​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 7 May 2025

சித்தன் அருள் - 1857 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-10 !



117. மதுரையில் ஈசன் 7 கடல்களை அழைத்த வாவி எங்கு இருக்கிறது என்று ஐயன் கூற வேண்டும்

ஏழு கடலிலும் சென்று சித்தர்களை நினைத்து முதலில் பசும்பாலை ஊற்றி வரச்சொல்! படியே மேற்பரப்பில் நிற்கும். பின் இதனை உரைக்கின்றேன்!

118. மொத்தமே இந்தியாவை சுற்றி மூன்று கடல்கள் தான் உள்ளது. மீதி நான்கு கடலுக்கு எங்கு செல்ல?

அப்பப்பா! எப்படி கேட்கின்றாய் இதை! இங்கு போல் பல லோகங்களிலும் (மனிதர்கள்) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கும் இது போல் உள்ளதப்பா. ராமேஸ்வரத்தில், கன்னியாகுமரியில், மேற்கு வங்காளத்தில், பத்மநாபனின் ஆனந்தபுரத்தில் (திருவனந்தபுரத்தில்), முன்னீஸ்வரம் (கர்நாடகத்தில்), சூரியனுக்கான இடம் (குஜராத்தில்) இங்கெல்லாம் போய் ஊற்றச்சொல். இவை எல்லாம் மனிதனுக்கு புரியாது. 

119.எங்களுக்கு ஒரு கோசாலை ஒன்று உள்ளது. இந்த கோ சாலை ஆரணி அருகில் சேதாரம் பட்டு கிராமத்தில் உள்ளது. அங்கு 45 பசுக்கள் உள்ளது. ஆனால் போதிய இடம் இல்லை பராமரிக்க. கருணைக் கடல் அகத்தியர் அங்கு ஆசீர்வாதம் அளித்துள்ளார். அங்கு எங்களுக்கு ஒரு நல்ல இடம் வேண்டும் குருவின் அருளால். ஓம் அகத்தீசாய நமஹா. 

அப்பப்பா! யானே அங்கு காவல் காத்துக் கொண்டு இருக்கும் பொழுது உனக்கென்ன கவலை? நிச்சயம் ஏற்பாடு செய்கின்றேன்! 

120. Can you kindly explain the significance & importance of bhakti through Carnatic music and devotional songs? Seek your blessings in understanding the meaning of songs by Saint Thyagaraja, Muthusamy Dikshithar, Syama Sastry, Swathi Thirunal, Purandara Dasar, Annamacharya

அப்பா! இதன் ரகசியத்தை சொல்லுகின்றேன்! பொறுத்திருக்கச்சொல்.

121. Can you kindly explain the concept of energy powerhouse with respect to Temple Vimanas and how we should have darshan and worship Temple Vimana?

அப்பப்பா! இதன் ரகசியத்தை, பல திருத்தலங்களில் வைத்து சொல்லுகின்றேன். திருத்தலம்! திருத்தும் + தலம். கோவிலுக்குள் போகும் பொழுதே, கோபுர வாசலில், ஒரு ஐந்து நிமிடம் த்யானம் செய்யச் சொல்லப்பா. நிச்சயம் செப்புகின்றேன்! .  

122. Is it true that Sanatana Dharamam spread from Bharatam across the world across ancient civilizations like Incas in South America, Mayans in Central America and Egyptians as we find similarities in rituals, building pyramids similar to our temples, worshipping sun god and elements of nature?

சனாதன தர்மத்திலிருந்து தான் அனைத்தும் உருவாகின்றது. இதை யார் ஒருவன் கடை பிடிக்கிறானோ, அவன் வழி அந்த தர்மம் நீடுழி வாழுமப்பா. யார் ஒருவர் சரியாக பயன் படுத்தவில்லையோ, அது மாறிக்கொண்டே போகுமப்பா.  

123. why are we taking birth as a human and how do we realize our duties as decided by God as we forget everything and get into Maya (illusion)?

அனைத்தும் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பா. சொலலாமல் விட மாட்டேனப்பா! என் வாக்குகள் இன்னும் கோடிக்கணக்கில் இருக்கின்றதப்பா. நிச்சயம் அதை படிக்கத்தான் நீங்கள் எல்லோரும் இறுக்கப் போகின்றீர்களா என்பது தான். 

124. Can you kindly explain the connection & significance between Tirumala, Ahobilam and SriSailam? Some people say that AdiSeshan's head, body and tail represent the mountain range running between these places.

அப்பப்பா! இதைப்பற்றி அவ் அவ் தலங்களில் விவரிப்பேன். கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி இருக்கின்றதல்லவா. அது அங்குதான் விழுகின்றதப்பா. இத்திருத்தலங்களுக்கு சென்று கொண்டே இருந்தால் வாழ்க்கை பற்றி தெரியுமப்பா. விசேஷ தலங்களாப்பா இவை. பாவத்தை போக்கும் தலங்களப்பா. புண்ணியங்கள் இருந்தால் தான் அங்கு சென்று பல தரிசனங்களை காண முடியும்.  

125. To earlier question on Vedic Mathematics, we got the answer as 0=0 (Question 48, episode 1302). Can you kindly explain in detail?

அப்பா! பூஜ்யத்துடன் எதை சேர்த்தாலும், புண்ணியமே! பூஜ்யத்துடன் சேர்த்துக் கொண்டே இருந்தாலே மதிப்பு அதிகம் தான் என்பேன். நிச்சயம், நானே இங்கு பூஜ்யம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பா! இதழ் முதலில் தெரிய, அதற்கு என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போம்.

126. அப்படியானால், ருத்திரத்தில் கூறியுள்ளார்கள், தமிழில் சொல்வதானால் "உள்ளானே ! இல்லானே!" என...

அப்பப்பா! பூஜ்யத்தை இறைவன் என்று வைத்துக் கொள்வோமே! அப்பப்பா! பூஜ்யம் என்பது யாருக்கும் பிடிக்காதப்பா, இவ்வுலகத்தில். பூஜ்யத்தை பற்றி எடுத்துரைத்தாலும் அதற்கு மதிப்பில்லை என்று சொல்லிவிடுவார்கள் அப்பா! 1, 2, 3, 4, 5 என்று சொல்லிக்கொண்டே போனால் அழகாக மகிழ்வார்களப்பா! கடைசியில் இதை கூட்டி கழித்தாலும், பூஜ்யம் ஆகிவிடுமப்பா, வாழ்க்கை. 

127. See many elderly people suffering from Central Nervous system (CNS) disorders like Dementia, Alzheimers and Parkinsons. Seek Agasthyar peruman's solution on avoiding/controlling these disorders. 

அப்பப்பா! மனித உடலில் சில துகள்கள் இருக்கும் அப்பா! ஒரு சில காலத்துக்குப்பின் அவைகள் இறந்து விடுகின்றதப்பா! அந்த துகள்கள் இறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சில மூலிகைகளை யான் சொன்னேன். அதை ஒருவரும் முதல் நான்கு வருடம் வரை உட்கொண்டு வந்தாலே போதுமானது. ஆனால் யாரும் உட்கொள்ளவில்லையே! அவனையும், பாவத்தை அனுபவிக்க வேண்டுமென்று இறைவன் இங்கு அனுப்புகின்றான். அதனால், அவர்களுக்கு நிம்மதியே மாறிவிடுகின்றது. மீண்டும் இதன் ரகசியத்தை பின்னர் செப்புவேன்.

128. Also, in SiththanArul website, there was a reference to consuming 100 year old Vilva tree leaves for Cancer cure/treatment. How do we identify such trees and its age?

அப்பப்பா! நிச்சயமாக அது ஓரிடத்தில் இருக்கின்றது. நேரடியாக பறித்து அருந்திவிட்டால் பாபங்கள் சேர்ந்துவிடும். அதற்கான மந்திரத்தை செப்பித்தான் பறிக்கவேண்டும். பல ஆலயங்களையும் சென்று தரிசித்துவிட்டு வரச்சொல், கூறுகிறேன். அப்பா! இன்னும் இருக்கின்றதப்பா. அதை உட்கொண்டால், தெய்வீக சக்தி அதிகரிக்குமப்பா. தெய்வமே கண்ணுக்கு தெரியுமப்பா. இப்பொழுது கேட்டாயே, அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிய வருமப்பா! அனைத்தும் உடனடியாக கிடைக்க வேண்டுமென்றால் எப்படியப்பா? அதனால் தான் புண்ணியங்கள் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.  

129. வினை ஏற்ப பலன் கிடைக்கும் போது சில இடங்களில் சித்தர்கள் ( நீங்க) சூட்சம நிலையில் வழிகாட்டுவோம் சொல்லி இருக்கீங்க. அதற்கு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கீங்க.. மனம் ஒன்றி விழிப்பு நிலையில் இருக்க என்ன செய்ய வேண்டும் அப்பா?

கலியுகத்தில் மனிதனாக பிறந்தாலே பாப்பம் அப்பா! பாபத்திலிருந்து புண்ணிய பாதைக்கு மனிதனை அழைத்து வருகின்றேன். பொறுத்திருங்கள் அப்பா. 

130. முதல் தர புண்ணியம் அடுத்தவருக்கு இறை வழிபாடு/ சிந்தனை விசயங்கள் சொல்வது சொல்லி இருக்கீங்க .இந்த கோவில் சென்று வழிபாடு செய்யுங்க என்று சொல்லும் போது அவங்க கர்மா நமக்கு வருமா அப்பா ?

அப்பப்பா! சிவபுராணத்தையும், கோளறுபதிகத்தையும் பல புண்ணிய தலங்களுக்கு சென்று பலருக்கும் கொடுக்கச்சொல். பிறகு உரைக்கின்றேன் இதன் ரகசியத்தை. தெரிந்து கொள்வார்கள் அவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. அகத்தியருக்கு பல கோடி நன்றி.
    எனது ஐயத்துக்கு விடை கிடைத்தது.
    ஓம் அகத்தீசாய நமஹா.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete