​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 March 2023

சித்தன் அருள் - 1294 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் உரைத்த காசி வாக்கு!






19/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி கங்கைகரையில்.

ஆதி ஈசனை மனதில் நிறுத்தி செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நிச்சயம் என்னுடைய அருள்கள் அப்பனே நீண்ட நீண்ட காலம்  நிச்சயம் மனிதர்களுக்கு வந்து கொண்டே இருக்கும் அப்பனே ஏனென்றால் எதையென்று அறிய அறிய அப்பனே யான் சொல்லியதையும் கூட சரிமுறையாக பயன் படுத்தி பயன் படுத்தி!!!..... 

அப்பனே  சந்தோஷங்கள்!!!!! 

ஆனாலும் அப்பனே நிச்சயமாய் பல மனிதர்களை கூட யாம் அறிவோம் எப்படி என்பதை கூட!!!!! 

ஆனாலும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை இப்போது யான் சொல்கின்றேன் அப்பனே 

காசிக்கு சென்றால் புண்ணியம் என்கின்றார்கள் அப்பனே 

எதற்கு??? யாருக்காவது எதை என்று அறிய அறிய தெரியுமா??? தெரியுமா???

அப்பனே முதலில் கங்கையில் இருந்து பின் அதாவது எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஈசனை நாடும் பொழுது அதாவது கங்கை நீரில் பின் நீராடி பின் ஈசனை தரிசிப்பதற்காக செல்கின்ற பொழுது வழியில் அப்பனே மனித உடம்புகள் அப்பனே பின் எவ்வாறு என்பதை கூட அக்னி மூலமே எறியூட்ட!!!!!! அப்பனே அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!! 

( காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசனம் செய்ய போகும் பொழுது ஆலயத்திற்கு எதிரே மணிகர்ணிகா காட் எனப்படும் சுடுகாட்டில் இறந்தவர் சடலங்கள் எரியூட்டப்பட்டு கொண்டே இருக்கும், எந்த நேரமும் மனித உடல்கள் வந்து கொண்டே இருக்கும் தொடர்ந்து மணிகர்ணிகா காட்டில் சிதை அக்னி அணைவதே இல்லை)

நிரந்தரம் ஒன்றுமில்லை இவ் உடம்பு இறைவனுக்கே சொந்தம் என்று யார் ஒருவன் உணர்ந்து கொள்கின்றானோ அவந்தனுக்குத்தான் புண்ணியங்கள் அப்பனே!!!!

மற்றபடி காசிக்கு வருவது நீராடுவது மீண்டும் செல்வது இப்படி என்றால் அப்பனே புண்ணியங்கள் அப்பனே பெற்றுக் கொள்வதே இல்லை!!!!!

அப்பனே பின் மீண்டும் மீண்டும் வந்து வந்து சென்று சென்று அப்பனே பின் கஷ்டங்கள் தான் வந்து கொண்டே இருக்கின்றது பல மனிதர்களுக்கு!!! 

யான் இதை உணர்ந்து உணர்ந்து பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!

ஆனாலும்  அப்பனே இவை சில ஞானியர்களுக்கு மட்டுமே புரியும் அதாவது எங்கள் அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்மற்றவர்களுக்கு எல்லாம் புரியாதப்பா!!!!

சித்தர்கள் விளையாட்டு கடைசியில் அப்பனே எங்கு போய் சேர்க்கும் என்பதை கூட வரும் காலங்களில் நிச்சயம் யாங்கள் உரைப்போம்!!!!

அப்பனே எங்களுடைய விளையாட்டுக்கள் அப்பனே சில சில விஷயங்களில் கூட அப்பனே சில கஷ்டங்கள் அப்பனே மனக்குழப்பங்கள் வரலாம்........ ஆனால் கடைசியில் அப்பனே நிச்சயம் யாங்கள் இறைவனை எப்படி? எங்கு? தரிசிப்பது என்பதைக் கூட நிச்சயம் யாங்கள் காட்டுவோம் கண்களுக்கு அப்பனே!!!!!

இதை பல மனிதர்களும் கூட பல யுகங்களாக யுகங்களாக வாழ்ந்து வாழ்ந்து அப்பனே யாங்களும் கூட அவர்களை எங்கெங்கோ அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம்!!!!

ஆனாலும் எங்கள் வழியில் வருபவர்களுக்கு அப்பனே சொல்கின்றேன்!!!!

"""""" மிகுதியான கஷ்டங்கள் வரும்!!!!

"""" அப்பனே மனக்குழப்பங்கள் வரும்!!!

"""" ஏதும் நடக்காது!!!!!

இவையெல்லாம் தாங்கிக் கொண்டால்தான் அப்பனே நிச்சயமாய் அப்பனே பக்குவங்கள் ஏற்படும்!!!! பக்குவங்கள் ஏற்பட்டு அப்பனே..... ஒன்றுமில்லை இவ்வுலகில் என்பது புரியவரும்!!!!!

யார் ஒருவருக்கு பின் இவ்வுலகம் மாயையே!!!! ஒன்றும் இல்லை!!!!! என்ற நிலைக்கு வருகின்றார்களோ அப்படி எதை எதை என்று அறிந்து அறிந்து கஷ்டங்களுக்கு உள்ளாக்குவோம் அப்பனே!!! 

அப்படி இருந்தால் நிச்சயம் எங்கள் வழியில் வாருங்கள் அப்பனே!!!!!

ஆனால் நிச்சயம் எங்களுடைய தரிசனமும் உங்களுக்கு கிடைக்க செய்து அப்பனே அனைத்தும் வாரி வழங்குவோம் அப்பனே!!!!

"""""நோயில்லாத வாழ்வை ஏற்படுத்துவோம் அப்பனே!!!!

அப்பனே எதற்காக அப்பனே கடைசியில் தான் வருவது  கர்மா என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அதற்குள்ளே ஆடி அடங்குதப்பா வாழ்க்கை!!!!!

அப்பனே இதை நிமித்தம் காட்டி காட்டி அப்பனே அதனால்தான் கடைசியில் வயதாகின்ற நேரத்தில் நோய்கள் பற்றிக் கொள்கின்றது அப்பனே!!!

இதனால் நிச்சயம் எங்கள் வழிகளில் வருபவர்களுக்கு அப்பனே கஷ்டங்கள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

இவையெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே யாங்கள் கர்மாவை நீக்குவதற்காகவே செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

உப்பு தான் மனிதர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் ஆனாலும் அப்பனே அதாவது பின் உப்பை பின் தண்ணீரில் இட்டால்தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து கரையும்!!!!

அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் மனிதனின் கர்மங்கள் அப்பனே நீரில் அதாவது உப்பில் இட்டால் தான் கரையும்!!!!! இங்கு எவை எவை என்று அறிய அறிய அப்பனே நீரை அப்பனே கர்மமாகவும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே நீரை எதை எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே யாங்கள் என்று எடுத்துக் கொள்வோமாக!!! 

அப்பனே புரிகின்றதா???? நிச்சயம் அப்பனே புரிய மாட்டாது!!!!!( புரியாது) 

அப்பனே சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியாக அப்பனே உணர்ந்து கொண்டால் வெற்றிகள்!!!

அப்பனே அவ்வாறு உணர்ந்து கொள்ளாவிடிலும் அப்பனே யாங்கள் சிறிது காலம் அப்பனே மனதை மாற்றுவோம்!!!!!

அவ்வாறும் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே தோல்வியில் முடிந்து அப்பனே வாழ்க்கை மீண்டும் அப்பனே!!!!! அகத்தியனை நம்பினேனே!!!! அப்பனே பல சித்தர்களை நம்பினேனே!!!! அப்பனே ஏன் ஈசனை நம்பினேனே!!! முருகனை நம்பினேனே!!!! யாரும் எந்தனுக்கு உதவிகள் புரியவில்லை!!!...... என்றெல்லாம் அப்பனே பிதற்றுவது!!!!!

அப்பனே யார் இதற்கு காரணம்??? சிறிதளவாவது யோசித்தீர்களா?? அப்பனே!!!

ஏன் சித்தர்கள் யாங்கள் உங்களுக்காக வர வேண்டும்????

அப்பனே வேண்டாம் அப்பனே!!!! புவியில் பிறந்தது போதும்!!!!

அப்பனே இப் புவிதன்னில் பிறந்தாலே அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் கஷ்டங்கள்!!!!!

இறைவனாகவே இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் தான் பட வேண்டும் அதனால் தான் அப்பனே மூடநம்பிக்கை ஒழித்து அப்பனே...நிச்சயம் மேலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே அப்பனே யாங்கள் இங்கு மக்களுக்கு உதவிகரமாக அப்பனே பல தவங்களையும் மேற்கொண்டு காடு மேடுகளாக அலைந்து கொண்டு அப்பனே எப்படி மனிதனை திருத்தினால் நலமாகும் என்பதை எல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

அதனால் நிச்சயமாய் எங்கள் வழியில் வருபவர்களுக்கு அதாவது பூத உடல் அதாவது கர்மா உடல் அதை முதலில் நீக்குவதே சிறப்பு என்பேன் அப்பனே!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன்..... அணுவானது அப்பனே விரிவடைந்து கொண்டே செல்லும் அப்பனே ஏன்???  விரிவடைகின்றது என்பதை கூட யான் தெள்ள தெளிவாக குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!! 

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்தால் அணுவானது அப்பனே விரிவடையாது!!!! அப்பனே சில நேரங்களில் விரிவடையும் அப்பனே இதனால் அப்பனே அணுவானது விரிவடைந்து பின் உடைந்துவிடும் அப்பனே!!!! 

மீண்டும் அப்பனே பின் தோன்றும் என்பேன் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே ஆனால் ஒன்றும் இல்லை இது போலத்தான் அப்பனே மனிதன் உடம்பை கூட யான் எதை என்று சொல்வது??? பூத உடம்பு!!!

அப்பனே இவைதன் எங்கு இருந்தால் அப்பனே இவ் பூத உடம்பிற்கு அப்பனே பிறவிகள் கிடையாது என்பதை கூட யாங்கள் அறிவோம்......அப்பனே பின்பு யாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்!!!!  அப்படி இல்லாவிடில் அப்பனே மீண்டும் அப்பனே இப் பூத உடம்பு பெருக்கெடுத்து உடைந்து உடைந்து அப்பனே மீண்டும் மீண்டும் வருகின்றது அப்பனே கஷ்டங்கள் 

ஆனால் அனைவருக்கும் கஷ்டங்கள் இல்லை அப்பனே தெரிகின்றதா?? புரிகின்றதா?? அப்பனே

பின் மனிதனுக்கு கஷ்டங்கள்..... சோறு கொண்டு செல்வதைப் போல் இட்டான் போல் ...பானையில் வைத்து கொண்டு ஒருவன் சென்றானாம்!!!..........   பின்னாலே பின் சென்றானாம் ஒருவன்!!! 
பசிக்குது!!!!  என்றானாம்!!!! 

அப்பனே ஆனாலும் சோறு கொண்டு போகும் பின் மனிதனோ பின் பின்னே திரும்பி பார்த்து..... எதற்கு??? என் பின்னே பின்னாலே வருகின்றாய்???? 

பின் ஆனாலும் பசிக்கின்றது என்பது அவனுடைய நம்பிக்கை!!! 

ஆனால் பின் சோறு கொண்டு எதை என்று ஆனால் அவைதன் ஆனாலும் அப்பனே பின் கர்மத்தை சுமந்து கொண்டிருக்கின்றான்... 

இதனால் பின்னே செல்பவனும் அதற்காகவே அலைகின்றான்!!!! 

புரிகின்றதா????? 

அப்பனே எதை என்று அறிய அறிய இப்படி தான் மனிதன் அலைந்து கொண்டிருக்கின்றான்.... கர்மாவை தானே உருவாக்கி கொண்டிருக்கின்றான் அப்பனே!!!  பொய்களப்பா!!!  பொய்களப்பா!!!! 

அப்பனே இதை சித்தர்கள் உணர்வார்கள் அப்பனே.....புசுண்ட முனியின் அப்பனே எதை என்று அறிய அறிய முதலில் மனிதனுக்கு கஷ்டங்கள் கொடுத்தால் தான் திருந்துவான் திருந்துவான் என்றெல்லாம்.... புசுண்டன் கூட!!!!!........ 

ஆனாலும் யானும் பொறுத்திருங்கள் பொறுத்திருங்கள்.... எதை என்று அறிய அறிய அப்பனே மனிதனால் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே பின் செய்து கொள்ளுங்கள் பார்ப்போம்!!!! 

அப்பனே இப் பூத உடம்பிற்கு அப்பனே பிறவிகள் இல்லாமல் அப்பனே எதை எதை அறிய அறிய ஆனாலும் செய்ய முடியும் என்பேன் அப்பனே!!! 

ஆனாலும் நோய்கள் இல்லாத வாழ்க்கை அப்பனே அதையாவது செய்ய தொடங்குங்கள் அப்பனே!!!! 

ஆனாலும் இல்லையப்பா!!!! எப்பொழுது அப்பனே 

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் புதிய புதிய வார்த்தைகள் அப்பனே..... எப்பொழுது ஒருவன் பொய் பேசுகின்றானோ அப்பனே அது எதை என்று அறிய அறிய ஒரு பின் குடலில் (மனித வயிற்றில் உள்ள குடல்) அப்பனே ஓர் சிறு பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஓட்டையும் இருக்கும் என்பேன் அப்பனே!!!! 

அதனுள்ளே அப்பனே பல வழிகளில் கூட கண்ணுக்கு தெரியாத அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே ஈர்க்கும் என்பேன் அப்பனே எதை என்று கூட ஆனாலும் அப்பனே அணுவானது எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அப்படி ஈர்க்கும் பொழுது அப்பனே கர்மா எதை என்று அறிய தெரியாமலே வந்து சேர்ந்து விடுகின்றது அப்பனே!!!! 

உடம்பிற்கு அப்பனே கர்மாவை ஈர்க்கும் தன்மை உடையது!!!!  பாவத்தை ஈர்க்கும் எதை என்று அறிய அறிய அப்பனே புண்ணியத்தையும் ஈர்க்கும் அப்பனே இதனை தெளிவாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!!

அப்பனே வரும் காலங்களில் இறைவன் இல்லை இறைவன் இல்லை என்றெல்லாம் சொல்வார்கள் சித்தர்கள் இல்லை சித்தர்கள் இல்லை என்றெல்லாம் சொல்வார்கள் அப்பனே ஏன் எதற்காக என்று யாராவது யோசித்தீர்களா???

அப்பனே அவை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் மந்திரங்கள் ஜெபித்தால் அப்பனே அவை தன் முழுமையாக பெற்றுவிடலாம் என்றெல்லாம் அப்பனே பொய்!!!! பொய்களப்பா!!!! அப்பனே நம்பி விடாதீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

அப்பனே உண்மை நிலைகளை ஆராய்ந்து ஆராய்ந்து எனது ஆசிகள் பெற்றால்தான் அப்பனே அதற்கும் முழு தீர்வு கிடைக்கும் என்பேன் அப்பனே!!!!!

யாருக்காவது எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே நல்முறையாக முதலில் எண்ணத்தை பெருக்குங்கள்!!!!! எண்ணத்தைக் கூட்டுங்கள்!!!

அதாவது அப்பனே முதலில் மேல் எண்ணத்தை வையுங்கள் அப்பனே 
அதாவது இறைவன்பால்!!!

அப்பனே அனைத்திற்கும் காரணம் இறைவனே என்பதை கூட தெள்ளத் தெளிவாகவே அனைவரும்உணர்வீர்களாக!!!!! 

அப்பனே அப்படி இருக்க கஷ்டங்கள் எதனால் வருகின்றது என்பதை கூட நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா????

 இல்லை!!!

அப்பனே ஒரு நாளும் இல்லையப்பா!!!!!!!!!

அப்பனே பின் மீண்டும் மீண்டும் உரைத்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே..... தன் நிலைமைக்கு தானே காரணம் என்று அப்பனே

மாயையில் சிக்கிக் கொண்டு அப்பனே அதாவது பாவத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்பனே இதன் மூலம் கூட அப்பனே பின் அதாவது நுரையீரலில் கூட அப்பனே சில சில புள்ளிகள் இருக்கும் என்பேன் அப்பனே!!!!

நீ எதை செய்கின்றாயோ அப்பனே அதை அப்படியே ஈர்க்கும் தன்மை உடையது என்பேன் அப்பனே!!! இதை உடம்பில் எங்கெங்கு உள்ளது என்பதை கூட யான் அறிவேன்!!! அப்பனே 

இன்னும் இதனை விட பலமானது மூளையில் தான் உள்ளது என்பேன் அப்பனே!!! அப்பொழுது பொய் சொன்னாலும் அப்பனே எதை என்று அறிய அப்பனே அதுவும் சேமித்து வைத்துக் கொள்ளும்!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பாவத்தையும் சேர்த்துக் கொள்ளும் புண்ணியத்தையும் சேர்த்துக் கொள்ளும்.... நீ மற்றவர்களுக்கு எதை எண்ணுகின்றாயோ அதையும் சேர்த்துக் கொள்ளும் மற்றவர்களுக்கு நல்லது நினைக்கின்றாயோ அதையும் சேர்த்துக் கொள்ளும் அப்பனே!!!! கடைசியில் பழிவாங்கி விடும் என்பேன் அப்பனே

இதனால் இதில் யார் குற்றம்???????

அப்பனே மனித உடம்பு என்பது அப்பனே....கற்றை!!!!( கதிர்) அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே அணுதானப்பா!!!!! 

அப்பனே மனித உடம்பில் என்னென்ன பாகங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றது என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே!!!!ஓர் படி மேலே சென்று அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே பின் சித்தர்கள் வரவில்லை என்றால் அப்பனே நிச்சயம்..பின் எங்களை பொய்யாக்கி மனிதர்கள் எதை என்று அறியறிய சித்தர்களே இல்லை என்ற நிலைமைக்கு ஆளாக்கி விடுவார்கள் அப்பனே

ஏனென்றால் அப்பனே மனிதனின் அப்பனே மூளையை பார்த்தால் அப்பனே சம்பாதிப்பதே முதலில் பின் எண்ணத்தை கொண்டுள்ளான் அப்பனே

பணங்களை ஈட்டுவதே பொருள்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எங்களுக்கு எதுவும் தேவையில்லையப்பா!!!!

அப்பனே யாங்களே நீங்கள் எதை என்று அறிந்து அறிந்து மனிதர்களே யாங்கள் தான் உங்களுக்கு பிச்சை இடுகின்றோம் அப்பனே!!!!!
எதை என்று அறிய அறிய எங்களுக்கு பிச்சை இட்டு அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய நீங்கள் பிச்சை இட்டால்தான் எங்களால் வாழ முடியுமா??????? என்ன?? !!!!!

அப்பனே திருந்திக்கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!! 

யாங்கள் எதுவுமாகவே எதை என்று அறிய அறிய மனித குலத்திற்கு பின் எவையென்று உதவிடவே அப்பனே யாங்கள் திரிந்து கொண்டு இருக்கின்றோம் அப்பனே..... 

அதனால் பல மனிதருக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலமாகவே நலமாகவே!!!!! 

எங்களை நம்பி வந்து விட்டால் அப்பனே ஏதும் தேவையில்லை என்று தான் நம்பி வரவேண்டும் அப்பனே!!!!

பின் எவையென்று அறிய அறிய உடம்பை எவை என்று புரிய புரிய அப்பனே எவையுமே தேவையில்லை பின் எவையென்று சித்தர்கள் நீங்கள் தான் துணை என்று வந்து விட்டால் அப்பனே நாங்கள் பார்த்துக் கொள்வோம் உங்களை!!!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறியறிய அப்பனே யாங்கள் வரத்தை கொடுத்து விட்டால் அப்பனே......."""" மீண்டும் நிச்சயம் அப்பனே திரும்ப பெற்றிருக்க மாட்டோம்!!!!!!( திரும்ப பெற மாட்டோம்) 

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் ஆனால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்!!!! ஆனால் எதை என்று அறிய அறிய 

"""" இறைவனோ அப்பனே வரங்கள் கொடுத்து விடுவான்.. ஆனால் எளிதில் பிடுங்கி விடுவான்!!!!

யாங்கள் அப்படி இல்லை யாங்கள்!!!!! வரத்தை கொடுத்து விட்டால் மீண்டும் பிடுங்க மாட்டோம் அப்பனே!!! 

அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள்!!!!

எங்கள் அருகில் வரவேண்டும் என்றால் அப்பனே எப்படி எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய பரீட்சையில் வெற்றி பெற்றால் தான் அப்பனே ஒரு மாணவன் அப்பனே உயர்ந்த நிலைக்கு செல்கின்றான்!!! அதேபோலத்தான் அப்பனே நீங்கள் பரிட்சையில் தேற வேண்டும்!!!!!

ஆனால் தேறுவதே இல்லை அப்பனே!!!!!

எதனால் என்பதையும் கூட கர்மத்தை தான் அதிக அளவு அப்பனே அதனால் அப்பனே எங்கிருந்து எதை என்று அறிய அறிய அப்பனே தோல்வி அடைந்து விடுகின்றீர்கள் அப்பனே!!!!! 

புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதில் வல்லவராக இருங்கள் உத்தமராக இருங்கள் பொய் பேசாதவராக இருங்கள் பொறாமை கொள்ளாதவராக இருங்கள்!!!

அப்பனே அனைத்தும் யானே தருகின்றேன்!!!!

"""""" நீ!!!!!!  என்ன??!!! என்னை தேடி வருவது??!!!!.... அப்பனே!!!!!!!

"""" யானே உன்னை தேடி வருகின்றேன் அப்பனே!!!!!!!! 

இதை நிச்சயம் முதலில் மனதில் இட்டுக் கொள்ள வேண்டும் அப்பனே!!!!

அப்பனே அதாவது (காசி) என்னிடத்திலிருந்தே!!!!! யான் உரைக்கின்றேன் அப்பனே!!!!!  எதையென்று அறிய அறிய!!!!

என்னுடைய ஆசிகள் இல்லாமலும் அப்பனே சித்தர்களுடைய ஆசிகள் இல்லாமலும்..... இங்கு வந்தாலும்(காசி) ஒரு பிரயோஜனம் இல்லையப்பா!!!!!!

கஷ்டங்கள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே!!!!

ஓடுகிறீர்கள்!!! ஓடுகிறீர்கள்!!! அப்பனே எங்கு தான் ஓடுகிறீர்கள்????? அப்பனே

பின் திரும்பி பார்த்தால் மீண்டும் வந்து விடுகின்றீர்கள் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே ஓடுங்கள் ஓடுங்கள்...... எதற்காக ஓடுகின்றீர்கள்??? கர்மத்தை சேர்ப்பதற்காகவே ஓடுகின்றீர்களே!!!......... அப்பனே!!! 

யாராவது ஒருவர் எதை என்று அறிய அறிய பின் இறைவனை காண ஓடோடி திரிகின்றானா?? என்ன??

அப்பனே பக்தி என்பது ஒன்றும் எதை என்று அறிய அறிய பக்தி என்பதே ஒன்றும் தெரியவில்லையப்பா!!!! மனிதனுக்கு!!!!

அப்பொழுது இறைவனுடைய ஆசிகள் எப்படி கிடைக்கும்????? அருள்கள் எப்படி கிடைக்கும்?????

அப்பனே சொல்லுங்கள்!!! எதை என்று அறிய அறிய அப்பனே பின் """""""""""""கேள்விகளாக நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள்!!!!!!!!!!!! அப்பனே!!!!! 

அனைத்திற்கும்"""""" யான் பதில் கூற...... அப்பனே நீங்கள் தகுதியானவர்களா????????????????????????? 

நிச்சயம் இல்லை அப்பனே!!!

பொய்களப்பா!!!!!!! 

எதையெதையோ வைத்துக்கொண்டு அப்பனே வசிய தேவதைகளையும் வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய..........""""" குட்டி சாத்தான்களையும் வைத்துக் கொண்டு..........""" அகத்தியன் பேசுகின்றேன் எதை என்று அறிந்து அறிந்து பின் எவை என்று கூட """"""முருகன் பேசுகின்றான் என்பவை எல்லாம் பொய் பித்தலாட்டமப்பா!!!!!!!!
வேண்டாமப்பா!!!!!!! 

எதை என்று அறிய அறிய யாங்கள் எதற்குமே ஆசைப்பட மாட்டோம் அப்பனே நல்வழிப்படுத்துவதற்காகவே வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!

இவ்வாறு பொய் சொல்லி பிழைக்கின்றீர்களே அப்பனே அதையே உங்களுக்கு எவை என்று அறிய அறிய கடைசியில் கர்மமாக ஆகிவிடும் அப்பனே!!!

அப்பனே யோசியுங்கள் அப்பனே!!!!!

நிம்மதியாக எதை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூற........ தன் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!!!!

உண்மையா? பொய்யா? என்பதை கூட!!......

எப்பொழுது ஒருவன் மனசாட்சிக்கு எதிராக பின் செய்கின்றானோ அவை தன் கர்மத்தில் நிச்சயம் போய் சேரும் என்பேன் அப்பனே!!!!!! 

என்னிடத்திலே இருந்து உரைக்கின்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே !!!!

"""""ஈசனாக இருந்தாலும்...... இதை என்று கூற பிரம்மனாக இருந்தாலும் அப்பனே அவந்தன் எதை என்று அறிய விஷ்ணுவாக இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய........ 

""""" யான் கட்டளை இட்டால்... அது கட்டளை இட்டது தான்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய !!!!

அகத்தியனை யார்?? என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்??????

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!! """"

ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன் இங்கிருந்து!!!!!!!!!

அதாவது லோபா முத்ராவும் என் அருகில் தான் இருக்கின்றாள் அப்பனே!!!!! 

நிச்சயமாய் அப்பனே இன்னும் அகத்தியனை பொய்யாக்காதீர்கள்!!! பொய்யாக்காதீர்கள்!!!! அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே வேண்டாம் அப்பனே!!!! எதை என்று அறிய அறிய!!!!!

அப்பனே ராமனுக்கும் உதவிகள் செய்தேன்!!!!! அப்பனே கிருஷ்ணனுக்கும் உதவிகள் செய்தேன்!!!! அப்பனே பிரம்மாவுக்கும் உதவிகள் செய்தேன்!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய ஈசனுக்கும் பார்வதி தேவிக்கும் முருகனுக்கும் உதவிகள் செய்தேன்!!!!

அப்பனே எவை என்றும் இன்னும் அப்பனே ரிஷிமார்களுக்கும் உதவிகள் செய்தேன் அப்பனே எதை என்று அறிய அறிய பல தேவர்களுக்கும் உதவிகள் செய்தேன்!!!!

எதை என்று கூட....பல......... ரம்பை!!!! ஊர்வசி!!!! எவையென்று அறிய அனைவருக்கும் யான் உதவிகள் செய்திருக்கின்றேன் அப்பனே!!!!!!

மனித குலத்திற்கு யான் உதவிகள் செய்ய மாட்டேனா!!!??  என்ன??!!!!! 

அப்படியானால் அப்படிப்பட்ட தகுதி உங்களிடத்தில் இல்லையப்பா!!!!!

அப்படி எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று அறிய அறிய...... கோபம் கொள்ளாதே என்று  சொல்கின்றேன்!!!!!

ஆனாலும் முதலில் கோபம் தான் வருகின்றது!!!

பொய் சொல்லாதே என்று சொல்கின்றேன் முதலில் பொய் தான் சொல்கின்றார்கள்!!!

மற்றவர்களுக்கு உதவிடு என்று சொல்கிறேன்!!!!

ஆனால்  உதவிடவில்லை!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய தன்னைப்போல் மற்றவர்களை நினையுங்கள் என்று சொல்கின்றேன்!!!!

அப்பனே அப்படியும் இல்லையப்பா!!!!!

அப்படி இல்லை என்றால் எப்படி யாங்கள்!!!!!..... உங்களை திருத்துவது??????

கஷ்டங்களை இட்டு தான் திருத்த வேண்டும் அப்பனே!!!!!

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

அதனால் கஷ்டங்கள் வந்து விட்டதே... அகத்தியனை வணங்கியதால் என்று எவை என்று அறிய அறிய மீண்டும் மீண்டும் என்மேல் பழியை சுமத்தாதீர்கள்!!!! சுமத்தாதீர்கள் அப்பனே!!!!

நீங்கள் செய்த தவறுகளுக்கு அகத்தியன் தான் பொறுப்பா??????????

அப்பனே எதை என்று அறிய அறிய யோசியுங்கள்!!!!  அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே........ இரவில் உறங்கும் பொழுது சிறிது யோசியுங்கள்!!!!

யாம் என்னென்ன தவறு செய்தோம்?? என்னென்ன புண்ணியங்கள் செய்தோம்?? எதை என்று அறிய அறிய அப்படி யோசித்தால் நீ மனிதன்!!!!

அப்படி யோசிக்க வில்லை என்றால் அப்பனே.... நீ ஒரு எதை என்று அறிய அறிய அப்பனே கீழானவன்  என்று நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும் அப்பனே!!!!

அப்பனே யாங்கள் தருவதற்கு தயாராக தான் இருக்கின்றோம் ஆனால் நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு தகுதியை அப்பனே வளர்த்துக் கொள்ளுங்கள்!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் எங்கள் வழியில் வருபவர்களுக்கு அப்பனே கஷ்டம் தான் மிஞ்சும்!!!!! எதை என்று அறிந்து அறிந்து.... 

அக் கஷ்டத்தையும் நீந்தி நீந்தி வந்தால் அப்பனே யாங்கள் அனைத்தையும் செய்து விடுவோம் அப்பனே!!!!! 

உங்களுக்கு என்னென்ன தேவை????? என்பதை எல்லாம் யாங்கள் செய்து விடுவோம்!!!!

ஆனாலும் அப்பனே அப்படி இல்லையப்பா!!!!

அப்பனே அகத்தியனை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கின்றீர்கள்!!!!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே யான் உங்களுக்கு பணம் எவை என்று..... கொடுக்க மாட்டேனா என்ன???

தரித்திர மனிதனே!!!! 

பொய் சொல்கின்ற மனிதனே!!!!

எதை என்று அறிய அறிய என்னால் அனைத்தும் செய்ய முடியும் அகத்தியன் இல்லை என்று எதை என்று அறிந்து அறிந்து.......பின் அகத்தியன் எங்கோ மறைவாக இருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா!!!???

இல்லை!!!!!!!  ஆனால் நிச்சயம் எந்தனுக்கும் கோபங்கள் வரும்!!!!!!!! 

வந்துவிட்டால் அனைத்தும் அழிந்து விடும்!!!! அப்படியே!!! 

எவை என்று அறிய அறிய ஆனாலும் கோபங்கள் வருவதில்லையப்பா!!!!!

ஏனென்றால் மனிதனே பாவப்பட்ட ஜென்மம்!!!!

அப்பனே அதை திருத்துவதற்காகவே யான் எவை என்று அறிய அறிய யுகங்கள் யுகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!!!!

சித்தன் பிறப்பானா?????

எவை என்று அறிய அறிய!!!

சித்தனுக்கு ஏதடா?? பிறப்பு???????????

முட்டாள் மனிதனே!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து எவையென்று தெரிந்து தெரிந்து... எவையென்று பின் உனக்கு தான் பிறவி!!! 

எங்களுக்கு பிறவியா?? நாங்கள் என்ன மனிதர்களா???? 

எதை என்று அறிய அறிய அப்பனே எங்களால் பிழைக்கவும் முடியும் எதை என்று பிழைத்திட வழியும் செய்ய முடியும்!!!!

அப்பனே வேண்டாம் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் நிச்சயம் என்னை நம்பி வந்தவர்களை அப்பனே நிச்சயம் யானே கையைப் பிடித்து அழைத்துச் செல்வேன்......அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய கஷ்டங்களை நீக்குவோம் அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் பட வேண்டியதுதான்...... இதை அனைவரும் உணர்ந்திட வேண்டும்!!!!! அப்பனே அவ்வாறு உணர்ந்து விட்டால் அப்பனே....................!!!

ஏதோ எதை என்று கூட அகத்தியன் என்னதான் சொல்கின்றான் என்று பார்ப்போம் என்று சிலர்!!!!!!!

பின் எவையென்று அறிய அறிய அங்கு. (சுவடி வாசித்து வாக்கு) சொல்கின்றார்கள் இங்கு சொல்கின்றார்கள் என்பது சிலர்!!!!! 

ஆனாலும் அப்பனே பின் உங்களுடைய விளையாட்டு என் கையில் நடக்காது!!!! என்பேன் அப்பனே!!!! 

நிச்சயம் மனமுவந்து நிச்சயம் அகத்தியன் ஏதாவது சொல்வானா??? என்ற மனநிலை வந்தால் தான் யான் வாக்குகள் உரைப்பேன் அப்பனே!!!!! எதையென்று!!!!!!!!! 

"""" தெள்ளத் தெளிவாக இருந்து விடுங்கள் அப்பனே!!!!!!

இவையென்று அறிய அறிய யாங்கள் எவையென்று அறிய அனைவருக்கும் பின் வாக்குகள் எவையென்று உரைத்திட நீங்கள் என்ன???? ...... உத்தமர்களா!!! என்ன??????????

அப்பனே இல்லையப்பா!!! பொய்களப்பா!!! 

நிச்சயம் எதை என்று அறிய அறிய. """""" பேய்களப்பா பேய்கள்!!!!!!!!!! மனிதர்கள் அதை வைத்துக்கொண்டு உரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ( போலியான சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை மட்டும் வைத்துக் கொள்ளாமல் பேய்களையும் வைத்து வாக்குகள் உரைக்கின்றனர்)

ஆனாலும் எப்படியாவது வந்து விட வேண்டும் எப்படியாவது பணங்கள் சம்பாதித்து விட வேண்டும்!!......ஏனப்பா???  எதையென்று அறிந்து அறிந்து.........

"""""". அப்பனே நீ அமைதியாக இருந்தாலே யானே வந்து கொடுப்பேன்!!!!! 

உத்தமனாக இருந்தால் யானே வந்து கொடுப்பேன்... எதை என்று அறிய அறிய அதனால் எவை என்று கூட அகத்தியன் எதை என்று அறிய அறிய அப்பனே...... என்னை வைத்துக்கொண்டு அப்பனே எவை என்று கூட பொருள் சம்பாதிப்பதற்கு எவ்வித தகுதிகளும் இல்லை!!!!!

கஷ்டங்கள் கொடுத்து விடுவேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதைவிட எதை என்று அறிய அறிய பின்........

""""" முன்னே என் பெயரை வைத்துக் கொள்வது!!!!......

(தன் பெயருக்கு முன்னால்) 

அப்பனே காறியும் துப்புவேன்...... அப்பனே யாராவது எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் உணர்ந்து உணர்ந்து...... 

""" என் பெயரை வைத்து கொண்டு ஏமாற்றுபவர்களும் திருடர்களும் கோபம் கொள்பவர்களும் கூட

"""""""" அப்பனே!!!  ஒழித்து விடுவேன்!!!!!!!!!!!!! 

சொல்லிவிட்டேன்!!! என்னிடத்தில் இருந்தே!!!!!

அப்பனே ஈசனே!!!!! ஆயினும் சரி....... வரட்டும்... அப்பனே!!! 

விஷ்ணுவாக இருக்கட்டும்........ வரட்டும்!!!! 

எதையென்று கூட பிரம்மாவாகவும் இருக்கட்டும்......அப்பனே நிச்சயம் எதை என்று கூட அப்பனே...... இக்கலியுகத்தில் மனிதனை எப்படி எப்படியோ மீட்க வேண்டும் என்றெல்லாம் சித்தர்கள் யாங்கள்!!!!!!

ஆனால் எங்களை வைத்து கொண்டு அப்பனே!!! அப்பனே!!!!!! 

"""" எச்சரிக்கின்றேன் அப்பனே!!!!!!! 

கஷ்டங்களை வைத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே திருந்துங்கள்!!!!

எதையென்று அறிய அறிய பாசமுடனே சொல்கின்றேன் அப்பனே!!!!

நேசமுடனே சொல்கின்றேன் அப்பனே!!!

ஏன் இவ் வாழ்க்கை???  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவையென்று கூட.........

"""" அனைத்து உயிர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!! 

ஆனாலும் வேண்டாமப்பா!!!!

எதையென்று அறிய அறிய ஆறாவது அறிவிற்கு வாருங்கள் வாருங்கள் என்பதையெல்லாம் நிச்சயம் அப்பனே...... அப்படி வராவிடிலும் யான் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பின் கஷ்டங்கள் கொடுத்தே பின் மாற்றுவேன் என்பேன் சொல்லிவிட்டேன்!!! 

அப்பனே அதை,  எதை,  என்று அறிய அறிய அப்பனே உலகமே எதை என்று அறிய அறிய என் கைகளில் அப்பா!!!!!! 

யான் பெருமையாக சொல்வேன் அப்பனே அனைத்தையும் அறிவியல் மூலமாக என்னால் இயக்க முடியும் அப்பனே.... 

இவ்வுலகத்தை திருப்பியும் போடமுடியும்!!!!! (தலைகீழாக).... அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று என்னிடத்தில் இருந்து (காசி) கொண்டு .... அப்பனே இங்கேயும் கூட.... எவை என்று அறிய அறிய பல பல கண்டுபிடிப்புக்கள் எதையென்று அறிந்து அறிந்து.... பல மனிதர்களுக்கு யான் சொல்லிவிட்டேன்.........
(குருநாதர் அகத்திய பெருமானின் காசியில் சோதனை சாலை கண்டு பிடிப்புக்கள் )

அவையெல்லாம் இன்னும்..... இக் கங்கையிலே எதை என்று அறிய அறிய அப்பனே அடியில் தங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே!!!! 

அவையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வருவேன் அப்பனே.... எதை என்று அறிய அறிய!!!!! 

இன்னும் வாக்குகளாக பரப்புகின்றேன்.... நலன்கள் ஆசிகள்!!!!  ஆசிகள் அப்பனே எதை என்று அறிய அறிய..... 

என் வாக்கினை பின்பற்றி அப்பனே பல மனிதர்களும் கூட சரியாக செய்தார்கள்.... அப்பனே நலமாகவே.......

அவர்களுக்கும் ஆசிகள் உண்டு!!!!!! 

நல்முறையாக எடுத்து செல்கின்றேன் அப்பனே!!!! 

ஆனாலும் அவரவர் வினை அப்பனே அவரவரை தாக்கும்....... 

ஆனாலும் வினைகளிலிருந்து காப்பாற்றுவேன்....... நலன்கள் ஆசிகள்!!! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete