​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 October 2023

சித்தன் அருள் - 1471 - அகத்தியப்பெருமான் அருள் வாக்கு - மதுரை அகத்தியர் ஆலயம் பற்றி!


உலகத்திலேயே ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் அருளும் ரகசியம்- மதுரை வாசிகளின் பொக்கிஷம் இந்த ஆலயம்!

யான் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது நீங்கள் எதை என்று கூறாமலே தம் வலம் வந்து அங்கே யானும் லோபாமுத்திரையும் பின் எவை என்று கூற இன்னும் பல சித்தர்களும் அப்பனே வந்து வந்து சென்றார்கள் அப்பனே அங்கு. மூலனும் வந்தானப்பா. அவைமட்டும் இல்லாமல் இன்னும் ஏராளமான சித்தர்களும் அங்கேயே (மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில்) தான் தங்கி இருக்கின்றார்கள். அவை மட்டும் இல்லாமல் அருணகிரிநாதனும் பரிபூரணமாக (அங்கேயே நிரந்தரமாக தங்கி உள்ளார்) அப்பனே எதை என்று கூற இன்னும் பெருமாளும் சக்தியும் *அப்பனே இவர் எல்லாம் எப்படி வந்தார்கள் என்று எதிர் பார்க்கின்றீர்களா? அப்பனே அகத்தியன் இருக்கும் இடத்தில் அனைவரும் வந்து விடுவார்கள். அப்பனே. இதை யார் அறிவார் அப்பனே? ஆனாலும் மனித ஜென்மங்களுக்கு உண்மை நிலை புரியவில்லை அப்பனே.

இவ்வாறே வாழந்திட்டு வாழந்திட்டு இன்னும் ஏராளமான பிறவிகளை தேடிச்சென்று கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete