​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 7 June 2024

சித்தன் அருள் - 1623 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும், ஆ இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே  பாதுகாத்து, உயர்வான முறையிலே போஷாக்கம் கொடுத்து,  அதனை நன்றாக பராமரித்து, ஒரு பசுமாட்டை நல்ல விதமாக, அதிலும் இனி அதனால் எந்த வித பயனும் இல்லை என்று ஒதுக்கப்படுகின்ற பசுமாட்டை எல்லாம்,  அனுப்பாமல், எவன் ஒருவன் நன்றாக, உண்மையாக ஆத்மார்த்தமாக தன்னுடைய குழந்தையைப் போல் பராமரிக்கின்றானோ,  அவனுக்கு இகுதே  கடைசி பிறவி எனலாம். அவன் ஒரு பசுமாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை எழுப்பி, கலச விழா செய்த பலனை அடைவான்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்திசாய நமோ நம. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய போற்றி

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete