​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 28 May 2025

சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


சித்திரை திருநாள் குருநாதர் பொதுவாக்கு பாகம் 2 

அப்பனே யார் ஒருவன் தன் கடமையை செய்கின்றானோ.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனே பின் இவன் சரியாகவே கடமையை செய்கின்றான்!!!

இவந்தனுக்கு நிச்சயம் ஏதாவது ஒன்றை கொடுப்போம் என்று நிச்சயம் அப்பனே...

பின் எதை கொடுப்பான்?? அப்பனே முதலில்....

இதற்கு பதில் நீங்கள் கூறவும்!!!!


கூடியிருந்த அடியவர்களில் ஒருவர் 

குருவே சரணம் அவரவர் கடமையை ஒழுங்காக செய்து கொண்டே இருந்தால்... அடுத்து இறையோடு இரண்டற கலப்பதற்கான  இறுதி நிலையை கொடுத்து விடுவார். 

குருநாதர் அகத்திய பெருமான்!!

அப்பனே யோசித்து பேசு!!!!

அடியவர்!!!

குருவே நீங்கள் ஏற்கனவே கூறி இருந்தீர்கள்... மனிதனாகப் பிறந்தால் தன் கடமையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.. அப்பொழுது இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். 


குருநாதர் அகத்திய பெருமான்

அப்பனே நிச்சயம் இதற்கான பதிலை சொல்லுங்கள்

மற்ற அடியவர்...
குருவே 
ஒருவருக்கு வாழ்க்கையில் என்ன குறைவாக இருக்கின்றதோ அதை கொடுத்துவிட்டு பிறகு இறைவனோடு கலப்பது!!!... என்று மற்ற அடியவர் கூறினார்.

குருநாதர் அகத்தியர் பெருமான்.

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் 

 """"புண்ணிய பாதையில்!!!...அப்பனே

எதை என்று கூற அதை முதலில் கொடுப்பானப்பா!!! முதலில் என்பேன் அப்பனே!!

அதை வைத்துக்கொண்டு சமமாகவே அப்பனே பின்.. எதை என்று அறிய அறிய அனைத்தும் தெரிந்து விடும் உங்களுக்கு..

அவரவர் வழியில் சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனை வந்தடைந்து விடலாம் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பன பின் எதை என்று புரிய புரிய... நீங்கள் அப்பனே வங்கிகளில் கூட அழகாக இட்டு உள்ளீர்கள் அப்பனே...(பணம் சேமிப்பு) எதை என்று கூற ஒரு பின் காலத்தில் உதவுமல்லவா!!! பணம். 

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய அதை தன் பணமாக வைத்துக் கொள்ளுங்கள் புண்ணியத்தை அப்பனே. 

இப்பொழுது என்ன கொடுப்பான்????

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது கூறுங்கள்!!!

அப்பனே இதனால் தான் அப்பனே முதலில் எதை என்று புரிய.. அப்பனே எவை என்று அறிய  அறிய அப்பனே இதனால் அப்பனே அதுவும் நீங்கள் அப்பனே பின் செய்தது தான் என்பேன் அப்பனே. (சேமிப்பு)

அது அப்படியே இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட தன் கடமையை செய்யாமல் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... உண்டிட்டு உறங்கிட்டு அப்பனே அப்படியே இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் கூட பார்த்துவிட்டு நீ அப்படியே இருந்து விடு என்று!!

(புண்ணியத்தை சேமிப்பில் வைத்துக் கொண்டு அதன் மூலம் கடமையை செய்யாமல் இருந்தால் அந்தப் புண்ணியங்கள் அப்படியே இருக்கும் ஆனால் அதை மறுபிறவி எடுத்து வந்து தான் எடுக்க முடியும்)

நிச்சயம் புண்ணியங்கள் கூட தன்னிடத்தில் மீண்டும் அதை எடுக்க வேண்டும் என்றால்... மறுபிறவி எடுக்க வேண்டுமப்பா!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவனிடத்தில் சென்றாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமாக பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது பணத்தை அப்பனே நிச்சயம் எடுக்க... எவ்வளவு கஷ்டங்கள் என்பது..  உங்களுக்கே அதாவது நீங்களே  அறிந்ததே!!!

அப்படி இதனால் நிச்சயம் தன்னில் கூட பின்.. ஒவ்வொருவரிடத்திலும் கூட அப்பனே இன்னும் எதை என்று புரிய... அதனால் தேங்கி தான் நிற்கின்றதப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் இவை எடுப்பதற்கு அப்பனே எவை என்று கூற... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. இதன் ரகசியத்தை கூட அப்பனே வரும் வரும் காலத்தில் புரிய வைக்கின்றேன்.

அப்பனே பின் அதாவது எதை என்று புரிய அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பதில் ஒன்று சொன்னாய்...அப்பனே
(அடியவரை பார்த்து)

அதாவது யோசிக்காமல் அப்பனே பின்.. எவை என்று பேசாதே என்று சொன்னேன் அப்பனே!!

இதற்கு என்ன அர்த்தம் அப்பா?????

அடியவர். 

யோசிக்காமல் பேசாதே என்று குருநாதர் சொன்னார் .!!   அதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து அலசி ஆராய்ந்து அதன் பிறகு சொல்ல வேண்டும் என்று குருநாதர் கூறுகின்றார். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே நிச்சயம் அப்பனே இது போலத்தான் அப்பனே.. மனிதன் தன் சுயநலமின்றி அப்பனே பின் அதாவது பின் பாவத்தில் விழுந்து விடுகின்றானப்பா!!!...

அப்பனே ஆனாலும்... உந்தனக்கு அனைத்தும் தெரியும் அப்பனே ஆனாலும் அப்பனே...இவ் வார்த்தை ஏதோ ஒன்றை விட்டு விட்டாய்!!!

அப்பனே இதன் அதாவது இதை.. என்னவென்று கூறுவது???

நீ எடுத்துரை!!!

(அதாவது யோசிக்காமல் உடனடியாக பதில் சொல்வதை என்னவென்று எண்ணுவது என்று குருநாதர் கேள்விகள் கேட்க) 

அடியவர். 

குருநாதர் அந்த சமயத்தில் கேள்வியைக் கேட்ட பொழுது அந்த நேரத்தில் என் அறிவில் என் யோசனையில் உதித்த பதிலை நான் குருநாதரிடம் கூறினேன். 

குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே இதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது அறிவியல் வழியாகவே இதை தன் உணர்த்துகின்றேன் அப்பனே. 

அதாவது அப்பனே பின் அதாவது ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம்...

அப்பனே பாவம்!! என்ற துகள்!!

புண்ணியம் என்ற துகள்!!!

ஆனாலும் அப்பனே யான்தான் முந்திக் கொள்வேன் என்று பாவம் திடீரென்று எதை என்று புரிய அப்பனே பின்.. வார்த்தை அப்பனே பின் எவ்வாறு என்பதை கூட அப்பனே!!



(மனிதர்கள் உடம்பில் பாவம் என்கின்ற அணு துகள் புண்ணியம் என்கின்ற அணு துகள் இரண்டும் இருக்கின்றது!!!!... சில சமயங்களில் பாவ துகள் முந்திக்கொண்டு வார்த்தையாக வெளிப்பட்டு வருகின்றது. 

சிலர் யோசிக்காமல் சடார் என்று எடுத்தெறிந்து பேசுவது கோபப்பட்டு பேசுவது.. யோசிக்காமல் வார்த்தையை விட்டு விடுவது இதற்கெல்லாம் காரணம் பாவ துகள் என்று குருநாதர் விளக்குகின்றார்)

திடீரென்று திடீரென்று அப்பனே அது முன்னுக்கு வந்துவிடும் என்பேன் அப்பனே


... இதில்தான் அப்பனே பின் தவறு செய்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே.. அதை பின்னுக்கு தள்ள வேண்டும் (பாவ துகள் முந்திக்கொண்டு பேசுவதை)

எப்படியப்பா???

அவையெல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைக்கின்றேன். 


அப்பனே இதை அறிந்ததோ... அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே.. இதை அறிந்து விட்டால் அப்பனே... நிச்சயம் தன்னில்  கூட பின் அனைத்தும் தெரிந்து விடும் என்பேன். அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் புண்ணிய துகளையும் பின் முன்னுக்கு கொண்டு வர வேண்டும் அப்பனே. 

நிச்சயம் அப்பனே... அதை கொண்டு வர முடியுமா???.... என்றால் மனிதனால் முடியாதப்பா!!!

இதனால்தான் அப்பனே பல கலைகள்.. அப்பனே பல..(யோகா). ஆசனங்கள் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட.. கற்று உணர்ந்தாலும்... அதை எடுத்து வர முடியுமா?? என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே எதை என்று புரிய....அப்பனே

யார் வைத்தானோ!!!....அவன் மட்டும்தான் அப்பனே எடுத்து வர முடியும்!!

அதற்கு அப்பனே நீங்கள்... எவை என்று அறிய அப்பனே... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம்... உங்களுக்கு எடுத்துரைக்கும் பொழுது... புரியுமப்பா!!!


அப்பனே அறிந்தும் எதை என்று புரிய இதனால் அப்பனே பின் இவை இரண்டும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அனைத்தும் அப்பனே இதை அறிவியல் வழியாகவும் கூட பின் சமமாகவே அப்பனே அவை இவை... எதை என்று புரிய அதாவது... இயந்திரம் ஆனாலும் அப்பனே... சமமாக இயங்கினால் மட்டுமே.. உண்டு என்பேன் அப்பனே. 

ஒன்று கீழாக இயங்கிவிட்டாலும் கூட.. அப்பனே எதை என்று புரிய புரிய...

அதேபோலத்தான் அப்பனே... பாவமும் புண்ணியமும் அப்பனே யார் ஒருவனுக்கு சமமாக.. இயங்குகின்றதோ... அப்பனே அவந்தனக்கு அனைத்தும் தெரியவருமப்பா!!

ஆனாலும் அப்பனே பின் பாவ துகள்... அப்பனே அடுக்கிச் செல்கின்றது... அப்பனே புண்ணிய துகள்!!!!!!................... எதை என்று.. நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

அப்பனே இதனால் அப்பனே பின் ஞானத்தை எதை என்று அறிய அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே புரிந்து கொள்வதற்கும் கூட அப்பனே எவை என்று அறிய... அப்பனே மனிதனிடத்தில் பின் எவை என்று அறிய பின் அப்பனே பாவங்கள் கலியுகத்தில் அதிகமாக உள்ளது என்பேன் அப்பனே. 

அப்பனே எதை என்று புரிய இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சித்தர்கள் பின் அதாவது அப்பனே எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே பின் எவை என்று அறிய 

(பகவத்) கீதையிலும் கூட பின் உங்களுக்கு தெரிந்ததே!!!!

கிருஷ்ணனின் அப்பனே பின் எப்பொழுது எல்லாம்... பின் எதை என்று அறிய அறிய அதர்மம் தலை தூக்கி நிற்கின்றதோ!?!?!!

அப்போது

 அப்பனே  நிச்சயம் வருவேன் என்று சொல்லிவிட்டானே!!!

அப்பனே நிச்சயம் என்பதில் கூட... அப்பனே பின் அதாவது கலியுகத்தில்... தர்மம் தலைகீழாக தான் போக வேண்டும் என்பது விதியப்பா!!!

அப்பனே அதே போல் அப்பனே... தர்மத்தை சரியாகவே கடைப்பிடித்து வந்தால்.. அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய. .. தாழ்ந்து போகலாம் 

 ஆனாலும் நிச்சயம்.. அப்பனே இறைவனே வந்து கை கொடுத்து உயர்த்துவானப்பா 

இதுதான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே. 

ஆனால் கலியுகத்தில் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே பின்.. தர்மம் எதை என்று அறிய அறிய தலைகீழாகும். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட... அதர்மம் தலை தூக்குமப்பா!!!

இதுதான் விதி!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. அறிந்தும் கூட சில மனிதர்களை அப்பனே எவை என்று அறிய... நல்வழியாகவே அப்பனே பின் படைத்து படைத்து... அப்பனே அருளச் செய்து.. அப்பனே நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய இன்னும் கூட... அப்பனே இவ்வாறு இறைவன் இருப்பதை.. காட்டிக்கொள்ள அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அழிவுகளும் கூட அப்பனே கஷ்டங்களும்.. கூட அப்பனே நிச்சயம் மனிதருக்கு இறைவன் அதிகமாக.. கொடுக்கத்தான் போகின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக கொடுத்தால்தான் அப்பனே....

நிச்சயம் பயம்!!!.... இறைவன் இருக்கின்றான் என்று பயம்... அப்பனே பின் ஏற்படும் மனிதனுக்கு!!!!!


அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே.. குறைகள் இல்லை. 
நல்விதமாக எதை என்று புரிய அப்பனே
இதனால் அப்பனே யான் எதற்காக.. சொன்னேன் என்பேன் அப்பனே. 

ஆனாலும்  மீண்டும் இதைச் சொல்வேன் அப்பனே!!!

(அடியவரை பார்த்து) 

யோசித்துப் பேசினாய் என்பேன் அப்பனே!!....

ஆனாலும் யான் எதற்கு? பின் யோசிக்காமல்.. நீ பேசினாய்? என்று சொன்னேன்!!.. என்றெல்லாம் அப்பனே!!


அடியவரின் கருத்து 

குருவே அடியேன் யோசித்து தான் பேசினேன்... நீங்கள் நான் யோசிக்காமல் சொன்னேன் என்று தற்போது இப்படி சொல்கின்றீர்கள் !!

ஆனாலும்

குருநாதர் வாக்கிற்கு மறு வார்த்தையே கிடையாது. 

அகத்தியர் பெருமான் 

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அப்படி இருந்தால்... அப்பனே நீ அப்பொழுது கூறியிருக்க வேண்டும்... நிச்சயம் நீங்களே சொல்லுங்கள் எந்தனுக்கு தெரியாது என்று!!!!



அடியவர் 

குருவே நீங்கள் கேள்விகள் கேட்கின்றீர்கள் நாங்கள் எங்களுக்கு தெரிந்த பதிலை கூறினோம்...

சரிங்க!! குரு நாதா இனிமேல்.. நீங்களே சொல்லுங்கள் அனைத்தும். 

குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.. அப்படி என்றால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது இப்படி எல்லாம் நிச்சயம் இருக்கக் கூடாது என்பேன் அப்பனே. 

அனைத்தும் இறைவனே செய்யட்டும் என்று தான் நீ சொல்கின்றாய் அப்பனே..

அப்பொழுது நீ என்ன உபயோகிக்க போகின்றாய் மகனே!!!!



அடியவர் 

குருநாதர் எனக்கு உணர்த்தியது எனக்கு எதுவும் வேண்டாம் அனைத்தும் குருநாதர் அனைத்தும் இறைவன் செயல் என்று தான்.. எதுவுமே என்னுடையது என்று இல்லை என்பதுதான்.. என்னுடைய முயற்சியாக இருக்கின்றது அந்த முயற்சியில் தான் அடியேன் இருக்கின்றேன் குருநாதா. 


குருநாதர் அகத்திய பெருமான் 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... இவ்வாறு அப்பனே சொல்லலாமா??????


அடியவர். 

நான் தற்போது இந்தக் கருத்தில் தான் உடன்படுகின்றேன் ஏனென்றால் இதையும் குருநாதர் தான் வாக்கில் கூறியிருக்கின்றார். அனைத்தும் இறைவன் செயலையும் என்று இருக்க வேண்டும் என்று. 


அகத்தியர் பெருமான். 

அப்பனே யான் சொல்லுவதை எல்லாம் எடுத்துக் கொள்ளலாமா????

அடியவர். 

முடிந்தவரை முயற்சி செய்கின்றேன் குருநாதா!!!


குருநாதர் அகத்திய பெருமான்.

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அறிந்தும் கூட அப்பனே பின் மீண்டும் சொல்!! அப்பனே! எதற்கு எவை என்று அறிய!

அடியவர்.
குருநாதர் தனது வாக்குகளில் இட்ட கட்டளைகளை முடிந்தவரை முயற்சி செய்து அதை கடைபிடித்து வர தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றோம். 
அதைத்தான் அடியேன் முதலில் கூறினேன். அதன் பிறகு குருநாதர் நான் சொல்வதை முழுவதும் நீ ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டார். 

ஆனால் அது முழுவதும் முடியாது என்று... ஆனாலும் முடிந்த வரை அதையும் போராடி செய்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கின்றேன். 


அகத்தியர் பெருமான். 

அப்பனே அறிந்தும் இதற்கெல்லாம் என்ன தேவையப்பா????


அடியவர். 

பரிபூரணமாக குருவின் அருளும் ஆசிகளும். 

குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே..இதை எங்கு எப்பொழுது பெறலாம்?????

அடியவர். 

குருநாதருக்கே வெளிச்சம்!! இது குருநாதருக்கு தான் தெரியும். 

சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த வாக்கு பாகம் மூன்றில் தொடரும்

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete