​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 28 February 2026

சித்தன் அருள் - 2135 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 7!


88. கலியுகத்தில் இறைவன் விதித்தபடி தான் விஷயங்கள் நடக்கப் போகிறது. இதில், நீங்கள் ஏன் தொண்டை தண்ணி வற்ற நீதி, நேர்மை என்று புலம்புகிறீர்கள்?

குருநாதர்: அப்பனே! இவனை சார்ந்த ஒருவனை வெட்டுகிறார்கள்! விட்டுவிடலாமா என்ன? கேள்!
 
89. கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள், கல் அல்லது உலோகத்தால் ஆனது. அதில், இறை எங்கிருந்து வந்து அமர்கிறது?

குருநாதர்; பெரியவர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை. இறைவன் ஒரு காந்தம், அந்த காந்த சக்தியை இழுத்து வாங்கித் தரத்தான் கோவில்கள். பின்னர் மனிதன் ஆக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பே வரவில்லை அதற்குள் 11ம் வகுப்பு செல்ல வேண்டும் என்றால் எப்படி அப்பனே! ஒவ்வொன்றாக யான் தெரிவித்து வருகின்றேன்!  

90. திருவண்ணாமலை   கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இரண்டிலும் நடக்கும் அட்டூழியங்களை பொருத்துக் கொண்டு இருக்கும் ஈசனுக்கும் சித்தர்களுக்கும், பொதுவாக நல்லதை செய் என்று மனிதர்களுக்கு உரைக்க தகுதி இருக்கிறதா?

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட. யாங்கள் முடிவெடுத்துக் கொள்கின்றோம். இப்பொழுது அதை பற்றி தேவை இல்லை.

அடியவர்: அப்போ! அந்த கோவில்களுக்கு நாங்கள் எல்லாம் போக வேண்டாம்!

குருநாதர்; அப்பா! அனைத்தும் ஒன்றுதான். இங்கு மனிதன்தான் எதை எதையோ சொல்லி குழப்புகின்றான்.

அடியவர்: அதெப்படி பக்தனுக்கு நாட்டம் இறைவனிடம் தானே இருக்கின்றது!

குருநாதர்: நிச்சயம்! அப்பா! இறைவனே, இறைவனை பார்த்துக் கொள்வான். கவலை விடு.

அடியவர்: சென்று இறைவனை பார்க்க முடியவில்லை என்றால் எனக்கும் மனதுக்கு வருத்தமாக இருக்கும் இல்லையா?

குருநாதர்; அதாவது பின் இறைவனே உங்களை காண வேண்டும்! அவ்வளவுதான். கவலை விடு!

அடியார்: நிச்சயமாக! கோவில்களில் சென்று பார்க்கிறபொழுது, இதுதான் இறை ரூபம் என்று நம்பி, மனதார பேசுவோம். 

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட! அனைத்தும் இறைவனே! எப்பொழுது எதை செய்ய வேண்டுமோ, அப்பொழுது அதை செய்வார்கள். கவலையை விடச்சொல். 

அடியவர்: சரி! எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது வரச்சொல்லுங்கள்! அவ்வளவுதான்.

91. மூத்தோனுக்கு பூஜை செய்துவிட்டு எதையும் தொடங்கு, அங்கு போய் இங்கு போய் அபிஷேக பூஜைகளை செய் என்று சொல்கிற நீங்கள் தான் தவறு நடக்கிறதே என்று கேட்டால், இறைவனோ, நாங்களோ அபிஷேக பூஜைகளை செய்யச் சொன்னோமா?  உங்கள் ஆசைக்காக நீங்கள் செய்கிறீர்கள் என்கிறீர்களே! இது முரணாக தோன்றவில்லை?

குருநாதர்; அவ்வாறு செய்தால் ஆற்றல் கூடும். அவ் ஆற்றல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவி செய்வதாக அமையும். உங்களுக்கு ஆற்றல் 10% இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு ஆற்றலை கூட்டி கொடுத்து, பெருகட்டும் என்று. சில ரகசியங்கள் உண்டு. அவைகளை எடுத்து சொல்லிவிட்டால், அப்படியே அக்கல்லை எடுத்து சென்று விடுவான். அதன் கீழே என்னென்ன உள்ளது என்பதை யாங்கள்தான் அறிவோம். ஒன்றை சொல்கின்றேன்! புத்திசாலியாக இருந்தால், ஆசிரியன் இதை படித்து வா என்றால் படித்து வருவான். ஏன் படிக்க சொல்கிறாய் என்று கேட்டால், அவனை விட முட்டாள் யாரும் இல்லை. 

அடியவர்: நாங்கள் என்னவோ! நல்லபடியாகத்தான் அபிஷேக பூஜைகளை செய்து வருகிறோம்! ஆனால் வேறு எவனோ அங்கு அமர்ந்து ஸ்வாமியை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

குருநாதர்; அப்பனே! பிரச்சினைகள் இல்லை! விட்டுவிடு!

92. மூவரை நம்பி சென்றால், வாழ்க்கை சக்கரத்துக்குள் சுழன்று கொண்டிருப்பீர்கள், மேல் ஏறி மோக்ஷத்தை அடைய முடியாது என்று கூறியிருப்பது உண்மை தானே?

குருநாதர்; தேவை இல்லை இவை எல்லாம்.

அடியார்: தனக்கு மட்டும் உபதேசம் பண்ணினது, ஆதலால், மனிதனுக்கு தேவை இல்லை! அப்படித்தானே!

குருநாதர்: !!!!

93. கண்ணுக்கும், செவிக்கும் எட்டிய/எட்டாத தூரத்தில்/இங்கு அருகில் கூட அநியாயங்கள் நடந்து கொண்டிருக்க, இப்படி நடத்துவதே இறைவன் தான் என்றால் வியாபாரம் ஆகாத தர்மத்தை இங்கு ஏன் விற்க வருகிறீர்கள்? இறைவனிடம் கூறி மொத்தமாக கலைக்க சொல்லலாமே? இன்னும் நிகழ்வுகள் என்னும் கொசு இறைவனை கடிக்கவில்லையோ?

குருநாதர்; அவ்வாறு அழித்தால் கூட இவ்வாறு பேசுகின்றார்கள். எப்படியாப்பா நியாயம்? ஒருவன் அவ்வாறு பேசுகின்றான், ஒருவன் இவ்வாறு பேசுகின்றான். அனைவரும் ஒன்றாக இணையுங்கள். அப்பொழுது யான் தெளிவுபடுத்துகின்றேன்!

அடியவர்: எங்க, அனைவரும் ஒன்றாக இணைவது?

குருநாதர்; அப்பனே! ஒருவனுக்கும் புத்தி இல்லை. இங்கு நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம். பக்தியை பெருக்கி, பின் இறைவனே இல்லை என்று சொல்லிவிடுகின்றான். ஒன்றை சொல்கின்றேன்! இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்! அனைவருக்கும் தெரியப்படுத்து. அடுத்து சனீஸ்வரன் குரு வீட்டில் உட்காரப்போகின்றான். அப்பொழுது தெரியும், உண்மையான பக்தன் யார் என்று!  அனைவரையும் ஒரு அடி  அடிக்கப் போகின்றான். பின் பொய் சொல்கிறவர்கள் பக்கத்துக்கு சனீஸ்வரன் வருகின்றான், வருகின்றான்! அதுவும் மீனா ராசிக்கே. அப்பொழுது தெரியும், இப்பொழுது கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்களே! அப்பொழுது எல்லாம் ஏற்படுத்துவான், சனீஸ்வரன் நீதிபதி என்பது தெரியும்! 

94. அன்னதானம் செய்யுங்கள் - நல்ல உத்தரவு! பிறர் செய்யும் அன்னதானத்தை சாப்பிட்டால் கர்மா வரும். எப்படி? தன் குழந்தை செய்தால் விளையாட்டு, பிறர் குழந்தை - எனக்கு தெரியாது என்ற மனநிலையா?

குருநாதர்; அப்பா! நிச்சயம் ஏமாற்றித்தான் செய்கின்றார்கள் அப்பனே! அதாவது, 10000 ரூபாய் வாங்கி அதில் மீதி 7000 ரூபாயை தான் சாப்பிடுகின்றான். இதன் பெயர் அன்னதானமா?

அடியவர்: சாப்பிடுகிறவனை பற்றித்தான் நான் கேட்டேன், பண்ணுகிறவனை பற்றி கேட்கவில்லை.

குருநாதர்; அனைத்தும் இறைவன் ஏற்பாடே, விட்டுவிடு. 

அடியவர்: எல்லாவற்றையும் சொன்னதே நீங்கள் தான். 

குருநாதர்; அப்பனே! சொல்கின்றேன் அப்பனே, பின் கவலையை விடு! 

அடியவர்:  நான் பழைய கேள்விகளை எடுத்துவிட்டால், மிகப்பிரச்சினை ஆகிவிடும்!

குருநாதர்;அப்பனே! பிரச்சினைதான் வாழ்க்கை அப்பா! 

95. இறைவனை வைத்து பிரச்சினையை உருவாக்கும் மனிதர்கள் கையில் கோவிலை கொடுத்துவிட்டு, கூட்டு பிரார்த்தனை பண்ணு, அபிஷேகம் பண்ணு என்று ஆசையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பதில், தூண்டாமல் இருக்கலாம் அல்லது அவ் மனிதர்களை முடித்து விடலாம் அல்லது கோவில்களை  அழித்து விடலாம்.

குருநாதர்;நல்லோர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோதினால் என்ன ஆகும் என்று தெரிவதே இல்லை அப்பனே! இதெல்லாம் பாபக்காரன்தான் செய்து கொண்டு இருப்பான்! எங்களுடைய உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது எங்களுக்கு தெரியுமப்பா. மனிதன் என்ன பேசினாலும், எது நடக்கப்போகிறதோ, அது நிச்சயமாக நடக்கும். அவனும் உடல் நிலை சரியில்லாமல் போய் கை ஏந்துவான். அப்பொழுது அங்கு வைத்து அவனை அடித்து சொல்கின்றேன்! 

அடியவர்: சரி! நடக்கட்டும்! யார்தான் கையேந்துவதில்லை இப்பொழுது. கெட்டவன் கையேந்தினாலும் கொடுக்கிறீர்கள். நல்லவர்கள் கையேந்தினாலும் கொடுக்கிறீர்கள். கடைசியில் பார்த்தால், நல்லவன் கையில் ஒன்றும் இருக்க மாட்டேன் என்கிறது. அதையும் கெட்டவன் பிடுங்கிக்கொண்டு போய் விடுகிறான்.

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட! அதனால் தான் அவனுக்கு நல்லவன் என்று பெயர்!

அடியவர்: பேர் மட்டும் இருந்தால் போதுமா? 

குருநாதர்;அப்பனே! நல்லவனுக்கு எதற்கப்பா அனைத்தும். உணவிருந்தால் போதுமானது. 

அடியவர்: அந்த உணவுகூட கிடைக்காமல் திண்டாடுகிறான்.

குருநாதர்; அப்பனே கிடைக்காமல் இருந்தால் பரவாயில்லை!  அவன் தான் நல்லவன்! நல்லவன் அனைத்தையும் ஏற்றுக்கொள்வானப்பா! 

96. அகத்தியர் என்ற நாமத்தில் இங்கு வந்த சித்தர்கள் எத்தனை பேர்?

குருநாதர்; அப்பனே! நிச்சயம் சூரியன் ஒருவனே! இதை பற்றி யான் சொல்லப்போவதில்லை. 

அடியவர்: அந்த நாமத்தில் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் என்றுதான் கேட்டுள்ளோம்!

குருநாதர்: அப்பனே! ஏன் நீ கூட வைத்துக்கொள் நான் அகத்தியன் என்று, இவன் கூட வைத்துக்கொள்ளட்டும் அகத்தியன் என்று!

அடியவர்; ஏன்! அதற்கப்புறம், உங்களை திட்டியதெல்லாம், எங்கள் மேல் விழாவா?

குருநாதர்; அப்பனே! ஏமாற்றுவதற்காக என் பெயரை முதலில் வைத்துக் கொள்கின்றார்கள். இருக்கட்டும் அப்பா! கடைசியில் அனுபவிப்பது, அவ்வளவுதானா. அப்பனே, நீ கேட்டாய் அல்லவா! அடுத்தவன் கர்மாவை என் முதுகில் ஏன் ஏற்றி விடுகின்றீர்கள் என்று. என் பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டு அவன் கர்மாவை என் முதுகில் தானே ஏற்றிவிடுகின்றான்! இதை முதலில் தெளிவுபடுத்து!

அடியவர்: அப்படியென்றால், அவன் செய்கின்ற புண்ணியமும் வருமா?

குருநாதர்; அப்பா  பொய் சொல்லி திரிகின்றானே, அவனுக்கு மட்டும் பொருந்தும்!

97. அகத்தியப்பெருமானுக்கு கைலாயத்தை ஆண்ட பரமேஸ்வரன் என்கிற சக்கரவர்த்திதான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறதே! உண்மையா?

குருநாதர்; அப்பா! இவை எல்லாம் செப்பிவிட்டேனப்பா! யாரப்பா இவன், முதலில் இலக்கணத்தை படித்து வரச்சொல், பின்பு உரைக்கின்றேன்! கைலாயத்தின் சக்ரவர்த்தி யார்?

அடியவர்: பரமேஸ்வரன்!

குருநாதர்; அப்பனே! ஈசனே ஒரு சித்தன் தானப்பா! விட்டுவிடு!

98. ஒரு விஷயத்தை முற்றவிட்டு, புத்திகெட்ட மனிதன் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே இறைவன்!

குருநாதர்; அப்பனே! அதிலும் ஒரு சந்தோஷம் இறைவனுக்கு!

அடியவர்: ஆம் நீங்கள் சொலவ்து போல் அனைத்துக்கும் காரணம், இறைவன்தான்.  

99. நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால் கலியுகத்துக்கு பக்தி வேண்டாம், புத்தி இருந்தால் போதும்  என்று தோன்றுகிறதே!

குருநாதர்;நிச்சயம்! புத்தி இருந்தால் அதன்கூட திருட்டு தேவை. புத்தி இருந்தால், திருடத்தான் செய்வான் மனிதன். அத்திருட்டு வழி அனைத்தையும் இழப்பான், மனிதன். சரியான கேள்வி!

100. எத்தனை பக்தி செய்தும், எத்தனை பூஜைகள், அபிஷேகங்கள், கொண்டாட்டங்கள் செய்தும் இன்று இறைவனால் மக்களுக்கு தர்மம் நிறைந்த திரைப்படத்தை காட்ட முடியவில்லையே!

குருநாதர்; எத்தனை பக்தி செய்தாலும், எத்தனை விதமாக எதை செய்தாலும், இதுதான் என் பதில். முடியாது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment