​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 May 2024

சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!





சூரத் சத்சங்கம் பாகம் 6

குருநாதருக்கு பணிவான வணக்கங்கள்!!!!!

மனிதர்கள் நலம் வாழ பல வாக்குகளில் பல விஷயங்களை எங்களுக்கு சொல்லி திருத்துகின்றீர்கள் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !!!!

சில மூலிகைகள் சில மருத்துவ குறிப்புகள் நீங்கள் கூறும் பொழுது அவை சரி முறையாக கிடைப்பதில்லை உண்மையாக அவை இருப்பதில்லை அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்???

அப்பனே யான் முன்பே சொல்லிவிட்டேன்!!!! மனிதர்கள் தம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றார்கள்!!!!

அப்பனே இயற்கையும் இறைவனும் ஒன்றே!!! எதை என்று அறிய அறிய அப்பனே இயற்கையை அழித்தால் இயற்கை உங்களை அழிக்கும் அவ்வளவுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!! உங்களுடைய கடமை என்பது தன்னலத்திற்காக தன் குடும்பத்திற்காக மட்டும் யோசித்துக் கொண்டிருந்தால் அப்பனே கஷ்டங்கள் தான் வரும் பிறர் நலம் நாடுங்கள் நாடுங்கள் என்று சொல்லிக் கொண்டே வருகின்றேன் இங்கு பிறர் நலம் என்பது அனைத்து ஜீவராசிகளின் நலம்தான் அப்பனே!!!

சில மூலிகைகளை யாங்களே மறைத்து வைத்திருக்கின்றோம் அப்பனே ஏனென்றால் அப்பனே மனிதன் கையில் கிடைத்து விட்டால் அதை வைத்து காசுகள் பார்ப்பான் அப்பனே!!! 

மூலிகைகளையும் மரங்களையும் உங்களை நட்டு வளர்க்கச் சொல்லி நான் முன்பே தெரிவித்து விட்டேன் அப்பனே முதலில் அதைச் செய்யுங்கள் அப்பனே!!!!

(குருநாதர் கூறிய மூலிகைகளான ஓரிதழ் தாமரை பொன்னாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி துளசி முருங்கை முடக்கத்தான் மணத்தக்காளி போன்ற மூலிகைகள் விதைகளை சேகரித்து ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டும்!!! வேம்பு வில்வம் அரசமரம் ஆலமரம் பனைமரம் இது போன்ற மூலிகைகள் மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் விதைகளை சேகரித்து வளர்க்க வேண்டிய கடமை மனிதர்களுக்கு இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார் அதையும் செயல்படுத்த குருநாதர் கூறியிருக்கின்றார் அதனால் அடியவர்கள் முடிந்தவரை விதைகளை சேகரித்து அவர்கள் நிலத்திலோ மாடி தோட்டத்திலோ வளர்த்தி பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

ஐயனே நாங்கள் அடிப்படை விஷயங்களில் இருந்து தங்கள் உபதேசப்படி மாறி எங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்ள நினைக்கின்றோம் முதலில் நாங்கள் பயன்படுத்தும் எண்ணெய் அதாவது நீங்கள் வழிபாட்டிற்கு இலுப்பை எண்ணெயில் பயன்படுத்த சொல்லி இருந்தீர்கள் சக்தி மிகுந்தது என்று கூறி இருந்தீர்கள் அதுபோல எங்களுடைய உணவிற்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவது நாங்கள்

அப்பனே எதை என்றும் அறிய அறிய  அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது இறைவனுக்கு  படைப்பார்களே பின் அதை பயன்படுத்துவது நல்லது அப்பனே!!!! எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

இதை ஏற்கனவே யான் சொல்லி விட்டேன் அப்பனே எதை என்று புரிய புரிய!!!

தேங்காய்!!! தேங்காய் எண்ணெய்!!

ஐயனே அதே போன்று நெய்யை உபயோகித்துக் கொள்ளலாமா???

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் முன்பெல்லாம் பசுவின் நெய்யை எதை என்று அறிய அறிய பால் பின் எதை என்று கூட மோர் என்கின்றார்களே பின் நெய் இப்படி எடுக்க வேண்டும் அப்பனே ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்கள் எதை எதையோ செய்து செய்கின்றார்கள் அப்பனே இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!

(இன்றைய காலகட்டத்தில் பாலில் இருந்து நேரடியாக கிரீம் எடுத்து நெய் ஆக்கி அதை விற்பனை செய்து வருகின்றார்கள் ஆனால் அது தவறான செய்முறை

பால் பாலில் இருந்து தயிர் தயிரில் இருந்து மோர் மோரில் இருந்து வெண்ணெய் வெண்ணையை காய்ச்சி முற்காலத்தில் எப்படி நெய்யை எடுப்பார்களோ அதன்படி எடுத்து அந்த நெய் பயன்படுத்தினால் தான் முழு பலன் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் அதுபோன்று எங்கு மோரை கடைந்து வெண்ணை எடுத்து நெய் தயாரிக்கின்றார்களோ அந்த நெய்யை அடியவர்கள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

ஐயனே நீங்கள் கூறியதை நாங்கள் கடைபிடிக்கின்றோம்

ஐயனே எருமையின் நெய்யை நாங்கள் பயன்படுத்தலாமா????

அப்பனே  இப்பொழுது சொன்னாலும் புரியாதப்பா!!! அப்பனே இதனால்.... அதை உட்கொண்டால் அதேபோலத்தான் நீங்கள் செயல்படுவீர்கள்!!!

(எருமையின் நெய்யை உண்டால் எருமை போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும்)

ஐயனே பசுவின் நீயே நாங்கள் உபயோகித்துக் கொள்கின்றோம் அதை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்???!

அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இதை எடுத்துக்கொண்டே இருக்கலாம் அப்பனே!!!!!

( பசுவின் நெய்யை அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம்)

ஐயனே நாட்டு பசு நெய் நல்லதா??? வெளிநாட்டு ரகங்கள் பசு நெய் நல்லதா???

அப்பனே எதை என்று கூட அனைத்து கோமாதாக்களும் ஒன்று தான் அப்பா!!!!!!

ஐயனே நாங்கள் வசித்து வரும் குஜராத்தில் பாவ் நகரில் ஒரு பசு சேவா எனும் கோசலை உள்ளது அங்கு முற்காலத்தில் எவ்வாறு நெய் தயாரிக்கப்படுகின்றதோ அவ்வாறு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது அங்கு நாங்கள் நெய்யை வாங்கி பயன்படுத்தலாமா அது உண்மையானதா ஐயனே கூறுங்கள்

அப்பனே எவை என்றும் அறிய அறிய அங்கே நல் முறையாகத்தான் செய்கின்றார்கள் அப்பனே!!!!

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் நமது வாழ்வியல் முறைகளை மாற்றுவதற்கு ஒவ்வொன்றாக வாக்குகளில் கூறிக் கொண்டு வருவது நீங்கள் அறிந்ததே அதேபோல் நீங்கள் சுத்தமான நெய்யை முற்காலத்தில் எப்படி நெய்யை எடுத்தார்களோ அதே போன்று எங்கு கிடைக்கும் என்பதை கண்டறிந்து பெற்றுக்கொள்ளலாம் குஜராத்தில் இருக்கும் வட இந்திய அகத்தியர் பக்தர்கள் இந்த கேள்வியை கேட்டு தெளிவு பெற்றனர் உங்களுக்கு வேண்டுமானாலும் இந்த பசு சேவா கோசலையை தொடர்பு கொண்டு நீங்கள் சுத்தமான நெய்யை பெற்றுக் கொள்ளலாம்!!!

இது விளம்பர பதிவு அல்ல

குருநாதர் அங்கு நல்ல முறையாக தான் செய்கின்றார்கள் என்று கூறியதற்காக தங்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கின்றோம்!!

எப்படி உண்மையான பச்சை கற்பூரம் எங்கு கிடைக்கின்றது என்பதை குருநாதர் கூறியிருந்தாரோ அதேபோன்று இந்த நெய்யை பற்றியும் குருநாதர் கூறியிருக்கின்றார் அடியவர் விருப்பம் போல சுத்தமான நெய்யை பெற்றுக் கொள்ளுங்கள்!!!

ஜெய் கௌமாதா, கோசேவாவுக்கு வரவேற்கிறோம், நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்!

கிர் பசு நெய்

https://www.gomataseva.org/product-category/gir-cow-ghee/

வெளிநாடுகளில் இருந்து நெய் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்

விசாரணை:- 7698489555

உள்நாட்டில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வதற்கு

இந்திய விசாரணை :- 7698689555

திங்கள் - சனி காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை

நீங்கள் வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியாவிட்டால், நீங்கள் உறுதியாக ஓய்வெடுத்து எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு எண்ணை அழைக்கலாம்

சூரத் நகரில்  99251 99888 Vipul விபுல் என்பவர் இந்த நெய்யை அனைவருக்கும் கொடுத்து வருகின்றார் இவரையும் தொடர்பு கொண்டு தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

கோ சேவா வின் இதர சமூக வலைத்தளங்கள் இதிலும் நீங்கள் பார்த்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

https://www.gomataseva.org/product-category/gomay-pooja-samagri/gaumay-cup-dhoop/.

https://www.facebook.com/share/p/j8yvUFmWjz21hsYp/?mibextid=WC7FNe

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. நன்றி ஐயா 🙏
    ஓம் அகத்தீசாய நமக!

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்திசாய நமோ நம🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete