​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 7 March 2023

சித்தன் அருள் - 1296 - அன்புடன் அகத்தியர் - காசியில் குருநாதர் அளித்த பதில்!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

காக்கும் சிவன் காசியில் சிவராத்திரி அன்று உலகை ஆளும் நமசிவாயனும் பார்வதி தேவியும் மனித குலம் மேம்பட விவாதங்கள் புரிந்து வாக்குகளாக ஈந்தனர்!!!!!

இவ் இருவர் வாக்குகளுக்கிடையே குருநாதர் அகத்திய பெருமான் ஈசனின் கோபத்திலிருந்து சாபமாக வாக்குகளை வரச்செய்யாமல்... தானே முன்வந்து.... மனிதர்களை யான் பார்த்து கொள்கின்றேன் என்று கூறி....... விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து... மனித குலமாகிய நாம் அனைவரும் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை... வாக்குகளாக தந்தருளினார். 

19/2/2023 சிவராத்திரி மறுதினம்.... காக்கும் சிவன் காசி கங்கை கரையில் கங்கா ஆரத்தியின் போது குருநாதர் அகத்திய பெருமானின் சுவடிக்கும் கங்கை நீரை சமர்ப்பணம் செய்து தீபமேற்றி புஷ்பாஞ்சலி செய்து பூஜை செய்யப்பட்டது.

புஷ்பாஞ்சலி செய்து ஆரத்தி காட்டும் பொழுது எங்கிருந்தோ திடீரென வந்த ஒரு வயதான பெண்மணி காசி நகரம் முழுவதும் கங்கா ஆரத்தியில் திளைத்திருக்க, சுவடி பூஜையில் அந்தப் பெண்மணி கலந்து கொண்டு வணங்கி உடனிருந்து பாடல்கள் பாடிவிட்டு திடீரென மறைந்து விட்டார்!!!! இதனைப் பற்றி குருநாதர் வாக்குகளுக்கு இடையே லோப முத்ரா தேவியும் வந்தாளப்பா!!!! என்று வாக்குகள் தந்தருளினார்!!!!

கங்கை தாயாருக்கும் வஸ்திரம் மஞ்சள் குங்குமம் வளையல் புஷ்பம் தீபம் என கங்கா ஆராத்தியின் போது கங்கை தாயாருக்கும் பூஜைகள் செய்து சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் தந்தருளினார்!!!!

படகினை தொட்டிலைப் போல ஆட்டிவிட்டு குருநாதர் தாலாட்டிய திருவிளையாடல்!!!!!!

காசியில் பெரும்பாலும் எப்பொழுதும் எல்லா ஆலயங்களிலும் கூட்டம் நிறைந்திருக்கும் காசியில் சுவடி வாசிக்கும் பொழுது ஏதாவது ஒரு ஆலயத்திலோ அல்லது பெரும்பாலும் கங்கை நதியின் மேல் படகில் சுவடி வாசிக்கப்படும்!!!! அப்படி இம்முறையும் கங்கா ஆரத்தி முடிந்தவுடன் கங்கை ஆற்றில் ஒரு படகில் ஏறி குருநாதரை வணங்கி விட்டு திரு ஜானகிராமன் ஐயா சுவடியை பிரித்த பொழுது

சுற்றிலும் படகுகள் சூழ்ந்து இருக்க சுவடி வாசித்த பொழுது அந்தப் படகு மட்டும் ஒரு பெரிய அலை வந்து அடித்தால் எப்படி வலது புறமும் இடது புறமும் அசைந்தாடுமோ?? அது போல மிக வேகமாக அசைந்தாடியது!!!!

படகில் இருந்த அனைவருக்கும் ஆச்சரியமாக போய்விட்டது சுற்றிலும் எத்தனை படகுகள் இருக்க இந்தப் படகு மட்டும் ஏன் இப்படி ஆடுகின்றது ? என்று அனைவருக்கும் கேள்விகள்!!!!

30 வினாடியில் இருந்து ஒரு நிமிடம் வரை படகின் ஆட்டம் இருந்தது!!!! பின்பு தானாக படகின் அசைவு நின்றது!!!!

படகின் அசைவு நின்ற பின் திரு ஜானகிராமன் ஐயா வாக்குகள் வாசிக்கத் தொடங்கினார்!!!!

எடுத்த எடுப்பிலேயே குருநாதர்!!!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய நலன்களாகவே ஆகட்டும் என்பேன் அப்பனே!!!! என்னுடைய ஆசிகள் அனைவருக்கும் உண்டு!!! 

அப்பனே ஆசீர்வதித்து என்ற நிலைமைக்கு அப்பனே உங்களை எதை என்று அறிய அறிய....அப்பனே இதனால் தான் பின் மனிதனின் நிலைமையை அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே மாயை கூட எவை என்று கூற!!!!! வந்து விடுகின்றது!!!

இப்பொழுது உலுக்கினேனே!!!!!!!! அப்பனே நன்றாக தாலாட்டினேனே இப்படித்தான் தாலாட்டி கொண்டிருப்பேன் கடைநாள் வரையிலும்!!!!! அமைதியாக இருங்கள்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய உங்கள் எதை என்று அறியறிய அப்பனே ஒரு குழந்தையை ஒரு தாயவள் சரியாகவே ஊஞ்சல் ஆட்டுவாள் அப்பனே!!!!! அவ்வாறுதான் யான் ஆட்டிவிட்டு சென்றேன்...அப்பனே இதிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் அப்பனே!!!!

நலன்கள் ஆசிகள் நேற்றைய பொழுதிலேயே யான் ஈசனிடம் ஆசிகள் வாங்கிக் கொடுத்து விட்டேன் அப்பனே நலமாக!!!!

எவை என்று உணர்ந்துணர்ந்து அப்பனே இக் காசி தன்னில் லோபமுத்ரா தேவியும் வந்தாளப்பா !!! யானும் வந்தேனப்பா வந்து தர்மமும் ஏந்தினேனப்பா!!!!!!! 

இவையன்றி கூற அப்பனே1 எண்ணங்கள் மாயையில் இல்லாமல் இருந்தால் யாங்கள் மீண்டும் மீண்டும் வருவோம் அப்பனே !!!!!

நலன்கள் நலன்கள் அப்பனே!!!!!!! 

என்று குருநாதர் வாக்குகள் தந்தருளினார் அதன் பிறகு அடியவர்கள் ஒரு சில கேள்விகள் கேட்டனர் குருநாதர் அதற்கு கூறிய பதில் வாக்குகள்!!!!!

இதை குருநாதருடைய செயலை உணர்ந்ததும் ஆடியவர்கள் அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்!!! குருநாதா எங்கள் அப்பா !!அகத்தியப்பா!!! என்று மனம் உருகி வணங்கினர்!!!!!

பின் அடியவர்களின் கேள்விகளுக்கு பதில் வாக்கு உரைத்தார் குருநாதர் அகத்தியர். 

குருவே நாங்கள் அனைவரும் பக்தி வழியில் முன்னேறி செல்ல அனைவரும் விரும்புகின்றோம் காமம் குரோதம் விரோதம் மாயை பொறாமை இவற்றையெல்லாம் எங்களிடமிருந்து நீக்கி பரிசுத்தமான மனம் எங்களுக்கு எப்பொழுதும் இருக்க அருள வேண்டும்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யான் தான் இதையென்று அறிய அறிய இதுவும் கூட அப்பனே கர்மத்தால் வருபவை என்பேன் அப்பனே!!!
இதனால் தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே அதாவது நீரில் மூழ்கி எதை என்று கழுத்து வரையில் எதை என்று அறிய அறிய அப்பனே நமச்சிவாயனை நினைத்து தியானங்கள் அனுதினமும் செய்து கொண்டே இருந்தால் அப்பனே ஒன்றும் அண்டாதப்பா!!!!! ஆனால் எதை என்று அறிய அறிய இதை பலமுறை யான் செய்யச் சொன்னேன் ஆனால் ஒருவரும் கூட கடைப்பிடிக்கவே இல்லையப்பா!!!!

குருவே அதிக அளவு பக்தி செய்வதற்கு உடலில் பலங்களும் குறைவாக இருக்கின்றது மனிதர்களுக்கு அதாவது தவம் தியானம் செய்வதற்கு உடலில் பலமும் தேவைப்படுகின்றது குருவே 

அப்பனே இதையென்று அறியறிய ஆனால் இது போலத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும் பணம் சம்பாதிப்பதற்கும் உங்களிடத்தில் சக்திகள் இல்லை என்று சொல்வீர்களா!!!!!!

குருவே எங்களுக்கு தாக்குப் பிடிக்கும் சக்தியை அதிகப்படுத்த தாருங்கள்

அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே யான் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இப்பொழுது உங்களுக்கு பசிக்கின்றது அப்பனே யானே வந்து ஊட்ட முடியுமா??  என்ன!!!!! 

ஆனால் நீங்களே ஒரு கடைக்குச் சென்று உட்கொள்கின்றீர்களே அப்பனே இது எப்படி அப்பனே இது போலத்தான் அப்பனே மனிதன் கர்மத்தை இப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே..... ஆனால் புண்ணியத்தை வாங்கவில்லையே??!!!!!!!

குருவே ஒவ்வொரு தெய்வத்திற்கும் வணங்குவதற்கு ஒவ்வொரு மந்திரங்கள் இருக்கின்றது என்று எங்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கின்றது அந்த மந்திரங்கள் அந்தந்த தெய்வங்களுக்கு உரியதா??

அப்பனே இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!!

"" இறைவன் ஒருவனே!!!!

ஆனால் இதைச் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் கடைசியில் இதனைப் பற்றி சொல்கின்றேன்!!!

குருவே வயதானவர்களுக்கு சளி தொற்று எளிதில் தொற்றிக் கொள்கின்றது நுரையீரல்களில் கபம் கட்டிக் கொள்கின்றது இதற்கு மருந்துகள் கூறுங்கள் குருவே!!!!

அப்பனே நல்முறையாய் துளசி.... இதையன்றி கூற ஆனாலும் அப்பனே துளசியை நீரில் இட்டு அவ் நீரை பருகி வந்தாலே மாறும் அப்பனே இதை என்று அறிய ஆனாலும் அப்பனே யான் ஏற்கனவே மருந்துகள் கூறி விட்டேன் அதனை சரியாக பயன்படுத்தி வந்தாலே போதுமானது அப்பனே!!!!( கொரோனா காலகட்டத்தில் குருநாதர் பரிந்துரைத்த 32 மூலிகைகளான தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து, மற்றும் பாலில் இட்டு குடிக்க வேண்டிய மருந்துகள், மிளகு சீரகம் திப்பிலி சுக்கு மஞ்சள் பொடி)

குருவே சர்க்கரை நோய் இதற்கு மருந்துகள் கூறுங்கள்

அப்பனே எதை என்று அறிய அறிய இது ஒரு வியாதி இல்லை என்பேன் அப்பனே இதனை அறிந்து ஆனாலும் எப்பொழுது சொல்ல வேண்டும் என்பதை கூட யான் ஆராய்ந்து சொல்வேன் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய இதற்கும் தகுதியான வழிகள் உண்டா ஆனாலும் இதற்கு ஒரு சரியான தீர்வு அப்பனே சுடுகாட்டு பூவே( நித்ய கல்யாணி)என்பேன் அப்பனே !!!

ஆனாலும் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல எதை என்று ஆனாலும் இதையென்று ஆவாரம்பூ எதை என்று அறிய இதனையும் கூட சரியாகவே அதாவது தேவதாரு எனும் மூலிகையை கூட அப்பனே இவையெல்லாம் எடுத்துக்கொண்டு பின் அதிக எதை என்று அறிய அறிய அப்பனே இவையெல்லாம் பச்சையாகவே இதையென்று அதனுடன் கூட அப்பனே முருங்கை இலைகளை கூட அப்பனே இட்டு) பச்சையாகவே எதை என்று அறிந்து அறிந்து சூடேற்றி ( மூலிகை சாறுகளை கொதிக்க வைத்து) அப்பனே அதிகாலையில் மாலை வேளையிலும் கூட அப்பனே நல் முறையாகவே அருந்தி வந்தாலே அப்பனே பெரும் மருந்தப்பா.... அவை மட்டும் இல்லாமல் பின் எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அதிகாலையிலே அப்பனே வேம்பு சிறிதளவு துளசி அவை மட்டும் இல்லாமல் அப்பனே சிறிதளவு கிராம்பையும் சிறிது நெல்லிக்கனியையும் அப்பனே கசக்கி (இடித்து) எதை என்று அறிய அறிய வில்வ இலைகளையும் கசக்கி அப்பனே பின் மிளகு அளவாவது உட்கொண்டாலே..... இவை வராது என்பேன் அப்பனே இதை நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே!!

இரு மண்டலம் மும்மண்டலம் (3*48= 144 நாட்கள்) என்று கூட மீண்டும் அப்பனே இதனைப்பற்றி மீண்டும் ஒரு வாக்கில் கூட இதை விவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!!!

குருவே தற்பொழுது சர்க்கரை வியாதிக்கு ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் நீங்கள் கூறும் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா??

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது செயற்கையான மருந்துகளை எடுத்துக் கொண்டால் அப்பனே அதுவே ஒரு நோயை உருவாக்கும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நோயாக்குவதற்கே அம் மருந்துகள் என்பேன் அப்பனே இதனால் அப்பனே அதனை தின்ன தின்ன அப்பனே இன்னும் நோய்கள் பற்றி கொண்டு அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பேன் அப்பனே கடைசியில் ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள்!!!

குருவே அப்படியானால் எப்பொழுதிலிருந்து அந்த மருந்துகளை நாங்கள் நிறுத்துவது???

அப்பனே இதையென்று அறிய அறிய யான் கூறிய மருந்துகளை எடுத்துக் கொண்டே வாருங்கள் அது உங்களுக்கே தெரிய வரும் என்பேன் அப்பனே!!!!

குருவே இல்லத்தில் பல இடங்களில் பெறப்பட்ட ஆலயத்தில் இருந்து மற்ற இடங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற எந்திர தகடுகள் உள்ளன வருடக்கணக்காக அவை இருக்கின்றன அவற்றையெல்லாம் என்ன செய்ய வேண்டும்???

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே அதனை நீங்களே தெரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சில வருடங்களுக்கே அப்பனே சில சில சக்திகள் உண்டு என்பேன் அப்பனே பின்பு சக்திகள் இழந்து விடும் என்பேன் அப்பனே!!!!

குருவே வயது முதிர்ச்சி காரணமாக தியானங்களில் அதிக நேரம் இருக்க முடிவதில்லை உடல் பலம் இழக்கின்றது அதிக நேரம் தியானங்கள் செய்வதற்கு எந்த முறையை கடைப்பிடிப்பது?????

அப்படி எதை எதை என்று அறிய அறிய சாந்தி ஆசனத்தில் இருந்து அப்பனே செய்!!!!!

குருவே நீங்கள் கூறினீர்கள் பல இடங்களில் சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு வாக்குகள் கூறுகின்றார்கள் என்று கூறி இருந்தீர்கள் கைரேகையை வைத்து பார்க்கப்படும் காண்டநாடி இதனையும் நோக்கி மக்கள் அறியாமல் செல்கின்றனர் பொதுமக்கள் அந்த காண்டநாடியை சென்று படிக்கலாமா வேண்டாமா அது நல்லதா?? கெட்டதா ??

அப்பனே எதை என்று அறிய அறிய இது அவரவர் வினையை பொறுத்தது என்பேன் அப்பனே!!!!

குருவே சரணம் முன்பெல்லாம் உடல் சூடு அல்லது தொற்று நோய்கள் ஏற்படும்பொழுது சிறிதளவு எண்ணெய் காய்ச்சி தொப்புள் மூக்கு காதுகளில் விட்டுக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது மறைந்து போய் விட்டது!!! அது எவ்வளவு நல்லது என்பது மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது அதை மீண்டும் செய்ய விரும்புகின்றோம் என்னென்ன கலப்பது எப்படி செய்வது என்பதை குருநாதர் கூற வேண்டும்!!!!

அப்பனே எதை என்று அறியறிய எவையென்று அறியறிய யான் சொல்லிவிட்டேன் அப்பனே பின் மூன்று( வில்வம், துளசி, அருகம்புல் சேர்த்து காய்ச்சி) கலந்து அப்பனே இதையும் எண்ணெய்யாக்கி இதை என்று அறிய அறிய அப்பனே தேய்த்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!! அதனுடன் பின் பச்சை கற்பூரமும் இட்டு அப்பனே நல்முறையாகவே அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அப்பனே பின் இறைவனுக்கு படைக்கும் எதை என்று அறிய அறிய ( தேங்காய்... தேங்காய் எண்ணெய்) அதில் எண்ணெய் தயாரித்தாலே அப்பனே சிறப்பு என்பேன் அப்பனே அனைத்திற்கும் எவை என்று கூற அதை உபயோகித்தாலே போதுமானது அப்பனே எந் நோய்களும் வராது அப்பனே!!!!

குருவே சரணம் 100 மில்லி அளவுள்ள எண்ணெயில் எவ்வளவு பச்சை கற்பூரம் இடுவது????

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் ஓர் எதை என்று """"""எறும்பளவு!!!!!!! எடுத்துக் கொள்ளலாம்.

அப்பனே எதை எதை என்று அறிய அறிய எதற்காக இதைச் சொன்னேன் என்றால் அப்பனே இதில் கலப்படங்கள் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் எவை என்று அறிய அறிய அப்பனே தூய்மையான எவை என்று அறிய அறிய தூய்மையானவை தான் அதிலும் இட வேண்டும்!!!!

விளக்கெண்ணெய் எந்த இறைவனுக்கு உகந்தது அதில் உள்ள விசேஷங்கள் என்ன கூறுங்கள் குருவே

அப்பனே அவரவர் பாதையில் பின் அவரவர் மனம் மாற்றத்தை பொறுத்தே அமையும் என்பேன் அப்பனே எவ் எண்ணையிலும் ஏற்றிக்கொள்ளலாம் அப்பனே.......... ஆனால் மனது தூய்மை இருந்தால் தான் அப்பனே அனைத்தும் நடக்கும்!!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்!!!! திருவனந்தபுரம் அனந்த பத்மநாத சுவாமி ஷேத்திரத்தில் இருந்து பாதநடையாகவே காசிக்கு வந்து ஞானியாகி ஈசன் பார்வதி தேவியார் தரிசனம் பெற்று ஜீவசமாதி அடைந்து தற்போது காசிக்கு வரும் பக்தர்களுக்காக உதவி செய்து வரும் அந்த சித்தரின் பெயர் என்ன அவருடைய ஜீவ சமாதி இங்கு காசியில் எங்கு உள்ளது????

அப்பனே எதை என்று அறிய அறிய இதனைப் பற்றி யான் தெளிவாக அப்பனே கட்டுரையில்( வாக்குகளில்) பின் உரைத்து கொண்டே இருப்பேன் அப்பனே இதில் பல மடங்கு அடங்கியுள்ளது என்பேன் அப்பனே நிச்சயம் பொதுவாகவே உரைத்திடுவேன் அப்பனே பொறுத்திருக!!!!!!!!

குருவே மனிதர்களின் பிறவிகள் முக்திநிலை குறித்து தற்போதைய சூழ்நிலையில்.. எங்களுக்கு விளக்க முடியுமா!!?? புவனத்தை காக்கும் எங்கள் அன்னை பார்வதி தேவியார் இதனை குறித்து ஈசனிடம் பேசினார்களல்லவா அதைப்பற்றி விளக்கம் தாருங்கள்!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தையும் யான் உரைப்பேன் என்பேன் அப்பனே... கவலைகள் இல்லை என்னுடைய ஆசிகள் அனைவருக்கும் உண்டு என்பேன் அப்பனே!!!

எப்பொழுது எதைச் செப்ப வேண்டுமோ.... அதை அப்பொழுது சொன்னால்தான் அதன் மதிப்பு என்பேன் அப்பனே!!!!

குருவே சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் தந்தையான ஈசனுக்கும் தாயான பார்வதி தேவியாருக்கும் விவாதம் நடைபெற்றது!!!! பார்வதி தேவியார் ஈசனிடம் கேட்ட அனைத்து கேள்விகளும் எங்கள் மனதில் இருந்தவை தான் பக்தி மார்க்கத்தில் வரும் பொழுது இது போன்ற கேள்விகள் எங்கள் மனதில் எழுந்து கொண்டே தான் இருந்தது அந்த கேள்விகளை தேவியார் ஈசனிடம் கேள்விகணைகளை விடாமல் தொடுத்துக் கொண்டே இருந்தார்!!! இருவருக்கும் !சண்டையாகவே தோன்றியது எங்களுக்கு!!!! 

அப்பனே!!! எதை என்று அறிய அறிய பின் எவை எவை என்று அறிய அறிய அப்பனே !!!!! அன்பு இருக்கும் இடத்தில்தான் சண்டையும் வரும்!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே...... புவனத்தை ஆளும் பார்வதிதேவியின் வாக்கும் அன்னையின் வாக்கினை தொடர்ந்து குருநாதரின் வாக்குகளும்  பாகம் 2 ல் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நம
    நன்றி ஐயா🙏🙏

    ReplyDelete
  2. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா

    சர்க்கரை நோய்க்கு கூறிய மருந்துகளை காலை மாலை உணவுக்கு முன் குடிக்க வேண்டுமா

    இதனைப் போலவே புற்றுு நோய்க்கும் எளிய மருந்து வேண்டும் .அனைத்து வகை புற்று நோய்க்கும்.

    மேலும் எலும்பு மூட்டு தேய்மானம் சவ்வு தேய்மானத்திற்கும் மருந்து கூற வேண்டும்.

    நன்றி:-🙏சித்தன் அருள்

    ReplyDelete
  5. அப்பா தாங்களே இந்த அண்டசரா ங்களுக்கம் குரு அப்படிபட்ட தாங்களே தர்மம் ஏந்தளாமோ தங்களுக்கு தர்மம் கொடுத்த புண்ணிய வான்யவர்யவரோ ஐயா எங்களுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வரும் தங்களை போன்ற ஒரு தெய்வம் இம்மண்ணில் இல்லையப்பா

    ReplyDelete