​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 23 October 2023

சித்தன் அருள் - 1484 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று "சரஸ்வதி பூஜை". உங்கள் அனைவருக்கும், நவராத்திரியின் சரஸ்வதி தின பூஜை வாழ்த்துக்கள். ஞானத்தை அருள்பவள் சரஸ்வதி தேவி. அதை அடைந்துவிட்டால் "நான்" என்கிற நிலை இல்லாமல் போய்விடும் என்கிறார் குருநாதர். நமக்கு அறிவை புகட்டும் புத்தகங்கள், ஓலை சுவடிகள், மந்திரங்கள், விருப்பமான விஷயங்களை இறை முன் சமர்ப்பித்து பூஜையில் வைக்கும் போது, "நான்" என்கிற உணர்வையும் சமர்ப்பித்து, இறையருள் பெற்றுக் கொள்ள வாழ்த்துகிறேன்.

இன்றைய குருநாதர் அருள் வாக்கை கீழே தருகிறேன்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!


1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete