​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 25 March 2023

சித்தன் அருள் - 1310 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்த உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்த உத்தரவு

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே இவ்வுலகமே பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!!
என் பக்தர்கள் யான் கூறியவற்றை ஒவ்வொன்றாக செய்து வருகின்றார்கள் சந்தோஷம் அப்பனே!!!!

என் பக்தர்கள் இனி இவ் வெயில் காலத்தில் அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கூட நீர் மற்றும் உணவை வழங்குதல் வேண்டும்!!!!

சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் நீரில் வெல்லம் இட்டு துளசி இட்டு இவையன்றி கூற வேப்பம் கொழுந்துகளை இட்டு அனைவருக்கும் தருதல் வேண்டும் அப்பனே!!! மூலிகை குடிநீராக வழங்கும் பொழுது நோய்களின் தாக்கங்களும் பெருமளவில் குறையும் அப்பா!!!!

( மூலிகை குடிநீர் பானையில் நீரை நிரப்பி அதில் வெல்லம் துளசி இலைகள் வேப்பம் கொழுந்து இலைகள் அத்தி இலைகள் வில்வ இலைகள் எலுமிச்சை சாறு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு, அருகம்புல் சுத்தம் செய்தது சுக்கு பொடித்தது  நீர் அளவிற்கு ஏற்ப இவற்றையெல்லாம் நன்றாக கலக்கி இம்மருந்துகள் எல்லாம் நீரில் நன்றாக ஊறி இருக்க வேண்டும் இந்த மூலிகை நீரை அனைவருக்கும் வழங்குதல் வேண்டும்)

இதனை என் பக்தர்கள் நிச்சயம் செய்து வர வேண்டும் அப்பனே ஒவ்வொரு திருத்தலங்களிலும் சாலை ஓரங்களிலும் கோடை வறட்சி மிகுந்த பகுதிகளிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பறவைகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு இயலாதவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும் அப்பனே இதை என்னுடைய கட்டளையாக எடுத்துக்கொண்டு என் பக்தர்கள் அனைவரும் செய்துவர செய்து வர புண்ணியம் பெருகுமப்பா!!!!

அப்பனே புண்ணியங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக இறைவனை கண்டாலும் லாபம் இல்லை அப்பனே!!!!

பல பல புண்ணிய செய்திருந்தால் மட்டுமே அப்பனே இறைவனும் அருள் புரிவான் அவந்தன் தரிசனமும் கிட்டும்!!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் உங்களுக்கு புண்ணியம் இருந்தால் மட்டுமே நீங்கள் எத்தனை ஆலயத்திற்கு சென்றாலும் உங்கள் புண்ணியம் மட்டுமே இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் அப்படி புண்ணியம் இல்லை என்றால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பனே!!!!

என் வழியில் வருபவர்களுக்கு அப்பனே பல புண்ணிய செயல்களை செய்வித்து அப்பனே கருமத்தை நீக்கி இறைவனை காணவும் இறைவன் தரிசனத்தை பெறவும் யான் வழியை ஏற்படுத்துவேன் அப்பனே!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே என் பேச்சைக் கேட்டு என் வழியில் வருகின்றவர்களூக்கு இறைவன் தரிசனம் உறுதியப்பனே இது சத்தியம்!!!!!

கலியுகத்தில் கர்மங்களும் பாவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன அப்பனே மனிதரிடத்தில் யாரிடத்தும் புண்ணியங்கள் இல்லை அப்பா!!!!!

ஆனாலும் புண்ணியங்களை செய்து வர செய்து வர கர்மங்கள் குறையும் அப்பா!!!!

அப்பனே யான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என் பேச்சை கேட்டு வருகின்றவர்களுக்கு கவலைகள் இல்லை குற்றங்களும் இல்லை அப்பனே!!!!

நல்முறையாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவிட வேண்டும் பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்குதல் அன்னத்தை அளித்தல் இது போன்ற புண்ணிய காரியங்களை செய்து வர வேண்டும்..... நீர் தானம் பெரும் புண்ணியம் அப்பா...

அப்பனே நீர்மோர் பந்தல்களை அமைத்து அனுதினமும் வருகின்றவர்களுக்கெல்லாம் உதவி வர வேண்டும் அவர்களது மனம் மகிழ்ந்தாலே உங்களுக்கு புண்ணியம் பெருகும் அப்பா!!!!

அப்பனே சகல ஜீவராசிகளையும் சமமாக பாவித்து எந்த ஒரு உயிருக்கும் துன்பத்தை கொடுக்காமல் அவைகள் மனமகிழ முடிந்தவற்றை வழங்கி வந்தாலே உங்களது பாவக்கணக்கு குறைந்து அப்பனே புண்ணிய கணக்கு குவிந்து விடும்.... அப்பனே உங்களிடம் அதிக அளவு புண்ணியங்கள் இருந்தால் இறைவனாலும் ஒன்றும் செய்ய முடியாது!!!!!

அப்பனே தன்னுயிர் போல பிறகு உயிரை காண வேண்டும்.... தான் வாழ நமக்கு அப்பனே எப்படி எப்படி தேடி அலைந்து திரிந்து கற்றுக்கொள்கின்றோமே அதுபோல பிற உயிரையும் பேணுதல் வேண்டும் அப்பனே!!!!

என் வாக்கினை என் பக்தர்கள் நிச்சயம் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் இது நிச்சயம்!!!!!

கலியுகத்தில் மனிதர்களாகிய நீங்கள் கர்மங்களை குறைத்து புண்ணியங்கள் பெருக்க யான் வழிகாட்டுகின்றேன் என் வழியில் வாருங்கள் அனைத்தையும் யான் செய்து தருகின்றேன் அப்பனே!!!

நலம் ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment