 

அவர்களுக்கும் புத்தியை கொடுத்து பின் அறிவையும் கொடுத்து பின்.. அனைத்து ஜீவராசிகளும் வாழ்ந்திட... பின் காக்க ஓடோடி வா முருகா!!

காக்க ஓடோடி வா!! முருகா!!


காக்கை தன்னில் வா வா முருகா 

நிச்சயம் தன்னில் குதிரை மேலே அமர்ந்திட்ட முருகா!! 

நிச்சயம் தன்னில் 

எவ்? எவ்? வாகனத்தில் செல்ல நீ நினைத்தாயோ!!!.... அவ் அவ் வாகனத்தில் உனை யான் அழைத்து சென்றேனே முருகா!!!


அதே போல் நீயும் கூட... யான் பின் என் வேண்டுதலை ஏற்று... மக்களின் குறைகளை காப்பாற்ற வா வா !!

மக்களின் குறைகளை பின் காப்பாற்ற ஓடோடி வா முருகா!!!


பின் வள்ளி தெய்வானையோடு அறிந்தும் கூட இன்னும் கூட பல மடங்கு சக்திகள் பெற்று வா வா முருகா !!!


வடிவேலனே வா வா வா வா!!!


குமாரனே வா வா வா வா!!


சிங்கத்தவனே வா வா வா வா!!!

ஆனையோனே வா வா வா வா!!!


செல்லக்குழந்தாய் வா வா வா வா!!!


பின் அன்போடு அன்போடு இப்பொழுது உனை அணைத்துக் கொள்கின்றேனே நிச்சயம் தன்னில் என் முருகன் பின் என் உள்ளத்தில் இருந்து பின் எழுகின்ற நேரத்தில் அனைத்து குறைகளும் போகுமே!!

மனிதனின் அனைத்து குறைகளும் போகுமே!!



ஆடடா!!!.... பாடடா!!! குழந்தாய் குழந்தாய்!!!


ஆடிக்கொண்டே பல நோய்களை தீர்ப்பாய்!!


பாடிக்கொண்டே பல பல தரித்தரங்களை நீக்குவாய்!!


குழந்தாய்!! குழந்தாய்!! முத்துக்குமரனே குழந்தாய்!!! வா வா வா வா முருகா!!


பழனி தன்னில் வாழும் முருகா!!

செந்தூரில் வாழும் முருகா!!

திருத்தணிகை தன்னில் வாழும் முருகா!!

விராலி மலையில் வாழும் முருகா!!!


அனைத்து மலைகளில் இருந்தும் இறங்கி வா!!

அனைத்து மலைகளிலிருந்தும் இறங்கி வா வா!!


ஓடோடி வருகின்றார்களே மக்கள் முருகா!!!


அவர்களுக்கு 

ஞானத்தை கொடுத்து நிச்சயம் தன்னில் பாவத்தை ஒழித்திட வா வா!!

மனிதன் பாவத்தை ஒழித்திட வா வா முருகா!!!


கலியுகத்தில் மனிதன் பிறந்தாலே... பாவம்.. அதிகமாகத்தான் பின் ஏற்று.. பிறக்கின்றானே முருகா!!!!


அதை உன்னாலே நீக்க முடியும் முருகா!!

அதை உன்னாலே நீக்க முடியுமே முருகா!!

ஓடோடி வா முருகா!!

பாவத்தை நீக்கு முருகா!!!

ஓடோடி வா!!! பாவத்தை நீக்கிட வா வா!!!

அன்போடும் பண்போடும் அணைத்தேனே!!

அன்போடும் பண்போடும் அணைத்தேனே!!

என் குழந்தாய் அன்போடு அழைக்கின்றேனே.. வா வா வா வா குழந்தாய் வா வா!!!

அருளாசிகள்!! அருளாசிகள்!!

உலகின் மிகப் பெரிய மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோவில்

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவிலாக உள்ளது. இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.இந்தக் குகைக்கோவிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் உருவாகியுள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

. 42 ஜலான் 2, பத்து கேவ்ரேபாயிண்ட், 68100 பத்து மலை குகைகள், சிலாங்கூர்,  மலேசியா

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1830 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு ( April 2024 ) - பகுதி 7



(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 
3. சித்தன் அருள் - 1808 - பகுதி 3
4. சித்தன் அருள் - 1823 - பகுதி 4
5. சித்தன் அருள் - 1825 - பகுதி 5
6. சித்தன் அருள் - 1826 - பகுதி 6 )

குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தையை , அதாவது நல்லதையே சொல்லி வளர்க்கின்றீர்கள். இப்படித்தான் உண்ண வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும் என்று. அதேபோல்தான் அப்பனே, என் அருகில் வந்துவிட்டால்,  நீங்கள் அனைவருமே குழந்தைகள் அப்பனே. முதலில் குழந்தைக்கு என்ன தேவையோ, அதை யான் ஊட்டுவேன் அப்பனே. பின்புதான் வாக்குகள் செப்புவேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் ) சொல்லுங்கள் ஐயா. 

அடியவர் :- ( எடுத்து விளக்கம் கொடுத்தார் அனைவருக்கும்) ஒரு குழந்தைக்கு என்ன வேண்டும் என்பது ஒரு தாய்க்குத் தெரியும். அது போல் நமக்கு என்ன உண்மையான தேவை என்று குருநாதருக்குத் தெரியும். நாம் பல தேவைகள், காரணங்கள் மனதில் வைத்திருக்கலாம். (தேவை) அது பெரியது, இது பெரியது என்று. ஆனால் உண்மையான தேவை எது என்று குருநாதருக்குத் தெரியும். அதைச் செய்து விட்டுத்தான், மீதி தேவைகளைப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் குருநாதர் சொன்ன விசயங்களைச் செய்து வந்தால் நிச்சயம் நாம் வாழ்க்கையில் கரையேறலாம்.

குருநாதர் :- அப்பனே !!!!! இல்லறம் என்றால் சண்டைகள் வரும். அப்பனே வேலை செய்தாலும் சண்டைகள் வரும். அப்பனே தொழில் செய்தாலும் வரும். அப்பனே அப்பொழுது எதைச்செய்தால், சண்டைகள் வளராது, சந்தோசமாக வாழலாம் அப்பனே???? இதை ஏற்கனவே செப்பிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்லுங்கள் கேட்கின்றேன். 

அடியவர் 4, அடியவர்கள் :- தர்மம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே அது வேறு இது வேறு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த chapter வேற, இந்த chapter வேற என்று சொல்லிவிட்டார் ஐயா. 

அடியவர் 4 :- நீங்களே சொல்லி விடுங்கள் சாமி.

குருநாதர் :- அப்பனே அனைத்தும் யான் சொன்னால் , அப்பொழுது உன் அறிவு எங்கப்பா போய் விட்டது?

அடியவர் 4 :- இல்லைங்க சாமி. நீங்கள் என்றால் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுவீர்கள். 

குருநாதர் :- அப்பனே முதலில் நீங்கள் சொல்லுங்கள்.

அடியவர் 5 :- கடமையைச் செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே தன் கடமையை ஒழுங்காகச் செய்தாலே பின் போதுமானதப்பா. அப்பனே யானே வந்து வாக்குகள் சொல்லுவேன். அப்பனே நீ எங்கிருந்தாலும் , நீ மறைந்திருந்தாலும் , உன் இல்லத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாலும் யான் ஓடோடி வந்து உந்தனுக்குச் சொல்வேனப்பா. ஆனால் உந்தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். சோம்பேறித்தனமாக இருக்கக்கூடாது. அப்பனே ஆனால் நீ சோம்பேறியப்பா. 

( பின் வரும் வாக்கு மிக மிக அதி மிக முக்கியமான வாக்கு. அதிகாலை ரகசியம்)

“அப்பனே 4 மணிக்கு எழு. அனைத்தும் யான் தருகின்றேன் உந்தனுக்கு.”

அடியவர் 4 :- சரிங்க சாமி. 

( தனி நபர் கேள்வி பதில் வாக்குகள் ஆரம்பமானது. அவற்றில் உள்ள முக்கிய பொது வாக்கினை மட்டும் இங்கு பகிர்கின்றோம்.) 

அடியவர் 6 :- ( உடல் நலம் குறித்த கேள்வி.)

குருநாதர் :- சில இயற்கையான உணவுகளை உட்கொள்ள நன்று. முருங்கை இலைகளையும் கூட, பின் கரிசலாங்கண்ணி என்னும் மூலிகைகளையும் கூட, பொன்னாங்கண்ணி என்னும் மூலிகையும் கூட, இன்னும் எண்ணெய்யைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. சரியாகவே புளிப்பு அகற்ற வேண்டும். பின் காரத்தையும் அகற்ற வேண்டும். பழ வகைகள் உட்கொள். அனைத்தும் தீரும் ( குணமாகும் ). நல்முறையாகும். இதைக் கடைப்பிடி. செயற்கை உணவை எடுத்துக் கொள்வதனால்தான் பிரச்சினையே. தாயே சொல்லிவிட்டேன். 

( தனி வாக்குகள் ) 

கலியுகத்தில் பிரச்சினை இல்லாமல் யாரும் இல்லை. 

( விதியை மாற்றும் தனி வாக்கு , விளக்கங்கள் , அடியவர் கண்ணீர் வேண்டுதல். சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு. ஜானகிராமன் அவர்கள் அழகாக எடுத்து உரைத்தார்கள். ஒரு கண்ணீர்க் கதையை கேட்டு தட்டச்சு செய்யவே  கஷ்டமாக ,  மன பாரமாக உள்ளது. சுவடி ஓதும் மைந்தன் இது போல் எத்தனை கண்ணீர்க் கதைகளை, கேள்விகளைக் கேட்க நேரிடும் என்று நினைத்தாலே. அப்பப்பா!!! கடும் பக்குவம் இருந்தால் மட்டுமே இவ் சுவடியை ஓத இயலும். இது போல் சூழ்நிலைகளைச் சமாளித்து ஆறுதல் சொல்ல இயலும். )

அடியவர் 7 :- (ஒரு தேர்வு குறித்த கேள்வி)

குருநாதர் :- கடின உழைப்பு , வெற்றி. எப்பொழுது எதனைத் தரவேண்டுமோ அப்பொழுது பெற்றுக்கொள். கடமையைச் செய்து கொண்டே இரு. பலனை எதிர் பார்க்காதே. நிச்சயம் யான் உதவிகள் செய்வேன். 

அடியவர் 8:- குருநாதா , பைரவர் ஒரு வாரம் முன்னர் இறந்து விட்டது…

குருநாதர் :- அம்மையே இறப்பு, பிறப்பு , வாழ்வது , பின் வீழ்வது இவை எல்லாம் இறைவனிடத்தில் இருந்து வருபவை. இதனால் உங்கள் அனைவருக்குமே சொல்கின்றேன். உங்கள் உயிர் கூட உங்களுக்குச் சொந்தம் இல்லை. இறைவன் எப்பொழுது எடுத்துக்கொள்வான் என்பதே தெரியாது. அதனால் நிச்சயம் தர்மத்தைக் கடைப் பிடியுங்கள். இறைவனுக்கு மட்டுமே பிறப்பதற்கும் பின் எடுப்பதற்கும் அவனுக்கே உரிமை உண்டு. உயிர்கள் அனைத்துமே இறைவனுக்குச் சொந்தம். 
அம்மையே கவலையை விடு. 

( தன் கேள்விகள் , வாக்குகள்.)

அடியவர் 9 :- ( தன் கேள்வி )

குருநாதர் :- உலகம் அழிவு நிலைக்குச் செல்கின்றது. யான் சொல்லியதை அப்படியே செய்து கொள். அதாவது தானங்கள் செய்யச்சொல். செய்து கொண்டே வாருங்கள். நிச்சயம் மாற்றம் அடையும். புண்ணியங்கள் சேரும் பொழுது, நிச்சயம் பாவங்கள் கரைந்து ஓடும். அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அனைவருக்கும் சொல் மகனே. 

அடியவர் :- ( விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்). 

அடியவர் :- நாம் அனைவரும் “அ” னாவில் வந்து நிற்கின்றோம். நாம் என்ன ( புண்ணியங்கள் ) செய்கின்றோம் என்று சொல்ல மாட்டேன் என்கின்றீர்கள். குருநாதர் நிறையச் சொல்லி உள்ளார்கள். குருநாதரிடம் உங்கள் மனதில் ( இன்னென்ன புண்ணியங்கள் செய்வேன் என்று ) வாக்குறுதி எடுத்துக்கொண்டு வாக்கைக் கேளுங்கள். நாம் புண்ணியம் செய்யாமல் அவர்களால் ஏதும் செய்ய முடியாது. நாம் செய்யும் புண்ணியத்தை வைத்துத் தான், குருநாதர் நமக்குத் தேவையான நல்லதைச் செய்ய முடியும். ஏன் என்றால் புண்ணியம் என்பது நல்ல கர்மா. (நம்மிடம் உள்ள) அந்த நல்ல சக்தியை வைத்துத்தான் அவருடைய காந்த ஆற்றலை வைத்து நமக்குக் கொடுத்து நம்முடைய பிரச்சினைகளைச் சரி செய்ய முடியும். புண்ணியம் ஏதுவும் நாம் செய்யாமல், எந்த தெய்வத்தைடைய பெயரைச் சொன்னாலும் ( ஓம் நமச்சிவாய, ஓம் சக்தி, நமோ நாராயணா, ஓம் லக்ஷ்மியே , ஓம் சரஹனபவ, ஓம் கணபதையே முதலிய பெயர்கள்) , பல பூசைகள் செய்தாலும், என்ன செய்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது/இயலாது. எட்டி நின்று வேடிக்கைதான் பார்ப்பார்கள். நம்மிடம் புண்ணிய பலங்கள் இருந்தால் மட்டுமே , அவர்கள் நம்முடைய குறைகளை நீக்குவார்கள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஆலய முகவரி :-

ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய மாமுனிவர் ஆலயம். வடவள்ளி, முல்லை நகர்,  மருதமலை அடிவாரம். கோயம்புத்தூர்.

Google map:- 

https://maps.google.com/?q=11.024868,76.916664

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!