​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 2 May 2025

சித்தன் அருள் - 1851 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-6 !


64. தமிழ்நாட்டில் பிறந்த பல பெண்கள் நிறப் பாகுபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் வேலைக்குச் செல்லும்போது. திருமணத்தின் போது கூட மணமகன் குடும்பத்தினர் எங்கள் தோல் நிறத்தைப் பற்றிச் பேசுகிறார்கள்.  பள்ளிகளல் தோல் நிறம் காரணமாக குழந்தைள் தீண்டாமையை எதிர்கொள்கிறார்கள். நான் இளமையாக இருந்தபோது அதை எதிர்கொண்டேன், இப்போது அடுத்த தலைமுறை அதை எதிர்கொள்கிறது. அகத்தியர் அய்யாவிடமிருந்து அவர்களுக்கு ஏதாவது இயற்கை ஃபார்முலா அல்லது மருந்தைப் பெற விரும்புகிறேன், அவர்களுக்குக் கொடுக்க ஏதேனும் காய்கறி அல்லது பழங்கள் அல்லது எந்த மருத்துவப் பயன்பாடும். மருந்தை சாப்பிட அல்லது பயன்படுத்த அகத்தியர் அய்யாவின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்!

அப்பப்பா! நிச்சயம் யாங்கள் இருக்கின்றோம் அப்பா! எண்ணங்களும் கூட அழகாகச் செய்யுமப்பா. நிச்சயம் உயர்வான எண்ணங்கள் வைத்தால், அழகாகவே இருப்பார்கள் அப்பா. என்றும் இளமையாகவே இருப்பார்கள் அப்பா. குழந்தை எப்படி தாவுகின்றதோ, அப்படியே மனம் இருந்துவிட்டால் அழகு மிளிருமப்பா. ஆனால், போகப்போக எண்ணங்கள் மாறுகின்றதே, அதே போல்தான் அனைத்தும் மாறுகின்றது. மனிதர்களிடத்தில் சக்திகள் இருக்கின்றது. அதை சரியாக உபயோகிப்பதில்லை. மனிதனை அடக்கி வைக்க, ஈசன் ஆபத்தான முறைகளை எல்லாம் கொண்டு வந்து இறக்கி கொண்டிருக்கின்றான் அப்பா. இன்னும், அறிவுகளே இல்லை அப்பா, மனிதனுக்கு. உண்மை நிலையை இன்னும் புரிந்திருக்கவே இல்லை, மனிதன். இவ்வுண்மை நிலையை புரிந்து கொண்டால், நிச்சயம் மனிதன் அமைதி காத்திடுவான். போதுமடா சாமி என்று சொல்லிவிடுவான். நிச்சயம் இரையை புரிந்துகொள்ளாதவன் மட்டுமே, அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன், இங்கு நடக்கின்றது, அத்திருத்தலத்திற்கு செல்லுங்கள், நிச்சயம், இவை அங்கு நடக்கும், இங்கு நடக்கும், நிச்சயம் என்னிடத்தில் இறை பேசுவான் என்றெல்லாம் அப்பா, இதனால் ஏதேனும் ஆகுமா? அவனால், எழுந்திருக்க கூட முடியாதப்பா. இறைவனுடைய சக்தி எப்பேர்பட்டது? உலகத்தை விட பெரியது. அதனால், மனிதனிடத்தில் இறங்கி சொல்வானா இறைவன்? அப்பப்பா! பொய்களப்பா, பொய்கள், மனிதன் எல்லாம். அவன் வாயை கட்டுவதற்க்கே, நாங்கள் சித்தர்கள் எல்லாம் இறங்கி வந்துள்ளோம். காட்டுவோம். இன்னும், நாடியை கூட குறை கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்பா! நிச்சயம் உயர்ந்துகொண்டே இருக்கும் நாடி. அப்பா! நிச்சயம், இது ஜீவநாடி! 

65. குருநாத! ஒரு சிறு சந்தேகம். நீங்களே இதற்கு முன் சொல்லியிருக்கிறீர்கள்! "திருக்குறுங்குடி" என்பது "திரு + குறுகி + குடி கொண்ட இடம்". இறை தன்னை குறுக்கி கொண்டு மனிதனுக்கு காய்ச்சி கொடுப்பதற்காக அமர்ந்த இடம் "திருக்குறுங்குடி" என்று. அப்பொழுது அந்த நேரத்தில் மனிதனுக்கு தன்னை காட்டிக் கொடுப்பதற்காகவும், ஆசீர்வாதம் செய்வதற்காகவும் இறைவன் தன்னை குறுக்கிக்கொண்டு பேசுகிற இடமாக இருந்தது என்று கூறியுள்ளீர்கள். 

அப்பப்பா! இதன் உண்மையை இன்னும் செப்புகின்றேன் அப்பா. ஒரு பத்து சதவிகிதம் மட்டுமே!

66. மொத்த மனிதர்களும், இப்படித்தான், இறைவனிடம் பேசியிருக்கிறார்கள் என்பது பொய் என்று கூற முடியாதல்லவா? நால்வர்கள் இருக்கிறார்கள்!     

அப்பப்பா! இதையும் கூட, அப்பொழுது, எப்பொழுது என்று விளக்குகின்றேன் நிச்சயமாக. அதிலும் 10% உண்மை. அதாவது 90% என்னவென்று பின்பு யான் உரைப்பேன் அப்பா.

67. சரி! ஏன் என்றால், நால்வர் சொன்னதை அனைத்தையும் நாங்கள் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்!

அந்த நால்வர்கள் கூட மனிதர்கள் என்று எவ்வாறு தீர்மானிக்கலாம் நீங்கள்? 

68. உலகில் மனிதனாகப்பிறந்து, இறைவழியில் சென்று தானே அந்த நிலையை அடைந்தார்கள்?

ஊர்வசி, ரம்பை போன்ற தேவதைகள் எல்லாம், ஈசனிடம் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று முறையிட்டு, இவ்வுலகத்தை காக்க ஒரு குழந்தையை கொடுத்து எங்களை முக்தி பெறச்செய் என்று முறையிட்டு, ஈசன் பார்வதி தேவி ஆசீர்வதித்து பிறந்தவர்கள்தான்.    

69.திருமணமான பெண்கள் மாங்கல்ய சூத்திரம் அணிந்திருக்கிறார்கள், தமிழ் கலாச்சாரத்தில் அது எப்போதும் அணிவது முக்கியம். ஆனால் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நம் தலைமுறையினர். அலுவலக உடை காரணமாக, சில நேரம் அதை அகற்றுவது அவசியம். வீடு திரும்பிய பிறகு பெண்கள் அதை மீண்டும் அணிவார்கள். அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் இதை அணிவதில்லை என்று நாம் நினைக்கும் போது, இதைச் செய்வது சரி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இது உணர்வுபூர்வமானது, அகத்தியர் அய்யா மற்றும் லோபா அம்மாவிடம் கேட்க விரும்புகிறேன், இது தவறா அல்லது சரியா. மாங்கல்யத்தின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

அப்பா! தாலி என்பது பயம் என்று பொருளப்பா. இதை, நீங்களே நிச்சயம் புரிந்து கொள்ளுங்கள் அப்பா! அப்பப்பா! இவை தன்னை எடுத்துவிட்டால் பயமில்லாமல் போகும். நிச்சயம், பின் எதற்கும் துணிவார்களப்பா! இதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை விலக்கினால்,  அனைத்து தவறுகளையும், புரிந்தே செய்வார்களப்பா. இது இல்லாமலிருந்தால், ஒழுக்கமே இல்லாமல் போய்விடும், வரும் காலத்தில், அப்பனே!

70.  கருணைக்கடலே, எனது தந்தையே, தாயுமானவரே, அடியேன் தங்கள் பாதம் பற்றி பணிந்து வேண்டுகிறேன்...இதுவரை தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளை, பாவங்களை மன்னித்து அருள்புரிந்திட வேண்டுகிறேன். மேலும் தாங்கள் எங்களுடனே இருந்து அனுதினமும் காத்து அனைத்து சூழல்களிருந்து மீட்டு வருகிறீர்கள், அதை நாங்கள் உணருகிறோம் அதற்கு கோடான கோடி நன்றிகள். தாங்கள் உரைக்கும் வாக்கை படிக்கும் பாக்கியத்தையும் அனுமதியையும் தந்த எனது தந்தைக்கு நன்றிகள்.

அப்பப்பா! அறிந்தும் தன்னில், இன்னும் விவரமான வாக்குகள் எல்லாம் உண்டு. கவலைகள் இல்லை. உங்கள் இல்லத்திற்கு வந்து சென்று கொண்டே இருக்கின்றேன். 

71.  கருணைக்கடலே, எனது தந்தையே, தாயுமானவரே, அடியேன் தங்கள் பாதம் பற்றி பணிந்து வினவுகிறேன்...தங்களின் உத்திரவை ஏற்று புலால் உணவை தவிர்த்துவிட்டேன். எனக்காக பலியிடப்பட்ட உயிர்க்கள் அனைத்திடமும் பாதம் பணிந்து மன்னிப்பை வேண்டுகிறேன். இந்த பாவத்தில் இருந்து விடுபட என்னை போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா?

அறிந்தும், பின்னர் கோமாதாக்களை பாதுகாக்க ஏற்பாடு செய்ய இன்னும் புண்ணியம் உண்டு. என்னிடத்திலே வருவார்கள். லோபாமுத்திரையுடன் ஆசிகள் உண்டு. காந்தனின் ஆசிகள் உண்டு. செந்தூரை நாடச்சொல் அடிக்கடி. கேட்டது கிடைக்கும். 

72. அன்னசேவை செய்யும் போது, மக்கள் கூட்டம் திடீர்ரென்று அதிகரிக்கும் சில சமயத்தில், கடிந்து பேசவேண்டிய சூழ்நிலைகள் வருகின்றது அப்பா. கட்டுப்படுத்த முடியவில்லை சிலர் செயல்பாடுகளை. உங்கள் அறிவுரை வேண்டும் தந்தையே. யார் மனதும் நோகாமல் எப்படி நடந்து கொள்வது.

அப்பா! அறிந்தும், கடமையை செய்ய வேண்டும் அப்பா. அவ்வளவுதான். நிச்சயம் தன்னில் கூட, பாபமோ, புண்ணியமோ, கடமையை செய். ஒழுங்காக! அப்பப்பா! கடமையை செய், வாயை அடக்கிவிட்டாலே போதுமானதப்பா!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.ஜீவ நாடி பார்க்க ஜானகி ராமன் ஐயா வை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete