​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 9 May 2025

சித்தன் அருள் - 1860 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-11 !



131. உலகோர் உய்ய, துளசி செடியின் மகத்துவத்தையும்,வழிபடும் முறையையும் தங்கள் திருவாய் மலர்ந்தருள வேண்டுகின்றேன் .

அனைத்து கிரகங்களின் சக்தி கூட அதில் இருக்கின்றது. இதை உட்கொண்டால் மிக்க நன்று. தீபம் ஏற்றி அதை சுற்றி வந்தாலே போதுமானதப்பா. முன்பெல்லாம் செய்தார்கள் அப்பா. இப்பொழுது யார் செய்யப்போகின்றார்கள் அப்பா. நிச்சயம் நேரங்களே கிடைக்கவில்லை. அகத்தியஞ் சொன்னாலும், ஓடிக்கொண்டே இருப்பார்கள் பணத்தின் பின்னே. பணத்தின் பின்னே ஓடினாள் பணம் கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் கொடுப்பான் அப்பா!  அவ்வளவுதான் வாழ்க்கை. முடிந்துவிட்டது.
 
132. ஒருவரின் ஜென்ம நட்சத்திர நாளன்று எவ்வித வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுங்கள் அப்பா. 

அப்பப்பா! தெரிந்த வழிபாட்டை கடை பிடிக்கச்சொல். பின் வந்து கேட்கச்சொல். அனுபவம் மூலம் கற்பதே சிறந்தது.

133. குருநாதரை பணிகிறேன்.சிறுநீரக செயலிழப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவற்றிற்கு என்ன செய்ய வேண்டும் குருவே!

அப்பப்பா! இவை எல்லாம் விதியில் எழுதப்பட்டிருந்தால் தான் அப்பா!  இவை எல்லாம் விதியிலே செயல் இழக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கும் பொழுது, மாற்றுவது கடினமப்பா.  இருப்பினும் யங்களே மாற்றுவோம். யாங்களே மனது வைத்தால் தான், அதுவும். 

134. மாதவிலக்கு  காலங்களில் மந்திரம் ஓதலாமா ஐயா.

அப்பப்பா! சித்தனுக்கு எதுவுமே தேவை இல்லை, அன்பு மட்டுமே பிரதானமானது.

135.நீங்கள் ஒருவருக்கு வாக்கு சொல்லும்போது பணத்தில்  கவனமாக இருங்கள் என்று சொல்லியும் அவர்கள் பணத்தை மற்றவரிடம் ஏமாந்தார்கள் என்றால் அது அவர்களுடைய கர்மவினையை கழிப்பதற்கா அல்லது  பேராசையின் விளைவா அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு கடவுள் ஏற்படுத்திய சூழ்ச்சி என்று சொல்லலாமா ஐயா

அப்பப்பா! பணம் கொடுத்தால், ஏதாவது ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். அதுவும் செய்வதில்லை. உயிர் கொலை செய்யாதீர்கள் என்று சொல்கின்றோம். அதை கூட கேட்பதில்லை/செய்வதில்லை. இவை இரண்டையும் செய்யாதவர்களிடமிருந்து இறைவனே பிடுங்கிக்கொள்வான் அப்பா! கோடிக்கணக்கான ரூபாய் ஏமாறுவனப்பா! ஒரு ஐம்பது ரூபாய் தானமாக எடுத்து வைக்கச்சொல். மாட்டானப்பா. இவ்வாறு மனம் இருக்கும் போது எப்படி பணமிருக்கும், கூறு அன்பு மகனே!

136. 8ம் அதிபதி தசை பற்றி சொல்வீர்களா ஐயா

அப்பப்பா! இதுவும் நன்றுதானப்பா! அனைத்தும் புரிய வைப்பானப்பா!  இறைவனை தெரிந்து கொள்ளலாமப்பா. இறைவன் நிச்சயம் கண்ணுக்கு தெரிவானப்பா. 

137. அகத்தியர் அப்பா லோபமுத்ரா அன்னை பாதமே போற்றி அப்பா பிரம்மர்படைக்கும் கடவுள் விஷ்ணு காக்கும் கடவுள் சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறுகிறார்கள் ஆனால் ஒவ்வொரு யுகத்திற்கும் விஷ்ணு பகவான் அழிக்கும் கடவுளாக இருக்கிறார் அதனுடைய விளக்கம் கூறுங்கள் அப்பா

அப்பப்பா! அழகாகவே பிரம்மன் படைத்து அனுப்புகிறான். விஷ்ணு காக்கின்றான். சேர்த்துக்கொண்டு கர்மாவை அழிப்பவன் ஈசன். புரிந்து கொண்டாயா? அழிப்பவனல்ல ஈசன், கர்மத்தை வேரோடு பறித்து எறிபவன்தான் ஈசன். ஆனால் தவறாக எண்ணிவிட்டார்கள் மனிதர்கள்.  இதையே புரிந்து கொள்ளவில்லை மனிதர்கள் அப்பா!. நீ கேட்டாயே கேள்விகள், அய்யயோ! 

138. இப்படிப்பட்ட அடியவர்களை நீங்கள் வைத்திருக்கும் பொழுது, இதற்குமேல் கேள்விகளை எப்படி கேட்க முடியும்?

அப்பப்பா! ஈசன் மிகவும் கருணை மிகுந்தவன். ஆனால் ஈசனை உணர்ந்து கொள்வதற்கு, ஆள் இல்லை அப்பா! ஆள் இல்லை.

139.அகத்தியர் ஐயாவிற்கு வணக்கம் 🙏 ஐயா, நவகிரகங்கள் அதன் வேகத்தில் மற்றும் பாதையில் சுற்றவில்லை எனும்போது பூமியில் நாங்கள் குறித்து வைத்து வழிபடும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகள் சரியா ஐயா.. இதன் விளக்கம் பின்னர் உரைப்பேன் என்று முன்பே சொல்லி இருந்தீர்கள் 🙏

அப்பப்பா! அனைத்தும் பொய்யப்பா! என்ன! இறைவனை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். 

140. அகத்தியர் ஐயாவிற்கு வணக்கம் 🙏         மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் ஆன்மாவிற்கென்று தனி உலகம் உள்ளதா அவைகளின் மறுபிறப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

அப்பப்பா! உண்டு! விலங்குகளுக்கும் ஒரு மனது உண்டப்பா. ஆனால், மனிதனுக்கு இல்லையே, அம்மனது!  நிச்சயம். ஒரு துகள் உண்டு. அது தான் தீர்மானிக்கிறது. அந்த துகள், காந்தமான இறைவனிடம் ஓட்டவேண்டும். ஒட்டவில்லை ஆனால், அது அங்கும், இங்கு ஓடி அலைந்து, மறுபிறப்பெடுக்க ஒரு உடலை தேடும். இதனை விஞ்சான ரீதியாக பின்னர் விளக்குகின்றேன்.  இதன் விளக்கத்தை இப்பொழுது கூற முடியாது. சிறிது சிறிதாக பின்னர் விளக்குகின்றேன்!

141. மூடநம்பிக்கையை பற்றி கூறுங்கள் ஐயா..எதுவெல்லாம் மூடநம்பிக்கை.. நாள் நட்சத்திரம் பார்க்கக்கூடாதா?

அப்பப்பா! பழையது எது? புதியது எது? குல தெய்வத்துக்கு உயிர் பலி கொடுத்து, அதை இவன் தின்று கொண்டிருப்பானப்பா !  எவ்வாறு நியாயம் அப்பா? அதாவது, மனிதன் அனைத்து தவறும் செய்துவிட்டு இறைவனிடம் பழி போடுவான். இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

12 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha
    Image is not showing properly. Please check
    Chitra

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. நன்றி.
    Kindly ask about the war going on and the means to stop on our part like the one, lighting Navagraha dheepam.
    We pray to stop war, killing innocent people on both sides.
    Thank you.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Sir please ask about Orukodi naathar at Orukodi Village temple nearby Thirukkovilur

    ReplyDelete
  8. ஆத்ம உலகத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன? கருட புராணத்தில் வரும் தண்டனைகள் உண்மையா?

    ReplyDelete
  9. ஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  10. ஓம் சிவாய நம ஓம் அகத்தீசாய நமஹ ஐயா வணக்கம் இப்பொழுது புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் பகுதியில் அதிகம் ஐயா. தயை கூர்ந்து ஸ்ரீ அகத்தியர் ஐயா விடம் தீர்வு கேட்டு சொல்ல வேண்டுகிறோம ஐயா

    ReplyDelete
  11. தங்களுக்கு உடல்நிலை சரியில்லையா அக்னிலிங்கம் அன்பரே?

    ReplyDelete
  12. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete