​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 29 November 2025

சித்தன் அருள் - 2025 - அகத்தியர் வாக்கு!



இங்கு ஏமாந்து போக நிறைய மனிதர்கள் இருக்கும் பொழுது, நீ ஏன் தெரிந்தே மாட்டிக் கொள்கிறாய்? தவறாக வாழ்ந்தவர்கள், சம்பாதித்தவர்கள், அரசாங்கத்திடமும், கோவில் நிறைவாகத்திடமும் ஏமாந்து போகிறார்கள், தான் சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்களை இங்கு தொலைத்து விடலாம் என்று. அவர்களுக்கு புரிவதில்லை, செயலின் விளைவு, தண்டனையாக இனிமேல்தான் வரப்போகிறது என்று.

ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்து, அமைதியாக புன்னகைத்து கொடுத்து செல்வது பல கர்மாக்களை கரையவைக்கும். நீ ஏமாறுவது இல்லாதவனிடமாகட்டும். இங்கு கர்ம பரிவர்த்தனை நடைபெறுவதை காணலாம். எந்த கர்மாவை கரைத்தாலும், எப்படி கரைத்தாலும், பிரம்மஹத்தி தோஷம் சேராமல் பார்த்துக்கொள். இறையே இறங்கி வந்து அழித்து விடு என்று உத்தரவிட்டாலும், மறுப்பதே உன் கடமை. மனிதன் உருவாக்க பிறந்தவன், அழிக்கவல்ல. அவன் உருவாக்குவது நல்லதாக இருக்கட்டும். இறைவனும், சித்தர்களும் ஆசீர்வதித்து வழி நடத்துவார்கள்.

அகத்தியப் பெருமான் வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

2 comments:

  1. குருநாதர் அருளால் ஒரு பதிவு.
    கிராமத்து நம்பிக்கைகளின் தெய்வீக உளவியல்.

    https://youtu.be/P1hGm0kx8RI?feature=shared

    வாசிப்பதற்கான விரிவான பதிவு :-
    https://fireprem.blogspot.com/2025/11/blog-post.html?m=1

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete