​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 4 May 2025

சித்தன் அருள் - 1855 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-8 !


80. அய்யா, வானத்தை எப்பொழுது பார்த்தாலும் ஒரு இனம் புரியாத மனநிலை ஏற்படுகின்றது. இந்த அண்டத்தில் உள்ள அதிசயங்களைப் பற்றியும், எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் மிகுதியாகிறது, அய்யனே. அடியனின் வேண்டுதலிற்கிணங்க தங்களால் முடிந்த அண்டம் அதிசயங்களைப் பற்றி கூறுங்கள், ஸ்வாமி.!

அப்பப்பா! என்னிடம் இருந்து கொண்டால் அனைத்தையும் யான் கற்பிப்பேன் அப்பா! இல்லாவிடில், மீண்டும், மீண்டும் பிறப்புக்கள் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அனைத்தும், யான் கற்பிப்பேன், என் பக்தர்களுக்கு. கவலை விடுங்கள். அனைத்தும் என் குழந்தைகளே! குழந்தைகளை யான் விட்டுவிடுவேனா என்ன? 

81. அய்யா, நார்த் சென்டினல் தீவும்( North Sentinel Island) அதில் உள்ளவர்கள் பழங்கால தமிழர்கள்தானா? அவர்கள் வெளி உலக தொடர்பில்லாமல் இருக்கிறார்கள்... அவர்களைப் பற்றியும், அவர்கள் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. தயவுகூர்ந்து சொல்லுங்கள், அய்யா.

அப்பப்பா! ஏற்கனவே கூறியபடி, எங்கிருந்து வாக்குகள் கூறவேண்டுமோ, அது போல், ஒருமுறை அங்கிருந்து வாக்குகள் செப்பினால்தான் புரியும். இங்கிருந்து செப்பினாலும் ஒரு பிரயோசனமும் இல்லை அப்பா!

82. குருநாதா! ஒரு சந்தேகம்! எப்படி உங்கள் மைந்தன் திரு.ஜானகிராமனை, அங்கு அழைத்து செல்வீர்கள்? அரசாங்கமே அதற்கு அனுமதி அளிப்பதில்லையே?

அப்பப்பா! பொறுத்திருந்து பாருங்கள் அப்பா! அகத்தியானால் முடியாதது ஏதேனும் உண்டா?

83. எஙகளுக்கு தெரிந்து அங்கு கோவில்கள் எதுவும் இல்லை!

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ஒளி படுகின்றதப்பா. அங்கும் ஒன்று இருந்ததப்பா. காலப்போக்கில் மறைந்தும், அடியில் தங்கிவிட்டதப்பா. இதனால், யான் சுற்றாத இடங்களாப்பா? 

(என்னவோ! ஏய் ஜானகி, பார்த்து இருந்துக்கோ அப்பா! இவர் சொன்னார்னு நீ கிளம்பி போனேனு வெச்சுக்கோ, மிலிட்டரி கைது பண்ணிடுவாங்க. மட்டுமல்ல, வெளி ஆட்கள் வந்தால் அவர்கள் (அங்கிருப்பவர்கள்) கொன்று விடுவார்கள்.)

ஜானகிராமன்: என்னவோ தெரியவில்லை அய்யா! ஏதோ ஒரு சூட்ச்சுமத்தில் அவர் சொல்கிறார். பார்ப்போம்.
 
84. சுவாமி கருந்துளை (black hole) என்பது உண்மையில் என்ன? அது பற்றி கூறுங்கள், அய்யா.

இப்போது இதற்கும் பதில் இல்லையப்பா. நீண்ட கதை போல் உள்ளது. கூறினால், ஒரு நாள் ஆகிவிடும். 

85. Parallel universe என்று அறிவியல் கூறுவது உண்மையா? அதைப் பற்றி கூறுங்கள், அய்யா!

அப்பா! இன்றும் பல இடங்களில் கதிர் வீச்சுக்கள் அதிகமாக உள்ளது. அவ்விடங்களில் இவை உள்ளதப்பா. இதனை பற்றி இன்னும் விளக்குகிறேன்!

86. அய்யா அண்டார்டிக் கண்டம் மர்மமாகவே உள்ளது. அங்கு இருக்கும் பனி கட்டியின் அடியில் என்ன மர்மம் தான் உள்ளது, அய்யா? அது தான் மறைந்த குமரிக்கண்டத்தின் பகுதியா? அல்லது சம்பாலா நகரம் அதற்குக் கீழே உள்ளதென்று கூறுவது உண்மையா? சுவாமி!

அப்பப்பா! இப்பொழுது இல்லை. காத்துக்கொண்டு இருக்கின்றோம். அப்பா! இன்னும் உண்மைகள் சொன்னால், இப்படியெல்லாம் உலகம் இருக்கின்றதா என கூறுவீர்கள். பக்குவப்படுத்தி, பக்குவப்படுத்தி, யான் வாக்குகள் செப்புவேன். 

87. அய்யா, சீனாவின் பழங்கால வரலாற்றிலும் "ராக்ஷஸர்கள்" என்று ஒரு இனம் இருந்ததாகப் பதிவு இருக்கிறது. ராக்ஷஸர்கள் உண்மையில் யார்? அவர்களைப் பற்றி கூறுங்கள், அய்யா.

அப்பப்பா! அங்கு பல வழிகளிலும், ஈசன் அங்கு இருக்கின்றான் அப்பா. அப்பா! ஈசனுக்கும், ராட்சஸ தேவதைகளுக்கும் சண்டை நடந்த பகுதியப்பா. ஈசன் இன்னும் அமைதியாக இருக்கின்றான். இடையிடையே, இன்னும் அழிவுகள் வரப்போகின்றது. அப்பொழுது புரியும். ஆனாலும், ராட்சச தேவதைகள் ஈசனிடம் மன்னித்துவிடுங்கள் மக்களை, என்று. பலப்பல ரிஷிகளும் வாழ்ந்து வருகிறார்களப்பா. இதை பற்றியும் கூட அங்கே சென்று ரகசியமாக சொல்வேனப்பா!

(இன்னும் சீனா ஒண்ணுதான் பாக்கி போலிருக்கு!)

88. அய்யா கோமுகி சக்கரம் வட இந்தியாவில் கிடைக்கிறது. அதன் சக்தி என்ன? அதன் மகிமை என்ன? சுவாமி!

இதனை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை பின்னர் கூறுகிறேன், முதலில் அனைவரின் இல்லத்தில் வைக்கச்சொல் இதனை. 

89. அய்யா, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் asteroid belt உள்ளது. பல கற்கள் துண்டு துண்டுகளாக உள்ளன. அது முன்பு ஒரு கிரகம் ஆக இருந்து பின்னர் அழிந்ததா? அப்படி என்றால், அதன் வரலாறு கூற முடியுமா, அய்யா? அல்லது அது ஆரம்பத்திலிருந்தே கற்களாகவே இருந்ததா? சுவாமி.

அப்பப்பா! நிச்சயம் கூற முடியுமப்பா! இப்பொழுது இல்லையப்பா! பொறுத்திருக்கச் சொல் அப்பா!

90. அய்யா, காலத்தால் அழிந்த, அழிக்கப்பட்ட கலைகள் மீண்டும் வருமா, தங்கள் கருணையினால்? உடலில் உள்ள சக்ரங்களைச் சரிசெய்யும் கலைகள் பற்றியும் அறிய ஆவல்.

அப்பப்பா! நிச்சயம் வருமப்பா. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் இதை கற்பிக்க முடியுமப்பா! அனைவரையும் ஒன்று கூட வைத்து, அனைத்தையும் கற்பித்து, அனைத்தையும் உணரும் திறனை யானே கொடுக்கின்றேன்.  பொருத்திருக்க வேண்டும், இதற்கும் கூட.

91.  அய்யா எகிப்தில் உள்ள பிரமிட் உண்மையில் என்ன பயனிற்காக கட்டப்பட்டது? அதன் உண்மை வரலாறு என்ன?  அதன் தோற்ற காலம் என்ன, அய்யா?

அப்பா! அங்கேயே சென்று வாக்குகள் செப்புவேன். பொறுத்திருக்க! 

(ஜானகிராமா! என்ன கேட்டாலும் அங்கு போய் வாக்குகள் செப்புவேன் என்கிறார். எதுக்கும், நல்ல பாஸ்போர்ட்டும் கோடிக்கணக்கான ரூபாயும் கைவசம் வைத்துக்கொள்!)

92. அய்யா, பாகற்காய் சாப்பிட்டால் சித்த மருத்துவம் முறிந்து விடும் என்று கூறுகிறார்கள். நீங்கள் கூறியபடி தினமும் காலையில் பாகற்காய் சாறு குடித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவந்தேன் ஒரு வாரத்திலேயே. ஆனால் சிறுநீரகத்திற்கு மருந்தும், மூட்டு வாதத்திற்கு மருந்தும் (மூலிகைகள்) சாப்பிடுகிறேன். பாகற்காய் சாப்பிடுவதால் இந்த மருந்துகளின் பயன் முறிந்து விடுமா? அடியேன் ஐயத்தை போக்குங்கள், ஸ்வாமி.

அப்பப்பா! தேர்வை எழுதிக்கொண்டே இருக்கச்சொல். புரியும் அப்பா, அவந்தனுக்கு! சில கர்மாக்களை யானே நீக்கிக்கொண்டு இருக்கின்றேன் அவனுக்கு. பொறுத்திருக்கச்சொல்.

93.  புதிய இரத்தம் உடலில் சுரக்க என்ன மூலிகை அல்லது உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், அய்யா?

மாதுளையை காலை மாலையிலும் எடுத்துக்கொள்ளவும். ஏற்கனவே உரைத்த சில கீரை வகைகளையும் எடுத்து வரச்சொல். 

94. அய்யா வயிற்றில் உள்ள ஜீரண அக்கினியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும், அய்யா?

அப்பப்பா! இதற்கும் நான் முன்னரே சொல்லிவிட்டேன். இன்னும் சொல்ல வேண்டுமா?

95. அய்யா, திருத்தணியில் ஒரு மிகப் பழமையான கன்னி கோவில் உள்ளது. அதன் சிறப்பு பற்றியும், அந்தக் கோவிலுக்கும் போகர் பெருமானுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா, அய்யா? அதைப் பற்றிக் கூறவும், அய்யா.

அப்பப்பா! வருவேனப்பா! சொல்வேனப்பா! நிச்சயம் உண்டு! உண்டு! 

96. அய்யா, இந்த பாரத பூமியில் பல காவியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சித்தர்கள் பாடல்கள் என்று பல முன்பே படைக்கப்பட்டு விட்டது மனிதர்களின் நன்மைக்காக. இக்கலியுகத்தில் அதுபோன்ற ஏதும் புராணங்களோ, இதிகாசங்களோ, படைப்புகளோ யார் மூலமும் படைக்கப்படுமா, அய்யா? எதிர்காலத்தில்?

அப்பப்பா! குப்பைக்குளங்கள் நிறைய சேர்ந்துவிட்டது. பொறுத்திருங்கள். யாங்களே எடுத்து வருவோம். அப்பா! சித்தர்கள் விளையாட்டு போகப்போக புரியும். 

97. என் குடும்பத்தினர் அசைவம் உண்ணுகிறார்கள் அதை எப்படி மாற்றுவது அதற்கு ஒரு வழி காண்பிக்க வேண்டும். நான் அதை எதிர்த்தால் வீட்டில் சண்டைதான் வருகிறது தாங்கள் ஒரு வழிகாட்ட வேண்டும்.

அப்பப்பா! இறைவன் கொம்பை எடுத்தால் திருந்துவார்களப்பா. பின் வாயால் சொன்னால் புரியாதப்பா. அப்பா! கையால் தடியை எடுத்தால் தான் நிறுத்துவார்களப்பா. அதனால், சொல்லத் தேவை இல்லை.

98.  கருணைக்கடலே, எனது தந்தையே, தாயுமானவரே, அடியேன் தங்கள் பாதம் பற்றி பணிந்து வினவுகிறேன். வினாவில் பிழையிருந்தால் மன்னித்தருளுங்கள்,  அன்று மன்னர்களை வழிநடத்தி தர்மத்தை நிலைநாட்டினீர்கள் ஆனால் இன்று நாட்டை ஆளுபவர்களே அதர்ம வழி நின்று ஆணவத்துடன், பேராசையுடன் ஆட்சி செய்யும் போது, அவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள எளிய மக்கள் என்ன செய்ய வேண்டும். தயவுடன் நல்வழி காட்டுங்கள்?

நிச்சயம், பலப்பல பக்தர்களை ஒன்று சேர்த்து, அவர்கள் வழியே, அனைத்தையும் மாற்றத்தான் போகின்றோம்! அதனால், பொறுத்தார் புவி ஆள்வார் என்றெல்லாம் இருக்கின்றதே! 

99. தவறு செய்கிற, கொள்ளையடிக்கிற, எளிய மனிதர்களை துன்புறுத்துகிற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிற மனிதர்களுக்கு, என்ன தண்டனை கொடுக்க வேண்டும்?

அப்பப்பா! இதை பற்றி, இப்பொழுது சொன்னால், வேண்டாமப்பா! அப்பப்பா! எதை என்றும் புரிய! சித்தர்களின் விளையாட்டை பாருங்கள் அப்பா! 

100. இவ்வுலகில் நடக்கின்ற அத்தனை தவறுகளையும் வளர்த்துவிடுவது, அமைதியாக எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கும், இறைவனும், சித்தர்களும் தானே காரணம்?

அப்பப்பா! நிச்சயம் முதலில் மனிதர்கள்தான் காரணம்! ஒருவனை யார் தூக்கி விடுகிறார்கள் என்று பார்த்தால், நீங்கள்தான் காரணம் அப்பா! ஒருவன் தவறு செய்கின்றான் என்று தெரிகின்றது. தெரிந்தும் அவனை, தூக்கி விடுவோம் என்று! நீங்கள்தானப்பா! நிச்சயம் வாக்கை அழகாக இடுக்கின்றீர்கள் அப்பா! இதனால், நீங்கள்தான் வருத்தமடைய வேண்டுமப்பா. இதற்கு தெளிவாகவே விளக்கம் அளிக்கிறேனப்பா. நீங்களே உண்மை என்று சொல்வது, கடைசியில், நீங்களே பொய் என்று தீர்மானிப்பது! எப்படியாப்பா, நியாயம்? நிச்சயம் இதற்கு பதில் இன்னும் உரைத்துக் கொண்டேதான் இருப்பேன். இன்னும் ஒரு முறை கேள்!   

101. ஆகவே, கலியுகத்தில் அதர்மம் வளர காரணமே, சக்தி இருந்தும் அதை கெட்டவர்களிடம் காண்பிக்காத இறைவனும், சித்தர்களும் தானே காரணம்!

அப்பா! மனிதனுக்கு பல வழிகளிலும் கூட உரைத்து வருகின்றோமப்பா! சரியான கேள்வியே இது. ஆனால், அதை கூட உபாயயோகப்படுத்த தெரியவில்லையே. யான் சொன்னேனே, தீபத்தை ஏற்றச்சொல். மனித குலத்தை காக்க வேண்டும் என்று! பின் கேட்டார்களாப்பா? இதை செய்தார்களா என்று நீ கேட்டுவிட்டு பின்பு உரை, பார்ப்போம். இல்லை என்றுதான் பதில் வருமப்பா!  நிச்சயம் அப்பா! யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன் அப்பா! உண்மையை சொன்னால், நிச்சயம் ஏற்கமாட்டார்களப்பா! ஆனால், சித்தர்களை, கேள்வி கேட்க வருவார்களப்பா! முதலில் யாங்கள் சொல்லியதுபோல் நடந்தால், குற்றங்களே இல்லையப்பா! இவ்வுலகத்தில். நாங்கள் செய்யச் சொன்னால், பொய் என்று உரைக்கின்றானே மனிதன், புத்திகெட்ட மனிதன். மனிதனே. மனிதனை தின்னுகின்றானே, அப்பப்பா! மீண்டும் சொல்லுவேன். மீண்டும் ஒருமுறை கேள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. 🙏 அப்பா தங்கள் பாதங்களில் நன்றிகள் சமர்ப்பணம் அப்பா.. அப்பா குகை முருகன் கோவில் பற்றியும் குகையில் உள்ள சிவலிங்கம் பற்றியும் விவரித்து சொல்லுங்கள் அப்பா.

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete