​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 18 March 2023

சித்தன் அருள் - 1305- பொதுவாக்கு - 8



71. ஒரு ஆன்மா இப்புவியில் அனுபவிக்க வேண்டிய கர்மங்கள் அனைத்தும் முடிந்த பின் , அவ் ஆன்மாவானது எங்கு செல்லும். பரமாத்மாவுடன் கலந்து பிறவியே இல்லாத நிலை ஏற்படுமா அல்லது வேறு லோகங்களில் பிறவி எடுக்குமா ?

எதை என்று அறிய! அறிய! நிச்சயம், ஈசனிடம் செல்லும். ஆனால், ஈசன் ஒரு கேள்வியை கேட்பான். இன்னொரு பிறப்பு வேண்டுமா? எதை என்று அறிந்து மேல் லோகத்திற்கு செல்லுகிறாயா என்று. இன்னொரு பிறவி வேண்டுமென்றால், பிறந்து அனுபவிக்கலாம், அல்லது மேல் லோகத்துக்கு செல்வதானால், அதை அனுபவிக்கலாம். 

72. இப்புவியை  போன்று எத்துனை லோகங்கள் உள்ளன ? கந்தர்வ லோகம் , கிம்புருடர் லோகம், சப்தரிஷி மண்டலம் போன்ற லோகங்கள் கேள்விபட்டுள்ளேன். அது போன்று எந்த லோகங்களில் ஒரு ஆன்மா பிறவி எடுக்க வேண்டும் .

அப்பனே! பல லோகங்கள் இருக்கின்றது, அப்பனே! இதனைப்பற்றி நிச்சயம் தெரிவித்தால், தலை சுற்றி மயக்கமடைந்து விடுவான் மனிதன். ஆனால், இப்பொழுது தேவை இல்லை. நிச்சயம் உரைக்கின்றேன், அனைவரையும் காத்திருக்கச் சொல்.  நிச்சயமாய், எதை என்று அறிய! அறிய! நிச்சயமாய் உண்டு என்பேன் (பிறவி).

73. ஈசன் படைத்த இப்புவியில் சனாதன தர்மத்தை பின்பற்றும் ஒரு சிலரே மாமிசம் போன்ற உயிர்கொலை தவிர்த்து சாத்வீக உணவை உண்ணுகின்றனர். ஏனையோர் மாமிச உணவையே பெருவாரியாக உண்ணுகின்றனர் . மாமிசம் உண்பதால் உடலில் எம்மாதிரி பிணிகள் பீடிக்கும்.

அப்பனே! எது என்று அறிய! அறிய! முதலில், பிணிகள் எது என்று அறிய! அறிய! நிச்சயமாய் உண்டு கொண்டிருந்தால் (மாமிசம்), இவந்தனுக்கு மட்டும் அல்லாமல், அவன்தன் சந்ததிகளுக்கு கூட வளர்ந்துவிடும் அப்பனே! இதனால்தான், அப்பா! வேண்டாம்! வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே. முதலில் எவை என்று அறிந்து, அறிந்து, கூறுவேன். இப்படி வருவது நல்லதாயென்று கூட. அதனை நீக்கச் சொல் அப்பனே, அனைத்து ஞானங்களையும் அடைந்து விடுவார்கள் மனிதர்கள், அப்பனே! இவ்வாறு இருந்தால், எவை என்று அறியாத அளவுக்கு, வருத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது அப்பனே! எவனொருவன், மற்ற உயிர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் தான் என் அருகிலேயே இருப்பான், என்பேன் அப்பனே!   

74. கலியுகம் , நவக்கிரகம் என்பது பூலோகத்திற்கு மட்டும் பொருந்துமா ? மற்ற லோகங்களிலும் கிரகங்கள் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன் அளிக்கப்படுமா ?

அதி புத்திசாலியே, கர்மா என்றாலே, இப்புவிதான்! அதனால், மற்றவைகளை தாக்காது. நிச்சயம், இப்புவியிலுள்ள மனிதனைத்தான் தாக்கும்! தாக்கும்!

பூலோகத்தில் அனுபவிக்காத கர்மாவை மேல் லோகத்தில் அனுபவிக்க வேண்டுமா?

மனித முட்டாளே! பூலோகத்தில் அனைத்து கர்மாவையும் அனுபவித்து தீர்த்தபின்தான், மேல் லோகத்துக்கு வருகிறாய். எங்கள் அருகில் இருக்கும் பொழுது, என்ன கவலை? 

75. தற்போது சில பல நிலநடுக்கம் எங்கு நோக்கினும் நிகழ்கின்றன . அடுத்த அழிவு இப்புவியில் நிலநடுக்கம் கொண்டு ஏற்படுமா குருவே ?

அப்பனே, யான் பல வழிகளிலும் கூட உரைத்துவிட்டேன் அப்பனே! அப்பனே! மழையும் கூட அக்னியாக பொழியும் என்பேன் அப்பனே! அப்பனே! எவை என்று அறிய அறிய! இவ்வுலகத்தில், கலியுகம் முற்றிவிட்டதால் அப்பனே! என்னென்னெவோ நடந்து கொண்டுதான் இருக்கின்றது, அப்பனே! ஆனால், மனிதன், அதனை உணர்வதே இல்லை. அப்பனே! அதை மனிதன் வெளிக் கொண்டு வருவதே இல்லை! ஆகவே, இக்கலியுகத்தில், யாங்கள் மனிதனை காக்கவே வந்திட்டோம் அப்பனே! நிச்சயம் காப்போம் அப்பனே!

76. தேரையர் , புலஸ்தியர், பிண்ணாக்கீசர் , கமலமுனி , மச்சமுனி , நந்தீசர் , சட்டைமுனி நாதர், மாணிக்கவாசகர் , அருணகிரிநாதர் , அவ்வையார்  போன்ற மற்ற சித்தர்களின் வாக்கும் யாங்கள் இச்சுவடியில் பெற அருள் புரியுங்கள் குருவே 

அப்பனே! நிச்சயம், எது என்று அறிந்து! அறிந்து! அப்பனே! அனைவரும் உரைப்பார்கள் அப்பா! எது என்று அறிய! அறிய! இது அகத்தியனது மட்டுமில்லை. அனைவருக்கும் சொந்தமப்பா! மனிதர்களுக்கும் கூட!

77. குருவே ஈசனார் மற்றும் அண்ணை திருவாக்கு பெற்றது போல் பிரம்ம தேவர் தாய் சரஸ்வதி மற்றும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால் அன்னை மகாலட்சுமி வாக்கும் ஒருமுறை தாங்கள் இந்த ஜீவ அருள் நாடி மூலம் மாந்தர்களுக்கு பெற்று தர வேண்டும் தங்கள் பொற் பாதங்களில் பணிந்து வேண்டி கொள்கிறேன் .

முன் கேள்விக்கான பதிலே, இதற்கும்!

78. குருவே தாங்கள் இந்த தமிழ் மண்ணில் மனிதர்களுக்காக அவர்கள் பாவ வினையில் இருந்து தப்பிக்க மானிடர் இன்னல்கள் களைய நிறைய உதவி செய்கிறீர்கள். அது போன்று பிற மொழி பேசும் மாந்தர்களுக்கு யார் உதவி செய்வார்கள் ? தாங்கள் இந்த சுவடியில் தோன்றி மானிடர்களுக்கு நல் வாக்கு வழங்குவது போல் பிற தேசத்து பிற மொழி பேசும் மானிடர்களும் பயனுற தாங்கள் அருள் புரிய வேண்டும். இம்மாதிரி வாக்கு  கிடைக்க பெற்றால் மானிடர்களின் பாவமும் பெரும் அளவில் குறையும் . அவர்களும் விரைவில் இப்புவியை விட்டு சென்றடைவர். இந்த பாவப்பட்ட மனித ஜென்மங்களுக்கு தங்கள் அருள் மழையை என்றென்றும் பொழிந்திட வேண்டும் குருவே.

அப்பனே! எதை என்று அறிய! அறிய! உதவிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றேன். அவர்களுக்கு தெரியாவிடினும், அகத்தியா! என்று சொன்னால், தெரியப்படுத்தி, ஏதோ ரூபத்தில் மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்பனே, எது என்று அறியாமல், யானே ஏதோ ஒரு வழியில் கூட, இதற்கு வழி வகுப்பேன் அப்பனே!

79.பஞ்ச பூத தத்துவங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு,விண்.  இவற்றுள் முதல் நான்கு தத்துவங்களை உடலில் உணர முடிகின்றது மண் -உடல், நீர்-ரத்தம், நெருப்பு - உடல் சூடு, காற்று - மூச்சுக்காற்று ). ஐந்தாம் தத்துவமான விண் அதாவது ஆகாயத்தை உடலில் உணர்வது எப்படி என்று அறிய தாருங்கள்.

சரியானதப்பா! அதாவது, அமாவாசை, பௌர்ணமி தினங்களில், அதாவது ஈசனின் விண் தெரியுமப்பா. இதிலே பதில் இருக்கின்றதப்பா. அதாவது பஞ்ச பூத தலங்களுக்கு செல்லச் சொல் அப்பா! அங்கேயே உறங்கச் சொல் அப்பனே! அதை நான் சொல்வதைவிட, உணரட்டும். 

80. வள்ளலார் அருளிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு - இவற்றுக்கான உபதேசம் பெற வேண்டிப் பணிகின்றோம்.

அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே, பசித்திரு, அப்பனே எவை என்று கூற! பல துன்பங்களை பட்டு பட்டு. விழித்திரு, அதாவது இறைவனை நோக்கு, அதாவது இறைவனை காண விழித்திரு, அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! ஆனாலும், தனிமை படுத்திக்கொள் அப்பனே! ஆனால் முடியும். அனைத்தும் சாதித்துக் காட்டுவாய், எங்கள் அருளால். அப்பனே! இதை, எவை என்று அறிய! அறிய! அவர் மட்டும் சொல்லவில்லையப்பா! எவை என்று அறிய! அறிய! பல ஞானியர்களும் சொல்லி விட்டார்கள் அப்பா! யாராவது அப்படி இருக்கின்றார்களா, அப்பா! இல்லை அப்பா! அப்பொழுது எப்படித்தான் ஞானம் வரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment