142. தெருவுக்கு தெரு மனிதர்கள் கோயில் கட்டிவிட்டனர்..ஆனால் பழமையான கோவிலுக்கு செல்லவே மனம் நாடுகிறது.மனிதர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் இறைவனுக்கும் பழமையான கோவிலில் இருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு என்ன ஐயா!
அப்பப்பா! சொல்லிவிட்டேன். ஏன் திருத்தலத்தை கட்டுகிறான் என்றால், முதலிலேயே நீ கேட்டாயே, ஒரு வங்கியில் முதலில் துவக்குவார்களப்பா. அதாவது அதில் பணத்தை போடுவார்களப்பா. அப்பா! நீயும் நானும் பங்கிட்டு கொள்வோம் என்று. இறைவனை அங்கு பேரம் பேசுவார்களப்பா! அதனால் தான் நிச்சயம் கட்டுகின்றார்களப்பா. (யான்) பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஒருவன் சொல்லுவான், இறைவன் ஆலயத்தை கட்டிவிட்டு. சேமிப்பு கணக்கில், அனைத்தையும் போடுவோம். நிச்சயம் பலப்பல கருப்பு பணங்களும் வரும்! அதன் பின்னர் பிரித்துக் கொள்வோம் அப்பா, என்று. இதையும் நான் கண் கூடாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இறைவனும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பா.
143. பஞ்சபூத ஸ்தலங்கள் சென்று வந்தபிறகு தனி வாக்கு கூறுவேன் என்றீர்கள் பொதுவாக்கில், பஞ்சபூத ஸ்தலங்கள், ஆறுபடை வீடு குடும்பத்தோடு செல்வதற்கு அருள் புரிய வேண்டும் ஐயா
அப்பா! அருள் புரிந்துவிட்டேன். சோம்பேறிகள் அப்பா!
144. சிரமப்படுகிறவர்களுக்கு இறைவன் உதவுவதில்லை என்பதை விட கெட்டவர்களுக்கு எந்தவித தண்டனையையும் தருவதில்லை என்பதுதான், வாழ்க்கையில் கடவுளின் இருப்பை சாதாரண மனிதன் கூட சந்தேகப்பட வைக்கிறது!
அப்பப்பா! பிறனை கெட்டவன் என்று எப்படி தீர்மானிக்கிறான் மனிதன்?
(ஒருவனுடைய நடவடிக்கை வைத்து).
அப்படியில்லை அப்பா! ஒரு திருடன் என்றால், ஒரு வருடம் கண்காணித்து தான் திருடுவான் அங்கு. பின்னர் திடீரென்று அவனை கெட்டவன் என்று சொல்லிவிட்டால், எப்படி நியாயமப்பா!
(அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் ஒருவன் கூட...............)
அதை பற்றி இப்பொழுது பேச வேண்டாம். நல்லவர்களையும் நாங்கள் உயர்த்தி விடுகின்றோம். அதனால் தான், இவ்வாக்குகளை அப்படியே பின் பற்றுங்கள் என்று கூறுகிறோம். என் பக்தர்களை யான் அமர்த்திவிடுவேன் அப்பா! மேலிடத்தில் அப்பா. போதுமா?
(உங்கள் பக்தர்களில் இருந்து நல்லவர்களை தேர்ந்தெடுத்து, தமிழகத்தை ஆட்சி பண்ண வையுங்கள், முதலில்.....)
அப்பப்பா! நிச்சயம் யானே அமைத்து வைப்பேன்! ஆனாலும், யான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமப்பா. கேட்க மாட்டார்களே அப்பா. அங்கு செல்லலாமா? இங்கு செல்லலாமா? பணத்தை, பெண்ணை தேடலாமா? பணத்துக்கு பின்னாலே போய் கொண்டிருக்கின்றான் அப்பா. ஆசைகளப்பா! இன்னும் அவை வேண்டும்! இவை வேண்டும்! பின் நாட்டை பற்றி கவலைப்படுவதே இல்லை. நாட்டை பற்றி கவலைப்படுபவர், பின் சொல்பவர்களை என்னிடம் வரச்சொல் அப்பா! உயர்த்துகின்றேன் அப்பா!. யாங்கள் உயர்த்துவதற்கு தயார். ஆனாலும், மனிதன், எங்களுக்கு பணங்கள்தான் தேவை என்று நிற்க, எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றான் பக்தர்கள் கூட.
(அப்படியானால் நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்! ஒருத்தனும் யோக்கியன் இல்லை இவ்வுலகத்தில்)
அப்பப்பா! இதை எப்பொழுதோ ஒரு முனிவன் சொல்லி விட்டானப்பா!, ராஜரிஷி! நீ வாயால் சொல்லு!
(இருந்துவிட்டு போகட்டும்! சித்தனுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்!)
அப்பப்பா! இங்கு மனிதன் யோக்கியனாகிவிட்டால், இறைவனுக்கு இங்கு வேலையே இல்லை. எங்களுக்கும் வேலை இல்லையப்பா. நாங்கள் ஏன் வந்து வாக்குகள் சொல்ல வேண்டுமப்பா! சொல்லுங்கள் நீங்களே!
(அப்ப! இறைவனும் சரி, சித்தர்களும் சரி, வந்து நிறைய தர்மம் பண்ணுங்கள் என்று ஏன் தூண்டுகிறீர்கள்?)
ஒருத்தனும் யோக்கியன் இல்லையா, அவன் மூலம் புண்ணியங்கள் செய்ய வைத்து, அவன் வழி நடத்தலாமே என்று தான் அப்பா. நீங்கள் அனைவரும் புண்ணியவான் ஆகிவிட்டால் எங்களுக்கு வேலையே இல்லை அப்பா! நாடியில் வந்து ஏனப்பா, வாக்குகள் சொல்லப் போகின்றோம்.
(நீங்கள் ஆசைப்பட்டது நடக்க மாட்டேன் என்கிறது. பின்னர் அல்லவா, சாதாரண மனிதன் ஆசைப்படுவது நடப்பதற்கு.... அத்தனை தவறையும் செய்துவிட்டு ஒருவன் "நான் நல்லவன்" என்று கூறினால், நீங்கள் எல்லாம் நம்புகிறீர்கள், இல்லையா?)
அப்பப்பா! நிச்சயம் நம்புவதும் இல்லையப்பா.
(அவ்வாறாயின்! அழித்துவிட வேண்டியதுதானே!)
அப்பப்பா! அழித்தாலூம், இவ்வளவு வரங்கள் வாங்கிக் கொண்டுதான் வருகிறார்கள் அப்பா. அதனால் தான் பிரம்மாவிடத்தில் பேசி, யார் வரம் தந்திருக்கின்றானோ அவனிடத்திலேயே பேசி வருகிறோம் அப்பா! அனைத்தையும் எளிதில் மாற்ற முடியுமாப்பா! ஆனாலும், மாற்றிவிட்டாலும், மனிதன் தாங்குவானப்பா என்ன?
(மாற்றவே இல்லை. கோவில்கள் நிறைந்த என் தேசத்தில், நீங்கள் வரம் கொடுத்தவன் எப்படி கெடுத்து வாழ்ந்தான் என்று .... நீங்களே சாட்சி!)
அப்பப்பா! இங்கு ஆட்சிக்கு யான் வரவில்லை அப்பா. ஒரு கேள்வியை கேட்கின்றேன். பெரிய பெரிய திருத்தலங்களில் கும்பாபிஷேகம் நடந்ததே, ஏன் என்று கூறு!
(அதுக்கு பெயர் கும்பாபிஷேகம் என்று நீங்கள் கூறுகிறீர்களா? அப்படியானால், கொலை கொள்ளை களவு பண்ணிவிட்டு கும்பாபிஷேகம் பண்ணிவிட்டால் நீங்கள், ஏற்றுக்கொண்டு விடுவீர்கள் இல்லையா?)
அப்பப்பா! ஈசன் பாசத்துடன் அழைக்கின்றான் அப்பா! அதிவிரைவில் ஆட்டம் காட்டுவானப்பா. இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான். அப்பொழுதும் ஒழுங்காக இருந்தால், அவன் மனிதனப்பா!
(என் கேள்வி ஒன்றுதான். கொலையும், கொள்ளையும் செய்துவிட்டு நான் கும்பாபிஷேகம் செய்தால், நான் என்ன பண்ணினேன் என்பதை கண்டுக்காமல், நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விடுவீர்கள் இல்லையா?)
அப்பப்பா! ஒரு வாகனத்தை இயக்கி கொண்டு இருக்கின்றாய் அப்பா. திடீரென்று ஒருவன் இறந்து விடுகிறான் அப்பா. அப்பொழுது யார் கொலை செய்தது அப்பா?
(இதில், வேண்டும் என்று செய்யவில்லை, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.)
அப்பப்பா! இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இறைவன் கொடுப்பது உயிர், அதை எப்பொழுது எடுக்க வேண்டுமோ, அதுவும் இறைவன் செயல். அவ்வாறு இருக்க, மனிதன் செயல் என்று எவ்வாறு நீ கூறுகின்றாய்?
(அதான்! ஒரு சித்தர் சொன்னார் சமீபத்தில்! இறைவன் இருந்தாலும், இல்லை என்று இருப்பான் என்றார்! அதுதான் இந்த கலியுகத்தினுடைய விதி போலும்!)
அப்பா! இறைவன் இருக்கின்றான் அப்பா! இல்லாதது போலும் இருக்கின்றான் அப்பா. அனைத்தும் பதிவு செய்து கொண்டு இருக்கின்றானப்பா. தக்க சமயத்தில், நீங்கள் அனைவரும் உறங்குவீர்களப்பா! அப்பொழுது எழுவானப்பா! அப்பொழுது புரியுமப்பா! நாங்கள் விட்டுவிட்டால் அனைத்தையும் ஈசன் அழித்துவிடுவானப்பா! அனைத்தையும் அழித்துவிட்டால், ஐய்யோ! இவ்வளவு உயிர்கள் இருந்ததே, அழிந்துவிட்டதே என்பீர்கள். இப்படி செய்தாலும், அப்படி, அப்படி செய்தாலும் இப்படி என்பீர்களா அப்பா!
(ஆனால்! தப்பு பண்ணுகிறவன், இன்னும் உயிரோடு இருந்து தப்பு பண்ணிக் கொண்டுதான் இருக்கின்றான்)
நிச்சயம் தண்டனைகள் உண்டு, தவறுகளுக்கு ஏற்ப. இங்கு என்ன, எப்படி நடக்கின்றது என்றெல்லாம் எங்களுக்கு தெரியும்.
(இறைவன் தண்டனையை கொடுப்பான், கொடுப்பான் என்கிறீர்களே தவிர ஒன்றும் கொடுப்பதில்லை. ஆம்! அவருக்கும் பொழுது போக வேண்டாமா? விளையாடணும் இல்ல.)
145. சித்தர்கள் கூற்றுப்படி முடிந்தவரை நேர்மையாக நல்லவை செய்து வாழ்ந்தும், அத்தனை சிரமங்களை வாழ்க்கை கொண்டு வந்து கொட்டுகிறது. தர்மத்தையே செய்யாதவன் எவ் பிரச்சினையும் இன்றி நன்றாக வாழ்க்கையை வாழ்கிறான்.
அப்பா! தர்மத்தை செய்தவன், தர்மத்தோடு பற்றி வாழ்வானப்பா! அதர்மம் செய்பவன் அதர்மத்தாலே அழிவானப்பா! தர்மம் செய்தவன், தர்மத்தாலே காக்கப்படுவான்! இதை எல்லாம் எப்படியாப்பா தீர்மானிப்பீர்கள், நீங்கள்? அப்பனே! யாங்கள் தீர்மானிக்க வேண்டும் அப்பனே! இன்னொருவன் பிழைத்துக் கொண்டால், அவன் தவறு செய்கின்றான், இவன் தவறு செய்கின்றான் என்று, பார்க்காமலேயே அப்பா! இதெல்லாம் நியாயமா அப்பா! பின் அவனுடன் பழகுங்கள், பழகி திரிந்தால் தான் அப்பா, தெரியுமப்பா. யாங்கள் தர்மத்தை நிலை நாட்டவே வந்திருக்கின்றோம் அப்பனே! நிலை நாட்டுவோம், அதிவிரைவிலேயே.
((பெயர் சொல்லி), இவர்கள் போன் நம்பர் இருந்தால் குடு. பழகி பார்க்கணும்! குருநாதர் சொல்லிட்டார்! என்ன சொல்கிறார் இவர்?)
அப்பப்பா! இப்பொழுதுதான் சொன்னேன்! விட்டு பார்ப்போம் அப்பா! பின்னர் கதையை முடித்துவிடுவோம் அப்பா!
(முடித்துவிடுங்கள்! என்கிறேன் நான். ஒருத்தன் தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கிற பொழுதே அவனை முடித்து விட வேண்டும். அவன் பூமிக்கு பாரமாகவே இருக்க வேண்டாம்!)
அப்பப்பா! ஒன்றை சொல்கின்றேன்! நீ இப்படி பேசுகின்றாய் அப்பா! மற்றொருவன் அவன் நல்லவன் தானப்பா, அவன் வாழ வேண்டும் என்று சொல்லுகின்றானப்பா. இதில் யாருக்கப்பா, நிச்சயமப்பா. ஒரு நூறு பேர்கள் நல்லவர்களாக இருந்து அவன் வாழ வேண்டும் என்று கூறுகிறார்களப்பா. பாதி பக்தர்கள் இப்படி, பாதி பக்தர்கள் அப்படி! இதில் யாருக்கு உதவி செய்வானப்பா, இறைவன்?
(யாரு பிரார்த்தனை பண்ணினார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டாம்.)
இறைவன் தண்டனை கொடுத்துவிட்டால், அந்த நூறு பேர்கள், "அடப்பாவியே, உன்னை வேண்டிக் கொண்டிருந்தேனே! அவனுக்கு போய் தண்டனை கொடுத்துவிட்டாயே! என்று, இறைவனை அப்படியும் பேசுவார்களப்பா! அதனால், இறைவன் சாதாரணமானவன் இல்லையப்பா! எத்தனை பூஜைகள் நடக்கின்றது என்று தெரியுமாப்பா! பக்தர்களே, இவன் வாழ வேண்டும் என்று பூஜை செய்கிறார்கள் அப்பா. உன்னைப் போன்று (நாசூக்கா என்னை குத்துகிறார்) பல பக்தர்கள், காசுக்காக, இவன் நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டுகிறார்களப்பா! இது எவ்வாறு நியாயமப்பா! அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டால், பாவி இறைவன்! இவனுக்கு செய்த பூஜைகள் எல்லாம் பொய் என்பார்கள். என்னப்பா நியாயம்!
(இதை அனுமதிப்பது யார்? இறைவனா சித்தர்களா?}
அப்பப்பா! நீ கூட பூசை செய்கின்றாய் உலக நன்மைக்காக. உன்னிடம் காசுகள் கொடுத்து இவன் நன்றாக இருக்க வேண்டும் என்று யாகம் செய்யச் சொன்னால் நீ கூட செய்துவிடுவாய் அப்பா! இறைவன் அவனை காக்கவில்லை என்றால், அதே இறைவா! நீ கூட காக்கவில்லை என்று நீ கூட பிதற்றுவாய் அப்பா! இப்படியும் பேசுவாய், அப்படியும் பேசுவாய்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteகண்ணீர் தான் வருகிறது...
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஅகத்தியர் அய்யனே இப்படி சொன்னால் மனது கவலை படுகிறது.
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
GURUVE SARANAM SARANAM.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOnly Agnilingam Aiyya can daringly ask such questions to the great God Agasthiya Peruman
ReplyDeleteSome great souls are there . Narendra Modi, Yogi Adithyanath, Annamalai. I am sure God Agasthiya Peruman will acknowledge them as good human beings and protecting Dharmam
ReplyDelete