​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 30 October 2023

சித்தன் அருள் - 1489 - அந்தநாள்>>இந்த வருடம் 2023 >> கோடகநல்லூர் பூஜை அகத்தியர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

26/10/2023 வியாழக்கிழமை அன்று அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து அகத்தியப்பெருமான் துணையுடன், அவர் உத்தரவின் பேரில் கோடகநல்லூர் நீளா பூமி சமேத பச்சைவண்ணப் பெருமாளுக்கு, செய்த அபிஷேக ஆராதனைகளுக்குப் பின், குருநாதர் உரைத்த அருள் வாக்கு!

"ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! எம்முடைய ஆசீர்வாதங்கள்! அனைவருக்குமே. அப்பனே! யானும், லோபாமுத்திரையும், நிச்சயமாக வந்திருந்தோம். எதை என்று கூற. அது மட்டுமல்லாமல், அனைவரின் கூட, யாங்களும் உணவை உண்டோம் அப்பா! நலன்கள், அப்பனே, ஆசிகள். அதை அறிந்து நாராயணனும், என் பக்கத்தில் ஓடோடி வந்து,

"அகத்திய மாமுனிவரே! நீ மட்டும் எப்படி மக்களோடு ஒன்றாக (இருந்து உண்கிறாய்)! நிச்சயம், யான் நிச்சயம் அருந்த மாட்டேன், எதை என்று அறிய அறிய! நீரையும் கூட! நிச்சயம் நீ வாங்கி உட்கொண்டாயல்லவா! அதனை சிறிதளவு நீ கொடுத்தாலே போதுமானது. சரி! உன் பாக்தர்களுக்கு எதை செய்ய வேண்டும் என்று அறிய அறிய, அகத்திய மாமுனிவர், என்றும் கூற, பின் யானும் கூட, சரி! ஆசீர்வாதங்கள் கொடுங்கள் (என்றேன்).

"மாமுனிவரே! அனைத்தும் உணர்ந்த முனிவருக்கெல்லாம், மாமுனிவரே! உன்னை எப்படி சொல்ல? அனைவரின் கர்மாவை கூட, நல்லோர், தீயோர் அனைவரையும் சமமாக நிலையிருத்தி, பின் அனைவரின் கர்மாவையும், தீயவன் ஆயினும், திருத்துவோம் என்று  உனது கருணை மிகப்பெரும் கருணை, அதனால், அறிந்தும், அறிந்தும் இன்னும் ஞானங்கள்! இப்பொழுது அதன் ரகசியத்தை அறிந்து, உணர்ந்த மாமுனிவரே, நீங்களே அருளுங்கள். உங்களால், அனைத்துமே முடியும் என்று!

அதனுள்ளே, நிச்சயம், வருணபகவானும் பின், முனிவரே பின் நல் மனதோடு இருந்தால், இவ்வுலகத்திற்கு நன்மையை செய்வேன்! நிச்சயம் அதை மீறி செயல்பட்டால் தான் அனைத்துமே அழியும், என்னால், என்பதை எல்லாம். ஆனாலும், அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, இவ்வுலகம் அறிந்தும் கூட பொய்யை, உண்மையாக்கும். எவை என்று புரிய புரிய, இவ்வுலகம், உண்மையை பொய்யாக்கும்! இதுதான் உலகமப்பா!

அப்பனே, அனைவரையும் பார்த்தேன் அப்பனே! சந்தோஷமாக! ஆனாலும், சில சில மனவருத்தங்கள் தானப்பா! அப்பனே! ஒருவருக்கு ஒருவர் மனதுக்குள்ளே என்ன புலம்புகிறீர்கள்/எண்ணுகிறீர்கள் என பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அப்பனே! ஒன்றுமில்லையாப்பா! அப்பனே! இறைவன் மூச்சை நிறுத்தினால். போதும் அப்பா. அனைவரும் ஒன்றுதானப்பா! இதை புரிந்துகொண்டால். நன்று அப்பனே! ஒரு நரம்பை இழுத்து பிடித்தால் போதுமானதப்பா! இதை உணர்ந்து கொள்ளுங்கள் அப்பா! ஆனாலும், நிச்சயம், அனைத்தும் தெரிந்து கொண்டுதான் யான் மௌனமாக இருக்கின்றேன். அதனால், குறைகள் ஏது. அப்பனே! என்பக்தன் என்னையும் பார்த்துவிட்டான் அப்பனே! அப்பனே, இன்னும் உண்மைகளையும் கூட உணர்த்திவிட்டேன் அப்பனே. எதற்காக கஷ்டங்கள் வருகிறது என்று. அங்கிருக்கும் மனிதர்களுக்கு, தெளிவாக உணர்த்திவிட்டேன் அப்பனே. மீண்டும் புரியவில்லை என்றால். அப்பனே, இன்னும் ஒரு முறை உணர்த்தினால், தாங்கமாட்டார்களப்பா! அப்பனே! மனிதப்பிறவி என்றாலே இப்படித்தானப்பா.

அனைவருக்கும், எமது ஆசிகள். வருண பகவானும் வந்து, உண்டு அனைவரையும் ஆசிர்வதித்து, அவன் தனும் வந்து, கீழே குனிந்து "முனிவரே! நீங்கள் உட்கொள்வதை எந்தனுக்கும் தாரும் என்று, அவனுக்கும் சிறிது அளவு கொடுத்து, அனைவரையும் மகிழ்வித்து சென்றேன். 

அப்பனே! அனைவருக்கும், என்னால் பாடத்தை கற்பிக்க இயலும்! ஆனாலும், அப்பனே, உண்மை நிலை தெரியவில்லையே அப்பனே! உண்மை நிலை தெரியாமல் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே!  இவை அவை என்றெல்லாம். அனைத்தும் வீணாக்குமப்பா! ஆகவே, உன் நிலைமையை பாரப்பா! உன் நிலைமையை பார்த்தாலே போதுமானதப்பா. மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பா! அதனால். முந்திக்கொண்டு செல்லாதே அப்பனே! முந்திக்கொண்டு சென்றால் அப்பனே! அடியில் விழுந்து விடுவாய் அப்பனே! இன்னொருவன் உன் மேலே உட்கார்ந்துவிடுவான் அப்பனே! எழுந்திருக்க முடியாதப்பா. அதுதான் கர்மா அப்பா! 

இன்னம் இன்னும் உண்மைகளை தெரிவிக்கின்றேன் அப்பனே! உண்மைகளை தெரியாமல் வாழ்வது வீண் அப்பா! வீண். அறிந்தும், அறிந்தும், என் பக்தர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வது நிச்சயம் அப்பனே. அனைவருக்கும் லோபாமுத்திரையோடு ஆசீர்வாதங்கள் அப்பனே! கோவிந்தன், நல் ஆசீர்வாதங்கள் கொடுத்து கொடுத்து, அப்பனே, ஏற்கெனவே, செப்பிவிட்டேன், மனக்குழப்பத்தை எவ்வாறெல்லாம் நீக்கினேன் என்று.

இன்னும், இன்னும், மாற்றங்கள், அதிசயங்கள், வாக்குகள் எல்லாம் காத்துக்கொண்டிருக்க, நலன்கள் அப்பா! ஆசிகள்! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete

  3. சித்தன் அருள் - 1487 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


    https://siththanarul.blogspot.com/2023/10/1487.html

    ஐயா வணக்கம் சித்தன் அருளில் இந்த நாள் இந்த வருடம் கோடகநல்லூரில் நடந்த பூஜையின் தொகுப்பு சமர்ப்பிக்கின்றேன் என்று கூறினீர்கள் அப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன்link யை தாருங்கள்.. அதை படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன் ஏதேனும் தவறாக கேட்டிருந்தால் மன்னித்து அருள்க.....

    ReplyDelete