​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 11 March 2023

சித்தன் அருள் - 1299 - பொதுவாக்கு - 2


11. என் மதத்தின் மீதான பற்றுதல், இறை நம்பிக்கை காரணமாக, ஆட்சியாளர்களாலும் மாற்று மதத்தவர்களாலும் இழிநிலைக்கு ஆளாகும் தமிழக நிலை வேதனை அளிக்கிறது.

மதம் என்னடா மதம். அரசு என்னடா அரசு. எங்களை மீறியும் ஒன்று நடக்கிறது என்றால், இது எவ்வாறு நடக்கும் என்பதை எல்லாம், போலிகளே! எதை என்று எதிர்பார்க்கும். ஆனால், இவந்தனுக்கு எவை என்று அறிய, அறிய மீண்டும் மீண்டும் சொல்லுகின்றேன், இவன்தன் என்றால் இறைவனைத்தான் யான் குறிப்பிடுவேன். மனித ஜென்மங்களே, பின் யாராவது ஒருவரை நீயே இரு என்று உத்தரவிடுகிறேன், ஆனால் ஏதாவது உன்னால் செய்ய முடியுமா என்றால், நிச்சயம் ஒன்றும் செய்ய முடியாது, தரித்திர மனிதனே! எவனாவது ஒருவனை நீ அரசனாக இரு என்று யான் உத்தரவிடுகின்றேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா என்றால் நிச்சயம் செய்ய முடியாது. யார் எதை கீழ்ப்படுத்தி, எவை மூலம் எதை உருவாக்குகிறான் என்பதை கூட நாங்கள் அறிவோம். அதனால், உன்னுடைய வாழ்க்கையையே உன்னால் பார்க்க முடியவில்லையே, மற்றவர்கள் வாழ்க்கையை நாடுகின்றாயே, பெரும் அறிவாளி. ஆனால், முட்டாள், தரித்திரன்! [புசுண்டன்]

12. ஐயனே மானிடர்கள் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்,   எதனால் பல மதங்களாக பிளவுபட்டு அதனால் வேற்றுமை, நாட்டில் அமைதியின்மையுடன் வாழும் சூழல் ஏற்பட்டது.

இதைத்தான் சொல்லுகின்றோம், மதங்கள் என்று, இவன் வாயிலே இவன் சொல்லிவிட்டான். இவன் எதை என்று அறிய! ஆனாலும், இவன்தனுக்கு இறைவனை பற்றியே சொல்லுகின்றேன். இறைவன் எது என்று அறிய, அறிய, நிச்சயம், இறை வளங்கள் அதிகரிக்கும், இவ்வுலகில். அனைவரும், ஒருவனே தெய்வம், ஒன்றே குலம் என்பதை எல்லாம் நிச்சயம், சித்தர்கள், ஏற்கனவே செப்பி விட்டார்கள். அதனைக் கூட தெரியாமல் பிதற்றுகின்றான் மனிதன். ஆனால், ஏன், எதை என்று நம்பியிருக்க, நிச்சயம் இல்லை. அதனால், சரியாகவே, தன கடமையை செய்து வந்தாலே நிச்சயமாய், யாங்களே கூட பலவழிகளிலும் கூட உத்தரவிட்டு, எப்படியெல்லாம் மாற்றுவதற்கான தகுதிகள், மனிதர்களிடத்தில் இருக்கிறது என்பதெல்லாம் எதிர்பார்த்து நிச்சயம் மாற்றுவோம். அதனால், மதங்கள் இல்லை. இதனால், அனைத்து ஜீவன்களும், ஜீவராசிகளும், எங்களுக்கே சொந்தம். அதைக்கூட விட்டுவைக்கவில்லை, மனிதன். இப்பொழுது சொன்னாயே! குழந்தாய், அறிந்து அறிந்து உலகத்தில் கிருமி என்பது, முதல் கிருமி, மனிதனே! மனிதனால்தான் இவ்வுலகத்தில் அனைத்தும், அழிந்து போகும். அறிந்து, அறிந்து, நாங்கள் இருக்கின்றோம், அதனாலதான் முதலிலே சொல்லிவிட்டேன், உணர்ந்து, உணர்ந்து, எதை என்று அறிந்து, அறிந்து, கட்டங்கள் கொடுத்துத்தான் நீக்குவோம். ஆனால், இவ்வளவு கேள்விகள் கேட்கின்றானே, எதை என்று மானிட ஜென்மங்கள் ஒருவனாவது அகத்தியப்பெருமானுக்கும், அதாவது எங்களுக்கும், எதை என்று அறிய, நாங்கள் சித்தர்கள், எதை என்று பய பக்தியோடு கேள்விகள் கேட்கலாமே என்று பின் ஒருவனுக்காவது இருக்கிறதா? ஆனால் மனிதன் பதவிகளில் இருப்பவனைக் கூட தலை குனிந்து அய்யா என்று சொல்லுவான். இதுதான் உலகமடா. அதை இப்பொழுது தெரிந்துகொள், பொய்யான உலகமடா! இப்படியெல்லாம் இருக்கின்றான், பணத்துக்காகவே. இப்படி இருந்தால், நாங்கள் எப்படி வந்து உங்களுக்கு காட்டுவோம் அறிந்து அறிந்து. இதனால், எங்களுக்கு மரியாதை செய்யத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதை என்று அறிந்து, அறிந்து!

13. "கலியுகம் என்பதால் தவறிழைப்பவருக்கு உரிய தண்டனை உடனே கிடைக்காததால் குற்றம் இழைப்பவர் இறை பற்றிய பயமின்றி அதனை தொடர்ந்து செய்வதையும், இம்மண்ணுக்குரிய நம்பிக்கையை தூற்றுவதையும், மாற்று மதங்கள் இம்மண்ணின் சமயத்தையே அழித்தொழிக்க மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் இறைவன் வேடிக்கை பார்ப்பதேன்?

யாரடா, இதைக் கூறு. அறிந்து அறிந்து புசுண்டன் முனி கேட்கின்றேன். பார்ப்போம், வரச்சொல். பின் என்ன தவறு செய்கிறானோ, நாங்கள் உடனுக்கு உடனே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். பின் யாராவது ஒருவரை சொல்லச் சொல். யங்கள் அதாவது எங்களிடத்தில் வரச்சொல்.நாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்னே வரச்சொல். நிச்சயம், இவன் இப்படி இருந்தான், இப்படி ஆகிவிட்டான் என்று காட்டுகின்றோம்.

மாற்று மதம், மாற்று மதம் என்கிறார்களே, இவை எல்லாம் பொய். ஆனால் வேடிக்கை இவைதான் அறிந்து அறிந்து. ஆனாலும் இதைத்தான் சொல்லுகின்றார்கள் முன்னோர்கள். புத்தி கெட்ட மனிதனுக்கு, பல உரைகளிலும் உரைத்திட்டேன். ஆனாலும் பெரிய, உயர் பெரியவர்களின் வாக்கும் இது தானப்பா, பின் "அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். ஆனால், யாராயினும், தெய்வம் தண்டிக்கத்தான் செய்யும், சிறிது காலம். ஆனால் தெரியாமல்தான் கேட்கின்றேன், அதாவது சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தந்தைக்கு தெரியாது, தன தாவறுகள். அதாவது குழந்தை தவறு செய்து கொண்டே இருந்தால் தந்தைக்குத்தான் வரும், அது போகப்போகத்தான் தெரியும், அப்பொழுது தண்டிப்பான், எதை என்று அறிந்து அறிந்து, தந்தையும் கூட. இதே போலத்தான் இறைவன்.

14. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் மூலிகை மருந்து சொல்லித்தர வேண்டுகிறேன். இது குணமாக, ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

சொல்லித்தருகின்றேன். போகனிடத்தில் சென்று கொண்டே இருக்கச்சொல். வாரம் ஒரு முறையாவது, இதை ஆறு மாதங்கள் கடைபிடிக்கச்சொல். பார்ப்போம். இதையாவது ஒழுங்காக செய்கிறார்களா என்று. நிச்சயம் போகனே அங்கு செப்பிவிடுவான். 

15. அகத்தியர் ஐயா விரைவில் முருகப்பெருமான் ஆட்சி வரப்போகிறது என்று சொல்கிறார்கள் அது உண்மையா? அதை பற்றி சொல்லுங்கள் ஐயா?

அறிந்து, அறிந்து, என் தாயும் தந்தையையும் பணிந்து பணிந்து உரைக்கின்றேன், கேள் மகனே! (முருகன்) ஆட்சிக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதைக்கூட அறியாத மனிதன் எப்படி வாழ்கின்றான் என்பதுதான், சந்தேகம்.

16. சில நேரம் தியானம் செய்யும் போது ஹ்ம்ம் என்ற ஒலியைக் கேட்கிறேன். ஒளி சக்தி கண்களுக்குள் நுழைகிறது. கண் துடிப்பு அதிகரிக்கிறது.இதை பற்றி விளக்குங்களேன்!

அதே போல செய்யச்சொல். மரியாதையுடன் கேட்கச்சொல், பிறகு உரைக்கின்றேன்!

17. ஒரு மனிதனின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் நேரத்துடன் தொடர்புடையதா? உதாரணமாக, பொதுவாக இருதயம் காலை 4 மணிமுதல் 9 மணிக்குள் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதுவே மாலை 4 மணிமுதல் 7 மணிக்குள் மிகுந்த பலமடைகிறது என மருத்துவர்கள் கண்டுள்ளனர். இதை பற்றி குருநாதர் விளக்க முடியுமா?

இவைகளெல்லாம் பொய்களப்பா பொய்கள். இதனால்தான் எதை என்று அறிந்து அறிந்து! ஆனால் அப்பனே! சொல்லிவிடுகிறேன் அப்பனே! ஏன் தூங்குகின்றாய்? இதற்கு பதில் தரச்சொல். எதை என்று அறிய, அறிய. இதனைக்கூட யானே தெளிவுபடுத்துகின்றேன் அப்பனே.. எதை என்று உணர்ந்து, உணர்ந்து அப்பனே! தூங்குகின்ற நேரத்தில்தான் அப்பனே உள்ளுறுப்புகள் அதி பலமாக வேலை செய்யும் என்பேன். அவ் நேரத்தில் இறைவன் சிந்தனை அதிகரிக்க, நிச்சயம் ஞானி ஆவான்.

18. ஒரு மனிதன், தன் உடலின் உள்சூட்டை கட்டுப்படுத்தினால், பல உறுப்புகள் பாதிக்கப்படுவதை, தவிர்க்கலாம் என்று கூறுகிறார்களே, உதாரணம்; கண் பார்வை! இதை விளக்குங்களேன்!

அறிந்து அறிந்து, எதை என்று யான் அறியாமலே சொல்கின்றேன்! நிச்சயம் இரண்டு வாரங்கள் உணவை உட்கொள்ளாமல் இருக்கச்சொல், பார்ப்போம். அறிந்து அறிந்து உணர்ந்து உணர்ந்து செப்பிக்கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும் காலத்தை கணிக்க முடியாது மனிதனால். அப்பனே! எங்களால் கணிக்கமுடியும் அப்பனே. ஆனால் எதை எதையோ மனிதன் நினைத்துக்கொண்டு பின் பொய்யானவைகளை எல்லாம் பின்பற்று, வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால், ஒருநாள் நம்முடைய அனைத்தும் வீழும் என்று கூட எண்ணவில்லையே.  அதனால், கண்களுக்கும், காதுகளுக்கும், வயிற்று பகுதிகளுக்கும் ஒரு திறன் உண்டு. அத்திறன், ஈர்க்கும் சக்தி எங்குள்ளது என்று எல்லாம் யாங்கள் தெரிவிப்போம். ஆனால், புத்திகெட்ட மனிதன், அவை எல்லாம் சொல்லிவிட்டால், யான் தான் சித்தன் என்று பிதற்றிக் கொள்வான். அதனால்தான் இப்பொழுது செப்பவில்லை. நேரங்கள் வரட்டும், நேரடியாக வரட்டும், பல திருத்தலங்களுக்கு சென்றிட்டு, இயலாதவர்களுக்கு அன்னம் அளித்துவிட்டு வரச்சொல், இன்னும் வாக்கு பலமாக செப்புகின்றேன்.

19. ராமர் கால் பதிந்த இடம் இலங்கை! அங்கு அத்தனை கொடுமையான நிகழ்ச்சிகள் தற்காலத்தில் நடக்க காரணம் என்ன?

அறிந்து அறிந்து, மனித முட்டாளே, அனைத்து இடங்களிலும் கூட அம்மான் காலடியை பதித்திருக்கின்றான். அங்கு மட்டும்தான் உந்தன் கண்ணுக்கு தெரிகின்றதா என்ன? அறிந்து, அறிந்து. ஒருவன் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்றால், பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டும். இதனால், ஓரிடம், உயர்ந்த சக்தி ஆகின்றது என்றால், நிச்சயம் அவ்விடம் தாழாகித்தான் நிச்சயம் உயரும். இதுதான் உண்மை.

20. பாலதேவராயர் ஸ்வாமிகளை பற்றி கூறுங்கள் குருநாதா? ஏதேனும் கோவிலில் அவருக்கு சன்னதி உள்ளதா? வழிபாடு நடக்கிறதா?

வழிபாடுகள், எதை என்று அறிய! எவை என்று உணர! முதலில் தாய் தந்தையருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தாலே போதுமானது. முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தாலே போதுமானது. வாயில்லா ஜீவா ராசிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தாலே போதுமானது. சாதுக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தாலே போதுமானது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment