​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 26 May 2024

சித்தன் அருள் - 1614 - கேள்விகள்!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதரிடம், நாம் ஆன்மீகத்தில் கேள்வி கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்லி நிறைய நாட்களாகிவிட்டது. அகத்தியப்பெருமானின் ஜீவ நாடியை சந்தித்தும் வெகு நாட்களாகிவிட்டது.

சற்று யோசித்த பொழுது, நேரடியாக நாடியை சென்று தரிசித்து அணுக முடியவில்லை என்றாலும், யார் வழியாகவேணும் கேள்விகளை கொடுத்தனுப்பி கேட்க வைத்து அதற்கான பதிலை பெறலாம் என்று ஒரு எண்ணம்.

ஆகவே, உங்களின் ஆன்மீக கேள்விகளை, தமிழில் தட்டச்சு செய்து,  agnilingamarunachalam@gmail.com என்கிற ஈமெயிலுக்கு அனுப்பி தரும்படி கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் போல அடியேன் கூறிக்கொள்ள நினைப்பது என்னவென்றால், தனிப்பட்ட வாழ்க்கையின் கேள்விகளை தவிர்க்கவும். கோவில்களை பற்றி கேட்காதீர்கள், பதில் வராது.

அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொண்டு,

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. aiyyavidam kelvi ketka migavum bayama irukiradhu iyya:) anubhavam dhaan:):)

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete