​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 27 June 2024

சித்தன் அருள் - 1639 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 1


இறைவா!!!! அனைத்தும் நீ - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- விதியில் வந்தவை அப்பனே பின் பொறுத்திருந்துதான் நீக்க முடியும். அப்பனே எண்ணங்கள் அப்பனே ஆராய்ந்துதான் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே சில புண்ணியங்கள் செய்தாலும் அப்பனே ஏன் எதற்குக் கஷ்டங்கள் வருகின்றது என்று பார்த்தால் அப்பனே எதை என்று புரிந்தும் கூட அறிந்தும் கூட விதியின் தன்மையே என்பேன் அப்பனே.

விதியின் தன்மையைக் கூட அப்பனே அதாவது இரண்டு இரண்டு என்றே அப்பனே இரவு பகல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இரவை பகலால் வெல்ல முடியுமா அப்பனே ? பகலை பின் இரவால் வெல்ல முடியுமாஅப்பனே? மாறி, மாறி இன்பம் துன்பம்.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இதை அனைவருமே எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே. இதை பல வாக்கியத்தில் கூட யான் எடுத்துரைத்துவிட்டேன் அப்பனே. அப்பனே கஷ்டங்கள் இல்லை என்றால் அப்பனே இறைவன் எதை என்று புரியப்புரிய அப்பனே அதி விரைவிலேயே அப்பனே உங்களை மேல் லோகத்திற்கு அழைத்துக்கொள்வான் அப்பனே.

அப்படி இன்பமே வந்தாலும் அப்பனே எதை என்றும் புரியப்புரிய அப்பனே, எவை என்று அறிய அறிய இவன் தனக்கு அனைத்தும் கொடுத்து விட்டோமே என்று எண்ணி அவன் எதை என்று அறிய அறிய இறைவன் பக்கத்தில் அப்பனே பின் அதாவது உயிரை எடுத்துக்கொள்வான் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே? எவை என்றும் அறிய அறிய அப்பனே துன்பம் வந்து கொண்டே இருந்தால்தான் ஆயுள் நீடிக்கும் என்பேன் அப்பனே. துன்பம் வரவில்லை என்றால், அப்பனே இன்பமே வந்து கொண்டிருந்தால் எதை என்றும் புரியப் புரிய அதிவிரைவில் ஆயுளை முடித்துவிடுவான் இறைவன் அப்பனே . இப்பொழுது என்ற கூறுகின்றீர்கள் ? துன்பம் வர வேண்டுமா? இன்பம் வர வேண்டுமா?

அடியவர்கள்:- ( சற்று நேரம் சலசலப்பு, அமைதி..)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எனை நம்பிக்கொண்டே வந்தவர்களும் கூட அப்பனே ஏன் துன்பத்தைக் கொடுக்கின்றேன் என்று அப்பனே புரிகின்றதா என்பேன் அப்பனே ????

அத்துன்பத்தை அப்பனே கடந்தால்தான் அப்பனே எவை என்று புரியப்புரிய ஆயுள் நீட்டிக்குமப்பா. அதனால்தான் என் பிள்ளைகளுக்கும் கூட ஆயுள் நீட்டிக்கின்றேன் என்று யான் மௌனத்தைக் காத்துக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.

விதி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மதி அப்பனே எதை என்றும்
புரியப்புரிய அதை வைத்து அதாவது அப்பனே விதியை மதியால் வெல்லலாம் என்பேன் அப்பனே. அதை எவை என்று அறிய வெல்வது ( சித்தர்கள் ) எங்களால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே. இதனால் ஒரு நொடி போதுமப்பா அப்பனே உங்களை மாற்றுவதற்கு. ஏன் யான் மாற்றவில்லை அப்பனே கூறுங்கள். உடனடியாக அப்பனே இறைவனிடத்தில் செல்ல வேண்டுமா என்று யோசியுங்கள் சிறிது அப்பனே.

இறைவன் செய்வது அப்பனே நல்லதிற்கே. ஆனால் மனிதன் நினைப்பது அப்பனே எவை என்று அறியத் தீயவற்றுக்கே அப்பனே சொல்லி விட்டேன்.

அடியவர்கள்:- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். ஏன் அனைவரையும் ஒன்றாக அப்பனே பின் அழைத்து வந்து அப்பனே கூறுகின்றேன். ஆனாலும் சிலர் பின் பயந்து அப்படி எதை என்று கேட்டால் பின் இப்படி என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே தெரியாமலேயே கேட்கின்றேன் அப்பனே. மருத்துவனிடம் சென்று பொய் சொல்லலாமா என்று அப்பனே. அதனால் அப்பனே ஒரு குறை அப்பனே மற்றவரிடத்தில் அப்பனே பின் கூறும் பொழுது அக்குறை தீருமப்பா. அப்பனே புண்ணியங்கள் மட்டும் எதை என்று புரியப்புரிய யான் புண்ணியங்கள் செய்தேன் என்று மட்டும் எல்லாம் கூறுகின்றீர்கள் அப்பனே. ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அதே போலத்தான் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. பாவத்தைக்கூட நீங்கள் செப்பவில்லை என்றாலும் யான் செப்பினால் அப்பனே, அதாவது சித்தர் காறித்துப்பினால் பாவம் போகும் அப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே, எவை என்றும் அறிய அறிய அனைவரையும் ஒன்றாக இனைத்தேன் அப்பனே. தனித்தனியாக என்னாலும் கூற முடியும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவ் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அதனால் பாவத்தை முதலில் போக்க வேண்டும் அப்பனே. எவை என்றும் அறிய அறிய போக்காவிடில் எதை என்றும் அறிய அறிய அப்பனே, இதனால்தான் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

இறைவன் எதை என்று புரியப்புரிய அப்பனே யார் ஒருவனுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய இளவயதில் பல கஷ்டங்கள் எதை என்று கூற எண்ணி எண்ணி இறைவன் கொடுக்கின்றான். அதாவது கஷ்டங்கள் கொடுப்பது எவ்வாறு என்பதற்கு இணங்க அப்பனே அனைத்தும் முன்னேறுவதற்காகவே அப்பனே.

இன்பத்தை ஏன் இறைவன் கொடுக்கின்றான் என்றால் அப்பனே துன்பத்திற்குப் பின் அடியோடு அப்பனே அழைத்துச் செல்லத்தான் என்பேன் அப்பனே.

அதனால் துன்பம் வருவதே சிறப்பு என்பேன் அப்பனே. அப்பனே அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றெல்லாம்
எண்ணுகின்றீர்கள் அப்பனே. அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய இவ்வாறு நீங்கள் நினைத்ததை அடைந்து விட வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே துன்பத்திற்கு அப்பனே ஆளாக வேண்டும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே.

துன்பம் இல்லாமல் எதைக் கொடுத்தாலும் அவை நிச்சயம் அப்பனே தங்காதப்பா சொல்லி விட்டேன் அப்பனே.

அடியவர்கள் :- ( அமைதி )

நாடி அருளாளர் :- எல்லோருக்கும் ஐயா இது. புரிஞ்சிகோங்க ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதை என்று அறிய அறியத் தெரிந்து கொண்டு வாழுங்கள். அப்பனே என் பக்தர் ஆயினும் இன்னும் அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே பின் அகத்தியன் அதைச் செய்வான் , இதைச் செய்வான் என்று. ஆனால் நிச்சயம் செய்வான் அப்பா. அப்பனே பிறக்கும் பொழுதே அப்பனே அதாவது பாவ மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு.

அப்பனே மனிதன் அதாவது எதை என்று அறிய அறிய நீங்கள் செல்லும் பொழுது நிழல் எப்படித் தொடர்கின்றதோ அதே போலத்தான் பாவமும் பின்னே வருகின்றதப்பா. அப்பப்பா அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய உலகத்தில் எதை என்று கூற தெரியாமலே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. ஆனாலும் நிச்சயம் சிறிது சிறிதாகவே போக்க முடியும் என்பேன் அப்பனே.

சிறிது சிறிதாக பின் போக்கினால் தான் மட்டுமே , அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன் அப்பனே அனைவருக்குமே அப்பனே.

உடனடியாக எந்தனுக்குக் கொடுக்க வேண்டும். துன்பத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்று. அப்பனே அப்பொழுது சிறு குழந்தையாகப் பிறக்கின்றாய். உடனடியாக 20 வயது பின் எவை என்று கூற இளைஞனாக மாற்றலாமா?

நீங்கள் கூறுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் இப்பொழுது திரிந்து பின் வலம் வந்து கொண்டிருக்கின்றான்.

அதனால் அப்பனே யோசியுங்கள். யோசியுங்கள் அப்பனே. எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே. இறைவனை எவை என்று அறிய அறிய நீங்கள் தொடுகின்றீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய, அப்பனே இதனால் துன்பம் வரும் பொழுதுதான் அப்பனே இறைவனை சிறிது சிறிதாக இறைவனை நெருங்குகின்றீர்கள் என்று அர்த்தம். இன்பமே வந்து கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை பின் வந்து அடைய முடியாதப்பா.

அப்பொழுது இறைவனை நெருங்க வேண்டுமென்றால் ஒரே வழி அப்பனே துன்பம்தானப்பா. அப்பொழுது எதனை ஏற்றுக் கொள்வீர்கள்? அப்பனே நீங்களே கூறுங்கள்.

பல அடியவர்கள் :- துன்பம்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பமும் எவை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அடிக்க வேண்டும் என்பதைக்கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே. இன்பத்தை அப்பனே துன்பத்தால் அழிக்க வேண்டும். யாராவது பதில் கூறுங்கள் இதற்கு?

நாடி அருளாளர் :- ஐயா யாராவது கூறுங்கள்? உங்களுக்கு ஒரு chance கொடுத்துள்ளார்.

அடியவர்கள்:- ( அமைதி )

நாடி அருளாளர் :- இன்பத்தைத் துன்பத்தால் அழிக்கனுமாம். கூறுங்கள் யாராவது?

அடியவர் :- மன வைராக்கியத்தால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப்புரிய நிச்சயம் அப்பனே எவை என்றும் புரியப் புரிய, அப்பனே கல்வி கற்றாயா?

நாடி அருளாளர்:- கல்வி கற்றாயா என்று (குருநாதர்) கேட்கின்றார் ஐயா. படிச்சிட்டு வந்தீங்களா?

அடியவர் :- கற்றுக்கொண்டு உள்ளோம் ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆசிரியன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கேட்கவேண்டும் என்றால் இப்படித்தான் கேட்பாயா? அப்பனே. முதலிலேயே அப்பனே இன்னும் அப்பனே பக்குவப்படுத்த எவை என்று அறிய அறிய இப்பொழுதே எதை என்று கூறினாய் அப்பனே. மீண்டும் ஒரு வார்த்தை கூறு?

நாடி அருளாளர்:- இப்போ என்ன கூறினீர்களோ, அதை இன்னொரு முறை கேட்கச் சொல்கின்றார் ( நம் குருநாதர் ).

அடியவர்:- ஐயா கற்றுக்கொண்டு உள்ளேன்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லையப்பா. அப்பனே வயதை ஆகிவிட்டது. எப்படியப்பா அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். அப்பனே பின் அதாவது பள்ளிக்குச் செல்கின்றாய் அப்பனே. ஆசிரியன் ஒரு கேள்வி கேட்கின்றான் உன்னைப்பார்த்து. அப்பனே அப்பொழுது நீ எப்படிச் சொல்வாய்? இப்படி உட்கார்ந்துதான் சொல்வாயா அப்பனே? அப்பனே இப்பொழுதே உந்தனுக்கு அதாவது பின் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றாய் அப்பனே. இப்படிப் பின் பூஜ்ஜியத்தில் இருந்து பின் எவை என்று கூற அழைத்து வருவது எவ்வளவு கஷ்டங்கள் என்று நீயே சிந்தித்துப்பார் மகனே.

நாடி அருளாளர்:- ஐயா புரியுதுங்களா? அப்ப zeroலேயே இருக்கிறீங்களாம். என்னப்பா கற்றுக்கொண்டாய் என்று கேட்கின்றார்.

அடியவர்:- ( எழுந்து நின்றார் )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதற்கு எழுந்தாய் அப்பனே?

அடியவர்:- ஐயா, விடை சொல்வதற்கு ..

அடியவர் 2:- ஆசிரியர் முன் ..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதை முதலிலேயே வந்திருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஏன் பின் எவை என்று அறிய அறிய யான் சொல்லிய பிறகு வந்திருக்கின்றது ( எழுந்து நின்றது ) என்று விளக்கம் தர வேண்டும் நீ அனைவருக்குமே.

அடியவர்:- ( எழுந்து நின்றவர் ) கேள்வி கேட்கும்போது அதற்கு உரிய மரியாதையோடு சொல்ல வேண்டும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன், எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நீ நிச்சயம் தெரிவிக்க வேண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய மரியாதை தேவை இல்லை. எதை என்றும் புரியப் புரிய அப்பனே ஆனாலும் அப்பனே பின் என் பக்தர்கள் ஆயினும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பனே எவை என்றும் புரியப்புரிய அவை மனதில் இருந்தாலே போதுமானதப்பா. ( அடியரவரின் தனிப்பட்ட கேள்வி பதில் வாக்கு முடிந்தவுடன் பொது வாக்கு ஆரம்பமானது)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- ஆனால் அப்பனே ஒரு பழமொழியும் உண்டு. தன்வினை தன்னைச் சுடும் என்று.

அப்பனே அதனால் அவர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அப்பனே. அனைத்தும் அப்பனே இறைவன் சேமிப்புத்திறன் என்றெல்லாம் அப்பனே உடம்பில் வைத்துள்ளானப்பா. சேகரித்துக்கொள்ளும் அப்பா. ஆனால் கடைசியில் அப்பனே இவை எல்லாம் சொல்லிவிட்டு பின் இறைவனிடத்தில் செல்வானப்பா. பின்பு எவை என்று அறிய அறிய அப்பனே அவ்செய்தி எதை என்றும் அறிய அறிய அப்பனே தொடங்கிவிடுமப்பா. எவை என்று அறிய அப்பொழுது அறிய எப்படியப்பா அனைத்தும் நடக்கும் என்பேன். கூறு நீயே?.

நாடி அருளாளர் விளக்கம்:- எல்லோருக்கும் பொது இது. அப்போ நீங்க சொல்றதெல்லாம் memoryயாகிக்கிட்டு இருக்கு உடம்புக்குள்ள. நீங்க திரும்பி இறைவனிடம் செல்லும் போது நீங்க சொன்ன அனைத்தும் memoryல இருந்து அது இறைவனிடம் ஒலிக்கும். நீங்க பேசிய அனைத்தும் ( உண்மை, பொய், சூது, வஞ்சம், பிறரைக் குற்றம் கூறுதல், பொறாமைப் படுதல் இன்னும்) இறைவன் கேட்பார். அப்போ எப்படி இறைவன் நல்லது செய்வார் என்று கேட்கின்றார்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு இன்னும் வாழக்கற்றுத் தந்தாலும் தன் போன போக்கில்தான் அப்பனே செல்கின்றான். அதனால்தான் அப்பனே ஈசனே ஒரு அடியை அடித்து அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மற்றொன்றும் சொல்கின்றேன் அப்பனே. பின் இறைவன் அனைவரையும் படைத்தான் அப்பனே. அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்பனே நல் முறையாகவே அப்பனே. ஆனால் இறைவன் படைத்தாற்போல் மனிதன் இல்லை என்பேன் அப்பனே. மீண்டும் பின் எவை என்று கூற துன்பத்தைக் கொடுத்து மீண்டும் அவன்தன் இடத்திற்கு அழைத்துக்கொள்கின்றான் அப்பனே. இது நியாயமா எவை என்று கூற நீங்கள்தான் எவை என்று அறிய அறிய அப்பனே. இதுதான் உண்மையப்பா. அதனால் பின் கஷ்டங்களைக் கொடுப்பது இறைவன் தானப்பா. எப்படியப்பா இறைவன் ( உங்கள் பாவங்களை ) நீக்க முடியும் அப்பனே சொல்லி? அதனால் அடி கொடுத்துத்தான் நீக்குவான் என்பேன் அப்பனே. இதற்குப் பரிகாரங்களாம்? எப்படியப்பா நீங்கும் அப்பா? கூறுங்கள் நீங்களே?

அனைத்து அடியவர்கள் :- ( அமைதி )

நாடி அருளாளர்:- இறைவன் தான் கஷ்டம் வைக்கின்றார். திரும்பி இறைவனிடமே போனால் எப்படியப்பா என்று சொல்கின்றார்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-

((அடியவர்களே, நமது பல கடினமான கண்டம் போன்ற கொடுமையாக விதியில் உள்ள பல கஷ்டங்களை எல்லாம், நம் அன்பு குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நாம் அறியாமலேயே நீக்கி நாம் நல்வாழ்வு வாழ அருளுகின்றார்கள். அது தொடர்பான முக்கிய வாக்கு))

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே சனீஸ்வரன் எதை என்று அறிய அறிய அப்பனே உன் கால் கைகளை இதன்முன்னே உடைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தான் அப்பனே. ஆனாலும் யான் தடுத்து நிறுத்தினேன். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் பின் மனிதனுக்கு தெரியாதப்பா. ஒன்றுமே நடக்க வில்லை என்றுதான் புரியுமப்பா.

நாடி அருளாளர்:- (விளக்கம்)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அனைவருக்கும் ஒரு புது விசயத்தைக் கூறுகின்றேன் அப்பனே.

((( வணக்கம் அடியவர்களே, தர்ம தேவன் காலம், ஏழரைச் சனி தேவன் காலம் என்றால் என்ன?: நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி தேவன் வந்து அமரும்போது ஏழரைச் சனி தேவன் பிடிக்கிறர் என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனி தேவன் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி தேவன் காலம் என்கிறோம்.)))

(((((( சித்தன் -அருள் -1590 - அன்புடன் அகத்தியர் - கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில்! இடைக்காடர் சித்தர் வாக்கு :- தர்மத்தை தர்ம தேவதையை பற்றி ஏன் பின் கேவலமாக பேசுகின்றீர்கள்?????

தர்ம தேவதை!!! சனியவன். தர்ம தேவன்!!!! சனியவன்.  பின் நீங்கள் சொல்லி அனுப்பலாமே !!!! { ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வருகின்ற மக்களுக்கு } தர்ம தேவதை சனியவன் ஆனால் இவ் தர்ம தேவனுக்கு இவை எல்லாம் பிடிக்கும் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ அவன் தான் ஜோதிடன். ஆனால் சொல்வதில்லையே!!!! )))))

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏழரை தன்னில் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீ எதைச்செய்கின்றாயோ அதைச் சனீஸ்வரன் பார்த்துக்கொண்டே இருப்பான் அப்பனே. முதுமையில் கொடுத்து விடுவான் அனைத்தும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய கர்மத்துக்கு தகுந்தாற்போல. அதனால்தான் அப்பனே ஏழரை எவை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் தீய வழிகளில் அழைத்துச்செல்லும் என்பேன் அப்பனே. ஆனாலும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொண்டு இறைவன் பாதையில் மனம் செல்லுமேயானால் அப்பனே பின் வாழ்க்கையில் கடைப்பகுதியில் அப்பனே உயர்ந்து வாழலாம் என்பேன் அப்பனே. இதை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே ஏழரை தன்னில் கூட.

நாடி அருளாளர் :- ( தனிப்பட்ட விளக்கம் )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- (ஏழரைச் சனிதேவன் தொடர்பான வாக்கு தொடர்கின்றது….)

அப்பனே இதே போலத்தான் பல முறையும் இல்லத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும், எதை என்று அறிய அறிய ஒரு ஒருவர் பிரிய வேண்டும் என்றெல்லாம் அப்பனே சனீஸ்வரன் என்னிடத்தில் கேட்பான் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய சனீஸ்வரனிடத்தில் சொல்லிவிட்டேன். எதைச் செய்தாலும் என்னிடத்தில் கேட்டுச் செய் என்று. ஆனாலும் எவை என்று புரியப்புரிய “ மாமுனிவரே!!!” அதாவது எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய “ஈசன் இட்ட கட்டளைப்படிதான் யான் செய்வேன்” என்று. ஆனாலும் பின் அமைதியாக பின் “சனீஸ்வரனே, பின் உந்தனுக்கும் பல உதவிகள் செய்துள்ளேன். மறந்து விட்டாயா?” என்று.

பின் “அகத்தியனே எதை என்றும் புரியப் புரிய இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் அப்பனே எவை என்றும் புரியப்புரிய அதாவது இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் என்னைக்கூடத் தலை குனிய வைக்கின்றாய் என்று”

( தனிப்பட்ட வாக்கு )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன் உனை நிற்க வைத்தேன்?

அடியவர் :- (குருநாதர்) கேள்வி கேட்டார்கள். உட்கார்ந்து பதில் சொன்னதால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அப்படி இல்லையப்பா. கற்றுக்கொள்வதற்கு என்று நீதான் முதலில் கூறினாய் என்பேன் அப்பனே. இப்பொழுது என்ன சொல்லப்போகின்றாய் அதற்குப் பதில்?

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே புரிகின்றதா? அப்பனே எவை என்று அறிய அறிய யாரையும் எவை என்று அறிய அறிய திருத்த முடியாதப்பா. அவரவர் திருந்திக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.

நாடி அருளாளர்:- நம்ம சொல்லி யாரையும் திருத்த எல்லாம் முடியாது. அவரவர் திருந்தனும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே , ஒன்றைச் சொல்கின்றேன். அனைவருமே நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் அப்பனே. பாவம் சுமந்து வந்திருக்கின்றான் அப்பனே. இறைவனே பாவத்தை அதாவது அனுபவிக்க பின் இவ்வுலகத்தில் மனிதனைப் பிறக்க வைத்தான் அப்பனே. அப்பொழுது எதை என்றும் புரியப் புரிய அவ்வளவு சுலபமாகப் பாவம் கரைந்துவிடுமா என்ன? அவ்வளவு சுலபமாக இறைவன் தன் தலத்திற்கு அழைத்து வருவானா என்ன? கூறுங்கள் நீங்களே?

நாடி அருளாளர்:- ஐயா புரியுதுங்களா?

அடியவர் :- புரிகின்றது ஐயா

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அறிந்தும் கூட பின் புரிந்தும் கூட அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளான். அதை எடுத்துக் கொள்ளவே அப்பனே யாங்கள் வருவோம். அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. இன்னும் சித்தர்கள் அப்பனே எவை என்று கூற அப்பனே வாக்குகள் செப்பும் பொழுது தெளிவு பெறுவீர்கள் அப்பனே. எவை என்று அறிய அறிய வெற்றியும் பெறுவீர்கள் என்பேன் அப்பனே. முதலில் உன்னை அறியுங்கள் அப்பனே.

அப்பனே உன்னை நீ எவ்வாறு அறிந்தாய் கூறு?

அடியவர் :- எனக்குள்ளே இருந்து எல்லாமாய் வழி நடத்துவது அகத்தியப் பெருமான் அருளே என்று நான் உணர்கின்றேன் ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய பின் அனைவரையும் கேள் இதனை அப்பனே?

நாடி அருளாளர் :- இது சரிதானா என்று அனைவரையும் கேட்கச் சொல்கின்றார்.

( மேலும் சில விளக்கங்கள் அளித்த பின்னர்)

அடியவர் :- நீங்கள் எல்லாம் உங்களை எப்படி உணர்கின்றீர்கள் என்று ( குருநாதர் ) ஐயா கேட்கின்றார்கள். ஒவ்வொருவராகச் சொல்லுங்கள்.

அடியவர் 1:- ( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் ) ஐயாவை வணங்குகின்றோம்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனைக்கூட வணங்குகின்றீர்கள். என்ன பிரயோஜனம்?

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனை எதற்கு வணங்குகின்றீர்கள்? அனைவருமே கூற வேண்டும்.

அடியவர் 2 :- ஐயா பெரும்பாலும் எல்லாரும் சுயநலமாக வணங்குகின்றார்கள்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே புரிகின்றதா அப்பனே. சுயநலமாக வணங்கினால் அப்பனே பின் அள்ளிக் கொடுப்பானப்பா துன்பத்தை.

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு இங்கு )

அடியவர் 4 :- பொதுவாக ( வணங்கவேண்டும் )

நாடி அருளாளர் :- அப்போ, சுயநலமாக வணங்கக்கூடாது. அள்ளிக் கொடுத்து விடுவாராம் துன்பத்தை, எடுத்துவிட்டு போப்பா என்று.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அள்ளிக் கொடுப்பது பின் நன்மையா? தீமையா?

அடியவர் 5:- நன்மை

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே எவை என்று அறிய அறிய நன்மை என்று சொன்னாயே முன் நின்று எழுந்து நில்.

நாடி அருளாளர் :- நன்மை என்று எதற்குச் சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் ஐயா

அடியவர் 5:- ( எழுந்து நின்றார் ) துன்பத்தைக் கொடுத்தால்தான் இறைவனை உணர முடியும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, யான் சொல்லிக் கொடுத்ததைத்தான் நீ சொல்லிக் கொண்டிருக்கின்றாய் அப்பனே.

நாடி அருளாளர்:- அகத்தியர் சொன்னதைத்தான் நீங்க சொல்றீங்க. வேற ஏதாவது சொல்லுங்க ஐயா.

அடியவர் 4:- ஐயா துன்பம் பட்டால்தான் ஐயா பக்குவம் வரும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன்.

(வணக்கம் அடியவர்களே, பகுதி 1 - இவ்வாக்கு 1000 நொடிகள். தட்டச்சு நேரம் ஏறத்தாழ ஒரு வாரம் என்று அறியத்தருகின்றோம்.)

( March 2024 மதுரையில் நடந்த சத்சங்கம் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. எங்களுக்காக தொகுத்து கொடுத்த ஐய்யாவுக்கு நன்றி

    ReplyDelete
  3. அப்பனே அகத்தியா நீயே உற்ற துணை!

    ReplyDelete
  4. எங்களுக்காக மணிக்காக தட்டச்சு செய்யும் அக்னிலிங்கம் ஐயா நலமாக வாழ அருளுங்கள் அகத்தியர் ஐயா 🙏

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய போற்றி

    ReplyDelete