வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வியும் பதிலும் இங்கு வெளியிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதில் 61வது கேள்வியின் விவாதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு கூறினார். (சித்தன் அருள் - 2130)
"கலியுகத்தில். எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ சொல்லலாம் அப்பனே! விட்டுவிடு. வேறு யாராவது சொல்லட்டும்!"
வேண்டுமென்றே நியாயமான கேள்விகளை, யதார்த்தமான கேள்விகளை கேட்டு அவரை பதில் கூற தூண்டிவிட்டு, இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி வைத்தேன். மேற் சொன்ன விளக்கத்தை கொடுத்துவிட்டு அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நானும்!
நாடி வாசித்த இடத்தில் ஒரு 20லிருந்து 25 பேர் இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. "நான் இருக்கிறேன்! நீங்கள் கூறிய விஷயத்துக்கு நான் தயார்!" என ஒருவர் கூட கை உயர்த்தவோ, பதிலளிக்கவோ இல்லை. இதில் என் நண்பர்களும் அடக்கம்!
அகத்தியப் பெருமான் நினைத்தால் எந்த இறை அருளையும் வாங்கி தன் சேய்களுக்கு தர முடியும்!
கேள்வி புரிந்ததா? இல்லை புரிந்து, நமக்கேன் வம்பு, இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து சென்று விடுவோம் என்கிற நினைப்பா, என்று தெரியவில்லை.
சித்தரே வந்து மிகப்பெரிய அருளை பெற்றுத் தருகிறேன் என்கிற பொழுது, அந்த வாய்ப்பை இழக்கலாமா?
அமைதியின் முடிவில், இப்படிப்பட்ட மனிதர்களுக்கா, அகத்தியப்பெருமானை இழுத்து வந்து, கேள்வி கேட்டு இத்தனை சிரமப்படுகிறோம்! என்று தோன்றிவிட்டது. "சித்தன் அருளும்" போதும் என்றாகிவிட்டது! அதையும் வேண்டுதலாக அவரிடம் வைத்திருக்கிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment