​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 March 2025

சித்தன் அருள் - 1811 - அறிவிப்பு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் உத்தரவுடன் அடியேன் சிகிர்ச்சைக்கு செல்வதால், ஒரு சில காலங்களுக்குப்பின் உங்கள் அனைவரையும், சித்தன் அருளில் சந்திக்கிறேன். இன்றுவரை அகத்தியப் பெருமான் கூறி இங்கு வெளியிட்ட நல்ல விஷயங்களை மறுபடியும் வாசித்து, நினைவை புதுப்பித்து மகிழ்ந்து இருங்கள். நல்லதே நடக்கட்டும்! சந்திப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
 
சித்தன் அருள்.....அகத்தியரிடம் ஒப்படைப்பு!

Monday, 3 March 2025

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!









வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் தனி நபர்களுக்கு உரைக்கும் வாக்குகளிலும் பல்வேறு ரகசியங்களை உரைக்கின்றார்.

அதில் தனிப்பட்ட விஷயங்களை தவிர்த்து விட்டு பொதுவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் 

இன்னும் மனிதர்களுக்கு தெரியாத தெய்வ ரகசியங்களை இயற்கை மருத்துவ குறிப்புகள் எல்லாம் குருநாதர் வெளிப்படுத்தும் பொழுது அவை அனைவரும் அறிந்து கொள்வதற்கும் பதிவு செய்யப்படுகின்றது!

சமீபத்தில் விஷ்ணு பக்தர் ஒருவருக்கு அவருடைய புண்ணியத்தின் பலனாக காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகளை உரைத்த பொழுது!! கூறிய 

நாராயண ரகசியம்!!

அப்பனே நல்விதமாக ஆசிகள் அப்பா!! இறைவன் அருளால்தான் நீ செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்பேன் அப்பனே. 

இனிமேலும் நாராயணன் உன்னை நகர்த்துவான் (இயக்குவார்) என்பேன்
அப்பனே!! நாராயணன் அருள் பரிபூரணம்!!


அப்பனே நாராயணன் அருள்  பரிபூரணமாக இருக்கின்றது !!!

அப்பனே நிச்சயம் இவை என்று அறிய அறிய நிச்சயம் ஏழுமலையான் உன்னை அழைப்பான் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது அப்பனே சந்திரனின் அப்பனே எவை என்று கூட இன்னும் அதிகரிக்கும் பொழுது.. இன்னும் அப்பனே மனநிலைகள் அப்பனே பின் எவ்வாறு என்பது கூட மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

அப்பனே பின் நிச்சயம் பின் சந்திரன் உன்னை அங்கு அழைப்பான். 

அப்பனே நிச்சயம் சந்திரனும் நாராயணனும் அப்பனே சுக்கிரனும் அனைவரும் ஒன்றே!!!

அப்பனே சந்திரனும் கூட சுக்கிரனும் கூட அப்பனே ஒன்றாக இணைந்தது தான் அப்பனே நாராயணனே!!! 

அப்பனே சந்திரனும் சுக்கிரனும் இணைந்தது அப்பனே புதன்!!

அப்பனே புதன் தான் அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் பெருமான்(ள்).

(புதன் கிரகத்தின் அதிபதி மகாவிஷ்ணு) 

அப்பனே இவ்வாறு நிச்சயம் இருக்கும் பொழுது நாராயணன் அருள் பரிபூரணமாக இருக்கும் பொழுது கவலைகளை விடு நன்மைகளாகவே முடியுமப்பா!!

இதனால்தான் அப்பனே மனிதர்களை புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்றெல்லாம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!

தாம் தன் செய்த புண்ணியங்களுக்கு ஏற்பது யாங்கள் சித்தர்கள் அழகாகவே வந்து காத்து அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. 

ஆசிகள்!! ஆசிகளப்பா!!

குஜராத்தைச் சேர்ந்த ஒரு அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய 

 ஏக முக ருத்ராட்ச ரகசியம்

பக்தர்: குருவே ஒருமுக ருத்ராட்சம் என்ற பெயரில் முந்திரி பருப்பு வடிவத்தில் இன்று சமூகத்தில் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றது. ஒரு முகம் ருத்ராட்சம் உருண்டை வடிவில் இருப்பது எங்கு கிடைக்கும்???

அப்பனே எதை என்று அறிய அறிய உந்தனுக்கு அதெல்லாம் தேவையில்லை என்பேன் அப்பனே!!

யான் எங்கு இருக்கின்றது என்று சொல்லிவிடுவேன் ஆனாலும் நீ அங்கு செல்ல மாட்டாய் என்பேன் அப்பனே. 

அதனால் யான் சொல்லியும் செய்யவில்லை என்றால் அதுவும் பாவமாக ஏற்படும் என்பேன் அப்பனே!!!

(குருநாதரிடம் ஒரு விஷயத்திற்காக கேட்டு அதை குருநாதர் சொல்லி அதை பின்பற்றாவிட்டால் பாவங்கள் ஏற்படும்) 

ஆனால் நிச்சயம் சொல்வேன் ஆனால் நீ செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே அதனால்.. எத்தனை முகம் ஆனாலும் சரி ஏதாவது ஒரு ருத்ராட்சத்தை பயன்படுத்து மீதியை யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே. 

குருவே நான் ஒருமுக ருத்ராட்சத்தை அணிய விரும்புகின்றேன் அது எங்கு கிடைக்கும்??

குருநாதர் அகத்திய பெருமான். 

அப்பனே அதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர... நிச்சயம் அது யார் கையிலும் இல்லையப்பா!!

(இதுவரை உண்மையான ஒரு முக ருத்ராட்சம் எவருக்கும் கிடைக்கவில்லை) 

அப்பனே எவை என்று அறிய அறிய அப்படி இருந்தாலும் அப்பனே ஈசனே அதை மறைத்து விடுவான் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் பின் அதை அதாவது அவ் ருத்திராட்சம் கைக்கு வந்து விட்டால் இவ்வுலகத்தையே வசியப்படுத்தி விடலாம் என்பேன் அப்பனே.

ஒரு அடியவருக்கு குருநாதர் கூறிய வாக்கில் அவரது குடும்பம் முழுவதும் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருக்கின்றது அதற்கு தீர்வாக குருநாதர் கூறிய வழிமுறைகள். 

அப்பனே நல்முறையாக இல்லத்தில் பைரவனை வளர்ப்பது சிறந்தது. 

வீட்டில் கருங்காலி கட்டையை ஏதாவது ரூபத்தில் வைத்து விடு அப்பனே

அப்பனே ஏலக்காய் பச்சை கற்பூரம் அப்பனே கிராம்பு இவற்றை நசுக்கி (பொடியாக்கி) அப்பனே வெற்றிலை பாக்கில் வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொண்டால் இவையெல்லாம் வராதப்பா!!! துணியில் சுற்றி எடுத்து கொண்டு செல் அப்பனே!!

(ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை பொடியாக்கி வெற்றிலை பாக்கில் வைத்து மடித்து ஒரு சிறிய துணியில் கிழி போல சுற்றி வெளியே செல்லும் பொழுதும் தொழில் மற்றும் எல்லா காரியங்களுக்கும் செல்லும் பொழுதும் தன்னுடன் வைத்துக்கொண்டு சென்றால் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அண்டாது..

தினமும் இவற்றை மாற்றிக் கொள்ளலாம்.. ஆற்றிலோ குளத்திலோ இவற்றை எறிந்து விட வேண்டும்)

அது மட்டும் இல்லாமல் பேய் விரட்டிம் மூலிகையும் கூட வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே

அது மட்டும் இல்லாமல் அடிக்கடி உணவில் வெண்பூசணியை சேர்த்துக் கொண்டே வந்தால் அப்பனே கண்திருஷ்டி அண்டாதப்பா!!!

உடலில் நோய் நொடிகள் வராமல் உடல் சீராக இருப்பதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய ரகசியம் 

அப்பனே ஏதாவது பழமையான சிவாலயங்களுக்கு சென்று அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை குடித்து வந்தாலே போதுமானதப்பா...

அப்படி இல்லை என்றால் அப்பனே பஞ்ச லோகத்தினால் ஆன சிவலிங்கத்தை வீட்டில் பூஜித்து அவ் லிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்து அந்த நீரை அருந்தி வரவேண்டும் என்பேன். அப்பனே இதனால் பல குறைகள் தீரும் என்றும் அப்பனே..

உடலில் யூரிக் ஆசிட் அதிகப்படியாக உற்பத்தி ஆவதால் உடல் பருமன் மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு குருநாதர் ஒரு அடியவருக்கு கூறிய மருத்துவ ரகசியம் 

அப்பனே நல்முறையாக அனுதினமும் உணவில் சுரைக்காயை சேர்த்துக்கொள் அப்பனே. இதை தன் உணவில் சேர்த்து வந்தாலே இதற்கு நல்ல தீர்வு கிட்டும் என்பேன் அப்பனே... அனுதினமும் நிச்சயமாக நீ சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் மாறும் அப்பனே.

குருவே நான் சுரைக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் ஏற்படுகின்றது குருவே !!

அப்பனே நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய அறிய அவை தன் (சுரைக்காய்) கூட எடுத்துக் கொண்டே வா!!

அப்பனே கவலைகளை விடு!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இதற்கு (ஜலதோஷத்திற்கு) பதிலாக பின் திரிகடுகம் எடுத்துக் கொள்!!;;

ஒரு அடியவர் சில தவறான தீய பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் பிரச்சனை உறக்கமின்மை கல்லீரல் வீக்கம் அடிக்கடி கட்டுப்பாடு இன்றி சிறுநீர் கழித்தல் போன்ற குறைபாடுகள் இருக்கின்றது.. அதற்கு குருநாதர் கூறிய தீர்வு 

அப்பனே முதலில் பாகற்காய் சாற்றினை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர வேண்டும் என்பேன் அப்பனே இதனால் பல கழிவுகள் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறும் என்பேன் அப்பனே. முதலில் இதைச் செய்..அப்பனே....உன் பழக்கங்களை எல்லாம் உடனடியாக நிறுத்து அப்பனே!!!!...

ஒரு பெண் அடியவருக்கு மாந்திரீகத்தால் சில தேவையில்லாத உணவுப் பொருட்கள் கொடுத்து அது உடலில் சேர்ந்து விட்டது அது அவருக்கு பல வகையிலும் துன்பத்தையும் தூக்கமின்மை துர் சொப்பனங்கள் அதாவது கெட்ட கனவுகள் உளர்ச்சோர்வையும் நல் முறையாக பக்தியை செலுத்த முடியாமல் செய்தும் பல கஷ்டங்கள் அந்த பெண்மணிக்கு.. குருநாதர் அகத்திய பெருமான் இதற்கு கூறிய தீர்வு 

அம்மையே அனுதினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அதாவது ஒரு மாதம் தொடர்ந்து முள்ளங்கி சாற்றினை பருகி வரவேண்டும்!!!

இதனால் சில சில பின் எவை என்று அறிய அறிய பிற அழுக்குகளும் கூட பின் உடலில் எதை என்று கூட தானாகவே வெளியேறும் அம்மையே தொடர்ந்து இதை நீ நிச்சயம் பருகி வர வேண்டும் என்பேன்!!

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி அவருடைய இளம் வயது மகனும் இதே உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் இருவரும் உடல் பருமன் உடையவர்கள் குருநாதரிடம் உடன் பருமன் மற்றும் மிக ரத்த அழுத்தத்திலிருந்து (blood pressure)மீண்டு வர இதற்கான தீர்வினை கேட்டபொழுது

இதனால்தான் அனைவருக்குமே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் கோபம் கொள்ளாதீர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று... எதை என்று நிச்சயம் கோபத்தையும் கூட நீ கட்டுப்படுத்த வேண்டும் அம்மையே.. அனுதினமும் தியானங்களை மேற்கொள்ள வேண்டும் அம்மையே.. பின் அமைதியாக இரு!!
 நிச்சயம் தன்னில் கூட. 

அம்மையே பின் நிச்சயம் நடைபயிற்சியை விட்டு விடாதே!!!!

அனைவருக்குமே சொல்கின்றேன் அறிந்தும் கூட இதனால்.. நிச்சயம் அமைதியாக இருங்கள். 

குருவே கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு வழி தாருங்கள் 

அம்மையே யான் சொல்லிவிட்டேன் அம்மையே ஏற்கனவே.. இருந்தாலும் அம்மையே கற்களில் மீது நட!!

(கூழாங்கல் அதாவது ஆற்று படுகையில் இருக்கும் உருண்டை கற்கள் மீது அனுதினமும் காலில் செருப்பு அணியாமல் 20 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.. இதனைப் பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்!

சிலருக்கு நரம்பு பிரச்சனை உடல் பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் உடல் வலி கால் வலிகளுக்கு குருநாதர் தீர்வாக இதனைப் பற்றி தெரிவித்து இருக்கின்றார்

 இதனால் ரத்த ஓட்டம் சீராகி உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். தற்போது பூங்காக்களிலும் இதுபோன்று கற்களைக் கொட்டி நடை பயிற்சியை மேற்கொள்கின்றனர்)

குருவே உலகத்தில் தற்போதைய காலகட்டத்தில் இன்னும் பல பேர் பிளட் பிரஷர் நோயால் அவதியுறுகின்றனர்

அறிந்தும் கூட இதற்கு சிறந்த பின் அதாவது நிச்சயம்... மிதிவண்டி மிதித்தல் நிச்சயம் தன்னில் கூட ஓடுதல்!! நடத்தல்!!

குருவே உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து கொள்ளலாமா 

தாராளமாக செல்லலாம்!!

உயிர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு எந்த? மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் குருநாதா!!!

அம்மையே நிச்சயம் ஒரு வாரம் என் தொடர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் முள்ளங்கி எனும் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தி வா... சில கழிவுகள் உள்ளே இருக்கின்றது அதை முதலில் வெளியே அனுப்ப வேண்டும். 

இதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் குருவே 

முதலில் இதைச் செய்யுங்கள் இதன் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும் என்பேன். 

குருவே என்னுடைய மகனுக்கு இளம் வயதிலேயே இந்த உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டது இதற்கு தீர்வு வேண்டும் அருளுங்கள்!!

(அவருடைய மகன் துரித உணவு எனப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு கடைகளில் கிடைக்கும் உணவு வகைகளை செயற்கை உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் உடையவர்)

அப்பனே நீ உண்ணுவதெல்லாம் நிறுத்த வேண்டும்.. பின் கீரை வகைகளை உட்கொள்ள நன்று!!!

அதாவது அப்பனே பொன்னாங்கண்ணி கரிசலாங்கண்ணி காசினிக்கீரை மணத்தக்காளி எனும் மூலிகைகளையும் கூட கொள்ளு எனப்படும் அப்பனே எதையென்று அறிய அறிய யான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன் அப்பனே பல உரைகளிலும் கூட!!

பச்சை காய்கறிகளையும் கூட கீரைகளையும் கூட அப்படியே உண்ண வேண்டும் அப்பனே நல்விதமாகவே. 

இதனால்தான் சொல்கிறேன் அப்பனே சில செயற்கையானதை உணவுகளை விட்டுவிடு அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரிய... அனைத்தும் எண்ணெயில் தான் உள்ளதப்பா!!! அவையெல்லாம் என்பேன் அப்பனே!!! இதற்கு தன் எண்ணையையும்  குறைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!(எண்ணெய்களில் பொறித்த வறுத்த உணவுகள் oily foods)

சரியாகவே அப்பனே சில காலம்.. பின் அதாவது தேங்காய் எண்ணெய்... அப்பனே சமைத்து உண்ணுதல் அதிசிறப்பு தரும்!!

குருவே நாங்கள் தேங்காய் எண்ணெயில் பழக்கம் இல்லை இயற்கையாக ஆட்டி எடுக்கும் கடலை எண்ணெயை பயன்படுத்தலாமா??

அப்பனே இதையும் உட்கொள்ளலாம். 

குருவே உடல் முழுவதும் சுத்தப்படுத்துவதற்கும் உடலில் உள்ள குறிப்பாக வயிறு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு என்ன செய்வது???

அப்பனே அறிந்தும் கூட ஒன்றைச் சொல்கின்றேன்!!! அதிகாலையிலே எழுந்து முருங்கை இலைகளை கூட கசக்கி அப்பனே அதாவது பின் நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்படியே நிச்சயம் கரைத்து அப்பனே பின் அருந்த நன்று!!! என்பேன் அப்பனே.. இதை நாளை பொழுதிலிருந்தே இவன் செய்ய வேண்டும். (முருங்கை இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து அதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்) 

குருவே என்னுடைய மகளுக்கும் தோலில் கைகளில் தோல் உரிதல் அலர்ஜி பிரச்சினை இருக்கின்றது 

அப்பனே இதற்கும் காரணம் எண்ணைய் தானப்பா!!! உணவில் எண்ணெயை குறைத்துக் கொண்டாலே நோய்கள் வராதப்பா. செயற்கையை நாடி நாடி அனைத்தையும் மனிதர்கள் நோய்களை வரவழைத்து கொள்கின்றார்கள் என்பேன் அப்பனே!!

யான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புற்று மண்ணை.. உடம்பில் பின் அதாவது ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள்.. பூசி ஊறவைத்து நிச்சயம் தன்னில்.. கூட... அவை மட்டும் இல்லாமல் வேம்பு (வேப்பிலை அரைத்து உடலில் பூசி) இலைகளையும் கூட பின் நன்முறையாகவே அறிந்தும் கூட அதை தன் கூட ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் பின் உடம்பில் பின் அதாவது.. கசக்கி அதாவது பின் அதாவது ஊறவைத்து நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகளால் ஆன.. பொடிகளை!!

 (ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு பொடி துளசி பொடி வில்வ பொடி வேப்பிலை பொடி பயத்த மாவு கடலை மாவு பூலாங்கிழங்கு உள்ளிட்ட ஸ்நான பொடி) 

நீரில் விட்டு நீராடி வந்தாலே நிச்சயம் பின் நீராடி வந்தாலே போதுமானது. 

பின் இதை ஏற்கனவே உரைத்தேன்... நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் சூரியன் பின் அதாவது சூரிய வெளிச்சத்தில் நிச்சயம் அதாவது அனுதினமும் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டே வந்தால்.. இதனால் நிச்சயம் தன்னில்  கூட மாற்றங்கள் ஏற்படும் என்பேன்... அதிகாலையில் எதை என்று சூரியன் முன்பு நின்றால்  அம்மையே!!! சூரியனின் வெளிச்சத்தில் இருந்து வரும் சக்திகள் தோலில் படும் பொழுது அவை மாறும்!! என்பேன்!! அதிகாலையில் சூரியனை பார்த்து நின்று வந்தாலே போதுமானது. அம்மையே அதுமட்டுமில்லாமல் இது அனைத்து நோய்களுக்கும் பின் தீர்வு. 

சொல்லிவிட்டேன். 

குருவே!!! என் மகளுக்கு அடிக்கடி கண்திருஷ்டி தோஷம் ஏற்படுகின்றது!! இதற்கு தீர்வினை தாருங்கள்!! 

யான் ஏற்கனவே அதாவது வெள்ளை பூசணிக்காயை கூட.. நல்விதமாக அதாவது அனுதினமும்... முடியாவிடிலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆவது.. நிச்சயம் தன்னில் கூட பின் இதை தன் அதாவது அதன் சாற்றினை... அதாவது அப்பனே வெள்ளை பூசணி யின் சாற்றை அருந்தி வர சிறப்பு தரும்  என்பேன்.

யான் கூறியதை கடைபிடித்தாலே போதுமானது என்பேன் அப்பனே...குறைகளே வராதப்பா .. நிச்சயம் தன்னில் கூட...... ஆனாலும்  யான் சொல்லியதை.. சில விஷயங்களை கூட அதாவது சிலவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள் கடைப்பிடிப்பதில்லை அப்பனே.. அதனால்தான் நிச்சயம் நீண்ட வாக்குகள் யான் செப்புவதில்லை அப்பனே... இதனால் இதை செய்திட்டு வந்தால்.. என்னென்ன? ஏது? என்றெல்லாம் பின் யான் செப்பி உயர வைப்பேன் அப்பனே..

ஆசிகள்!! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 1 March 2025

சித்தன் அருள் -1809 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - ஈசன் பார்வதி காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு-2!





சிவராத்திரி காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு பாகம் 2 

பார்வதி தேவியார்: 

நிச்சயம் மணாளனே நில்லும்!!!

அதை நீங்கள் கற்க வைக்கலாமே???!!! என்று!!

ஈசனார்:

ஆனாலும் பின் அனைத்தையும் ஒரு நேரத்தில் யான் உணர வைக்கின்றேன்! தேவியே!!!!

ஆனாலும் நிச்சயம் தேவியே!!! அனைத்தும் மனிதனிடத்தில் கொடுக்கின்றேன்...

ஆனால் அதை வைத்துக் கொள்வதும் நிச்சயம் வைத்துக் கொள்ளாததும் மனிதனுடைய கர்மாவே!!!!

ஆனால் இங்கு கர்மா பற்றி யான் பேசவில்லை!!! அதனைப் பற்றி பின் மைந்தன் அகத்தியன் அழகாக எடுத்துரைக்கும் பொழுது அறிவியல் மூலமாகவே தெரிந்து கொள்வீர்கள்! 

 ஏன்? எதற்கு? இவையெல்லாம் என்று!!!

நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

தந்தையாரே!!! நிச்சயம் அனைத்தும் உண்மை!! அறிந்தும் இன்னும் எவ்வாறு? ஞானிகள்!!!

 மக்கள் நிச்சயம் எதன்??? பின்னாலே செல்கின்றார்கள் என்று பார்த்தால்!!?!?!?! எதன்  பின்னால் செல்கின்றார்கள் என்றால் நிச்சயம் மாயையின் வழியே!!!

பார்வதி தேவியார்: 

பின் நில்லும்!!! நில்லும்!!! புசுண்டனாரே!!!

நிச்சயம் கூட அவ் மாயையும் கூட நிச்சயம் ஏற்படுத்தியவர் இவர்தானே!!!! அதாவது உன் தந்தை ஈசன் தானே!!!

கேளும் நீயும் கூட!!!
நிச்சயம் தன்னில் கூட!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

அதாவது தாயே!!! அறிந்தும் நிச்சயம் எதற்காக ?? மாயையை நிச்சயம் அறிந்தும் ஏற்படுத்தி இருக்கின்றார் என்றால் !!!......
நிச்சயம் அதாவது... இரவு என்றால் பகல்... நிச்சயம் பின்  நன்மை தீமை..

 ஏன் பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிந்து பின் நடந்து இவை தீர நிச்சயம் தன்னில் கூட பகலெல்லாம் உழைத்து விட்டு இரவில் இரவு தன்னில்  யோசிக்கவே!!! நிச்சயம் தன்னில் கூட பின் உறங்குகின்ற பொழுது... இதனால் அப்பொழுது யோசித்து விட்டால் நிச்சயம் மனிதன் உயர்ந்தவன் ஆகிவிடலாம். 

(இரவில் உறங்குவதற்கு முன் நன்மை எது தீமை எது உண்மை எது மாயை எது என்று யோசிக்க வேண்டும் அப்படி யோசித்தால் உண்மை நிலை புரிந்து உயர்ந்து விடலாம்)

ஆனால் யோசிப்பதில்லையே!!!

அதனால்தான் பின் எம் தந்தையும் இரவும் பகலும் கூட!!!
 (படைத்திருக்கின்றார்) 

பின் ஆனாலும் மனிதன் இன்னும் கூட புத்திகள் இல்லாமல் சுற்றி ! சுற்றி!!
அறிந்தும் எதை என்றும் புரிய!!!

அதனால்தான் நிச்சயம் பின் பக்தர்களையும் கூட!!! 

அவர்களுக்கு அள்ளி கொடுத்து ஆனந்தத்தில் சில பக்குவங்களை புகுத்தி நிச்சயம் நின்றால்!!! அனைத்தும் மாறும்.. கலியுகம் அறிந்தும்.. அறிந்தும் அறிந்தும். 

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் இதன் உண்மையை கூட!!

இதனால் மனிதனை விட்டுக் கொண்டே இருந்தால் இன்னும் நிச்சயம் நோய் பின் அறிந்தும் எதை என்று அறிய சில சில நுண்ணுயிர்களையும் கூட மனிதனே ஏற்படுத்தி இருக்கின்றான். 

பார்வதி தேவியார்:

பின் அறிந்தும் ஏன்? எதற்கு? இவை தன் கூட மனிதனின் கண்டுபிடிப்புகள்!!!

ஆனால் இதனையும் பின் அழித்து விட்டால் அறிந்தும் உண்மை நிலை எவ்வாறு? என்று புரிகின்றதா???

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் பின் தாயே!!!

அதாவது என் தந்தை நிச்சயம் எவ்வளவு பின் அறிவாளி!!!! அறிவாளிகளை எல்லாம் பயன்படுத்தி பின் அதாவது அறிவாளிகளாக நிச்சயம் பின் நல் புத்திகளை கொடுத்து நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு அனுப்புகின்றான். 

பின் அதாவது அவ் புத்தியை சரியாக பயன்படுத்துவதே இல்லை 

அதனால்தான் அழிவுகள். 
புத்தியை அதாவது ஏன்? எதற்கு? வரும் காலங்களில் அழிவுகள் என்றால்... மனிதன் பின் நுண்ணுயிரிகளை கண்டுபிடித்துள்ளான். 

(மனிதனே மனிதர்களை அழிக்க சில செயற்கையான கிருமிகளை உருவாக்கி வைத்துள்ளான்)

அதை எப்படியாவது பின் அதை விட்டால்!?!?!?!?!?

 ஆனால்... அதைக் கூட ஓரிடத்தில் வைத்திருக்கின்றான்!.

நிச்சயம் பின் அதாவது இதை தன் சோதனை!!

 (மனிதர்களிடத்தில் பரப்பி) 

செய்து பார்ப்போமா??? என்று!!

ஆனாலும் நிச்சயம் அவனை அங்கேயே தட்டி நிச்சயம் பைத்தியக்காரனாக ஆக்கி அறிந்தும் எதை என்றும்!!!

(செயற்கையாக கிருமிகளை உருவாக்கி மனிதர்கள் மீது ஏவி விட்டு சோதனை செய்து பார்க்க நினைத்த மனிதனை அடித்து அவனை பைத்தியம் போல் ஆக்கிவிட்டார்)



புரிகின்றதா ஏன்? எதற்கு? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!

அறிந்தும் அறிந்தும் பின் நிச்சயம் பின் என் தந்தையார் கருணை மிகுந்தவர்!!!

அனைத்தும் கொடுக்க வல்லவர்.

எதை என்று ஏன்? நிச்சயம் தன்னில்  கூட.. பின் தந்தையானவர் அனைத்துமே கொடுக்கின்றார்.. நிச்சயம் தன்னில் கூட!!!

 அதாவது மனிதன் அனைத்தும் செய்துவிட்டு மீண்டும்.. தந்தையை வந்து தொழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்??

அறிந்தும் மீண்டும் அழிக்கின்றான்!!.

இதனால் நிச்சயம்... நிச்சயம் நிச்சயம் தாயே!! தாயே!! நிச்சயம் சில திருத்தலங்கள் இருக்கின்றது...

அங்கு செல்ல நிச்சயம்.. செல்லச் சொல் பார்ப்போம்!! நிச்சயம் தண்டனைகள் உண்டு!!

பின் அதாவது அதே திருத்தலத்தில் கூட பாவம் கரைந்து புண்ணியம் !!! அறிந்தும் கூட. 

(பாவம் செய்த மனிதர்கள் சில திருத்தலங்களுக்கு செல்ல முடியாது அவர்கள் செய்த பாவம் அங்கு செல்ல அனுமதிக்காது.... அவர்களுக்கு தண்டனை உண்டு! 

அத்தகைய திருத்தலங்களுக்கு சென்றால் பாவங்கள் தீரும் புண்ணியம் ஏற்படும்... ஆனாலும் ஆலயங்களுக்கு செல்வதற்கும் புண்ணியங்கள் வழி விட வேண்டும்)

பார்வதி தேவியார்'

நில்லும்!!! நில்லும்!! பின் நிச்சயம் அன்பான மணாளனே.... அறிந்தும் பாவம்!! பின் எப்படி? நிச்சயம் புண்ணியம்!!! எப்படி மனிதனுக்கு ஏற்படுகின்றது??

நிச்சயம் விளக்கமாக எடுத்துரையுங்கள்!!!

பின் மணாளனே!!! இதற்காகவது பதில் அளி!!
அனைத்தும் சொல்லவில்லை!!! இதோ புசுண்டன் இருக்கின்றானே..!!!!!!!
பின் அடிக்கடி உள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட... என் மனதை கூட மாற்றி விட்டான். 


காகபுஜண்டர் மகரிஷி: 

பின் தாயே!! தாயே!! நிச்சயம் அப்படி எல்லாம்.. கூறாதீர்கள்... பின் உங்களுக்கும் நிச்சயம் நீங்களும் கூட கருணை உள்ளவர்தான்.. பின் அதாவது தந்தை ஏதாவது கொடுத்தாலும் நீங்கள் தடுத்து பின் நிறுத்தி நிச்சயம்... இதோ !! இதோ!! நிறுத்து!! நிறுத்து!! என்கின்றீர்கள் அல்லவா !!!!

நிச்சயம் உங்களுக்கு இணை யார்??? என்று பின்!!


பார்வதி தேவியார்: 

எதை எடுத்தாலும் நிச்சயம் புசுண்டரே.. ஏதாவது ஒன்றை சொல்லி விடுகின்றாய்... பின் நிச்சயம் அறிந்தும்... இவை என்று அறிய அறிய இன்னும் பின் அதாவது நிச்சயம் பின் அன்பானவரே!!! எடுத்துரை!!!

பின் பாவம் என்ன?? புண்ணியம் என்ன???


ஈசனார்:

நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... பாவம் புண்ணியம் ஏன் ? எதற்கு? என்பவை எல்லாம்... அதாவது இவையெல்லாம் பின் அகத்தியனே!!! ஏற்கனவே மீண்டும் எடுத்துரைத்து விட்டான். 

மீண்டும் நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன்.

இங்கு பாவம் புண்ணியம் என்பதையெல்லாம் நிச்சயம் பின் அதாவது இட்டு இட்டு... அதாவது ஒருவனுக்கு நிச்சயம் தன்னில் கூட... யான் எதுவுமே கொடுப்பதில்லை நிச்சயம் அதாவது பாவம் புண்ணியம்... பிரம்மா அழகாகவே இட்டு அனுப்புகின்றான். 

ஆனாலும் பிரம்மாவோ!!???

இரு!!

யான் அனுப்புகின்றேன்.. இவன் என்னென்ன செய்கின்றானோ??? அதற்கு தகுந்தாற்போல் ஏற்கனவே மிச்சம் இருக்கின்றதே (முற்பிறவிகளில் செய்த பாவங்கள் புண்ணியங்கள்) அதை அனுப்பிவிடு!!! என்று!!

 ஆனால் பின் யான் மனதில் எண்ணி எண்ணி !! நன்றாக அனுப்புவேன்!!!
 பாவம் புண்ணியம் எதுவுமே இல்லாமல்... !!

யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!!!

ஆனால் அவன் வளர வளர.. அவன் செய்கின்ற செயல்கள் என்னவென்று??? கூற... !?!?!

அதனால் பிரம்மாவும் வந்து அறிந்தும்... ஈசனாரே!!! பார்த்தாயா?? என்று!!!

நிச்சயம் பின் இங்கு யான்!?!?!?!?!?!....

அறிந்தும் அதனால்.. கருணை கொண்டவர்களே இங்கு தோல்வி அடைந்து விடுகின்றார்கள்... அறிந்தும் உண்மைதனை கூட!!
(அதாவது ஈசன் தன்னை தானே கருணை கொண்டு அனைத்தும் மனிதர்களுக்கு செய்தாலும் மனிதர்கள் அதை புரிந்து கொள்ளாமல் தவறான வழியில் நடப்பதை கண்டு அந்த இடத்தில் அவர் தாம் தோல்வியுற்றதாக எண்ணிக் கொள்கின்றார்)

இதனால் மீண்டும் பிரம்மாவே!!! மீண்டும் உள் புகுத்தி!!!!
அதனால் அறிந்தும் மாற்ற வல்லான்!!!

விதியையும் கூட பின் சென்று சென்று பிரம்மாவும் கூட அறிந்தும்... சுற்றிக்கொண்டே!! சுற்றிக்கொண்டே!! புவி தன்னில்.. அறிந்தும் பின் அதாவது சுற்றிக்கொண்டே!!!!!!

நிச்சயம் தன்னில் கூட பின் கண்களால் பார்த்தால் நேர்கோடு (விதி தலையெழுத்து) ஆகும் என்றெல்லாம்!!!!

நிச்சயம் அப்படி பின் குனிந்து  சென்றால்????
(விதியை.. எழுதி மனிதர்களை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பூமியில் வந்து பிரம்மா சுற்றிக்கொண்டு அனைவரையும் பார்க்கும் பொழுது புண்ணியங்களை செய்து கொண்டிருந்தால் பாவங்களை செய்யாமல் இருந்தால் தலையெழுத்தை மாற்றி நேர்கோடாக மாற்றி விதியே மாறும்.

ஆனால் மனிதர்கள் புண்ணியங்களை செய்யாமல் பாவங்களை செய்து கொண்டிருப்பதால் பிரம்மா நேரடியாக யாரையும் பார்க்காமல் தலை குனிந்து செல்வதால்... யாருக்கும் விதி மாறுவதில்லை இந்த உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை)

 அதனை அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரைக்க ஆள் இல்லையே!!!!!

ஆள் இல்லையே!! தேவியே!!!

கேளும் !கேளும் !இன்னும் இன்னும்!!

பார்வதி தேவியார்:

நிச்சயம் பின் இவ்வாறெல்லாம் அறிந்தும் நிச்சயம் இதை என்று புரியும் வண்ணம் கூட சரி!!!

அழகாக பின் மகிழ்ச்சி!! அறிந்தும் இன்னும் ஏன் எப்படி? மனிதனை காக்க போகின்றாயா??? இல்லையா???

நிச்சயம் கூறும் மணாளனே!!!

ஈசனார்: 

நிச்சயம் காத்துக் கொண்டே இருக்கின்றேன். 

ஆனால் அவனவன் செய்கின்ற செயலால்தான் நிச்சயம் பின் அவனே நிச்சயம் தோல்வியடைந்து என்னிடம் வருகின்றான் மீண்டும். 

அவந்தனுக்கும் ஏதாவது ஒன்றை செய்து செய்து அனுப்புகின்றேன். 

மீண்டும் அத்தவறுகளையே செய்து கொண்டு..!!!

 இறைவன் கண்டு கொள்ளப் போகின்றானா??
(செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் காணவா?? போகின்றான் என்று)

 என்றெல்லாம் நிச்சயம் வந்து வந்து!!!

ஆனாலும்.. இருப்பினும் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாகவே சென்று கொண்டிருந்தால் பின் அறிந்தும் உலகம் அறிந்தும் எதை என்று கூற!!!

இன்னும் இன்னும் அறிவியல் வழியாகவே பின் நம் மைந்தன் அகத்தியன்.. உரைக்கின்ற பொழுது தெரியும். 

இவ்வுலகத்தில் என்னென்ன ஏது? எங்கு பிளவுகள்??

இன்னும் சூரியன் சந்திரன் எங்கு?? அறிந்தும் பூமி பின் இரண்டாக பிளக்கும் போது யார் மீது? தவறு என்பதை எல்லாம் நிச்சயம் அகத்தியன் வரும் வரும் வாக்குகளில் பின் எடுத்துரைக்கும் பொழுது பின் புரியும் தேவியே!!!

அதற்காக நிச்சயம் தன்னில் அவனவன் செய்த பின் அதாவது பாவமும் பின் புண்ணியமும்!!

ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது தாய் தந்தையை மதியுங்கள். என்று. பின் விளக்கமாகவே பின் ஞானிகள்!!

யான் படைத்த ஞானிகள் பின் கூறிவிட்டார்கள்..

ஆனால் நிச்சயம் இல்லையே மதிக்கவில்லையே!! கேட்கவில்லையே..!! மதிக்கப் போவதில்லையே..!!!

இன்னும் எதை என்று ஒழுக்கமாக வாழுங்கள்!! என்று அழகாக யான் படைத்த ஞானிகள்...

ஆனாலும்  இல்லையே!!!

கோபம் கொள்ளாதீர்கள்!! பிறரை பற்றி குறை சொல்லாதீர்கள்...!! அன்பாக இருங்கள்!!. என்று!!!

ஆனால் இன்னும் இன்னும் பின் எத்தனை ஞானிகள் பின் வந்தால்  இவர்களை காக்க முடியும் ???!? என்று தெரியவில்லை!!!

ஆனால் இன்னும் யான் பெரியவன்.. அவன் சிறியவன்... இன்னும். மத கலவரங்கள்!!... இன்னும் இன்னும் என்னென்ன?! ஏமாற்று வேலைகள் என்னென்ன??

ஆனால் மனிதன் வாழ்கின்றானோ ??? என்னவோ???

ஆனாலும் சரியான ஏமாற்றுக்காரன்.. அதுவும் கூட!!!

அதாவது இறைவன் பின் அதாவது அழகாக யான் நிற்கின்றேன்..

ஆனால் இறைவன் பார்க்கவா? போகின்றான் என்று மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்ற பொழுது!!!....

பார்வதி தேவியார்: 

நில்லுங்கள் அறிந்தும் எதை என்று நிச்சயம் என் மணாளனே.. மணாளன் தானே  பின் அதாவது நீர் தானே படைத்தீர்!!

இப்படியா???

ஈசனார்: 

நிச்சயம் பின் நில்லும்!! நிச்சயம் யான் படைத்தேன்!! ஆனால் நிச்சயம் இப்பொழுது மனிதன் செய்கின்ற தவறுகளுக்காக யான் தலை குனிகின்றேன். 

நிச்சயம் இங்கு யான் தான் தலைகுனிய வேண்டும்!!

ஆனாலும் நிச்சயம் அதாவது தண்டனைகள் அதிகப்படுத்தினால் தான் நிச்சயம் மனிதன் திருந்துவான். 

வரும் காலங்களில் தண்டனைகள் அதிகமாக தான் யான் கொடுக்கப் போகின்றேன்... நிச்சயம் அப்பொழுது தான் நிச்சயம் மனிதன் திருந்துவான். 

கருணை உள்ளவனாக இருந்தால் இன்னும் இன்னும் அறிந்தும் எதை என்று அறிய. 

இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய!!

பார்வதி தேவியார்:

 நிச்சயம்... அதாவது இன்றைய காலகட்டத்தில் மணாளனே அறிந்தும் நோய்கள் அதிகமாக உள்ளது!!

அதற்கு ஏதாவது பதில் உரைக்கலாமே நீங்கள்!!!

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!! அறிந்தும் ஆனால் நோய்கள்.. எதற்கு வருகின்றது என்று பார்த்தால்!!

நிச்சயம் யான் அழகாக உடலை கொடுத்து அனுப்புகின்றேன்!!

ஆனாலும் என்னென்ன தவறுகள்?? செய்து செய்து அவ் உடம்பை பாழாக்குகின்றான். மனிதன். 

இதனால் தான் நிச்சயம் நோய்களே வருகின்றது!!

அதாவது பின் நிச்சயம் அறிந்தும் சரியாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை எல்லாம்... இன்னும் இதிகாசங்களில் ஞானிகளால் பின் தள்ளி!! (எழுதி அனுப்பி) தள்ளி.. நிச்சயம் பின் ஏற்படுத்தினேனே!!!

ஏன் இவை அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட...

என்னுடைய வாகனமானது 
(நந்தி யான காளை பசுமாடுகள்) அனைவரும் அறிந்தும் எதை என்று அறிய அறிய... கொல்கின்றார்களே!!!!.. இதற்கு பின் நிச்சயம் புற்று நோய்கள்... பின் அதிலிருந்து நிச்சயம் அதிகமாக பரவும் வரும் காலத்தில்!!

அதனால் பின் நிச்சயம் அதை யான் நிறுத்தி விடுவேன்!!! எப்படி ?ஏது? நிறுத்துவது என்பதை எல்லாம் யாம் அறிவோம்!!

ஆனாலும் மனிதன்.. அதை நிச்சயம்!!.... அதில் கூட நுண்ணுயிரிகள் இருக்கின்றது பின் அதாவது கழுத்தில்!!!

(பசுமாடுகளின் உடலில் நுண்ணுயிரிகள் இருக்கின்றது குறிப்பாக கழுத்து பகுதிகளில்)

அதை வெட்ட!!... அறிந்தும் கூட அது பரவி பரவி மனிதனை கொன்று கொண்டே இருக்கின்றது!! அதிகமாக !! அதிகமாக!!

நிச்சயம் பின் வாயில்லா ஜீவராசிகளை எப்பொழுது கொல்கின்றார்களோ!?! அதாவது என்னுடைய உயிர்களை எப்பொழுது கொல்கின்றார்களோ!?!?!

அப்பொழுதெல்லாம் மனிதனுக்கு நோய்கள் வந்து கொண்டே இருக்கும்... இதை இதிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது!!

எங்கு சென்றாலும் எத்திசையில் சென்றாலும் தப்பிக்க இயலாது!!

என்னிடத்தில் வந்தாலும் தப்பிக்க இயலாது!!

அதனால் பின் அழகாகவே பின் உனக்கு.. என்ன தேவையோ அதை யான் கொடுத்துக் கொண்டே மனிதனுக்கு..

அதாவது தேவியே!!!

நிச்சயம் மனிதனைப் பார்த்து சொல்கின்றேன்.. அழகாக உந்தனுக்கு அதாவது நீ என்ன கேட்கின்றாயோ? அதை யான் கொடுக்கின்றேன். அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் ஒரு குறையும் இல்லை.

தவறாக பயன்படுத்தினால் அதை உந்தனுக்கு கொடுத்தேனே!!!.... அதுவே அழகாக உந்தனுக்கு பதில் சொல்லும். 

அறிந்தும் உண்மைதனை கூட... இதை தெரிந்து கொண்டால் நன்று. 

நிச்சயம் தன்னில் கூட!!!

அன்பானவளே!!! அழகானவளே!!! புரிகின்றதா?!

பார்வதி தேவியார்: 

நிச்சயம் எதையெதையோ கேட்க வந்தேன்.... ஆனால் எதை எதையோ.. என் மூளையை கசக்கி மனதையும் கூட மாற்றி பின் கேள்விகளை கேட்க விடாமல் செய்து விட்டீர்கள். 

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!

நிச்சயம் அனைத்தும் அறிந்தவள் நீ... நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய

காகபுஜண்டர் மகரிஷி:

 நிச்சயம் பின் அழகாக இன்றைய நாளில் அறிந்தும்...

தேவாதி தேவனே!!! பரிசுத்தமானவனே!!!! வெற்றிகளை கொடுப்பவனே !! தாயே!! மகிழ்ச்சி!!

நீங்கள் இருவரும் பேசியதில் மகிழ்ச்சி!!!

ஆனாலும் யானும் இடையிடையே நுழைந்து குழப்பியும் விட்டேன். 

பார்வதி தேவியார்:

இல்லை இல்லை என் மைந்தன் நீ.. அதனால் நிச்சயம் நல்லதை தான் சொல்வாய் நீ!!! என்பதையெல்லாம் பின் அதாவது...நீ பல உலகங்களை பார்த்தவன்!!

இன்னும் உலகத்தைப் பற்றி மக்களுக்கு தெரிவி!!!

புசுண்டனாரே!!!! பல உலகங்கள் இன்னும் இருக்கின்றதல்லவா நிச்சயம் அதனைப் பற்றி தெரிவி!!! மனிதர்களுக்கு!!

அதாவது தெரிவித்தால் மூடநம்பிக்கைகளிலிருந்து நிச்சயம் வெளியே வந்து விட்டால் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள்.

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் தாயே!!! பின் வணங்குகின்றேன்!!! வரும் காலத்தில் மனிதனுக்கு செப்புகின்றேன் பல வழிகளிலும் கூட மூடநம்பிக்கைகளை ஒழிக்கின்றேன் நிச்சயம் பின் 

அதாவது... தலை வணங்குகின்றேன். 
தந்தையே!! தாயே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 28 February 2025

சித்தன் அருள் - 1808 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 3

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்
1. சித்தன் அருள் - 1796 - பகுதி 1
2. சித்தன் அருள் - 1805 - பகுதி 2 )

நம் குருநாதர் :- அப்பனே கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒவ்வொரு இடத்திலும் உங்களைப் பார்த்துள்ளேன் நலமாகவே. ஆனாலும் சில வெற்றி, தோல்விகள். கவலைகள் இல்லை. 

வெற்றி, தோல்வி அறிந்தும் கூட 

சூரியன் , சந்திரன்

இரவு பின் பகல்

இன்பம் , துன்பம்

மாறி மாறித்தான் வரும் என்பேன். நிச்சயம் ஒன்று சொன்னேன் பல வழிகளிலும் கூட. இதனால் துன்பமே வந்திருந்தாலும், இன்பமே வந்திருந்தாலும் நிச்சயம் இன்பமாகவே இறைவன் படைத்திருந்தாலும் நீங்கள் நிச்சயம் இன்பமாகவே வாழ்ந்திட்டு , இறைவன் என்ற பெயரையே மறந்து விடுவீர்கள். அதனால்தான் இறைவன் துன்பம் என்று வைத்திருக்கின்றான். அதனால் நிச்சயம் துன்பம் வந்தே சேரும். துன்பம் வந்தால்தான், இறைவனிடத்தில் ஐயோ!!! ஓடோடி  இறைவா!!! இறைவா!!!! என்னை காப்பாற்று காப்பாற்று என்று ஓடோடி வருவீர்கள். இன்பமாகவே இருந்தால் , இறைவனா??? எங்கிருக்கின்றான்??. யான்தான் இறைவன் என்று மனிதன் சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான். 

அடியவர்கள் :- ( காற்றின் ஓசை கூட கேட்காத அளவு அமைதி ) 

குருநாதர் :- அப்பனே சொல். துன்பம் வருவது நல்லதா? பின் இன்பம் வருவது நல்லதா? 

அடியவர் 4 :- இரண்டும் கலந்து வந்தால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று தானே சொல்ல வருகின்றீர்கள் சாமி!! 

குருநாதர் :- அப்பனே எப்படி சுவையாக இருக்கும்?

அடியவர் 4 :- பக்குவம் ஆகி, அதுக்கு அப்புறம் நல்லது நடக்கும்போது, கெட்டியாக காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றீர்கள் சாமி.

குருநாதர் :- அப்பனே (இதை) அனைவருக்கும் சொல்லி எடுத்து உரை. 

அடியவர் 4 :- ( அப்படியே எடுத்து உரைத்தார் அங்கு உள்ள அடியவர்களுக்கு ) வாழ்க்கையில இன்பம் துன்பம் இரண்டும் இருக்கும். துன்பம் வந்தால்தான், பக்குவம் வரும். பக்குவம் வந்தால்தான் அதை கட்டி காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் சொல்லவருகின்றார். 

குருநாதர் :- அப்பனே புரியும் என்பது என்ன? புரியாது என்பது என்ன? 

அடியவர் 4:- நீங்க சொல்ரது புரியல சாமி. 

குருநாதர் :- அப்பனே அறியும் என்பது, அறியாது என்பது (என்ன)?

அடியவர் 4:- தாங்களே கூறிவிட்டால் சௌகரியமாக இருக்கும்…

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

குருநாதர் :- அப்பனே அனைத்தும் கூறுகின்றேன் அப்பனே. உணவைக்கூட உன் பக்கத்திலேயே வைக்கின்றேன். நீ உண்ணாதே. யான் ஊட்டி விடுகின்றேன். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )

அடியவர் 4 :- அது உங்கள் கருணை சாமி.

குருநாதர் :- அப்பனே அறிந்தும்கூட இவ்வளவு கருணை படைத்தவன் உங்களுக்கு நல்லது செய்ய மாட்டானா என்ன? கூறுங்கள் நீங்களே அப்பனே. 

அடியவர் 4:- கண்டிப்பாக சாமி ( எங்களுக்கு நல்லது செய்வீர்கள் )

குருநாதர் :- அப்பொழுது என்னைக் கேட்க வேண்டுமா அப்பனே? உங்கள் மனதில் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் யான் அறியாததா? பின் எடுத்து வந்துவிட்டேன் அப்பனே. இதுபோலத்தான் அகத்தியன் அப்பனே. எப்படி, யாரை, எப்படி கொண்டு வர வேண்டும்? எங்கு வைக்க வேண்டும்? எப்படி உரைக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரியும் அப்பா. அப்பனே உன் வாயாலே வந்து விட்டது. கருணை படைத்தவன்தான் ( இவ் அகத்தியன் ). அனைத்து சித்தர்களும் மக்களுக்கு நன்மை செய்ய காத்துக்கொண்டுள்ளார்கள். ஆனால் மக்களோ , மாயையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பின் அழகாகச் செப்பினால் ஆனால் சொல்வதில்லையே? அப்பொழுது என்ன செய்யலாம் மகனே? 

அடியவர் 4:- சாமி நீங்கதான் அணுவுக்கு அணுவாக இருக்கின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- (குருநாதர் சொல்வது )நான் கருணை உள்ளவன் தான். ஆனால் குழந்தைகள் போல் சொல்கின்றேன். ஆனால் கேட்பதில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று கேட்கின்றார்.

அடியவர் 4:- சாமி எல்லோருக்கும் அசரீரியாக பேசினீங்க என்றால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். 

அடியவர்கள் :- ( சிரிப்பு )

அடியவர் 5 :- அடித்துச் சொல்லுங்கள் (குருநாதா). 

குருநாதர் :- ( யாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை.) அதனால்தான் என் பக்தர்கள் ஆயினும் அடித்து நொறுக்குகின்றேன் அப்பனே. கஷ்டத்தை அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றேன். 
(நல் வழிப்படுத்துகின்றேன்)
பின் சரியா, தவறா? 

அடியவர் 4 :- நீங்கள் செய்தால் சரிதான் சாமி.

குருநாதர் :- அப்பனே அனைவரிடத்திலும் கூறு. அகத்தியன் எதைச் செய்தாலும் நன்மைக்கே என்று அனைவருக்கும் தெரிவி. 

அடியவர் :- அகத்தியர் (பெருமான்) எதைச் செய்தாலும் நல்லதற்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

குருநாதர் :- ஒத்துக் கொள்கின்றீர்களா என்று கேள்?

அடியவர் 4 :- ஒத்துக்கொள்கின்றீர்களா? 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) ஒத்துக்கொள்கின்றோம் ஐயா. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் ஒரு குழந்தை தன் தந்தையை, தன் தாயை நம்பிக்கொண்டிருக்கின்றது. தாய், தந்தையும் நன்மை செய்யாமல் விட்டுவிடுவார்களா என்ன? 

அடியவர் 4 :- விடமாட்டாங்க சாமி. 

குருநாதர் :- அதே போலத்தான் அப்பனே. எனை நம்பி வந்துவிட்டீர்கள் ஓடோடி அப்பனே. யான் உங்களைக் கை விடுவேனா என்ன? அப்பனே நிச்சயம் விதியில் உள்ளதையே மாற்றித் தருவேன் அப்பனே. ஆனால் அதற்கு நீங்கள் பக்குவங்களாக, பக்குவங்கள் பட வேண்டும் என்பதே இவ்வாறெல்லாம் வாக்குகள் கூறி , எடுத்துரைத்து , பக்குவங்கள் பெற பின் நன்மைகள். அதாவது தர்மத்தைக் காக்கவேண்டும். தர்மத்தைக் காக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நிச்சயம் என் பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள். அதனால் தர்மத்தைக் காக்கப்பட வேண்டும். தர்மத்தை நிச்சயம் கடைப்பிடித்தால் நிச்சயம் யான் வந்து உந்தனுக்கு அதாவது கதையோடு கட்டிப்பிடித்து பின் பிள்ளையே என்று அனைத்தும் செய்து விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

அடியவர் 4 :- தர்மத்தை ( நீங்கள் ) கடைப்பிடித்தீர்கள் என்றால் , (சாமி) அவரே வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்துக்கொள்கின்றேன் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே பல வினைகளையும் நீக்குவேன். அப்பனே இவ்வுடம்பு பாவத்தால் சூழப்பட்டுள்ளது அப்பா. புண்ணியம் குறைவே. 

இதனால் பின் பாவத்தால் சூழப்பட்டதற்கு நிச்சயம் பல வருத்தங்கள், பல தொந்தரவுகள் வந்தே தீரும். ஆனாலும் கவலை விடுங்கள். இவ் அகத்தியனை நம்பி வந்து விட்டீர்கள். நல்லதே செய்வேன் உண்மைதனைக் கூட. பல வகையிலும் கூட சிறு வயதிலிருந்தே பக்திகள் கடைப்பிடிக்க வேண்டும். பின் ஒழுக்கமாக வாழ வேண்டும். நல் முறையாகவே நல் எண்ணங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அனைவருமே (நம்) சொந்தங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இருந்தால்தான் பின் சித்தனிடையே அறிந்தும் உண்மைதனைக்கூட. 

இதனால் போட்டி பொறாமைகள் , இன்னும் யான் பெரியவன் , நீ பெரியவன் என்றெல்லாம் போய்க்கொண்டிருந்தால் இறைவன் கூட,  நீதானப்பா பெரியவன். போய் சென்று கொண்டே இரு. எங்கே அப்பனே அடிபட்டு,  பின் மீண்டும் வருவானப்பா. இறைவன் எப்படியப்பா நல்லது செய்வான்? நீங்களே கூறுங்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் ) 

குருநாதர் :- அப்பனே அனைவருக்குமே ஒவ்வொரு குறைதானப்பா. குறையில்லாமல் மனிதன் யார் என்று கேள். உண்மைதனை இன்னும் விளக்குகின்றேன். 

அடியவர் 4 :- குறையில்லாதவர்கள் யார் ( என்று சொல்லுங்கள் அடியவர்களே). 

அடியவர்கள் :- ( ஒரு மித்த குரலில் ) எல்லோருக்கும் குறை உள்ளது ஐயா. 

குருநாதர் :- அப்பனே குறை இல்லாமல் யார் இருக்கின்றான் இவ்வுலகத்தில்?

அடியவர் 4 , அடியவர்கள் :- ( அப்படிக் குறை இல்லாமல் ) யாரும் இல்லே சாமி. 

குருநாதர் :- அப்பனே தெரிகின்றதா? அப்பொழுது குறை நீக்குபவன் யார்?

அடியவர் 4 :- தாங்கள் தான் சாமி. 
அடியவர்கள் :- இறைவன்

குருநாதர் :- அப்பனே இறைவன்தானப்பா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 27 February 2025

சித்தன் அருள் -1807 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - ஈசன் பார்வதி காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு!




26/2/2025  சிவராத்திரி அன்று ஈசன் பார்வதி தேவியார் காகபுஜண்டர் மகரிஷி உரையாடிய வாக்கு. 

உரையாடிய ஸ்தலம். காக்கும் சிவன் காசி கங்கைக்கரை மீர் காட்.

பார்வதி தேவியார்:

அழகாக ஆடுகின்ற ஆட்டம் தனில் நோய்கள்!!... நோய்களை தீர்க்கும் எம் இறைவா!!! போற்றிப் பணிந்தே!! பணிந்து!! தேவியே!!! தேவியே செப்ப!!!.... நிச்சயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்க நிச்சயம் மாற்றங்கள். 

எம் ஈசா!!!!! அழகாக  என் மனதில் குடி கொண்டுள்ளவனே !! பின் உன்னுள் பாதி !! பின் எந்தனுக்கும் அதாவது பின் உயிரை போன்று நிச்சயம் அனைத்தும் கொடுத்தவனே!!!!

 பின் நிச்சயம் எடுத்துரைக்க நன்று!!!

 ஒரு கேள்வியை இப்பொழுது பின் உம்மிடத்தில் உம்மிடத்தில் வைக்க போகின்றேன்!!! தேவனே !!!!தேவாதி தேவனே!!

 நிச்சயம் மனிதனை பிறக்க வைக்கின்றாய்!! 
ஆனால் ஏன் கஷ்டத்தில் கஷ்டத்தில் திரிய வைக்கின்றாய்!!????

 நிச்சயம் நிச்சயம் தேவாதி தேவனே!!! எடுத்துரைத்து எடுத்துரைக்க வேண்டும்!!

ஈசனார் :

 தேவியே!!!  நிச்சயம் அதாவது அறிந்தும் மனிதனை பிறக்க வைக்கின்றேன் அனைத்து நலன்களை கொடுத்துத்தான் பிறக்க வைக்கின்றேன். ஆனால்!? .......

அதில் அவன் தன் சரியாக பயன்படுத்தாததினால் தான் நிச்சயம் வாழ்க்கை தோல்வியில் முடிந்து விடுகின்றது!!



பார்வதி தேவியார்:

மணாளனே !!அன்பான மனாளானே!! நிச்சயம் இதை யான்  ஒத்துக்கொள்ள போவதில்லை!!

 நிச்சயம் அவ்வாறு படைத்தால்!!! ஏன்? இப்படி எல்லாம் நோய்கள் வரவேண்டும் ?? நிச்சயம் ஏன் கஷ்டங்கள் வரவேண்டும்??
 நீதானே படைத்தாயே!!!

 நிச்சயம் இன்றைய நாளில் நிச்சயம் நீ தெரிவிக்க வேண்டும்!!!



ஈசனார்:

தேவியே !!அனைத்தும் அறிந்தவள் நீ!!!

 ஆனாலும் என்னை கேள்விகளாக கேட்கின்றாயே எப்படி???

பார்வதி தேவியார்:


 நிச்சயம் தேவாதி தேவனே !! நிச்சயம் உண்மை அனைத்தும் நிச்சயம் பின் நீ செப்புவது உண்மைதான்!!!

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட படைத்தவர் நீர் !!அல்லவா!!! நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எடுத்துரைக்க!! அதாவது நிச்சயம் தன்னில் என் கேள்விக்கு நிச்சயம் பின் பதில் கூற!!! வேண்டும்!!



ஈசனார்:

 தேவியே !! என்னவென்று கூற !!??....அறிந்தும் இப்பொழுது எடுத்துரைக்கின்றேன்!!

 அழகாக நிச்சயம் தன்னில் பின் அனைவருமே என் குழந்தைகள் என்று தெரியும்!!!



பார்வதி தேவியார்:

 தேவாதி தேவனே !! நில்லும் !!
பின் பாடத்தை எல்லாம் நிச்சயம் தன்னில் பின் சொல்ல வேண்டாம்!!

 முதலில் யான் 
கேள்வியை கேட்டேன் அல்லவா!! அதற்கு பதில் கூற வேண்டும்!!

ஈசனார்:


தேவியே!! சொல்கின்றேன் அழகாக படைத்தேன் படைத்தேன் !! ஆனால் சிறு வயதில் என்னென்ன?? தேவைகள் குழந்தைக்கு என்று பின் ஆசைப்படுகின்றதோ?? அவை எல்லாம் யான் கொடுக்கின்றேன்!!
 மீண்டும் அதாவது கல்வி வேண்டும்  என்கிறான்!!! ஆனால் கொடுக்கின்றேன் திருமணம் என்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் நிச்சயம் தொழில் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அதையும் கொடுக்கின்றேன் பின் நிச்சயம் நோய் நொடி இல்லாமல் பின் வாழ வேண்டும் என்று கேட்கின்றேன் கேட்கின்றார் கேட்டுக் கொண்டே!!!! அவ் ஆன்மா பிறப்பெடுக்கின்றது.

 ஆனாலும் அனைத்தும் சரி!! என்று ஒத்துக் கொண்டுதான் அனுப்புகின்றேன்!!

பார்வதி தேவியார்:


தேவாதி தேவனே!! நிச்சயம் இதையெல்லாம் பின் அப்படியே ஏன்??? பின் திருமணத்தில் தோல்வி அடைகின்றார்கள்!! பின் தொழிலில் பின் அதாவது நஷ்டத்தை சந்திக்கின்றார்கள் !!நிச்சயம் அறிந்தும் இன்னும் பல பல என்று !!


ஈசனார்:


நிச்சயம் தேவியே !!கேளும். 

நிச்சயம் கல்வியில் அதாவது கல்வி கொடுக்கின்றேன் ஆனால் சரியாக பயன்படுத்துவதே இல்லை !! அதனால் தோல்வியுற்று விடுகின்றான்!!! 

இது என் தவறா??? இது!!!


நிச்சயம் பின் தொழிலும் கொடுக்கின்றேன் ஆனால் 
அங்கும் தோல்வி அடைகின்றான் ஏன்?? எதற்காக??? தேவையில்லாததை எல்லாம் நிச்சயம் செய்கின்றான் !! 

இது யார் மீது தவறு????

 மீண்டும் திருமணம் பாக்கியத்தையும் கொடுக்கின்றேன் பின் ஆனாலும் பின் என்னென்ன?? தவறுகள் செய்கின்றார்கள் என்பதையெல்லாம்!!!......

 ஆனாலும் அதில் கூட அவனே தான் தோல்வி அடைந்து விடுகின்றான் அறிந்தும் மீண்டும் பிள்ளைகளை கேட்கின்றார்கள் அதனையும் கொடுக்கின்றேன் பின் அதில் கூட நிச்சயம் தன்னில் கூட இவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அப் பிள்ளைகளும் கூட ஒழுங்காக வளரும்?!?!?!!! தேவியே புரிந்து கொண்டாயா !!!

பார்வதி தேவியார்:

நிச்சயம் தேவாதி தேவனே!! இவையெல்லாம் கதைகளாக சொல்லலாமே தவிர யான் ஒத்துக் கொள்ளப் போவதில்லை!!! ஏன் எதற்கு?? நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட... அறிந்தும் எவை என்று புரிய இவையெல்லாம் பின் அதாவது யான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்!!!

நிச்சயம் என் கேள்விக்கு பதில் தாரீர்!!!


காகபுஜண்டர் மகரிஷி::

நிச்சயம் அறிந்தும் அன்னையே!!! புசுண்ட முனி செப்புகின்றேன்!! அறிந்தும் அன்னையே!! பின் தேவாதி தேவன் அல்லவா!!! கருணை மிகுந்தவன் அல்லவா!!!
அனைத்திற்கும் அதாவது அனைத்தும் சமமாக பார்க்கின்றவன் அல்லவா!!
 பின் இப்படி??? பின் அவரை போய்?? கேள்விகள் கேட்கலாமா???

பார்வதி தேவியார்::

புசுண்டனே நீர் நில்லும்!! நிச்சயம் பின் இடை இடையே வந்து.. பின் அனைத்தும் கெடுத்திடுவீர் நீர்.. நிச்சயம்... அதனால் நில்லும். 

காகபுஜண்டர் மகரிஷி.


தேவியே !! அதாவது சந்தோஷம் என் தாய் இவ்வாறு சொல்கின்றார் அல்லவா எனக்கு மிக்க மிக்க சந்தோஷமே!!!

 இருந்தாலும் உள் நுழைகின்றேன்!!

 நிச்சயம் பின் ஈசனார் அனைத்தும் எந்தனுக்கு கொடுத்தார் அல்லவா அதனால்!!!


பார்வதி தேவியார்:

 பின் புசுண்டனே !! பின் எப்படி இப்படி சொல்லலாம்??? ஈசன் மட்டும் தான் கொடுத்தாரா???

 அதாவது பின் இப்பொழுது.. நிச்சயம் யான் கொடுக்கவில்லையா?????

காகபுஜண்டர் மகரிஷி. 

பின் அன்னையே!! நிச்சயம் அன்னையில்லாமல் தந்தையா??? 

பார்வதி தேவியார்: 
ஆஹா!!!! புசுண்ட முனியே!! அழகாகவே நிச்சயம் பின் மறைக்கின்றாய் அல்லவா!!

காகபுஜண்டர் மகரிஷி. 


நிச்சயம் இல்லை தாயே!!! உண்மையில் உன் மீதும் அளவு கடந்த பாசங்களே!! ஆனாலும் அவ் பாசத்திற்காக என்னை ஏதாவது பின் நிச்சயம் திட்டி தீருங்கள்!! நிச்சயம் அறிந்தும்!!


பார்வதி தேவியார்:


 பின் பாசத்திற்குரியவனே!!! பாசம் உள்ளவனே புசுண்ட முனியே!!! எம் அருள் நிச்சயம்... கடை நாளும் உண்டு என்பதை எல்லாம் நீ அறிந்திருக்கின்றாய் அல்லவா!!!

காகபுஜண்டர் மகரிஷி: 

நிச்சயம் பின் அதாவது பின் அறிந்தும் கூட அதாவது தாயவள் திட்டி தீர்த்தாலும் பின் நிச்சயம்.. பின் தந்தைக்காக யான் இங்கு வருகின்றேன்.


அதனால் நிச்சயம் தந்தையின் கருணையை பற்றி சொல்லப் போகின்றேன். 
நிச்சயம் அவ்வாறு அறிந்தும் எதை என்று புரிந்தும் நிச்சயம் இக்காசி தன்னிலே நடந்தது. 

தேவியே நீரும் (நீங்களும்) அறிந்திருப்பீர்கள்!!!

ஆனாலும் இக் கேள்விக்கெல்லாம் நிச்சயம் பின் அதாவது தந்தை பதில் நிச்சயம் அமைதி காக்கட்டும். 

புசுண்டன் யான் செப்புகின்றேன்!!!


பார்வதி தேவியார்:


சரி புசுண்டரே!!! பின் செப்பி!!! பின் அறியும்!!!.. யான் அமைதியாக நிற்கின்றேன்!! அறிந்தும்! 

காகபுஜண்டர் மகரிஷி:


அதாவது தேவியே !! நீயே!!  ஆட்சி செய்கின்றாய் காசி தன்னில்!!

நிச்சயம் இங்கு சில வருடங்களுக்கு முன்பே அறிந்தும்  ராமன் லட்சுமணன் என்று இரண்டு பேர்!!! இவர்களைப் பற்றி சொல்கின்றேன்.

இவர்களது பெற்றோர்கள் குழந்தைகள் இல்லை!! அதாவது இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
அதாவது தந்தையை... நினைத்து நினைத்து தந்தை (ஈசனார்) மீது!! பேரன்பு  கொண்டவர்கள் இவர்களது தாய் தந்தையர்!

இதனால் எங்கு சென்றாலும் எதனை சென்றாலும்... எப்பரிகாரம் செய்தாலும் பலிக்கவில்லையே என்று நிச்சயம் இறந்து விடலாமே !! நாம் இறந்து விடலாம் என்று எண்ணி இக் கங்கை தன்னில் பின் குதிக்க!!!... நிச்சயம் ஈசன் அதாவது தர்மம் ஏந்துபவனைப் போல் வந்து ஏன் இதற்கு இப்படி ஏன் பின்... மாண்டு கொள்ள நினைக்கின்றீர்கள் நீங்கள் என்றெல்லாம்!!!

அவர்களும் ஆனாலும் இல்லை பின் நாங்கள் எங்கேயோ எல்லாம் சென்றோம்... ஈசனை வணங்கினோம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று!!!

தர்மம் வேந்துபவன் போல் வேடத்தில் வந்த ஈசனும் 

நிச்சயம் குழந்தை பிறக்கும் நீங்கள் போங்கள் என்று!!!

பின் நிச்சயம் அறிந்தும்... ஈசன் கருணை மிக்கவன் என்று... அதாவது ஈசன் அதாவது... தந்தை வாயாலே!!

சரி என்று அவர்களும் சென்று விட்டார்கள் . நிச்சயம் பின்.. பிறந்து பின் அறிந்தும் அதாவது குழந்தை பின் அறிந்தும் உண்மைதனை எதை என்று கூட.. அதாவது இரண்டு குழந்தை அதாவது ராமன் லட்சுமணன் போல் என்று இருப்பார்கள் என்று!!

 பின் அதாவது தந்தையே !! (ஈசனே வரம்) ஏதாவது நிச்சயம் அதே போல் பின் உடனடியாக கர்ப்பமுற்று நிச்சயம் தன்னில் பின் ஈர் (இரண்டு) குழந்தை!!

அதற்கு அதாவது நிச்சயம் சொன்னவாறே.. அதாவது கணவன் பின் அதாவது இல்லத்தவளும் பின் பேசிக்கொண்டு நிச்சயம் பின் அதாவது கங்கை தன்னிலே உயிரை மாய்க்க சென்றோமே!!!...

அங்கு ஒருவர்  நிச்சயம் சொன்னாரே!!... நிச்சயம்.. ராமர் போல் லட்சுமணன் போல்  என்று நிச்சயம்... அவர்கள் பெயரையே வைப்போம் என்று நிச்சயம் ராமன் லட்சுமணன் என்று இரு குழந்தைகளுக்கும் பெயர் வைத்து விட்டார்கள். நிச்சயம். 

ஆனாலும் அறிந்தும் பின் சிறுவயதிலிருந்தே சிவபக்தியை கற்றுக் கொடுக்க!! கற்றுக்கொடுக்க!!
தாய் தந்தையர்!!

நிச்சயம் பின் அனுதினமும் பின் அதாவது அனுதினமும் இங்கிருக்கும்  நிச்சயம் பின் அறிந்தும் அவர்களே... நிச்சயம் தன்னில் கூட பின் உணர்ந்தும் கூட... லிங்கத்தை வைத்து அனுதினமும் வேண்டிக் கொண்டு வேண்டிக்கொண்டு...

அவ் லிங்கமும் அறிந்தும் பின் யான் சொல்வேன் அதாவது..... அகத்தியர் சொல்வார்.. அறிந்தும்!!!

(அவர்கள் வணங்கிய சிவ லிங்கத்தைப் பற்றி குருநாதர் அகத்திய பெருமான் வந்து விளக்கமாக வாக்கில் கூறுவார் காசியில் எங்கு இருக்கின்றது  என்று)

அறிந்து விட்டேன் அறிந்தும் பிறர் அறியா வண்ணம் நிச்சயம் இதனால் அனுதினமும் அதாவது நிச்சயம் பின் இருவரும் வயதுக்கு வந்தனர். நிச்சயம் அதாவது இருவரும் கூட !!

ஒருவர் அதில் அதாவது லட்சுமணன் என்பவன் அதாவது நிச்சயம் அனைவரும் நன்றாக படிக்கின்றார்கள்!! எனக்கு பின் முதல் தரத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்று !!

நிச்சயம் அறிந்தும் கூட அவ் ஆசையை நிச்சயம் அறிந்தும் பின் நிறைவேற்றினார். 

ஆனால் மற்றொருவனும் கூட ஏதும் நினைக்கவில்லை!!!... நமச்சிவாயா நமச்சிவாயா என்று இருந்து கொண்டே!! எதையும் கேட்காமல்!!

பின் இப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அதில் ஒருவன். நிச்சயம் அறிந்தும் எதை என்றும் எடுத்துரைக்க பின் அதாவது பின் அதாவது மறைமுகமாகவே ஈசன் பின் அதாவது எந்தனுக்கு... ஒரு காதலி வேண்டும்!! பின் 
அனைவருமே!!!

 (அனைவரும் காதலிக்கின்றார்கள் திருமணம் செய்து கொண்டிருகிறார்கள் அதேபோல் எனக்கும்) பின் நிச்சயம் என்று!!

அதாவது பின் அதையும் கொடுத்தான் என் தந்தை ஈசன். 

ஆனாலும் மற்றொருவனோ எதையும் வேண்டிக் கொள்ளவில்லை!!! அறிந்தும் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று எப்பொழுதும்!!!

நிச்சயம் அதையும் அவனுக்கு கொடுத்திட்டான்!!! ஆனாலும் நிச்சயம் மீண்டும் வேண்டிக் கொண்டான் ஒருவன்!! ஈசனிடத்தில். அதாவது என் தந்தையிடத்தில்!!

அறிந்தும்  அதாவது மீண்டும் அறிந்தும் அதாவது மணமுடிக்க வேண்டும் இவள் தனையே என்று மணம் முடிக்க வேண்டும் என்று!!!

நிச்சயம் அதாவது தந்தை ஈசனே மணமும் அவனுக்கு முடித்து விட்டான்!!!(திருமணம் செய்துவிட்டார்) 
அறிந்தும் !!

எதை என்று பின் இன்னும் யான் சொல்ல!!!!......!?

தாயே!!!.... அறிந்தும் மீண்டும் நிச்சயம் அழகாக குழந்தைகள் வேண்டும் என்று!!!

பின் அதாவது என் தந்தையே மீண்டும் அழகாக குழந்தைகளை கொடுத்தார். 

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!! மணத்தையும் கொடுத்தார் ஆனாலும் பின் மீண்டும் அதாவது கல்விகளில் அதாவது இன்னும் ஒரு பெரிய தொழிலை கொடு என்று கேட்டான்!!!

நிச்சயம் அதையும் என் தந்தை கொடுத்தார்!!! ஆனாலும் அனைத்தும் கிட்டியது !! ஆனால் மற்றவனுக்கு ஏதும் கிட்டவில்லை!! அதாவது இவ் விஷயங்கள் 40 வயதுக்குள்ளே  அனைத்தும் கிட்டிற்று ஒருவனுக்கு!!!

  மற்றொருவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை!!

 ஆனால் ஒருவன் சொன்னான் பின் அதாவது நிச்சயம் பின் அதாவது பின் நம் இருவரும் கூட நிச்சயம் இறைவனை வணங்கினோமே!!!!!! அதாவது எந்தனுக்கு மட்டும் எவ்வளவு கொடுத்திருக்கின்றான்!!!!! உந்தனக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை?? என்று நிச்சயம்!!

 ஆனாலும் மற்றொருவன் 
நமசிவாய!! நமசிவாய!! என்று!!
 சரி நீயாவது நன்றாக இரு !!என்று!! பின் அறிந்தும் உண்மைதனை கூட என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 

ஆனாலும் நிச்சயம் அதாவது பின்
ஏசினார்கள் !!அனைவருமே இவனை ஏசினார்கள்!!
 நிச்சயம் பின் அதாவது அண்ணன் தம்பிகள் பின் அதாவது இருவருமே சேர்ந்து பூஜைக்கு செல்வார்கள்!! நிச்சயம் அனைத்தும் செய்வார்கள் ஒருவனுக்கு மட்டும் அனைத்தும் கிட்டியது!! இன்னொருவனுக்கு இல்லையே!! ஏதும் இல்லையே !! என்று நிச்சயம் அறிந்தும் கூட  அனைவரும் தவறாக நினைத்தார்கள்!! நிச்சயம் அதாவது இவந்தனுக்கு ஈசன் ஏன் கொடுக்கவில்லை? என்றால் இவன் தவறானவன் !!
அதனால் தான் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று!!

இதனால் தாய் தந்தையர்  கூட மனம் வருத்தமுற்றனர்!! 

மனம் வருத்தமுற்று அறிந்தும் நிச்சயம் என் பிள்ளை அதாவது பின் அனைவருமே சொன்னார்கள் ஊரார்கள் அனைவருமே!!!
 நிச்சயம் இவனுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே இதற்குக் காரணம் நிச்சயம் இவன் திருடன் திருடன் என்று!!

 ஆனாலும் தாய் தந்தையோ நிச்சயம் இல்லை !!அறிந்தும் அதாவது நிச்சயம் என் மகன் அவ்வாறு தவறு செய்திருக்க மாட்டான் நிச்சயம் பின் படைத்தது இறைவன் என்று அதாவது அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட!!

ஆனாலும் ஒருவன் 
 யான் நிச்சயம் இறைவனை வணங்குகின்றேன் அவ்வாறு ஆனாலும் அமைதியுற்று!! மீண்டும் நிச்சயம்  தன்னில் கூட அவ் லிங்கத்திடம் வந்து லிங்கத்தின் அருகே வந்து நமச்சிவாயா !நமச்சிவாயா!!
யான் என்ன? உன்னை கேட்டு விட்டேன்???

பின் அறிந்தும் யான் அறிந்தும் உன்னிடம் ஒன்றுமே கேட்கவில்லையே!!!
 நமச்சிவாய நமச்சிவாயா நமச்சிவாயா என்று நீதானே !!! பின் அறிந்தும் அனைத்தும் நீதானே!!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் !!! எதை என்று புரிய !!!

மீண்டும் அறிந்தும் இதன் உண்மையை விளக்க !!!

பின் அனைத்தும் (லட்சுமணன் எனும் பெயர் கொண்டவனுக்கு) கிட்டியவனுக்கு கல்வியும் பின் அழிந்தது!! அறிந்தும் எதை என்று புரிய ஆனால் கல்வியை வைத்துக்கொண்டு தவறான பின் வேலைகள் எல்லாம் பின் செய்தான் இதனால் பின் அவ் (கல்வி) அறிவு மங்கியது !! 

 அதாவது அறிந்தும் எதை என்று அறிய அதாவது ஒரு பெண்ணையும் கூட காதல் திருமணம் செய்தான் அல்லவா நிச்சயம் இப்பணங்கள் பின் வந்தபின் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. 

நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய!!!

இதனால் இல்லறத்தில் சிக்கல்கள்!! பின் மீண்டும் அதாவது..அப் பெண் சொன்னாள்!! அதாவது இல்லறத்தவள்!! சொன்னாள்!!... நிச்சயம் இவந்தன் கேடு கெட்டவன்.. அதாவது நிச்சயம் ஈசனையே ஏமாற்றுகின்றான்!!!

அதாவது பக்தி பக்தி என்று சொல்லி.. என்னை ஏமாற்றி நிச்சயம் பின் திருமணம் செய்து கொண்டு நிச்சயம் இப்பொழுது வேறொரு பெண்ணுடன் சுற்றுகின்றான். 

அதனால் நிச்சயம் வந்துவிடு!! என்று இதனால் அவராலும் தொந்தரவுகள் பின் பிள்ளைகளாலும்.. தொந்தரவுகள் பின் இழுத்துச் செல்ல இதனால் மனக்குழப்பங்கள். 

அறிந்தும் இதன் உண்மையைக் கூட அறிந்தும் மீண்டும் தொழிலில் நஷ்டங்கள் ஏனென்றால் நிச்சயம் ஏதோ பின் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இன்னும் வளர வேண்டும் என்று... சில சில வழிகளிலும் கூட பின் சிந்தித்து தவறான வழிகளில் எல்லாம் சிந்தித்து இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஓடோடி வந்து பின் அவ் இல்லறத்தவள் அவன் பெற்றோரிடம் நிச்சயம் அறிந்தும் கூட பின்... பெற்றெடுத்தீர்களா??? பிள்ளைகளை... நிச்சயம்  பின் இப்படித்தான் இவன் செய்வானா???? என்று காறித் துப்பி !!! அறிந்தும். 

இதனால்  அவர்களுக்கும் மனக்குழப்பங்கள்!!!

நிச்சயம் தேவியே!!! புரிந்து கொண்டாயா!!! அறிந்து கொண்டாயா!!!.. அறிந்தும் எதை என்று புரிந்தும். நிச்சயம் தன்னில் கூட தன் தாய் தந்தையே அறிந்தும் இங்கு உன்னைத்தான் அறிந்தும்... இவ்வளவு கருணை படைத்தவர் எம் தந்தை!!!

அதாவது அனைத்தும் கொடுத்தார்!!! பின் ஆசைப்படுவதெல்லாம் கொடுத்திருக்கின்றார். 

ஆனால் இதில் யார் தவறு????? அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட எதை என்று விளக்கங்கள்!!!

ஆனாலும் இதற்கு கூட சில மனிதர்கள் நிச்சயம் அனைத்தும் இறைவன் தானே என்று!!!

ஆனாலும் இதற்கும் கூட
அகத்தியன் வந்து இன்னும் சில புத்திகளை புகுத்தும் பொழுது... நிச்சயம் அறிந்தும் சில மூடநம்பிக்கைகள்  ஒழியும்!!!

அப்பொழுது புரியும் உண்மை நிலை!!!

இதனால் நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் எதை என்று புரிய!! அதனால் அனைத்திற்கும் தொல்லை!! கடைசியில் தாய் தந்தையரும் கூட பின் மாண்டு விட்டார்கள்! 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எதையும் கேட்காமல் பின் ஈசனே கதி என்று இருந்தவனுக்கு( இராமன் எனும் பெயர் கொண்டவனுக்கு) நிச்சயம் தன்னில் கூட கடைசியில் ஒன்றை கேட்டான்!!! நிச்சயம் பின் என் தாய் தந்தையர் நிச்சயம்  பின் இங்கு அறிந்தும் யான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்!!

எந்தனக்காக ஒன்று செய்யும்!!! என் தாய் தந்தைக்கு உயிர் பிச்சையை கொடுங்கள் என்று நிச்சயம்!!

பின் மனம் இரங்கினார்!! தந்தை !! அதாவது ஈசன்!! பின் கொடுத்துவிட்டார்!!

ஆனால் அனைத்தையும் 40 வயதில் அள்ளி கொடுத்து விட்டார்!!!

ஆனால் அறிந்தும் இதைத்தான்... நிச்சயம் இப்பொழுதெல்லாம் மனிதர்கள் பின் வேண்டும் வேண்டும் என்று ஆசைகள் ஆசைகள் வளர்ந்து வளர்ந்து அதற்கு தகுந்தார் போல என் தந்தை கொடுக்கின்றார்!! ஆனாலும் சரியாகவே உபயோகிப்பதே இல்லை!! நிச்சயம் அறிந்தும் எதை என்று கூற!!

பார்வதி தேவியார்: 

 நிச்சயம் பின் பாசத்திற்குரியவனே புசுண்டனே!! பின் அழகாகவே நீர் சொன்னீர்!!! ஆனந்த கண்ணீர்!!! நிச்சயம் யானும் பின் அதாவது சில சோதனைகளுக்காகவே உன் தந்தையை பின் இவ்வாறெல்லாம் கேட்டேன். நிச்சயம் எந்தனுக்கும் தெரியும்.
பின் நிச்சயம் சரி!!! இன்னொரு கேள்வியையும் யான் கேட்கப் போகின்றேன் பின்!!!

ஈசனாரைப் பார்த்து பார்வதி தேவியார்!!!

பின் மணாளனே!!!! கருணை மிகுந்தவரே!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது இவ்வுலகத்தில் பணம் வேண்டும் பணம் வேண்டும் என்று நிச்சயம் தன்னில் கூட கேட்கின்றார்களே!!!
அறிந்தும் நிச்சயம் பின்  அறிந்தும்... அதாவது பின் கொடுத்தும்!!!!!...... பின் ஏமாறுகின்றார்களே??? ஏன் எதற்கு??? இதற்கு நிச்சயம் பதில் வேண்டும்!!!


ஈசனார்: 

அதாவது தேவியே இவ்வளவு நேரம் புசுண்டன் எடுத்துரைத்தான்!!! தேவியே சொல்கின்றேன்!!!

நிச்சயம் அதாவது வாழ்வதற்கு பணம் பின் வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான்.. அதை யான் கொடுக்கின்றேன் அழகாகவே!!!

ஆனாலும் இன்னும் பேராசைகள் ஆகின்றது.. அதாவது இவ்வளவு கொடுத்தால் பின் அதாவது அறிந்தும் இவ்வளவு வரும் என்று.

ஆனால் அவ் பேராசைகள் மூலம் அதாவது அவனே ஆசைகள் ஆசைகளில் கூட அதாவது பின் இதுவே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்று நினைத்து விட்டாலே இன்னும் பணங்கள் வரும். 

ஆனால் அங்கு இறைவனை மறந்து விட்டு பணத்தின் மீது ஆசைகளை கொண்டு நிச்சயம் இன்னும் பணம் வேண்டும் பணம் வேண்டும்.. எவ்வாறு சம்பாதிக்கலாம்? என்றெல்லாம் பின் நிச்சயம் செல்கின்ற பொழுது.. நிச்சயம் அறிந்தும் கூட அவ் பணத்தை மற்றொருவனிடம் கொடுக்கின்றான்..

 அவ்வளவுதான்..

 பணம் சென்றது!! சென்றது தான்!!



அறிந்தும் எதை என்று மீண்டும் வந்து நிச்சயம் என் முன்னே நிற்கின்றான்.. அதாவது எவ்வாறு என்பதையெல்லாம்.

இங்கு இதில் யார் தவறு?? சொல் தேவியே!!!!


பார்வதி தேவியார்: 


நிச்சயம் சரி!!! அவ்வாறு ஆசைகள் ஆசைகளை நீங்கள் தானே படைத்தீர்கள்!!!... நிச்சயம் இதற்கு பதில் வேண்டும்! 

ஈசனார்:

தேவியே யானா??????
ஆசைகளை படைத்தேன்?????

நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய.. அனைத்துமே!! அனைத்து ஜீவராசிகளையுமே ஒன்றாகத்தான் படைக்கின்றேன்.பின் என்னென்ன? எதை? எப்படி? வாழ வேண்டும்? எவ் வயதில் பின் மோட்சகதி அடைய வேண்டும்? 

நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் பின் அதாவது அறிந்தும் என் குழந்தைகள் தானே.. என்று அதனால் அறிந்தும் சமமாக தானே கொடுக்கின்றேன். 
 ஏன்!?.

காகபுஜண்டர் மகரிஷி: 


பின் அன்னையே!! அன்னையே!! அப்படியெல்லாம் தந்தையை கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் தன்னில் கூட... அனைவரையுமே நிச்சயம் அனைத்து ஜீவராசிகளையும் கூட நிச்சயம் இயக்குபவர் நிச்சயம் தந்தையே!!

ஆனாலும் ஒரு உயிரை கொல்கின்ற பொழுது அழுவதில்லை!!! மற்றொரு உயிரைக் கொல்கின்ற பொழுது.. சந்தோசம் அடைகின்றான் மனிதன். அதாவது இது எவ்வாறு நியாயம்?????

பின் அன்னையே தெரிந்து கொண்டீர்களா??? நிச்சயம் தன்னில் கூட ஒரு உயிரை கொன்று சந்தோசம் அடைகின்றான்... பின் ஆனால் அவன் இல்லத்தில் ஏதாவது நிச்சயம் அசம்பாவிதம் நடந்து விட்டால்.. அழுகின்றான்!! இது எவ்வாறு நியாயம்???

இதுதான் மனிதனுடைய நியாயமா???


பார்வதி தேவியார்: 

நிச்சயம் புசுண்டனாரே!!! நீர் சிறிது அமைதி காக்கும்!! 

நிச்சயம் மணாளனே.. அழகாக நிச்சயம் அறிந்தும் பின் அதாவது ஏன்? எதற்கு? 
அனைத்திற்கும் காரணம் நீர்தானே??

நிச்சயம் நீர் காப்பாற்றி விடலாமே!!!!

ஈசனார்: 

நிச்சயம் தேவியே!!! அறிந்தும் சொல்கின்றேன்!! அறிந்தும் அனைவரையும் இன்னும் இன்னும் பிறக்க வைத்துக் கொண்டே இருக்கின்றேன்... அவர்கள் பின் ஞானிகள் ஆகவும்... நிச்சயம் அவர்கள் மூலம் மனிதர்களுக்கு சில சில வகைகளிலும் கூட நிச்சயம் எடுத்துரைக்க... பின் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து.. பக்குவங்கள் கொடுத்து கொடுத்து.. உயர்ந்த நிலையை அடைய செய்கின்றேன்... அதன் மூலம் மக்களுக்கு தெளிவு பெற செய்கின்றார்கள் அவ் ஞானியர்கள். 

ஆனாலும் அதையும் கேட்பதில்லை!!! அதையும் கேட்காமல் இன்னும் பல பல சுவடிகளில் கூட நிச்சயம் தன்னில் கூட ஞானியர்கள் அழகாகவே எழுதி வைத்தார்கள்!!

இப்படிச் சென்றால் பின் நோய்களும் வராது!!! என்பவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!! பின் நிச்சயம் கஷ்டங்கள் வளராது!!! நிச்சயம் அனைத்தும் நடக்கும் என்று! 

ஆனால் அதைக் கூட புத்தி கெட்ட மனிதன் அறிந்தும் பின்.. அதை பின் நிச்சயம் கற்காமல் ஓடுகின்றான். 

பார்வதி தேவியார்: 

நிச்சயம் மணாளனே நில்லும்!!!!


சிவராத்திரியில் காசியில் ஈசனார் பார்வதி தேவியார் காகபுஜண்டர் உரையாடிய வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 22 February 2025

சித்தன் அருள் -1806 - அன்புடன் அகத்தியர் - சிவராத்திரி - குருநாதர் உத்தரவு

 






வணக்கம் அகத்தியர் அடியவர்களே !

வரும் 26/2/2025  அன்று மகா சிவராத்திரி தினத்தில் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்துள்ளார். அதன்படி அனைவரும் பின்பற்றுக. 

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

அறிந்தும் கூட அப்பனே பின் சிவராத்திரி அன்று அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பகல் வேளையில் அப்பனே நல்விதமாக அப்பனே பின் பசுக்களுக்கு அன்னத்தையும் பின் கொடுத்து அப்பனே!!!

(கோசலைகளில் அல்லது தென்படும் பசுக்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை புல் கட்டுகள் வெல்லம் வாழைப்பழம் போன்றவை சிவராத்திரி பகல் நேரத்தில் வழங்க வேண்டும்)

(சிவராத்திரி)  இரவுதனில் அப்பனே பின் அதாவது சிவன் அப்பனே பின் அதாவது சிவன் தனை கூட நினைத்து அப்பனே பின்... அழகாகவே அதாவது பின் நிச்சயம் ஈசன் புகழ் பாடுவோருக்கு எல்லாம். அப்பனே இரவு தன்னில் கூட... ஏதாவது பின் உட்கொள்ள அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல்.. மூலிகைகளான சிலவற்றை கூட அதாவது தேநீரை கூட அப்பனே நிச்சயம் அப்பனே கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே சில பாவங்கள்... நிச்சயம் கரையும் அப்பனே. 

(சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு கால பூசையை காண கூடியிருக்கும் பக்தர்களுக்கு மற்றும் சிவபுராணம் திருவாசகம் ஓதிக்கொண்டு படித்துக் கொண்டு ஓம் நமசிவாய என்று  நாமம் சொல்லி ஜெபம் செய்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் திருமுறைகள் முற்றோதுதல் செய்து கொண்டிருக்கும் சிவனடியார்களுக்கும்

துளசி, இஞ்சி.  எலுமிச்சை கருப்பட்டி  சுக்கு கொத்தமல்லி விதை மிளகு இட்ட சுக்கு காபி எனப்படும் தேநீரை வழங்க வேண்டும். 

மற்றும் சிலர் விரதம் இருப்பார்கள்.. அவர்களுக்கு பால் பழங்கள் வழங்க வேண்டும் மற்றவர்களுக்கு அன்னத்தையும் கூட வழங்கலாம்.)

அவைமட்டும் இல்லாமல் அப்பனே பின் முறைகளாகவே அப்பனே பின் ஈசனக்கு அப்பனே நிச்சயம் வில்வ இலைகளையும் கூட அப்பனே... பரிசாகவே அப்பனே... கொடுத்தால் அப்பனே நிச்சயம்... சில சாபங்களும் நீங்கும் அப்பனே....

(சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதற்கு வில்வ இலைகளை கொண்டு கொடுக்க வேண்டும்)

போகப் போக சில மாற்றங்களும் கூட மெதுவாகத்தான் ஆனாலும் உடனடியாக அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய அதன் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பேன் அப்பனே. 

எவன் ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலனை எதிர்பார்த்து செய்கின்றானோ...  பின் அதற்கு மதிப்பு.. குறைவு தான் என்பேன் அப்பனே 

 இதை என் பக்தர்கள் ஏற்றுச் செய்ய நன்று என்பேன் அப்பனே!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அன்றைய தினத்தில் அப்பனே அதாவது சிவராத்திரி அன்று நால்வோர் துதிகளையும் கூட அப்பனே 

(அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்.. தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல்)

பின் நிச்சயம் அப்பனே அதாவது என்னால் திருத்தலத்திற்கு செல்ல முடியவில்லையே.. என்று ஏங்குவோர்களும் கூட இல்லத்தில் தன்னால் இயன்ற தீபங்களை ஏற்றி அப்பனே பின் அத் தீபத்தின் வழியாக... ஈசனையும் பார்வதி தேவியையும் பின் பார்த்திட்டு.. அப்பனே பதிகங்களை ஓத ஓத.. அப்பனே சிறப்பு தரும் என்பேன் அப்பனே!!

(சிவராத்திரி அன்று ஆலயத்திற்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றி அந்த தீபஜோதியின் வழியாக சிவனையும் பார்வதி தேவியோரையும் நினைத்துக் கொண்டு தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்து வருதல் வேண்டும்)

ஆசிகள் !!ஆசிகள்! அப்பனே!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 21 February 2025

சித்தன் அருள் -1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவை வடவள்ளி ஆலயத்தில் உரைத்த சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( கோளறு பதிகம் - ரகசியங்கள் ) 

(இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்

1. சித்தன் அருள் - 1796 - கோவை வடவள்ளி வாக்கு 1)

நம் குருநாதர் :- ( அங்கு ஒரு அடியவரை ) அம்மையே என்ன வேண்டும்?

அடியவர் 3 :- ஒன்றும் வேண்டாம் . அப்பாவோட அருள் எப்பவும் கிடைத்தால் போதும். 

நம் குருநாதர் :- அம்மையே அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று?

அடியவர் 3 :- உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும் என்று அப்பா கேட்கின்றார்.

அடியவர் 4 :- ( பின்னால் இருந்த படி ) நல்ல பக்தியும் , நல்ல முக்தியும் வேண்டும் என்று சொல்லுங்கள். 

நம் குருநாதர் :- அவனை எழச்சொல் முதலில். முன்னே வரச்சொல். 

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள் ) தானாகவே போய் மாட்டிக்கிட்டார். 

அடியவர் 4 :- ( சுவடியின் முன்னே வந்தார் ) 

நம் குருநாதர் :- அப்பனே திரும்பி நின்று,  அவரவருக்கு என்ன வேண்டும் என்று நீயே கேள் அப்பனே. ஏனென்றால் புண்ணியம் பெருகட்டும் அப்பனே. அறிந்தும் கூட இன்னும் நல்லவை செய்ய வேண்டும் நீ. அதனால் பின் புண்ணியத்தை யானே தேடித்தருகின்றேன். நீ செய்ய மாட்டாய் என்பேன் அப்பனே. __ என்பேன் அப்பனே. அதனால் அனைவரிடத்திலும் கேள் என்ன வேண்டும் என்று. அதுவும் ஒரு புண்ணியம்தானப்பா. யான் சொல்கின்றேன். நீ அப்படியே சொல். புண்ணியம் ஆகும் அப்பனே. புண்ணியம் வளர்த்துக்கொள் அப்பனே. இல்லத்திலும், உன் தாய்க்கும் சந்தோசம் ஏற்படும் என்பேன் நலன்களாகவே. 

==============
(அடியவர்கள் ஒன்றை நன்கு இங்கு கவனிக்கவும். என்ன வேண்டும் என்று கேட்டாலே புண்ணியம் வரும் என்றால் , சித்தன் அருள் வலை தளத்தில் அன்புடன் அகத்தியர் வாக்குகளை மக்களுக்கு நேரில் எடுத்து உரைத்தால் எவ்வளவு புண்ணியம் உண்டாகும்? அதனால் உயிர் உடலில் இருக்கும் காலம்வரை இவ்வாக்குகளை இயன்ற பொழுதெல்லாம் இவ்வுலகம் முழுவதும் பரப்புங்கள்.) 

==================

அடியவர் 4 :- நிற்பவர்களுக்கு யார் யாருக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். 

அடியவர் 3 :- யார் யாருக்கு என்ன வேண்டும் என்று ( அகத்தியர் ஐயா ) அவருக்கே தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே புரிகின்றதா?ஆனால் என்னிடத்தில் கேட்கின்றார்கள் ஏன் என்று கூறு?

அடியவர் 3:- இந்த ஜீவநாடி கேட்கவே நாங்கள் எத்தனை ஜென்மத்தில் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

நம் குருநாதர் :- அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே புண்ணியவாதிகள்தான். ஆனால் அனைத்தும் நடக்கும். ஆனாலும் சிறு சிறு தவறு செய்கின்றீர்கள். அவ்வளவுதான். அதை திருத்திக்கொள்ளவே யான் வருகின்றேன். நலமாகவே அனைத்தும் சொல்கின்றேன். நிச்சயம் அதிகம் அதாவது தேர்ச்சி பெற வேண்டும் என்றால், ஆனால் சிறிய அளவிலே பின் தோல்வி அடைந்து விடுகின்றீர்கள். இதனால் அனைத்தும் நலமாக புண்ணியங்கள் மிகுந்து காணப்படுகின்றது. ஆனாலும் சிறிது சிறிது தவற்றினால்தான் நிச்சயம் எங்கேயோ போய் பள்ளத்தில் விழுந்து விடுகின்றீர்கள். அவ்பள்ளத்தில் நிச்சயம் விழாதீர்கள் என்பதற்காகவே இங்கு ஆசிகள் இப்பொழுது. 
( தனி வாக்குகள் ) 
…….
……..
பல போராட்டங்களை சந்திக்கும் பொழுதுதான் இறைவன் நேரில் காட்சி அளிக்கின்றான். 
………
……… 
தாயே , மற்றவர்களைப் பற்றி நாம் எப்பொழுது நினைக்கின்றோமோ நன்றாக இருக்க வேண்டும் என்று , நிச்சயம் இறைவன் தன்னைப் பற்றி ( நம்மைப் பற்றி ) நினைப்பான் தாயே!!!!!!!!
…….
……
( இறை வழிபாட்டில் இருப்பவர்கள் எப்படி பாவத்தை சேர்த்துக் கொள்கின்றார்கள்? ) 

( சுய , தன்னைப் பற்றி, தன் குடும்பம் பற்றி வேண்டுதல் ) இதுதான் மாயை. அதாவது இறைவனிடத்தில் தன் சுயநலத்திற்காக எதுவும் வேண்டக்கூடாது. அப்படி வேண்டினால் பாவங்கள் வந்து சேர்ந்துவிடும். கஷ்டங்கள் வந்து சேர்ந்துவிடும். நிச்சயம் சுய நலம் வேண்டாம். நிச்சயம் இறைவன் படைக்கின்றான் அனைவரையுமே. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இறைவனுக்கு எப்பொழுது செய்யத் தெரியுமோ, பின் அப்பொழுது செய்வான் தாயே. கவலையை விடு. ஆசிகள் கொடுத்து விட்டான் என்று சொல்லிவிட்டேன். பின் செய்யாமலா போவான் இறைவன் ?

….
( நம் குருநாதர் இவ் தருணத்தில் உலகோர் நன்மைக்காக இவ் அடியவரை அதாவது இங்கு “அடியவர் 3” என்ற அடியவரை உரையாட வைத்து , மறைமுகமாக இயக்கி,  மகிமை புகழ் “கோளறு பதிகம்”
 ரகசியங்களை எடுத்தை உரைக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் இவ் அடியவர் புண்ணியமும் உயர குருநாதர்  முன்பு இவ்வாக்கில் உரைத்தருளினார் என்பதை அடியவர்கள் கருத்தில் கொள்க. பல வருடங்களாக ஈட்ட இயலாத புண்ணியங்கள், நம் குருநாதர் கருணையால் , சத்சங்கத்தில் சட்டென்று நடந்துவிடும் அதிசயம் இது. இனி கவனமுடன் படியுங்கள் இவ் ஆழ் ரகசியங்களை.) 

நம் குருநாதர் :- அப்பனே நீ கேள். எனக்காக வேண்டிக்கொள் என்று. 

அடியவர் 3 :- அம்மா , எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எப்படியப்பா வேண்டிக் கொள்வாள்? (அவள்) பெற்ற பிள்ளையா நீ?  

அடியவர் 3 :- அப்படி எல்லாம் ( இவ் அம்மை ) நினைக்க மாட்டார்கள் சாமி. ரொம்ப நாள் தெரிந்தவர்கள். 

நம் குருநாதர் :- அப்பனே யான் கூட பழகுகின்றேன் அப்பனே. ஆனால் பழகிக்கொண்டே இருக்கின்றாள். ஆனாலும் உந்தனுக்காக வேண்டிக்கொண்டாளா என்று கேள்?

அடியவர் 4 :- வேண்டிக்கொண்டேன் ஐயா.

நம் குருநாதர் :- அப்பனே யான் இல்லை என்று சொல்வேன் அப்பனே. இனி மேலாவது வேண்டிக்கொள்ளச் சொல் அப்பனே. நடந்தேறும் அப்பனே. ஒன்றைக் கொடுத்தால்தான் , ஒன்றை வாங்க முடியும் அப்பனே. 

அடியவர் 3 :- சரிங்க சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே , இன்னும் என்ன வேண்டும் என்று கேள்? 

அடியவர் 3 :- இன்னும் என்ன வேண்டும்?

அடியவர் 4 :- ஒன்றும் வேண்டாம்.

அடியவர் 5 :- அப்பா எங்க கூட இருந்தால் போதும். 

நம் குருநாதர் :- ( தனி வாக்குகள்  உரைத்து அருளினார் கருணைக் கடல் ) இன்னும் என்ன வேண்டும் என்று கேள்?

அடியவர் 3 :- சாமி , எல்லோருக்கும் பக்தியையும் , புத்தியும் கொடுத்துவிடுங்கள். 

நம் குருநாதர் :- ஏன் பக்தியைக் கேட்கின்றாய்? 

அடியவர் 3 :- பக்திதான் அன்பு,  சாமி.

நம் குருநாதர் :- அப்பனே, இது எவ்வாறப்பா நியாயம்? உன் வாயில் வருவதை எல்லாம் உளறுகின்றாய் அப்பனே. 

============
( அடியவர்கள் இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் இவ் அடியவரைத் தூண்டி, எப்படி எல்லாம் அவ் அடியவரின் மூலம் உலகிற்கு ஒரு மகத்தான ரகசியத்தை எடுத்துரைத்து , இவ் அடியவருக்கு புண்ணியத்தை உண்டாக்குகின்றார் என்று கவனிக்கவும். உயர் புண்ணியங்கள் குருநாதர், இறைவன் மனது வைத்தால்தான் நடக்கும் என்பதற்கு இவ் உரையாடல் மிகச் சிறந்த ஒரு உதாரணம். வாருங்கள் நம் அன்பு குருநாதரின் கருணை வாக்கு மழையில் நனையலாம் ) 
==============

அடியவர் 3 :- பக்தியும், புத்தியும் இருந்தால்தானே சுவாமி அனுக்கிரகம்…

நம் குருநாதர் :- அப்பனே , புத்திக்கும், பக்திக்கும் என்ன சிறப்பு?

அடியவர் 3 :- பெரியவங்க சொன்னாங்க சாமி. நல்லபடியாக இருப்போம் (என்று). 

நம் குருநாதர் :- அப்பனே, அப்பொழுது உந்தனுக்கு மூளையே இல்லையா? அறிவே இல்லையா? அப்பனே பெரியவர்கள் சொன்னால்தான்,  அறிந்தும் கூட அப்பொழுது அவர்கள் ஓடிவிடு என்று சொல்வார்கள். ஓடிவிடுவாயா என்ன அப்பனே? சொல் அப்பனே? 

அடியவர் 3 :- சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் சாமி பக்தி செலுத்த வேண்டும் என்று…

நம் குருநாதர் :- அப்பனே பக்தி செலுத்து என்று சொல்கின்றார்கள் அப்பனே, ஆனால் செய்கின்றார்களா என்ன அப்பனே? ஆனால் காதல்தான் செய்கின்றார்கள். 

அடியவர்கள் :- ( மௌன சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( கருணைக்கடல் தூண்டியதோடு மட்டும் இல்லாமல் சுவடி ஓதும் மைந்தனும் அவ் அடியவரை ஊக்குவித்து உரையாடலைத் தொடர்ந்தார்கள். இதன் சுவாரசியத்தை முடிந்த அளவு அடியவர்களுக்கு பயன் பட, இங்கு நம் குருநாதர் கருணைக்கடல் அருளால் வாக்குகளாக மலர்ந்துள்ளது. ) 

நம் குருநாதர் :- அப்பனே இவர்கள் ஓரளவிற்குப் பக்தியில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் அப்பனே. அப்பனே அவர்களுக்கு அனைத்தும் நல்கும் என்று சொல் புண்ணியமாகட்டும் உந்தனுக்கு. 

=========
( நம் குருநாதரின் கருணையை இங்கு கவனியுங்கள். இவ் அடியவருக்கு எப்படி இறங்கி வந்து, கருணைக்கடல் புண்ணியத்தைக் மலை போலக் குவிக்கின்றார் என்று உணருங்கள்.) 
=========

அடியவர் 3 :- ( நம் குருநாதர் உரைத்தது போல்  அங்கு உள்ள அடியவர்களுக்கு உரைத்தார் இவ் அடியவர்.) 

அடியவர்கள் :- இதுவே போதும் சாமி. ( மன நிறைவு அடைந்தது  இவ் அடியவர்களுக்கு ) 

=========
(இப்போது மீண்டும் இவ் அடியவரை அன்புடன் இழுத்து , ஆட்கொண்டு மீண்டும் புண்ணியம் செய்ய வாக்கு அருளினார்கள்.)
=========

நம் குருநாதர் :- அறிந்தும் கூட அப்பொழுது நீ கேட்டிருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இருவரும்தான் பக்தியில் தேர்ச்சி பெற்றார்களா என்று? இங்கு அனைவருமே இல்லையா என்று நீ ஏன் கேட்கவில்லை அப்பனே கூறு? 

அடியவர்கள் :- ( பல மௌன சிரிப்புகள் )

அடியவர் :- சாமி நிற்கின்றவர்களைத் தானே கேட்கச் சொன்னீர்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் அகத்தியரிடம் கேட்க வேண்டும். 

அடியவர் :- அப்ப அவர்கள் மட்டும் தான் முக்தி பெற்றுள்ளார்களா சாமி? இவர்கள் எல்லாம் முக்தி பெறவில்லையா?

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட யான் சொன்ன பிறகே சொல்கின்றாய் அப்பனே. எவ்வாறு அப்பா நியாயம் அப்பனே? 

அடியவர் 3 :- நீங்க ஞானி. நீங்க முக்காலமும் அறிந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட அதை யான் சொன்னேனா? 

அடியவர்கள் :- ( சிரிப்பு ) 

அடியவர் 3 :- எல்லோருக்கும் தெரியும் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே என்ன தெரியும் கூறு அப்பனே அகத்தியனைப் பற்றி? அனைவருக்கும் உரை அப்படித் திரும்பி. 

( நம் குருநாதர் கருணைக் கடல்,  உயர் முதல் தரப் புண்ணியம் ஈட்ட மேலும் வழி வகுத்தார் இவ் அடியவருக்கு.) 

அடியவர் 3 :- ( சுவடி ஓதும் இடத்தில் அடியவர்களைப் பார்த்து திரும்பி உரைக்க ஆரம்பித்தார் ) அகத்தியப் பெருமான் நடக்கின்றது, நடக்கப் போவது, நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தி செய்து எல்லோருக்கும் புத்தியைக் கொடுப்பார். புத்தியையும் பக்தியையும் கொடுப்பார். 

நம் குருநாதர் :- அப்பனே முக்தி என்றால் என்ன? பக்தி என்றால் என்ன?

அடியவர் 3 :- தாங்களே சொல்லிவிடுங்கள் சாமி. 

நம் குருநாதர் :- அப்பனே நீ ஏதாவது எந்தனுக்குச் சொல்ல வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் உந்தனுக்கு சொல்லுவேன்.

அடியவர் 3 :- ( அமைதி )

நம் குருநாதர் :- அப்பனே அப்படியே திரும்பி ஒரு பாடலைப் பாடு. 

=========
( திருஞானசம்பந்தர் பெருமான் உரைத்த மகிமை புகழ் கோளறு பதிகப் பாடலை பாட ஆரம்பித்தார் இவ் அடியவர். ஆனால் இவ் பாடலை பாட வைத்தது நம் குருநாதர். அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க) 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0
சித்தர்கள் ஆட்சி - 378 - திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம்.

=========

அடியவர் 3:- ( பின் வரும் பாடலை பாடினார் அடியவர்) 

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
  மிகநல்ல வீணை தடவி    
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்    
  உளமே புகுந்த அதனால்    
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி    
  சனிபாம்பி ரண்டு முடனே    
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல    
  அடியா ரவர்க்கு மிகவே.  

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட இதை அனைவரையுமே சொல்லச் சொல் அப்பனே. நிச்சயம் கிரகங்கள் அண்டாதப்பா. சொல்லிவிடு. 

அடியவர் 3 :- எல்லோரும் இந்த பாடலை சொல்லுங்கள். கிரகங்கள் யாரையும் தொந்தரவு செய்யாது.

நம் குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் அனைவருக்குமே. எந்தனுக்கு சொல்லவில்லை, உந்தனுக்குச் சொல்லவில்லை , இப்படிச் சொல்லவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அப்பனே நிச்சயம் யான் சொல்லியவற்றைக் கேட்டால்தான் அடுத்த அளவில் கூட எடுத்துச் செல்ல முடியும் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே முதல் வகுப்பிலேயே தேர்ச்சி பெறவேண்டும். அப்பொழுது ஆசிரியன் என்னென்ன சொல்கின்றானோ அதை நிச்சயம் கேட்டு தேர்ச்சி பெற வேண்டும். அப்பனே அதே போலத்தான் அப்பனே. இப்பொழுது சொல்லிவிட்டேன். என்ன சொன்னேன் என்று அனைவரையும் கேள்?  அப்பனே சொல்லச் சொல் பார்ப்போம் அப்பனே. அதாவது உன் பக்கத்தில் இருக்கின்றானே, அவனை எழச்சொல்லி இதை செப்பச் சொல். 

அடியவர் 3 :- ( மற்றொரு அடியவருக்குச் சொல்லிக் கொடுத்து, அவரை இப் பதிகத்தை சொல்லச் சொன்னார். அவ் அடியவரால் சொல்ல இயலவில்லை.) 

நம் குருநாதர் :- அப்பனே அப்பொழுது  கிரகங்கள் இவன் தனை அமுக்கி விட்டது அப்பனே. எப்படியப்பா? முதலில் என்ன பிரச்சினை வரும் என்பதைக் கேள் அவனை. 

அடியவர் 3 :- முதல்ல என்ன பிரச்சினை வரும்?

அடிவர் :- ஐயாவுக்கு…

அடியவர் 3 :- உங்களுக்குத் தான் சாமி தெரியும். 

நம் குருநாதர் :- அப்பனே காதல் பிரச்சினை வரும். காதலைப் பற்றி நீயும் எடுத்துரை? 

அடியவர் 3 :- ( காதல் புரிவதில் உள்ள பிரச்சினைகளை எடுத்து உரைத்து , பெற்றோர்கள் மூலம் திருமணம் நடத்தல் நன்று என்று  அழகாக எடுத்து உரைத்தார்.) 

நம் குருநாதர் :- அப்பனே ( கோளறு பதிகம் ) இதை நிச்சயம் அவந்தனக்குச் சொல்லிக்கொடு.

அடியவர் 3:-  வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்    
அடியவர் :- வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 


அடியவர் 3:-  மிகநல்ல வீணை தடவி    
அடியவர் :- மிகநல்ல வீணை தடவி    

அடியவர் 3:-  மாசறு திங்கள்
அடியவர் :- மாசறு திங்கள்

அடியவர் 3:-  கங்கை முடிமேலணிந்தென்
அடியவர் :- கங்கை முடிமேலணிந்தென்    

அடியவர் 3:-  உளமே புகுந்த அதனால்    
அடியவர் :- உளமே புகுந்த அதனால்    

அடியவர் 3:-  ஞாயிறு திங்கள் 
அடியவர் :- ஞாயிறு திங்கள் 

அடியவர் 3:-  செவவாய்  புதன்
அடியவர் :- செவவாய்  புதன்

அடியவர் 3:-  வியாழன் வெள்ளி
அடியவர் :- வியாழன் வெள்ளி

அடியவர் 3:-  சனிபாம்பி ரண்டு முடனே    
அடியவர் :- சனிபாம்பி ரண்டு முடனே    

அடியவர் 3:-  ஆசறு நல்லநல்ல
அடியவர் :- ஆசறு நல்லநல்ல  

அடியவர் 3:- அவைநல்ல நல்ல    
அடியவர் :- அவைநல்ல நல்ல    

  அடியவர் 3:- அடியாரவர்க்கு மிகவே.  
அடியவர் :- அடியாரவர்க்கு மிகவே.  


நம் குருநாதர் :- அப்பனே இதை நிச்சயம் 108 முறை செப்ப வேண்டும் அனைவருமே. இதை செப்பிட்டு , அப்பனே சிறு எறும்புகளுக்காவது தானம் செய்ய வேண்டும் அப்பனே. வெற்றி நிச்சயம் உண்டு அப்பனே. இதை செப்பி, அனைவரையும் செப்பச் சொல். 

அடியவர் 3:- ( இவ் பதிகத்தை அடியவர் ஆரம்பித்த உடன், அங்கிருந்த அடியவர்கள் ஒருமித்த குரலில் கருணைக்கடல் முன்னர் பாட ஆரம்பித்தனர். சத்சங்கமே ரம்யமான இனிய இசைக்களம் ஆனது அங்கு அடியவர்களின் இனிய பாடுதலால். அத்துடன் இவ் அடியவர் குருநாதர் உரைத்தவாறு அனைவரையும் 108 முறை இல்லத்தில் அவர்களை ஓதச் சொன்னார்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு அன்னதானம் இடவும் சொன்னார்.) 

நம் குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. இதில் யார் தேர்ச்சி பெறுகின்றார்களோ , அப்பொழுதுதான் அப்பனே அவந்தனக்கு மறு வாக்கு சொல்லி, உண்மை சொல்லி உயர்த்தி விடுவேன். 

அடியவர் 3:- ( அவ்வாரே உரைத்தார் அனைவருக்கும் )

அடியவர்கள் :- அந்த 4 வரியை மட்டும் பாட வேண்டுமா? அல்லது முழுப் பாடலையும் பாட வேண்டுமா? 

=========
கேளறு பதிகம் 11 பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அடியவர்கள் இவ் பாடலில் முழு விளக்கத்தை பின் வரும் பதிவில் படித்து பொருள் உணர்க. 

https://siththarkalatchi.blogspot.com/2024/05/378.html?m=0 

===============

நம் குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட சாதமும், அப்பனே கூறு தனித்தனியாக வைத்து உண்ணலாமா என்று? 

அடியவர் 3 :- ( புரிந்து கொண்டார் ) கோளறு பதிகம் எல்லாமே படிக்க வேண்டும் 108 முறை.

நம் குருநாதர் :- அப்பனே இப்பொழுது சொல். குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது இவ்வாறு ஓதினால் என்று.

அடியவர் 3:- கோளறு பதிகம் முழுமையாக படித்தால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படாது. 

நம் குருநாதர் :- அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே. கிரகங்களின் ஆட்டம் அப்பனே அதிக அளவில் நடைபெறும் என்பேன் அப்பனே. அப்பொழுது இல்லத்திலும் கூட குழப்பங்கள். ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள். தாய் தந்தையர் அதாவது சகோதர, சகோதரிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்படுவதும் கூட உறுதி என்பேன் அப்பனே. இதை சொல்லிக்கொண்டே வந்தால் , அதாவது இல்லத்தில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும். 

அடியவர் 3:- குடும்பத்தில் யாராவது ஒருத்தராவது சொல்லுங்க என்று சொல்கின்றார். 

அடியவர்கள் :- 108 தடவை தொடர்ச்சியாக 
சொல்ல வேண்டுமா?

நம் குருநாதர் :- அம்மையே காசுகள் வந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் வேண்டாம் என்று சொல்லுவாயா தாயே? 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, சொல்லிக்கொண்டே இருங்கள் daily 108 முறை. 

நம் குருநாதர் :- அம்மையே நிச்சயம் உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன். கடும் முயற்சி எடுத்தால் வெற்றிகள் உண்டு. தாயே இதற்கு என்ன நீ கூறுகின்றாய்? 

அடியவர் 5:- கடும் முயற்சி எடுக்கனும் ஐயா.

நம் குருநாதர் :- அம்மையே உயர் பதவிகள் வகித்தாலும் கடும் முயற்சி நிச்சயம். அதாவது தற்பொழுதெல்லாம் வெளி நாடு செல்கின்றார்கள். அதற்கு நாய் போல் பாடு படுகின்றனர். ஆனால் சுலபமாக வாழ்வதற்கு இதைதன் மீண்டும் கேள்விகளாக கேட்டுக்கொண்டுள்ளீர்கள் தாயே. எவ்வாறு நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் ) 

அடியவர்கள் :- ( ஒரே நாளில் 108 முறை சொல்வது குறித்து உரையாடல்கள் ) 

நம் குருநாதர் :- அம்மையே சொல்லிவிட்டால் நன்று. ஆனாலும் அம்மையே அனைவரிடத்திலும் பாவம் உள்ளது. ஈசன் விடுவானா என்பது சந்தேகமே!!!!!?????

சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விக்குறியை போட்டுவிட்டார்….

நம் குருநாதர் :- அப்பனே இதனால் கவலைகள் இல்லை. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால்  April 2024, கோவை வடவள்ளி அகத்திய மாமுனிவர் ஆலயத்தில் உரைத்த சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!