​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 6 June 2024

சித்தன் அருள் - 1622 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


கேள்வி: ஏமாற்றும் கூட்டத்திற்கு ஒருவன் தர்மம் செய்தால் பயனற்று போய்விடுமே! அப்படியாயின், ஒருவன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் தர்மம் செய்ய வேண்டுமா?

குருநாதர் பதில்: அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் தர்மம் செய்யச் சொல்லவில்லை. ஆனால், "ஏமாற்றுகிறானோ!!" என்று எண்ணி, தர்மம் செய்யாமல் இருந்துவிடாதே, என்றுதான் கூறுகிறோம். உதாரணமாக, ஒரு நூறு மனிதர்களுக்கு ஒருவன் உதவி செய்தால், அதில் பத்தில் ஒரு பங்குதான் உண்மையாக இருக்கும் என்று எமக்கும் தெரியும். ஆனாலும், இந்த பத்தை பிடிப்பதற்காகத்தான், அந்த நூறை செய்ய வேண்டி உள்ளது. எனவே, கொடுத்துக் கொண்டே போ! அதிலே, நல்லவை, தீயவை, நன்மை, தீமைகளை ஆராய வேண்டாம். எவன் இந்த தர்ம உபதேசத்தை கடைபிடிக்கிறானோ, அவன் பிறவி தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதுதான் மனிதனின் எண்ணம். ஆனால், யாங்களோ, அடுத்த பிறவிக்கு சேர்க்கச் சொல்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete