​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 18 November 2025

சித்தன் அருள் - 2006 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்கம்!



அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 1

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

===========================================================
# முன்னோர்கள் ஆசி இருந்தால்தான் - வெற்றி உண்டாகும் 
===========================================================

குருநாதர் :- அப்பனே, அனைவருமே பக்குவங்கள் பட்டுத்தான். அவை மட்டுமில்லாமல், ஒவ்வொருவருக்கும் நல்விதமாகவே குலதெய்வத்தின் அருளும் கூட, நிச்சயம் முன்னோர்களின் ஆசையும் கூட, நிச்சயம் இவைதன் முதலில் இருக்க வேண்டும். 

குருநாதர் :- இவ்வாறு இருந்தால்தான் வாழ்க்கையில் நிச்சயம் அப்பனே, அம்மையே ஜெயிக்க முடியும். அப்படி இல்லை என்றால், நிச்சயம் எத் திருத்தலம் பின் சென்றாலும், நிச்சயம் பின் கஷ்டங்களோ, தோல்விகளோ தான் மிஞ்சும். அதனால் பல வகைகளில் கூட உங்களுக்கு யான் பின், பல பல பல வாக்குகள் கூட எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன். 

========================================================
# அகத்திய மாமுனிவர் வைக்கும் தேர்வு - அனைவருக்கும் 
========================================================

குருநாதர் :- ஆனால் இன்றைய பொழுதில் உங்களுக்கு ஒரு நிச்சயம் பின், அதாவது பின் தேர்வை வைக்கப் போகின்றேன். அதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற, வெற்றி பெற. பின் நிச்சயம் அத்தேர்வு எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நிச்சயம். ஆனால் சுலபமாகத்தான். ஆனாலும் இதில் கூட நீங்கள் (எப்படி) வெற்றி பெறுவீர்களா என்றெல்லாம் நிச்சயம் யான் உங்கள் இல்லத்திற்கெல்லாம் வந்து நிச்சயம் பார்ப்பேன். 

=========================================================================
# முன்னோர்கள் ஆசி இருந்தால்தான் - அகத்திய மாமுனிவரை நாட முடியும்
=========================================================================

குருநாதர் :- ஏன், எதற்கு நிச்சயம் பின்? அதாவது முன்னோர்களின் ஆசிகளும், குல தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே பின் என்னையும் கூட நாட முடியும். பின் அவர்கள் நிச்சயம், அதாவது புண்ணியங்கள் பலமாக இருந்தால், நிச்சயம் குலதெய்வத்தின் அருளும் கூட, முன்னோர்களின் ஆசியும் கூட, பின் நிச்சயம் பின் அதி விரைவாகவே கிடைக்கும். 

குருநாதர் :- இவ்வாறு  கிடைக்கப்பெற்றால், நிச்சயம் பின், அதாவது பின் அறிந்தும் கூட திருத்தலத்திற்கு சென்றாலும், உடனடியாக இறைவனின் பின் அனுக்கிரகம் கிடைக்கும். 

குருநாதர் :- ஏன், முன்னோர்கள் ஆசிகள் இங்கு வேண்டும் என்றால், நிச்சயம் பின், அதாவது முன்னோர்களுக்கு முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்னோர்கள் எல்லாம் பயன்படுத்தியது இன்றெல்லாம் மறந்துவிட்டார்கள். இதனால் அவர்களும் கூட இறைவனிடத்தில் வேண்டிக் கொண்டு, நிச்சயம் பின், அதாவது எங்கள் சந்ததிகள், நிச்சயம் யாங்கள் வாழ்க்கை பின் வாழ வேண்டும். பின் யாங்கள் எப்படி வாழ்ந்தோமோ, அப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடத்தில் பின் கூறுகின்ற பொழுது, நிச்சயம் பின். ஆனாலும் இப்பொழுது அது போல் வாழ்வதே இல்லை. 

============================================================
# ஏன் முன்னோர்கள் உங்கள் வெற்றியை தடுக்கின்றனர் ?
============================================================

குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் அறிந்து கூட, இறைவனிடத்தில் கூட, அதாவது திருத்தலத்திற்கு சென்றாலும், நிச்சயம் அவ் ஆன்மாக்கள், இறைவா, இவர்கள் நிச்சயம் பின் எங்களுக்கு, அதாவது அறிந்து கூட, இவ்வாறுதான். 

குருநாதர் :- அதாவது எங்கள் சந்ததிகள் , நிச்சயம் இவர்களுக்கு எதையும் கொடுத்து விடாதீர்கள். பின், அதாவது கொடுத்து விட்டாலும், நிச்சயமாய் இவைதன், நிச்சயம் பின் யாங்கள் செய்ததை கூட பல புண்ணியங்கள் செய்து செய்து வாழ்ந்தோம். இவர்கள் நிச்சயம், அதாவது இப்பொழுது கெட்ட பெயர் பின் வாங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அதனால் செய்திடாதே, நிச்சயம் சில கஷ்டங்கள் கொடுத்து, பின் அவர்களை திருத்தி, பக்குவம் படுத்தி, எங்களைப் போல் வாழ வையுங்கள், பின்பு கொடுங்கள் என்று. 

குருநாதர் :- அப்பனே, இது சரியா, தவறா? அனைவருமே கூற வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இறைவனிடம் சென்ற முன்னோர்கள்  ஆன்மாக்கள், பக்குவமில்லாமல் இருக்கும் வாரிசுக்குகளுக்கு நேரடியாக புண்ணியம் கொடுக்கக்கூடாது. முதலில் எங்கள் வாரிசுகள் அவர்கள் பக்குவம் பெற வேண்டும்; இறைவா அதற்காக சில கஷ்டங்கள் அவர்களுக்கு ஏற்படுத்தி. அந்த கஷ்டங்கள் மூலமாகவே அவர்கள் திருத்தி, இறைவனின் சந்நிதியில் நிலைபெறும் நிலைக்கு வர வேண்டும். இல்லையேல், நாங்கள் சேமித்து வாய்த்த புண்ணியங்களை , கொடுத்தாலும்  புண்ணியங்கள் வீணாகி, அவர்களுக்கும் எங்களுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எங்கள் வாரிசுகளை முதலில் பக்குவப்படுத்தி, பிறகு புண்ணியம் வழங்க வேண்டும்.) 

குருநாதர் :- அப்பனே, அதுமட்டுமில்லாமல், அப்பனே, மந்திரங்கள் கூட ஓதுவான் என்பேன். அப்பனே, ஆனால் எடுபடாது என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் : அப்ப மந்திரம் கூட நிறைய சொல்லுவாங்க, ஆனா ஒன்னும் லாபம் இல்லை. 

குருநாதர் :-  அப்பனே, உங்கள் அனைவருக்குமே நிச்சயம் எம்முடைய ஆசிகள். அப்பனே, நிச்சயம் பின் பன்மடங்கு கிட்டியுள்ளது என்பேன். அப்பனே, ஆனாலும் நீங்கள் பக்குவப்பட வேண்டும். அப்பனே, அதனால் பின் சொல்கின்றேன். அப்பனே, பல விஷயங்களை கூட. அப்படி பல விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொண்டால், பின் மனசாந்தி அடைந்து விடுவீர்கள். அப்படி இல்லை என்றால், நிச்சயம் தேடுதல் வேட்டையிலே  ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள். 

குருநாதர் :- அப்பனே, இது எப்படி இருக்கும் என்றால், அப்பனே, தேர்வை, அப்பனே, பின் எழுதி, பின் தோல்வி அடைந்து, மீண்டும் எழுதி, எழுதி, லாபம் இல்லை. அப்பா, 

குருநாதர் :- அப்பனே, நன்முறைகளாகவே. அதனால், அப்பனே, இப்பொழுது நிலைமையில், அப்பனே, யாருக்கு எம்முடைய ஆசிகள் கிடைக்க வேண்டுமோ, அப்பனே, யான் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்பனே. பின் நிச்சயம், அப்பனே, உங்களைப் போன்று இவன் (சுவடி ஓதும் மைந்தன்) அப்படித்தான் அறிந்து கூட, பின் அதாவது படிப்பவன் தான். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன்:-  (அப்ப, எல்லாரையும்  யார் தேர்ந்தெடுக்கனும்? அகத்தியர் தான் தேர்ந்தெடுக்கனும். நான் சும்மா சுவடி  படிக்கிறது, அவ்வளவுதான். கருவி.  கருவி மாதிரிதான், அவ்வளவுதான்.) 

குருநாதர் :- அப்பனே, அதில் கூட, அப்பனே, நிச்சயம் பலபேர், அப்பனே, ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றார்கள் அப்பனே. நிச்சயம், அப்பனே, (குருநாதரை , இறைவனை) சோதனை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள் அப்பனே. 

குருநாதர் :- அது மட்டுமில்லாமல், அப்பனே, அங்கு சென்றால் நல்லது நடக்குமா? இங்கு சென்று நல்லது நடக்குமா? என்றெல்லாம், அப்பனே, விரும்புகிறார்கள். அப்பனே, நம்பிக்கை இல்லை. அப்பா, அனைத்திலும் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்பனே, நம்பிக்கை இருந்தால்தான் வெற்றியும் பெற முடியும். அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, நீங்களே அறிவீர்கள் இதனை கூட.

=======================================================================
# நிச்சயம் நம்பிக்கை இருந்தால் உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்
=======================================================================

குருநாதர் :-  அப்பனே, வெற்றியோ, தோல்வியோ, அப்பனே, நிச்சயம் நம்பிக்கை இருந்தால், அப்பனே, பின் அவ் நம்பிக்கையை உயர்வான இடத்திற்கு பின் அழைத்துச் செல்லும் என்பேன். அப்பனே, நம்பிக்கை இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் எவ்வளவு, அப்பனே, பின் பயன்படுத்தினாலும் வீணப்பா. அதனால்தான் நம்பிக்கை, நம்பிக்கை. 


குருநாதர் :- அப்பனே, நம்பிக்கை என்பது தும்பிக்கை போல என்பேன். அப்பனே, பின் தும்பிக்கை, அப்பனே, நிச்சயம் அழகாகவே, பின் உயர்த்தி வைக்கும் என்பேன். அப்பனே. பின் நம்பிக்கை, அதாவது, அப்பனே, பின் இல்லை என்றால், பின் அப்பனே, அத்தும்பிக்கை, அப்பனே, கீழே, பின் அதாவது உன்னை வைத்து, பின் நிச்சயம் அடித்து விடும் என்பேன். அப்பனே, புரிகின்றதா அனைவர்க்கும்? 

குருநாதர் :- அப்பனே, முதலில் தோல்வியோ, வெற்றியோ, அவையெல்லாம் நீ கண்டு கண்டுகொள்ள, பின் இருப்பதே நிச்சயம் ஆச்சரியம். ஏனென்றால், அப்பனே, தேர்வை எழுதுகின்றாய். நிச்சயம், அப்பனே, உந்தனுக்கு தெரியும். அப்பனே, நிச்சயம், பின் இதில் தேர்வு பெறுவோமா இல்லையா என்று அப்பனே. 

குருநாதர் :- ஆனாலும், அப்பனே, நிச்சயம், ஏன் இவை மட்டும், வாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரிவதில்லை? அதனால்தான், அப்பனே, பெரியோர்கள், உன் வாழ்க்கை உன் கையில் என்று. அப்பனே, ஆனால் அதை சரியாக பயன்படுத்துவதே இல்லை யார் என்று. 

குருநாதர் :- அப்பனே, பல பல இதிகாசங்கள், அப்பனே, இன்னும் ராமாயணம், இன்னும், அப்பனே, இன்னும் கீதை, அப்பனே, இன்னும் தேவாரம், இன்னும், அப்பனே, திருவாசகத்தில் இல்லாத சொற்களா அப்பனே!!!. ஆனால் அதையே நீங்கள் பயன்படுத்துவதில்லை என்பேன். அப்பனே, அப்பொழுது இறைவன் எப்படி? அப்பா, நிச்சயம், அப்பனே, அருள்கள் ஈவான் என்பேன். அப்பனே, அப்பொழுது யாருடைய தவறு? நீங்களே சொல்லுங்கள்?.

குருநாதர் :- அப்பனே, அதனால்தான், நிச்சயம், என் பக்தர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே. அப்படி புரியும் நிலைக்கு வந்துவிட்டால், உங்களுக்கு அனைத்தும் நான் தந்து விடுவேன் என்பேன் அப்பனே. ஆனால் இப்போது நிலைமை தரலாம். ஆனாலும், பின் அதாவது எவை என்று அறிந்து கூட செலவு செய்து விடுவீர்கள். அப்பனே, அதாவது பணத்தை கொடுத்தாலும், அதை உபயோகப்படுத்த தெரியாது  அப்பா உங்களுக்கு. 

குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட இறைவன் அனைத்தும் உணர்ந்தவன். அப்பா, அப்பனே, இறைவனுக்கு தெரியாதா? அப்பா, பின் உங்களுக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும், எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று அப்பனே, நீங்களே கூறுங்கள்?. 

குருநாதர் :- அப்பனே, நீங்களும் கேட்கலாம். சில பேருக்கு ஏன் கஷ்டம் வருகின்றது? கஷ்டம் வருகின்றது என்று. அப்பனே, சரியான கேள்விதானே? அப்பனே, அதாவது நல்விதமாகவே. அப்பனே, நீங்கள் கேட்க வேண்டியது யானே கேட்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சிலர் தங்களுக்கே ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது என்று கேட்டு வருத்தப்படுகிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது நான் தான் கேட்டுவிட்டேன். அதற்கான பதிலும் பெரும்பாலும் நான் தான் சொல்லி விடுகிறேன். )

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, பக்குவங்கள் இல்லை. அவ்வளவுதான். என்ன பக்குவங்கள் இல்லை என்று நீங்கள், நீங்கள் கேளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களுக்கு பக்குவங்கள் இல்லை. அதனாலதான் கஷ்டம் வருது. என்ன பக்குவம் இல்லைன்னு கேட்கலாம். கேட்கலாம். இப்ப வந்து சான்ஸ் கொடுத்துட்டார். புரியுதுங்களா? ஐயா, புரியுதுங்களா? எல்லாருக்கும் அப்ப கஷ்டங்கள் ஏன் வருது? பக்குவம் இல்லாததுனால தான் வருது. அப்ப என்ன பக்குவம் இல்லை? நீங்க கேட்கலாம். யாருக்காவது கேட்கலாம். )

அடியவர் :- (அந்த பக்குவம்ங்கிறது எந்த பக்குவம் கேக்குறது? மனசு, மனசுதான். )


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட எவ் பக்குவம், பக்குவம் என்று. அப்பனே, யான் சொல்வது அப்பனே. அறிந்தும் இதை என்று அறிய. அப்பனே, உன்னிடத்தில் பின் ஒரு கோடி ரூபாயை கொடுக்கின்றேன். அப்பனே, அதை எப்படி நீ செலவு செய்வாய் கூறு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "சரியா? உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.  "நீங்கள் அந்த பணத்தை எவ்வாறு செலவழிக்கப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்கிறார். அதற்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அவர் உங்களை பக்குவப்படுத்தி அந்த பரிசை வழங்கப் போகிறார். அதுதான் உண்மை. வேறு எதுவும் இல்லை. இப்போது, உங்களுக்கு ஒரு கோடி கொடுக்கிறார்.  "நீங்கள் அதைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவர் கேட்கிறார். )

அடியவர் :- தர்ம காரியங்களுக்கு செலவு செய்வேன் அய்யா.

குருநாதர் :- அப்பனே, வாயால் தான் சொல்ல முடியும் என்பேன்  அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  வாயால் தான் சொல்ல வேண்டும்; 

சத்சங்க அடியவர்கள் :-  ( சிரிப்புகள் )

அடியவர் :-  மனம் மாறாமல் இருக்க வேண்டும்.

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அதனாலதான். அப்பனே, மனம் என்பது ஒரு பேய் அப்பா. அப்பனே அதை அடக்க வேண்டும் அப்பனே. அதை அடைப்பதற்காக தான். அப்பனே, அறிந்து கூட பல யோகாசனங்கள், பின் தியானங்கள், மந்திரங்கள், இறைவனிடத்தில் செல்லுதல். ஆனால், அடக்க முடியவில்லையே. மனம் தான் ஜெயிக்கின்றதே அப்பனே.  பெரியவனே, கேள். இன்னும் 

அடியவர் :-   ஆமாங்க, ஐயா, மனசு அடக்க முடியாது. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் இதனையே உன்னால் அடக்க முடியவில்லை என்பேன். அப்பனே, மற்றவை கொடுத்தால், நீ நிச்சயம், அப்பனே, வைத்துக் கொள்வாயா என்ன? அனைவருமே சொல்லுங்கள்?. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த சின்ன மனசே வந்து அடக்க முடியல. அடக்க முடியல. அப்ப, மத்ததெல்லாம் வச்சு, மத்ததெல்லாம் கொடுத்தா, நீங்க வந்து எப்படி, எப்படி, எப்படி சமாளிக்க போறீங்க? 

குருநாதர் :- அதனாலதான், அப்பனே, இறைவன் கஷ்டம் என்ற ஒரு சொல்லை வைத்து, அதன் மூலம் பக்குவப்படுத்தி, அனைத்தும் கொடுக்கின்றான். அப்பனே, பின் அதாவது, இறைவன் இங்கு தவறா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, அந்த மனசை பக்குவப்படுத்த , கஷ்டம் அவசியம். அந்த கஷ்டம் மூலம்  ஒரு பக்குவத்தை கொடுத்து, மனசை பக்குவப்படுத்தி, எல்லாத்தையும் கொடுக்கிறார். )

குருநாதர் :-அப்பனே நிச்சயம், நீங்கள் கேட்டதெல்லாம் தந்து விடலாம் அப்பனே, ஆனாலும் அப்பனே, நீங்கள் கெட்டுப்போவீர்கள் என்பேன் அப்பனே.  சிறந்த உதாரணம். அப்பனே, உங்கள் குழந்தையே இருக்கின்றது. பின் அக்குழந்தை, பின் அதாவது, கேட்டதெல்லாம் நீங்கள் வாங்கி தந்து விடுவீர்களா என்ன அப்பனே?  சொல்லுங்கள் நீங்களே நியாயமாய் என்று ?

அடியவர் :-  கேட்டது உடனே வாங்கி கொடுக்க மாட்டேன் அய்யா. 

குருநாதர் :- அப்பனே, ஒரு குழந்தைக்கு, அப்பனே, பின் நல்லதா, பின் தீயதா என்று, பின் உங்களுக்கு தெரியும். அதேபோலத்தான் அப்பா, இறைவன் அனைவரையும் படைத்தான் என்பேன் அப்பனே.  இறைவனுக்கு தெரியும், இவன் எனக்கு இதை கொடுத்தால், இவை சரியாக உபயோகப்படுத்துவானா என்று. அப்பனே, புரிகின்றதா அப்பனே?.  தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே, ஏனென்றால், என் பக்தர்களாக இருந்து கொண்டு, ஏதும் தெரியாமல் இருந்து விடக் கூடாது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தைக்கு நல்லதா தீயதா என்பது பின்னால் தெரிந்தது போல, இறைவனுக்கும் உங்கள் பக்குவம் தெரியும். இறைவன் அனைவரையும் படைத்தவர்; அவர் கொடுக்கும் பரிசை நீங்கள் சரியாக பயன்படுத்துவீர்களா என்பதையும் அறிந்திருப்பார். அகத்திய மாமுனிவர் பக்தராக இருப்பவர்கள் எதையும் தெரியாமல் இருக்கக் கூடாது; உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.)

குருநாதர் :-அப்பனே, அறிந்தும் எவை என்று கூற, இன்னும் அப்பனே, பலமாகவே உங்களுக்கு வாக்குகள் சொல்லுவேன். அப்பனே, நீங்கள் விருப்பப்படி எல்லாம், பின் நடந்திடும் என்பேன் அப்பனே. ஆனால் பின் மீண்டும் அப்பனே, கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், நிச்சயம், என்னுடைய பக்தர்களை பக்குவப் படுத்துவதற்காகவே, யான் மெதுவாகவே கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. அதனுள்ளே, சித்தர்கள் பொய், இறைவன் பொய் என்றெல்லாம் சொல்லி விடுகின்றார்கள் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா? 

=================================================================
# சித்தனை காண்பதற்கும் பேசுவதற்கும்  தகுதி - கஷ்டம்தான் அப்பா
=================================================================

குருநாதர் :- அப்பனே, சித்தனை காண்பதற்கும், அப்பனே, சித்தனிடம் பேசுவதற்கும், அப்பனே தகுதிகள் வேண்டும் அப்பா.  அத்தகுதி என்னவென்றால்  கஷ்டம்தான் அப்பா, 

சத்சங்க அடியவர்கள் :-  ( சிரிப்புகள் )

அடியவர் :- மொத்தமா முடிச்சிட்டாருப்பா. ஒரேடியாக  முடிச்சிட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( சித்தர்களிடம் பேசுவதற்கும், சித்தர்கள் நாடி வருவதற்கும் எது முக்கியம்? மூலாதாரம்?  கஷ்டம் தான். )

குருநாதர் :- அப்பனே இக் கஷ்டத்தை தாண்டி வந்தால், இன்பத்தை கொடுக்க யாங்கள் தயார். ஆனால் அப்பனே, பாதியிலே நீங்கள் விட்டுச் சென்று விடுகிறீர்கள் அப்பனே. எப்படி அப்பா  நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த கஷ்டத்தை தாண்டி வந்தால் தான், ஆனால் நீங்கள் பாதியிலே திரும்பி போயிருவீர்கள். 

குருநாதர் :- அப்பனே, அப்பொழுது எதை கொடுத்தாலும், அப்பனே, பின் நீங்கள், அப்பனே, அதை உபயோகித்து கொள்வீர்களா என்ன?  நீங்களே சிந்தியுங்கள் அப்பனே உங்களைப் பற்றி? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நான் உங்களுக்கு எதை கொடுத்தாலும், என்ன பண்ணுவீங்க? பாதியிலே விட்டுடுவீங்க. அவ்வளவுதான். அய்யா புரியுதுங்களா?  

குருநாதர் :- அப்பனே அனைத்தும் அப்பனே, அனைவருக்கும் கொடுத்துவிட்டால், அப்பனே, பின் படைத்தவனுக்கு ஏதப்பா  மரியாதை ?

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? எல்லாத்தையும் கொடுத்துட்டாரு. எல்லாத்தையும் கொடுத்துட்டாருன்னா….

அடியவர் :-  சாமியை  நினைக்க வேண்டியது இல்லையே. 

குருநாதர் :-அப்பனே, நீதான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கின்றாய். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, நான்தான்ப்பா கடவுள். இறைவன் எல்லாத்தையும் கொடுத்துட்டாருன்னா, நான்தான் கடவுள். நான்தான் கடவுள்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்க. ) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அப்பனே, இப்படித்தான் கலியுகத்தில்  நடக்கும் அப்பா. அப்பனே ஆனாலும் அப்பனே, ஏதும் பின் இறைவன் கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. ஆனால் இப்படி பக்திக்குள் நுழைந்து, அப்பனே, அனைத்தும் செய்வார்கள் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( என்ன செய்வாங்களாம்? ஒன்னும் கொடுக்க மாட்டார் இறைவன். ஆனால் என்ன பண்ணுவாங்க? புரியுதா? இது மாதிரி எல்லாம் மாலை அணிந்துகொண்டு தான் தான் இறைவன் என்று கூறுவார்கள். ) 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இறைவன் ஒன்றும் கிடைக்கவில்லை. நாம் இறைவன் வேடமாவது போடுவோம் என்றுதான் கலியுகத்தில்  போடுவார்கள். அப்பா.

குருநாதர் :- அப்பனே பல தோல்விகள். அப்பனே பல வழியில் துன்பங்கள் அனுபவித்திருக்கின்றீர்கள் நீங்கள்.  அதனால்தான் உங்களை அழைத்தேன் அப்பனே. (அடியவர்கள்) பல பேர் இருக்கின்றார்கள் அப்பனே. அவரவர் அப்பனே, பின் நிச்சயம். அப்பனே, யாருடைய? அப்பனே, எப்பொழுது, பின் எவ்வளவு நேரம் கேட்க வேண்டும்? அகத்தியன் நிச்சயம் சொல் என்றெல்லாம் அப்பனே, பின் எவை என்று அறிந்து கூட, யான் தான் வரவழைக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

===========================================================================
# இலை அசைவு நேரத்தில் உங்களுக்கு அனைத்தும் யான் கொடுத்து விடலாம்
===========================================================================

குருநாதர் :- அப்பனே, இதனால்தான். அப்பனே, பக்குவங்கள் பட்டுவிட்டால், அப்பனே, பின் அதாவது, அப்பனே, பின் அறிந்து கூட, அப்பனே, பின் இலை அசைவு நேரத்தில் உங்களுக்கு அனைத்தும் யான் கொடுத்து விடலாம். ஆனாலும், அப்பனே, அதை நீங்கள், அப்பனே, பெற்றுக் கொண்டாலும், அப்பனே, நிச்சயம். அப்பனே, அதாவது, காற்று வந்தால், மாவு போல் பறந்துவிடும் என்பேன். அப்பனே, பக்குவம் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இலை அசைகின்ற நேரத்தில் , குருநாதரால் அனைத்தும் அப்படியே கொடுக்க முடியும். ஆனா, நீங்க என்ன பண்ணுவீங்கன்னா, இப்படி வாங்கிப்பீங்க. காத்து வந்தா, மாவு எப்படி பறக்கும்? அப்படி விட்டுருவீங்களேப்பா. அதனால உங்களிடம் ( கஷ்டங்களை கொடுத்து ) நல்ல ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி விட்டால், அதை அப்படியே  தக்க வச்சுக்க முடியும். ) 

குருநாதர் :- அப்பனே, இதனால்தான். அப்பனே, யானும் சொல்லலாம். அப்பனே, ஒரு மந்திரத்தை சொல்லிவிடலாம். அப்பனே, திருத்தலத்தை சொல்லிவிடலாம். அங்கு செல், இங்கு செல், இது நடந்துவிடும் என்று. ஆனால் நடக்காதப்பா, 

குருநாதர் :- அப்பனே, ஏன் நடக்காது என்று நீங்களே கூறுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் நடக்காது? 

அடியவர் :- பக்குவம் இல்லை 

குருநாதர் :- அம்மையே, இதை யான் சொல்லிவிட்டேன் முதலிலேயே. 

அடியவர் :-  கர்ம வினை தான் 

குருநாதர் :- அறிந்து கூட, பின் இதனையும் என்னால் மாற்ற முடியும் என்று நினைத்துக்கொள்.

அடியவர் :- மனதை அடக்கினால்….

குருநாதர் :- அறிந்து கூட அடக்க முடியவில்லையே உன்னாலேயே தாயே, 

சத்சங்க அடியவர்கள் :-  ( சிரிப்புகள் )

குருநாதர் :-  நீ அடக்கி இருந்தால், நிச்சயம், பின் மற்றவர்களுக்கு நீ உதவி செய்திருக்கலாமே !!! 

அடியவர் :-  உண்மைதானே  ஐயா? 

குருநாதர் :-  அப்பனே, உண்மைதான். யானும் சொல்கின்றேன். 

அடியவர் :- மனசு அதுக்கு தான் இவ்வளவு நம்ம…. இது பண்ண வேண்டியது இல்லை, ஐயா. 

=================================================================
# நியாயமான கோரிக்கைகளை, நிச்சயம், இறைவன் ஏற்பானப்பா
=================================================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அறிந்து கூட, அப்பனே, நியாயமான கோரிக்கைகளை, நிச்சயம், இறைவன் ஏற்பானப்பா. பின் அதாவது, நீங்கள் அனைவருமே கர்மாத்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். அப்பனே, இதை பலமுறை நான் எடுத்துரைத்து விட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன் பிள்ளை, அப்பனே, பின் கேட்கும் பொழுது கூட, பின் இது தேவை என்று, பின் தெரியும் என்பேன். அப்பனே, என் தாய்க்கும் தந்தைக்கும், அப்படி அதாவது, பன்மடங்கு, இறைவன் மிகப்பெரியவன். அப்பா, அப்பனே, பின் நீங்கள் கேட்கும் பொழுது, அவனுக்கு தெரியாதப்பா, உங்களுக்கு, பின் நல்லவையா, தேவையா என்று, நீங்களே சொல்லுங்கள். 

===============================================================
# இறைவன் உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார்
===============================================================

குருநாதர் :-  அப்பனே, இறைவன் உங்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.  ஆனால் நீங்களோ, அப்பனே எப்படிப்பா? 


====================================================
# குருநாதர் பல யுகங்களாக பார்க்கும்  ஒரு  நிகழ்வு 
====================================================

குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே, நிச்சயம், அப்பனே, அதாவது, பன்மடங்கு, அப்பனே, யான் பார்த்துவிட்டேன் பல யுகங்களாக அப்பனே. 

குருநாதர் :- நிச்சயம், இறைவனிடத்தில், அனைத்தும் பெற்றுவிட்டு, அப்பனே, நிச்சயம், மீண்டும், அப்பனே, பின், இறைவனை வணங்காமல் அப்பனே மீண்டும், அனைத்தும் இழந்து விட்டு, மீண்டும், இறைவனிடத்தில் வந்து சேருகின்றான் அப்பா. இதுதான் மனிதனின் வாழ்க்கை என்பேன் அப்பனே. 

குருநாதர் :- இறைவன். ஐயோ, பாவம் என்று சொல்கின்றான். அவ்வளவுதான். 

==============================================================
# இறைவன் கொடுக்கும் போது,  வைக்கும் தேர்வு - புண்ணியம் 
==============================================================

குருநாதர் :- அப்பனே, ஆனால் இதில்தான் தேர்வு. அப்பனே, புண்ணியம் என்ற வார்த்தை வருகின்றது உள்ளே. ஆனால், பின் அனைத்தும் கொடுக்கும் பொழுது, அவன் புண்ணியம் என்ற தேர்வை மறந்து விடுகின்றான். மனிதன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்பதான் தேர்வு. என்ன தேர்வு? எல்லாம் கொடுக்கும் பொழுது, நல்லவனா, கெட்டவனான்னு தெரியும். கொடுத்ததற்கு அப்புறம், புண்ணியம் செய்கின்றார்களா அவங்க?  அது தான் இறைவன் வைக்கும் தேர்வு. அதைச் செய்வதே இல்லை. )

குருநாதர் :-  அப்பனே, பின் இறைவன் பார்ப்பான் அப்பனே.  ஏதோ ரூபத்தில், அப்பனே, இறைவனே வருவான் அப்பா. அப்பனே, அடேய், மனிதா, திருந்து போ.  நிச்சயம், கர்மத்தில்  விழுந்துகின்றாய். பாவத்தில் விழுந்து விழுந்துகின்றாய் என்று, நிச்சயம், காப்பாற்ற முடியாததா என்றெல்லாம், பல மடங்கு. அப்பனே, ஏதோ ரூபத்தில், தடைப்பட்டு, தடைப்பட்டு.  ஆனாலும், அப்பனே, நிச்சயம், கர்மத்தை, அதாவது, பாவத்தை சம்பாதித்துக் கொண்டு, மீண்டும், பின் நோய்வாய்ப்பட்டு, இறைவன் கூட காப்பாற்ற மாட்டான் அப்பா. இறைவன் பார்த்து, பாவம் என்றுதான் நினைப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் எல்லாவற்றையும் கொடுக்கத் தயார், ஆனால் மனிதன் அதை தவறாகப் பயன்படுத்தினால், இறைவனே தடைகள் போட்டு எச்சரிக்கைகள் தருவார். "வேணாம்டா, இப்படி பண்ணாதே" என்று அடுக்கடுக்காக அறிவுறுத்துவார். ஆனாலும், மனிதன் அதை ஏற்காமல், மீனையும் இழந்து, இறைவன் வரும்போதும் நோயுடன் வாழும் நிலைக்கு தள்ளப்படுவான். இது பக்குவமில்லாத மனதின் விளைவாகும். ) 

அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 2

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

========================================================
# அன்னை மகாலட்சுமியின் மறு பெயர் —  நோய்
========================================================

குருநாதர் :-  அப்பனே, யான் ஒன்றை, அப்பனே, ஏனைய வாக்குகளில்  கூட, யான் தெரிவித்துவிட்டேன். மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு, உங்களுக்கு சொல்கின்றேன் அப்பனே.  

“““““““ மகாலட்சுமியின் மறு பெயர், அப்பனே, நோய் என்பேன். ”””””” 

சுவடி ஓதும் மைந்தன் :-  பணம் வந்தா, நோய் வந்துரும். மகாலட்சுமியின் மறு பெயர், நோய். பணம் நிறைய வந்தா, நோய் வரும், நோய் வரும், கண்டிப்பாக. 

========================================================
# பணத்தை கொடுத்து, உங்களிடத்தில்  விளையாடுவான் இறைவன். 
========================================================

குருநாதர் :-  ஏன், எதற்கு என்றால், பணத்தை கொடுத்து, உங்களிடத்தில்  விளையாடுவான் இறைவன். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்க கையில பணத்தை கொடுத்து தான், விளையாடுவாங்களாம் இறைவன், அய்யா புரியுதுங்களா? 


குருநாதர் :-  ஆனால், அனைத்தும் போய்விட்டது என்றால், என்னுடைய பணம் என்பான். இதுதான் முட்டாள்தனம். மனிதனின் முட்டாள்தனம், எவ்வளவு கீழாக இருக்கின்றான் என்று பார். 
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் மனிதனிடம் பணம் கொடுத்து விளையாடுவார். ஆனால், மனிதன் எல்லாவற்றையும் இழந்த போதும் "என்னுடைய பணம்" என்று பிடித்துக்கொள்வது முட்டாள்தனம். இது மனிதனின் கீழான மனநிலையை வெளிப்படுத்துகிறது. உண்மையில், இறைவன் மனிதனின் அகந்தையை சோதிக்கிறார்; மனிதன் பணத்தை தன் சொத்தாக நினைக்கிறான் என்பது தான் அவன் தவறு.)

குருநாதர் :- அப்பனே, அவை மட்டுமில்லை. அப்பனே, மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே. ஏனென்றால், இடையிடையே இவையெல்லாம் சொன்னால்தான் அப்பனே. 

குருநாதர் :- அப்பனே, உடம்பும் உங்களுக்கு சொந்தமில்லை. உயிர் கூட சொந்தமில்லை. அப்பொழுது, அனைத்தும் பின் எங்களுக்கு சொந்தம் என்று, நீங்கள் எவ்வாறு அப்பனே முடிவு கட்டியிருக்கிறீர்கள் என்பது, என் பின் தெரிய வேண்டும்? அப்பனே, யாம் உணர்வோம். ஆனால், நீங்கள் சொல்லுங்கள்?


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா புரியுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே, எதை என்று அறிய, அறிய, மனதை கட்டுக்கொண்டு கொண்டு வந்துவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் இறைவனுக்கு ஏதப்பா வேலை? 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனதை நீங்க கண்ட்ரோல் பண்ணீங்கன்னா, இறைவனுக்கு வேலை இல்லை என்று சொல்கின்றார். 

குருநாதர் :-  அப்பனே, திருடன் திருந்திவிட்டால், அப்பனே, காவலாளிக்கு ஏதப்பா வேலை? அப்பனே, ஏன் திருடன் திருந்தவில்லை? நீ கூற வேண்டும், அப்பனே, விளக்கத்தை? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( திருடன் திருந்திவிட்டால் காவலருக்கு வேலை இல்லாதது போல, மனிதன் தன் மனதை அடக்கி விட்டால் இறைவனுக்கும் வேலை இருக்காது. ஏனெனில், மனதை கட்டுப்படுத்தியவனுக்கு பிறவிகள் தேவையில்லை. நல்லது, தீயது என்ன என்பதை தெளிவாக உணர முடியும். )

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், மனதை அப்ப, நிச்சயம், கட்டிவிட்டால், 

குருநாதர் :- அப்பனே, பிறப்பு என்பதே இல்லையப்பா. அப்பனே, நிச்சயம், இவைதன் பின் அறிவியல் வழியாகவும் , வேதியியல் வழியாகவும் , நிச்சயம், கணக்கியல் வழியாகவும் இன்னும், அப்பனே விளக்குகின்றேன் அப்பனே தெளிவாக.  ஆனால், திருத்தலத்தில் மட்டுமே. ஏனென்றால், அங்கங்கு இருக்கும் சக்தியை வைத்து தான், அப்பனே, யாங்கள் வந்து வாக்கை செப்ப முடியுமப்பா. 

குருநாதர் :- அதனால, அப்பனே??

சுவடி ஓதும் மைந்தன் :- கொஸ்டின் மார்க் போட்டுவிட்டார், சொல்லுவோம். அதனால, அப்பனேன்னு சொல்லிட்டு, கொஸ்டின் மார்க் வந்துச்சு. அதனால, ஒரு என்ன சொல்றாரு, 

அடியவர் :- அப்படின்னா, வந்து இந்த இந்த சிருஷ்டின்றது, வந்து இந்த வேறுபாடு இருக்கிறதுனாலதான், நான் வந்து நல்லது கெட்டதுன்றதுனாலதான் நடக்கிறது. இல்லைன்னா, நடக்காது, அப்படின்றதுதான் புரியறது. ஆமா, 


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இதனால் அப்பனே, நிச்சயம், மனதிற்கு பல விஷயங்கள் தேவை அப்பா. இதனால்தான், அப்பனே, பாவங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. அப்பனே, உண்மையா? 

சுவடி ஓதும் மைந்தன் :- உண்மைதான், மனதிற்கு பல விஷயங்கள் தேவை. அதற்காகத்தான், பாவங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. 

========================================================
# உங்களுக்கு தானாக புண்ணியம் சேரும் ரகசியம் 
========================================================

குருநாதர் :-  அப்பனே, மனதிற்கு ஏது தேவையில்லை என்றால், அப்பனே, புண்ணியம் தான் சேருமாப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனசுக்கு வந்து, எதுவும் தேவையில்லாத போது, புண்ணியம் சேர்ந்தது. 

குருநாதர் :-  அப்பனே, இதனால், நிச்சயம், நீங்கள் சொல்ல வேண்டும். அப்பனே, மனதை எவ்வாறு, நிச்சயம், பின் கட்டுக்குள் வரவேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க யாராவது சொல்லுப்பா? மனசு இப்ப வந்து கட்டுக்குள் வரவேண்டும். நீங்க யாராவது சொல்லலாம்னு சொல்லுங்க. 

அடியவர் :- இன்பமோ, துன்பமோ, ஒண்ணுமே தெரியல. இவ்வளவு வெறும் அந்த உடலை வச்சுதான், அந்த இன்பமோ, துன்பமோ, அதுல விளையாடுது. 

குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இவை தெளிவான பதில் இல்லை. 

அடியவர் :- சரணாகதி.

குருநாதர் :- அம்மையே, சரணாகதி கூட ஏன் அடைகின்றாய்? மனதை, மனதை கட்டுப்படுத்தி விட்டால், 

அடியவர் :- …………..


========================================================
# எப்போது உங்களால் இறைவன் சந்தோஷம் அடைவார் ?
========================================================

குருநாதர் :-  அம்மையே, அப்பனே, அனைவருக்கும் ஒன்றை சொல்கின்றேன். மனதை கட்டுப்படுத்தி விட்டால், நிச்சயம், இறைவன் நேரில் வந்தாலும், யான் இறைவன் என்று சொன்னாலும், உந்தனுக்கு ஏதப்பா வேலை? நீ சென்று விடு  என்று நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள் அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-   ( ஒருவன் தன் மனதை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டால், இறைவன் நேரில் வந்து “நான் தான் இறைவன்” என்று சொன்னாலும், அவன் அதில் ஈடுபட மாட்டான். “நீ போ, உன் வேலை பார்த்துக்கொள்; என் வேலை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்வான். இதுவே மன அடக்கத்தின் உச்ச நிலை — எந்த வெளிப்பாடுகளும் அவனை குலைக்க முடியாது.) 


குருநாதர் :- அப்பனே. அப்பொழுதுதான் இறைவனுக்கு சந்தோஷம். அப்பா, நாம் படைத்த படைப்பு இப்படியா என்று, ஆனால் உலகத்தில் யாருக்கும் இப்படி இல்லையப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் நல்லது பண்ண, துடிச்சுட்டே இருக்கிறார். 

அடியவர் : ஆனால்,  உங்களுக்கு முழுமை அடைஞ்சிட்டா, மனம் கட்டுப்பாடு ஆயிடும். 

குருநாதர் :- அம்மையே, நிச்சயம், (மனம்) முழுமை அடைந்து விட்டாலும், பிறவிகள் வந்து கொண்டே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   முழுமை அடைந்து விட்டாலும், பிறவி , புரியுதுங்களா? 

குருநாதர் :- அம்மையே, உன் எண்ணங்கள் முழுமை அடைந்து விட்டது என்று எண்ணிக்கொள். ஆனாலும், பின் இதுவே நடக்கட்டும், இதுவே நடக்கட்டும். இன்னும் அனுபவிக்க வேண்டும். இன்னும் பிறவில் கூட வேண்டியதுதான் நீ கேட்பாய்?. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைவு அடைந்து விட்டால், எல்லா ஆசைகளும் நிறைந்து, என்ன பண்ணுவீங்க? இன்னும் கொஞ்ச நாள் சூப்பரா இருக்குதுப்பா. லைஃப் இன்னும் கொடுப்பா, இன்னும் கொடுப்பான்னு சொல்லுவீங்க.

அடியவர் :- இப்படியே கண்டினியூ ஆட்டும்பா. 

குருநாதர் :- ஆனால் துன்பத்தை கொடுத்துவிட்டால், போதுமான சாமி என்று சொல்லிவிடுவீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- உண்மை, ஆனால் ஒரு துன்பத்தை எடுத்து வந்து வச்சாருன்னா, எப்பா, இந்த வாழ்க்கை புரியுதுங்களா? போதும்.

குருநாதர் :- அப்பனே, அம்மைகளை நல்விதமாக, இறைவன் உங்களுக்கு சேவை செய்து கொண்டே தான் இருக்கின்றான். ஆனால், நீங்கள் தான் அதை உணரவே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இறைவன் உங்களுக்காக சேவை செஞ்சு கொண்டேதான் இருக்கின்றார்.  ஆனால் நீங்கள் தான் உணரவில்லை. 

==========================================
# இறைவா நீயே அனைத்தும் - அதி ரகசியம் 
==========================================

குருநாதர் :- பின் ஒன்று சொல்லுங்களேன், நிச்சயம், அனைத்தும் இறைவன் செயலே என்று, அப்பொழுது இறைவனும் சந்தோஷப்படுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அனைத்தும் இறைவனின் செயலாகவே பார்க்க வேண்டும். “அனைத்தும் நீ” என்று உணர்ந்து, எதையும் தனிப்பட்டதாக எண்ணாமல், இறைவனின் லீலையாக ஏற்றுக்கொள்வது தான் உண்மையான பக்குவம். இப்படியான மனநிலையை அடைந்தவனைக் கண்டு இறைவன் சந்தோஷப்படுகிறார். ) 

அடியவர் :- சர்வம் சிவார்ப்பணம் 

========================================================
# இறைவன், நீங்கள் கேட்டாலும், கொடுக்கப் போவதில்லை
========================================================

குருநாதர் :- அப்பனே. இதனால், அப்பனே, பின் இறைவன், நீங்கள் கேட்டாலும், கொடுக்கப் போவதில்லை. அப்பொழுது ஏன், இறைவனிடத்தில் நீங்கள் கேட்டுக் கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, இறைவன், நீங்க கேட்டாலும், கொடுக்க போறதில்லை. அப்ப, இறைவன் கிட்ட , நீங்க ஏன் கேக்குறீங்க? 

அடியவர் :- கேட்டா, சாமி, அழுவுற குழந்தைக்கு, சாமி, பால் குடிக்குதே. 

குருநாதர் :-  அறிந்து கூட, படைத்தவனுக்கு தெரியாதாப்பா? அப்பனே, உன் பிள்ளைக்கு எப்பொழுது பசி இருக்கும் என்பது, உனக்கு தெரியாதாப்பா? 

அடியவர் :- சாமி, அம்மாவுக்கு எல்லா குழந்தையும் ஒன்னுதான். ஆனா, அழுவுற குழந்தைக்கு, சாமி, பால் கொடுக்குது. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அறிய. அப்பனே, எதுவோ கடித்துவிட்டது. அப்பொழுது கூட, அழுகின்றது. அப்பொழுது, நீ பின் பாலை பின் கொடுப்பாயா அப்பனே?

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தை ஏதோ கடித்து விட்டது. அழுகிறது. ஆனால், அந்த அழுகை உண்மையில் பசியால் வந்ததா, வேறொரு காரணத்தால் வந்ததா என்பதை அறியாமல், பசிக்காக கொடுக்கும் பாலை கொடுக்கலாமா? இதுபோல், வாழ்க்கையில் உண்மையான காரணத்தை அறிந்து செயல்பட வேண்டும். )

குருநாதர் :- அப்பனே, அதை தெரியாமல், அப்பனே, நிச்சயம், பின் எவை என்று கூற, குழந்தை இறந்துவிடும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு குழந்தை அழுவதற்கான உண்மையான காரணத்தை அறியாமல், "பசிக்குது" என்று பால் கொடுத்தால், அது தவறான தீர்வாகி, குழந்தையின் உயிரையே இழக்கச் செய்யலாம். இதுபோல், வாழ்க்கையிலும் நிகழ்வுகளுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்களை புரிந்து செயல்பட வேண்டும். தவறான புரிதல், நல்ல நோக்கத்துடன் செய்தாலும், தீங்கு விளைவிக்கலாம். சரியாக புரிந்து செயல்படுவதே ஞானம். )

குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும். அப்பனே, எப்படி அழுதால், அப்பனே, எப்படி இருக்கும் என்பதெல்லாம், தாய்க்கு தெரியுமப்பா. உந்தனுக்கு தெரியாதப்பா, நீ என்ன, பத்து மாசம் சுமந்தாயா? என்ன 

அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )

சுவடி ஓதும் மைந்தன் :- ( உண்மை. அப்ப, ஒரு தாய்க்கு தெரியும், சார். எப்படி அழுதால், எப்படி இருந்தால், எதுக்கு அவங்களுக்கு தெரியும்ன்றாரு. அப்ப, நீ பத்து மாசம் சுமக்கவில்லை  அப்பா, அதை விட்டுவிடு அப்பா என்று சொல்கின்றார் அய்யா. ) 

குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, கேளுங்கள். அப்பனே, 

அடியவர் :-  வேலைக்கு நம்ம ரிசல்ட் எதிர்பார்க்கிறதுக்கு ஆசை. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, எவை என்று அறிய அறிய . அப்பனே, தேர்வை எழுதுகின்றாய். அப்பனே, ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம், இவ்வளவுதான் வரவேண்டும் என்று நீ எண்ணுகின்றாயா? என்ன 


வரணும்னு எண்ணுகின்றாயா? இல்ல, இப்ப, தேர்வு எழுதுற, நீங்க வந்து எக்ஸாம் எழுதுறீங்க. வந்து மார்க், எனக்கு 50 தான் வரணும், 60 தான் வரணும், 70 தான் வரணும்னு எண்ணுகின்றாயா? அப்பனே, அப்படி இருந்தாலும், நீ நினைத்தபடி தான் வருகின்றதா? என்ன, 

குருநாதர் :- அப்பனே, அப்படி இருந்தாலும், நீ நினைத்தபடி தான் வருகின்றதா? என்ன அப்பனே ?

அடியவர் :-  ஆபீஸ் வேலை பண்ணாலும் , சேலரி எவ்வளவுதான் வரும்னு எதிர்பார்க்கிற ஆசை. 

குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, அப்பனே, கடமை செய் என்று, அப்பனே, ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, நடத்த வைப்பதும், அப்பனே, பின் நடக்க வைப்பதும், அப்பனே, இன்னும், அப்பனே, அனைத்தும் கொடுப்பதும், அப்பனே, பின் அவனுடைய செயலாப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே அவனுடைய செயல். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதாவது ₹10000 உந்தனுக்கு தருகின்றார்கள் என்பேன் அப்பனே.  நீ தலை கீழே நில். எந்தனுக்கு ₹20000 வேண்டும், ₹20000 வேண்டும் என்று, அப்பனே, மரியாதையுடன் உன்னை (வேலையை விட்டு ) அனுப்பி விடுவார்கள். அப்பா.

அடியவர்கள் :- ( சிரிப்பு )

சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஒருவர் ₹10000 சம்பளத்தில் வேலை செய்கிறார். ஆனால் அவர் “தலைகீழாக நின்று, ₹20000 கொடு” என்று கோரினால், முதலாளி அதற்கு பதிலாக, மரியாதையுடன், அவர் செய்ய வேண்டிய பணியைச் செய்து, அமைதியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார். ) 

========================================================
# தேவையில்லாத கேட்டுக்கொண்டிருந்தால் - இறைவன் மரியாதையுடன் கஷ்டத்தை கொடுப்பார்
========================================================

குருநாதர் :- அதே போல தான், அப்பா, பின் தேவையில்லாத இறைவனை, பின் கேட்டுக்கொண்டிருந்தால், நிச்சயம், மரியாதையுடன், அப்பனே, இறைவன், அப்பனே, கஷ்டத்தை கொடுப்பான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டத்தை கொடுப்பாரு. தேவையில்லாத எல்லாம் இறைவன் கையில கேட்டிருந்தால், என்ன சொல்லுவாரு? கஷ்டம், கஷ்டத்தை தான் கொடுப்பாரு. 

குருநாதர் :-  ஏனென்றால், அப்பனே, நீ உணர்ந்து விடுவாய் என்று. அப்பனே, இப்பொழுது கேட்டாயே பணியில் அப்பனே.  அதாவது பின் ₹10000 (உனக்கு) சம்பளம், அதற்கு தகுந்தார் போல், அப்பனே, நிச்சயம், பின் அதாவது அதிகம் கேட்டாலும், அப்பனே, ஏன் அதிகமாக கொடுப்பதில்லை உந்தனுக்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு ₹10000 தான் உங்களுக்கு சம்பளம் அந்த பொசிஷன்ல இருக்கின்றீர்கள் . ஏன் உங்களுக்கு ₹20000 அல்லது  ₹30000 சம்பளம் கொடுக்க மாட்டார்கள்?  )

குருநாதர் :- அப்பனே, உந்தன் பக்குவத்திற்கு ஏற்பத்தான் கொடுப்பார்கள். அப்பனே, புரிகின்றதா? 

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருவர் செய்யும் வேலை மற்றும் அவர் உழைக்கும் முறையைப் பார்த்து, அவருக்குத் தகுந்த மரியாதை, சம்பளம். )

========================================================
#  இறைவன் உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் உண்மைகள்
=======================================================

குருநாதர் :- அப்பனே, மனிதன் இப்படி பார்த்து கொடுக்கின்றான் என்றால், இறைவன் எவ்வளவு பெரியவன் அப்பா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு சாதாரண மனிதனே, உங்கள் நிலைமை, கஷ்டத்தை பார்த்து, உங்களுடைய அறிவு பார்த்து, உங்களுடைய திறமை பார்த்து, சம்பளம் கொடுக்கிறார் என்றால் , இறைவன் எவ்வளவு பெரியவர்? அவர் எப்படி கொடுப்பார்? 

குருநாதர் :- இதனால், அப்பனே, பின் நல் மூலமாக, அப்பனே, பின் எங்களிடத்தில், அதாவது, அப்பனே, பின் வந்துவிட்டால், அறிவை பயன்படுத்துங்கள், போதுமானது என்று அப்பனே.  மற்றவையெல்லாம் தானாவே, நாங்கள் செய்து விடுவோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தர்களிடத்தில் வந்துட்டா, அறிவை வந்து நல்லா பயன்படுத்திட்டா போதும். மீதி எல்லாம் நாங்களே கொடுத்துருவோம். 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அதாவது, பின் அறிவுள்ள குழந்தை, அப்பனே, அழாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அறிவுள்ள, இப்ப சொன்னீங்க பாருங்க  அறிவுள்ள குழந்தை அழுது, பால் கேட்காது. அய்யா  புரியுதுங்களா? 

குருநாதர் :- நிச்சயம், அப்போது நீங்கள் எல்லாம், அதாவது, நாங்கள் எல்லாம் அறிவில்லாததா என்று நினைத்துக் கொள்ளலாம். ஆமாம், அப்படித்தான். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )


========================================================
#  அகத்திய மாமுனிவரை, இறைவனை குறை கூறுவது - பாவம் 
=======================================================

குருநாதர் :-  அப்பனே, அறிவில்லாததால்தான், அப்பனே, இவ்வளவு கஷ்டங்கள். அப்பனே, பின் இவ்வாறு உங்களுக்கு அறிவில்லாததால், நீங்கள் மற்றவர்களை தேடி செல்கிறீர்கள் என்று, அப்பனே, அவன் பயன்படுத்துகின்றான். ஆஹா, இவன் தன் நிச்சயம், இவனிடத்தில் பணங்கள் இருக்கின்றது. (பணங்கள்) பிடுங்குவோம் என்று, பரிகாரம் கூறி, அவை, அவை என்று, கடைசியில் நடுத்தெருவில் நிற்க வைக்க வைக்கின்றான். அப்பொழுது, நீங்கள் என்ன சொல்வீர்கள்? அகத்தின் பொய், இறைவன் பொய், அனைத்தும் செய்தேன் என்று, அனைத்தும் செய்தது எவை யாருக்காக செய்தீர்கள்? 

அடியவர்கள் :- ( அமைதி )

குருநாதர் :-  அப்பனே, உண்மையை சொல்கின்றேன். அப்பனே, நிச்சயம், கலியுகத்தில் இறைவன் அழகாக இருக்கின்றான் அப்பா. ஆனால் மனிதன் அதை உணர மாட்டான். அப்பா. ஆனால் மனிதன் என்ன செய்வான் தெரியுமா? இறைவன் பார்க்கத்தானா போகின்றான்? நிச்சயம், அவனைப் போலவே நாம் நடிப்போம் என்று, பின் ஆயுதத்தை எடுப்பான். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( கலியுகத்தில் இறைவன் அழகாக இருப்பினும், மனிதன் உணர முடியாது. மனிதன் இறைவனைப் போல நடிக்க முயன்று, ஆயுதம் எடுத்து அதிகாரம் பிடிக்க விரும்புகிறான். இறைவன் வெளிப்படையாக எதையும் தர மாட்டார் என்பதால், சிலர் “இறைவன் இல்ல” என எண்ணுகிறார்கள். இதனால், மனிதன் போலி இறைவனாக நடித்து,போலி வேஷம் எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. இது தவறு. )

குருநாதர் :- அப்பனே, அவனுடைய வாழ்க்கையே, அவனுக்கு பின் நிச்சயம் பார்க்க தெரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? 

குருநாதர் :- இதனால், அப்பனே, அங்கு சென்றால், அப்பனே, இறைவன் கூட அட, முட்டாளே, உந்தனுக்கு எவ்வளவு அறிவுகள் கொடுத்திருக்கின்றேனே, அதை ஒழுங்காக பயன்படுத்தவில்லையே. நீ நிச்சயம், அவனை விட, நீ என் கீழானவன் என்று, கஷ்டத்தை தான் கொடுப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இறைவன் மனிதனுக்கு அறிவையும் அறிவாற்றலையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் அதை பயன்படுத்தாமல் ஏமாறிக்கொண்டு, “நீ ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்கும்போது, இறைவன் பதிலுக்கு இன்னும் கஷ்டங்களைத் தருவார். ஏனெனில், தெளிவும் விவேகமும் இருந்தும் தவறு செய்வது முட்டாள்தனம். இது பல உரைகளில் சொல்லப்பட்ட உண்மை. )

அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 3

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 

( இவ் தொடர் வாக்கின்- பகுதி 3 )

குருநாதர் :- அப்பனே, அதாவது, உன்னுள்ளே இறைவனை தேடு என்று சொல்லி இருக்கின்றார்கள் அப்பனே. பின் நிச்சயம், யாராவது அதை செய்திருக்கிறீர்களா? 

குருநாதர் :- நிச்சயம், பின் தாயை மதியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். மதித்தீர்களா? 

குருநாதர் :- தந்தையை மதியுங்கள் என்று சொல்லி  சொல்லியிருக்கின்றார்கள். பின், நிச்சயம், அவையும் மதிப்பதில்லை. நிச்சயம், நேரடியாக இறைவனிடம் சென்று, பின் அதைத் தா,  இதைத் தா என்றால், நிச்சயம், எப்படி தருவான்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( தாயை , தந்தையை மதிக்க வேண்டும் என்று பலர் சொன்னாலும், மனிதன் அதை மதிக்காமல், நேரடியாக இறைவனிடம் கோரிக்கைகள் வைக்கிறான். ஆனால் மனம் சீராக இல்லாமல், நேரடியாக இறைவனிடம் சென்றால், அவர் எதையும் தரமாட்டார்.) 

குருநாதர் :- மரியாதையுடன், நிச்சயம், இன்னும் கஷ்டத்தை தான் கொடுப்பான். 

=================================================
# ஏன் திருத்தலத்திற்கு சென்றால் சிலருக்கு கஷ்டங்கள் வருகின்றது?
=================================================

குருநாதர் :- அப்பனே, இதனாலதான், அப்பனே, திருத்தலத்திற்கு சில பேர், நிச்சயம், அப்பனே, அறிந்து கூட சென்று வந்தால், கஷ்டங்கள் வந்துவிடும் என்பேன். அப்பனே, அப்பொழுது, நிச்சயம், நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, ஏன் இறைவன் கிட்ட போனா, ஏன் கஷ்டம் வருதாம்? புரியுதுங்களா?  யாரும் மதிக்கிறது இல்லை. 

=======================================
# இறைவன் உங்களிடம் விரும்புவது என்ன ?
========================================
=======================================
# தாய் தந்தையை  மதித்து , காலடியில் விழுந்து ஆசி வாங்க வேண்டும்.
========================================

குருநாதர் :- அப்பனே, இறைவன் என்ன விரும்புகின்றான் என்றால், அப்பனே, நிச்சயம், முதலில் தாய் தந்தையரை  மதித்து, பின், அதாவது, பின் காலடியில் விழுந்து, நிச்சயம், பின் வந்தால், இறைவனுக்கு சந்தோஷம். (திருத்தலத்திற்கு) அங்கு உடனடியாக ஆசீர்வதிக்கப்படும். ஆனால் இப்பொழுதெல்லாம், திருத்தலத்திற்கு சென்றாலே, தாய் தந்தையிடம் சண்டையிட்டு தான் செல்கின்றார்கள். என்ன லாபம்? 

குருநாதர் :- அப்பனே, அதனால் உங்கள் நிலைமைக்கு யார் காரணம் என்றால், நீங்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, உங்கள் நிலைமைக்கு யார் காரணம்? நம்ம தான் நீங்க தான் காரணம்.

குருநாதர் :- அப்பனே, அந்நிலைமை எப்படி பின் மாற்றுவது என்பதை எல்லாம் இறைவன் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அப்பனே நீங்கள் சோம்பேறிகள். அதனால், அப்பனே, கேட்பதே இல்லை. 

குருநாதர் :-  அறிந்து கூட, அம்மையே, அப்பனே, அறிந்து கூட, பின் உங்கள் பிள்ளைகள், நிச்சயம், பின் அதாவது, பின் பள்ளிக்குச் சென்று, பின் முதல் தரத்தில், பின் தேர்ச்சி பெற்றால், உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் சொல்லுங்கள்?

=======================================
#  என் பக்தர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும்.
=======================================

குருநாதர் :- அதேபோலத்தான், பின் என் பக்தராக இருந்து கொண்டு, நீங்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே, நிச்சயம், என்னுடைய. அறிந்து கூட, நிச்சயம், அப்படி தேர்ச்சி பெற்று விட்டால், உங்களுக்கு அனைத்தும் கொடுத்துவிடுவேன் நான்.  ஏன், அதாவது, முதல் தரத்தில் நீங்கள், பின் உங்கள் பிள்ளை, பின் வெற்றி பெற்றுவிட்டால், என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் அல்லவா? அதே போலத்தான் யானும் கூட. 


குருநாதர் :- அப்பனே, இப்பொழுது அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று உங்களை குழப்பியே விடலாம். அப்பனே, ஆனாலும், அப்பனே, நிச்சயம், அப்பனே, விதியில் என்ன, அதாவது, நீங்கள் அங்கு என்ன கேட்டு வந்தீர்களோ, அதே தான் இங்கு நடக்கப்போகின்றது. அதே மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனாலும், அப்பனே, என்னால் முடியுமப்பா அனைத்தும் தர.  அதற்கும் பக்குவங்கள் வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்கள் என்ன கேட்டு வந்தீர்களோ, அதே விதி தான் இங்கு நடக்கப்போகிறது; அதை மீற முடியாது. எப்படியெல்லாம் முயற்சி செய்தாலும், இறைவனிடம் கேட்ட வரமே கிடைக்கும். ஆனால், அதை மாற்ற முடியுமா என்றால், அது இறைவனின் பக்குவத்திற்கே சார்ந்தது. அனைத்தும் தர இயலும், ஆனால் அதற்கும் உங்களின் பக்குவம் அவசியம் தேவை.) 

குருநாதர் :-  அப்பனே, விதியை மாற்ற முதலில், அப்பனே, அதாவது, நிச்சயம், அறிந்து கூட, என் பக்தர்கள், அப்பனே, நிச்சயம், பலபேர்கள் கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.  

=======================================
#  (1) விதியை மாற்ற - பொறாமை கொள்ள கூடாது
=======================================

குருநாதர் :-  அப்பனே, முதலில், அப்பனே, நிச்சயம், அப்பனே, சொல்கின்றேன். ஏனென்றால், யானும் பிரம்மாவிடத்தில் கூறி, அப்பனே, விதியை மாற்ற வேண்டும். அப்பனே, நிச்சயம், பொறாமை கொள்ள கூடாது, அப்பனே, சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல, விதியை மாத்துறதுக்கு என்னவா? பொறாமை படக்கூடாது. 

=======================================
#  (3) விதியை மாற்ற -  கோபப்படக்கூடாது
=======================================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அறிந்து கூட, கோபப்படக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து, விதி எல்லாம் மாத்தணும்னா, கோபப்படக்கூடாது. 

=======================================
#  (3) விதியை மாற்ற -   பிறரை தன்னைப்போல் எண்ண வேண்டும்.
=======================================

குருநாதர் :-  அப்பனே, பிறரை தன்னைப்போல் எண்ண வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

=======================================
#  (4) விதியை மாற்ற -   கருணை மனம் படைத்திருக்க வேண்டும். 
=======================================

குருநாதர் :-  தன்னை போல் எல்லாம் எண்ண வேண்டும். அறிந்து கூட, கருணை மனம் படைத்திருக்க வேண்டும். 

=======================================
#  (5) விதியை மாற்ற -   உண்மையே  பேச வேண்டும். 
=======================================

குருநாதர் :-  அறிந்து கூட, இன்னும் பின், அதாவது, உண்மையையே  பேச வேண்டும். 

=======================================
#  (6) விதியை மாற்ற -   மற்ற ஜீவராசிகள் கூட, நிச்சயம், தன் பின் இனமே
=======================================
குருநாதர் :-  மற்ற ஜீவராசிகள் கூட, நிச்சயம், தன் பின் இனமே என்று எண்ண வேண்டும். 

=======================================
#  (7) விதியை மாற்ற -  இறைவா நீயே அனைத்தும் 
=======================================
குருநாதர் :-  அறிந்து கூட, முதல் எவை என்று கூற, தெளிவு அனைத்திற்கும் காரணம், இறைவன் தான் என்று எண்ண வேண்டும். 

குருநாதர் :- அனைத்தும் இறைவனை, இறைவன் தான் எண்ண வேண்டும். இறைவனிடத்தில், அனைவரும் பிள்ளைகள் தான் என்று எண்ண வேண்டும். இப்படி எல்லாம், பின் நீங்கள் செய்து கொண்டிருந்தால், நிச்சயம், பிரம்மாவிடத்தில் கூறி, என் பக்தன், இவன் இப்படி எல்லாம் இருக்கின்றான். ஏதாவது செய் என்று கேட்கலாம். ஆனால், அப்படி இல்லையப்பா என் பக்தர்கள் யாருமே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா, ஐயா? அப்ப, இப்படி இருந்தால் மட்டுமே, பிரம்மா இடத்தில் போயிட்டு, விதியை மாத்த முடியும். 

குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, இதையெல்லாம் (விதியை) எப்படி எழுதுகின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே, எப்படி மனிதனை, பின் இறைவன் படைக்கின்றான் என்பதை எல்லாம்  அப்பனே, வருங்காலத்தில் யான் தெளிவுபடுத்துவேன். அனைத்தும் உங்களுக்கு கற்பிப்பேன். ஏனென்றால், அனைத்தும் தெரிந்து கொண்டால் தான் அப்பனே, மோட்சம் ஏற்படும் என்பேன். அப்பனே, அனைத்தும் தெரியாமல் சென்றால், மீண்டும் மீண்டும் உலகத்திற்கு வந்து வந்து, கஷ்டங்களை பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டியதுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( மனிதன் எப்படி உருவாக்கப்படுகிறான், விதிகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும், இறைவனின் செயல்முறைகளையும் வருங்காலத்தில் தெளிவாகக் கற்பிப்பேன். ஏனெனில், அனைத்தையும் உணர்ந்து அறிந்தாலே மோட்சம் சாத்தியமாகும். தெரியாமல் சென்றால், பிறவிகள் தொடரும்; உலகத்தில் மீண்டும் மீண்டும் வந்து, கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதுதான். )

குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் என் பக்தர்களுக்கு, அப்பனே, முதலில் தெளிவை தருகின்றேன் அப்பனே.  அவ் தெளிவை, அப்பனே, உங்களிடத்தில் கொடுத்துவிட்டால், அப்பனே, உங்களுக்கே புரியும் அப்பா. அது மட்டுமில்லாமல், அப்பனே, புண்ணியம் எப்படி சேர்த்துக்கொள்வது என்பதெல்லாம், அப்பனே, உங்களிடத்தில், அப்பனே, நிச்சயம், நான் சொல்லி விட்டால் போதுமானது அப்பா.  நீங்களே, அப்பனே, உங்களுக்கு துணை  அப்பனே.  அதனால், பின் மனிதனால், அப்பனே, அனைத்தும் சாதிக்க, சாதிக்க முடியும் அப்பா. இறைவன், அப்படித்தான் பூலோகத்திற்கு அனுப்புகின்றான். ஆனால், அப்பனே, சரியாகவே, மனிதன், மனிதன் பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் தனது பக்தர்களுக்கு முதலில் தெளிவை கொடுக்கின்றார். அது புரிந்தவுடன் வாழ்க்கை நன்றாக அமையும். புண்ணியம் சேர்க்கும் வழிகளையும் அவர் நேராக கூறுகிறார்; இதுவே போதுமான வழிகாட்டியாகும். மனிதன் தானே தன்னை துணையாகக் கொண்டு, அனைத்தையும் சாதிக்க முடியும் திறன் பெற்றவன். ஆனால், அந்த அருளையும் அறிவையும் சரியாக பயன்படுத்தாமல், மனிதன் தவறுகிறான் என்பதே வருத்தம். ) 

குருநாதர் :-  அப்பனே, யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அப்பனே, அவன் தனக்கு இறைவன் அருகிலே இருந்து, அப்பனே, அனைத்தும் தருவான் அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை யார் ஒருவர் சரியாக பயன்படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு வந்து, இறைவன் எல்லாம் தருவார். 

குருநாதர் :-  அப்பனே, அப்பனே, அதை பயன் படுத்தாதவரை, அப்பனே, ஒன்றும் நடக்கப்போவதில்லை. 

குருநாதர் :- அப்பனே, எதை பயன்படுத்த வேண்டும்? விதியை மாற்ற என்று யான் சொல்லிவிட்டேன். 

குருநாதர் :- அப்பனே, எண்ணம் போல் வாழ்க்கை என்று, அப்பனே, சொல்கின்றார்கள். அப்பனே, பெரியோர்கள்.

குருநாதர் :- அப்பனே, நல்ல நல்லெண்ணம் இருந்தால், அப்பனே, அவ் எண்ணங்கள் உன்னை உயர்த்தி வைக்கும். அப்பனே, கெட்ட எண்ணங்கள் இருந்தால், அவ் எண்ணங்களே  உன்னை தாழ்த்தி வைக்கும் அப்பா. அப்பனே, நிச்சயம், அப்பனே, இதை யான் சொல்லவில்லை. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இப்பொழுதெல்லாம் கலியுகத்தில் அப்படி ஆள் இல்லையப்பா. 

குருநாதர் :- சுயநலத்திற்காகவே வாழ்கின்றார்கள் என்பேன் அப்பனே. அப்படி இருந்தால், இறைவன் எப்படி அப்பா கொடுப்பான்? 

குருநாதர் :- அப்பனே, இறைவன் அனைவருக்குமே பொதுவானவன் என்பேன். அப்பனே, இறைவன் அனைவருக்குமே நல்லதைத்தான் செய்ய வேண்டும். ஆனால், ஒருவனுக்கு நல்லது செய்கின்றான், மற்றவனுக்கு தீமை செய்கின்றான். ஏன்? 

அடியவர்  :- நல்லதே நினைச்சுட்டு இருக்காரு. அதனால, அவருக்கு நல்லது நடக்குதா? 

குருநாதர் :- அம்மையே, அதுபோலவே வைத்துக்கொள்வோம். நன்மையே செய்து கொண்டிருக்கின்றான். அப்பொழுதுதான், அப்பொழுது கூட, இறைவன் தருவதில்லையே. ஏன்? 

அடியவர்  :- ஊழ்வினை, 

குருநாதர் :-  அறிந்து கூட, தாயே, ஊழ்வினை ஒரு பக்கத்தில் இருக்கட்டும். நிச்சயம், அதை நிச்சயம் கொடுப்பதும், நிச்சயம். அதாவது, ஊழ்வினை இருந்தாலும், இறைவன் பின் சில நேரங்களில், பின் ஒதுக்கி வைப்பான் பாவத்தையும் புண்ணியத்தையும் கூட. அதாவது, நீங்கள் சேமிப்பில் வைக்கின்றீர்களே. அதாவது, சேமிப்பு கிடங்கில், அதுபோல். 

குருநாதர் :-  தாயே, ஒன்றை சொல்கின்றேன். உங்கள் எண்ணம் போலவே, சரியாகவே எண்ணம் இருந்தால், நிச்சயம், புண்ணியத்தை, நிச்சயம், இந்தா எடுத்துக்கோ என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப, உங்களுடைய எண்ணம் சரியான இருந்துச்சுன்னா, என்ன பண்ணுவாராம்? அந்த புண்ணியம் இருக்குது, பார்த்தீங்களா? இந்தா பாரு, எடுத்து வச்சுக்கோ என்று  கொடுப்பாராம்.)

குருநாதர் :- நிச்சயம், எண்ணம் சரியில்லை என்றால், பின் பாவத்தை, நிச்சயம் கொடுப்பான். 

குருநாதர் :- அப்பொழுது, நிச்சயம், என்ன நடக்கும்? இங்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன நடக்கும்? கஷ்டம் தான் நடக்கும்.

குருநாதர் :-  அப்பொழுது, நிச்சயம், இறைவன், நிச்சயம், அனைவருக்கும் கொடுப்பது, இங்கு நல்லவையா, தீயவையா? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, எல்லாருக்கும், இங்கு இறைவன் கொடுப்பது, நல்லவையா, தீமையா? 

அடியவர் : (இறைவன்) அவருடைய எண்ணப்படி..

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே, நல்லதுதான் என்பேன். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் எண்ணப்படி, கரெக்ட், நம்மள, உங்கள் எண்ணப்படி என்றார். புரிஞ்சுதுங்களா? 

குருநாதர் :- அப்பனே, ஏன், எதற்காக இவை சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களிடத்தில், அனைவருக்குமே, புண்ணியங்கள் உண்டு என்பேன். அப்பனே, ஆனால், அப்பனே, எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் அனைவருக்கும் புண்ணியங்களை வழங்கியிருக்கிறார்; அது பேலன்ஸ் போல கையிலே இருக்கிறது. ஆனால், அந்த புண்ணியத்தை எப்படி வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறோம். பேலன்ஸ் இருந்தாலும், அதை யூஸ் பண்ணத் தெரியாததால், வாழ்க்கை மாற்றமடையவில்லை. ) 

குருநாதர் :- அறிந்து கூட, இவை எப்படி இருக்கின்றது என்றால், தாயே, நீயே சொல், 

குருநாதர் :- எதை என்று புரிய, தாயே, ஒன்றை சொல்வார்களே. தேவையில் இருக்கின்றதா? அதாவது, வெண்ணை வைத்துக்கொண்டு, 

அடியவர் : நெய்கு அலையறது… 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( உங்களின் கைகளில் புண்ணியம் இருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த தெரியாமல் விட்டுவிட்டீர்கள். இது போல, வெண்ணையை கையில் வைத்துக் நெய் பிரிக்க தெரியாமல் தவிக்கும் நிலையைப் போல. புண்ணியத்தை ஆக்டிவேஷன் செய்யும் வழி தான் தெளிவு, பக்தி, சேவை, மற்றும் சிந்தனையின் தூய்மை. அதை உணர்ந்து செயல்பட்டால், அந்த புண்ணியம் பலனளிக்க தொடங்கும். )

அடியவர் :- அதை எப்படி ஆக்டிவேஷன் பண்றதுன்னு சொல்லுங்க. 

குருநாதர் :- அறிந்து கூட, தாயே, நிச்சயம், அதாவது, இறைவன் அறிந்து கூட, இப்படி சொன்னேனே. அவையெல்லாம் நீக்க வேண்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இப்பதான்மா நான் சொன்னேன், தாய் தந்தை மதிக்கணும், கருணை இருக்கணும். கோவம் வரக்கூடாது.  உண்மை பேசணும், எல்லா உயிரும், எல்லா உயிரும் எல்லாரையும் ஒரே மாதிரி …) 

குருநாதர் :- தாயே, அறிந்து கூட, உன் முன்னோர்களுக்கு, முன்னோர்கள் எல்லாம் எவ்வாறு இருந்தார்கள் என்றால், நிச்சயம், பின் சரியாகவே, பின் சாஸ்திரம், பின் சம்பிரதாயங்கள் எல்லாம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், நிச்சயம், அதை பயன்படுத்தவில்லை. நிச்சயம், உன் பிள்ளைகள், அப்பொழுது என்ன? அவர்களே, இறைவனிடத்தில் சென்று, எங்கும் ஆசிகள் தர வேண்டாம் என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( முன்னோர்கள் எல்லோரும் இறைவனை பக்தியுடன் வணங்கி, சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாக பின்பற்றினர். ஆனால் இன்றைய தலைமுறை அந்த வழிகளை புறக்கணித்து விட்டனர். அதனால் முன்னோர்கள்  இறைவனிடம், எங்கள் தலைமுறைக்கு  ஆசிகள் கொடுக்க வேண்டாம் வேண்டாம் என கூறும் நிலைக்கு வந்துள்ளனர். )

குருநாதர் :- தாயே, நிச்சயம், அறிந்து கூட, இதனால் பல மனிதர்களுக்கு உதவிகள் செய்தார்கள். ஆனாலும், தலைகீழாக போய்விட்டது. இப்பொழுது, 


குருநாதர் :-  இறைவனை, பின் நிச்சயம், பக்தியோடு, பயமோடு வணங்கினார்கள். ஆனால், இப்பொழுது இல்லையே. 


குருநாதர் :-  அறிந்து கூட, உங்க இல்லத்தில் இருந்து கொண்டே, இன்னும் கூட பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்த முன்னோர்கள் என்ன பண்றாங்க? உங்க வீட்ல இருக்குறாங்களாம், பார்த்துட்டே இருக்காங்களாம். )

குருநாதர் :-  ஆனாலும், நிச்சயம், இல்லத்தில் பார்த்தால், பின் யானும் வந்து பார்த்தேன், தாயே. ஆனால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் அறிய அறிய. ஆனால், நிச்சயம், புண்ணியம் தேங்கி நிற்கின்றது.  ஆனால், அதை பயன்படுத்த  ஆள் இல்லையே. 


குருநாதர் :- அப்பனே, அம்மையே, அனைவருக்குமே சொல்லுகின்றேன். இவ்வுலகத்தில், பின் பணங்கள், பின் அதிகம் இருக்கின்றது. ஆனால், பின் உபயோகிக்க தெரியவே இல்லையே. அதே போல தான், 

=======================================
#  தன்னைத்தானே அறிந்தால், பின் தானாக லட்சுமி தேவி வந்துவிடுவாள். 
=======================================

குருநாதர் :- அறிந்து கூட, நிச்சயம், தன்னைத்தானே அறிந்தால், பின் தானாக லட்சுமி தேவி வந்துவிடுவாள். 

குருநாதர் :- அப்படி தெரியாவிடில், நிச்சயம், பின் லட்சுமி தேவி, பின் வந்தடைய மாட்டாள். நிச்சயம், அறிந்து கூட, ஏன் எதற்கு? நிச்சயம், பின் அறிந்து கூட, பின் அதாவது, இவை என்று, பின் இன்னும் கூற கூற விளக்கங்கள். அதாவது, அவள் வந்தாலும், நிச்சயம், நோயுடன் தான் வருவாள். 

அடியவர் :- ம்..

சுவடி ஓதும் மைந்தன் :-  (  லட்சுமி தேவி வந்தாலும், நோயோடு தான் வருவாங்க. ) 

குருநாதர் :-  ஏன் எதற்கு? பின் நிச்சயம், பின் சுயநலத்தோடு, காசுகள் இன்னும் சேர்க்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்று, நிச்சயம், 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( சுயநல மனப்பான்மையுடன் வாழக்கூடாது என்பதே இந்த உரையின் மையக் கருத்து. ஒருவர் பணம் வந்ததும் அதை தர்மமாகப் பயன்படுத்தாமல், தனக்கே சேமித்து வைத்தால், அது  நோயாகவும் மாறும் என எச்சரிக்கப்படுகிறது. ) 

குருநாதர் :- ஆனால், நிச்சயம், ஒரு நாள், நிச்சயம், அதை அப்படியே போய், பின் இன்னொரு இருக்கு. பின், நிச்சயம், கொடுத்துர வேண்டும். இது, பின் புண்ணியத்தில் ஆகாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( ஒருவர் பணம், அதை தர்மமாகப் பயன்படுத்தாமல் சேமித்து வைத்தால், அது உடல் நோயாக மாறும் என எச்சரிக்கப்படுகிறது. கடைசியில் அந்த பணம் தர்மத்துக்கு அல்ல, மருத்துவ செலவுகளுக்கே செலவாகும். இதனால், “என்ன புண்ணியம்?” எனக் கேட்கும் நிலை உருவாகும். உண்மையான புண்ணியம் என்பது பகிர்விலும் ஈகையிலும் தான் என்பதை இது வலியுறுத்துகிறது. )


(அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - தொடரும் …. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

1 comment: