​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 2 May 2025

சித்தன் அருள் - 1852 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-7 !


73. அகத்தியர் அப்பா, உங்கள் சேய்கள் உங்கள் மீதுகொண்ட அன்பின் காரணமாக, சிறு பிள்ளை எனக் கருதி உங்களையும் அம்மாவையும் கொஞ்சி அன்பு செலுத்தலாமா.  சிலரின் பார்வையில் குருவை குருவாக மட்டுமே பார்க்கின்றார்கள். இப்படி அன்புடன் கொஞ்சி பேசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா.

அப்பப்பா! இப்படி இருப்பவர்தான் என்பக்கத்தில் எப்பொழுதும்.

74. கருத்தினில் கபால வாயில் காட்டி - இதற்கு என்ன பயிற்சி அல்லது வழிபாடு முறைகள் கடைபிடிக்க வேண்டும் அப்பா.

அப்பப்பா! எப்பொழுதும் என் பக்கத்தில் இருக்கச்சொல். யானே உணர்த்துகிறேன்!

75. அன்பிற்குரிய அகத்தியர் அப்பா, அகத்தியர் அப்பாவின் (குருவின் )அருகாமையை உணர்ந்து அனுபவிக்கத் தொடங்கிய பின், அவர் வாக்கே நோக்கமாய் இருக்கும் அடியவர்களுக்கு குருநாதர் கூறுவது என்ன. இன்னும் பள்ளி பக்கமே போகவில்லை(எனக்கு மட்டுமே நான் கூறிக்கொள்வது). ஒன்றாம் வகுப்பு எப்போது தேர்வாகி அடுத்த நிலை செல்வோம் என்று நீங்கள் மட்டுமே அறிந்த ஒன்று. அப்படி இருக்க, உங்கள் வாக்கை எதிர் நோக்கிக் கொண்டு இருப்பதும் கூட ஒரு வித மாயை தான் என்று நான் நினைக்கின்றேன். எதற்கு வீண் வருத்தம் கொள்ள வேண்டும். அப்படி எதிர்நோக்கும் உங்கள் சேய்களுக்கு நீங்கள் கூறுவது பக்குவம் என்ன அப்பா.

அப்பப்பா! அனைத்தும் மாயை என்றால், ஏனப்பா வாழ்கின்றீர்கள் இவ்வுலகத்தில். இவை எல்லாம் சரியாக சிந்திக்காத கேள்வி என்பேன் அப்பா. அதுமட்டுமல்லாமல், மாயை என்றாலே, இறந்துவிடுதல் என்று பொருள். புத்தி கேட்டு போய் விட்டது என்று பொருள். ஆகவே, புத்தியை நன்றாக்கியபின் இதை பற்றி வாக்குகள் செப்புவேன்.  

76. ஆன்மீகத்தில்/ இறைவழியில் அகம், புறம் - உங்கள் மொழியில் பாடமும் விளக்கமும் சொல்லிக்கொடுங்கள் தந்தையே.

யான் சொல்லும் வாக்குகள் எல்லாம், உங்களை பாதுகாக்க, உங்கள் குடும்பத்தை பாதுகாக்க. மற்றவர்களையும் பாதுகாக்க. யாம் செப்புவதை நன்றாக கவனித்து நடந்து வந்தாலே போதும். அதை கூட செய்யவில்லை என்றால், பாபத்தை செய்து, கர்மத்தில் போய் விழவேண்டியதுதான் அப்பா. இதில் கூட சிலர் கெடுப்பார்கள் அப்பா! பின்னர் அகத்தியன் கூறிவிட்டானா? அவை எல்லாம் பொய் என! ஒன்றை தெரிந்து கொள்ளுனால். அகத்தியனைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அவை எல்லாம் பொய் என்பவருக்கு அடிகளை கொடுத்து..... இன்னும் கூட அகத்தியனை பற்றி உணரவில்லையே! ஆளில்லையே!

77. ஒருவரின் குடும்ப உறுப்பினர் (தந்தை அல்லது தாய் போன்றோர்) மறைந்தால், குடும்ப உறுப்பினர்கள் மலைக்கோயில்கள் மற்றும் கடலைக் காண செல்லக்கூடாது என்று புரோகிதர் கூறுவார்கள். மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். இந்த தொடர்பில் குருநாதர் அப்பா விளக்கமாக கூறி வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதன் ரகசியத்தை யான் உரைக்கின்றேன்! ஆன்மா கணக்கெடுக்க ஒரு வருடம் ஆகும். ஒருவன் இறந்தால், நிச்சயம் இல்லத்தில் கஷ்டங்கள் பட வேண்டியதுதான். ஏற்கனவே அவ்வான்மாவை துகள் என்று கூறிவிட்டேன். நிச்சயம் அதனுள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனால்தான். இன்னும் இதன் விளக்கங்களை விரிவாக ரகசியமாக உரைக்கின்றேன். அமைதியாக இருக்கச்சொல்.

78. இந்த கேள்வி, வாழ்க்கையில் கடுமையான நிலைகளில் உள்ளவர்களுக்கும், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், திருச்சிற்றம்பலம் அருளும் முருகப்பெருமானின் ஆசிகள் கிடைக்க உதவுவதற்காக கேட்கப்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன:

"ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டத்திற்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்"

முருகர் அடியார்கள் 36 முறை கந்த சஷ்டி கவசத்தை ஓத வேண்டுமா, அல்லது கீழ்க்கண்ட 36 எழுத்துக்களையும் ஒவ்வொன்றாக 6 முறை ஜெபித்து மொத்தம் 36 முறை ஜெபிக்க வேண்டுமா?

சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப

இதனைச் செய்யும்போது, 36 முறையாக கந்த சஷ்டி கவசம் ஓதிய முழு பலனும் கிடைக்குமா? மேலும், இந்த 36 முறை ஜெபத்திற்குப் பிறகு கந்த சஷ்டி விரத பாடல்களைப் பாடுவது கூடுதல் ஆன்மீக பலனை தருமா? 

அப்பப்பா! ஒரு பதினைந்து முருகன் திருத்தலங்களுக்கு சென்று வரச்சொல்! அதன் பின்னர் இதன் விளக்கத்தை தெளிவாக விளக்குவேன். பக்குவங்கள் வரட்டும் இன்னும். என்னுடைய ஆசிகள் அப்பா!

79. குழந்தைகள் தீய செயல்களில் ஈடுபடாமல், அவர்கள் திறமையானவர்களாகவும், நல்ல வழியில் செல்லுபவர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? இன்றைய உலகத்தில் குழந்தைகளை தீய பாதையில் செல்லாமல் பாதுகாக்க குருநாதர் எங்கள் அனைவருக்கும் விளக்கம் அளித்து வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதனால்தான் அப்பா! அன்புகாட்டுங்கள். யாங்களே வந்து அனைத்தும் செய்வோமப்பா! நன்று! கவலைகள் இல்லை. நினைத்தாலே போதுமப்பா! யாங்கள் வந்துவிடுவோமப்பா! அனைத்தும் செய்து விடுவோமப்பா.  

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. நன்றி அப்பா

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete