​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 28 May 2024

சித்தன் அருள் - 1615 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் வேண்டியது, உயர்வாக கூறுவதென்றால், சொல்லிக்  வேண்டியதில்லை, பெற்றோர் குழந்தைகள் முன்னால், தானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டே  போனால்,  பார்க்கின்ற குழந்தைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மனநிலைக்கு வந்துவிடும். குழந்தைகளிடம், "நீ அதுவாகு, இதுவாகு" என்று  பெற்றோர்கள் கூறுவதை விட, "நீ  பிறருக்கு  உதவு" என்று கூறவேண்டும். அக்குழந்தைக்கு, பிறருக்கு உதவும் குணம்  வரவேண்டும் என்றால், பெற்றோர்கள், அவர்களின் மூதாதையர்கள், நிறைய தானம் செய்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும்.

குழந்தைகளிடம் இக்குணம் வரவேண்டும் என்றால், பெற்றோர்கள் தானம் செய்வதை குழந்தைகளிடம் கொடுத்து கொடுக்கச் செய்யுங்கள். தானம் செய்வதை, அதன் பலனை, செய்யவைத்து, புகட்டுங்கள்.

சித்தன் அருள்..... தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete