​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 4 October 2023

சித்தன் அருள் - 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்!


(சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன்.

(முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்)

(இங்கு மீண்டும் அம்மை ஒருவர் இது தொடர்பாக கேட்க)

அதனால் அம்மையே எதை என்றும் அறிய அம்மையே எதை என்றும் புரியப்புரிய பல கஷ்டங்கள் (உந்தனுக்கு உள்ளது) அம்மையே அவ் ஆன்மா அங்கு அலைந்து கொண்டு இருந்தது என்பேன். எதை என்றும் அறிய அறிய (இது போல இராமேஸ்வரத்திற்கு ) அதாவது (அடிக்கடி) சென்று கொண்டே இரு. (அவ் ஆன்மா உன்னிடத்தில் வந்து உன்னை ) ஈர்க்கும். இறைவனிடத்தில் விட்டு விடு. அப்பொழுதுதான் (உனக்கு) சந்தோசங்கள் (உனது வாழ்வில் உண்டாகும்).

அடியவர் கேள்வி:- எனது தம்பி ஈசனிடம் முக்தி அடைந்து விட்டாரா?

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய (உனது தமையன் முக்தி அடையாமல்)  அலைந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. (இராமேசுவரத்திறக்கு அடிக்கடி) சென்று கொண்டே இரு அப்பனே. எவை என்று கூற யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதன் ரகசியங்களும் முன்னே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கேயே தான் இருக்கின்றான் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. முதல் தனுஷ்கோடி பிறகு இறை தரிசனம். திதி எப்பொழுது தரவேண்டும்?. இறை தரிசனத்திற்கு பிறகா? . நன்றி. ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத அகத்தியர் அய்யா துணை.

    ReplyDelete
  3. முதலில் தனுஷ்கோடி பிறகு இறை தரிசனம். திதி எப்பொழுது தரவேண்டும் என்று கூறவும். ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete