102. கண் முன்னே கொலையும், கொள்ளையும், தவறும் நடப்பதை பார்க்கிற உங்கள் அடியவர்கள் கூட ஆன்மிகம் போதும், எல்லாவற்றிலிருந்தும் விலகி அமைதியாக வாழ்ந்துவிடலாம் என்று தீர்மானிக்கிறார்களே ?
அப்பப்பா! நவதீபத்தை நல்முறையாக ஏற்றச்சொன்னேன். அதை பின்பற்றியவர்கள் எவர்? அப்பா! தர்மத்தை பல வழிகளிலும் பின்பற்றச் சொன்னேன்! அப்பப்பா! என்னென்ன செய்யச்சொன்னேன், நிச்சயம் அதை செய்தார்களா? நிச்சயம் இல்லையப்பா! அதனால், ஈசனும், மனிதன் மனதுள் ஏற்படுத்தி, மனிதனால் தண்டனை கொடுக்கின்றான். இதனை சொன்னால், எதையும் செய்ய மாட்டார்கள். இங்கு மக்கள்தானப்பா அனைத்து தவறுகளையும் செய்து விடுகிறார்கள் அப்பா. இதனால் இறைவன் எதனை கொடுப்பான், எதனை தண்டிப்பான் என்று, கடைசியில் பார்த்தால் இன்னும் பல ஞானிகள் சொல்லியிருக்கின்றார்களே! அதை எல்லாம் கடை பிடித்தார்களா அப்பா! இதனை பற்றி இன்னும் வாக்குகள் செப்புவேன், விடப்போவதில்லை யாங்கள்!
103. ஆனால் ஒவ்வொரு கோவில்களிலும் சன்னதிகளை கீழடக்கி வைத்திருப்பது அரசியல்வாதிகள் தானே!
அப்பப்பா! அறிந்தும், அவர்களை கட்டுப்படுத்தி விடுகிறேனப்பா. பின் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு பின் இறந்து விடுவார்களப்பா. யாங்கள் காவலாளிகளையே வைக்கவில்லை அப்பா. ஆனால், இவ் தேசத்தில், கோவிலுக்குள் புகுந்து இறைவனை/லிங்கத்தை அழித்து விட்டார்களப்பா! இதுவும் இல்லாமலிருந்தால், மனிதர்கள் உள்நுழைந்து ஈசனை கெட்டியாகப் பிடித்து எடுத்து எறிந்துவிடுவார்களப்பா.
104. காவலாளிகளை பற்றி நான் கூறவில்லை. அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில், சன்னதியும், கோவிலும் இருக்கிறது. இறைவனை வைத்து காசு பண்ணுகிறார்கள்!
அப்பப்பா, இது என்ன, நிரந்தரமா, என்ன? சூரியனும், சந்திரனும் என்று சொல்லிவிட்டேனே. உண்மை பக்தன், ருத்திராட்ச்சை அணிந்து கொண்டு காசுகளை வைத்துக்கொண்டு ஏமாற்றுகிற பொழுது, இவன் இறை பக்தன் என்று ஏமாற்றுகிறான் என்கிற பொழுது, இவனுக்கே இறைவன் தண்டனை கொடுக்கவில்லையே! நம்தனை ஏன் இறைவன் தண்டனை கொடுக்க போகின்றான் என்று, வேண்டும் அவன் பெரிய ஆளாகிறான். அப்பொழுது யார் இங்கு தவறு செய்தது என்று நீ சிந்தித்துக்கொள் மகனே.
105. நான் ஒருத்தன் மட்டும் திருந்தி பிரயோசனமில்லை. இந்த உலக மக்கள் அனைவரும் திருந்த வேண்டும்.
அப்பப்பா! நிச்சயம். அழிவுகளை பலப்படுத்தினால்தான் திருந்துவார்கள் அப்பா. ஈசனும் பலப்படுத்தப் போகின்றான். யாங்களும் திருத்துகிறோம் என்று வாக்குகள் ஈசனிடம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பா. ஒரு எல்லைக்குத்தான் அனைத்தும் அப்பா!
106. எனக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அத்தனை வருடங்களாக அந்த எல்லை எவ்வளவு தூரம் சென்று கொண்டிருக்கிறது என்று நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!
அப்பப்பா! நிச்சயமப்பா. இன்னும் வாக்குகள் வரும்பொழுது ரகசியங்கள் அனைத்தும் சொல்லிவிடுகிறேன் அப்பா! நிச்சயம் அப்பா! பொறுத்திரு!
107. குருநாதா! நான் கேட்க்கிற கேள்வி ஒன்றுதான். இப்படி இறைவனை வைத்து விளையாடி, பிற மனிதர்களை, நல்லவர்களை கூட கெடுக்கிற அளவுக்கு நடந்து கொள்கிற ............
இறைவனை வைத்தே விளையாடுகிறார்கள் என்றால், இறைவன் எவ்வளவு விவரமானவன் என்று புரிந்து கொள்ளப்பா! இதையும் பின்பற்றி செல், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் அப்பனே! நிச்சயம் அப்பா! நீ உணரவில்லையா! அப்பா!
108. அந்த பழமொழி கேட்டிருக்கிறேன். ரொம்ப நன்றாக இருக்கும்! ஆனா உண்மையில் அப்படி இல்லை. "______" அப்படியா செத்தான்?
அப்பா! இதை பற்றி, இங்கு தேவை இல்லை. இதன் ரகசியத்தை நீங்கள் மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அப்பா! ஒரு பிறப்பில் அவன் ராஜ ராஜ சோழனப்பா! நிச்சயம் யான் ஈசன் பக்தனாக இருக்கின்றேன்! நிச்சயம் உன் பக்தனாக இருந்துவிட்டேன். ஒரு பிறவியில் உன்னை நினைக்கவே கூடாது! இதனால், ஈசன், நான் சொல்வது மட்டும்தான் நடக்கும் என்றான். இந்த ரகசியம் உங்களுக்கு மட்டும் தெரியட்டும் என்று.
109. அந்த அருளை கொடுத்த இறைவன், செய்தது மிகப்பெரிய தவறு.
மனிதன் இப்படித்தான் போவான் என்றறிந்து அதன் படியே அவனும் ஆட்சி செய்தானப்பா! அவன் சேர்த்த சொத்துக்கள் எல்லாம் அவன் கொண்டு போகப் போகிறானா என்ன? அவன் குடும்பம் வாழப்போகின்றதா என்ன? இவை எல்லாம் அப்பனே, ஈசனுடைய பொருள். எப்பொழுது யாருக்கு தருவார் என்று ஈசன்தான் முடிவெடுக்க முடியும். கொடுக்கும் பொருள் பத்திரமாக இருக்க வேண்டும். யாரிடத்தில் கொடுத்தால் பத்திரமாக இருக்கும் என்று முடிவெடுத்தான்.
110. இதுக்கு, கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். பருத்தி மூட்டை ஈசன் கோடௌனிலேயே இருந்திருக்கலாம்.
அப்பா! அனைவரிடத்திலும் யானே வந்து அனைத்தையும் கொடுக்கின்றேன். அதை வைத்து மனிதன் என்ன செய்வான்?
111. என்ன வேணா செய்யட்டும், அதை விட்டுடுங்க. ஆனால், இன்னொருவருடைய சொத்தை பலவந்தமாக தான் பிடுங்கிக்கொண்டு சேர்த்து வைப்பது, எந்த விதத்தில் நியாயம்?
அனைத்தும் அப்பா! ஒரு முனையில் சென்றால், மறுமுனையில் வருமப்பா. கவலையை விடு. அனைத்தும் இறைவன் ஆட்டமே என்று அமைதியாக இரு. அப்பா, ஒன்றை சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். தர்மம் தலை கீழாக போகின்றது என்று. ஒருநாள் நிமிருமப்பா! நிமிர்த்தியும் வைப்போமப்பா! இதை பற்றி, இங்கு, உங்களுக்காக மட்டுமே உரைக்கின்றேன்.
112. "இறைவனும், நாங்களும் எங்கள் சக்தியை காட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?" என்று சொல்கிறீர்களே தவிர, ஒருத்தரும், ஒன்றும் காட்டுவதில்லை.
அப்பப்பா! இவ்வாறு செய்தாலும் ஒருவனுக்கு கோவம். அவ்வாறு செய்தாலும் ஒருவனுக்கு கோவம். அப்பா! மனிதனை பக்குவப்படுத்தி அனைத்தையும் நல்குவோம். கலியுகத்தில் தீயவைதான் நடக்கவேண்டும் என்பது பிரம்மாவின் தீர்ப்பு. இறைவன் தீர்ப்பை மாற்றவே, ஓடோடி வந்து அனைத்தையும் செய்கின்றோம். நிச்சயம் பொறுத்திருந்தால், அனைத்தையும் மாற்றுவோம். அனைத்தும் பொருத்தாகத்தான் வேண்டுமப்பா. நிச்சயம் பிள்ளை பிறக்கவும், தாயவள் பொறுத்திருந்தால்தான் அப்பா! களவும், கற்பித்தலும் பொறுத்திருந்தால்தான் அப்பா! தொழில் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் பொறுத்திருந்தால் தான் அப்பா. அவ்வவ் விஷயங்கள் எப்பொழுது இறைவனால் நடத்தப்படுமோ அப்பொழுதுதானப்பா!
113. நீங்கள் சொல்வதுபோல் புரிந்து கொள்ள நான் இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்கவேண்டுமோ என்னவோ!
அப்பப்பா! இப்பொழுதே புரிந்து கொண்டுதான் இருக்கின்றாய் அப்பா!
114. இல்லை குருநாதா! தவறு செய்கிறவன் தான் நல்லபடியாக வாழ்கிறான்.
அப்பா! நிச்சயம் இல்லையப்பா!
115. நீங்கள் முன்னர் சொன்னவர் வீட்டுக்கு ஒருநாள் போய் பார்த்துவிட்டு வாருங்கள்!
அப்பா! ஒரு வேளை உணவுகூட சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை அப்பா! நோய்களப்பா! அனைத்தும் அப்பா! நிச்சயம் எங்களுக்குத்தான் தெரியுமப்பா!
(சரி! அந்த தலைப்பை விட்டுவிடுவோம்)
116. சனி பெயர்ச்சி 2025 என்றும் 2026 என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன. இதில் எது சரி என்று ஐயன் கூற வேண்டும்.
அப்பப்பா! தர்மத்தை கடை பிடித்தால், சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, இன்னும் குரு பெயர்ச்சி பின் நிச்சயம் பார்க்க தேவையே இல்லை என்பேன். அப்பா! சானியாவின் நல்லதுதான் செய்வான் என்பேன் அப்பா! எங்கள் அருகாமையில் இருக்கும் பொழுது, சனீஸ்வரனும் கூட எங்களை கேட்டுத்தான் விடுவானப்பா. எவ்வாறு பெயர்ச்சி ஆகின்றது என்பதை எல்லாம், விளக்கமாக ஏற்கனவே சொல்லிவிட்டேனப்பா. இதனால் அப்பா, பல பெயர்ச்சிக்கல் வந்து கொண்டேதான் இருக்கின்றது. என்ன தான் சாதித்தார்களப்பா. ஒன்றுமில்லையப்பா. பிச்சை எடுத்தவன், பிச்சை எடுத்துக்கொண்டேதான் இருக்கின்றான். ஒவ்வொரு பெயர்ச்சிக்குப்பின் உங்கள் எண்ணங்கள் மேன்மையடைய வேண்டும். சனியானவன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கின்றது. இதனால் அழிவுகள் அப்பா. நகர்ந்து முடியவே இல்லை அப்பா. நகர்ந்து செல்லும் போதே பலன்களும் அளிக்குமப்பா. இதன் ரகசியம் இப்போது இல்லை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteநல்ல பதில்கள். நன்றி குருவே. நன்றி ஐயா
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய நம ஓம் நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOm agatheyar appa
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete