​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 October 2023

சித்தன் அருள் - 1451 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!





17/8/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் :புவனேஸ்வரி தேவி சக்தி பீடம். நீலாச்சல் பர்வதம் கௌகாத்தி அஸ்ஸாம். 

பஞ்சபூதத்தை !!!! தன் கையில் அடக்கி இருக்கும் தேவியே !!!!!!

உந்தனை பணிந்து பின் இடையன் வாக்குகள் பின் பரப்புகின்றேன்!!!!

ஏன்? எதை என்றும் அறியாத மனிதா!!! இன்னும் இன்னும் கிரகங்கள் பற்றி ஆராய்ச்சிகள்!!!

ஆனாலும் யான் அறிந்து பின் அறிந்து அறிந்து பின் ஆராய்ச்சியில் கூட கிரகங்களை கட்டுப்படுத்தியவன்!!!!

ஆனாலும் இப்பொழுது கலியுகத்தில் நிச்சயமாய் மனிதனால் கட்டுப்படுத்த முடியாது!!!!

முடியாது!!!!!  மனிதனை இன்னும் இன்னும் பரிகாரங்களும் செய்து கொண்டு இன்னும் இன்னும் கிரகங்களும் கூட அப்படித்தான் தன் வேலை சரியாக செய்து கொண்டிருக்கிறதே!! தவிர!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் ஏன் எதனால் ஆனாலும் சில பரிகாரங்கள் எதற்காக என்றெல்லாம் ஆனாலும் திருத்தலங்களுக்கு செல்லலாம்!!.... ஆனாலும் சென்று கொண்டே இருந்தால் தான் அதன் மகத்துவத்தை புரிந்து அறிந்து!!....... ஆனாலும் நிச்சயமாய் பின் பன் மடங்கு பின் ஒரு கிரகம் நிச்சயம் ஒரு மனிதனுக்கு பின் துன்பம் வைக்கின்றதென்றால் திருத்தலமாக திருத்தலமாக ஓடி ஓடி நிச்சயம் ஒளிந்து கொண்டால் பின் அதாவது முக்கால் பங்கு குறைக்கப்படும் !!!!

ஆனாலும் கால் பங்கு நீங்கள் அனுபவித்தே தீர்க்க வேண்டும் !!

ஆனாலும் இதுதான் உண்மை!!!

பின் முழு பங்கு எல்லாம் நிச்சயம் நீக்கவும் முடியாது!!!

ஆனாலும் யான் சொல்லியதை நன்முறையாக கடைப்பிடித்தாலே பின் அனைத்தும் நீங்கிவிடும்!!!

ஏன் எதற்கு எதை அறிந்தும் அறிந்தும் இன்னும் பின் பிரம்மாவிடம் கேட்டு கேட்டு நான் உரைக்கப் போகின்றேன். மனிதனை மனிதனுக்கு அதாவது அறிவில்லாத மனிதனுக்கு அறிவுகளை புகுத்த!!!!

ராகு கேதுக்கள் அறிந்தும் இதற்கும் பரிகாரங்கள் இல்லை என்று!!....

ஆனாலும் மனிதன் பின் இவ் ராகு கேதுக்கள் பின் தோஷங்கள் தோஷங்கள் என்றெல்லாம்!!!!!

ஆனாலும் இவ் ராகு கேதுக்கள் நியாயாதிபதியாக திரிந்து கொண்டிருக்கின்றது!!!!

யார் ?யார் ? என்ன தவறு செய்கின்றார்களோ!!!!!!! அவர்களுக்கு ஏற்ப ராகுவும் நிச்சயம் பின் அதற்கு தகுந்தார் போல் கேதுவும் நிச்சயம் இறைவன் பாதையில் வகுத்து வகுத்து நிச்சயம் கூட்டி பெருக்கி செல்கின்றனர் !!!!

இதுதான் நியாயமே தவிர மற்றவை எல்லாம் ராகு கேதுக்களுக்கு நிச்சயம் எவ் பரிகாரம் செய்தாலும் நிச்சயம் அதை தன் நிச்சயம் போகாதப்பா!!!!!

ஆனாலும் செய்யலாம்!!! ஆனாலும் நிச்சயம் அதன் தன்மையை பின் அறிந்தும் அறிந்தும் கூட கொடுத்தே தீரும்!!!!

ஏன்? எதற்காக? அப்பனே இவ் உலகத்தில் நியாயம் வேண்டும்!! தர்மம் வேண்டும் !!! 

ஆனால் அப்பனே மனிதன் எல்லாம் இன்னும் இன்னும் தீங்குகள்!!!..... செய்வோர்கள் எல்லாம் நிச்சயம் நல்முறையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணமும் இருக்கின்றது!!!!

ஆனால் ராகு கேது சனி இவர்கள் இல்லையென்றால் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் அறியாத அளவிற்கும் கூட வருத்தங்களாக போய்விடும்!!!!

ஆனால் மனிதனே எதை என்று சொல்ல சொல்லிக் கொண்டிருக்கின்றான் அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்தவன் தான் நன்றாக இருக்கின்றான் என்று!!!!

ஆனாலும் இவ் ராகு கேதுக்கள் தான் அவர்களுக்கும் தண்டனை கொடுக்கும்!!!! அப்பொழுது பாருங்கள்!!! அப்பொழுது ராகு கேதுக்கள் நிச்சயம் தீயவர்களா????.......... அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!

ஆனால் ராகு போன்று கர்மா அழிக்கும் திறன் பின் படைத்தவர் எவரும் இல்லை அறிந்தும்!!!!

இதனால் ராகுவானவன் வந்து விட்டால் நிச்சயம் எத்தனை பின் எத்தனை பிறவிகளில் செய்த கர்மாக்கள் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டே இருக்கின்றது !!!!

ஆனால் யான் நகைக்கின்றேன்!!!!!!!

பின் அவ்வாறு பின் கர்மத்தை கழிக்கும்போது பரிகாரமாம் !?!?!?!?!? பரிகாரம்!!!!!!!!!!

ஆனால் பின் பரிகாரம் ஒன்றும் செல்லாது!!!! அனுபவிக்க வேண்டியதுதான்!!!!!!!

ஆனாலும் பரிகாரம் எதை என்றும் அறிய அறிய திருத்தலங்களுக்கு அதாவது ராகுவின் பின் கதிர்வீச்சுக்கள் அதாவது அகத்திய பெருமான் அறிந்தும் கூட செப்பி இருக்கின்றான்!!!!! 

அதை அங்கு தலத்திற்கு சென்று கொண்டு இருந்தால் சிறிதளவு குறைக்கப்படும்!!!!!

ஆனாலும் சிறிதளவு குறைந்தாலே போதும் வெற்றி கொள்ளலாம்!!!!!

ஆனாலும் அறிந்தும் இப்படித்தான் ராகுவானவன் கூட பின் ஒருவனுக்கு நன்றாக எதை என்றும் அறிய அறிய என்று  பல தோஷங்கள் அதாவது ஜாதகங்களில் கூட பல தோஷங்கள் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள் அவ் தோஷங்கள் உள்ளவர்களை தான் நாங்கள் தேர்ந்தெடுத்து நிச்சயம் வழிநடத்துவோம். ராகு கேதுக்களால்!!!!

ஏனென்றால் ராகு கேதுக்கள்  பின் பிடித்துக் கொண்டால் அறிந்தும் அறிந்தும்  அவன் கர்மாவே விலகி போகும்!!!

அப்பொழுது யாங்கள் சித்தர்கள் வருவோம்!!!! அறிந்தும் இதை யாருக்கும் பின் எவை அறிந்தும் அறிந்தும் மனிதனுக்கு தெரியாமல் இன்னும் பின் ஜோதிடன் யான் கணித்தவன் யான் அனைத்தும் அதாவது உலக ஜோதிடன் என்றெல்லாம் பொய் சொல்லி பின் நடித்துக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும் அவ் வினை அறிந்தும் அறிந்தும் கூட சில நாட்களே!!!! 

ஆனால் திரும்பி அடித்தால் நிச்சயம் தாங்க மாட்டார்கள்!!!

பாருங்கள்!!!! மனிதர்களே ஜோதிடம் சொல்பவர்கள் இன்னும் இன்னும் பின் அதாவது இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதை என்று அறிந்து படைத்து வைக்கின்றான். அதனை கூட தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தால் பின் அப் பாவங்கள் வந்து சேர்ந்தடையும்பொழுது ஆனால் இரண்டு மூன்று ஐந்து வருடங்கள் நன்றாக இருக்குமே தவிர ஆனாலும் கடைசியில் பார்த்தால் நிச்சயம் துன்பங்கள்!!!!!

ஆனாலும் எண்ணிக் கொள்வான் ஏன்?? இந்த நிலைமை????

நல்லது தான் செய்தோமே என்று !!!!

ஆனாலும் பின் அறிந்தும் கூட ஆனாலும் அதற்கேற்றார் போல் நீ புண்ணியம் செய்ய வேண்டும்!!! சமநிலைப்படுத்த வேண்டும்!!!! அதற்கு பல் திருத்தலங்களையும் கூட பல பல வழிகளிலும் கூட இயலாதவர்களுக்கு பின் அதாவது பேசத் தெரியாத பின் ஜீவராசிகளுக்கும் உணவளித்தல்!!!! இன்னும் போட்டி பொறாமைகள் நீக்கி அன்போடு பழகுதல் இவையெல்லாம் இருந்தால் கிரகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது!!!! 

சொல்கின்றேன் ராகுவானவனுக்கு பரிகாரம் இல்லை!!!! 

ஆனால் பொறாமை கோபம் காமம் ஆனால் இவை நீக்கினால் அவன் சாந்தப்படுத்தி விடுவான்!!! 

ஆனாலும் அறிந்தும் இவனே இதையெல்லாம் கொடுப்பான்!!! 

ஆனாலும் அறிந்தும் இறைவனிடத்தில் சென்று சென்று அமைதியாக பொறுமையாக காத்திருந்தால் ராகுவானவன் நிச்சயம் இவந்தனை பின் இறைவனே பார்த்து கொள்ளட்டும் என்று விட்டு விடும் பொழுது நீங்கள் உயர்ந்து பண பொருளாதாரத்திலும் கூட உயர்ந்து அனைத்தும் பின் நடக்கும் இது தான் உண்மை!!! 

அறிந்தும் கூட!!!இதனால் நிச்சயம் அதே போல தான் கேதுவானவனும் கூட!!!!

ஆனாலும் நல் முறையாக பொய் சொல்லுதல் பிறரை ஏமாற்றுதல் இன்னும் இன்னும் எதை எதையோ செய்து கொண்டு இருந்தால் கேதுபவன் நிச்சயம் பின் அறிந்தும் கூட தாழ்த்தி விடுவான்!!!!

இறை அனுகிரகங்களே கொடுக்க செய்ய மாட்டான்!!!!

நீ !!  இறைவனிடத்திலே இருந்தாலும் அவ் அனுகிரகத்தை பெற முடியாது!!!

அதற்கு தகுந்தாற்போல் இறைவா!!!!  அனைத்தும் நீயே பார்த்துக்கொள் என்று நிச்சயம் விட்டு விட்டால் பின் கேதுவானவனும் நீங்கி விடுவான்!!!!  இறைவனே பார்த்துக்கொள்வான் என்று!!! 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இறை சக்திகள் பலமாகி அனைத்து திறன்களும் பாடும் திறன்களும் கவி பாடும் இன்னும்  இன்னும் ஏராளமான திறமைகளும் இறையருளால் கிடைக்கும்!!!

 இதனால் பின் அருள்களை பெற்று தருவது நிச்சயம் ராகு கேதுக்கள்!!!!

ஆனாலும் அறிந்தும் இக் கிரகங்கள் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் அனைத்து கர்மாக்களையும் நீக்கும்!! அவ்வளவுதான்!!! பணிந்தும் பணிந்தும்  கூட நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும்!!!

நிச்சயம் புண்ணியங்கள் இருந்தால் நிச்சயம் அதற்குரிய பின் தகுதி ஆனவற்றையும் கூட அனுபவித்தே ஆக வேண்டும் என்பது மெய்!!!

இதனால் உணருங்கள்!!!

உணர்ந்து கொண்டே சென்றால் நிச்சயம் பின் அதனால் அதாவது எதை என்று கூற  இக் கிரகங்களை விட்டுவிட்டால் குரு பகவான் அறிந்தும் கூட எதை என்றும் இன்னும் அடித்து இன்னும் பல வகையிலும் கூட உயர்வுகள்!!!! 

அதாவது பின் அறிந்தும் கூட குருஅவன். எண்ணும் எண்ணமெல்லாம் நிச்சயம் செயல்படுத்தி குருபகவான் ஒருவேளை ஒரு வேளை அறிந்து கூட அவன்தன் எங்கிருந்தாலும் நல்லதை தான் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யான் ஏற்கனவே எடுத்துரைத்து விட்டேன்!!!!!

இதனால் பின் அவந்தனை பற்றி கவலைகளே இல்லை!!!

நிச்சயம் அவந்தன் மனிதனின் பின் போராடி போராடி ஆனாலும் அடக்கி அடக்கி நிச்சயம் நல்வழிப்படுத்தவே நிச்சயம் பின் நிச்சயம் குரு பகவான் நிச்சயம் ஏற்படுத்தி!!!

இதனால் எங்கிருந்தாலும் பின் அதாவது மறைவு ஸ்தானங்கள் என்றெல்லாம் கூறுகின்றார்கள் 6, 8, 12, (ஜாதக கட்டத்தில்) ஆனாலும் பின் மறைவு ஸ்தானத்தில் எப்பொழுது மன்னவன் (குரு) அமருகின்றானோ அவந்தன் நிச்சயம் இப்பிறவியிலே!!!! கர்மத்தை நீக்கி நிச்சயம் பின் பல கஷ்டங்களையும் பல துன்பங்களையும் இன்னல்களையும் பட்டு கடைசியில் இறைவனைப் பார்ப்பான் மோட்ச கதிக்கு போய்விடும்!!!

இதுதான் உண்மை.

இதனால் அதற்கு பரிகாரங்களோ??!!........ எதை செய்தாலும்??!!!........

நிச்சயம் ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்!!!! செய்யலாம்  பரிகாரத்தை ஆனால் நிச்சயம் சிறிதளவே தடுக்கும்!!! அதை என்றும் எவை என்றும் இன்னும் இன்னும் அதனை பற்றி எல்லாம் பிரம்மாவிடத்தில் எடுத்து எடுத்து எடுத்து எவை என்று கூறி பின் பின் யான் உரைக்கப் போகின்றேன் நிச்சயமாய் கலியுகத்தில்!!!!

கலியுகத்தில் இன்னும் என்னென்ன நடக்கின்றது என்பதையெல்லாம் எடுத்துரைத்து நிச்சயம் இறைவன் பாதையை பிடித்துக் கொள்வதற்கு ஒரு துன்பமும் நெருங்காது!!!!

இதனால் பின் ராகுவும் கேதுவும் நிச்சயம் உயர்ந்த கிரகங்கள் தான்!!! உயரிய இடத்தில் தான் வைக்கும்!!!!

நிச்சயம் எதை என்று அறிய அறிய இக் கிரகங்கள் அனைத்தும் பின் அதாவது கர்மாக்களை கூட பின் ஏற்படுத்தி அனைத்தும் அனுபவித்து பின் திறன்!!!!

அதனால் இவை விட்டு விட்டால் அனைத்து கிரகங்களும் கூட செயல்பட தொடங்கி விடும்!!!

இதனால் உயர்ந்த லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடையலாம்!!!

அதனால் ராகு கேதுக்கள் நிச்சயம் கர்மத்தை ஒழிப்பவராகவே இருக்கின்றார்கள்!!!!

அதனிடையே பின் அதாவது அறிந்து சனியவனும் கூட அறிந்தும் அறிந்தும் கூட நியாயம் தர்மம் காக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் !!!!

அதனால் நீ என்ன தவறு செய்கின்றாயோ!!!!! அதற்கு தகுந்தாற்போல்  உந்தனுக்கே திருப்பிக் கொடுப்பதில் பின் சனியவனுக்கு அவனே நிகர்!!!!!!! 

சொல்லிவிட்டேன்!!!

அதனால் பொறாமை பட்டால் நிச்சயம் அவ் பொறாமை உன் மேல் மற்றொருவன் காட்டுவான்!!!!!!

நீ பொய் சொல்லி ஏமாற்றினால் இதே போல் உன்னையும் ஏமாற்றுவான்!!!!! அறிந்து கூட!!!!

இதனால் நீ என்னென்ன செய்கின்றாயோ?!  அதற்கு தகுந்தார் போல மற்றவர்களை ஏற்படுத்தி உன்னை பின் அறிந்தும் கூட தாழ்நோக்கி அதாவது கீழ்நோக்கி எடுத்துச் செல்வதுதான் இயல்பு!!!!!

இதனால் சனியவனும் பின் சரியான வழியிலே தான் செல்கின்றது!!!!

இதனால் ஒவ்வொரு கிரகத்தின் கூட!!! ஆனாலும் சக்திகள்!!!

ஆனாலம் ஏழரை காலங்கள் தன்னிலும் கூட(  ஏழரை சனி)  பல வருத்தங்கள் ஏற்படுவது உண்டு!!!

ஆனாலும் பல மனிதர்களுக்கு கூட அவ் ஏழரை அறிந்தும் கூட உயர்நிலை பெற்றதும் யான் பார்த்திருக்கின்றேன்!!!

(சில மனிதர்களுக்கு ஏழரை சனி காலகட்டத்திலும் உயர்ந்த வாழ்வு அடைந்துள்ளனர் தானம் தர்மங்கள் செய்து புண்ணியம் இருந்ததால்)

இதனால் செய்த தர்மங்கள் அதுபோல்!!!! நிச்சயம் தர்மங்கள் தலைகாக்கும் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்ததே !!!!!

இதனால் முற்றும் துறந்த முனிவனுக்கு பின் என்னதான் தேவை ? என்று இருந்தால் பின் அனைத்து கிரகங்களும் ஒன்றும் செய்யாது!!!!

முற்றும் திறந்த முனிவன் என்பதெல்லாம் யான் எதை எடுத்துரைக்கின்றேனென்றால் மனிதா !!!! பின் இவ்வாறு தோஷங்கள் இருந்தால் நீ எதனையுமே பந்த பாசத்தில் ஈடுபடாமல் அனைத்தும் நீயே!!! என்று அலைந்து திரிந்து ஏதாவது ஒன்றை உட்கொண்டு எதற்கும்  ஆசைப்படாமல் இருந்தால் கிரகங்களிலிருந்து நீ தப்பித்துக் கொள்ளலாம் அவ்வளவு தான்!!!

எதற்கு ? எப்பொழுது? ஆசைப்படுகின்றாயோ!!!...... அப்பொழுதே அவ் கிரகம் உன்னை பார்க்கும்!!!! இவன் என்ன செய்திருக்கின்றான் என்று!!!

இதனால் அதன்படியே தான் நடக்கும் !!!!

அதன்படியே நுழைந்து கர்மத்தை அனுபவிக்க பல பல வழிகளை கூட சோதனைகள் போராட்டங்கள் மனக்குழப்பங்களில் என்றெல்லாம் நிச்சயம் அவ் கிரகங்கள் கொடுக்கும்!!!!

அதனால் தான் பரதேசி போல் வாழ்ந்துவிடு!!!!!

அதாவது பரதேசி என்றால் அலைந்து திரிந்து எந்தனுக்கு ஒன்றுமே இல்லையே!!!!!

எந்தனுக்கு இறைவா !!! நீ தான் துணை !!! என்று சென்று கொண்டே இருக்க வேண்டும்!!!!!

எவையெல்லாம் இவையெல்லாம் தேவையில்லாதது என்றெல்லாம் அனைத்தும் இருந்தும் கூட !!!!

பின் பிச்சை ஏந்தும் நிலை இருந்தால் நிச்சயம் கிரகங்கள் கூட ஒன்றும் செய்யாது இதுதான் நிச்சயம்!!!!

இன்னும் இன்னும் கிரகங்களை பற்றி சொல்ல போகின்றேன்!!!! விதவிதமான வாக்குகள் எல்லாம் சொல்லப் போகின்றேன்!!!! அப்பொழுது புரியும் மனிதன் எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான்!!!என்று 

மனிதனுக்கு ஏன் வருத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது என்பதையெல்லாம் நீங்களே அறிந்து கொள்ளலாம். இன்னும் இன்னும் அறிய  அறிய ஏனைய பிறவிகளில் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றாய் என்பதை கூட அறிந்தும் அறிந்தும் சுங்கனவன் (சுக்கிரன்) கூட பின் பாவத்தை நோக்கி நீக்கி  புண்ணியத்தை எப்படி தருவான் என்பதையும் கூட மற்றொரு தலத்திலும் உரைக்கின்றேன்!!!

நலன்கள் !!! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete