​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 8 May 2025

சித்தன் அருள் - 1859 - அன்புடன் அகத்தியர் - கருவூரார் சித்தர்!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

8/5/2025 என்று மகாராஷ்ட்ரா மாநிலம்  நஸ்தங்பூர் சனி மகாராஜ் ஆலயத்தில் கரூவூர் சித்தர் சுவடியில் வந்து வாக்குரைத்தார். 

முழு வாக்கும் விரைவில் வெளிவரும். 

தனது வாக்கின் இடையே நாளை கரூரில்.. அதாவது கருவூரில் அவருடைய தலத்தில்... சித்த பெருமக்கள் வருவார்கள் என்பதை வாக்கில் தெரிவித்தார். வருகின்ற அனைவருக்கும் ஆசிகள் உண்டு என்று கூறியிருக்கின்றார் அந்த வாக்கினை மட்டும் தற்பொழுது அவசர உத்தரவாக தருகின்றோம். 

""""நிச்சயம் அதாவது பின் அறிந்தும் இதை தன்... நாளைய பொழுதில் நிச்சயம்...... (9/5/2025.)

பின் அறிந்தும் என்னுடைய தலத்திற்கு... அனைவரும் வருவார்கள் சித்தர்கள்... தேவாதி தேவர்களும் கூட வருவார்கள்... நிச்சயம் இந்திரனும் வருவான்.... ஆசிர்வாதங்கள் அனைவருக்கும்... ஆசிர்வாதங்கள் பின் கொடுப்பார்கள். 

நிச்சயம் அறிந்தும் அதாவது பின் கருவூரிலே தங்கி இருக்கின்றேன்.. அழகாகவே... பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்... அநியாயம் அக்கிரமங்களை எல்லாம். 

நிச்சயம் வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அவ்வாறு ஆசிகள் கொடுத்தால்... நிச்சயம் அறிந்தும் மனிதன் திருந்துவான் என்று பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். 

நிச்சயம் அதாவது பின் நாளைய  பொழுதிலும்... அங்கு வந்து நிச்சயம் அனைவரும் பின் அதாவது பின் ஒரு ஒளி வட்டமாக... நிச்சயம் தன்னில் பின் அனைவருக்குமே ஆசிகளாகவே நிச்சயம் சித்தர்கள் கொடுப்பார்கள்.... 

என்று தனது வாக்கின் உள்ளே கூறினார். 

அடியவர்கள் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்போம் என்று சொல்லி இருக்கின்றார் அதனால் முடிந்த அடியவர்கள் கருவூரில் சென்று வழிபாடு செய்து முன்னே செயல்களை செய்து முடிந்தால் அங்கு குருநாதர் கூறியபடி பானகம் நீர்மோர் வழங்கி புண்ணிய செயல்களை செய்து சித்தர்களின் ஆசிகள் பெற்று வரலாம்.

கரூவூர் சித்தர் சன்னதி, அருள்மிகு கல்யாண பசுபதேஸ்வரர் திருக்கோயில், கரூர், தமிழ்நாடு.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete